Jump to content

பேஸ்புக்கை விட்டு நிரந்தரமாக வெளியேறும் கனேடியர்கள்!


Recommended Posts

பேஸ்புக்கை விட்டு நிரந்தரமாக வெளியேறும் கனேடியர்கள்!

facebook-app-sensor-tower-e1471977216684

கனேடியர்களின் முகநூல் தரவுகள் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களைத் தொடர்ந்து, பெரும்பாலான கனேடியர்கள் தங்களது முகநூல் கணக்கை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.

 

கணக்குகளை அழித்துவிடக் கோரும் இணைய இயக்கம் ஒன்று மக்களை ஊக்குவித்து வருவதன் பின்னணியில், இந்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாக ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்ப் தரப்பிற்காக செயற்பட்ட நிறுவனம் ஒன்று 50 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட தரவுகளை எடுத்து அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

https://www.quicknewstamil.com/2018/03/27/பேஸ்புக்கை-விட்டு-நிரந்த/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன்காரருக்கு பேஸ்புக்கிலை நம்பிக்கையே இல்லை.....எப்பவோ வெளியேறிட்டாங்கள். ஏன் நானே இப்ப பேஸ்புக் பக்கம் தலை காட்டுறதேயில்லை......நான் இப்ப வேறையொண்டு வைச்சிருக்கிறன்......அதோடைதான் எல்லாம். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு எங்கள் யாழ்.கொம் மீது மட்டும் தான் நம்பிக்கை இருக்குது. மற்ற எதிலும் நம்பிக்கை இல்லை. ஏனெனில் இணையம் என்பதே தரவுத் திருடலுக்காக அமெரிக்காவின் அதிகார விரிவாக்கத்திற்காக.. பனிப்போரின் பின் திறந்துவிடப்பட்ட ஒன்று. tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, nedukkalapoovan said:

எங்களுக்கு எங்கள் யாழ்.கொம் மீது மட்டும் தான் நம்பிக்கை இருக்குது. மற்ற எதிலும் நம்பிக்கை இல்லை. ஏனெனில் இணையம் என்பதே தரவுத் திருடலுக்காக அமெரிக்காவின் அதிகார விரிவாக்கத்திற்காக.. பனிப்போரின் பின் திறந்துவிடப்பட்ட ஒன்று. tw_angry:

பேசாமல் tor க்குள் ஐக்கியமாவது நல்லது போல் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 என்ன கு சா வேற ஒண்டை வச்சிருக்கிறாராம் எனக்கும் இன்னுமொண்டு வச்சிருக்க ஆசைதான் கு சா உதவி செய்யுங்கோ.

 

Link to comment
Share on other sites

 

On 28.3.2018 at 11:37 PM, nedukkalapoovan said:

எங்களுக்கு எங்கள் யாழ்.கொம் மீது மட்டும் தான் நம்பிக்கை இருக்குது. மற்ற எதிலும் நம்பிக்கை இல்லை. 

எனக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை போய்விட்டது. நான் பிறந்த மண், என் இனம், என் கடவுள், என் மொழி எல்லாமே களவாடப்பட்டுவிட்டது. இதில் கொடுமையிலும் கொடுமையானது, எங்கள் உயிரிலும் மேலான தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 247ல் புகுந்து நானும் தமிழ் எழுத்து என்று படம்காட்டும் வடமொழி எழுத்துக்களே.....! அவைகளை நாங்களும் அரவணைத்துப் பாலூற்றி வளர்க்கிறோம். இதனை யாழ்.கொம் இணைய உறவுகள் கூடத் தவிர்க்கவும், அதற்கான வழிகாட்ட முயலாதிருப்பதும் வேதனை தருகிறது. :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.