Jump to content

ஓட் எமக்கு தேவை தானா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நானும் போன வருடம் 13 கிழமைகளுக்கு தினமும் 45 நிமிட வேகநடையுடன் அளவான உணவுடனும்  13 கிலோ குறைந்திருந்தேன். டிசம்பர் பார்ட்டி சீசனோடு கொஞ்சம் எடை கூடி விட்டதால் மீண்டும் வேகநடையை ஆரம்பித்துள்ளேன்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஊர்களிலெல்லாம்  ரெடிமேற் உணவுகளை சாப்பிடுபவர்களை சோம்பேறிக்கூட்டமென்று சொல்வார்கள். :grin:

(உதாரணத்திற்கு பாண்)

அவர்கள் சொன்னது போல்  கண்ட கண்ட சாப்பாடுகளை சாப்பிடுவதால் நோய்களுக்கும் பஞ்சமில்லை.


எம்மவர்கள் நடைப்பயிற்சியும் செய்யவில்லை...ஜிம்முக்கும் போகவில்லை.90 வயதிலும் நோய் நொடியின்றி தம் கடமைகளை செய்து நெஞ்சை நிமிர்த்தி நடந்தார்கள்.

தொப்பையை பற்றி கவலை கொள்ளவுமில்லை.

ஆனால் இன்றோ 16 வயது ஆண் பெண்ணினரும் உடற்பயிற்சி நிலையத்தில் குடிகொண்டுள்ளனர். ஏன்?????:cool:

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

 

ஆனால் இன்றோ 16 வயது ஆண் பெண்ணினரும் உடற்பயிற்சி நிலையத்தில் குடிகொண்டுள்ளனர். ஏன்?????:cool:

துரித உணவின்மீது அதிக விருப்பம், கார்போனேட் குளிர்பாணங்களின் (பெப்ஸி, கோக் ) அதிக பாவனை ஒழுங்கற்ற உணவு பழக்கவழக்கம் மற்றும் உடலை வருத்தி வேலை செய்யாமை என்பனவே வெயிட் கூட பிரதான காரணமாக இருக்குமென நான் நினைக்கிறன். 

Link to comment
Share on other sites

17 hours ago, குமாரசாமி said:

எமது ஊர்களிலெல்லாம்  ரெடிமேற் உணவுகளை சாப்பிடுபவர்களை சோம்பேறிக்கூட்டமென்று சொல்வார்கள். :grin:

(உதாரணத்திற்கு பாண்)

அவர்கள் சொன்னது போல்  கண்ட கண்ட சாப்பாடுகளை சாப்பிடுவதால் நோய்களுக்கும் பஞ்சமில்லை.


எம்மவர்கள் நடைப்பயிற்சியும் செய்யவில்லை...ஜிம்முக்கும் போகவில்லை.90 வயதிலும் நோய் நொடியின்றி தம் கடமைகளை செய்து நெஞ்சை நிமிர்த்தி நடந்தார்கள்.

தொப்பையை பற்றி கவலை கொள்ளவுமில்லை.

ஆனால் இன்றோ 16 வயது ஆண் பெண்ணினரும் உடற்பயிற்சி நிலையத்தில் குடிகொண்டுள்ளனர். ஏன்?????:cool:

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால், பிரச்சினை என்னவெனில் எமது முன்னோர்கள் (இனம் மொழி எல்லாம் கடந்து அனைவரது முன்னோர்களும்) உண்ட உணவுகள் பார்வைக்கு அவைபோல் இன்றைக்கு உள்ளபோதும், எமது முன்னோர்கள் உண்ட ஒரு உணவைத் தன்னும் இன்று எம்மால் கண்டு கொள்ள முடியாது. இயற்கை விவசாயம் ஏறத்தாளச் சாத்தியமில்லை என்றாகிவிட்டது. நீங்கள் எந்த மருந்தும் அடிக்காது எந்தச் செயற்கை உரமும் போடாது முதுகு முறியப் புல்லுப் புடுங்கி மரம் வளர்;த்தாலும், சூழல் உங்கள் கையில் இல்லை.

பக்கத்துக் கமக்காரன் இத்தனை ஏக்கர் தள்ளியிருந்தால் போதும் இயற்கை விவசயாயம் செய்துவிடலாம் என்பது மாறி, இயற்கை விதை சேர்த்துவைத்தால் போதும் என்பது மாறி, காற்றுத் தொட்டு நிலக்கீழ் அடி நீர் தொட்டு எம்மால் இன்றைக்கு ஒரு வட்டத்தைக் கட்டமுடியாதுள்ளது. பறந்து வாற பூச்சி மகரந்தத்தை மட்டும் பரப்பாமல் மருந்தையும் பரப்புகிறது. எல்லாத்துக்கும் மேலால், இந்தக் குட்டிப் புள்ளி பூமிக்குள் மட்டும் அல்லாது, மனிதன் அண்ட வெளியிலும் பல்ட்டி அடிக்கத் தொடங்கிவிட்டான். ஆக சூழல் என்பதை பக்கத்துக் கமக்காரன் எத்தனை ஏக்கர் தள்ளியுள்ளான் என்பதை வைத்து இனிமேலைக்கு ஆராய்வதில் பலனில்லை.


ஒரு மனிதன் கழிவே அகற்றத் தேவையற்று, அவனிற்கு ஒரு நாளைக்குத் தேவையான சத்துக்களையும் சக்தியினையும் துல்லியமாக அளந்து குளிகைக்குள் அடக்கி விஞ்ஞானம் என்றோ கடந்து போய்வி;;ட்டது. இப்படியான குளிகைகளை மட்டும் சாப்பிட்டால் உயிர் வாழலாம். ஆனால் மனிதன் ஐம்புலன்களாலும் உண்பவன். இங்கு தான் நிழலி இன்னுமொரு திரியில் கேட்ட மனிதனிற்குத் தேடல் அவசியம் தானா என்பது வருகிறது. நாயிற்குக் கிபிள் குடுத்தால் உண்கிறது. ஒரு நாளைக்கு இறைச்சியோ முட்டையோ ஈரலோ கொடுத்தால் அடுத்தநாள் கிபிளைப் பார்த்து முரண்டு பிடிக்கிறது. மனிதனின் முரண்டுபிடிப்பு நாயோடு ஒப்பிடுகையில் பலமடங்கு அதிகம். எனவே குளிசை உண்டு வாழ்வது இப்போதைக்கு விண்வெளிக்கு மட்டும் என்று மட்டும் இருக்கலாம்.


இந்தப் பிரச்சினை கைகடந்து சென்று விட்டது. மனிதன் மட்டுமே மனிதனிற்கு முரணான அனைத்தையும் உருவாக்கும் ஒற்றைச் சக்த்தி. இதை நினைத்து மன உழைச்சல் அடைவதில் எந்தப் பலனுமில்லை. எமது வாழ்வு மிகவிரைவில் 200 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அந்த 200 ஆண்டுகள் நம் மூதாதை வாழ்ந்த வாழ்வாக இருக்காது. சந்தையினை எம்மால் வெல்ல முடியாது. ஆனால் நாம் செய்யக் கூடியது என்னவென்றால், எது முடிந்தமுடிபான உண்மை என்பதை என்னால் அறியமுடியாது. எது நன்மை எது தீமை என்பதை என்னால் முடிந்தமுடிபாக அறிவித்து விடமுடியாது. கொஞ்சம் உள்ளுணர்வு, கொஞ்சம் அறிவு, கொஞ்சம் ஆசாபாசங்கள், கொஞ்சம் எனது உடலின் பிரதிபலிப்புக்களை உற்றுநொக்கல் என்பதாக மாறிக்கொண்டிருக்கும் உலகில் நான் இசைவாகிக் கொள்ள முயல்கிறேன் என்ற ஒரு மனநிலை மட்டுமே இன்றைக்குச் சாத்தியம்.


இன்றைக்கு உள்ள உலகு தான் உன்னதம் இதைத் தக்கவைத்துவிடவேண்டும் என்று நினைப்பது அசாத்தியம். 19ம் நூற்றாண்டில் பென்ஸ் வந்ததை விட்டுவிடுவோம் 1908ம் ஆண்டில் போர்ட் வந்த போது உலகத்தில் பலர் பயந்திருப்பார்கள். தம் மூதாதை உலகு அழிந்ததாய் உணர்ந்திருப்பர். இன்றைக்கு நாம் நேற்றையினை நினைத்து வருந்துவதும் அவர்கள் அன்றைக்கு வருந்தியதிலும் பெரு வித்தியாசமில்லை. ஆனால் அவர்களது நேற்றைக்கும் எமது நேற்றைக்கும் பாரிய வேறுபாடு. நாளைகள் முன்னர் எமது கற்பனைக்குச் சாத்தியப்பட்டிரா வேகத்தில் வந்து கொண்டிருக்கின்றன.  இந்நிலையில் எமக்கு இருக்கின்ற ஒரே தெரிவு, தெரிவுகள் இன்று வாறதை ரசித்திருத்தல் மட்டுமே. இதையிட்டு நாம் மன உழைச்சலோ வருத்தமோ அடையத் தேவையில்லை. காரணம் முடிந்த முடிபான விருப்பு வெறுப்புக்கள் அகலும் போது மனம் விரிவதோடு வருத்தத்திற்கான அடிப்படை மறைந்துபோகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

ஓட்ஸ் சாப்பிடலாமா,வேண்டாமா கெதியாய் ஒரு முடிவிற்கு வாங்கப்பா 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎2‎/‎2018 at 8:22 AM, கிருபன் said:

நானும் போன வருடம் 13 கிழமைகளுக்கு தினமும் 45 நிமிட வேகநடையுடன் அளவான உணவுடனும்  13 கிலோ குறைந்திருந்தேன். டிசம்பர் பார்ட்டி சீசனோடு கொஞ்சம் எடை கூடி விட்டதால் மீண்டும் வேகநடையை ஆரம்பித்துள்ளேன்.?

யாராவது தடி மாடு என்று உங்களை நக்கலடிச்சவையளோ.☺️...இத்தோட இரண்டாவது தடவை நீங்கள் இதை எழுதி விட்டிர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

யாராவது தடி மாடு என்று உங்களை நக்கலடிச்சவையளோ.☺️...இத்தோட இரண்டாவது தடவை நீங்கள் இதை எழுதி விட்டிர்கள்

அப்படி எல்லாம் இல்லை. முகநூலில் நிறைய நண்பிகள் விசிறிகளாக இருக்கின்றார்கள்.?

வாட்டசாட்டமாக இருந்தால்தானே ஒரு கெத்து இருக்கும்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.