Jump to content

இலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் - ஒரு பார்வை


Recommended Posts

இலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் - ஒரு பார்வை

 

 
 

இலங்­கையில் கருக்­க­லைப்பை சட்­ட­மாக்­கு­வ­தற்கு எதி­ராக சில மத நிறு­வ­னங்கள் அண்­மையில் கூச்சல் மேற்­கொண்­டதைத் தொடர்ந்து நான் இந்த கட்­டு­ரையை எழு­து­கிறேன். நான் இவ்­வி­டயம் தொடர்­பாக உல­க­ளா­விய கருத்­துகள், நூல்­களைப் பற்றி அறிந்­துள்ளேன். அத்­துடன் சர்­வ­தேச நிபு­ணர்­க­ளு­டனும் இது குறித்து கலந்­தா­லோ­சித்­துள்ளேன். இங்கு நான் கருக்­க­லைப்பு குறித்த எனது அறிவைத், தக­வல்­களை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்­கிறேன். சில சர்­வ­தேச நிபு­ணர்கள் அயர்­லாந்து குடும்ப திட்­ட­மிடல் சங்­கத்­து­டனும் பிர­ஜைகள் பணி­ய­கத்­து­டனும் இணைந்து கருக்­க­லைப்பை அயர்­லாந்தில் தளர்த்­து­வது தொடர்­பாக பணி­யாற்றி வரு­கின்­றனர். 

expecting-women.jpg

அயர்­லாந்தில் கருக்­க­லைப்பு செய்­வது சட்­ட­வி­ரோ­த­மாகும். அயர்­லாந்து பிர­ஜைகள், பணி­யகம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரி­டையே நான் கருக்­க­லைப்பு தொடர்­பான அயர்­லாந்து சட்­டத்தில் திருத்தம் கொண்­டு­வர வேண்டும் என முயன்று வரு­கிறேன். 

அயர்­லாந்து பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்தின் பின்னர் (சட்­டப்­பி­ரிவு– 08) கருக்­க­லைப்பை சட்ட ரீதி­யாக மேற்­கொள்­வ­தற்கு 2018 இல் கருத்­துக்­க­ணிப்பு மேற்­கொள்­வது என தீர்­மா­னிக்­கப்­பட்­டது. சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்பை மேற்­கொள்­ளா­தி­ருக்க, அதா­வது கருக்­க­லைப்பை சட்ட ரீதி­யாக்க இலங்­கையில் இதுவே தக்க தருணம். இலங்­கையில் சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்பு தாய் மர­ணத்­திற்கு முக்­கிய கார­ண­மாக உள்­ளது. 

இந்த விடயம் தொடர்பில் பதி­ல­ளிக்­கக்­கூ­டிய முக்­கிய கேள்­வி­க­ளாக பின்­வ­ரு­வன அமை­கின்­றன; 

* சட்­ட­பூர்வ கருக்­க­லைப்பு சேவையை வழங்க சுகா­தா­ர­சேவை அடிப்­படைக் காரணம் என்ன? 

* எதிர்­கா­லத்தில் இலங்­கையில் கருக்­க­லைப்பு சட்டம் தொடர்பில் தொடர்­பு­பட்ட மனித உரி­மைகள் நிலை­வரம் என்ன? 

* இலங்­கையில் சிறந்த இனப்­பெ­ருக்க சுகா­தார சேவையை உறுதி செய்ய என்ன கொள்­கைகள் முன்­வைக்­கப்­பட வேண்டும்?

இக்­கேள்­வி­க­ளுக்கு சர்­வ­தேச மகளிர் நோயியல் மற்றும் மகப்­பேற்று மருத்­துவ மன்­றத்தின் எப்.ஐ.ஜி.ஓ தீர்­மா­னத்தின் வழி­நின்று பதில் பெற­மு­டியும். 

* மருத்­துவ கார­ணங்­க­ளுக்­காக (வாழ்க்­கைக்கும் சுகா­தா­ரத்­திற்கும் ஆபத்­தான  கட்­டத்தில் கருக்­க­லைப்­பா­னது சிறந்த இனப்­பெ­ருக்க சுகா­தார சேவை­யாக பொது­வாக அனைத்து நாடு­க­ளாலும் கரு­தப்­ப­டு­கின்­றது. 

மருத்­துவ கார­ணங்­க­ளுக்கு அப்­பாற்­பட்ட கருக்­க­லைப்பு தொடர்­பாக எப்.ஐ.ஜி.ஓ. என்ன கரு­து­கி­றது என்றால் பெண்­களின் உரி­மைகள் தொடர்­பாக பாது­காப்­பற்ற கருக்­க­லைப்பை தவிர்த்து பாது­காப்­பான கருக்­க­லைப்பை நியா­யப்­ப­டுத்தல். 

பல பொது­மக்கள், வைத்­தி­யர்கள் உட்­பட கரு­து­வது என்­ன­வென்றால் இயன்­ற­வரை கருக்­க­லைப்பை தவிர்ப்­பது  என்­ப­தாகும். 

இக்­கு­ழுவின் தீர்­மா­ன­மாகப் பெண்­க­ளுக்கு  உரிய வழி­காட்­டு­தலின் கீழ் சிறந்த முறையில் கருக்­க­லைப்பு மேற்­கொள்ள அவர்­க­ளுக்கு உரிமை உள்­ளது என்­ப­தாகும். 

எம்.ஐ.ஜி.ஒ. மற்றும் உலக சுகா­தார ஸ்தாபனம் போன்ற சர்­வ­தேச அமைப்­புகள் ஏன் பாது­காப்­பான கருக்­க­லைப்பை சிபார்சு செய்­கின்­றன? 

பாது­காப்­பற்ற கருக்­க­லைப்­பா­னது வலி­யையும் மர­ணத்­தையும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது. 

கருக்­க­லைப்பு குற்­ற­மா­னது. மரண வீதத்­தையே அதி­க­ரிக்கும்.  குற்­ற­மற்ற கருக்­க­லைப்பு மரண வீதத்தை நிச்­சயம் குறைக்கும்.  குற்­ற­மற்ற கருக்­க­லைப்பு, கருக்­க­லைப்பு வீதத்தை அதி­க­ரிக்­காது. 

உல­க­ளா­விய ரீதியில் ஆண்­டு­தோறும் பாது­காப்­பற்ற கருக்­க­லைப்­பிற்கு 50,47,540 பெண்கள் உட்­ப­டு­கி­றார்கள்.  கருக்­க­லைப்பை குற்­ற­மற்­ற­தாக்­குதல் தாய் மரண வீதத்தை நிச்­சயம் குறைக்கும். தென் ஆபி­ரிக்க பொது மருத்­து­வ­ம­னை­களில் 1994 சட்ட மறு­சீ­ர­மைப்­பிற்கு முன்னர் ஆண்­டு­தோறும் பாது­காப்­பற்ற கருக்­க­லைப்பு மூலம் 425 மர­ணங்கள் ஏற்­பட்­டன. கருக்­க­லைப்பை அங்கு சட்­ட­பூர்­வ­மாக்­கியப் பின்னர் ஆண்­டுக்கு 36 மர­ணங்கள் என குறைந்­தது. 1975 இல் பிரான்­ஸிலும் இத்­தா­லி­யிலும் கருக்­க­லைப்பை சட்­ட­பூர்­வ­மாக்­கிய பின்னர் மரண வீதம் 20 இல் இருந்து 10 வீதத்­திற்கு குறைந்­தது. 

உட­னடி பொது சுகா­தாரம் 

“பல நாடு­களில் கருக்­க­லைப்பும் உயர் தாய், சேய் மரண வீதமும் பொது சுகா­தார பிரச்­சி­னை­யாக உள்­ளது” உலக சுகா­தார சபை தீர்­மானம் 20:41 ,+ 23 மே 1967 பாது­காப்­பற்ற கருக்­க­லைப்பு  பெண்­க­ளுக்கு பாரி­ய­தொரு பொது சுகா­தார  பிரச்­சி­னை­யாக உள்­ளது. இது தொடர்­பாக அர­சுகள், தொண்டு நிறு­வ­னங்கள் என்­பன சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்பை குறைக்க / கைவிட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மனித உரி­மைகள், இனப்­பெ­ருக்க உரி­மைகள் நீண்ட தொலை­நோக்கு உடை­ய­வை­யா­யினும் பேணப்­பட வேண்டும். 

உல­க­ளா­விய மனித உரி­மைகள் தீர்­மானம்(1948) அதி உச்­ச­பட்ச சுகா­தாரம் என்­பது அடிப்­படை உரி­மை­களில் ஒன்று ஆகும்.  சுகா­தாரம் என்­பது இன, மத, அர­சியல் நம்­பிக்கை, பொரு­ளா­தார, சமூக நிலைப்­பா­டு­க­ளுக்கு அப்­பாற்­பட்டு பேணப்­பட வேண்டும். 

உலக சுகா­தார ஸ்தாபனம் (Who) அர­சி­ய­ல­மைப்பு 1948 உள, உடல் மற்றும் சமூக சிறப்­பான நிலையே சுகா­தாரம் ஆகும். இது நோயை தடுத்தல் என்­பது மட்டும் ஆகாது. 

மனித உரி­மைகள் தொடர்பில் ஐ.நா. சர்­வ­தேச மா­நாடு டெஹரான் (1968) இனப்­பெ­ருக்க உரிமை என்­பது மனித உரி­மை­களில் ஒரு பகு­தி­யாகும்.  மனித உரி­மைகள் என்ற வகையில் பாது­காப்­பான கருக்­க­லைப்பு உரிமை பின்­வரும் தலைப்­பு­களில் கரு­தப்­பட வேண்டும். 

வாழ்­வ­தற்­கான உரிமை, சுகா­தா­ரத்­திற்­கான உரிமை, பாகு­பா­டற்ற சமத்­து­வத்­திற்­கான உரிமை, கொடூ­ர­மான, மனி­தா­பி­மா­ன­மற்ற தரக்­கு­றை­வான பேணல் அற்ற தன்­மைக்­கான உரிமை, சுதந்­திரம் தனி­நபர் பாது­காப்பு மற்றும்  தனித்­தி­ருந்தல் என்­ப­தற்­கான உரிமை, தகவல் மற்றும் கல்­விக்­கான உரிமை.  

பாது­காப்­பான கருக்­க­லைப்பு பற்றி புரிந்­து­ணர்­த­லுக்கு எது அவ­சி­ய­மா­கி­றது, இது கருக்­க­லைப்பை தூண்­டு­வ­தாக அமை­யக்­கூ­டாது, சிந்­தாந்த கோட்­பாடை மதிப்­ப­தாக இருக்க வேண்டும், பெண் கரு­வுறும் கர்ப்ப காலத்தை வரை­ய­றுத்து தீர்­மா­னித்தல், கருக்­க­லைப்­புக்­கான தேவையை  வலி­யு­றுத்தும் நிபந்­த­னைகள், கருக்­க­லைப்பை குறைப்­ப­தற்­கான சிறந்த ஆளு­மை­யுடன் தலை­யீடு செய்­தலை தூண்­டுதல், பாது­காப்­பான கருக்­க­லைப்­புக்கு திட்­ட­மி­டுதல் மற்றும் முகாமை செய்தல், அனு­பவம் உள்ள திற­மை­யா­ன­வர்­களின் சேவை, சான்­றுள்ள தரா­தரம் மற்றும் வழி­காட்­டல்கள், கருக்­க­லைப்பின் வகைகள் யாரால் எங்கு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்ற தக­வல், கருக்­க­லைப்பு முறைகள், சுகா­தார சேவை நிபு­ணர்கள் மற்றும் வச­திகள் தொடர்பில் சான்று மற்றும் அனு­மதி, தகுந்த நபரின் (வைத்­தி­யரின்) அணு­கு­முறை 

இக்­கட்­டுரை எமது நாட்டில் கருக்­க­லைப்பு பற்றி எவ்­வாறு உத­வக்­கூடும்? 

பிறப்பு, கருக்­க­லைப்பு, இறப்பு என்­பன மனித இனம் தோன்­றிய காலத்தில் இருந்து தொன்­று­தொட்டு நிலவி வரு­கி­றது. இலங்­கையில் தாய் மரண வீதத்தில் மூன்றாம் இடத்தில் கருக்­க­லைப்பு காணப்­ப­டு­கி­றது. இலங்­கையில் பிரித்தானியர் காலத்தில் 1885 இல் கருக்­க­லைப்பு குற்­ற­மாக இருந்து வரு­கி­றது. நூற்­றுக்கு நூறு வீதம் பாது­காப்­பான மகப்­பேறு என்று எந்­த­வொரு  நாட்­டிலும் இல்லை. தாய் மரணம் என்­பது இடம்­பெ­றவே செய்யும். ஆனால் குறைக்க முடியும். இங்கு தாய், சேய் நல மருத்­து­வர்கள் 320 பேர் உள்­ளனர். உங்­களின் திரு­ம­ண­மா­காத ஒரே 16 வயது மகள் கர்ப்­ப­முற்றால் நீங்கள் என்ன செய்­வீர்கள்? பல பெற்றோர் இது தொடர்­பான பிரச்­சி­னை­யுடன் என்னை அணு­கி­யுள்­ளனர். திரு­மணம் ஆகாமல் கர்ப்­ப­மான பெண்­களை பரா­ம­ரிக்கும் நிலை­யத்­திற்கு உங்கள் மகளை அனுப்பி பிள்ளை பெற்­றாலும் பிள்­ளையை தத்­துக்­கொ­டுத்­து­விட்டு வீடு திரும்­பவும் என கூற­லாமா அல்­லது கருக்­க­லைப்பு சட்ட ரீதி­யான சிங்­கப்பூர் போன்ற நாடு­க­ளுக்கு அனுப்­பவும் என கூற­லாமா? கருக்­க­லைப்பின் ஒரு வாரத்­திற்கு பின்னர் அப்பெண் பாட­சாலை செல்ல முடியும். மகளின் எதிர்­கா­லமே இங்கு முக்­கியம். 

இத்­தனை வருடகாலமாக கருக்கலைப்பு பற்றிய  எந்தவொரு  கூக்குரலும் கூச்சலும் இடம் பெறவி ல்லை. கருக்க லை ப்பை அண்மையில் சட்டபூர்வமாக்க எத்தணித்தபோதே கூச்சல் போடுகின்றனர். கருக்கலைப்பால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாத ஐக்கிய இராச்சியம் போன்று ஏன் இலங்கை மாறக்கூடாது? கருக்கலைப்பை சட்ட ரீதியாக மாற்றாவிட்டால் சட்டவிரோத கருக்கலைப்பு வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். நானே வயது முதிர்ந்த மகப்பேற்று மருத்துவர் ஆகும். சட்டவிரோத கருக்கலைப்பில் இரத்தப்பெருக்கிற்கு உட்பட்டு பல பெண்கள் மரணிப்பதைப் பார்த்துள்ளேன்.  ஒருவர் சட்டபூர்வ கருக்கலைப்பிற்கு ஆதரவு வழங்கா

விட்டால் அவர் மறைமுகமாக சட்டவிரோத கருக்கலைப்பிற்கு ஆதரவு வழங்குகிறார் என்ற பேராசிரியர் எஸ் அருட்குமரனின் வசனத்துடன் இதனை நிறைவு செய்கிறேன்.

(பேராசிரியர் வில்பிரட் பெரேரா)

http://www.virakesari.lk/article/31904

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.