Jump to content

சிங்கள இனம்: உலகின் குற்றச்சாட்டை எதிர்கொள்ளுமா?


Recommended Posts

சிங்கள இனம்: உலகின் குற்றச்சாட்டை எதிர்கொள்ளுமா?
 
 

இந்தியாவுக்கு பிரித்தானியரால் சுதந்திரம் வழங்கப்பட்ட வேளையில், காந்தியைப் பார்த்து, கேள்வி ஒன்றைக் கேட்டார் பிரித்தானியர் ஒருவர். 

“எம்மவர்களால் (பிரித்தானியரால்) உங்கள் நாட்டின் அனைத்துச் சொத்துகளும் சூறையாடப்பட்டு விட்டன. இனி எப்படி, ஒன்றுமே இல்லாத உங்கள் நாட்டைக் கட்டி எழுப்பப் போகின்றீர்கள்” என்பதே அந்த வினா ஆகும்.   

“எமது நாட்டின், பௌதீக வளங்களை நீங்கள் சூறையாடி இருக்கலாம். ஆனால், எமது நாட்டு மக்கள், எங்கு தடுக்கி விழுந்தாலும், எம்மைத் தாங்கிப் பிடிக்க, ஏராளமான மனித நேயமுள்ள மனிதர்கள், வாழும் தேசம் நம் பாரத தேசம்” எனப் பதிலடி வழங்கினார் காந்தி.   

ஆனால், இலங்கை தேசத்தில் வாழும் சிறுபான்மை மக்கள், மனிதநேயம் என்றால் என்ன என்பதை, வெற்றுக் காகிதத் தாளில் எழுதியே பார்க்க முடியும். மாறுபட்ட கருத்துகளையும் வேறுபட்ட சமயக் கருத்துகளையும் மாண்புடன் ஏற்றுக் கொள்வதே, உயர்வான மானிடப் பண்பாகும்.    

இலங்கையில் ஒற்றையாட்சி 

சுத்திரத்தக்குப் பின்னர், நமது நாட்டை ஆட்சிசெய்த ஆட்சியாளர்கள், ஒற்றை இனத்துக்கு, ஒற்றை மதத்துக்கு, ஒற்றை மொழிக்குத் தொடர்ந்து, அதிமுன்னுரிமை வழங்கிய காரணத்தால், நாட்டில் ஒற்றுமை நீங்கி, வேற்றுமை வியாபித்து, உருப்படாமல் போய் விட்டது. ‘வேற்றுமையிலும் ஒற்றுமை’ என்ற உயர் கருத்து, வேருடன் பிடுங்கப்பட்டு விட்டது.  

“ஒரு சிலரின் இழிவான செயல்கள் காரணமாக, முழு உலகிலும் வாழும் சிங்கள இனம், குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருக்கின்றது” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து உள்ளார். வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில், கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர், இவ்வாறாகத் தெரிவித்திருந்தார்.    

“அண்மையில் இடம்பெற்ற கலவரச் சம்பவங்கள் ஊடாக, உலகின் ஏனைய நாடுகளுடன், இலங்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல, தெற்காசியாவில் வாழும் ஏனைய பௌத்த மக்களுக்கும் இனவிரோத, மதவிரோதச் செயற்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது” எனப் பிரதமர், மேலும் தெரிவித்து உள்ளார்.   

முஸ்லிம் மக்களுக்கு எதிராக, கண்டியில் மூண்ட இனவன்முறை, ஆரம்பித்து, கலகக்காரர்கள் தங்களது இலக்கை அடையும் முன்பே, அது உலகின் கவனத்தை உடனடியாக ஈர்த்து விட்டது. இந்தக் காலப்பகுதியில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டு அமர்வுகள், நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, அங்கும் கலவர அதிர்வுகள் எதிரொலித்தன.    

அரபு நாடுகள், இடம்ெபற்ற வக்கிர வன்முறைகளை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தன. தொடர்ந்து சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புகள் எனச் சர்வதேச சமூகமும் இன வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தது. இவ்வாறாக அடுத்தடுத்து வந்த கடும் அழுத்தங்களால், அரசாங்கம் ஆடிப்போய் விட்டது.   

பெரும் எடுப்பில், 2009இல் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கூட, தணிக்கை செய்யப்படாத சமூக ஊடகங்கள் உடனடியாகத் தடை செய்யப்பட்டன. வன்முறை மேலும் பரவுவதைத் தடை செய்யும் பொருட்டே, சமூக ஊடகங்களைத் தடை செய்வதற்கான காரணம் எனச் சொல்லப்பட்டது.  

ஆனால், நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் செல்வது போல, இதன் மூலமாகப் பாதிக்கப்பட்ட மக்களது இழப்புகள், சேத விவரங்கள் வௌிப்படுத்தப்படுவதும் கூடவே தடை செய்யப்பட்டது எனலாம்.   

உண்மையில் பிரதமர் கூறுவது போல, ஒரு சிலரின் நடவடிக்கை என, இதை எடை போடலாமா? அல்லது தீவில் தொடரும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான, வக்கிர உணர்வின் வெளிப்பாடு எனக் கருதலாமா?  
இலங்கையில் 1958, 1977, 1983 என வெவ்வேறு காலகட்டங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளும் கலவரங்களும், இவ்வாறான சிறு குழுவினரால்த்தான் அக்காலத்திலும் கட்டவிழ்த்து விடப்பட்டதா?  

எத்தனை மனித உயிர்கள், முள்ளிவாய்க்கால் வேள்வித் தீயில் பொசுங்கின; பலிகொடுக்கப்பட்டன. ஜப்பானியர்களுக்கு ஹிரோஷிமா போல, ஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் உள்ளது. அங்கு, வார்த்தைகளில் வடிக்க முடியாத வக்கிரங்கள் நடந்தேறின. அதன் நீட்சி இன்றும் தொடர்கின்றது. ஆனால், அந்தக் கொடூரங்கள், அந்த நேரத்தில் சர்வதேசத்தின் இதயங்களைப் பலமாகத் தட்டவில்லை; செவியைத் ஊடறுத்துச் செல்லவில்லை.   

அவ்வாறாகச் செல்ல, அன்றைய ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டையும் அமைதியையும் குழப்பும், பயங்கரவாதிகள் மட்டுமே படுகொலை செய்யப்படுகின்றார்கள் என்ற ஒற்றை வாசகம், அந்தக் கொடூரங்களுக்குத் துணை நின்றன.  

ஆனால் இன்று, உலகப் பொது மன்றத்தில் கண்டிச் சம்பவங்கள் உடனடியாகத் தெரிந்துவிட்டதால் ஆட்சியாளர்கள் அல்லல்படுகின்றனர்.   

சுற்றுலாப் பயனிகள் அதிகம் சென்றுவரும் இடம் கண்டி என்பதால், கலவர சம்பவங்களால் முழு நாட்டினுடைய சுற்றுலாத்துறையும் சுருண்ட விடும் அபாயமும் உள்ளது. ஆதலால், நாட்டின் வருமானம் வங்குரோத்து நிலையை அடையும் என்பதாலும், ஆட்சியாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.   

சுற்றுலாப் பயனிகளின் வருகை குறைவதால், தமது வருமானம் பாதிக்கப்படுவதாகவும் வாழ்க்கையைக் கொண்டு நடாத்த முடியாமல் தாம் திணறுவதாகவும் பல முச்சக்கர வண்டிச் சாரதிகள் தன்னிடம் கூறியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்து உள்ளார்.   

தமிழர் பிரதேசங்களை நோக்கி, தென்பகுதி சிங்கள மீனவர்களது தொடர்ச்சியான வருகையாலும் அவர்களது அத்துமீறிய செயற்பாடுகளாலும் தமது வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக, தமிழ் மீனவர்கள் மற்றும் அவர்களது அமைப்புகள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.  

தமது பகுதிகளில் உள்ள அரச அலுவலகங்களில், சிங்கள இளைஞர்கள் யுவதிகளுக்குத் தொடர்ச்சியாக அரச நியமனங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தாங்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தமிழ் மக்கள் வேதனையிலும் விரக்தியில் உள்ளனர்.   

ஆனால், இவை ஒன்றுமே ஆட்சியாளர்களுக்கு அந்த வேளைகளில் அலாரம் அடிக்கவில்லை. ஆனால் இன்று, தம்மவர்கள் பாதிக்கப்படும் போது, துடிக்கிறார்கள். ஆகவே, இதுவே இலங்கைத் தீவின் இனப்பாகுபாட்டுக்குச் சின்ன உதாரணம் ஆகும்.   

கண்டிக் கலவரங்களை அடுத்து, தீவில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் ஒரு வித பய உணர்வுடனேயே காலத்தை ஓட்டினர். அடுத்து எங்கும், என்னவும் நடக்கலாம் என்ற நிலை காணப்பட்டது. 

இதையடுத்து, புத்தளம், ஆனமடு போன்ற பிரதேசங்களிலும் வன்முறைகள் மூண்டன. தீவின் எந்தப் பகுதியிலும், செல்வந்தர்களாக வாழும் முஸ்லிம்கள், ஆண்டிகள் ஆக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உருவாகி இருந்தன.    

ஆகவே, காலங்காலமாகச் சிறு குழுவினர் செய்த காரியம் எனப் பெரும் பொறுப்புள்ள ஆட்சியாளர்கள், சிறுபிள்ளைத்தனமாகத் தொடர்ந்து கூறி வருவதால், சிறுபான்மை இனம் சின்னாபின்னமாக போய் விட்டது.   
அடுத்து, அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பிரதமர் செவ்வி வழங்கியிருந்தார். அதில், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பான வினாவுக்குப் பதில் அளிக்கையில், “வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையா, எனத் தனக்குத் தெரியாது” என்று பதில் வழங்கி உள்ளார். அத்துடன், “கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மை இல்லை” எனவும் கூறியிருந்தார்.    

கிழக்கில், தமிழர்கள் இயற்கையாக சிறுபான்மை ஆகவில்லை. தொடர்ந்து, ஆட்சி பீடம் ஏறிய சிங்கள ஆட்சியாளர்களின் ஆக்ரோசமான ஆக்கிரமிப்பே, கிழக்கில் தமிழர்களின் பெரும்பான்மையை இழக்கச் செய்தது.   

தமிழ் மக்கள் கிழக்கில் சிறுபான்மையாக, நன்கு திட்டமிட்டு ஆக்கப்பட்டார்கள். தொடர்ந்து, வடக்கு மாகாணத்திலும் அவர்களைச் சிறுபான்மை ஆக்கும் நடவடிக்கைகளை, ஆக்கத்திறனுடன் ஆரம்பித்தும் உள்ளனர்.   

நாற்பது வருடங்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும், பல தடவைகள் பல அமைச்சுப் பொறுப்புகளை  வகித்தும் பல தடவைகள் பிரதமராகப் பதவிவகித்தும் தற்போதும் பிரதம மந்திரியாகப் பணியாற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின், பிரதான பங்காளியான ஐ.தே.கவின் தலைவரும், அரசியல் அனுபவத்தில் முதிர்ந்தவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தோன்றிய சந்தேகம் பாரதூரமானது.   

பிறிதொரு விதத்தில், தமிழ் மக்களைக் கீழ்தரமாக எண்ணும் எண்ணத்தின் வௌிப்படையாகவும் ஏன் தமிழ் மக்கள் எண்ணக் கூடாது.   

இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்கள், அதன் பரிணாம வளர்ச்சி, தற்போதைய நிலை, என யாவற்றையும்  பிரதமர் நன்கு அறிந்திருக்க வேண்டும்; அறிந்துள்ளார்.ஆனாலும், இவை போன்ற தொடர்பற்றதும் பொறுப்பற்றதுமான பதில்கள், தமிழ் மக்களை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்குகின்றன.   

இவர்கள், ஏன் இவ்வாறாகப் பேசுகின்றனர்? இவர்கள் மாறவே மாட்டார்களா? எனத் தமிழ் மக்கள் சலித்துக் கொள்கின்றனர். 

அன்று, தமது வாழ்வதற்கான உரிமைப் பிரச்சினையை, ஆட்சியாளர்களில் நம்பிக்கை இழந்து, ஐ. நா சபைக்கு தமிழ் மக்கள் கொண்டு சென்றார்கள். 

இன்று, முஸ்லிம் மக்களும் தமது வாழ்வதற்கான உரிமைப் பிரச்சினையை, ஆட்சியாளர்களில் நம்பிக்கை இழந்து, ஐ.நா சபைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதுபோலவே, இரு கரங்களும் இறுக்கமாக இணையட்டும்; விடிவு பிறக்கட்டும்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிங்கள-இனம்-உலகின்-குற்றச்சாட்டை-எதிர்கொள்ளுமா/91-212957

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.