Jump to content

ரொரண்டோவில் இசைஞானி அவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யுறாங்கள் பேட்டி கொடுக்குறாங்களா என்ன நடக்கிறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியுமிலலை...பூட்டியுமில்லை....எந்தவொரு தென் இந்திய............வந்தாலும் இதுதான் கூத்து...   நடிக    நடிகைமார் இவர்கள்தான்....காலில் விழுவதும்...கட்டிபிடித்து போட்டோ எடுப்பதும்.....அது சுப்பர் சிங்கர் விசிலடிச்சான் குஞ்சாக இருந்தாலும் இதுதான் காட்சி.....கனடாவில்...ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம்...

Link to comment
Share on other sites

9 hours ago, alvayan said:

பேட்டியுமிலலை...பூட்டியுமில்லை....எந்தவொரு தென் இந்திய............வந்தாலும் இதுதான் கூத்து...   நடிக    நடிகைமார் இவர்கள்தான்....காலில் விழுவதும்...கட்டிபிடித்து போட்டோ எடுப்பதும்.....அது சுப்பர் சிங்கர் விசிலடிச்சான் குஞ்சாக இருந்தாலும் இதுதான் காட்சி.....கனடாவில்...ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம்...

தமிழினம் அல்லது இலங்கைத் தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கும். ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்பது தவறாகும். ஏனெனில் ஈழத் தமிழினம் என்பது உண்மையான தமிழர்களைக் குறிக்கும். அவர்கள் மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

தமிழினம் அல்லது இலங்கைத் தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கும். ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்பது தவறாகும். ஏனெனில் ஈழத் தமிழினம் என்பது உண்மையான தமிழர்களைக் குறிக்கும். அவர்கள் மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.

ஒத்துக்கொள்கிறேண்.....ஆனால்கனடாவில் எம்மினத்தின் பிரதிநிதிகள்போல் எந்தவொரு நிகழ்விலும் வேடமிடுவ்து...சிலரே...அந்தசிலரில் இருப்பவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.... காலில் விழுவதையும் அறிமுகம் செய்து இளம் சாந்ததியையும் நாசம் செய்கிறார்கள்....பதவிகளைப்பிடித்து.....போராட்ட வடிவையே செயல் இழக்கச் செய்பவர்களும் கூட..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2018 at 1:27 PM, alvayan said:

ஒத்துக்கொள்கிறேண்.....ஆனால்கனடாவில் எம்மினத்தின் பிரதிநிதிகள்போல் எந்தவொரு நிகழ்விலும் வேடமிடுவ்து...சிலரே...அந்தசிலரில் இருப்பவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.... காலில் விழுவதையும் அறிமுகம் செய்து இளம் சாந்ததியையும் நாசம் செய்கிறார்கள்....பதவிகளைப்பிடித்து.....போராட்ட வடிவையே செயல் இழக்கச் செய்பவர்களும் கூட..

நிறைய வார்த்தைகளை அள்ளி  இறைத்து இருக்கிறீர்கள்...
எந்த நடிகன் , எந்த நடிகை வந்து;  இங்கே உள்ள தமிழன் அவர்கள் காலில் விழுந்தான்?
எந்த சூப்பர் சிங்கர் பாடகன் / பாடகி காலில் இங்கே உள்ள தமிழன் காலில் விழுந்தான்?

இந்த திரியின் தலைப்பு டொரோண்டோவில் இளையராஜா இசை நிகழ்ச்சி குறித்ததே ஒழிய, 
ஈழத்தமிழன் (கனடாத்தமிழன்) எவன் காலில் விழுந்தான் என்பது பற்றிய ஆராய்ச்சி அல்ல.

தவிர பெரியவர், மற்றவர்களால் போற்றப்படும் அறிஞர்கள், ஞானிகள், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், உறவுகள் இவர்கள் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்குவது ஒன்றும் இழிவானா செயலாக எந்த சமூகத்திலும், யாராலும் இதுவரையிலும் பார்க்கப்படவில்லை. உங்களை போன்ற ஒரு சிலரை தவிர!!!
ஒருவர் காலில் விழுந்து கிடப்பதற்கும், காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்குவதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் அறிந்து கொள்ளாதது கவலைக்குரிய விடயம்.

பாதநமஸ்காரம் ஒன்றும் பாவமான காரியம் இல்லை.
இதனை பற்றி நிறையவே எழுதலாம்.

1. குரு , ஞானி, பெரியவர் காலில் விழுந்து பாத நமஸ்காரம் செய்யும் போது நீங்கள் உங்களுக்குள் இருக்கும் அகந்தையை தெரிந்தோ தெரியாமலோ ஒரு கணம் இழந்து மனசுக்குள் பஞ்சாக லேசாக மாறுகின்றீர்கள். உங்கள் இறுமாப்பு, மன இறுக்கம் இங்கேஉடைக்கப்படுகிறது.

2. உங்களை ஆசீர்வதிப்பவர் கூட மனம் நிறைந்து உங்களை வாழ்த்தி, உங்கள் வாழ்க்கையின் நலன் விரும்பும் ஒரு மனிதராக மாறுகிறார். இங்கே பகை, காழ்ப்பு , குரோதம் இழந்து ஒரு பிணைப்பு நிகழ்கின்றது.
    
3. எல்லா மனிதர் உள்ளேயும் இரு வகை சக்திகள் ஊற்றெடுக்கின்றன மஹா சத்தி (Positive Energy  ) , மாய சக்தி (Negative Energy ).
இந்த இரு சக்திகளும் கூட உடம்பினுள்ளே குறிப்பிட்ட திசையில் தான் ஓடுகின்றன 
(இடம் வலம் , வலம் இடம்). 
பெரியவர், ஞானிகள் , அறிஞர்கள், குரு, ஆசான் போன்ற ஸ்தானத்தில் போற்றப்படுபவர்  பொதுவாகவே மஹா சக்தி நிறைந்த அம்சம் கொண்டவர்கள். இவர்கள் காலில் விழுந்தது , பாதம் தொட்டு ஆசீர்வாதம் பெறுகின்ற பொது அவர்களின் கையால் உங்கள் தலையை தொட்டு "தீர்காயுசாக இரு"  "நீ நல்லபடியாக இரு" "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ் " என்று மனமார வாழ்த்தும் பொது அவர்களின் அந்த மாஹா சக்தி (Positive Energy ) உங்கள் மாய சக்தியோடு  (Negative Energy ) கலக்க ஒரு சக்தி வலயம் உருவாகி நீங்கள் அவர்களின் அனுகிரகணம் பெறுவீர்கள்.
 இதை விஞ்ஞான  ரீதியிலும் கூட ஆராய்ந்து பார்க்கலாம். (Reiki Therapy)  ரெய்க்கி  தெரப்பி.

4. இது தமிழர் கலாச்சாரம் இல்லை என்று கூறுபவர்களுக்கு இந்த கதை...
நீங்கள் அறிந்தது தானே  மார்க்கண்டேயரின் கதை.
மிர்காந்த ரிஷிக்கும்  அவர் மனைவிக்கும் பல காலங்கள் புத்திர பாக்கியம் இல்லாமல் தவத்தின் பயனாய் ஒரு ஆண்  குழந்தை பிறந்தது. அதுவே மார்க்கண்டேயர். மார்க்கண்டேயரின் பிறப்பின் போதே பெற்றாருக்கு சொல்லப்பட்ட செய்தி, சிறுவன் 12 வயதில் இறந்து விடுவான். இது தெய்வ வாக்கு.
இதனை நன்கு புரிந்து கொண்ட மிகாந்த ரிஷி அவர் மகன் மார்க்கண்டேயருக்கு சொல்லிக்கொடுத்த ஒரே ஒரு பாடம் உன் வாழ்க்கையில் சந்திக்கும் எல்லாரிடமும் பாத நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெறு  என்பதேயாகும். மார்க்கண்டேயரும் இதையே செய்தார். ஆசீர்வாதம் கொடுத்தவர்கள் அனைவரும் கூறிய வார்த்தை "தீர்காயுஸோடு இரு /ஆயுஷ்மான் பவ ". மார்க்கண்டேயரை சப்த ரிஷிகள் முதல் , பிரம்ம தேவர் வரை ஆசீர்வதித்தனர். பிறப்பை அருளிய பிரம்மனே சிறுவனை தீர்காயுசோடு இரு என வாழ்த்தினார்.
மார்க்கண்டேயரின் 12 ஆவது வயதில், இயமதர்மனும் அவரின் உயிரை மீள எடுத்துச்செல்ல வந்தார். மார்கண்டேயரோ சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து இயமதர்மனோடு போராடினார். இறுதியில் சிவபெருமானே காட்சி தந்து இயம ராஜனிடம் இருந்து மார்க்கண்டேயரை காப்பாற்றி சாகா வரம் கொடுத்தார்.

இது உண்மையா, பொய்யா பித்தலாட்டமா தெரியவில்லை. இதை என் பெரியவர்கள் என் கலாச்சாரத்தின் வடிவமாக சமயத்தின் முறையாக சொல்லிக்கொடுத்தார். அதை நான் போற்றுகின்றேன்.
என் தந்தை , தாய், அண்ணா, அண்ணி, அக்கா, மற்றும் குடும்பத்து மூத்தவரின் காலில் விழுந்து வணங்குவதை புனிதமாய், புண்ணியமாய் நினைப்பவன் நான்.
இளையராஜா எனும் பெரும் இசை ஞானியின் முன் 
தமிழ் மேல் ஒரு வித ஈர்ப்பை , காதலை ஏற்படுத்தியவரின்  முன் 
என் சந்தோஷத்திலும், துக்கத்திலும் உள்ளூர தன்  இசையால் வியாபித்தவரின் காலில் 
ஒரு தடவை அல்ல ஓராயிரம் தடவை நான் சாஸ்டாங்கமாய் விழுவேன்.

அன்பால் அடிபணிதல் அதுவே தத்துவம்...
இந்த மகத்துவ சிந்தனையில் தெளிவு வந்தால் 
உன் அனுபவம் அனைத்தும் சுகமாகும்... 

கற்றுக்கொண்டால் குற்றமில்லை... சசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2018 at 11:50 PM, nunavilan said:

ரொரண்டோவில் இசைஞானி அவர்கள்

 

இசை ஞானி இளையராஜாவின் நிகழ்ச்சியை மிகவும் அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
நிகழ்ச்சி குறித்த நேரத்தில் ஆரம்பமானது.
ஞானியின் வெளிவந்த பாடல்களில் முத்தான பாடல்கள் பலதும் இடம்பெற்றது.
ஹங்கேரி புடாபெஸ்ட் ஆரக்கஸ்டரா Hungary Budapest symphony orchestra அணைத்து பாடல்களையும் இசைத்து ராஜாங்கம் நடத்தினார்கள்.
முழுவதும் அகோஸ்டிக் (Acoustic) வடிவத்தில் இசையை கலைஞர்கள் வாசித்தார்கள். 
அதை அனுபவிப்பதற்கு அவதானிப்பும், அமைதியும் முக்கியம். நம்மில் பெரும்பாலோரின் அது இல்லை!!
பிரபலமான பின்னணிப் பாடகர்கள் இல்லாமேயே அருமையான பாடல்களை தந்தார்கள். 
அவர்கள் பாடிய அணைத்து பாடல்களும் எந்த விதத்திலும் சோடை போகவில்லை.
நானிருந்த இடத்தில இருந்து கேட்க மிகவும் தெளிவான ஒலியாக இருந்தது.
மேடையில் வண்ண விளக்குகள், லேசர் சமாச்சாரங்கள், ஒளி வடிவங்கள் எதுவும் இருக்கவில்லை.
கூட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது. மற்றவர் வெறும் வார்த்தைகளை மட்டுமே கேட்டு வராதவர்கள் பாவம் துரதிஷ்டசாலிகள்.  
சில ஜந்துகள் நிகழ்ச்சியை குழப்பவே டிக்கெட் எடுத்து வந்திருப்பார்களோ.
பீர் பாட்டில், விசில் கடைசிவரை தொடர்ந்தது.
இடையில் போலீஸ் வேறு வந்து இந்த ஜந்துக்களை அப்புறப்படுத்த வேண்டி இருந்தது.
இசை ஞானியும் ஓரிரு தடவைகள் அது குறித்து குறிப்புணர்த்தினார்.  எவனுக்கு புறிய போகிறது.
நம்மவரிடம் கைதட்டல்களை கூட யாசித்து தானே வாங்கவேண்டி இருக்கிறது.
என்ன செய்ய இசைஞானியையும் அனிருத்தையும், இமானையும் ஒரே எடையில் போட்டு பார்க்கும் கூட்டத்தில் எதை எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் ரம்மியமான ஒரு இசை வேள்வியை தந்த என் ஆத்மார்த்த இசை ஞானி அவர்களுக்கு 
என் பாத நமஸ்காரங்கள்.

Link to comment
Share on other sites

17 minutes ago, Sasi_varnam said:


என்ன செய்ய இசைஞானியையும் அனிருத்தையும், இமானையும் ஒரே எடையில் போட்டு பார்க்கும் கூட்டத்தில் எதை எதிர்பார்க்கலாம்.

 

இளையராசாவின் இசையினையும் அனிருத்தின், இமானின் இசையுடன் ஒரே எடையில் போட்டுப் பார்க்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் இளையராசா என்ற மனிதரை விட கங்கை அமரன், இரகுமான், இமான் என்ற மனிதர்கள் சிறந்தவர்கள்.  சிட்னியில் சிம்போனி என்ற அமைப்பின் ஊடாக தமிழகத்துப் பாடகர்களை  அழைத்து இசைவிருந்து வழங்குபவர் கதிர் . முதன்முறையாக புகழ் பெற்ற ஒபரா கவுஸில்நடைபெற்ற இந்திய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியை நடாத்தியவரும் கதிர்தான் . ஜேசுதாஸ், எஸ்பிபி, சித்ரா போன்ற கலைஞர்களை ஒபரா கவுஸில் அழைத்து நிகழ்ச்சிகளை  நடாத்தினார்.  கதிரின் நீண்ட ஆசை இளையராசவின் நிகழ்ச்சியை சிட்னியில்  நடாத்துவது.  2013ல் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டது.   75% பணம் முழுவதும் கிடைத்தால் தான் சிட்னிக்கு வருவேன் என்றார் இளையராசா. நுளைவுச்சீட்டுகள் விற்பனையில் பணத்தினைப் பெறலாம்  என்ற நம்பிக்கையில் 75000 வெள்ளிகளை இளையராசாவுக்கு குடுத்தார் கதிர்.  நிகழ்ச்சி தொடங்க ஒரு கிழமைக்கு முன்பு சன், கலைஞர் தொலைக்காட்சியுடன் இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் வெளியிட ஒப்பந்தம் செய்ய தாய் விமானத்தில் பயணிக்கும் போது எதிர்ப்பாராதநோயினால்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திட்டமிடப்பட்டநிகழ்வு நடைபெறவில்லை.நடக்காத நிகழ்ச்சிக்கு வாங்கிய 75000 வெள்ளிகளையும் பண ஆசை பிடித்த இளையராசா திருப்பி வழங்கவில்லை.   இதனால் வாழ்ந்த வீட்டினையும் விற்க வேண்டியநிலமைக்கு தள்ளப்பட்டார் கதிர். பல முறை பணத்தினைக் கேட்டும் இளையராசா பணத்தினை திரும்பி வழங்கவில்லை. இதனால் மேலும் வேதனைப்பட்ட கதிர் மேலும்நோய் வாய்ப்பட்டு 2015 சனவரியில் காலமானர். இப்படிப்பட்ட இளையராசாவின் காலில் விழுவது சரியா?.  ஈழத்தமிழர்கள்  காலில் விழும் பழக்கத்தினை ஈழத்தில் பார்த்திருக்கிறீர்களா?.  தமிழகத்தில் அப்பழக்கம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, sivakumaran said:

இளையராசாவின் இசையினையும் அனிருத்தின், இமானின் இசையுடன் ஒரே எடையில் போட்டுப் பார்க்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் இளையராசா என்ற மனிதரை விட கங்கை அமரன், இரகுமான், இமான் என்ற மனிதர்கள் சிறந்தவர்கள்.  சிட்னியில் சிம்போனி என்ற அமைப்பின் ஊடாக தமிழகத்துப் பாடகர்களை  அழைத்து இசைவிருந்து வழங்குபவர் கதிர் . முதன்முறையாக புகழ் பெற்ற ஒபரா கவுஸில்நடைபெற்ற இந்திய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியை நடாத்தியவரும் கதிர்தான் . ஜேசுதாஸ், எஸ்பிபி, சித்ரா போன்ற கலைஞர்களை ஒபரா கவுஸில் அழைத்து நிகழ்ச்சிகளை  நடாத்தினார்.  கதிரின் நீண்ட ஆசை இளையராசவின் நிகழ்ச்சியை சிட்னியில்  நடாத்துவது.  2013ல் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டது.   75% பணம் முழுவதும் கிடைத்தால் தான் சிட்னிக்கு வருவேன் என்றார் இளையராசா. நுளைவுச்சீட்டுகள் விற்பனையில் பணத்தினைப் பெறலாம்  என்ற நம்பிக்கையில் 75000 வெள்ளிகளை இளையராசாவுக்கு குடுத்தார் கதிர்.  நிகழ்ச்சி தொடங்க ஒரு கிழமைக்கு முன்பு சன், கலைஞர் தொலைக்காட்சியுடன் இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் வெளியிட ஒப்பந்தம் செய்ய தாய் விமானத்தில் பயணிக்கும் போது எதிர்ப்பாராதநோயினால்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திட்டமிடப்பட்டநிகழ்வு நடைபெறவில்லை.நடக்காத நிகழ்ச்சிக்கு வாங்கிய 75000 வெள்ளிகளையும் பண ஆசை பிடித்த இளையராசா திருப்பி வழங்கவில்லை.   இதனால் வாழ்ந்த வீட்டினையும் விற்க வேண்டியநிலமைக்கு தள்ளப்பட்டார் கதிர். பல முறை பணத்தினைக் கேட்டும் இளையராசா பணத்தினை திரும்பி வழங்கவில்லை. இதனால் மேலும் வேதனைப்பட்ட கதிர் மேலும்நோய் வாய்ப்பட்டு 2015 சனவரியில் காலமானர். இப்படிப்பட்ட இளையராசாவின் காலில் விழுவது சரியா?.  ஈழத்தமிழர்கள்  காலில் விழும் பழக்கத்தினை ஈழத்தில் பார்த்திருக்கிறீர்களா?.  தமிழகத்தில் அப்பழக்கம் இருக்கிறது.

நீங்கள் எழுதி இருப்பது முற்றிலும் நானோ அல்லது பெரும் பாலானோரே அறிந்திருக்காத விடயம்.
இப்படி ஒரு நிகழ்வு நடத்திருக்குமாயின் கவலைக்குரிய விடயமே. அது இசைஞானி இளையராஜா குறித்த என் மதிப்பையும் தடுமாற்றத்தான் செய்யும்.
* இது போன்ற சம்பவங்கள், அனுபவங்கள் (உண்மையாயின்) ஏன் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு நிமிர்த்தம் பரப்பப்பட்ட வில்லை?

* இவ்வளவு பண முதலீடோடு லாபம் பார்க்கும் நோக்கோடு திட்டமிடப்படும் பெரும் இசைக் கச்சேரிகளுக்குரிய காப்புறுதி பெறப்பட்டதா?

* கச்சேரி நடத்தாமலேயே அவ்வளவு பெரும் தொகை பணத்தை இளையராஜா கையாடினார் என்பது நம்பக்கூடியதா ? அதுவும் அவருக்கு சுகவீனம் உட்பட்டு அவர் வரமுடியாமல் போனதாக நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்!! இது குறித்து முறைப்படியான புகார்கள் கொடுக்கப்பட்டதா? குறைந்த பட்சம் ஊடகங்கள் , பத்திரிகை வாயிலாக பகிரப்பட்டதா? 

* மற்றைய இசைக்கலைஞர்கள் ரகுமான், அனிருத் , இமான் போன்றவர்கள் இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்/ கொள்வார்கள் என்பது குறித்து எதுவும் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காலில் விழுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை...யாராவது 75% பணம்  முன்பணமாக வாங்கவும் மாடடார்கள். கொடுக்கவும் மாடடார்கள்...அரைவாசி பணைத்தினை திருப்பி கொடுக்கவிலை என்று சொன்னாலும் ஒரு வித நியாயம் இருக்குது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டானியல் ராஜா.....alias .......இளையராஜ என்பவர் யார்? சிறந்த இசையமைப்பாளர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதிக தலைக்கனம் / இறுமாப்பு /ஆணவம் கொண்டவர்.

சமீபத்தில் இவர் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக வெளியிட்ட ஒரு கருத்து கிறிஸ்தவர்களை மிகவும் புண்படுத்தியது. இதயே இவர் முஸ்லீம்களுக்கு எதிராக கூறுவாறா? அல்லான்னா சும்மா இல்லைடா அவன் இல்லைன்னா யாரும் இல்லைடா என பாடுவாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சில நடிகர்களுடனும் பாடகர்களுடனும் நல்ல அனுபவம் இருக்கிறது.

பெரிய நடிகர்கள் பாடகர்கள்

1) 100% பணம் கொடுக்காமல் Airport ற்கே வர மாட்டார்கள்,

2) சொந்த காரில் Embassy & Airport வந்தாலும் taxi காசு கொடுக்க வேண்டும்

3) நாம் தான் அவர்களது வீட்டிற்கு சென்று passport வாங்கி எல்லா அலுவலும் பார்க்க வேண்டும், அவர்கள் கை அடையாளம் கொடுக்க மட்டும் வருவார்கள்

4) Business class ticket & 3 star hotel கட்டாயம், கூட வருபவருக்கும் (மனைவி கணவன் என்றால் double  room ok, இல்லாவிடின் Twin room)

சிறியவர்கள் & வளர்ந்து வருபவர்கள் சில விட்டு கொடுப்புகளை செய்வார்கள். சிலர் எமது வீடுகளிலேயே தங்குவார்கள்.

1) Economy ticket & decent hotel 

2) 50% முதலில் கொடுத்தால் போதுமானது.

 

என்னை பொறுத்தவரை இளசு 75% மட்டும் வாங்கியதே பெரிய விடயம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நடிகன் , எந்த நடிகை வந்து;  இங்கே உள்ள தமிழன் அவர்கள் காலில் விழுந்தான்?
எந்த சூப்பர் சிங்கர் பாடகன் / பாடகி காலில் இங்கே உள்ள தமிழன் காலில் விழுந்தான்?..

புதினம்...ஈ.குருவி....நினைவுகள்....சார்ல்ஸ்.... போட்டொக்களையும்  வரும்போது பாருங்கள்.. நான் இசைக்க்கோ  ராசாவுக்கோ எதிரானவன் அல்ல...அவர்களை வைத்து இங்கு நடைபெறும் அலப்பறைகள்  எனக்கு பிடிப்பதில்லை....என்னால் நிறய உதாரணங்களை பதிவிட முடியும்....விவாதத்தை தொடர நான் விரும்பவில்லை.......ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கலைஞனை அவனது கலைத்திறமையை ரசிப்பதோடு சரி....
அவர்களுக்கு கோவில் கட்டுவது....காலில் விழுவது கட்டவுட் வைத்து பால் ஊத்துவது நமக்கு சரிப்பட்டு வராது. :cool:

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

நான் ஒரு கலைஞனை அவனது கலைத்திறமையை ரசிப்பதோடு சரி....
அவர்களுக்கு கோவில் கட்டுவது....காலில் விழுவது கட்டவுட் வைத்து பால் ஊத்துவது நமக்கு சரிப்பட்டு வராது. :cool:

சில நேரங்களில் கலைஞனின் படைப்பு நமது சௌகரியமான சில கடந்தகால மணித்துளிகளை நம் மனதினுள் ஊடுருவச் செய்து அந்த கால கட்டத்திற்க்கே கூட்டிச் செல்லும்...

ஆனால் தங்களின் சரிப்பட்டு வராதவை சரியாக இருந்தாலும், அதற்க்கீடாக எது சரி என்று எனக்கு தெரியவில்லை...

Link to comment
Share on other sites

19 hours ago, MEERA said:

எனக்கு சில நடிகர்களுடனும் பாடகர்களுடனும் நல்ல அனுபவம் இருக்கிறது.

பெரிய நடிகர்கள் பாடகர்கள்

1) 100% பணம் கொடுக்காமல் Airport ற்கே வர மாட்டார்கள்,

2) சொந்த காரில் Embassy & Airport வந்தாலும் taxi காசு கொடுக்க வேண்டும்

3) நாம் தான் அவர்களது வீட்டிற்கு சென்று passport வாங்கி எல்லா அலுவலும் பார்க்க வேண்டும், அவர்கள் கை அடையாளம் கொடுக்க மட்டும் வருவார்கள்

4) Business class ticket & 3 star hotel கட்டாயம், கூட வருபவருக்கும் (மனைவி கணவன் என்றால் double  room ok, இல்லாவிடின் Twin room)

சிறியவர்கள் & வளர்ந்து வருபவர்கள் சில விட்டு கொடுப்புகளை செய்வார்கள். சிலர் எமது வீடுகளிலேயே தங்குவார்கள்.

1) Economy ticket & decent hotel 

2) 50% முதலில் கொடுத்தால் போதுமானது.

 

என்னை பொறுத்தவரை இளசு 75% மட்டும் வாங்கியதே பெரிய விடயம்.

 

அவர்களை அப்படியாயின் ஏன் அழைக்கின்றீர்கள்? அவர்களுக்கு டிமாண்ட் இருப்பதால்தானே நீங்களும் பிஸ்னஸ் கிளாஸ் ரிக்கெட் எல்லாம் எடுத்து கூப்பிடுறீங்கள். 

On 4/3/2018 at 8:57 PM, sivakumaran said:

இளையராசாவின் இசையினையும் அனிருத்தின், இமானின் இசையுடன் ஒரே எடையில் போட்டுப் பார்க்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் இளையராசா என்ற மனிதரை விட கங்கை அமரன், இரகுமான், இமான் என்ற மனிதர்கள் சிறந்தவர்கள்.  சிட்னியில் சிம்போனி என்ற அமைப்பின் ஊடாக தமிழகத்துப் பாடகர்களை  அழைத்து இசைவிருந்து வழங்குபவர் கதிர் . முதன்முறையாக புகழ் பெற்ற ஒபரா கவுஸில்நடைபெற்ற இந்திய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியை நடாத்தியவரும் கதிர்தான் . ஜேசுதாஸ், எஸ்பிபி, சித்ரா போன்ற கலைஞர்களை ஒபரா கவுஸில் அழைத்து நிகழ்ச்சிகளை  நடாத்தினார்.  கதிரின் நீண்ட ஆசை இளையராசவின் நிகழ்ச்சியை சிட்னியில்  நடாத்துவது.  2013ல் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டது.   75% பணம் முழுவதும் கிடைத்தால் தான் சிட்னிக்கு வருவேன் என்றார் இளையராசா. நுளைவுச்சீட்டுகள் விற்பனையில் பணத்தினைப் பெறலாம்  என்ற நம்பிக்கையில் 75000 வெள்ளிகளை இளையராசாவுக்கு குடுத்தார் கதிர்.  நிகழ்ச்சி தொடங்க ஒரு கிழமைக்கு முன்பு சன், கலைஞர் தொலைக்காட்சியுடன் இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் வெளியிட ஒப்பந்தம் செய்ய தாய் விமானத்தில் பயணிக்கும் போது எதிர்ப்பாராதநோயினால்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திட்டமிடப்பட்டநிகழ்வு நடைபெறவில்லை.நடக்காத நிகழ்ச்சிக்கு வாங்கிய 75000 வெள்ளிகளையும் பண ஆசை பிடித்த இளையராசா திருப்பி வழங்கவில்லை.   இதனால் வாழ்ந்த வீட்டினையும் விற்க வேண்டியநிலமைக்கு தள்ளப்பட்டார் கதிர். பல முறை பணத்தினைக் கேட்டும் இளையராசா பணத்தினை திரும்பி வழங்கவில்லை. இதனால் மேலும் வேதனைப்பட்ட கதிர் மேலும்நோய் வாய்ப்பட்டு 2015 சனவரியில் காலமானர். இப்படிப்பட்ட இளையராசாவின் காலில் விழுவது சரியா?.  ஈழத்தமிழர்கள்  காலில் விழும் பழக்கத்தினை ஈழத்தில் பார்த்திருக்கிறீர்களா?.  தமிழகத்தில் அப்பழக்கம் இருக்கிறது.

தனிப்பட எங்களுக்கு ஒருவரையுமே தெரியாது. நாங்கள் அறிந்தது எல்லாம் கலைஞர்களின் படைப்புக்களை மட்டுமே. மரியாதை கொடுக்கப்படுவது அவர்களது கலைஞானத்திற்கே ஒழிய தனிப்பட்ட அவர்களது வாழ்க்கைக்கு அல்ல. உலக அழகியின் உடலிலும் மலம் உள்ளது. இங்கே எங்கள் கண்களுக்கு அழகியை மட்டுமே தெரியும், அழகையே ஆராதிக்கின்றோம், மலத்தை அல்ல. :29_smirk:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மியாவ் said:

சில நேரங்களில் கலைஞனின் படைப்பு நமது சௌகரியமான சில கடந்தகால மணித்துளிகளை நம் மனதினுள் ஊடுருவச் செய்து அந்த கால கட்டத்திற்க்கே கூட்டிச் செல்லும்...

ஆனால் தங்களின் சரிப்பட்டு வராதவை சரியாக இருந்தாலும், அதற்க்கீடாக எது சரி என்று எனக்கு தெரியவில்லை...

கலைஞன் என்பவன் காசு வாங்கிக்கொண்டுதான் எதையுமே செய்கின்றான்.

அதற்கு பெயர் தியாகமில்லை.

திறமைக்கேற்ப பணம் சம்பாதிக்கின்றான்.

பிற தொழிலாளர்களைப்போல அவனும் தனக்கு தெரிந்த திறமையை பயன்படுத்தி சம்பாதிக்கின்றான்.

அவ்வளவே......

Link to comment
Share on other sites

16 hours ago, குமாரசாமி said:

கலைஞன் என்பவன் காசு வாங்கிக்கொண்டுதான் எதையுமே செய்கின்றான்.

அதற்கு பெயர் தியாகமில்லை.

திறமைக்கேற்ப பணம் சம்பாதிக்கின்றான்.

பிற தொழிலாளர்களைப்போல அவனும் தனக்கு தெரிந்த திறமையை பயன்படுத்தி சம்பாதிக்கின்றான்.

அவ்வளவே......

நானும் தியாகம் என்று சொல்லவில்லை, நமது திருப்த்தியை பொருத்து அவனை அடுத்த தலை முறைக்கு சிபாரிசு செய்கிறோம் அல்லவா...

இது அவன் வாங்கும் கூலியை விஞ்சிய வெற்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மியாவ் said:

நானும் தியாகம் என்று சொல்லவில்லை, நமது திருப்த்தியை பொருத்து அவனை அடுத்த தலை முறைக்கு சிபாரிசு செய்கிறோம் அல்லவா...

இது அவன் வாங்கும் கூலியை விஞ்சிய வெற்றி...

அடுத்த தலைமுறைக்கு சிபாரிசு செய்வது நமது கடமை. அதை செய்யும் வழி சரியானதாக நாகரீகமானதாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெகத் கஸ்பால் திருவாசகம் சிம்பொணி இசை எனும் பெயரில் உலகமெல்லாம் காசு சேர்த்து அடிச்சு ஒதுக்கிய பனம்போக மிகுதிக்காசைக்கொடுத்து இசையமைத்த இசைவடிவத்தின் மூலப்பிரதியை இன்னமும் ஜெகத் கஸ்பாலிடம் இளையராஜா கொடுக்கவில்லை என ஜெகதே ஒரு மேடையில் கூறியது நினைவில் வருகிறது.

இவரது மகன் யுவன்சங்கர் ராஜா முன்னம் ஒரு இலங்கைத் தமிழ்ப்பெட்டையைக் கலியானம்பண்ணி அவ்வேளையில்சிம்புவுடன் தய்லாந்து போய் அங்க கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் போனதால் மனஸ்தாபப்பட்டு பிரிஞ்சுபோயிட்டா இப்போ காரைகாலில் ஒரு இஸ்லாமியப் பெட்டையைக் கட்டி முஸ்லீமாக மாறிவிட்டார் மகன் ரம்ளான் நோண்பில் விருந்துவைக்க இளையராஜா பிரியாணியை ஒரு பிடி பிடித்ததாகச் செய்திவந்தது.

அந்தாளுக்கு இப்போஒ வயசு போயிட்டுது அண்மையில் ஒரு இந்திப்படத்துக்கு ஆசை அதிகம் வைத்து எனும் பாலுமகேந்திரா படப்பாடலை அப்படியே கொப்பி பேஸ்ட் பண்ணிட்டார் அதே போல் ஆனந்தராகம் எனும் பாடலையும் கிந்திப்படம் ஒண்டுக்கு தானே சேர்த்துப்போட்டார் இவைகள் எப்போவோ வந்தபாடல் ஆனால் அவர் அவற்றை இப்போதான் கிந்திக்குக்கொண்டுபோகிறார். ஆக அவருக்கு இப்போ சரக்குத் தீர்ந்துபோயிட்டுது என்பதுதானே அர்த்தம்

முன்னம் இவர் குடி கூத்து அனைத்திலும் கரை கண்டவர் இப்போ கடவுள் அது இது என ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அவர் ஒரு சைவ சமயத்தில் இருந்துகொண்டு இஸ்லாமியர்களது புரியாணியைப் பதம்பார்க்கிறார் எண்டால் மேலதிகமாக யோசிச்சுப்பாருங்கோவன்.

ஏ ஆர் ரகுமான் அண்மையில் கூறினார் வயதுபோகப்போக இப்போதைய இளைஞர்களுக்கான புதிய ராகங்களைத் தன்னால் கொண்டுவரமுடியாதுள்ளதென, வயசு போனால் எல்லோரும் இப்படித்தான்.

இப்போ அனிருத் என்பவர் அங்கொன்றும் இங்கொன்றுமாப்போறுக்கி இசை எனும் பெயரில் எங்களை எல்லாம் வருத்தாக்காரன் ஆக்கிறார்.

அனால் ஓய்வான நேரத்தில் இளையராஜாவையும் எம் எஸ் வி யையும் விட்டால் இப்போதைய இளசுகளுக்கும் ஆக்கள் இல்லை.

புலம்பெயர் தேசங்களில் இளையோர் கன்ஸ் சிம்மர் எனும் (Hans Florian Zimmer)  ஜேர்மனிய இசைச் சேர்க்கை செய்பவரை முழுவதுமாக அறிந்துள்ளார்கள்.

இவர் மடகஸ்கர், தி டாவின்சி கோட், மிஸ்ஸன் இம்பொசிபிள் ஆகிய படங்களுக்கு இசைக்கோர்ப்புச் செய்தவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எழுஞாயிறு, சைவக்காரர்,முஸ்லிம்களிடம் பிரியாணி வாங்கி சாப்பிடக் கூடாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி ஊரில தங்களைப் பெரியாக்களாகக் காட்ட தமிழகத்தில் இருந்து சில தலைக்கனங்களை  கூட்டி வந்து நிகழ்ச்சிகள் செய்யுற கோயில்காரர்களின் எச்சங்கள் இப்ப உலக நாடுகள் எங்கும் அகதி அந்தஸ்துப் பெற்று வாழும் நிலையில்..இது ஒன்றும் புதிதல்ல.

எல்லாம் சுய விளம்பரத்தின் நோக்கமே தான். tw_angry:

Link to comment
Share on other sites

சிட்னியில் இருக்கும் பலருக்கு தெரிந்த விடயம் இது. வேணுமென்றால் உங்களுக்கு தெரிந்தவர்களுடன் கேட்டுப்பாருங்கள்.  பணம் இளையராசாவிடம் இருப்பதினால் , அவரைப் பகைப்பதினால் பணத்தினை மீளப் பெற முடியாது என்பதினால் ஊடகங்களுக்கு கதிர் இச்செய்தியினைக் கொண்டு செல்லவில்லை. மிகுதி 25000ம் தந்து நிகழ்ச்சியை நடாத்த வேண்டும் என்று இளையராசாவின் வேண்டுகோல்.  கதிரின் இறப்பின் போது சிட்னியில் உள்ள இன்பத் தமிழ் வானொலியில் பலர் கருத்துக்களைப் பகிர்ந்தார்கள். தமிழக கலைஞர்களும் தங்களது கருத்துக்களைச் சொன்னார்கள்.  கங்க அமரன், தானும் எஸ் பி பியும் குறைந்த காசுக்கு கதிருக்காக நிகழ்ச்சியை செய்யத்தயாராக இருப்பதாகவும் சொன்னார்.  இப்பொழுது முகநூல் பெரிய ஊடகமாக இருக்கிறது. கதிருக்கு தெரிந்தவர்களில் சிலருக்கு 2000க்கு மேற்பட்ட தமிழக முகநூல் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த முகனூல் காரர்கள் பெரும்பாலும் புகழ்விரும்பிகள்.  அரசியல், இசை என எழுதி பலரை வாசகர்களாக வைத்திருக்கிறார்கள். தங்களுக்குப் பிடிக்காத கருத்துக்களை நீக்கிவிடுவார்கள். இளையராசாவைப் பற்றி புகழ்ந்து எழுதி வாசகர்களைக் கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள் . அவற்றைக் குறைக்க விரும்ப மாட்டார்கள்.  இந்திய இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட இவர்கள் , இந்திய இராணுவத்தினைப் பற்றியும் எழுத மாட்டார்கள் . எனென்றால் இந்திய வாசகர்களின் வெறுப்புக்களை ஏன் இழக்கவேண்டும் என்பதே.      இளையராசா சிட்னிக்கு இவ்வருடம்  வரவுள்ளதாக  இணையத்தில் செய்தி பார்த்தேன்.   இளையராசாவின் இசை எனக்குப்பிடிக்கும். ஆனால் இளையராசா என்ற மனிதரை  நான், எனது நண்பன் அமரர் கதிருக்காக  வெறுக்கிறேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.