Jump to content

``தொகுதிக்கு வராத அரசியல்வாதியும், டிக்கெட் எடுத்துப் படம் பார்க்கும் ரசிகனும்!" - `எம்.எல்.ஏ' படம் எப்படி? #MLAreview


Recommended Posts

``தொகுதிக்கு வராத அரசியல்வாதியும், டிக்கெட் எடுத்துப் படம் பார்க்கும் ரசிகனும்!" - `எம்.எல்.ஏ' படம் எப்படி? #MLAreview

 
 

காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துதரக் காதலன் கேட்க, பெண்ணுடைய அப்பா பிக்பாஸ் மாதிரி கொடுக்கும் 'எம்.எல்.ஏ ஆகவேண்டும்' என்ற டாஸ்க்கை நிறைவேற்றுகிறாரா ஹீரோ என்பதைப் 'புதுமையான' ஆக்‌ஷன், சென்டிமென்ட் கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறது, `எம்.எல்.ஏ' திரைப்படம். 


எம்.எல்.ஏ

 

தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் நடுத்தர வயது இளைஞன், கல்யாண் பாபு  (நந்தாமுரி கல்யாணம்). `உண்மைக் காதல்னா உயிரைக் கொடுக்கக்கூடிய' கல்யாண், தன் குடும்பத்தை எதிர்த்து தங்கை மற்றும் நண்பன் வெண்ணிலா கிஷோரின் காதல் திருமணத்தை நடத்தி வைக்கிறார். எதிர்பாராத விதமாக பல இடங்களில் இந்துவை (காஜல் அகர்வால்) சந்திக்கிறார். இது மேஜிக்கல் பிணைப்பு என இந்துவைப் பின் தொடர்ந்து கல்யாண் காதலிக்க, இந்து கல்யாணின் முதலாளியாக வருகிறார். இதைத் தொடர்ந்து முதலாளி-தொழிலாளி பேதம் கல்யாணைத் தடுத்தாலும் இந்துவைக் காதலிப்பதையே முழுநேர வேலையாகச் செய்கிறார். இந்துவின் கம்பெனிக்கு மார்த்தாலி என்ற லோக்கல் வில்லனால் பிரச்னை வர, அதிலிருந்து கம்பெனியையும் தன் காதலையும் காப்பாற்ற நினைக்கிறான், கல்யாண். இதைத் தொடர்ந்து மார்த்தாலி சிறைக்குச் செல்ல, இந்துவை வேறொரு கும்பல் கடத்த முயற்சி செய்கிறது. அவர்களை யாரெனக் கேட்க, அந்தக் கும்பலிலிருந்து ஒருவன், `இவர் எம்.எல்.ஏ காடப்பாவுக்கு நிச்சயிக்கப்பட்டவர்' என்கிறான். ட்விஸ்ட் வெடிக்க முதல் பாதி முடிகிறது. இந்துவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால், எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்ற நிபந்தனை வர, அதில் வெற்றிபெறுகிறாரா இல்லையா? என்பதை மறுபாதி படம் சொல்கிறது. 

எம்.எல்.ஏ, காஜல் அகர்வால்

ஹீரோ நந்தாமுரி கல்யாண்ராம் திரையில் எளிதான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், ஸ்டன்ட், காமெடி, பன்ச் வசனங்கள் என எல்லாவற்றிலும் 100 சதவிகிதம் முழுமையாக இல்லாதது போலவே ஃபீல் ஆகிறது. இவரது நடிப்பில் பாலகிருஷ்ணா, ரஜினிகாந்த் என சூப்பர் ஸ்டார்களின் சாயல்கள் ஆங்காங்கே எட்டிப் பார்த்துச் செல்கிறது. பல வருடங்களாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வலம் வரும் காஜல் அகர்வால் கவனிக்கக்கூடிய கேரக்டர்களை முயற்சி செய்யாமல், இன்னமும் பாஸ் மார்க் வாங்கும் மாஸ் மசாலா படங்களையே தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பது, ஏமாற்றமே! 'எம்.எல்.ஏ' படத்திலும் அப்படியான ஒரு க்ளிஷே கதாபாத்திரம்தான். ஆனால், முடிந்த அளவுக்கு நேர்த்தியாகவே செய்திருக்கிறார், காஜல்.

சில காட்சிகளே வந்தாலும், வக்கீல் பட்டாபி கதாபாத்திரத்தில் பிரம்மானந்தம் காமெடி கச்சிதம். நம்மை அடித்து வெளுக்கும் படத்தில், இரண்டாம் பகுதி முழுவதையும் அரசியல் நையாண்டிகளால் சிரிக்க வைக்கிறார், கல்யாண்ராமின் உதவியாளராக வரும், புருதுவி ராஜ். காதலுக்காகப் பதவியை ராஜினாமா செய்யும் ஏ.எல்.ஏ-வாக வரும் காடப்பா (ரவி கிஷன்), இரண்டாம் பாதியின் பெரும்பகுதியில் வில்லத்தனத்தைக் காட்டி மிரட்டுகிறார்.    

மணிஷர்மா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பட்டாசு ரகம். பிரசாத் முரெல்லா ஒளிப்பதிவு பாடல்களுக்கு ஃபாரின், மற்ற காட்சிகளுக்கு கிராமம்... என இருவேறு கலரைக் கச்சிதமாகக் காட்டியிருக்கிறது. திரைக்கதைக்கு உகந்த வேகத்தைத் தர முயற்சி செய்திருக்கிறார், படத்தொகுப்பாளர் பிக்கிணா தம்மிராஜு. 'ஆகாடு', 'தூக்குடு' உள்ளிட்ட படங்களுக்குக் கதாசிரியராக இருந்த உபேந்திரா மாதவ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியிருக்கிறார். பல சூப்பர்ஹிட் கமர்ஷியல் படங்களுடைய கதாசிரியர் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளே செல்லும் நமக்கு, அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறாரா... என்றால், இல்லைதான்!

எம்.எல்.ஏ

காதலுக்காக சில அரசியல் சவால்களைச் சந்திக்கும், உண்மையான சமூக நிலையைப் பார்த்துப் பொங்கும் கதாநாயகன்... ஒரு பக்கா கமர்ஷியல் ஒன்லைனை வைத்திருந்தும், அடித்துத் துவைத்து சாயம்போன, அனைவரும் எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதையால் வீணடித்திருக்கிறார், இயக்குநர். மசாலா தெலுங்கு படங்களில் சாமான்ய ரசிகர்களுக்காக வைக்கப்படும் இயல்புக்கு மாறான சண்டைக் காட்சிகள் இருக்கும்தான். ஆனால், அந்த இயல்புக்கும் விஞ்சிய சில சண்டைக் காட்சிகளைப் பார்க்கும்போது, குபீர் சிரிப்புதான் வருகிறது. அரசியலும், அரசியல் காட்சிகளும் 'தூள்', 'கலகலப்பு', 'முதல்வன்' எனப் பல தமிழ்ப் படங்களை ஞாபகப்படுத்துவது மற்றொரு குறை.   

 

 

https://cinema.vikatan.com/movie-review/120292-mla-telugu-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
    • இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை. ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎
    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.