Jump to content

இராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்: சுஷ்மா ஸ்வராஜ்


Recommended Posts

இராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்: சுஷ்மா ஸ்வராஜ்

இராக்கில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ்படத்தின் காப்புரிமைPRAKASH SINGH/AFP/GETTY IMAGES

செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஐ.எஸ் குழுவால் கடத்தப்பட்ட 40 பேரில், ஹர்ஜீத் என்பவர் மட்டும் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால், தப்பித்ததாக தெரிவித்துள்ளார்.

இறந்தவர்கள் மரபணுவை, அவர்களின் உறவினர்களின் மரபணுவுடன் ஒப்பிட்டு பார்த்து இதை உறுதி செய்ததாக அவர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களில் 31 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். நான்கு பேர் இமாச்சல பிரதேசத்தையும், மற்றவர்கள் ,மேற்கு வங்கம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள் ஆவர்.

இறந்தவர்களின் உடல், புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், அவை அனைத்தும் ஒரே குழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்: சுஷ்மா ஸ்வராஜ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உறவினர்களின் மரபணு மாதிரிகள் நான்கு மாநிலங்களிலிருந்து பெறப்பட்டது என்றும், பின் அவை சோதனைக்கு அனுப்பப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தீப் என்ற இளைஞரின் மரபணுவே முதலில் பொருந்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிஎன்ஏ பரிசோதனையை தவிர பெரிய ஆதாரங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/india-43468676

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு பேருமே, இஸ்லாத்துக்கு மாறி உயிர் தப்பி இருந்திருக்கலாமே... :rolleyes:

Link to comment
Share on other sites

இஸ்ரேல் காரர் என்றால் ஒரு வழி பண்ணி இருப்பார்கள். 4வது பெரிய இராணுவத்தை வைத்துக்கொண்டு சிறிய நாடுகளுடன் சொறிய மட்டுமே இவர்களால் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nunavilan said:

இஸ்ரேல் காரர் என்றால் ஒரு வழி பண்ணி இருப்பார்கள். 4வது பெரிய இராணுவத்தை வைத்துக்கொண்டு சிறிய நாடுகளுடன் சொறிய மட்டுமே இவர்களால் முடியும்.

சொறிய இல்லை வீரம் காட்ட எண்டு சொல்லுங்கோ...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

சொறிய இல்லை வீரம் காட்ட எண்டு சொல்லுங்கோ...:grin:

காட்டுத் தீயில் சிக்கிய மாணவர்களை மீட்க, இரவில், இராணுவ விமானிக்கு கண் சரியா தெரியாது, காலையில் பார்க்கலாம் என்று சொல்லும் பாதுகாப்பு அமைச்சர் கொண்ட நாடு....

தீ வெளிச்சமாவது இருக்குமே என்று கேடடால் பதில் இல்லை.

அப்புறம்...?

17 hours ago, nunavilan said:

இஸ்ரேல் காரர் என்றால் ஒரு வழி பண்ணி இருப்பார்கள். 4வது பெரிய இராணுவத்தை வைத்துக்கொண்டு சிறிய நாடுகளுடன் சொறிய மட்டுமே இவர்களால் முடியும்.

 

Link to comment
Share on other sites

இராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் - முழு பின்னணி

இராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் - முழுப் பின்னணிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இராக்கில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் மரணமும் மரபணு சோதனைக்குப் பின் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.

ஈராக்கில் உள்ள மொசூல் பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பினரால் 39 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களை மீட்பதற்கு இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது.

இது தொடர்பாக 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், போதிய ஆதாரம் இல்லாமல் ஒருவர் இறந்துவிட்டார் என்று கூறுவது பாவத்திற்குரிய செயலாகும் என்று கூறி இருந்தார்.

அவர்கள் கடத்தப்பட்டதிலிருந்து, இந்திய அரசு அவர்கள் உயிருடன் இருப்பதாகவே கூறி வந்தது. அவர்களை உயிருடன் மீட்பதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றது.

இப்படியான சூழ்நிலையில் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் நேற்று (செவ்வாய்க்கிழமை) கூறி உள்ளார்.

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 உடல்களில், டி.என்.ஏ பரிசோதனையில் 38 உடல்கள் இந்தியர்களுடையது என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒரு உடல் காணாமல் போனவரின் உடலுடன் 70 சதவீதம் மட்டுமே பொருந்துகிறது.

இதில் 31 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள், 4 பேர் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.

இராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் - முழுப் பின்னணிபடத்தின் காப்புரிமைSUKHCHARAN PREET/BBC

என்ன நடந்தது?

இராக்கில் 2014 ஆம் ஆண்டு 80 பேர் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்டார்கள். அதில் 40 பேர் இந்தியர்கள்; 40 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்.

இந்த விவகாரம் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு வந்தது. கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

கடைசியாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் பிரதாப் சிங் பஜ்வா, ஜூலை 27, 2017ஆம் தேதி இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். உறுதியான ஆதாரங்கள் கிடைக்கும் வரை, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறு முடியாது என்று அரசு கூறியது.

இதே ஆண்டு சுஷ்மா ஸ்வராஜ், கடத்தப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங்கும் உடன் இருந்தார்.

அதன் பிறகு வி.கே. சிங், இராக் பயணமானார்.

தப்பியவரின் வாக்குமூலம்

அப்போது மொசூலில் இருந்து தப்பி இந்தியா வந்த ஹர்ஜீத் மஸீஹ், அனைவரும் ஐ. எஸ் அமைப்பால் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக 2015 ஆம் ஆண்டு கூறினார். ஆனால், இது பொய் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியது.

இராக் பயணமான வி.கே.சிங் அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் தலைவரை சந்தித்தார்.

மொசூலை ஐ.எஸ் அமைப்பு கைப்பற்றிய பின் அனைவரையும் அங்கிருந்து வெளியேற சொன்னார்கள், ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. ஒரு நாள் உணவருந்திக் கொண்டு இருந்த போது ஐ.எஸ் அமைப்பினர் அவர்களை பார்த்துவிட்டனர். இனி இவர்கள் அங்கே தங்க கூடாது என்று சொன்ன ஐ.எஸ் அமைப்பினர். அனைவரையும் ஒரு துணி ஆலையில் தங்க வைத்துள்ளனர்.

பின் அங்கிருந்து வங்க தேசத்தினரை மட்டும் இர்பில்லுக்கு அழைத்து சென்றனர். வங்க தேசம் சென்ற குழுவுடன் ஹர்ஜீத்தும், அலி என்ற பெயரை மாற்றி சென்றார் என்று சுஷ்மா ஸ்வராஜ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் - முழுப் பின்னணிபடத்தின் காப்புரிமைRAVINDER SINGH ROBIN/BBC

பின் ஹர்ஜீத் கைது செய்யப்பட்டார். ஆறு மாத சிறை தண்டனையும் அனுபவித்தார்.

பிபிசியிடம் பேசிய ஹர்ஜீத், "நான் அப்போதே 39 பேரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றேன். ஆனால், நான் பொய் சொல்கிறேன் என்றார்கள். என்னை சிறையிலும் அடைத்தார்கள். இப்போது அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று சுஷ்மா ஸ்வராஜே சொல்கிறார். அரசு அனைவரையும் தவறாக வழிநடத்தி உள்ளது. நான் எந்த பொய்யும் சொல்லவில்லை. அரசுதான் பொய் சொல்லி இருக்கிறது என்று நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.

மொசூல் நகரத்தின் கதை

2014 ஆம் ஆண்டு, ஐ.எஸ் அமைப்பு இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரத்தை கைப்பற்றியது.

இராக் ராணுவம், குர்து போராளிகள், பழங்குடிகள் ஐ,எஸ்-க்கு எதிராக போராடினர். அமெரிக்க வான்படையும் ஐ.எஸ்-க்கு எதிராக போராடியது.

இராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் - முழுப் பின்னணிபடத்தின் காப்புரிமைSUKHCHARANPREET/BBC

ஐ.எஸ் அமைப்பு மொசூல் நகரத்தை முழுவதுமாக சிதைத்தது. கட்டடங்களை தகர்த்தது.

மில்லியன் கணக்கான மக்கள் அந்த நகரத்திலிருந்து தப்பி சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லபட்டனர்.

ஒரு நீண்ட போருக்குப் பின் 2017 ஆம் ஆண்டு, இராக் பிரதமர் ஹைதர் அல்- அபைதி, மொசூல் நகரம் மீட்கப்பட்டுவிட்டதாக அறிவித்தார்.

ஒரு பில்லியன் டாலர் தேவை

மீண்டும் நகரத்தை நிர்மாணிக்க ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படும் என்று ஐ.நா அமைப்பு கூறி இருந்தது.

சர்வதேச அகதிகள் நிறுவனம் ஏறத்தாழ எட்டு லட்சம் மக்கள் வீடுகளை விட்டு,, வேறு இடங்களுக்கு குடிபெர்யர்ந்துள்ளதாக கூறுகிறது.

http://www.bbc.com/tamil/india-43476781

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விரித்த சடைமுடி தொடுத்து முடிக்குமுன் எடுத்த  சபதம் முடித்தவளே    
    • தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் பேரம் பேசினாரா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.    தமிழ் வர்த்தகர் மேலும் தெரிவிக்கையில், "எனக்கு ஒருவர் மூலமாகப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். அதாவது, கட்சிகள் விற்பனைக்கு உண்டு, உங்களுக்கு வேண்டுமா? என்று. உரியவர் என்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றபடியால் அந்தப் புலம்பெயர் தமிழ் வர்த்தகரின் பெயரை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது. என்னைத் தலைவர் தெரிவுப் போட்டியிலிருந்து விலகப் பண்ணுவதற்காகவே என்னுடன் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தமிழரசுக் கட்சியில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றார்கள் என்பது உண்மை. இது இன்று பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இது சம்பந்தமாக, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் முக்கிய பதவியை வகித்த ஒருவர், எனக்கு அந்த நேரத்திலேயே ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். வடக்கிலும் அரசியலுக்குள் பணம் புகுந்து விட்டது, இது விரும்பத்தக்க விடயம் அல்ல, இதைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். இப்போது நான் பின்னால் திரும்பிப் பார்க்கின்றபோது பல விடயங்கள் அப்படி நடக்கின்றன போல்தான் தெரிகின்றன.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரிடத்தில் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறுமாறு ஒலிவாங்கிகளை நீட்டி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. சிலரிடம் அப்படிக் கேட்டபோது அவர்கள் மறுத்தும் உள்ளனர். கொள்கை அரசியல்   அதனால்தான் எனக்கு அந்த விடயமே தெரியவந்தது. சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வீர்களேயானால் உங்கள் தேர்தல் பிரச்சார செலவுகளையெல்லாம் தாங்கள் பொறுப்பேற்பதாக அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது.   அதற்கமைய சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூற மறுத்தும் இருந்தார்கள்.   அப்படியான முயற்சிகள் இன்று கூடுதலாக வலுப்பெற்றுள்ளன. இது தமிழ் மக்களுடைய கொள்கை அரசியல் விடயத்தில் மிகவும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும்.  நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளபடியால் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் தயவு செய்து தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள். தமிழ் மக்களின் விடிவுக்கான பயணத்தை அரசியல் பாதையூடாக நாங்கள் முன்னெடுக்கின்றபோது அதற்குள் பணம் உட்செலுத்தப்பட்டால் அது பாரிய மோசமான பின்னடைவுகளை எங்கள் மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sumandran-public-request-diaspora-tamil-traders-1713923907
    • அல்..வாயான்  ..என்பதை வைத்து ...அல்லாவின் ஆள் என்றொருவர் முதல் ஒரு திரியில் குறிப்பிட்டார்.. இப்ப நீங்கள்  புளட்  என்கிறியள் .. நான் ஏங்கைசாமி என் தலையை மோதுவன்...😁...சத்தியாமாச்    சொல்லுறன்........... தான்.
    • தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே. இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன். நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே?  அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை. ———- Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣 Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home  2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750.  இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.