Jump to content

ரொரண்டோவில் இசைஞானி அவர்கள்


Recommended Posts

எங்களிடம் உள்ள திறமைகளையறியா ஒருவித நோயாழிகள் நாங்கள், இந்த நோயை அடுத்ததலைமுறையிலுள்ள மிகப்பெரிய அறிவாளிகளிடத்தில் வெற்றிகரமாக பரப்பியுள்ளோம், மொத்தத்தில் எல்லாம் வல்ல அடிமைக்கூட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Knowthyself said:

எங்களிடம் உள்ள திறமைகளையறியா ஒருவித நோயாழிகள் நாங்கள், இந்த நோயை அடுத்ததலைமுறையிலுள்ள மிகப்பெரிய அறிவாளிகளிடத்தில் வெற்றிகரமாக பரப்பியுள்ளோம், மொத்தத்தில் எல்லாம் வல்ல அடிமைக்கூட்டம்

அமெரிக்கா இங்கிலாந்து போல் உலகளாவிய மட்டத்தில் இசைத்துறையில் இந்தியாவும் முதலிடத்தில் நிற்கின்றது. அதற்காக அவர்களுக்கு மதிப்புற்குரிய வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎/‎04‎/‎2018 at 5:38 PM, sivakumaran said:

சிட்னியில் இருக்கும் பலருக்கு தெரிந்த விடயம் இது. வேணுமென்றால் உங்களுக்கு தெரிந்தவர்களுடன் கேட்டுப்பாருங்கள்.  பணம் இளையராசாவிடம் இருப்பதினால் , அவரைப் பகைப்பதினால் பணத்தினை மீளப் பெற முடியாது என்பதினால் ஊடகங்களுக்கு கதிர் இச்செய்தியினைக் கொண்டு செல்லவில்லை. மிகுதி 25000ம் தந்து நிகழ்ச்சியை நடாத்த வேண்டும் என்று இளையராசாவின் வேண்டுகோல்.  கதிரின் இறப்பின் போது சிட்னியில் உள்ள இன்பத் தமிழ் வானொலியில் பலர் கருத்துக்களைப் பகிர்ந்தார்கள். தமிழக கலைஞர்களும் தங்களது கருத்துக்களைச் சொன்னார்கள்.  கங்க அமரன், தானும் எஸ் பி பியும் குறைந்த காசுக்கு கதிருக்காக நிகழ்ச்சியை செய்யத்தயாராக இருப்பதாகவும் சொன்னார்.  இப்பொழுது முகநூல் பெரிய ஊடகமாக இருக்கிறது. கதிருக்கு தெரிந்தவர்களில் சிலருக்கு 2000க்கு மேற்பட்ட தமிழக முகநூல் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த முகனூல் காரர்கள் பெரும்பாலும் புகழ்விரும்பிகள்.  அரசியல், இசை என எழுதி பலரை வாசகர்களாக வைத்திருக்கிறார்கள். தங்களுக்குப் பிடிக்காத கருத்துக்களை நீக்கிவிடுவார்கள். இளையராசாவைப் பற்றி புகழ்ந்து எழுதி வாசகர்களைக் கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள் . அவற்றைக் குறைக்க விரும்ப மாட்டார்கள்.  இந்திய இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட இவர்கள் , இந்திய இராணுவத்தினைப் பற்றியும் எழுத மாட்டார்கள் . எனென்றால் இந்திய வாசகர்களின் வெறுப்புக்களை ஏன் இழக்கவேண்டும் என்பதே.      இளையராசா சிட்னிக்கு இவ்வருடம்  வரவுள்ளதாக  இணையத்தில் செய்தி பார்த்தேன்.   இளையராசாவின் இசை எனக்குப்பிடிக்கும். ஆனால் இளையராசா என்ற மனிதரை  நான், எனது நண்பன் அமரர் கதிருக்காக  வெறுக்கிறேன். 

 

நீங்கள் கூட உங்கள் நண்பர் பணக் கஸ்த்தில் இருக்கும் போது உதவாமல் அவர் செத்த் பிறகு இதில வந்து புலம்பிக் கொண்டுi இருக்கீறீங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ  இன்னுமா இதை பற்றி கதைத்துக் கொண்டு  இருக்கிறீர்கள் ???
இசுலாமிய  பிரியாணியாம் , ஹான்ஸ் சிம்மராம், தாய்லாந்தில் சில்மிஷமாம் ...

கலைஞன் போட்ட கருத்த  உள்வாங்கினால் இவ்ளோ தேவையே வராதே !!
அட போங்கப்பு... போய் பொழப்பாப் பாருங்க...    

Link to comment
Share on other sites

பலாப்பழம் வாங்கினால் அதன் சுளையை சாப்பிட வேணும். தோலை எறிந்துவிட வேண்டும். tw_blush:

அதே வகையில், இளையராஜா என்றால் அவரது இசையை ரசிக்கின்றார்கள். அவரது நற்குணங்களுக்காக அவரை யாரும் ரசிக்கவில்லை. tw_astonished:

இளையராஜாவும் பல வகைகளில் முன்பு ஏமாற்றப்பட்டவர். அந்த வகையில் முன்பணமாக அதிகம் கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது. எல்லாமே Demand and Supply அடிப்படையிலானது. அந்த நிபந்தனை சரிவராவிட்டால் ஒரு வியாபாரி அதற்கு ஒத்துக்கொள்ள கூடாது. வியாபாரத்தையும், சுய விருப்பங்களையும் கலந்து குழப்பிக்கொள்ளக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் தான் கொஞ்சம் கேட்டுப்  பாருங்களேன்...
மனிதர்களை குறிப்பாக தமிழர்களை; இசை எப்படியெல்லாம் கட்டுப்போட்டு வைத்திருக்கிறது!!
எப்படியெல்லாம் விதம் விதமாக ஆர்த்மார்தமாக இந்த இசையை உள் வாங்கியுள்ளார்.
ரூபுத் தேரா மஸ்தான ...பியாருமேரா தீவானா ..
மேரே சப்புநோக்கி ராணி கபூ ஆயேகித்து ...
இப்படியான ஹிந்தி பாட்டுக்களை மட்டுமே கேட்டு, உச்சிக்கொட்டி மெய்சிலிர்த்தவர்கள் 
தமிழ்மேல் , தமிழிசை மேல் காதல் கொள்ள வைத்தவர் இசைஞானி இளையராஜா.
அவர்  மனதில் எம் எஸ் விஸ்வநாதன் நிரந்தர இடத்தை பிடித்தும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசி கனகாலத்திற்குப் பிறகு ஒன்றரை மணித்தியாலம் ஒரே இடத்தில் என்னை இருத்தி வைத்துவிட்டீர்கள். நன்றி சசி இணைப்பிற்கு. இசை என்னை வசீகரிப்பதும் அதற்குள் நான் அடிமைப்படுவதும் மாற்ற முடியாது போல இருக்கு........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அந்த இனிமையான இளமையான பொற்காலத்தை எம் கண்முன் எடுத்துவந்த சசிவர்ணனுக்கு நன்றிகள்.
அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே...இசை எம்மைக் கட்டிப்போட்டு விட்டது. பகிர்வுக்கு நன்றிகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை  என்பது இதயங்களைக் கட்டிப்போடும் ஒரு வசிய மருந்து ..  இசையமைப்பாளர்களுக்கு இறைவன் கொடுத்த வரம் . இசை யமைப்பாளரும் ஒரு மனிதன். குறை நிறை தன்னிடம் திறமை உள்ளது என்ற கர்வம் ..ஆணவம்  இருக்கலாம் . அதற்காக இசையை  குறைத்து எடை   போடக்   கூடாது.  எங்கு திறமை உள்ளது அதை மதிக்க கற்றுக்கொள்ளனும். இளைய ராஜா இசையில் ஒரு ஞானி . அவருக்குள் இறைவனின் அற்புதம் வெளிப்படுகிறது.  நீண்ட நாட்களுக்குப்பின் நல்ல  இனிய நினைவுகளை மீட்க  தந்த பகிர்வுக்கு நன்றி சசி வர்ணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இளையராஜாவின் அடிமட்ட ரசிகன்.
தமிழக உறவுகள் ரசிக்க தவறியதை ஈழத்தமிழன் ரசித்து உச்சத்திற்கே கொண்டு சென்ற  படமும் பாடலும்....

 

ஆகா! அந்த வின்சர் தியேட்டரும்....நிறம் மாறத பூக்களும்...அந்த சென்ற் வாசமும்....கொள்ளை போகுதே....:love:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெல்பொட்டமும் சுருட்டி விட்ட தலை முடியும்....:cool:

Link to comment
Share on other sites

On 15.4.2018 at 10:40 AM, Sasi_varnam said:

 

பல காலமாக நீயா நானா பார்ப்பதை நிறுத்தியிருந்தேன் - மறுபடியும் பார்த்தேன் இன்று

பகிர்வுக்கு நன்றி சசி.

உங்களுக்காக நன்றியுடன் சில பாடல்கள்

இளசு எப்பவுமே எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத மாற்றங்களை பாடலில் செய்வார். அப்படியே இந்த பாடல்களிலும் ஆண்/பெண் குரலை எதிர்பாராமல் சேர்த்திருப்பார் - அழகாக இருக்கும். இது ஒருகுட்டி உதாரணம்தான்.

இளசு தண்ணி அடிச்சா என்ன பிரியாணி திண்டா நமக்கென்ன - அற்புதமான அவரின் பாடல்களை மட்டுமே ரசிப்போம்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

பல காலமாக நீயா நானா பார்ப்பதை நிறுத்தியிருந்தேன் - மறுபடியும் பார்த்தேன் இன்று

பகிர்வுக்கு நன்றி சசி.

உங்களுக்காக நன்றியுடன் சில பாடல்கள்

இளசு எப்பவுமே எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத மாற்றங்களை பாடலில் செய்வார். அப்படியே இந்த பாடல்களிலும் ஆண்/பெண் குரலை எதிர்பாராமல் சேர்த்திருப்பார் - அழகாக இருக்கும். இது ஒருகுட்டி உதாரணம்தான்.

இளசு தண்ணி அடிச்சா என்ன பிரியாணி திண்டா நமக்கென்ன - அற்புதமான அவரின் பாடல்களை மட்டுமே ரசிப்போம்.

 

 

 

 

ஜீவன் சிவாவை நிறைய நாட்களின் பின்னர் மனதுக்கு இதமான  திரி ஒன்றில் சந்திப்பதில் மகிழ்ச்சி!!
நலமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன். !!   

வல்வை அக்கா, கண்மணி அக்கா, நிலாமதி அக்கா எல்லோரையும் ஒருசேர இங்கே பார்ப்பதில் மகிழ்ச்சி.
கூடிய சீக்கிரம் கோடைக்கால ஒன்றுகூடலில் சந்திக்கலாம். தமிழ் இசை பற்றி நாங்களும் சேர்ந்து ஒரு நீயா? நானா? போல தர்க்கங்கள் இல்லாத மனம் திறந்து உரையாடலாம்.. :100_pray:
குசா அண்ணா உங்கள் அருமையான பதிவுக்கும் நன்றி.. :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

நான் இளையராஜாவின் அடிமட்ட ரசிகன்.
தமிழக உறவுகள் ரசிக்க தவறியதை ஈழத்தமிழன் ரசித்து உச்சத்திற்கே கொண்டு சென்ற  படமும் பாடலும்....

 

ஆகா! அந்த வின்சர் தியேட்டரும்....நிறம் மாறத பூக்களும்...அந்த சென்ற் வாசமும்....கொள்ளை போகுதே....:love:

நிறம் மாறாத பூக்கள் வின்சர் அரங்கில் ஓடிய வருடம் தான் எங்கள் புது வீட்டு "குடிப்பூரள்" நடந்தது. எங்கள் அப்பாவுக்கு  இந்த படத்தின் டைட்டில் கொஞ்சம் தகராரு எப்பவும் அதை "பூக்காத பூக்கள்" படம் என்று தான் சொல்லுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசி கொண்டு வந்து இணைக்கும் போது கூட பார்க்கவில்லை, 3 அக்காமாரும் எழுதினத்தைப் பார்த்த பிறகு தான் பார்த்தேன்...அழுகையே வந்து விட்ட்து.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
    • திரும்பவும் வாண வேடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ☹️
    • இது நன்கு திட்டமிடப்பட்,  வன்முறை, அச்சுறுத்தல் எதுவும் பாவிக்கப்படாத  கொள்ளை Heist.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.