Jump to content

இலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் - ஒரு பார்வை


Recommended Posts

இலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் - ஒரு பார்வை

 

 
 

இலங்­கையில் கருக்­க­லைப்பை சட்­ட­மாக்­கு­வ­தற்கு எதி­ராக சில மத நிறு­வ­னங்கள் அண்­மையில் கூச்சல் மேற்­கொண்­டதைத் தொடர்ந்து நான் இந்த கட்­டு­ரையை எழு­து­கிறேன். நான் இவ்­வி­டயம் தொடர்­பாக உல­க­ளா­விய கருத்­துகள், நூல்­களைப் பற்றி அறிந்­துள்ளேன். அத்­துடன் சர்­வ­தேச நிபு­ணர்­க­ளு­டனும் இது குறித்து கலந்­தா­லோ­சித்­துள்ளேன். இங்கு நான் கருக்­க­லைப்பு குறித்த எனது அறிவைத், தக­வல்­களை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்­கிறேன். சில சர்­வ­தேச நிபு­ணர்கள் அயர்­லாந்து குடும்ப திட்­ட­மிடல் சங்­கத்­து­டனும் பிர­ஜைகள் பணி­ய­கத்­து­டனும் இணைந்து கருக்­க­லைப்பை அயர்­லாந்தில் தளர்த்­து­வது தொடர்­பாக பணி­யாற்றி வரு­கின்­றனர். 

expecting-women.jpg

அயர்­லாந்தில் கருக்­க­லைப்பு செய்­வது சட்­ட­வி­ரோ­த­மாகும். அயர்­லாந்து பிர­ஜைகள், பணி­யகம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரி­டையே நான் கருக்­க­லைப்பு தொடர்­பான அயர்­லாந்து சட்­டத்தில் திருத்தம் கொண்­டு­வர வேண்டும் என முயன்று வரு­கிறேன். 

அயர்­லாந்து பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்தின் பின்னர் (சட்­டப்­பி­ரிவு– 08) கருக்­க­லைப்பை சட்ட ரீதி­யாக மேற்­கொள்­வ­தற்கு 2018 இல் கருத்­துக்­க­ணிப்பு மேற்­கொள்­வது என தீர்­மா­னிக்­கப்­பட்­டது. சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்பை மேற்­கொள்­ளா­தி­ருக்க, அதா­வது கருக்­க­லைப்பை சட்ட ரீதி­யாக்க இலங்­கையில் இதுவே தக்க தருணம். இலங்­கையில் சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்பு தாய் மர­ணத்­திற்கு முக்­கிய கார­ண­மாக உள்­ளது. 

இந்த விடயம் தொடர்பில் பதி­ல­ளிக்­கக்­கூ­டிய முக்­கிய கேள்­வி­க­ளாக பின்­வ­ரு­வன அமை­கின்­றன; 

* சட்­ட­பூர்வ கருக்­க­லைப்பு சேவையை வழங்க சுகா­தா­ர­சேவை அடிப்­படைக் காரணம் என்ன? 

* எதிர்­கா­லத்தில் இலங்­கையில் கருக்­க­லைப்பு சட்டம் தொடர்பில் தொடர்­பு­பட்ட மனித உரி­மைகள் நிலை­வரம் என்ன? 

* இலங்­கையில் சிறந்த இனப்­பெ­ருக்க சுகா­தார சேவையை உறுதி செய்ய என்ன கொள்­கைகள் முன்­வைக்­கப்­பட வேண்டும்?

இக்­கேள்­வி­க­ளுக்கு சர்­வ­தேச மகளிர் நோயியல் மற்றும் மகப்­பேற்று மருத்­துவ மன்­றத்தின் எப்.ஐ.ஜி.ஓ தீர்­மா­னத்தின் வழி­நின்று பதில் பெற­மு­டியும். 

* மருத்­துவ கார­ணங்­க­ளுக்­காக (வாழ்க்­கைக்கும் சுகா­தா­ரத்­திற்கும் ஆபத்­தான  கட்­டத்தில் கருக்­க­லைப்­பா­னது சிறந்த இனப்­பெ­ருக்க சுகா­தார சேவை­யாக பொது­வாக அனைத்து நாடு­க­ளாலும் கரு­தப்­ப­டு­கின்­றது. 

மருத்­துவ கார­ணங்­க­ளுக்கு அப்­பாற்­பட்ட கருக்­க­லைப்பு தொடர்­பாக எப்.ஐ.ஜி.ஓ. என்ன கரு­து­கி­றது என்றால் பெண்­களின் உரி­மைகள் தொடர்­பாக பாது­காப்­பற்ற கருக்­க­லைப்பை தவிர்த்து பாது­காப்­பான கருக்­க­லைப்பை நியா­யப்­ப­டுத்தல். 

பல பொது­மக்கள், வைத்­தி­யர்கள் உட்­பட கரு­து­வது என்­ன­வென்றால் இயன்­ற­வரை கருக்­க­லைப்பை தவிர்ப்­பது  என்­ப­தாகும். 

இக்­கு­ழுவின் தீர்­மா­ன­மாகப் பெண்­க­ளுக்கு  உரிய வழி­காட்­டு­தலின் கீழ் சிறந்த முறையில் கருக்­க­லைப்பு மேற்­கொள்ள அவர்­க­ளுக்கு உரிமை உள்­ளது என்­ப­தாகும். 

எம்.ஐ.ஜி.ஒ. மற்றும் உலக சுகா­தார ஸ்தாபனம் போன்ற சர்­வ­தேச அமைப்­புகள் ஏன் பாது­காப்­பான கருக்­க­லைப்பை சிபார்சு செய்­கின்­றன? 

பாது­காப்­பற்ற கருக்­க­லைப்­பா­னது வலி­யையும் மர­ணத்­தையும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது. 

கருக்­க­லைப்பு குற்­ற­மா­னது. மரண வீதத்­தையே அதி­க­ரிக்கும்.  குற்­ற­மற்ற கருக்­க­லைப்பு மரண வீதத்தை நிச்­சயம் குறைக்கும்.  குற்­ற­மற்ற கருக்­க­லைப்பு, கருக்­க­லைப்பு வீதத்தை அதி­க­ரிக்­காது. 

உல­க­ளா­விய ரீதியில் ஆண்­டு­தோறும் பாது­காப்­பற்ற கருக்­க­லைப்­பிற்கு 50,47,540 பெண்கள் உட்­ப­டு­கி­றார்கள்.  கருக்­க­லைப்பை குற்­ற­மற்­ற­தாக்­குதல் தாய் மரண வீதத்தை நிச்­சயம் குறைக்கும். தென் ஆபி­ரிக்க பொது மருத்­து­வ­ம­னை­களில் 1994 சட்ட மறு­சீ­ர­மைப்­பிற்கு முன்னர் ஆண்­டு­தோறும் பாது­காப்­பற்ற கருக்­க­லைப்பு மூலம் 425 மர­ணங்கள் ஏற்­பட்­டன. கருக்­க­லைப்பை அங்கு சட்­ட­பூர்­வ­மாக்­கியப் பின்னர் ஆண்­டுக்கு 36 மர­ணங்கள் என குறைந்­தது. 1975 இல் பிரான்­ஸிலும் இத்­தா­லி­யிலும் கருக்­க­லைப்பை சட்­ட­பூர்­வ­மாக்­கிய பின்னர் மரண வீதம் 20 இல் இருந்து 10 வீதத்­திற்கு குறைந்­தது. 

உட­னடி பொது சுகா­தாரம் 

“பல நாடு­களில் கருக்­க­லைப்பும் உயர் தாய், சேய் மரண வீதமும் பொது சுகா­தார பிரச்­சி­னை­யாக உள்­ளது” உலக சுகா­தார சபை தீர்­மானம் 20:41 ,+ 23 மே 1967 பாது­காப்­பற்ற கருக்­க­லைப்பு  பெண்­க­ளுக்கு பாரி­ய­தொரு பொது சுகா­தார  பிரச்­சி­னை­யாக உள்­ளது. இது தொடர்­பாக அர­சுகள், தொண்டு நிறு­வ­னங்கள் என்­பன சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்பை குறைக்க / கைவிட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மனித உரி­மைகள், இனப்­பெ­ருக்க உரி­மைகள் நீண்ட தொலை­நோக்கு உடை­ய­வை­யா­யினும் பேணப்­பட வேண்டும். 

உல­க­ளா­விய மனித உரி­மைகள் தீர்­மானம்(1948) அதி உச்­ச­பட்ச சுகா­தாரம் என்­பது அடிப்­படை உரி­மை­களில் ஒன்று ஆகும்.  சுகா­தாரம் என்­பது இன, மத, அர­சியல் நம்­பிக்கை, பொரு­ளா­தார, சமூக நிலைப்­பா­டு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு பேணப்­பட வேண்டும். 

உலக சுகா­தார ஸ்தாபனம் (Who) அர­சி­ய­ல­மைப்பு 1948 உள, உடல் மற்றும் சமூக சிறப்­பான நிலையே சுகா­தாரம் ஆகும். இது நோயை தடுத்தல் என்­பது மட்டும் ஆகாது. 

மனித உரி­மைகள் தொடர்பில் ஐ.நா. சர்­வ­தேச மா­நாடு டெஹரான் (1968) இனப்­பெ­ருக்க உரிமை என்­பது மனித உரி­மை­களில் ஒரு பகு­தி­யாகும்.  மனித உரி­மைகள் என்ற வகையில் பாது­காப்­பான கருக்­க­லைப்பு உரிமை பின்­வரும் தலைப்­பு­களில் கரு­தப்­பட வேண்டும். 

வாழ்­வ­தற்­கான உரிமை, சுகா­தா­ரத்­திற்­கான உரிமை, பாகு­பா­டற்ற சமத்­து­வத்­திற்­கான உரிமை, கொடூ­ர­மான, மனி­தா­பி­மா­ன­மற்ற தரக்­கு­றை­வான பேணல் அற்ற தன்­மைக்­கான உரிமை, சுதந்­திரம் தனி­நபர் பாது­காப்பு மற்றும்  தனித்­தி­ருந்தல் என்­ப­தற்­கான உரிமை, தகவல் மற்றும் கல்­விக்­கான உரிமை.  

பாது­காப்­பான கருக்­க­லைப்பு பற்றி புரிந்­து­ணர்­த­லுக்கு எது அவ­சி­ய­மா­கி­றது, இது கருக்­க­லைப்பை தூண்­டு­வ­தாக அமை­யக்­கூ­டாது, சிந்­தாந்த கோட்­பாடை மதிப்­ப­தாக இருக்க வேண்டும், பெண் கரு­வுறும் கர்ப்ப காலத்தை வரை­ய­றுத்து தீர்­மா­னித்தல், கருக்­க­லைப்­புக்­கான தேவையை  வலி­யு­றுத்தும் நிபந்­த­னைகள், கருக்­க­லைப்பை குறைப்­ப­தற்­கான சிறந்த ஆளு­மை­யுடன் தலை­யீடு செய்­தலை தூண்­டுதல், பாது­காப்­பான கருக்­க­லைப்­புக்கு திட்­ட­மி­டுதல் மற்றும் முகாமை செய்தல், அனு­பவம் உள்ள திற­மை­யா­ன­வர்­களின் சேவை, சான்­றுள்ள தரா­தரம் மற்றும் வழி­காட்­டல்கள், கருக்­க­லைப்பின் வகைகள் யாரால் எங்கு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்ற தக­வல், கருக்­க­லைப்பு முறைகள், சுகா­தார சேவை நிபு­ணர்கள் மற்றும் வச­திகள் தொடர்பில் சான்று மற்றும் அனு­மதி, தகுந்த நபரின் (வைத்­தி­யரின்) அணு­கு­முறை 

இக்­கட்­டுரை எமது நாட்டில் கருக்­க­லைப்பு பற்றி எவ்­வாறு உத­வக்­கூடும்? 

பிறப்பு, கருக்­க­லைப்பு, இறப்பு என்­பன மனித இனம் தோன்­றிய காலத்தில் இருந்து தொன்­று­தொட்டு நிலவி வரு­கி­றது. இலங்­கையில் தாய் மரண வீதத்தில் மூன்றாம் இடத்தில் கருக்­க­லைப்பு காணப்­ப­டு­கி­றது. இலங்­கையில் பிரித்தானியர் காலத்தில் 1885 இல் கருக்­க­லைப்பு குற்­ற­மாக இருந்து வரு­கி­றது. நூற்­றுக்கு நூறு வீதம் பாது­காப்­பான மகப்­பேறு என்று எந்­த­வொரு  நாட்­டிலும் இல்லை. தாய் மரணம் என்­பது இடம்­பெ­றவே செய்யும். ஆனால் குறைக்க முடியும். இங்கு தாய், சேய் நல மருத்­து­வர்கள் 320 பேர் உள்­ளனர். உங்­களின் திரு­ம­ண­மா­காத ஒரே 16 வயது மகள் கர்ப்­ப­முற்றால் நீங்கள் என்ன செய்­வீர்கள்? பல பெற்றோர் இது தொடர்­பான பிரச்­சி­னை­யுடன் என்னை அணு­கி­யுள்­ளனர். திரு­மணம் ஆகாமல் கர்ப்­ப­மான பெண்­களை பரா­ம­ரிக்கும் நிலை­யத்­திற்கு உங்கள் மகளை அனுப்பி பிள்ளை பெற்­றாலும் பிள்­ளையை தத்­துக்­கொ­டுத்­து­விட்டு வீடு திரும்­பவும் என கூற­லாமா அல்­லது கருக்­க­லைப்பு சட்ட ரீதி­யான சிங்­கப்பூர் போன்ற நாடு­க­ளுக்கு அனுப்­பவும் என கூற­லாமா? கருக்­க­லைப்பின் ஒரு வாரத்­திற்கு பின்னர் அப்பெண் பாட­சாலை செல்ல முடியும். மகளின் எதிர்­கா­லமே இங்கு முக்­கியம். 

இத்­தனை வருடகாலமாக கருக்கலைப்பு பற்றிய  எந்தவொரு  கூக்குரலும் கூச்சலும் இடம் பெறவி ல்லை. கருக்க லை ப்பை அண்மையில் சட்டபூர்வமாக்க எத்தணித்தபோதே கூச்சல் போடுகின்றனர். கருக்கலைப்பால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாத ஐக்கிய இராச்சியம் போன்று ஏன் இலங்கை மாறக்கூடாது? கருக்கலைப்பை சட்ட ரீதியாக மாற்றாவிட்டால் சட்டவிரோத கருக்கலைப்பு வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். நானே வயது முதிர்ந்த மகப்பேற்று மருத்துவர் ஆகும். சட்டவிரோத கருக்கலைப்பில் இரத்தப்பெருக்கிற்கு உட்பட்டு பல பெண்கள் மரணிப்பதைப் பார்த்துள்ளேன்.  ஒருவர் சட்டபூர்வ கருக்கலைப்பிற்கு ஆதரவு வழங்கா

விட்டால் அவர் மறைமுகமாக சட்டவிரோத கருக்கலைப்பிற்கு ஆதரவு வழங்குகிறார் என்ற பேராசிரியர் எஸ் அருட்குமரனின் வசனத்துடன் இதனை நிறைவு செய்கிறேன்.

(பேராசிரியர் வில்பிரட் பெரேரா)

http://www.virakesari.lk/article/31904

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.