Jump to content

மாநிற தமிழ் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறதா? #BBCShe


Recommended Posts

மாநிற தமிழ் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறதா? #BBCShe

 

கோவை நகரின் தெருக்களில் நான் சென்றபோது மாநிறம் உடைய பெண்கள் பலரையும் பார்த்தேன். ஆனால், வெள்ளை நிறத்தில் தோல் உடைய பெண்கள் விளம்பரப் பதாகைகளில் நின்றுகொண்டு என்னை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

#BBCSheபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மாநிறத் தோற்றம் உடைய பெண்கள் அதிகம் வசிக்கும் தமிழகம் போன்றதொரு மாநிலத்தில் வெள்ளை நிறப் பெண்கள் இருக்கும் பதாகைகள் வேறு எங்கோ இருந்து கொண்டு வரப்பட்டது போல இருந்தது.

எனக்கு மட்டுமல்ல, #BBCShe திட்டத்துக்காக அவினாசிலிங்கம் பல்கலைக்கழக மாணவிகளை சந்தித்தபோது அவர்களும் இதே கருத்தை கூறினார்கள்.

#BBCSheபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

'"விளம்பரங்களில் இருக்கும் பெண்களை போலவே சமூகத்தில் அனைத்துப் பெண்களும் இருப்பார்கள் என்று நினைக்க முடியாது. மெல்லிய உடலும், நீண்ட கூந்தலும் கொண்டே பெண்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது," என்ற கருத்தை அவர்கள் பிரதிபலித்தனர்.

இந்தப் பகுதியில் இருக்கும் பெண்களின் தோற்றம் ஒரு மாதிரி இருக்கும்போது, வேறு தோற்றம் உடைய பெண்களைக் கொண்டு பதாகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யப்படுவது எதனால்?

நகைக் கடை விளம்பரங்களிலும் வெள்ளைத் தோல் உடையே பெண்களே தென்படுகிறார்கள்.

தமிழ் திரையுலகிலும் இதே நிலை இருப்பதை ஒரு மாணவி சுட்டிக்காட்டினார்.

#BBCShe

தமிழ் திரைப்பட நடிகைகள் குறித்து கூகுளில் தேடினால் வரும் முடிவுகளில் பெரும்பாலும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஹன்சிகா, தமன்னா, அனுஷ்கா, அசின் போன்ற நடிகைகளின் படங்களே வருகின்றன.

திரிஷா, சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்குமான ஒரு ஒற்றுமை, அவர்களுக்கு இருக்கும் வெள்ளை நிறத் தோல்.

ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய் சேதுபதி, தனுஷ் போன்ற கறுப்பு நிறத் தோல் உடைய கதாநாயகர்களை ஏற்றுக்கொள்வதில் தமிழக ரசிகர்களுக்கு பிரச்சனை இல்லை.

#BBCShe

விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் காட்டப்படும் பெண்களின் தோற்றங்கள் மிகைப்படுத்தப்பட்ட, 'உண்மையற்றவை' என்று நாம் அதை புறக்கணிக்க முடியாது.

அவை தங்கள் மீது செலுத்தும் தாக்கம் குறித்து கல்லூரி மாணவிகள் கூறுகின்றனர். தங்களின் தோலின் நிறத்தால் தன்னம்பிக்கை குறைவது, குடும்பங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்டப்படுவது ஆகியவை குறித்து அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

ஷாருக் கான் 2013இல் நடித்த ஒரு விளம்பரத்தை போல வெள்ளைத் தோல்தான் அழகு எனும் கருத்து மீண்டும் திணிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

சமீப காலங்களில் நந்திதா தாஸ் போன்று திரைத்துறைக்குள்ளேயே இருந்து அந்தக் கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

#BBCShe

2017 மிசர்ஸ் இந்தியா எர்த் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கோவையைச் சேர்ந்த காயத்ரி நடராஜன் உள்ளிட்டோரும் மாநிறத் தோலால் தாங்கள் பாகுபாட்டுக்கு ஆளானது குறித்து பேசியுள்ளனர்.

வெள்ளை நிறத்தோல் உடைய பெண்களை வெற்றிபெற்றவர்களாக காட்டக் காரணம் மக்களின் எதிர்பார்ப்பு என்று விளம்பர நிறுவனங்கள் கூறுகின்றன. அது உண்மையும்கூட.

எனினும், இந்த இளம் பெண்கள் கூறுவதற்கு செவிமடுப்பதன் மூலம், அவர்களின் தேவையை மட்டுமல்ல, இத்தகைய கருத்தை மீண்டும் மீண்டும் பதிவு செய்வது மூலம் ஊடகம் உண்டாக்கும் தாக்கம் குறித்து ஒளிபரப்பு ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் அறிய முடியும் .

http://www.bbc.com/tamil/india-43586043

Link to comment
Share on other sites

பிகார்: வரதட்சணையை தடுக்க கடத்தப்பட்டு கட்டாய திருமணம் #BBCShe

திருமணம்படத்தின் காப்புரிமைAFP/STRDEL

தங்களுடைய மகள்களை திருமணம் செய்து கொடுப்பதற்காக மணமகன்களை கடத்தும் எல்லைக்கே சில குடும்பங்கள் செல்கின்றன. இதற்கு மகள்களின் சம்மதம் பெறப்படுவதில்லை.

பெற்றோர் உங்களை எப்படியாவது திருமணம் செய்து கொடுக்க எண்ணி, ஓர் ஆண் மகனை கடத்தி திருமணம் செய்து வைக்கப்படும் இளம் பெண்ணாக உங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு உங்களுடைய சம்மதத்தையோ, அந்த ஆணின் சம்மதத்தையோ கேட்காமல் செய்யப்படுவதுதான் "பாக்டோவா திருமணம்".

’BBCShe’ பணித்திட்டத்தின் போது பாட்னாவில் நடத்திய உரையாடலில், இத்தகைய பாக்டோவா திருமண சம்பவத்தை பற்றி பெண்கள் கூறியபோது, நான் நம்பவில்லை.

இப்படிப்பட்ட ஒரு திருமணத்திற்கு பெண் ஒருவர் எவ்வாறு சம்மதிப்பார்?

அந்த ஆண் அவளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால் என்ன நடக்கும்?

மணமகன் கோபத்தோடு மணமகளை வீட்டிற்கு அழைத்து வந்தால், அவள் எவ்வாறு திருமண வாழ்க்கை நடத்துவார்?

2017ம் ஆண்டு பிகார் மாநிலத்தில் 3,500 ஆள்கடத்தல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல்துறை கூறுகின்றது.

இதில் அதிகமானவை பிகாரின் வட பகுதியில் நடைபெற்றவையாகும்.

எனவே, பாட்னாவின் சாஹார்சா மாவட்டத்திற்கு சென்றேன். அங்குள்ள சிம்ரி கிராமத்தில் மஹாராணியையும், அவருடைய கணவர் பர்வீன் குமாரையும் சந்திப்பதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்.

பர்வீனும், மஹாராணியும் இப்போது இரட்டை மகன்களுக்கு பெற்றோர்.படத்தின் காப்புரிமைDIVYA ARYA Image captionபர்வீனும், மஹாராணியும் இப்போது இரட்டை மகன்களுக்கு பெற்றோர்.

அவருடைய குடும்பத்தினர் பர்வீனை கடத்தி, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தபோது, மஹாராணிக்கு 15 வயதுதான்.

"எனக்கு திருமணம் பற்றிய எந்த சிந்தனையும் இல்லை. யாரும் என்னுடைய சம்மதத்தை கேட்கவில்லை" என்று மஹாராணி என்னிடம் தெரிவித்தார்.

ஏன் என்று நான் கேட்ட கேள்விக்கு, "எங்கள் அம்மா, அப்பா விரும்புவதுதான் நடைபெறும். திருமணம் பற்றி முடிவெடுப்பதில் மகள்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது" என்று அவர் கூறினார்.

அந்த முடிவின் விளைவு என்னவென்றால், திருமணம் நடைபெற்றது. ஆனால், 3 ஆண்டுகளாக பர்வீன் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லவில்லை.

பர்வீன் இது பற்றி என்னிடம் கூறுகையில், "எனக்கு நடந்தது பற்றி நான் பதற்றமும், கோபமும் அடைந்தேன். எனவே, நான் அவளை அவளுடைய இடத்திலேயே விட்டுவிட்டு வந்து என்னுடைய வீட்டில் தனியாக தங்கியிருந்தேன்" என்றார்.

சிம்ரி கிராமத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டோலா கிராமத்தில் 17 வயதான ரோஷானும் இதே மாதிரியான கோபத்துடன் உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் ஏமாற்றி இன்னொரு கிராமத்துக்கு போக செய்துள்ளார்.

ஓர் அறையில் அடைத்து வைத்து அடித்து, துப்பாக்கி முனையில் தான் மிரட்டப்பட்டதாகக ரோஷான் குறிப்பிடுகிறார்.

அவரைவிட வயது அதிகமான பெண்ணோடு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணின் குடும்பத்தில் இருந்து வெளியே வந்தவுடன், காவல் நிலையத்துக்கு சென்ற அவர், குழந்தை திருமண வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

"பின்னர் பஞ்சாயத்து சமரசம் செய்ய முயற்சித்தது. நான் ஏற்கெனவே குரல்வளை நெரிக்கப்பட்டதுபோல உணர்கிறேன். நீங்கள் என்னை கொன்றாலும், இந்த திருமணத்தை ஏற்கப்போவதில்லை என கூறிவிட்டேன்" என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

ஆனால், அந்த பெண்ணுக்கு என்ன ஆகும்?

பெண்படத்தின் காப்புரிமைDIVYA ARYA

"எனக்கு அந்த பெண்ணை தெரியாது. நான் அவரோடு எந்த உறவையும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவளை பற்றி எனக்கு கவலையில்லை. என்னுடைய வாழ்க்கையில் மேலும் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.

இவ்வளவு கசப்புணர்வோடு தொடங்குகின்ற ஓர் உறவின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

பாக்டோவா திருமணத்தின் உண்மை நிலை பற்றி குடும்பங்கள் தெரிந்திருந்தாலும், இந்தப் புதைகுழியில் அவர்களின் மகள்களை ஏன் தள்ளுகிறார்கள்?

பிகாரில் இருக்கின்ற நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் இந்த நிலைமை நிலவுவதாக பாட்னா பல்கலைக்கழகத்தில் பெண்களின் ஆய்வு மையங்களை தொடங்கிய வரலாற்று பேராசிரியர் பாரதி குமார் நம்புகிறார்.

"உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் அதிக சமூக அழுத்தங்கள் காணப்படுகின்றன. மிக விரைவாக அதே சாதியை சேர்ந்தவருக்கு தங்களின் மகள்களை திருமணம் செய்து வைக்க பெற்றோர் மிகவும் முனைப்போடு செயல்படுகிறார்கள்" என்று அவர் கூறினார்.

திருமணம், குழந்தைகள் மற்றும் குடும்பத்தை சுற்றியே முக்கியமாக பெண்களின் வாழ்வு இருந்து வரும் கிரமங்களில் இந்த பாக்டோவா திருமண சம்பவங்கள் காணப்படுகின்றன.

ரோஷானின் ஒன்றுவிட்ட சகோதரிக்கு 15 வயதே ஆனாலும் ஆழமான எண்ணங்களை கொண்டுள்ளார்.

தன்னுடைய சகோதரருக்கு நடந்தது பற்றி அவர் மிகவும் கோபம் அடைந்துள்ளார்.

ஆனால், "நானும் ஒரு பெண்தான். மணப்பெண் கணவரை கடத்தி கொண்டுவர கேட்டிருக்கமாட்டாள். இது அவளுடைய பெற்றோரின் தவறு" என்கிறார்.

"ஒருமுறை கூட சந்திக்காமல் ஒரு ஜோடி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பெற்றோர் எண்ணுகிறார்கள். அதன் விளைவாக அந்த ஆணுக்கு மகிழ்ச்சியில்லை. பெண்ணின் வாழ்க்கை அழிக்கப்படுகிறது" என்று அவர் மேலும் கூறினார்.

மது தடை இருப்பதை போல, பிகாரை ஆளும் முதலமைச்சர் நிதிஷ் குமார் அரசு வரதட்சனை கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்று கொள்கையை கொண்டுள்ளது.

ஆனால், அதனுடைய பாதிப்பு ஒன்றும் பிரியங்காவின் கிராமத்தில் இல்லை. பெண்களின் குடும்பத்தால் வரதட்சனை கொடுக்க முடியவில்லை என்பதுதான் கட்டாய திருமணங்களுக்கு மிக முக்கிய காரணம் என்று அவர் கூறுகிறார்.

திருமணத்துக்காக கடத்தப்படும் ஆண்கள்; பரிதவிக்கும் குடும்பங்கள் #BBCShe

 

"யாரால் வரதட்சனை கொடுக்க முடியவில்லையோ அவர்கள் ஆண்களை கடத்துகிறார்கள். இல்லாவிட்டால், திருமணங்கள் வரதட்சனை கொடுத்துதான் நடைபெறுகின்றன" என்று அவர் கூறுகிறார்.

பாக்டோவா திருமணத்திலும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், தன்னுடைய மனைவியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடும் ஆண்கள் வரதட்சனை வழங்குவது மூலமே சமாதானப் படுத்தப்படுகின்றனர்.

வரதட்சனையும், திருமணமும் தீயதொரு சுழற்சிபோல ஒழிப்பதற்கு மிக கடுமையானவைகளாக தோன்றுகின்றன.

தங்களுடைய திருமணம் நடைபெற்று 3 ஆண்டுகளுக்கு பின்னர், பர்வீன் குமார் அவருடைய மனைவியை ஏற்றுக்கொண்டார்.

பர்வீன் கூற்றுப்படி, அவரது மற்றும் அவருடைய குடும்பத்தின் கௌரவம் ஆபத்திற்குள்ளாகியுள்ளது.

"என்னை பற்றி மக்கள் என்ன நினைத்திருப்பார்கள்? இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால், வேறு ஒரு மரியாதைக்குரிய குடும்பம் அதன் பெண்ணொருவர் என்னுடன் நடத்துகின்ற வாழ்க்கையை நம்பாது" என்று அவர் தெரிவிக்கிறார்.

எனவேதான், இந்த மனைவியை ஏற்றுக்கொண்டு புதிய தொடக்கத்தை உருவாக்க பாவின் முடிவு செய்துள்ளார்.

மஹாராணிக்கு ஒரு முடிவு எடுக்கக்கூடிய சந்தர்ப்பம் கூட கிடைக்கவில்லை.

"என்ன நடந்தது என்பதை மறந்துவிடு, பலர் இதைபோல நினைத்திருக்கிறார்கள். அதை பற்றி சிந்திக்காதே. இப்போது இருக்கின்ற வாழ்க்கையை வாழ்ந்துவிடு" என்று அவரது தோழியர் கூறியதாக மஹாராணி தெரிவிக்கிறார்,

பர்வீனும், மஹாராணியும் இப்போது இரட்டை மகன்களுக்கு பெற்றோர்.

அவள் நன்றாக இருக்கிறாரா? என்று மஹாராணியிடம் கேட்டபோது, அவளது கண்கள் குளமாகின. அவளுடைய மாமாவும், மாமியும் அவரை நன்றாக கவனித்துக்கொள்வதாக மட்டும் தெரிவித்தார்.

"கட்டாயத்தால் செய்து வைக்கப்பட்ட திருமணம்போல இதனை உணர முடியவில்லை" என்கிறார் அவர்.

http://www.bbc.com/tamil/global-43535299

Link to comment
Share on other sites

வரதட்சணையில் பேரம் பேசுவற்காகதான் நாங்கள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படுகிறோம் #BBCShe

அந்த யுவதி தன் சகோதரியின் கதையை விவரிக்க தொடங்கியபோது குழப்பமாக காணப்பட்டார். அந்த யுவதியின் சகோதரி பொறியியலில் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறார். ஆனால், திருமணத்திற்காக தனது கனவுகள் அனைத்தையும் கைவிட்டு இருக்கிறார். அது குறித்துதான் அந்த யுவதி விவரித்து கொண்டிருந்தார்.

திருமணத்திற்காக மட்டுமே கல்வி கற்கும் பெண்கள் #BBCShe

"என் சகோதரிக்கு இப்போது இரண்டு குழந்தைகள். அவளுக்கு தன் திருமணம் குறித்து எந்த வருத்தங்களும் இல்லை. மகிழ்வாகதான் இருக்கிறாள். ஆனால், அவளுக்கு தன் வாழ்க்கை குறித்து பல கனவுகள் இருந்தன. அதை எட்டுவதற்கு அவளுக்கு எந்த வாய்ப்புகளும் இல்லாமல் போய்விட்டது." - இது தன் சகோதரி குறித்து அந்த யுவதியின் வார்த்தைகள்.

கனவுகளை கைவிடுதல்

விசாகப்பட்டிணத்தில் ஒரு கடலோர நகரத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தில் #BBCShe - க்காக மாணவிகளுடன் உரையாடிய போது இதே கருத்தைதான் பலர் எதிரொலித்தார்கள்.

அவர்களுக்கு தங்கள் திருமணம் குறித்த அச்சம் இருந்தது. அவர்கள் தங்கள் கனவுகளை, பணி சார்ந்த தங்கள் எதிர்கால திட்டத்தை கைவிட்டுவிட்டு, திருமணத்திற்காக தள்ளபடுகிறோம் என்ற தங்கள் அச்சத்தை பதிவு செய்தனர்.

தாங்கள் உரையாடிய அறையில் இருந்த மாணவிகள் அனைவரும் மரபியல், மருந்தியல், சட்டம், நிர்வாகவியல் படிப்பவர்கள். அதில் பலர் முதுகலை படித்துக் கொண்டிருக்கிறார்கள்; சிலர் ஆய்வாளர்கள்.

சராசரிக்கும் மேல்

#BBCShe-க்காக கடந்த வாரம் பீகார் சென்றிந்தோம். அங்கு பெண்கள் மேல்நிலைபள்ளி செல்லவே சிரமப்பட்டு கொண்டிருப்பதை பதிவு செய்திருந்தோம். அதனுடன் ஒப்பிடுகையில், ஆந்திர பெண்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கிறது.

தேசிய உயர்நிலை கல்வி ஆய்வறிக்கை (2015 - 16), பெரும் மாநிலங்களில் உயர்நிலை கல்வியில் பெண்கள் சேரும் விகிதத்தில் ஆந்திரம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் தமிழகம் இருக்கிறது.

திருமணத்திற்காக மட்டுமே கல்வி கற்கும் பெண்கள் #BBCSheபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தேசிய சராசரி 23.5 சதவீதமாக உள்ளது.

தமிழக சராசரி 42.4 சதவீதமாக உச்சத்தில் இருக்கும் போது, பீகாரில் உயர்நிலை கல்வியில் பெண்கள் சேரும் விகிதம் 12.6 சதவீதமாக உள்ளது.

ஆந்திராவில் இது 26.9 சதவீதமாக உள்ளது. தேசிய சராசரியை விட இது அதிகம்.

கல்வியை அணுகவதில் சிரமங்கள் இல்லாத போது, பணியில் பெண்கள் சேர்வதும் அதிகமாகதானே இருக்க வேண்டும். இது தானே இயல்பு. ஆனால், ஆந்திராவில் அவ்வாறாக இல்லை என்பது அந்திர பல்கலைக்கழகத்தில் பெண்களுடன் உரையாடும் போது புரிந்தது.

வரதட்சணை பேரம் பேச

எங்களை கல்வி கற்க அனுப்புவதே திருமணத்திற்காகதான் என்கிறார் 22 வயது நிரம்பிய பெண் ஒருவர். அவர் சொல்கிறார், "நாங்கள் பல்கலைக்கழகம் சென்று படித்து பட்டம் பெறுவது எங்களது எதிர்கால தொழில் வாழ்க்கைக்காகவெல்லாம் இல்லை. நாங்கள் பட்டம் பெறுவது திருமணத்திற்காக. ஆம், மாப்பிள்ளை வீட்டிற்கு எங்களது பயோடேட்டாவை அனுப்பும் போது, அதில் எங்கள் கல்வி இடம்பெற்றிருக்க வேண்டும்தானே. அப்போதுதானே, அந்த பயோடேட்டா சிறப்பாக இருக்கும்." என்கிறார் கவலை தொய்ந்த குரலில்.

அனைவரும் இதை ஒப்புக் கொள்கிறார்கள். அந்த பெண் சொல்வது உண்மை என்பது அரங்கத்தினர் எழுப்பிய கரவொலியிலேயே தெரிந்தது; புரிந்தது.

வேலைக்கு செல்லும் பெண்கள், பணிக்கு செல்ல விரும்பும் மற்றும் இயலும் பெண்களின் சராசரி சர்வதேச அளவில் 39 சதவீதமாக இருக்கும் போது, இந்தியாவில் இது 24 சதவீதமாக இருக்கிறது.

திருமணத்திற்காக மட்டுமே கல்வி கற்கும் பெண்கள் #BBCSheபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், இது 1990ஆம் ஆண்டு 28 சதவீதமாக இருந்திருக்கிறது.

இந்த விஷயத்தில், உலக வங்கியின் தரவுகளின்படி, 185 நாடுகளில் இந்தியா 172 வது இடத்தில் உள்ளது. இது 2016 ஆம் ஆண்டு கணக்கு.

ஆந்திர பல்கலைக்கழகத்தில் நாங்கள் உரையாடிய பெண்கள் பலதரப்பை சேர்ந்தவர்கள், கிராம்ப்புற பெண்கள், நகர்புற பெண்கள் என அனைத்து தரப்பினரும் அங்கு இருந்தனர்.

திருமணத்திற்காக மட்டுமே கல்வி கற்கும் பெண்கள் #BBCSheபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

நகர்புறத்திலிருந்து வந்த பெண்கள் வரதட்சணையை குறைக்க பெண்களின் கல்விதகுதி ஒரு வழியாக இருக்கிறது என்கிறார்கள்.

இரு பெண் விளக்குகிறார், "நல்ல கல்வித்தகுதி, நல்ல ஊதியத்தில் ஒரு பணியை பெற பயன்படும். இது பொதுவான கருத்து. ஆனால், இங்கு நீங்கள் நல்ல கல்வி தகுதி உடையவராக இருப்பது வரதட்சணையை பேரம் பேச மட்டும்தான் பயன்படும்." என்கிறார்.

http://www.bbc.com/tamil/india-43565248

Link to comment
Share on other sites

பெண்களானதை அறிவிக்கும் 'பூப்படைதல் நிகழ்ச்சி' சிறுமிகளுக்கு பிடித்துள்ளதா? #BBCShe

எனக்கு முதன் முறையாக மாதவிடாய் ஏற்பட்டபோது, அதை என் பெற்றோர் ஊருக்கே அறிவித்து, வெளியில் செல்ல விடாமல் தடுத்து, சில நாட்கள் என்னை குளிக்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள் என்பதை எண்ணிப் பயந்தேன்.

அனுராதா Image captionதனக்கு பெற்றோர் பூப்படைதல் நிகழ்ச்சி நடத்தியதை தான் விரும்பவில்லை என்கிறார் அனுராதா

ஆனால் அவர்கள் அப்படி எதையும் செய்யாமல், எனக்கு உண்டான உடலியல் மாற்றங்களைப் புரிந்துகொண்டு எனக்குத் தேவையான ஊட்டம் மிக்க உணவுகளை வழங்கினார்கள்.

என் தோழிகள் பலருக்கும் அப்படி அனுபவம் இல்லை. அவர்கள் பூப்படைந்ததைக் கொண்டாடும் 'பூப்புனித நன்னீராட்டு' விழா அவர்கள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டது. நானே அப்படி சில நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளேன். அவர்கள் 5-11 நாட்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பின்பு அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும்.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்துக்கு #BBCShe குழு சென்றிருந்தபோது மாதவிடாய் தங்கள் வாழ்வில் உண்டாக்கிய தாக்கம் பற்றி அங்கிருந்த மாணவிகள் நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.

"ஒரு பெண்ணுக்கு முதல் முறையாக மாதவிடாய் உண்டாகும்போது அதைக் கொண்டாடுபவர்கள், பின்பு ஏற்படும் மாதவிடாயை ஏன் தீட்டாகப் பார்க்கிறார்கள்," என்று கேள்வி எழுப்புகிறார் அங்கு படிக்கும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவி.

வெவ்வேறு சமூக-பொருளாதார பின்னணி உடைய, வேறுபட்ட வயத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் இவ்வாறான பிரச்சனை உள்ளது.

தற்போது 22 வயதாகும் ஸ்வப்னா இப்போது இரண்டு குழந்தைகளுக்கு தாய். அவருக்கு 15 வயதில் முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டு ஆறு மாதங்களுக்குள் அவரது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார்.

#BBCShe

"எனக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளும் முன்னரே எனக்கு திருமணம் நடந்தது. 16 வயதில் முதல் குழந்தை பிறந்தது. பாதியிலேயே நின்று போன என் கனவுகளை நான் தொடர விரும்புகிறேன்," என்கிறார் அவர்.

தற்போது பெண்கள் பூப்பெய்தும் வயது 12-13 என்றாகியுள்ளதால், இந்த நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் சிறுமிகளின் உடல் நலத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

'மஹிளா ஏக்சன்' எனும் பெண்களுக்கான தொண்டு நிறுவனத்தை நடத்தும் ஸ்வர்ண குமாரி, "தங்கள் பெண் குழந்தைகளுக்கு தங்கள் உடல் நலம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்காமல், இத்தகைய கொண்டாட்டங்களில் ஈடுபடுவதன்மூலம் எல்லை கடந்து நடந்துகொள்கின்றனர்," என்கிறார்.

காயத்ரி எனும் 12 வயது சிறுமி மீனவர் சமூகத்தை சேர்ந்தவர். இன்னும் அவருக்கு தனது முதல் மாதவிடாய் ஏற்படவில்லையென்றாலும், இப்போதே கவலைகள் அவருக்கு தொற்றிக்கொண்டுள்ளன.

#BBCShe

"பூப்படைந்தபின் நான் அண்டை வீட்டுக்கெல்லாம் சென்று விளையாட முடியாது என்பதை நினைத்துக் கவலைப்படுகிறேன். என் அக்காவுக்கு என்ன ஆனது என்பதை நான் பார்த்துள்ளேன். தனியாக வெளியில் செல்லும்போது பையன்கள் அவளை கிண்டல் செய்வார்கள் என்பதால் நான் அல்லது என் அண்ணண் துணையுடன்தான் அவள் வெளியில் செல்கிறாள்," என்கிறார் காயத்ரி.

மது என்பவர் 16 வயது பெண் ஒருவரின் தந்தை. அவருக்கு தன் மகள் பூப்பெய்தியபோது விருப்பம் இல்லாவிட்டாலும் தனது தாயார் வலியுறுத்தியதன்பேரில் அந்த நிகழ்ச்சியை நடத்தியதாக கூறுகிறார். "இதுகுறித்து நான் என் மகளுடன் பேசினேன். தனது உடலில் இயற்கையாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அதை நினைத்து வெட்கப்படக் கூடாது என்றும் நான் என் மகளிடம் கூறினேன்," என்கிறார் மது.

#BBCShe Image captionகௌரி

இதை மது என்னிடம் விவரித்துக்கொண்டிருந்தபோது, மதுவின் மகள் அருகில் உள்ள மைதானத்தில் பேட்மிட்டன் விளையாடிக்கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு பெற்றோர் எவ்வளவு செலவிடுகின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. பூப்படைதல் நிகழ்ச்சிகளின் படம் எடுக்க மட்டும் சுமார் இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை செலவிட வசதி படைத்த பெற்றோர் தயங்குவதில்லை என்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு ஈடாக இவற்றில் அலங்காரம் செய்யப்படுகின்றன என்றும் ஐதராபாத்தில் பெரிய நிகழ்ச்சிகளில் படமெடுக்கும் புகைப்படக் கலைஞர் என்னிடம் கூறினார்.

சீதா ரத்னம் Image captionசீதா ரத்னம்

நடுதர வர்க்கத்தை சேர்ந்த 19 வயதாகும் கௌரி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தான் பூப்பெய்தியபோது பெருமைக்காக அவரது தந்தை ஆடம்பரமாக நடத்திய நிகழ்ச்சிக்கு வாங்கப்பட்ட கடனை இன்னும் திரும்ப செலுத்தி வருவதாக கூறினார்.

"இந்த மாதிரியான நிகழ்ச்சிகள்தான் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை சுமையாக நினைக்க தூண்டுகின்றன," என்று கூறும் மருத்துவர் சீதா ரத்னம், "இப்போதைய தேவை சிறுமிகளுக்கு கல்வியும் ஊட்டச்சத்தும் வழங்குவதுதான்," என்கிறார்.

http://www.bbc.com/tamil/india-43611373

Link to comment
Share on other sites

 

பூப்படைதல் விழா தேவையா கேள்வியெழுப்பும் பெண்கள் #BBCShe

 

பிபிசி ஷி பணித்திட்டத்திடம் பேசிய ஆந்திர பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவிகள், அவர்கள் பருவமடைந்தவுடன் நடத்தப்பட்ட பூப்படைதல் விழா மற்றும் பொதுமக்கள் அறிவிப்பை எவ்வளவு மோசமாக உணர்ந்தார்கள் என்பது பற்றிய தங்களது அழுத்தமான கருத்துகளை இந்த காணொளியில் பதிவுசெய்துள்ளனர்.

Link to comment
Share on other sites

தென்னிந்திய ஆசிரியையின் மராட்டியக் காதல் திருமணமாக கனிந்தது எப்படி? #BBCShe

மராத்தி திரைப்படமான 'சைரத்' இறுதிக் காட்சி எனது நினைவுக்கு வந்தது. ஒடுக்கப்பட்ட சாதி ஆணை கலப்பு திருமணம் செய்துக் கொண்ட ஆதிக்க சாதி பெண்ணின் குடும்பம், தம்பதிகளை கொன்று விடும் காட்சி அது.

#BBCShe

கொலை செய்யப்படும் காட்சி நேரடியாக காட்டப்படவில்லை என்றாலும், அந்தத் தம்பதிகளின் சிறு குழந்தை அழும்போது, வன்முறையின் உச்சம் மனதில் ஆழ்ந்த வலியை உருவாக்கியது.

வலி மற்றும் திகில்

#BBCShe திட்டத்துக்காக நாக்பூரில் ஒரு இளம் பெண்ணிடம் பேசியபோது, அவர் அச்சத்துடனும், வேதனையுடன் காணப்பட்டதை பார்க்க முடிந்தது.

அந்த பெண் சொல்கிறார், "வேற்று சாதி அல்லது மதத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால் அவர்களுக்கு எதிராக செய்யப்படும் வன்முறைகளையும், செய்திகளையும் ஊடகங்கள் பெரிய அளவில் வெளியிடுகின்றன. இது கலப்புத் திருமணம் செய்துக் கொள்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே அச்சத்தை, அழுத்தத்தை ஏற்படுத்துகிறது."

"குடும்பங்கள் ஆதரித்த தம்பதிகள் அல்லது காதலர்களை பெற்றோர் புரிந்துகொண்ட சம்பவங்களைப் பற்றி ஊடகங்கள் ஏன் பேசுவதில்லை?" என்று அவர் எதிர்க்கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு உதாரணமாக அந்த இளம் பெண், தனது ஆசிரியையை நமக்கு அறிமுகப்படுத்தினார். தென்னிந்தியாவைச் சேர்ந்த அந்த ஆசிரியையின் கணவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள்.

#BBCShe

ஆசிரியையின் குடும்பம் திருமணத்திற்கு எதிராக இருந்தாலும், அவருடைய கணவரின் குடும்பம் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்னால் தனது கணவரின் சகோதரர் ஒருவர் கலப்புத் திருமணம் செய்துக் கொண்டதுதான் அதற்கு காரணம் என்று ஆசிரியை கூறுகிறார்.

சகோதரரின் திருமணத்திற்கு கணவரின் குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளவில்லை என்பதால், வேறுவழியில்லாமல் காதலர்கள் இருவரும் நீதிமன்றத்தில் திருமணம் செய்துக் கொண்டு வேறு ஊருக்கு ஓடிப்போக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

ஆனால் இரு குடும்பத்தினரும் அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, இருவரையும் பிரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

ஆனால் தம்பதிகள் பிடிவாதமாக இருந்த்தால் வேறுவழியில்லாமல் இரு குடும்பத்தினரும் மணமக்களை ஏற்றுக்கொண்டார்கள்.

#BBCShe

இதுதான் ஆசிரியையின் காதல் திருமணமாக கனிந்ததற்கு காரணம். கணவர் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டபோதிலும், தனது குடும்பத்தினரின் சம்மதத்திற்காக ஆசிரியை ஒரு வருடம் காத்துக்கொண்டிருந்தார்.

"பெற்றோர் ஒரு வருடம் வரை வேறு வரனை தேடிக் கொண்டிருந்தார்கள். எனது உறுதியால் பெற்றோரின் மனம் மாறியது" என்கிறார் ஆசிரியை.

இத்தகைய அனுபவங்கள் ஊடகங்களில் வெளியானால் பல இளைஞர்களின் போராட்டம் எளிதாகுமே!

பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்திலும் வெவ்வேறு சாதி அல்லது மதத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொண்டால் கெளரவக் கொலைகள் நடைபெறுகின்றன.

'சைரத்' திரைப்படத்தின் கதைக்களம் மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதியில் இருக்கும் அமைதியான நாக்பூர் நகரில் நடைபெற்றதாக அமைக்கப்பட்டிருக்கும். உண்மையில் சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் குடும்ப வன்முறை கொடுமைகள் நடைபெறுவது அங்கு அதிகம், ஆனால் அவை வெளியே தெரியாது. இதற்கான வரலாற்று சான்றுகளும் நம் கண்முன்னே இருக்கின்றன.

இங்கு 1956ஆம் ஆண்டு பாபா சாஹேப் அம்பேத்கர் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து மதத்தை துறந்து புத்தமதத்திற்கு மாறினார்.

அந்த சரித்திரப் புகழ்பெற்ற முன்முயற்சியின் விளைவை இன்னமும் மகாராஷ்டிராவில் காணமுடிகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள புத்தமதத்தினரில் 75% மகாராஷ்டிராவில் வசிக்கின்றனர்.

#BBCShe Image captionரூபா குல்கர்னி

ரூபா குல்கர்னி போதி 1945இல் நாக்பூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவர், 1956இல் இல்லையென்றாலும் 1992ஆம் ஆண்டு தனது 47 வயதில் இந்து மதத்தை கைவிட்டு புத்தமதத்தை தழுவினார்.

மத மாற்றத்துக்கு காரணம் என்ன?

நாக்பூர் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத மொழிப் பேராசிரியராகப் பணியாற்றிய அவருக்கு சாதி ரீதியான பாகுபாடு நடந்திருக்க அவருக்கு வாய்ப்பு இருக்கிறதா? பிறகு ஏன் அவர் மதம் மாறினார்?

காரணத்தை அவர் சொல்கிறார், "வீட்டில் வேலை செய்பவர்களுடன் சேர்ந்து நானும் வேலை செய்யத் தொடங்கினேன். அவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். அவர்களுடைய சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதை உணரத் தொடங்கியவுடன் எனது சாதி சுமையாக அழுத்துவதைப்போல உணர்ந்தேன். அது களங்கமாக தோன்றியது, எனவே எனது களங்கத்தை போக்கிக்கொள்ள, மன அழுத்தத்தில் இருந்து வெளியேறுவதே சரி என்று எனக்கு தோன்றியது."

ரூபா குல்கர்னி போதியின் கருத்துப்படி, செய்தி சேனல்கள், பத்திரிகைகள், திரைப்படத் துறை, தொலைகாட்சித் தொடர்கள் என ஊடகங்கள் அனைத்தும் சாதி அடிப்படையில் தனித்துவமான வாழ்க்கை கலாசாரத்தை ஊக்குவிக்கின்றன.

#BBCShe

தொலைகாட்சித் தொடர்களில், ஆதிக்க சாதியினரின் வீடுகளில் பெண்களும், வேலைக்காரர்களுமாக வேலை செய்பவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் என்று காட்டப்படுவது இயல்பானதாகவே இருக்கிறது.

திருமணம், உணவு மற்றும் கலாசாரத்தில் வெவ்வேறு சாதிகளை சார்ந்தவர்களுக்கு இடையிலான தொடர்புதான் சாதிய இடைவெளிக்கு பாலம் அமைக்கும் முக்கிய அம்சம் என்று பாபா சாஹேப் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

திறந்த மனப்பான்மையுடன் இதுபோன்ற பாலங்களைப் பற்றி வெளிப்படையாக பேசவேண்டும் என்பதே நாக்பூர் கல்லூரி மாணவி சொல்வதன் அடிப்படை என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

ஆசிரியை தனக்கு சிறந்த உதாரணம் என்று மாணவி கூறுகிறார். ஆனால் மாணவியின் பெற்றோரின் சிந்தனை என்னவாக இருக்கும்? ஊடகங்கள் இதுபோன்ற சம்பவங்களைப் பற்றி வெளிப்படையாக பேசாமல் இருந்தால்... நிலைமை மாறுமா?

http://www.bbc.com/tamil/india-43622526

Link to comment
Share on other sites

காளை வளர்ப்பில் லாபமீட்டும் கிராமத்து பெண்ணின் வெற்றிக்கதை #BBCShe

 
காளை வளர்ப்பில் ஈடுபடும் பெண்

ஈரோடு மாவட்டம் காங்கேயம் கிராமத்தில் இனவிருத்தி காளை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள 51 வயதான சௌந்தரம் ராமசாமியிடம் 21வயது வணிகவியல் பட்டப்படிப்பு மாணவி மதுமிதா கற்றுக்கொள்ள நிறைய இருந்தது.

சமீபத்தில் கோவையில் நடத்தப்பட்ட பிபிசி ஷி (BBC SHE) நிகழ்ச்சியில் பெண்கள் எந்த வகையான செய்திகளை படிக்க விரும்புகிறார்கள் என்று கேட்டபோது, கிராமங்களில் உள்ள பெண் தொழில்முனைவோரை ஊடகங்கள் ஊக்கப்படுத்துவதில்லை, அவர்களின் கதைகளை படிக்க ஆர்வம் இருப்பதாகவும், கிராமத்தில் உள்ள பெண்ணின் கதையை பிபிசி ஷீ வெளிக்கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் மாணவிகளுடன் நடத்தப்பட்ட கருத்தாய்வின்போது அவினாசிலிங்கம் கல்லூரி மாணவி மதுமிதா கருத்துத் தெரிவித்தார்.

இந்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் அதிகஅளவில் பெண் தொழில்முனைவோர் இருப்பது தமிழ்நாட்டில்தான் என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சுமார் பத்துலட்சம் நிறுவனங்களை பெண்கள் நடத்துகிறார்கள் என்று அந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது.

அந்த பத்து லட்சத்தில் ஒருவராக இருக்கும் காங்கேயத்தில் உள்ள சௌந்தரம் ராமசாமியின் வெற்றிக்கதையைக் கேட்பதற்காக, பிபிசி ஷீ குழுவினர், மதுமிதாவுடன் அந்த கிராமத்திற்குச் சென்றார்கள். சௌந்தரத்தின் காளை வளர்ப்புக் கலை பற்றி விரிவாகக் கேட்டோம்.

 

 

தொடக்கத்தில் விவசாய வேலைகளை செய்துவந்த சௌந்தரம், மாடு ஈன்ற காளையை விற்றுவிடாமல், வளர்த்துள்ளார். அதன் உறுதியும், திடமும் இனவிருத்திக்கான காளை அது என்பதை தனது குடும்பத்தாரும், காளை வளர்ப்பில் அனுபவம் கொண்டவர்களும் கூறவே, மேலும் இரண்டு காளைகளை வாங்கி வளர்த்தார்.

''வியாபாரத்திற்கு விளம்பரம் வேண்டாம்''

''காங்கேயம் இனம் காளைகள் அழிந்துவரும் நிலையில் இருந்ததாலும், நாங்கள் வளர்க்கும் காளைகள் உறுதியோடு, நல்ல கன்றுகளை ஈனும் என்பது தெளிவானதால், காளை வளர்ப்பில் முழு உழைப்பையும் செலுத்த முடிவுசெய்தேன். எனக்கு நல்ல பலன் கிடைத்தது, பல ஊர்களில் இருந்தும் என் காளைகளின் தரத்தை அறிந்தவர்கள் மற்ற மாடு வளர்ப்பவர்களுக்கு அறிமுகம் செய்து அனுப்பிவைப்பார்கள். என் வியாபாரத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்பதால் ஒரு பதாகை கூட வைக்கவில்லை,'' என்று சௌந்தரம் கூறியதை மதுமிதாவால் நம்பமுடியவில்லை.

சௌந்தரம் ராமசாமி

வணிகவியல் பயிலும் மதுமிதா பல நிறுவனங்களின் தோற்றம், வரலாறு என்பதை படித்ததோடு ஒரு வியாபாரத்திற்கு விளம்பரம் எவ்வளவு முக்கியம் என்பதை பாடமாக கற்றவர். ''விளம்பரம் இல்லாமல் தொடர்ந்து வெற்றிகரமாக சௌந்தரம் கடந்த இருபது ஆண்டுகளாக தனது தொழிலில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ளார் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. பெரிய நிறுவனங்கள் தங்களது முதலீட்டை செய்யும்போதே விளம்பரத்திற்குத் தேவையான நிதியை முதலில் முடிவுசெய்துவிடுவார்கள் என்றுதான் படித்திருக்கிறேன்,'' என்றார் மதுமிதா.

''அடகு வைக்காதே, கடன் வாங்காதே''

அடுத்தடுத்து மதுமிதாவிற்கு ஆச்சரியங்கள் காத்திருந்தன. குறிப்பாக எந்த பயமும் இல்லாமல் சௌந்தரத்தின் சேலை உடுத்திய ஒல்லியான உருவம், கம்பீரமான இரண்டு, மூன்று காளைகளை தனியாக வெகு எளிதாக கயிற்றில் கட்டி நடந்துவரும் லாவகம் அவரை ஈர்த்ததாகக் கூறுகிறார். சௌந்தரம் தொழிலுக்காக அரசு மற்றும் தனியார் வங்கிகளிடம் கடன் பெறுவதில்லை என்பது மேலும் ஆச்சரியம்.

''கடன் வாங்காமல் சிறு முதலீட்டில் லாபம் பெற்று, அதை மீண்டும் முதலீடாக மாற்றிக்கொள்வேன். உதாரணமாக, மாடு வளர்ப்பில் ஈடுபட, முதலில் சிறு தொகையைக் கொண்டு கோழிவளர்ப்பில் சிறிதுகாலம் ஈடுபட்டு, லாபத்தைக் கொண்டு மாடுகளில் முதலீடு செய்யலாம். அதிக வட்டிக்கு முதலீடு செய்வதில் பெரும் சிக்கல் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. தொழிலில் சீரான வளர்ச்சி இருந்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்பது என் தொழில் யுக்தி,'' என்கிறார் சௌந்தரம்.

மற்ற வணிகர்களுக்கு சௌந்தரத்தின் தொழில் யுக்திகள் பின்பற்றக்கூடியவையாக இருக்குமா என மதுமிதா கேட்டபோது, ''பலரும் நகை அடகு, வீடு என சொத்தை அடகுவைத்து இழந்ததைப் பார்த்துள்ளேன். என்னுடைய தொழிலில் எனக்கு தேவையான அளவு லாபம் இருந்தால் போதும், என்னுடைய காளைகளை வளர்ப்பதற்கும், என்னுடைய வேலைக்கும் சரியான கூலி கிடைத்தால் போதும் என்பது என் லாபக் கணக்கு. வெறும் லாபத்தை மட்டுமே எதிர்பார்த்து என் வேலையை செய்யவில்லை.என் தொழில் என்னை முன்னேற்றுவதோடு, காங்கேயம் காளை இனத்தையும் காப்பாற்றி வருகிறது என்பதே எனக்குப் பெருமை,'' என்றார் சௌந்தரம்.

சீரான வளர்ச்சியில் சிகரம் தொடலாம்

1998ல் சௌந்தரம் அம்மா காளை வளர்ப்பை தொடங்கியபோது, இரண்டு காளைகள் மட்டுமே இருந்தன. இனவிருத்திக்காக மாடுகளை கொண்டுவரும் விவசாயிகளிடம் ஒரு மாட்டிற்கு ரூ.50 பெற்றுவந்த அவர், தற்போது ரூ.500 என ஈட்டுகிறார். 2018ல் அவரிடம் 11 காளைகள், ஆறு மாடுகள் உள்ளன. இதோடு முருங்கைக், கீரை, கிழங்கு, காய்கறிகள் என இயற்கை விவசாயத்திலும் ஈடுபடுவதாக சொல்கிறார்.

வளர்ப்புக் காளைகள்

மேலும் தொழில் நுணுக்கங்களை விவரித்த அவர், பருத்தி, புண்ணாக்கு, சுண்டல், விதவிதமான பயறுகள் போன்றவற்றை வாங்கி அரைத்து, பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வது முதல், மழை வந்ததும் மேய்ச்சல் நிலத்தை உழுது புற்கள் மற்றும் மூலிகை செடிகளை வளர்ப்பது என திட்டமிட்டுவேலை செய்வது கால்நடைவளர்ப்பில் முக்கியம் என்கிறார்.

''விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பது சௌந்தரம் அம்மாவுக்கு சிறுவயதில் இருந்தே பரிச்சயமான ஒன்று என்பதால், அவருக்கு நிறைய புரிதல் உள்ளது. எங்களின் வணிகவியல் பாடங்களில், ஒரு நிறுவனத்தை நடத்த முக்கியமான தகுதி தலைமை பண்பு என்பதை படித்தேன்.

சௌந்தரம் அம்மாவிடம் நேரடியாக பாடத்தைக் கற்றுக்கொண்டதுபோல உள்ளது. ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்றபடி, விலை குறைவான சமயத்தில் காளை, மாடுகளுக்கு தேவையான உணவு தானியங்களை வாங்கிக்கொள்கிறார். தினமும் காலை, மாலை வேளைகளில் ஒவ்வொரு காளைக்கும் நேரம் ஒதுக்கி அவைகளின் உடல்நலத்தை சோதிக்கிறார், அவை உணவு எடுத்துக்கொண்டனவா, பலமாக உள்ளனவா என்று தெரிந்துகொள்கிறார்.

ஒவ்வொரு நாளை தொடங்கும்போதும், முடிக்கும் போதும் தனது சொந்த பிள்ளைகளிடம் பேசுவதுபோல காளைகளை அணுகுகிறார்,'' என வகுப்பறையில் வெறும் பாடமாக கற்றதற்கும் நிஜ உலகில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்துகொண்டதாக கூறினார்.

`இளம் தலைமுறையினருக்கு பயிற்சிதர தயார்'

சௌந்தரம் ராமசாமி

தனது இரண்டு மகன்களையும் கால்நடைவளர்ப்பில் வரும் வருமானத்தை வைத்தே படிக்கவைத்ததாகவும், தனது குடும்ப தேவைக்கும் என்றும் குறைவில்லாத வருமானத்தை தனது காளைகள் தருவதாகவும் கூறினார் சௌந்தரம்.

இளம் தலைமுறையினருக்கு கால்நடை வளர்ப்பில் பயிற்சி அளிப்பதற்கு தயாராக உள்ளதாக கூறும் சௌந்தரம், ''என்னுடைய தொழிலில் நான்தான் முதலாளி, தொழிலாளி. என்னுடைய காளைகளை கவனிக்க ஆட்களை சேர்க்கமுடியாது. சில சமயம் என் கணவர் கூட இந்த காளைகளை பிடிக்க பயப்படுவார். சிறுவயதில் இருந்து காளைகளிடம் பழகுவதால், அவைகளை என்னுடைய மகன்களை அழைப்பதுபோலவே பையா என்றுதான் கூப்பிடுவேன். காளை பிறந்தால், தாய் மாட்டின் பாலை எங்கள் வீட்டுக்கு எடுத்துக்கொள்ளமாட்டோம். தாய்மாட்டின் முழு பாலும் குடித்துவளரும் காளை அதிக பலத்துடன், உறுதியான இனவிருத்தி காளையாக வளரும்,'' என தன் தொழில்பற்றி விரிவாக பேசினார் சௌந்தரம்.

ஒரு நாள் முழுவதும் சௌந்தரம் அம்மாவிடம் கற்றுக்கொண்ட பாடங்கள் தனக்கு உதவியாக இருந்ததாக கூறிய மதுமிதா, சௌந்தரம் போன்ற பல கிராமங்களில் உள்ள பெண் தொழில்முனைவோர் பலரின் கதைகளையும் பிபிசி தொடர்ந்து வெளிக்கொணர வேண்டும் என்று புன்னகையுடன் வேண்டுகோள் வைத்தார்.

http://www.bbc.com/tamil/india-43631813

Link to comment
Share on other sites

காதலில் தோற்ற பெண்கள் மீண்டும் காதலித்தால் ஏற்கிறதா சமூகம்? #BBCShe

 

"இப்போது பெண்களை பற்றிதான் ஒரே பேச்சாக உள்ளது. யாரும் எங்களுடைய உரிமைகள் பற்றி கவலைப்படுவதில்லை".

"பெண்கள் அவர்களுக்கு பொருட்கள்தான்" #BBCShe

"பெண்கள் தினத்தில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. யாரும் 'ஆண்கள் தினம்' பற்றி குறிப்பிடுவதில்லை".

"பெண்கள் அவர்களுடைய உரிமைகள் எல்லாம் பெற்றிருக்கின்றனர். இப்போது நாங்கள் பொருட்களைபோல நடத்தப்படுகின்றோம்".

குஜராத் மாநிலத்தின் ராஜ்காட்டில் பிபிசிஷி பணித்திட்டத்தின்போது பெண்களிடம் விவாதங்கள் நடத்திய பின்னர், ஆண்களிடம் பேச வேண்டுமென நினைத்தேன்.

ஆண்களை சந்தித்தபோது, பல புகார்களை தெரிவித்தார்கள். அவர்களின் உணர்வுகளை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

ஆண்கள் பற்றிய விவாதம் நடைபெறாமல் இல்லை. அவர்கள் சாதிக்கிறபோது, பெண்களைப் பாராட்டுவதைபோல அவர்களையும் ஊக்குவிக்கிறார்கள். என்ன நடந்தாலும், எதுவும் ஆண்களிடம் இருந்து எடுக்கப்பட்டுவிடவில்லைதானே என்று நான் பதிலளித்தேன்.

பாராட்டுவது பரவாயில்லை என்பது உடனடி மறுமொழியாக இருந்தது. ஆனால், விமர்சனம் மிகவும் அதிகமாக உள்ளது. சில ஆண்களால், எல்லா ஆண்களும் மோசமானவர்கள் என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஆண்கள் கூறினார்கள்.

"பெண்கள் அவர்களுக்கு பொருட்கள்தான்" #BBCShe

இப்போது ஆண்களின் வாழ்க்கை கடினமாகிவிட்டது. பெண்களிடம் பேசுவதற்கு முன்னால், அவர்கள் தவறாக நினைத்துவிட கூடாதே என்று நினைத்துகொண்டு ஆண்கள் மிகவும் கவனமாக பேச வேண்டியுள்ளது என்று அவர்கள் முறையிட்டனர்.

புகார் சரியானதுதான். ஆனால், சில ஆண்களின் பேச்சை கேட்டு தாங்கள் கவலைப்படுவது எவ்வளவு என்பதையும் அதே கல்லூரியின் பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர்.

"ஆண்கள் பெண்களை கேலி செய்கின்றனர். பெண்கள் ஏற்காவிட்டாலும் ஆண்கள் கண்டுகொள்வதில்லை. தங்களை கதாநாயகர்களாக ஆண்கள் எண்ணுகிறர்கள். அதனை பெண்கள் விரும்புவதாகவும் நினைக்கிறார்கள். அவ்வாறு எல்லாம் ஒருபோதும் இல்லை" என்று பெண்கள் தெரிவித்தனர்.

சுமார் 20 லட்சம் மக்கள்தொகை கொண்ட ராஜ்காட் சிறியதொரு நகரம்தான். சாலையில் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து செல்லவதை பார்ப்பது மிகவும் அரிது.

அவர்கள் ஒன்றாக கல்வி கற்கிறார்கள். ஆனால் கல்லூரியிலும் ஆண்கள், பெண்கள் என தனித்தனி குழுக்காகவே அவர்கள் வலம் வருகிறார்கள்.

அங்கு இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராம் இங்கு மிகவும் பிரபலம்.

ஆனால், ஃபேஸ்புக்கில் பெண்கள் தங்களின் பக்கங்களை "தனிப்பட்ட" பக்கம் என்றே வைத்துள்ளனர்.

"பெண்கள் அவர்களுக்கு பொருட்கள்தான்" #BBCShe

மிகுந்த ஆலோசனைக்குப் பின்னர்தான் ஆண்களின் 'நட்பு வேண்டுகோளை' பெண்கள் ஏற்றுக்கொள்வதாக ஒரு பெண் எங்களிடம் தெரிவித்தார். ஆனால், பல நேரங்களில் ஏமாற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதனை ஆண்களிடம் சொன்னபோது, பெண்கள் "முடியாது" என்று சொல்வதையும், "ஆம்" என்று எடுத்துக்கொள்ளும் பண்புடைய சில ஆண்களால்தான் இவ்வாறு நடக்கிறது என்று கூறினர்.

இதற்கு பாலிவுட் திரைப்படங்களை ஒருவர் குற்றஞ்சாட்டினார்.

"ஒருவர் ஒரு பெண்ணை எப்போதும் தொடர வேண்டும். அவர் இந்த ஆணை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தொடர்ந்து பின்பற்றி செல்ல வேண்டும். இறுதியில், அந்த பெண் சம்மதிப்பார். காதலில் விழுவார். பின்னர் அந்த ஜோடி திருமணம் செய்து கொள்வார்கள். குழந்தைகள் பிறக்கும். மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வார்கள் என்று பல ஆண்டுகளாக பாலிவுட் திரைப்படங்களில் காட்டப்படுகிறது" என்று அவர் கூறினார்.

அவரது கருத்தை ஆமோதிப்பதைப் போல அனைவரும் தலையசைத்தனர். இது உண்மை என்று ஆண்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்று கேட்டேன்.

"ஆம். ஒரு சமயத்தில் நானும் இதுதான் உண்மை என்று நினைத்தேன். பல பெண்கள் என்னை மறுத்த பின்னர்தான், எதார்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. கட்டாயப்படுத்தப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை" என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், இதனை புரிந்து கொள்வது ஏன் மிகவும் கடினமாக உள்ளது?

ஒரு கணம் எல்லோரும் அமைதியானார்கள்.

பின்னர், ஒருவர் எழுந்து, "உண்மையில் பெண்களை மனிதர்களாகப் பார்க்காமல் "பொருள்களாக" ஆண்கள் பார்க்கின்றனர்" என்று கிசுகிசுக்கும் குரலில் கூறினார்.

"இரண்டு ஆண்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, முன்னால் ஒரு பெண் கடந்து சென்றால், அவரைப் பற்றி இந்த ஆண்கள் என்ன சொல்வார்கள்... உணர்வார்கள்... என்று உங்களுக்குத் தெரியாது" என்று அவர் கூறினார்.

மிகவும் விவரமாக அந்த நபர் பதிலளித்திருப்பார். ஆனால், அவருடன் இருந்த நண்பர் அமைதியாக இருப்பதற்கு சைகைக்காட்டியவுடன், "அது அப்படியே இருக்கட்டும். என்னிடம் இதற்குமேல் கேட்காதீர்கள்" என்று பேச்சை நிறுத்திக்கொண்டார்.

அவர்கள் சொல்லாததை நான் புரிந்து கொண்டேன் என்பது அவர்களுக்கு தெரியும்.

அவர்களின் உலகை அறிந்து கொள்ள அவர்கள் என்னை அனுமதித்தார்கள். ஆனால், அமைதியாக இருந்ததன் மூலம், ஆண்கள் அவ்வாறு எண்ணுவதை சொல்வதற்கு சங்கடம் அடைவதைக் கூறவும் விரும்பியுள்ளனர்.

"பெண்கள் அவர்களுக்கு பொருட்கள்தான்" #BBCShe

வெளிப்படையாக ஒருவரைப் பற்றி சொல்லுவதற்கு கைகளை உயர்த்தி, வெளிப்படையாக பேசி, ஒரு பெண்ணின் முன்னால் தவறை ஏற்றுக்கொண்டதை புகழத்தான் வேண்டும்.

அவர்கள் தவறை உணர்ந்திருந்தார்கள். ஒரு தரப்பு இன்னொரு தரப்பை புரிந்து கொண்டிருந்ததாக தோன்றியது.

முடிவில், அந்த ஆண்களில் ஒருவர் எழுந்து, "நாங்கள் பாகுபாட்டை விரும்பவில்லை. ஆண் ஒரு பெண்ணை காதலித்துவிட்டுப் பிரிந்த பின்னர் இன்னொரு பெண்ணை காதலிப்பது பரவாயில்லை என்ற எண்ணம் உள்ளது. ஆனால், காதல் முறிவுக்கு பின்னர் ஒரு பெண் இன்னோர் ஆணை காதலித்தால், அவர் மோசமாக குணம் படைத்தவராக பார்க்கப்படுகிறார்" என்று கூறினார்.

இதே போன்ற கருத்தை நாக்பூரிலுள்ள ஒரு பெண்ணும் தெரிவித்திருந்தார்.

பல பெண்களோடு நட்பு கொண்டிருக்கும் ஆண் "பாலியல் கவர்ச்சிமிக்கவர்" என்று அழைக்கப்படுகிறார். பல ஆண்கனோடு நட்புறவு கொண்டிருக்கும் பெண் "விலைமகள்" எனப்படுகிறார் என்று அந்த பெண் தெரிவித்திருந்தார்.

முடிவில், ஆண்களுக்கு முன்னால் விவாதங்களை வைக்க வேண்டாம் என்ற எண்ணம் எழுந்தது. பெண்களின் உரிமைகள் பற்றி அவர்களிடம் பேசுவதற்கு தேவை இல்லைதானே.

பொதுவான சிந்தனை ஒன்று உருவாகி வருகிறது. இந்த நகரங்களில் அடிக்கடி இதனை பெரியளவில் பார்க்க முடியாமல் போகலாம். ஆனால், ஆண், பெண் இரு தரப்பும் ஒன்றை ஒன்று புரிந்துகொள்வதற்கான நல்ல முயற்சிகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.

http://www.bbc.com/tamil/india-43672319

Link to comment
Share on other sites

போதையால் பெருகும் தற்கொலை: பட்டியலில் தமிழகத்தின் இடம் என்ன? #BBCShe

 
வாழ்க்கையை புரட்டிப்போட்ட போதைப்பொருள் பழக்கம்; மீண்டவர்களின் திகைக்கவைக்கும் கதைபடத்தின் காப்புரிமைSHARAD BADHE/BBC

பெருகிவரும் போதைப் பொருள் தொடர்புடைய தற்கொலைகளின் பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் இருக்கிறது? இதோ மகாராஷ்டிராவை மையப்படுத்திய இந்த போதைப் பழக்கம் தொடர்பான கட்டுரையில் அதற்கான விடை இருக்கிறது.

"என் சிறுகுழந்தையின் கண் முன்பே நான் பிரவுன் சுகரை பயன்படுத்தி வந்தேன். அவன் பெயரைப் பயன்படுத்தி நான் காசுக்காக பிச்சைகூட எடுத்துள்ளேன்."

முன்னாளில் போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்த துஷார் நாட்டு என்பவர் போதைப்பொருள் பற்றிய தனது நினைவலைகளை பகிர்ந்து கொள்கிறார்.

அவருக்கு வெறும் 18 வயதானபோதே, எல்லா விதமான போதைப் பொருள்களையும் உட்கொள்ள ஆரம்பித்துவிட்டார். "அதன் உச்சமாக, எனது தயார் தற்கொலைக்கு முயன்றார். இறுதியாக, எனது மனைவி அளித்த புகாரில் என்னை சிறையில் அடைத்துவிட்டார்கள்."

அவர் ஒரு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பிறகு அவருக்கு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது. அங்கு சென்ற ஒவ்வொரு முறையும் அவரது குணாதிசயங்கள் மேம்பட்டன.

"என்னுடைய அகங்காரத்தின் காரணமாக என்னால் தொடர்ந்து போதை மருந்து எடுக்காமல் இருக்கமுடியவில்லை. மீண்டும், மீண்டும் போதை மருந்துகளுக்கு அடிமையானேன்," என்றார் அவர்.

ஒரு இளம் சமூக சேவகர் இவரைப்பற்றி எங்களிடம் கூறியதையடுத்து நாங்கள் நாக்பூரிலுள்ள ஒரு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் துஷாரை சந்தித்தோம்.

துஷார்படத்தின் காப்புரிமைSHARAD BADHE/BBC Image captionதுஷார்

இதுபோன்ற நிலைகளை பற்றி ஊடகங்கள் அதிகளவில் செய்திகளை வெளியிட வேண்டும் என்று பிபிசி ஷியிடம் பேசியபோது அவர் பரிந்துரைத்தார்.

நாம் அறிந்துகொண்ட விஷயங்கள் மிகவும் திடுக்கிட வைக்கும் வகையில் இருந்தன.

'உடாட்டா' மகாராஷ்டிரா?

ஒரு பாலிவுட் படம் எடுக்கப்படுமளவுக்கு பஞ்சாப் போதை மருந்துகளுக்கு எதிரான போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.

ஆனால், மகாராஷ்டிர மாநிலத்தின் தரவுகளும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் போதை மருந்து காரணமாக தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன.

இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் நிகழ்ந்ததாகப் பதிவு செய்யப்பட்ட 3,647 தற்கொலைகளில் 1,372 தற்கொலைகள் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளன.

வாழ்க்கையை புரட்டிப்போட்ட போதைப்பொருள் பழக்கம்; மீண்டவர்களின் திகைக்கவைக்கும் கதைபடத்தின் காப்புரிமைSHARAD BADHE/BBC

552 தற்கொலைகளுடன் தமிழ்நாடு இரண்டாமிடத்திலும், கேரளா 475 மற்றும் பஞ்சாப் 38 என முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும் உள்ளன.

கன்னாபின்னஸ், ஹஷீஷ், பாங், ஓபியம், பிரவுன் சுகர் மற்றும் வேதிப் பொருள்களான டர்பன்டைன், ஒயிட்னர், நெய்ல் பாலிஷ், பெட்ரோல் போன்ற பல்வேறு வகையான போதை மருந்துகளை உட்கொள்பவர்களை சமூக சேவகர்கள் மற்றும் ஆலோசகர்கள் சந்திக்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட பொருள்களில் பெரும்பாலானவற்றை போதைக்காக உட்கொண்டால் மதுபானம் அருந்தியது போன்ற வாடை வராது என்பதால் இவற்றை கண்டறிவது கடினமாக உள்ளது.

பெண்களின் நிலையென்ன?

பெண்களுக்கு மத்தியில் போதைப் பழக்கத்தை கண்டறிவது இன்னும் கடினமாக உள்ளது.

"பெண்களின் போதைப் பழக்கம் பெரும் களங்கமாக கருதப்படுகிறது. எனவே மக்கள் அதை மறைக்க முற்படுவதுடன், அப்பழக்கத்துக்கு ஆளான பெண்களை மருத்துவர்களிடமும் அழைத்து செல்வதில்லை," என்று கூறுகிறார் மகாராஷ்டிராவிலுள்ள முக்தாங்கன் என்ற போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குனரான முக்தா பன்டம்பேகர் என்பவர்.

மருத்துவ உளவியலாளரும் மற்றும் ஆலோசகருமான ஸ்வாதி தர்மாதிகாரி என்பவர், "ஆண்களுக்கு அளிக்கப்படுவதை போன்ற முறையான சிகிச்சைகள் பெண்களுக்கு கிடைப்பதில்லை. பெண்களுக்கு வெகு சில மறுவாழ்வு மையங்களே உள்ளன. பெண்களிடம் எளிதாக பணம் பிடுங்கப்படுகிறது," என்று கூறுகிறார்.

நாட்டிலேயே அதிகளவிலான அரசாங்க உதவிபெறும் மறுவாழ்வு மையங்கள் மகாராஷ்டிராவில்தான் உள்ளன.

ஸ்வாதிபடத்தின் காப்புரிமைSHARAD BADHE/BBC Image captionஸ்வாதி

நாட்டிலுள்ள 435 போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்களில் 69 மையங்கள் மகாராஷ்டிராவில் மட்டும் உள்ளன. அவற்றில் ஒன்றிரண்டு மையங்கள் மையங்கள் மட்டுமே பெண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன.

"போதைப்பொருட்களை எடுத்துக்கொள்ளும் ஒரு பெண்ணை சமூக சேவகர் பார்த்தால், அவரால் அவரை எங்கு அழைத்து செல்ல முடியும்?" என்று கேள்வியெழுப்புகிறார் முக்தாங்கனின் பிராந்திய ஒருங்கிணைப்பாளரான சஞ்சய் பகத்.

இதற்கென பயிற்சியளிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பெண்களுக்கான பிரத்யேக மறுவாழ்வு மையங்களை நடத்துவதென்பது எளிதானதல்ல.

2009 ஆம் ஆண்டில், முக்தாங்கன் 'நிஷிகந்த்' என்ற பெயரில் பெண்களுக்கென 15 படுக்கைகள் கொண்ட ஒரு சிறப்புப் பிரிவைத் தொடங்கியது."

"இங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பெண்களென்பதால், அனுமதிக்கப்படும் நோயாளிகள் வசதியாக உணருவார்கள்" என்று முக்தா கூறுகிறார்.

"தங்களது தந்தையர்கள், கணவர்கள் அல்லது பிள்ளைகளின் போதைமருந்து பழக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஓர் ஆதரவுக் குழு உள்ளது. தொழில்முறை மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் சேர்ந்து நோயாளிகளுக்கு உதவும் வகையில் நாங்கள் அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்."

இந்த உள்ளடக்கிய அணுகுமுறையானது போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு வந்த சில பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளது.

போதைப் பழக்கத்தால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றிய ஒருங்கிணைந்த தரவு திரட்டப்படாததே உண்மையான பிரச்சனையாக உள்ளது.

தெரிந்தது கொஞ்சம்

2001 ஆம் ஆண்டு முதல் விரிவான தேசிய அளவிலான கணக்கெடுப்பு எதுவும் இல்லை.

2016 ஆம் ஆண்டில், இந்தியாவில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பற்றிய கணக்கெடுப்பை மத்திய அரசு அறிவித்தது.

இது 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது. இதில் பெண்களும் திருநங்கைகளும் அடங்குவர். இதற்கு முந்தைய ஆய்வுகளில் அவர்கள் சேர்க்கப்படவில்லை.

இந்த அறிக்கையானது வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கையை புரட்டிப்போட்ட போதைப்பொருள் பழக்கம்; மீண்டவர்களின் திகைக்கவைக்கும் கதைபடத்தின் காப்புரிமைSHARAD BADHE/BBC

ஆனால், கிடைத்த முடிவுகள் வல்லுநர்களையும் திகைக்க வைக்கின்றன. தேசிய கணக்கெடுப்பிற்கான முன்னணி தரவு சேகரிப்பு அலகை நடத்தி வரும் முக்தாங்கானின் சஞ்சய் பகத் கூறுகிறார்.

"இதுவரை கிடைத்த முடிவுகள் கலக்கத்தையே உண்டாக்குகிறது. அதாவது பிரச்சனையின் சிறுபகுதியை மட்டுமே கண்டறிந்துள்ளோம். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் வயது குறைந்துகொண்டே வருகிறது."

இறுதி அறிக்கை வெளியிடப்படும்போதுதான், இந்தியாவில் போதைப்பொருள் அடிமை பிரச்சனையின் உண்மையான வீரியம் தெரிய வரும்.

"விழிப்புணர்வை அதிகரிப்பதும் மற்றும் இதிலுள்ள ஆபத்துக்கள் குறித்த தெளிவை மக்களிடையே உருவாக்குவதுமே இதை சமாளிப்பதற்கான வழி" என்று முக்தா கூறுகிறார்.

புதிய வாழ்வை உருவாக்குதல்

தொழிற்சாலைகளால் சூழப்பட்ட நாக்பூரின் ஹிக்னாவிலுள்ளது மைத்ரீ மறுவாழ்வு மையம். அதன் உள்ளே இருக்கும் தங்குமிடத்தில் கிட்டத்தட்ட 115 போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இங்குதான், துஷார் நாட்டு ஆலோசகராக பணிபுரிகிறார்.

"சாலையோரத்தில் இறந்த நிலையில் கிடந்த தெரு நாயொன்றின் உடலை பார்த்தேன். இதே நிலை எனக்கும் ஒருநாள் ஏற்படும் என்று தோன்றியது. அப்போதிலிருந்து கடந்த 14 வருடங்களாக குடிப்பழக்கத்துக்கு ஆளாகாமல் இருந்து வருகிறேன்."

ரவிபடத்தின் காப்புரிமைSHARAD BADHE/BBC Image captionரவி

இவர் தற்போது அமைதியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரது மகன் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்.

தனது அனுபவங்களை திரட்டிய துஷார் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

மைத்ரீ மறுவாழ்வு மையத்தின் நிறுவனரும் முன்னாள் போதைப்பொருள் அடிமையாளருமான ரவி பதயே மற்றும் துஷார் ஆகியோர் இணைந்து மற்றவர்கள் குணமடைவதற்கு உதவுகின்றனர்.

குடும்ப பின்னணி சார்ந்த பிரச்சனைகள், பணியிடத்திலுள்ள அழுத்தம், சக குழுவினரிடமிருந்து ஏற்படும் அழுத்தம் உள்ளிட்ட பலவிதமான அடிமையாதலுக்கான காரணிகளை ரவி விளக்குகிறார்.

"கொண்டாட்டம் பற்றிய எங்களது கருத்து மாறிவிட்டது. குடிப்பது அல்லது புகைப்பிடிப்பதிலிருந்து துவங்கும் இந்த பழக்கம் கடைசியில் போதைப்பொருள் அடிமையாதலுக்கு செல்கிறது."

கடந்த 12 வருடங்களுக்கு மேலாக, அதாவது தனது இளமைக்காலத்திலிருந்தே போதைப்பொருள் அடிமையாகி தவித்த வரும் யாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை மைத்ரீ மையத்தில் சந்தித்தோம்.

யாஷ்படத்தின் காப்புரிமைSHARAD BADHE/BBC Image captionயாஷ்

தற்போது 28 வயதாகும் யாஷ், தனது வாழ்க்கையே வீணாகிவிட்டதென்று வருந்துகிறார்.

"நான் என் உடலை கெடுத்துக்கொண்டேன். தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் நான் பங்கேற்றுள்ளேன். இப்போது, என்னால் அதை செய்ய முடியாது."

அவர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தாழ்ந்த குரலில் பேசுகிறார். அவரது வெற்றுப் பார்வை அவர் சந்தித்த வலிகளை கூறுகிறது.

"நான் தற்போது பெரியளவில் மாறிவிட்டேன். எப்போதும் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் இருந்தால் மீண்டும் போதைக்கு அடிமையாகமாட்டோம் என்று எங்களது ஆலோசகர் கூறினார். நான் மிகவும் கடினமாக முயற்சித்து வருகிறேன். இச்சூழ்நிலையிலிருந்து என்னால் தப்பிப்பிழைக்க முடியும்."

http://www.bbc.com/tamil/india-43671017

Link to comment
Share on other sites

வேலை நேரம், ஊதியம்: பெண் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் #BBCShe

பத்திரிகைத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கான சவால்களையும் அவர்களின் நிலையையும் பற்றி ஆராயும் இந்தக் கட்டுரை, #BBCShe பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக வெளியாகிறது.

பெண்கள்

ஜலந்தர் நகர் அளவில் சிறியதாக இருந்தாலும், அங்கிருக்கும் இளம்பெண்களின் கனவுகள் பெரியவை. BBCSheக்காக தோபா கல்லூரி ஊடகவியல் மாணவிகளிடம் பிபிசி பேசியது.

22-23 வயதேயான இந்த இளம்பெண்கள் பிரச்சனைகள் பற்றி ஆழமான புரிதல்கள் கொண்டிருக்கின்றனர். ஒரு சாதாரண மனிதர் ஏன் தீவிரவாதியாக மாறுகிறார்? வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவரின் நிலைமை என்னவாக இருக்கும்? இப்படிப்பட்ட முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள அவர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

படித்துக் கொண்டே இந்தி மற்றும் பஞ்சாபி மொழி பத்திரிகைகளிலும், வலைத்தளங்களிலும் பணிபுரியும் இவர்களுக்கு மகளிர் தொடர்பான செய்திகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன.

பெண்கள்

ஜலந்தரில் பல ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் இருந்தாலும், பஞ்சாபி மொழி பத்திரிகைகளின் கோட்டையாகவே அந்நகரம் கருதப்படுகிறது. இங்கு பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையும் குறைவு. 100 ஊழியர்கள் இருந்தால், அதில் 10 பேர் மட்டுமே பெண் ஊழியர்கள்.

அவர்களிடம் பேசிய போது, குற்றம், அரசியல், புலனாய்வு போன்ற செய்திகளுக்கு அதிக உழைப்பும் நேரமும் செலவாகும்; எனவே பெண்களுக்கு அது ஏற்றதில்லை என்று அவர்கள் நம்புவது தெரிந்தது.

முறையற்ற வேலை நேரம், அதிக நேரம் வேலை பார்ப்பது, குறைவான ஊதியம் போன்ற பிரச்சினைகள் கொண்ட பத்திரிகைத் துறையில் பெண்கள் வேலை பார்ப்பதை அவர்களது குடும்பத்தினர் விரும்புவதில்லை.

படித்து முடித்துவிட்டு சில ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு திருமணம், குழந்தைகள் என பெண்கள் 'செட்டில்' ஆகிவிட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

அதாவது, பெண்கள் தங்கள் தொழிலைப் பற்றி தீவிரமாக இல்லை, அவர்களுக்கு அதுவொரு பொழுதுபோக்கு, ஒரு விருப்பம் மட்டுமே. பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபடமாட்டார்கள், எப்போது வேண்டுமானாலும் வேலையில் இருந்து விலகிவிடுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது.

பெண்கள்

ஜலந்தரில் உள்ள ஆறு பல்கலைக்கழகங்களிலும் இதழியல் கற்றுத்தரப்படுகிறது. அதில் மாணவர்களைவிட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது.

ஆனால் படிப்புக்கு பிறகு வேலை பார்க்கும்போது எண்ணிக்கை விகிதம் தலைகீழாகிவிடுகிறது.

தனது அம்மா தன்னிடம் எப்போதும் இப்படி புலம்புவதாக ஒரு மாணவி சொல்கிறார், "வெயில் மழை பார்க்காமல் அலைந்து திரிந்தாலும் நல்ல சம்பளம் இல்லை. உன்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள்? ஆசிரியராக வேலை பார்த்தால்கூட பரவாயில்லை."

ஆனால் தங்கள் பெற்றோர்களை சமாளிக்க முடிந்த இந்த மாணவிகளுக்கு, ஊடகத்தின் 'பழமைவாத' மனப்பான்மையே பிரச்சனையாக இருக்கிறது.

"பத்திரிகையாளர்கள் திறந்த மனப்பான்மை கொண்டவர்கள், மாறும் உலகத்தின் போக்குக்கு ஏற்ப துரிதமாக மாறுபவர்கள் என்று நினைத்தேன். ஆனால் அது உண்மையில்லை" என்று அவர் கூறுகிறார்.

பெண்கள்

'பத்திரிகை துறையில் பெண்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு வேலையைக் கொடுப்பதைவிட ஆண்களுக்கு கொடுப்பதே நல்லது' என்பது இருபது ஆண்டுகளுக்கு முன் நிலவிய மனோநிலை. இப்போது அப்படியில்லை என்று தோன்றுகிறதா?

மாறியது பெருநகரங்கள் மற்றும் ஆங்கில மொழி ஊடகங்களின் கண்ணோட்டம் மட்டுமே. அங்கு பெண்களுக்கு அதிக சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. அதில் அவர்களுக்கு பிடித்தமானதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன. இருந்தாலும்கூட பெண்களின் எண்ணிக்கை ஆண்களுக்கு சமமாக அதிகரிக்கவில்லை.

முடிவெடுப்பதில் பலவீனமாக இருப்பதால்தான் பெண்களின் எண்ணிக்கை பத்திரிகைத் துறையில் குறைவாக இருப்பதாக கூறுகிறார் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் ஒரு பெண்.

"பெண்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்கள், கட்டுரைகள் எழுதுபவர்கள், இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்கிறார் அவர்.

பெண்கள்

ஜலந்தரில் நீண்ட காலமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் மூத்த பெண் பத்திரிகையாளர் இதுபற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?

"தன்னம்பிக்கையே அனைத்திற்கும் அடிப்படை. நீங்கள் ஒரு பெண் என்றும், நீங்களும் உங்களுடைய ஆசிரியர் ஒரு ஆண் என்றும் நினைக்காதீர்கள். நாம் அனைவரும் பத்திரிகையாளர்கள் மட்டுமே. நமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதும் போராடுவதும் நம்மிடமே உள்ளது."

http://www.bbc.com/tamil/india-43689275

Link to comment
Share on other sites

ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை கன்னத்தில் அறையும் பஞ்சாப் பெண்கள்

பஞ்சாப் பெண்கள்

பஞ்சாபில் ஜலந்தரைச் சேர்ந்த பிராக்ஷி கன்னா கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஓர் மாலை வேளையில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அவரை ஒரு கார் பின்தொடர்ந்தது. ஞாயிற்றக் கிழமையான அன்று சந்தைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தபோது கார் தன்னை பின்தொடர்வதை கவனித்த பிராக்ஷி சற்று வேகமாக அடி எடுத்து வைக்கத் துவங்கினார். உடனே அந்த கார் அவர் அருகில் வந்து நின்றது.

கத்தியுடன் இருந்த ஒருவன் அவள் மீது பாய்ந்தான்.

''என்னை காருக்குள் அவன் நுழையச் சொன்னான்'' எனத் தெரிவிக்கிறார் அந்த திடகாத்திரமான இளம் பெண். ''அவனது கத்தியை மீறிய நான் அவனை என்னால் முடிந்த மட்டும் தள்ளிவிட்டேன். அவன் காரின் பானட் பகுதி மீது விழுந்தான். நான் அங்கிருந்து ஓடி அருகிலுள்ள ஆட்டோ ஒன்றைப் பிடித்தேன். நான் உயிருடன் இருக்கமாட்டேனோ என அப்போது பயந்தேன்'' என்கிறார் அப்பெண்.

கல்லூரி மாணவியான சந்தீப் கவுர் அவருக்கு நேர்ந்த ஓர் சம்பவத்தை பகிர்ந்தார். தன்னுடைய உறவினரை அழைத்துக்கொண்டு செல்வதற்காக தனது ஸ்கூட்டரில் பயணித்தபோது மது அருந்திய ஒருவன் அவனது இருசக்கர வாகனத்தை கொண்டு தனது ஸ்கூட்டரின் மீது மோதிவிட்டு உடனே தன்னை திட்டியதாகவும் கூறுகிறார்.

பஞ்சாப் பெண்கள்

முக்ஸ்தர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் '' இந்தச் சம்பவத்தின்போது ஆத்திரம் கொண்டேன் மேலும் அவனை அடித்தேன் '' என்றார்.

இதற்கு முன்னதாகவும் அந்த மாணவி ஒருவனை அடித்திருக்கிறார்.

'' ஒருமுறை பேருந்தில் ஒருவன் என்னை உரசினான் அதற்கு பதிலாக அவனுக்கு என்னிடம் இருந்தும் கடுமையான அடி கிடைத்தது'' என பெருமையாக சொல்கிறார் சந்தீப் கவுர். ப்ராக்ஷியும் கூட பேருந்தில் தன்னிடம் முறையற்ற வகையில் நடந்து கொண்ட ஆண்களை அறைந்ததாகவும், இச்சம்பவம் இரண்டு முறை நடந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் பெண்கள்

இந்த இளம் பெண்கள் மட்டும் தங்களை தொந்தரவு செய்த ஆண்களை அடிக்கவில்லை வேறு சில பெண்களும் இதே விஷயத்தைச் செய்திருக்கிறார்கள். கடந்த வாரம் ஓர் ஆட்டோவில் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற ஒரு காவலரிடம் தனது கராத்தே வித்தையை காண்பித்த ஹரியானா பெண்ணைப் போல, மேற்சொன்ன இளம்பெண்கள் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாகவில்லை. ஆனால் அவர்களது குழுக்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் பேசு பொருளாகியிருக்கிறார்கள்.

தகாத முறையில் நடந்து கொள்பவர்களை தடுத்து நிறுத்த ஒரே வழி இதுவே என்கிறார் சந்தீப். நகரங்களில் இருந்தும் கிராமத்தில் இருந்தும் வந்துள்ள இந்த இளம்பெண்கள் தெருவில் நடக்கும் கடுமையான தொந்தரவுகளுக்கு ஓர் விடை கண்டுபிடித்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்களை தாக்கு என்பதே அந்த விடை.

இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் தங்களது பெருமையை தக்கவைப்பது மட்டுமின்றி, தாங்கள் விரும்பிய இடத்திற்கு விரும்பிய நேரத்திற்கு செல்ல வழிவகுக்கிறது எனத் தெரிவிக்கின்றனர்.

பஞ்சாப் பெண்கள்

2016-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 5000 நிகழ்வுகளை கண்டுள்ளது பஞ்சாப் மாநிலம். தேசிய குற்றவியல் பதிவு நிறுவனம் அளித்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி 1038 பெண்கள் இந்த நிகழ்வுகளில் பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. எனினும், பிராக்ஷி மற்றும் சந்தீப் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பல நிகழ்வுகள் முறையாக அறிக்கை தாக்கப்படாமல் இருக்கிறது என்கின்றனர்.

''எங்களது நகரங்களில் உள்ள தெருக்கள் பாதுகாப்பானவை அல்ல. இது போன்ற சூழ்நிலைகளில் எங்களிடம் உள்ள ஒரே தீர்வு சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பதே'' என்கிறார் சந்தீப்.

ஜலந்தர் கல்லூரியில் படிக்கும் மாணவியான ப்ரீத்தி, தன்னை தொந்தரவு செய்யும் பையன்களை சந்தீப் செய்ததை போன்று எதிர்த்து அடிப்பதில்லை. '' நான் பேட்மின்டன் வீராங்கனை. பயிற்சிக்குச் செல்லும்போது ஷார்ட்ஸ் அணிவேன். என்னை தினமும் சிலர் சீண்டுவார்கள். ஆனால் நான் பயப்படுவதில்லை. ஒவ்வொருவருடனும் சண்டை போட முடியாது ஏனெனில் நீங்கள் இன்று தாக்கினால் நாளைக்கு அவர்கள் உங்களை தாக்கலாம்'' என்கிறார் இமாச்சல பிரதேசத்தில் இருந்து ஜலந்தரில் வந்து படிக்கும் மாணவி ஷிவானி.

ஈவ்டீசிங்கில் ஈடுபடுபவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதே சிறந்தவழி என்கிறார் வரைகலை நிபுணராக பணியாற்றும் ஜஸ்லீன் கவுர். '' உங்களுக்கு சில பகுதிகள் பாதுகாப்பின்மையாக தோன்றினால் ஏன் அந்தப் பகுதிகளுக்கு முதலில் செல்கிறீர்கள். இது நீங்களே உங்களுக்கு பிரச்னையை வரவழைத்துக் கொள்வது போன்றது'' என்கிறார் அவர்.

பஞ்சாப் பெண்கள்

'' இப்படி நாம் சிந்திக்கத் துவங்கினால் நம்மால் எதுவும் செய்ய முடியாது, நாம் வாழக்கை நடத்தவே முடியாது'' என ஜஸ்லீன் வாதத்தை எதிர்க்கிறார் பிராக்ஷி.

'' பயப்படுவது தீர்வல்ல. உங்கள் பயம்தான் அவர்களுக்கு ஊக்கம் தருகிறது. இன்றைய பெண்கள் வலுவானவர்களாக இருக்க வேண்டும். ஈவ் டீசிங் செய்பவர்களை கண்டுகொள்ளாமல் செல்வதால் அவர்கள் தெருவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தொந்தரவு அளிக்கும் துணிவு பெறுகிறார்கள்'' என்கிறார் சந்தீப்.

ஏன் பெண்கள் காவல்துறையை அணுகுவதில்லை என கேட்டபோது அது கடினமானதாக இருப்பதாக கூறினார். '' மிகவும் முக்கியமான விஷயம் எனில் பெண்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம். ஆனால் ஆண்கள் சீண்டல் பேச்சில் ஈடுபட்டாலோ அல்லது தொட முயன்றாலோ அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு அறை விடுவது போதுமானது'' எனக் கூறினார் மாணவி சந்தீப்.

''காவலர்களை அணுகுவது சட்ட வழிமுறையில் ஈடுபட வேண்டியதாக இருக்கும் அதுமட்டுமின்றி பெற்றோர்கள் கவலைபடுவார்கள். இவை பெண்களுக்கு மேலும் பல தடைகளை ஏற்படுத்தும்'' என மற்றொரு கவலை அளிக்கும் விஷயம் குறித்துச் சொல்கிறார் பிராக்ஷி.

பஞ்சாப் பெண்கள்

இந்திய சட்டப்படி வெவ்வேறு குற்றங்களுக்கு வெவ்வேறு விதமான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வழிவகை உண்டு. குற்றவியல் சட்டம் (2013) , பாலியல் துன்புறுத்தல் குற்றம் (354-A, ஐபிசி), நிர்வாணப்படுத்துதல் (354 -B ஐபிசி), அல்லது பாலியல் செய்கைகளை கண்டு பாலின்பம் அடைந்தல் (354-C, ஐபிசி) மற்றும் தொடர்ந்து பின்தொடர்ந்து தொந்தரவு தருதல் (354 - D) ஆகியவற்றுக்கு காவல் துறையில் புகார் அளிக்க முடியும்.

'’பெண்களிடம் தற்போது காணப்படும் இந்த தைரியம் தான் இந்த மண்டலத்தில் உள்ள பெண்கள் விளையாட்டிலும் பல பதக்கங்கள் வெல்வதற்கு காரணம். பெண்கள் இவ்வாறு ஆண்களை தைரியமாக எதிர்கொள்வது படித்தவர்களிடம் மட்டுமே காணப்படுகிறது. படிக்காத பெண்கள் இன்னமும் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள்'' என்கிறார் பஞ்சாப் பல்கலைக்கழக சமூகவியல் துறை பேராசிரியர் மஞ்சித் சிங்.

பஞ்சாபில் பெண்கள் தெருவில் நடக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக சண்டை போடுவது புதிய டிரென்டா எனக்கேட்டால் அதற்கு பதில் அளிப்பது கடினம். ஆனால் தெருவில் நடக்கும் தொந்தரவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

http://www.bbc.com/tamil/india-43731366

Link to comment
Share on other sites

 

திருமணத்துக்காக கடத்தப்படும் ஆண்கள்; பரிதவிக்கும் குடும்பங்கள் #BBCShe

 

கதை சொல்வதற்கான அதிகாரத்தை பார்வையாளர்களிடம் வழங்குகின்ற திட்டம்தான்“ ‘#BBCShe‘ என்கிற பணித்திட்டம். இந்த திட்டத்தின் ஒருபகுதியாக பிகார் மாநிலத்துக்கு சென்ற பிபிசி குழுவினர் அங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படுவது குறித்து கல்லூரி மாணவிகள் முதல் அச்சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பேசியதையும் அதன் மூலம் தெரியவந்த விடயங்களையம் விளக்குகிறது வந்த காணொளி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.