Jump to content

விளையாட்டு மருத்துவம் ஏன் முக்கியத்துவமாகின்றது?


Recommended Posts

விளையாட்டு மருத்துவம் ஏன் முக்கியத்துவமாகின்றது?

Important-of-Sports-Medicine-2018-696x46
 

விஞ்ஞானம் உலகுக்கு தந்த கொடைகளில் ஒன்றே மருத்துவமாகும். மனிதனின் உடல் ஆரோக்கியத்தை பேண உதவுகின்ற இத்துறையின் ஒரு கிளையாக “விளையாட்டு மருத்துவம்“ அமைகின்றது.

அந்த வகையில் நவீன விளையாட்டு வீரர்கள் அவர்களது ஆரோக்கியத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து கொள்ள பிரதானமாக உதவுகின்ற இந்த விளையாட்டு மருத்துவம் பற்றி கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வைத்திய அதிகாரி புஹைம் அவர்கள் பிரத்தியேக நேர்காணல் ஒன்றினை ThePapare.com இற்கு வழங்கியிருந்தார்.  

அதனை உங்களுடன் எழுத்து வடிவில் பகிர்கின்றோம்.

கே: விளையாட்டு மருத்துவம் (Sports Medicine) என்றால் என்ன?

உலகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உடற்பயிற்சியிலும் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காக உருவாக்கப்பட்ட, துரிதமான வளர்ச்சியும் பிரபல்யமும் அடைந்துகொண்டிருக்கின்ற மருத்துவத்தின் ஒரு துறையாகும்.

Messi-3.jpg Courtesy – ara.cat

விளையாட்டு மருத்துவமானது பின்வரும் பிரதான பகுதிகளை அடிப்படையாகக் கொண்டது.

1. விளையாட்டிற்கு முன்னரான மருத்துவப் பரிசோதனை.
2. விளையாட்டு போசணை முறை.
3. விளையாட்டின் போது முதலுதவி சிகிச்சைகளை வழங்கல்.
4. விளையாட்டில் உபாதைகளை தடுக்கின்ற நுட்பங்கள்.
5.விளையாட்டில் ஏற்படுகின்ற உபாதைகளுக்கான சிகிச்சைகள், புனருத்தாபன முறைகள்.
6. விளையாட்டு உளவியல்.
7. விளையாட்டில் ஊக்க மருந்துப் பாவனையினை கட்டுப்படுத்தல்.
8. பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற தொற்றல்லாத நோய்களை கட்டுப்படுத்தல்.

 

கே: விளையாட்டுத்துறைக்கு விளையாட்டு மருத்துவத்தின் அவசியம் என்ன?

விளையாட்டுக்கள் தேசிய, சர்வதேச ரீதியில் விளையாடப்படுகின்ற போது அது அவ்வீரர்களுக்கும் அவர்களது பிரதேசம், நாடு என்பவற்றுக்கும் பெருமையினையும் வருமானத்தினையும் ஈட்டித்தரக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறாக கீழ்மட்ட போட்டி நிலையிலிருந்து விளையாட்டின் உயர் மட்ட நிலைகளான தேசிய, சர்வதேச போட்டிகளிற்கு தெரிவாகின்ற போது வீரர்களிற்கு இடையிலான திறமையானது அண்ணளவாக சமனாகக் காணப்படும்.

இவ்வாறான நிலையில் வீரர்கள் விளையாட்டு மருத்துவம் (Sports Medicine), விளையாட்டு விஞ்ஞானம் (Sports Science) சார்ந்த நுட்பங்கள் உள்வாங்கப்படுவதன் மூலமாகவே உயர்மட்ட போட்டிகளில் வெற்றிபெற்று திறமையான வீரராக வெளிவர முடியும்.

கே: ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் விளையாட்டுக்கு முன்னரான உடற்தகுதிப் பரிசோதனை (Pre-Participation Physical Examination – PPE) மேற்கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும், அதற்கான காரணம் என்ன?

விளையாட்டுக்களின் மூலம் பல்வேறு வகையான உடல் மற்றும் உள ரீதியிலான நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும் அதன் மூலம் உபாதைகளும் சிலவேளைகளில் திடீர் திடீர் உயிரிழப்புகளும் நிகழ்ந்து விடுகின்றன. இவ்வாறாக ஏற்படுகின்ற திடீர் இறப்புக்களில் அனேகமானவை பிறப்புடன் சார்ந்த இதயத்தின் கட்டமைப்பு, தொழிற்பாடுகளிலுள்ள பிரச்சினைகள் மூலமாக நிகழ்கின்றன.

அவ்வாறான உயிரிழப்பினை ஏற்படுத்துகின்ற காரணிகள் மட்டுமல்லாமல் உபாதைகளை ஏற்படுத்துகின்ற காரணிகளைக் கண்டறிவதுடன், ஒரு நபர் அக்குறிப்பிட்ட விளையாட்டிற்கு தகுதியுடையவராக இருக்கின்றாரா? எனக் கண்டறிவதும் இதன் பிரதான நோக்கங்களாகக் காணப்படுகின்றது.  

கே: விளையாட்டில் உணவு முறையின் (Sports Nutrition) முக்கியத்துவத்தினைப்பற்றி கூறமுடியுமா?

Nutrion.jpg Courtesy – anwnutrition.com

தசைத் தொழிற்பாட்டின் மூலமாகவே உடல் இயக்கமடைகின்றது. இவ்வாறான இயக்கத்திற்கு சக்தி வழங்கல் அவசியமாகிறது. எனவே, தொடர்ச்சியான தொழிற்பாட்டின் மூலம் விளையாட்டுக்களில் ஈடுபடும்போது பயன்படுகின்ற சக்தியானது நாம் சாப்பிடுகின்ற உணவிலுள்ள போசணைப்பொருட்கள் மூலமாகவே உருவாகின்றது.

 

காபோவைதரேற்று, கொழுப்பு என்பன பெருமளவிலும் புரதம் அரிதாகவும்  உடலுக்கு சக்தியை வழங்குகின்றது. ஒரு விளையாட்டு வீரனது நாளாந்த உணவானது ஒரு முழுமையடைந்த உணவாகவும் அதில் 65% மாப்பொருள், 30% கொழுப்பு சத்தும், 5-15% வீத புரதமும் அடங்கியிருப்பதுடன் விற்றமின்கள், கனியுப்புக்கள் நீர் என்பன உள்ளடங்கியதாகவும் இருத்தல் வேண்டும்.

இவ்வாறான உணவுமுறைகள் போட்டிகளை அண்மிக்கும்போதும் அதன் பின்னரும் போட்டிகளின் வகைகளிற்கேற்ப வித்தியாசப்படலாம்.  

கே: விளையாட்டில் தடுக்கப்பட்ட மருந்து/பதார்த்தங்களின் பாவனை (Doping in Sports) சம்பந்தமாக கூறமுடியுமா?

விளையாட்டு வீரர்கள் போட்டிகளின் போது பாவிக்கக்கூடாத சில மருந்துகள் உலக ஊக்கமருந்துக்கெதிரான அமைப்பின் (World Anti-Doping Agency – WADA) மூலம் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன. இவை விளையாட்டு வீரர்களுக்கு வாழ் நாள் பூராகவும், சில மருந்துகள் விளையாட்டு வீரர்களிற்கு போட்டி நடைபெறுகின்ற போதும் தடை செய்யப்பட்டுள்ளன.

Drugs.jpg Caption – mytoba.ca

அதோடு பின்வரும் காரணங்களுக்காக குறிப்பிட்ட மருந்துகள் தடுக்கப்பட்டு அவை பாவிப்பவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படுகின்றது.

a. செயற்கையான முறையில் விளையாட்டுத்திறனை அதிகரிக்க கூடியதாக இருத்தல்.

b. உடல் நலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியதாக இருத்தல்.

c. விளையாட்டின் உண்மைத்தன்மைக்கும், நேர்மைக்கும் கலங்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருத்தல்.

கே: விளையாட்டிற்கு பயிற்சி வழங்குதலில் எவ்வாறான விடயங்கள் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்?

அது ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்துவமிக்கதாக காணப்படும். ஒரு வீரரிற்கு பயிற்சியளிக்கும் போது அவர் விளையாட்டில் ஈடுபடும் முறையினை (Skills) மாத்திரம் கருத்திற்கொள்ளாது அங்கு பாவிக்கப்படுகின்ற தசைவகை, சக்தி வழங்கப்படும் பொறிமுறை, அந்தப் போட்டிக்கான நேரத்தின் அளவு, உபாதைகளைத் தடுக்கின்ற உடற்பயிற்சிகள் மற்றும் வழிமுறைகள் என்பனவும் கருத்திற்கொள்ளப்படல் வேண்டும். 

கே: விளையாட்டு வீரர்களிற்கு ஏற்படுகின்ற உபாதைகளைப்பற்றி (Injuries in Sports) கூறமுடியுமா?  

விளையாட்டின் போது உபாதைகள் இரண்டு வகையாக ஏற்படுகின்றன.       

a. திடீரென ஏற்படுகின்ற உபாதைகள். (Acute Injury)

இவை நேரடியான (Direct Injury) அல்லது நேரடியற்ற முறையில் (Indirect Injury) ஏற்படலாம்.

b. படிப்படியாக ஏற்படுகின்ற உபாதைகள். (Chronic Injury)

திடீரென ஏற்படுகின்ற உபாதைகள் (Acute Injury)

விழுவதன் மூலமாக அல்லது பாவிக்கப்படுகின்ற பந்துகள் மட்டைகள் அல்லது வேறு பொருட்கள் எதிர்பாராத விதமாக உடம்பில் தாக்குவதன் மூலமாக நேரடியான முறையிலும், வேகமாக ஓடும்போது அல்லது பந்தினை வேகமாக அடிக்கும்போது ஏற்படுகின்ற தசைக்கிழிவுகள் நேரடியற்ற முறையிலும் திடீரென ஏற்படலாம்.Kusal-Perera-3.jpg

படிப்படியாக ஏற்படுகின்ற உபாதைகள் (Chronic Injury) நீண்ட நாட்களாக தசை/என்பு/இணையம்/சிரை என்பவற்றில் பாதிப்புகளை உண்டாக்கி அந்த இடத்தில் வலி, வீக்கங்கள் ஏற்பட்டு விளையாட்டில் பங்கு பற்ற முடியாமலிருக்கும்.

கே: விளையாட்டு உளவியல் (Sports Psychology) சம்பந்தமாக கூறமுடியுமா?

விளையாட்டின் போது உள்ளத்தின் நிலையானது தடுமாறாமல் உயர்ந்த நிலையில் பேணப்படுவதன் மூலம் விளையாட்டில் கடுமையான போட்டி நிலவுகின்ற போது சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளமுடியும்.  

இங்கு சிலவேளைகளில் கோபங்களை அல்லது உச்ச உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். சில சந்தர்ப்பங்களில் குறித்த இலக்கினை அடைந்து கொள்வதற்காக மனதினை ஒருங்கிணைத்து வெற்றி இலக்கினை நோக்கி செலுத்த வேண்டியிருக்கும். சில சந்தர்ப்பங்களில் அச்ச உணர்வுகளை அகற்றி பழைய உயர் பெறுபேறுகளை மனதினுள் தக்கவைத்து செயற்பட வேண்டியிருக்கும்.

கே: விளையாட்டில் உபாதைகளைத் தடுத்தலானது (Sports Injury Prevention) விளையாட்டு மருத்துவத்தின் ஒரு முக்கியமான பங்காகும். அதனை விரைவாகக் கூறமுடியுமா?

விளையாட்டுக்களின் போது உபாதைகளைத் தடுக்கின்ற உக்திமுறைகள் விளையாட்டு மருத்துவத்தின் பிரதானமான பகுதியாகும். எதிர்பாராத விதமாக விளையாட்டின் போது ஏற்படுகின்ற உபாதைகளானது சில வேளைகளில் தவிர்க்க முடியாததாக காணப்பட்டாலும் பெரும்பாலான உபாதைகளை   அதனைத் தடுப்பதற்கான உக்திமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தவிர்த்துக்கொள்ளப்பட முடியும்.

 

கே: எவ்வாறான யுக்தி முறைகள் மூலம் விளையாட்டுக்களில் ஏற்படுகின்ற உபாதைகளிலிருந்து பாதுகாப்பு பெறமுடியும்?

a. உடலை சூடாக்குகின்ற உடற்பயிற்சிகள் (Warm Up)

இது விளையாட்டினை ஆரம்பிப்பதற்கு முன்னர் செய்யவேண்டிய உடற்பயிற்சியாகும். இதன் மூலம் இறுக்கமடைந்து காணப்படுகின்ற தசைகள் இயங்க ஆரம்பிப்பதுடன் அத்தசைகளிற்கான இரத்த ஓட்டம் போசணைப் பொருட்கள், ஒட்சிசனின் அளவு அதிகரிப்பதனால் தசை என்புகள் சீராக இயங்க ஆரம்பிக்கின்றன. அத்துடன் அத்தசைகளிற்கு குருதியினை வழங்குகின்ற இதயத்தின் தொழிற்பாடானது படிப்படியாக சீராக அதிகரித்துச் செல்ல இப்பயிற்சிகள் உதவுகின்றன.

b. தசை, இணையம் என்பவற்றினை நீட்சியடையச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் (Stretching).

இறுக்கமடைந்திருக்கின்ற தசைகள், இணையங்கள் தளர்வடைவதனால் மூட்டுக்களின் இயங்குகின்ற வீச்சத்தின் அளவு அதிகரிப்பதன் மூலம் தசை, இணையம், மூட்டுக்கள், என்புகளில் ஏற்படுகின்ற உபாதைகளின் அளவு குறைவடைகின்றது.

c. விளையாட்டின் பின் உடல் சூட்டினைத் தணிக்கின்ற (Warm down/Cool down) பயிற்சிகளைச் செய்வதன்மூலம் வியர்வைக் கழிவுகள் அகற்றப்படுவதுடன் இதயத்தொழிற்பாடு படிப்படியாக குறைவடைந்து சாதாரண நிலைக்கு வருகின்றது.

d. பாதுகாப்பு அணிகலன்களைப் பாவித்தல்

e. விளையாட்டின்போது பாவிக்கப்படுகின்ற உபகரணங்கள் அளவு, நிறை என்பன பொருத்தமானதாக இருத்தல்.

f. விளையாட்டின் போது இருக்கின்ற காலநிலை, விளையாட்டு மைதானத்தின் தரையமைப்பு என்பன கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

g. விளையாட்டில் உணவுமுறை (Sports Nutrition)

h. விளையாட்டில் சிறந்த உளனிலை (Sports Psychology).

i. விளையாட்டிற்குரிய சட்டதிட்டங்களை பேணி விளையாடுதல் (Rules and Regulations)

கே: தொற்றல்லா நோய்களினைத் (Non – Communicable Diseases) தடுத்தலில் விளையாட்டு மருத்துவத்தின் பங்களிப்பு என்ன?

தொற்று அல்லாத நோய்களாவன இருதய வியாதி, சீனி வியாதி (Diabetes), உயர்குருதியமுக்கம் (Hypertension), பாரிசவாதம் (Stroke), புற்று நோய்கள் (Cancers), மூட்டு தேய்வடைதல் (Osteoarthritis), என்பு மென்மையாதல் (Osteoporosis) என்பனவாகும்.

மனித இறப்புக்களில் 65-70% இவ்வாறான நோய்களின் மூலமே ஏற்படுகின்றன. இவ்வாறான நோய்களை ஏற்படுத்தும் காரணிகளாக முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, அதிக உடல் நிறை (Obesity), மது மற்றும் புகைத்தல் பாவனை என்பன காணப்படுகின்றன.

எனவே, மேற்குறிப்பிட்ட தீய பழக்கங்களிலிருந்து தவிர்ந்துகொண்டு நல்ல உணவுப் பழக்கம் மற்றும் முறையான உடற்பயிற்சிகள் செய்வதன்மூலம் இவ்வாறான நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

நன்றிDr.-Fuhaim-286x300.jpg

Dr. A.A.M. புஹைம்
(MBBS,PGD Sports & Exercise Medicine, DFBM,DCO)

விசேட விளையாட்டு உடற்பயிற்சி மருத்துவர்,
ஊக்கமருந்து தடுப்பு அதிகாரி, விளையாட்டு மருத்துவப்பிரிவு,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை.
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, அம்பாறை.

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.