Jump to content

ஓடிய ஓட்டம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓடிய ஓட்டம் என்ன?

 எங்கள் ஊரின் அன்றைய அழகு தேவதை அவள்தான். பெயர் எல்சி. நிறம் வெள்ளை. அதனால்தான்லொள்ளுவிட பல இளைஞர்கள் அவளைச் சுற்றிச் சுற்றி சைக்கிளில் திரிந்தார்கள். அவர்களுக்குள் கவியும் இருந்தானா என்று கேட்கிறீர்களா? இல்லை என்று சொல்ல மாட்டேன். இருந்தான். அழகு என்பது பொதுவுடமை. அதை யாரும் ரசிக்கலாம்தானே. ஆனால் பயம் காரணமாக தூரஇருந்தே கவி ரசித்துக் கொண்டிருந்தான்

 தங்களைப் பார்த்து ஒருத்தியாவது சிரிக்க மாட்டாளா என்று ஏங்கும் இளம் வயது வாலிபங்கள் மத்தியில் எல்சி எல்லோரையும் பார்த்துச் சிரித்தாள். கவனியுங்கள் அவளுக்கும் பொதுவுடமைத் தத்துவம் தெரிந்திருக்கிறது. அவளுக்கு முழங்காலுக்கு கீழே இருக்கும் பாவாடை அணியப் பிடிக்காது. இதுவும்  வாலிபங்களுக்கு அவளிடம் பிடித்த  மெகாகுணம். ஆனாலும் எல்லா வாலிபங்களுக்கும், அவர்களுக்குள்ளேயே ஒரு கேள்வி இருந்தது. “உண்மையில் எல்சி யாரை விரும்புகிறாள்?”

 அவளை நெருங்கிக் கேட்கவோ, கடிதம் எழுதிக் கொடுக்கவோ வாலிபங்களுக்கு தயக்கமாக இருந்தது. காரணம் அவளது சித்தப்பா அருமைநாயகம். ஆறடிக்கு மேலான உருவம், மற்றும் முறைப்பான பார்வை, இந்த இரண்டும் அவரது முக்கியமான அடையாளங்கள்.

 ஞாயிற்றுக்கிழமை பூசைக்குப் பின்னரான அருட் தந்தை ஆனந்தன் அவர்களின் பிரசங்கம் ஒன்று

நாங்கள், எங்களது வீட்டுப் பெண்களுக்கு கொடுக்கும் மதிப்பை மற்றைய பெண்களுக்கும் கொடுக்க வேண்டும். காலத்தின் மதிப்பு தெரியாமல் வீணாகத் தெருவில் நிற்பதும், பெண்களை இடைஞ்சல் செய்வதும் நல்லதல்ல. இளைஞர்கள் இதை உணர்ந்து நடந்தால் இருபாலாருக்கும் நன்மை தரும்....” 

 குருவானவர் இப்படிச் சொல்லிவிட, கிருஸ்தவ மதத்தில் இருந்த வாலிபங்கள் மரியாதையாக மெதுமெதுவாகக் கழன்று கொண்டார்கள். இதனால் சைவப் பெடிகளுக்கு இடைஞ்சல்கள் வெகுவாக குறைந்து போனது. அவர்கள் எல்சி செல்லும் பாதைகளில் சைக்கிளில் தங்கு தடையின்றி சுழன்று கொண்டிருந்தார்கள்.

A8_BDC750-_F469-4025-_BDF1-9_B7_CB590_E4

 கிருஸ்தவ மதத்தில் இருந்த இளைஞர்கள் தயங்கி நின்ற போதும், பிலிப்நேரி மட்டும் துணிந்து காதலில் இறங்கினான். பிலிப்நேரி நகரசபையில் வேலை செய்து கொண்டிருந்ததால் அவனிடம் போதிய பணம் இருந்தது. அவனிடம் இருந்த தொழில், வருமானம் ஆகிய இரண்டு தகுதிகளும், மாணவர்களான எங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு அவனை முன்னே கொண்டுபோய்  நிறுத்திவிட்டன. ஆனால் பிலிப்நேரிக்கு எல்சியை விட பதினைந்து வயதுகள் அதிகமாக இருந்ததால் ஜோடிப் பொருத்தத்தில் கொஞ்சம் பின்னடைவு தெரிந்தது.

 அருமைநாயகமும், பிலிப்நேரியும் ஏறக்குறைய ஒரே உயரமும் உடல்வாகும் கொண்டவர்கள். எங்களைப் போல, அவனுக்கு அருமைநாயகத்திடம் பயம் கிடையாது. ஆனால் தனது காதலை எல்சி மறுத்து விட்டால் என்னாகும் என்ற தயக்கம் மட்டும்தான் அவனிடம் மேலோங்கி இருந்தது.

 பிலிப்நேரி தனது  விடயத்தில் சில திட்டங்களைப் போட்டான். முதற் கட்டமாக எல்சியின் தம்பி ரோகானை வசப்படுத்தினான். அவன் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்தான். சினிமா பார்க்க ரிக்கெற் எடுத்துக் கொடுத்தான். ரோகான் எங்கெல்லாம் போக வேண்டும் என்று சொல்கிறானோ, அங்கெல்லாம் அவனை சைக்கிளில் கொண்டு போய் விட்டு விடுவான். ரோகானுடனான பிலிப்நேரியின் நெருக்கம், சைவப் பெடியங்களுக்கு எல்சியின் மேல் இருந்த ஈர்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வந்தது.

 ஒவ்வொரு  வீட்டிலும்அவிட்டு விட்ட மாடு போலை ஊரெல்லாம் சுத்தமாமல் படிக்கிற அலுவலைப் பார். சோதனையிலை பெயில் விட்டியோ பிறகு கொப்பரிட்டை தப்ப மாட்டாய்என்ற அம்மாக்களின் பயம் காட்டுதலும் சேர்ந்து கொண்டதால் ஒரு கட்டத்தில் போட்டியில் இருந்து சைவப் பெடியங்களும்திராட்சை புளிக்கும்என்று விலக, பிலிப்நேரி தனிக்காட்டு ராஜாவாக அங்கீகாரம் பெற்றான்.

 ஒருநாள் நானும் பிலிப்நேரியும் எதிர் எதிர்த்திசைகளில் ஒழுங்கையால் சைக்கிளில் வந்து கொண்டிருந்தோம். அந்த ஒழுங்கையில் இருந்த ஆன் அன்ரி வீட்டு வாசலில் எல்சி தனியாக நின்றிருந்தாள். பிலிப்நேரி என்னைப் பிடித்துக் கொண்டான்

 “இது நல்ல சந்தர்ப்பமடா தனிய நிக்கிறாள். அவளோடு கதைக்கலாம். பயமாயிருக்கு. நீயும் நில்லடா?”

 பிலிப்நேரி என்னிடம் கெஞ்சினான். நான் என்ன கேட்டாலும் செய்து தரும் நிலையிலேயே பிலிப்நேரியின் நிலை இருந்தது. ஆனால் அவனுக்கிருந்த உதறலை விட என்னிடம் அதிகமாக இருந்தது. ஒழுங்கையில் இரண்டு பக்கமும் பார்த்தேன். அருமைநாயகத்தின் நிழல் கூட அந்த ஒழுங்கையில் இல்லை என்பதை உறுதியாக்கிய பின்னர் எல்சியின் பக்கம் மெதுவாகத் திரும்பினேன். சிரித்தாள். அவள் என்னைப் பார்த்துத்தான் சிரிக்கிறாளா? இல்லை பிலிப்நேரியைப் பார்த்தா? நான் ஒரு முடிவுக்கு வருமுன்னரே பிலிப்நேரி முடிவெடுத்துவிட்டான்.

  “பாருடா பாருடா அவள் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள்பிலிப்நேரி அப்படிச் சொன்னதும் எரிச்சலின் உச்சத்தில் நான் இருந்தேன்.

 “அப்ப போய்க் கதையன்

 “போயிடாதையடாஎன்று என் காதிடம் சொல்லிவிட்டு பிலிப்நேரி எல்சியை நெருங்கினான்.

 பிலிப்நேரி தன்னை நோக்கி அடி எடுத்து வைப்பதைப் பார்த்து எல்சி இரண்டடி பின் நகர்ந்துஅம்மாஎன்று மாரீசன் பாணியில் அவலக் குரல் கொடுக்க, எனக்கு விளங்கி விட்டது. ஒரு போர் மேகம் தரைக்கு உடனடியாக வரப் போகிறது என்று.

 நான் நினைத்தது நடந்தது. ‘கன்றழுத குரல் கேட்டு தாய்ப்பசு ஓடும்என்பார்கள். அது நடந்தது. ஆன் அன்ரியின் வீட்டுக் கேற்றைத் திறந்துகொண்டு  எல்சியின் தாய் லூடாஸ் அன்ரி வெளியேவர, ஏற்கனவே எச்சரிக்கையோடு இருந்த நான் மெதுவாக சைக்கிளோடு நகர்ந்தேன்.

  “அக்கா, சொல்லுறதைக் கேளுங்கோ. நான் ஒண்டுமே செய்ய இல்லை அக்கா. ஏன் இதிலை நிக்கிறீங்கள் எண்டு கேக்கத்தான்...” பிலிப்நேரியின் குரல் தளதளப்போடு வெள்ளைக் கொடி பிடித்தது. இப்படியான ஒரு சம்பவம் நடக்கும் என அவன் கணித்திருக்க மாட்டான்.

 “நான் உனக்கு அக்காவோடா? நான் உனக்கு அக்கா எண்டால் என்ரை மகள் உனக்கு மருமகளெல்லோடா. உன்ரை வயசென்ன? அவளின்ரை வயசென்ன?” லூடாஸ் அன்ரிக்கு இவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததில்லை. தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் அன்று அந்த இடத்தில் நின்றிருந்தால் நல்ல தமிழில் ஒரு அர்சச்சனயையும்அதனோடு சேர்த்து ஆலாபனையையும் கேட்டிருப்பார்கள்.

 அழகான தமிழில் இவ்வளவு அழுக்கான வார்த்தைகளா? நான் அதிர்ந்து போனேன்.

 லூடாஸ் அன்ரியின் பார்வை என்மேல் திரும்பினால் நிச்சயம் நான் கொங்கணன் பார்தத கொக்காகி விடுவேன். அந்தளவுக்கு அவரின் கண்கள் சிவந்திருந்தனநல்ல வேளையாக விடுப்புப் பார்க்க கொஞ்சம் ஆட்கள் சேர்ந்து விட, அவர்களுக்குள் புகுந்து வெளியேறி என் சைக்கிளில் ஏறி ஓடத் தொடங்கினேன். இரவில் படம் பார்த்து விட்டு ஒழுங்கையால் வரும்போது நாய் துரத்துமே, அப்போது கூட இவ்வளவு வேகம் என் சைக்கிள் கண்டதில்லை. அன்று நான் ஓடியதே என்  வாழ்வில் அதிகமான சைக்கிள் ஓட்ட வேகம் என்பேன்.

 நடந்த பிரச்சினை அன்று மாலையே நட்பு வட்டத்துக்குள் வந்துவிட்டது

 “நல்லவேளையடா நீ பிடிபட இல்லை. மனுசியின்ரை கையிலை நீ அம்பிட்டிருந்தால், உனக்கு சரியா பிடிச்சு மூத்திரம் விடத் தெரியுமோ என்று கேட்டு நாறடிச்சிருக்கும்

 “வாழைக்குள்ளை சந்தியாப்பிள்ளை எண்டு ஆருக்குத் தெரியும். தாய்க்காரி ஆன் அன்ரி வீட்டுக்குள்ளே இருக்கிறதை நாங்கள் கவனிக்க இல்லை

 எங்களுக்குள் எழுந்த கேள்விகள் இவைதான். பிலிப்நேரியை எல்சி உண்மையிலேயே விரும்பி இருந்தாளா? பின் எதற்காக பிலிப்நேரி எல்லா இடத்திற்கும் சைக்கிளில் எல்சியின் தம்பி ரோகானை வைத்துக் கொண்டு திரிந்தான்?

 அடுத்தநாள் எங்களுக்கு விடை கிடைத்தது. ரோகானையே பிடித்துக் கேட்டோம்.

 “நேற்று கொம்மாவுக்கும், பிலிப்நேரிக்கும் ஏதோ பிரச்சினையாமே?” 

 “அக்காவோடை சேட்டை விட்டார் அதுதான்

 “நீதானே பிலிப்நேரிக்கு தூது போற ஆள்

 “நான் ஒருத்தருக்கும் தூது போகேல்லை

 “அப்ப எதுக்கக்கடா உனக்கு கொத்து றொட்டி ஐஸ்கிறீம் எல்லாம் வாங்கித் தந்தவன்?”

 “அதை அவரிட்டை போய்க் கேளுங்கோ

 ரோகான் எங்களிடம் பிடி கொடுக்கவில்லை. அவன் உலகம் தெரியாதவனில்லை. சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கி, பிலிப்நேரியின் காசில் நன்றாக தின்று, உருண்டு திரண்டிருப்பது தெரிந்தது

 காதலிக்கும் போது காதலனுக்கு கண் இல்லாமல் போகலாம். ஆனால் காதலிகளின் தம்பிகளுக்கு அப்பொழுதுதான் அறிவு அதிகமாக வேலை செய்கிறது.

 கொஞ்ச நாளில் பிலிப்நேரி சொந்த மச்சாளுக்கே மாப்பிள்ளையாகிப் போனான்.

 பேஸ்புக்கில் தன் பேரனைக் கொஞ்சியபடி எல்சி இருக்கும் படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவில் பயங்கரக் குளிர் போலை, படத்தில் உடல் முழுதும் மூடி உடுப்பு போட்டிருந்தாள்.

 கவி அருணாசலம்

30.03.2017

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரெல்லாம் 'ஜொள்ளு' விட்டு காவாலி(?)யாய் திரிந்த கவியர், எப்போதான் 'வாலி'யாகி, ராமனாக 'செட்' ஆனார்..? vil-lettre.gif

அந்த கதையை சொன்னால், 'விடுப்பு' கேட்க சுவாரசியமாக இருக்கும்..!  vil-electric.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஓடாமல் நின்றிருந்தால்  சில சமயம் உங்களுக்கு எல் சி யுடைய நட்பு கிடைத்திருக்கலாம்.காரணம் அவ சிரித்தது உங்களை பார்த்துதானே......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பயந்தாங்கொள்ளியாக இருந்திருக்கின்றார்கள்? உருட்டி உருட்டி அடிபோட்டாலும் காதலுக்காக எதையும் தாங்கியிருக்கவேண்டும்.பிலிப்புநேரி எல்சியின் தாயாரை அக்கா என்று சொன்னதுதான் படுபிழை. ஆன்ரி என்று காலில் விழுந்திருக்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

ஊரெல்லாம் 'ஜொள்ளு' விட்டு காவாலி(?)யாய் திரிந்த கவியர், எப்போதான் 'வாலி'யாகி, ராமனாக 'செட்' ஆனார்..? vil-lettre.gif

அந்த கதையை சொன்னால், 'விடுப்பு' கேட்க சுவாரசியமாக இருக்கும்..!  vil-electric.gif

ராசவன்னியன்

நீங்கள் என்னை ராமனாக நினைத்தால் நான் என்ன செய்ய?

என் கதையை விடுப்புக் கேட்க நீங்கள் விரும்பலாம். ஆனால் அது நீங்கள் நினைப்பது போல சுவாரசியமாக இருக்காது மிக சோகமாக இருக்கும்

எதுக்கு நீங்கள் வீணாக சோகமாகி... என் கவலை என்னோடையே இருக்கட்டும்.

 
3 hours ago, suvy said:

 

நீங்கள் ஓடாமல் நின்றிருந்தால்  சில சமயம் உங்களுக்கு எல் சி யுடைய நட்பு கிடைத்திருக்கலாம்.காரணம் அவ சிரித்தது உங்களை பார்த்துதானே...

 

Suvy,

ஓடாமல் ஒருதரம் நின்றதாலேதான் எல்லாமே பிழைத்துப் போயிற்று. அதை பிறகு ஒருதரம் சொல்கிறேன்.

 

2 hours ago, கிருபன் said:

சரியான பயந்தாங்கொள்ளியாக இருந்திருக்கின்றார்கள்? உருட்டி உருட்டி அடிபோட்டாலும் காதலுக்காக எதையும் தாங்கியிருக்கவேண்டும்.பிலிப்புநேரி எல்சியின் தாயாரை அக்கா என்று சொன்னதுதான் படுபிழை. ஆன்ரி என்று காலில் விழுந்திருக்கலாம்?

கிருபன்,

கதல் வேறை. சுழட்டல் வேறை. சுழட்டலுக்குப் போய் அடி வேண்டினால் பிறகு, கதாநாயகன் தகுதி போய்விடும்.

லூடாஸ் அன்ரி உதைச்சிருப்பார்

ஏன்டா  நீ என்னை அன்ரி என்று கூப்பிடுறளவுக்கு எனக்கு அப்பிடி வயசாச்சாஎன்று பிவிப்நேரியை துவைச்சு எடுத்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

ராசவன்னியன்

நீங்கள் என்னை ராமனாக நினைத்தால் நான் என்ன செய்ய?

என் கதையை விடுப்புக் கேட்க நீங்கள் விரும்பலாம். ஆனால் அது நீங்கள் நினைப்பது போல சுவாரசியமாக இருக்காது மிக சோகமாக இருக்கும்

எதுக்கு நீங்கள் வீணாக சோகமாகி... என் கவலை என்னோடையே இருக்கட்டும்.

என் எண்ணங்கள் பொய்த்துவிட்டன.

மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாலேயே பேசிப் பேசி காதலித்த காலம்.காதல் கதையை நன்றாக எழுதியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு பேப்பரில் எழுதும் இரவி அருணாசலாமா?
 

Link to comment
Share on other sites

"அமெரிக்காவில் பயங்கரக் குளிர் போலை, படத்தில் உடல்முழுதும் மூடி உடுப்பு போட்டிருந்தாள்."

ஐயாவுக்கு ஆசைய பாரன்

கதை Superb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

 

7 hours ago, ரதி said:

நீங்கள் ஒரு பேப்பரில் எழுதும் இரவி அருணாசலாமா?
 

நான் அவரில்லை

 

 

7 hours ago, Knowthyself said:

ஐயாவுக்கு ஆசைய பாரன்

Knowthyself,

அடைய முடியாத பொருளின் மீது ஆசை தீராது

அபிமானம் மாறாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவியர்...நீங்கள் ஒரு காலத்தின் கண்ணாடி என்பேன்!

எவ்வளவு கச்சிதமாய்.....சைக்கிள் காதலை விபரித்திருக்கிறீர்கள்?

யாழ்ப்பாணத்து 'டீனேஜ்' தமிழனைப் போல....உலகத்தில் எந்த ஓரு இளைஞனுமே கனவுலகில் வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்று தான் தோன்றுகின்றது!

ஒரு சமன்பாட்டுக்குள்...எத்தனை x,y,z க்கள் ஒருந்தாலும்....எல்லாவற்றையும் தாண்டி...வெற்றி பெற்ற காதல்களும் உண்டு தான்!

அது சரி......தேவதைகள்...தேவாங்குகளாக மாறுவதைக் காண்பதற்கு......ஆயிரம் கண்கள் கூடப் போதாது!

குளிர் காலம் வருகின்ற போது....பழைய காதலிகள் ...யாழ் களத்தில்...பலருக்கு நினைவுக்கு வருவது தான் ஏன் என்று எனக்கு விளங்குதில்லை!

தொடர்ந்தும் காதலியுங்கள்....மன்னிக்கவும்!

தொடர்ந்தும் எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

குளிர் காலம் வருகின்ற போது....பழைய காதலிகள் ...யாழ் களத்தில்...பலருக்கு நினைவுக்கு வருவது தான் ஏன் என்று எனக்கு விளங்குதில்லை!

தொடர்ந்தும் காதலியுங்கள்...

புங்கையூரான் இப்போ இளவேனிற்காலம் . எல்லாம் பசுமையாகத் தெரிகிறது.

எப்போதும் காதலிக்க ஆசைதான். ஆனால் முன்னர் போலை  வேகமாக சைக்கிள் ஓட்ட முடியாதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2018 at 8:06 AM, புங்கையூரன் said:

 

யாழ்ப்பாணத்து 'டீனேஜ்' தமிழனைப் போல....உலகத்தில் எந்த ஓரு இளைஞனுமே கனவுலகில் வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்று தான் தோன்றுகின்றது!

 

அது அந்தக்காலம். இந்தக்காலத்தில் கை தொலைபேசி, மின்னஞசல் , முகநூல் என்று பல வசதிகள் இருக்கிறது.

 

மீண்டும் ஒரு அருமையான அனுபவக்கதையினை எங்களுடன் பகிர்ந்திருக்கிறீர்கள்  கவி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் சைக்கிளைப் போட்டு விட்டு ஓடவில்லை.:rolleyes:கதை சுப்பர்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

 

நல்ல காலம் சைக்கிளைப் போட்டு விட்டு ஓடவில்லை

 

 

 

நல்லாயிருக்கு சுவைப்பிரியன்,

 சைக்கிள் எங்கே என்று கேட்டு வீட்டிலை அடி விழுந்திருக்கும்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.