Jump to content

வடையும் மோதகமும் அண்ணன் தம்பிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடையும் மோதகமும் அண்ணன் தம்பிகள்

 சூசை ஒரு Bci பட்டதாரி. அந்தப் பட்டப் படிப்புக்காக அவன் பல்கலைக்கழகம் எங்கும் போகவில்லைஅந்தப் பட்டத்திற்கான தகுதியை அவன் சினிமா தியேட்டர்களில் இருந்துதான் பெற்றுக் கொண்டான்.

 பருத்தித்துறை சென்றல், வல்வெட்டித்துறை யோகநாயகி, புலோலி காசில், நெல்லியடி மகாத்மா, லக்சுமி தியேட்டர்கள்தான்  அவனை (Bachelor of Cinema)  பட்டம் பெற வைத்த முக்கிய கூடங்கள். எவ்வளவு கேவலமான படங்களாக இருந்தாலும் முதல்நாள் முதல் காட்சியில் பிரதம விருந்தினராக சூசை இருப்பான். அவனிடம் சினிமா சம்பந்தமாக எது கேட்டாலும் பதில் கிடைத்து விடும்.

 அறுபதுகளின் பிற்பகுதியிலேயே வானொலியில் பாடல்களை ஒலிபரப்பும் போதே அதை எழுதியவர், இசையமைத்தவர், பாடியவர்கள் விபரங்களையும் சேர்த்தே இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிக்கும் நிலை வந்து விட்டது. இங்கு  நான் சொல்லவருவது அதற்கு சற்று முந்தியது

 அப்பொழுது திரைப்பட இசையமைப்பாளர்கள் பலர் இருந்தாலும், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி  ஆகியோரே முன்ணணியில் இருந்தார்கள். பாடல்கள் இனிமையாக இருக்கும் ஆனால் அதை யார் இசையமைத்தார்கள் என்பது எனக்குத் தெரியாதுஎனது இந்தப் பிரச்சனையை சூசையிடம் சொன்னேன். சற்றும் யோசிக்காமல் அவன் பதில் தந்தான்

 “ பாட்டு தொடங்கைக்கேயேடும் டும்எண்டு மேளச் சத்தம் கேட்டால் அது கே.வி.மகாதேவன் பாட்டு. மேளச் சத்தம் கேக்கேல்லையோ அப்பிடி எண்டால் அது விஸ்வநாதன்-ராமமூர்த்தி  பாட்டு”.  

 நான் மேலே சொன்ன இசையைப்பாளர்கள் இசையமைத்த  ஏதாவது ஒன்று இரண்டு பாடல்களை கேட்டுவிட்டுச் சொல்லுங்கள். சூசையின் சினிமா அறிவு உங்களுக்கும் தெரிந்து விடும்.

 மகாத்மா  தியேட்டருக்கு அருகே இருக்கும் தேனீர் கடையில் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பொரித்த மோதகம் சூசைக்கு மிகவும் விருப்பமானது. படத்துக்கான ரிக்கெற்றை வாங்கிக் கொண்டு நேராக தேனீர் கடைக்குத்தான் முதலில் போவான். பொரித்த மோதகத்தையும், பிளேன் ரீயையும்  உள்ளே தள்ளி விட்டால் அடுத்து அவனுக்குத் தேவையானது ஒரு  Sportsman  சிகரட். எல்லாவற்றிற்கும் நேரம் கணித்து வைத்தே அவன் நடந்து கொள்வான். சிகரெட் எரிந்து பில்டர் வரை வந்து அதை கட்டை, சுண்டு விரல்களின் நுனியில் பிடித்து கடைசி இழுப்பு இழுத்து அவன் புகை விடும் அதே நேரம் படம் தொடங்குவதற்கான மணி அடிக்கும். தியேட்டருக்கு உள்ளே போனால் தியானத்தில் இருப்பது போல் ஆடாமல் அசையாமல் அப்படியே படத்துடன் ஒன்றிவிடுவான். ஆனால் அவன் வாய் மட்டும் அகலத் திறந்திருக்கும்.

 நானும் அவனுடன் சில தடவைகள் படத்துக்குப் போயிருக்கிறேன். தன்னுடன் படம் பார்க்க வருபவருக்கு அவனே படத்துக்கான ரிக்கெற்றுக்கு பணம் கொடுத்துவிடும் நல்ல குணம் அவனிடம் இருந்ததுஆனாலும் அவனிடம் ஒரு குறை இருந்தது. படம் முடிந்து வரும் போது அவனை வைத்து சைக்கிள் ஓட வைத்து விடுவான். அத்தோடு சைக்கிளின் பாரில் இருந்து கொண்டு, வேதாளம் கதை சொல்லி விட்டு விக்கிரமாதித்தனிடம் கதை பற்றி ஏதாவது கேள்வி கேட்குமே அதேபோல படத்தை பார்க்க வைத்து விட்டு அது பற்றி கேள்விகள் கேட்டுக்கொண்டே வருவான். சாதாரணமான நிலையில் அவனது கேள்விகளுக்குப் பதில் கொடுத்து விடலாம். அவனை வைத்து சைக்கிள் ஓடும் போது அதுவும் நெல்லியடியில் இருந்து மாலிசந்திவரை உள்ள வயல் வெளியில் எதிர்க்காற்றில் எம்பி எம்பி பெடலை உழக்கும் போது அவனது கேள்விகளால் மண்டை உடைந்து சுக்கு நூறாகச் சிதறிவிடும். ஒருதடவை அப்படியான சூழலில் நான் வேதாளமாக மாறி அவனுக்கு ஒரு கதை சொல்லத் தொடங்கினேன்.

 17_D7_C27_D-7607-4_D69-8193-84_FDA4_D648

 இற்றைக்கு ஏறக்குறைய ஐம்பத்தைந்து ஆண்டுகள் கடந்து போன கதை அது.

 பருத்தித்துறை நகரில் உள்ள தேனீர்க்கடை ஒன்று நித்திரை கொள்ளாது. சினிமா இரண்டாம் காட்சி பார்த்து விட்டு வருபவர்கள், கடற்தொழிலாளர்கள், மற்றும் பருத்தித்துறையின் கிழக்குப் பக்கமாக இருந்து மாட்டு வண்டிகளில் விறகு, தேங்காய், தென்னோலை, அலம்பல் கட்டிக் கொண்டு அதிகாலையில் நகரத்துக்குள் நுழையும் வியாபாரிகள், காலையில் முதல் பஸ் பிடிக்க வருபவர்கள் போன்றவர்களுக்காகவே அந்தக் கடை உறங்குவதில்லை.

 நான் சொல்லும் கடையின் வாரிசுகள் புலம் பெயர்ந்து  ஐரோப்பியா அல்லது கனடாவில் கண்டிப்பாக இருப்பார்கள். ஆகவே என் நலன் கருதி கடையின் பெயரை இங்கே தவிர்த்து விடுகிறேன்.

 கடையில் ஒரு கண்ணாடிப் பெட்டி, அதனுள்ளே மெது வடைகள், அவைகள் காலையில் நகருக்குள் நுழையும் வண்டி வியாபாரிகளுக்காக காத்திருக்கும்.

 “தம்பி, ஒரு பிளேன் ரீயும் இரண்டு நூல் வடையும் தா” 

 அதிகாலையில் வியாபாரிகள் நூல் வடையை ரசித்து சாப்பிட்டுக் கொண்டே, யார் யார் எந்த திசையில் போய் வியாபாரம் பார்ப்பது என்று  தங்களுக்குள் தீர்மானித்துக் கொள்வார்கள். கடையை விட்டு வெளியேறும் போது தங்கள் தங்கள் குடும்பங்களுக்கும் நூல் வடைகளை மறக்காமல் வாங்கிக் கொள்வார்கள். அநேகமாக நூல் வடைகள் எல்லாவற்றையும் அந்த வியாபாரிகள், அதிகாலையிலேயே முடித்து விடுவார்கள். சில வேளைகளில் அவர்கள் வரும் போது நூல் வடைகள் கடையில் இல்லாமல் போனால், “சரி, அடுத்தமுறை பாப்பம்என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொள்வார்கள். அந்தளவிற்கு அவர்கள் நூல் வடைப்பிரியர்கள்.

 இந்தக் கதையைத்தான் சைக்கிள் ஓட்டிக் கொண்டே சூசைக்கு அன்று நான் சொன்னேன்.

 “இப்ப இதை ஏன் எனக்கு சொல்லுறாய்?”

 “நெல்லியடியிலை நீ சாப்பிடுற பொரிச்ச மோதகம், முதல்நாளோ இல்லாட்டில் அதுக்கு முதல்நாளோ மிஞ்சிப் போனதா இருக்கலாம். புதுசா எண்ணையிலை போட்டு பொரிச்சு எடுத்து வைச்சிருப்பாங்கள்

 நான் சொன்னதைக் கேட்டு, சூசை தனது வாய்க்கு இடைவேளை அறிவித்து விட்டான். அத்தோடு, என்னுடன் படத்துக்கு வருவதையும் அன்றோடு தவிர்த்து விட்டான். இந்தச் சம்பவத்தை நான் வெளியே சொல்லப் போக, ஆளாளுக்கு சூசையைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். படம் பார்த்து விட்டு, யாராவது சூசையை வைத்து சைக்கிள் ஓட்டும் போது, சூசை ஏதாவது கேட்டால், “ஏன் சூசை பொரிச்ச மோதகம் முதல்நாள் மிஞ்சினது எண்டு சொல்லுறாங்கள் உண்மையோ?” என்று சொன்னால் போதும் சூசை அமைதியாகி விடுவான். ‘சூசைதாசன்என்று அவனது தந்தை மார்டின் வைத்த பெயர் நாளடைவில் மறைந்து போய் PM (Poricha Mothagam)  என்ற பெயர் அவனுக்கு நிலைத்து விட்டது.

 சூசைக்கு என்மேல் கோபம் இருந்ததை நான் அறிவேன். அதை அவன் காட்டிக் கொள்ளவில்லை. நானும் கண்டு கொள்ளவில்லை.

 ஆங்கிலப் படங்களுக்காக அப்பொழுது மாலையில் நாலு மணிக்கும் காட்சி இருக்கும். பாடசாலை முடிய பிரத்தியேக வகுப்பு என்று போகும் மாணவர்களை குறிவைத்து அந்தக் காட்சி இருக்கும். Adults only என்று போட்டிருப்பார்கள். ஆனாலும் தாராள மனதுடன் மாணவர்களான எங்ளையும் படம் பார்க்க அனுமதிப்பார்கள். ஒரு தடவை முக்கியமான வகுப்பு இருந்ததால் புதுப் படம் ஒன்றுக்கு நாலு மணிக் காட்சிக்கு எங்களால் போக முடியவில்லை. படம் பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்த சூசையிடம்படம் எப்பிடி?“ என்று கேட்டோம்

 “அநேகமா உங்களை உள்ளை விடமாட்டாங்கள். அந்தமாதிரிக் காட்சி எல்லாம் இருக்கு. நானே கஸ்ரப்பட்டு, கெஞ்சிக் கூத்தாடித்தான் உள்ளை போனனான். இன்னுமொருக்கால் படத்தைப் பாக்கோணும். இப்ப வேலை ஒண்டு இருக்கு. செக்கன்ட் ஷோவுக்கு கட்டாயம் வந்து பாப்பன்

 எங்களுக்கு படம் பார்க்கும் ஆசையை உண்டாக்கி விட்டு சூசை  போய்விட்டான்.

 நேரம் கழித்து வீட்டுக்கு போனால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்  என்ற துணிவோடு தியேட்டருக்குள் நுளைந்து விட்டோம். படம் ஓடிக் கொண்டிருந்தது. படத்தில் கிளுகிளுப்பான காட்சிகள் எதையுமே காணவில்லை. படம் முழுதும் கதைத்துக் கொண்டே இருந்தார்கள். மொழி தெரிந்தால்தானே கதை விளங்க. இதோ வரும், அதோ வரும் என்று ஒன்றரை  மணித்தியாலமும் போய்விட்டது. படம் முடிந்து வெளியே வந்தால், சூசை சைக்கிளில் சாய்ந்தபடி தியேட்டர் வாசலில் நிற்கிறான்.

 “படம் எப்பிடி? நான் பட்ட துன்பம் மற்றையவையளும் பட வேண்டாமே அதுதான்..” பொரித்த மோதகத்துக்காக. சூசை எங்களை பழி வாங்கி விட்டது விளங்கியது.

 மூன்று வருடங்களுக்கு முன்னர், சூசையப்பர் பங்குனி திருவிழாவுக்கு தேவாலயத்தைச் சுத்தம் செய்யும் போது ஏணியில் இருந்து தவறிக் கீழே விழுந்து முதுதுகெலும்பு உடைந்து சூசை இப்பொழுது படுக்கையில் இருக்கிறான். ஆனாலும் தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராமல், பார்த்த படங்களென்றாலும் படுக்கையில் இருந்து கொண்டே சூசை அவற்றை எல்லாம் ரிவியில் மீண்டும் மீண்டும்  சலிக்கமல் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறானாம்

 கவி அருணாசலம்

24.03.2018

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான பதிவு..

இதே மாதிரியான அனுபவம்..

எனது பள்ளி வாழ்க்கை முழுவதும் மதுரையருகேயுள்ள எங்கள் கிராமத்தில்தான்.. எழுபதுகளின் இறுதியில் என நினைக்கிறேன்..

சென்னை எனக்கு முற்றிலும் புதிது.. கல்லூரி விடுமுறை நாட்களை பயன்படுத்தி சென்னை செல்லலாமென விடுதியின் சக அறைத் தோழர்களுடன் சென்னைக்கு பயணித்து, ஓட்டலில் அறையெடுத்து தங்கினோம்..

முதலில் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் தெரிந்த நண்பர் மூலம் அனுமதி பெற்று, அப்போதைய ரஜினி நடித்த 'நான் போட்ட சவால்' என்ற படத்தின் 'சூட்டிங்'கை பார்த்தோம்.. மதியத்திற்குப் பின் அதே ஸ்டுடியோ வளாகத்தில் புதிதாக திறந்திருந்த ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திரையரங்கில் ஆங்கிலப்படம் ஓடுவதாகவும், அதில் 'முக்கியமான காட்சி' ஒன்று அவசியம் பார்க்க வேண்டுமென சக தோழன் ஏற்கனவே விசாரித்து வைத்திருந்ததால், திரையரங்கிற்கு சென்றோம்.. எங்களின் வயது அப்போது இருபதுக்கும் கீழே..

சுற்றும்முற்றும் பார்த்து கூச்சத்துடன் டிக்கட் எடுத்துவிட்டு, குளிரூட்டப்பட்ட அப்புதிய திரையரங்கில் படம் பார்க்க ஆவலுடன் உட்கார்ந்திருந்தோம்..

படமும் ஓடியது.. ஓடியது.. ஓடிக்கொண்டேயிருந்தது.. படம் ஆரம்பித்து முக்கால் மணி நேரமாயிற்று.. பேசிக்கொண்டே இருந்தார்கள்..

'ஒன்றையும்' காணோம்..

கடுப்பில் படத்தை சிபாரிசு செய்த தோழனை திட்டித் தீர்த்துவிட்டோம்..

அவனோ, "இருங்கடா..! வரும்.. நிச்சயம் வரும்டா..!" என அழாத குறையாக எங்களை ஆறுதல் படுத்தினான்..

வெறுப்பில் இருந்த எங்களுக்கு திடீரென திரையில் ஒரு காட்சியின் தொடக்கம் வரவும், சில ரசிகர்கள் கூச்சல் போட்டனர்.. அவர்கள் ஏற்கனவே இந்த படத்தை பார்த்துவிட்டு மறுபடியும் அக்காட்சியை பார்க்க வந்திருப்பார்கள் போலிருந்தது..!

அடுத்த சில நிமிடங்களில் படுக்கையறை காட்சி வந்தது..

சில நொடிகளே ஓடியது..

திரையரங்கில் பலத்த ஆரவாரம்.. விசில் சத்தங்கள் காதைப் பிளந்தது..

அக்காட்சி முடிந்தது..

திரையரங்கில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகிவிட்டன.. படத்தை சிபாரிசு செய்துவிட்டு, குற்றுயிராக இருந்த சக தோழன் "இப்போ என்னடா சொல்கிறீர்கள்..?" என எங்களை நோக்கிச் சிரித்தான்..

பால்ய வயதிலிருந்த நாங்கள், முதன் முதலில் அக்காட்சியை பார்த்தவுடன் ஏற்பட்ட இனம் புரியாத உணர்வில் திரையரங்கை விட்டு வெளியே வந்தோம்..நண்பன் தெம்பாக வீறு நடை போட்டான்..

நாற்பது வருடங்களுக்கு மேல் கடந்தாலும் இன்னமும் மூளையில், அவ்வுணர்வு அழியாமல் உள்ளது..!

படத்தை சிபாரிசு செய்து எங்களுக்கு 'வழிகாட்டிய' எம் அறைத் தோழன், இப்பொழுது பன்னாட்டு நிறுவனத்தில் இயந்திர பாகங்களுக்கான உற்பத்திப் பிரிவின்  பொறுப்பாளராக, தலைமைப் பொறியாளராக பணிபுரிந்து வருகிறான்..

சென்னை சென்றால், ஏ.வி.எம் ஸ்டுடியோவை கடந்து செல்லும்போது, இன்னமும் அக்கால காட்சி நினைவில் வந்து செல்லும்..! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kavi arunasalam said:

ஆனாலும் தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராமல், பார்த்த படங்களென்றாலும் படுக்கையில் இருந்து கொண்டே சூசை அவற்றை எல்லாம் ரிவியில் மீண்டும் மீண்டும்  சலிக்கமல் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறானாம்

எல்லா படங்களையும் பார்க்கவும் ஒரு பொருமை வேண்டும்...அதுவும் வயது போக போக அந்த பொருமை அதிகம் தேவைப்படும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன நூல் வடை ??? இதுவரை கேள்விப்படாததாக இருக்கே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதென்ன நூல் வடை ??? இதுவரை கேள்விப்படாததாக இருக்கே. 

 சுமேரியர்,

உளுந்து வடை (மெது வடை) செய்து வைத்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்து சாப்பிட்டுப் பாருங்கள்  தெரியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதென்ன நூல் வடை ??? இதுவரை கேள்விப்படாததாக இருக்கே. 

துவரங்கேட்டி தெரியாது..:grin:
முச்சக்கர வண்டி தெரியாது..:grin:
நூல்வடை தெரியாது....:grin:
படத்திலை இருக்கிறது என்னெண்டு தெரியுதோ?:cool:

%25E0%25AE%259A%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%2581.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஹாத்மா தியேட்டர் பக்க மோதகக் கடையின் தீவிர  மோதக தீவிர தின்பாளன் நான்...இ ளமப்பருவத்தின் இனிய மாலைபொழுதுகள்   அங்குதான்..சுகாதாரக் குறைபாடு மிகாதிகம் இருந்தும் மோதகம் கண்ணை மறைத்துவிடும்....சமாதானகாலத்தில் ஊர் போயும் ஆசைவிடாமல் அங்குபோனேன்.....அப்ப அது ஆமிக்கு சாப்படு சப்பாடு சப்பிளை பணணுமிடமாக பணியும் புரிந்தது....அதன் பிறகு மோதக ஆசை வாரவில்லை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

 சுமேரியர்,

உளுந்து வடை (மெது வடை) செய்து வைத்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்து சாப்பிட்டுப் பாருங்கள்  தெரியும்?

அட அதுவா இது. நானும் எதோ ஊர் வழக்கில் புதிய செய்முறை என எண்ணிவிட்டேன்.

5 hours ago, குமாரசாமி said:

துவரங்கேட்டி தெரியாது..:grin:
முச்சக்கர வண்டி தெரியாது..:grin:
நூல்வடை தெரியாது....:grin:
படத்திலை இருக்கிறது என்னெண்டு தெரியுதோ?:cool:

%25E0%25AE%259A%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%2581.jpg

ஏன் தெரியாததைத் தெரியாது எண்டு சொல்லுறது குற்றமோ ????:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.வி.எம் ஸ்டுடியோ வளாகத்தினுள்ளேயிருந்த படபிடிப்பு தளத்தின் ஒரு கட்டிடத்தையே எழுபதுகளின் இறுதியில்(1977-78?) ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்காக திருத்தியமைத்து, அதற்கான நுழைவு வாயிலையும் மாற்றி அமைத்தார்கள். சென்னையில் நிலத்தின் விலை மலைபோல் ஏற, தற்பொழுது ஏ.வி.எம். வளாகத்தின் பிரதான சாலையை அண்மித்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளும் வந்துவிட்டன.

avm-rajeshwari-cinema-hall-vadapalani-ch avm-studio-and-audio-vadapalani-chennai-

திரையரங்கு                                                                                                                                       ஸ்டுடியோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அவனை வைத்து சைக்கிள் ஓடும் போது அதுவும் நெல்லியடியில் இருந்து மாலிசந்திவரை உள்ள வயல்வெளியில் எதிர்க்காற்றில் எம்பி எம்பி பெடலை உழக்கும் போது

இந்த ரோட்டில நாங்கள் எப்பவுமே இலாவகமாகவும், வேகமாகவும், ஏன் இரண்டு கைகளையும் ஹாண்டில் பாரில் இருந்து எடுத்துவிட்டும் ஓடுவோமே?. எதிரில் அழகு சுந்தரிகள் வரும்போது  சண்டமாருத ஆடிக்காற்று எங்களை தென்றலாகத் தழுவிச் சென்றதாகத்தான் நினைவு!?

Link to comment
Share on other sites

உங்கள் ஞாபகங்கள் பலரது இளம் பராயத்தை நினைவு கொள்ள வைக்கிறது.தலைமுறைகள் கடந்து வாழும் கதைகள் இவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்காலங்களில் யாழ்நகரில் படம் ஒடியபின்பு தான் பருத்தித்துறை சென்றல், வல்வெட்டித்துறை யோகநாயகி, புலோலி காசில், நெல்லியடி மகாத்மா, லக்சுமி தியேட்டர், சுன்னாகம் நாகம்ஸ், தெல்லிப்பளை துர்க்கா, இணுவில் காலிங்கன், காங்கேசந்துறை இராஜநாயகி  போன்ற திரையரங்குகளில் திரைப்படங்கள் காண்பிக்கப்படும்.  இவ்வாறன திரையரங்குகளில் காண்பிக்கும் படங்களின் சில காட்சிகள் (நெகடீவ் ) முன்னைய திரையரங்கில் வெட்டப்பட்டிருக்கும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கந்தப்பு said:

அக்காலங்களில் யாழ்நகரில் படம் ஒடியபின்பு தான் பருத்தித்துறை சென்றல், வல்வெட்டித்துறை யோகநாயகி, புலோலி காசில், நெல்லியடி மகாத்மா, லக்சுமி தியேட்டர், சுன்னாகம் நாகம்ஸ், தெல்லிப்பளை துர்க்கா, இணுவில் காலிங்கன், காங்கேசந்துறை இராஜநாயகி  போன்ற திரையரங்குகளில் திரைப்படங்கள் காண்பிக்கப்படும்.  இவ்வாறன திரையரங்குகளில் காண்பிக்கும் படங்களின் சில காட்சிகள் (நெகடீவ் ) முன்னைய திரையரங்கில் வெட்டப்பட்டிருக்கும்.   

நீங்கள் மறந்து விட்டீர்கள் கந்தப்பு, மானிப்பாயிலும் ஒரு தியேட்டர் இருந்தது. பெயர் மறந்து விட்டேன். அதில் முதன் முதலாக ஓடிய படம் மறக்க முடியுமா அதாவது படத்தின் பெயரே "மறக்க முடியுமா"தான் தேவிகா நடித்தது. "காகித ஓடம் கடலலை மீது போவதுபோல மூவரும் போவோம்" என்னும் மறக்கமுடியாத பாடல் இடம்பெற்ற திரைப்படம் மறக்க முடியுமா.இதை எப்படி மறந்திர்கள் கந்தப்பு.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2018 at 6:19 PM, suvy said:

நீங்கள் மறந்து விட்டீர்கள் கந்தப்பு, மானிப்பாயிலும் ஒரு தியேட்டர் இருந்தது. பெயர் மறந்து விட்டேன். அதில் முதன் முதலாக ஓடிய படம் மறக்க முடியுமா அதாவது படத்தின் பெயரே "மறக்க முடியுமா"தான் தேவிகா நடித்தது. "காகித ஓடம் கடலலை மீது போவதுபோல மூவரும் போவோம்" என்னும் மறக்கமுடியாத பாடல் இடம்பெற்ற திரைப்படம் மறக்க முடியுமா.இதை எப்படி மறந்திர்கள் கந்தப்பு.....!  tw_blush:

மானிப்பாய் வெஸ்லி  , சங்கானை மணிமஹால் ,பண்டத்தரிப்பு செல்வா ,மூளாய் நியூ தீவாளி ,சாவகச்சேரி தேவேந்திரர் , வேல் சினிமா  ,   வல்வெட்டி ரஞ்சனாஸ்  , கோண்டாவில் லதா ,  
அச்சுவேலி, கிளிநோச்சியிலும் திரையரங்குகள் இருந்தன.
காங்கேசன் துறையில் யாழ் என்ற இன்னுமொரு திரையரங்கும் இருந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.