Jump to content

பெண் பார்க்கப் போறேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கவி எனக்கு திருமணம் நிச்சயமாகியவுடன் என்னுடன் படிப்பித்த ஒரு வயதில் மூத்த ஆசிரியை சொன்னார் கலியாணம் என்பது ஒரு கோட்டை மாதிரி வெளியே இருப்பவர்கள் உள்ளே போக ஆசைப்படுவார்கள் உள்ளே இருப்பவர்கள் வெளியே வர ஆசைப்படுவார்கள் என்று. வாழ்க்கை வரமோ சாபமோ அவரவர் வாழும் முறையை வைத்துத்தான் தீர்மானிக்கலாம். அது இறைவன் கொடுத்த வரமாகவும் இருக்கலாம். நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், கவி!

கலியாணம் அல்லது திருமணம் என்ற வார்த்தைகள் ...ஒரு கதையில் வருமானால்...நிறைய விமரிசனங்களை எதிர்பார்க்கலாம்!

அதே போலத் தான்....சாமத்திய வீடு..என்ற வார்த்தையும்!

நானும்...கதையின் ஆரம்பத்தில்...நம்ம...கவியரும்.....கன்னி ராசிக் காரர் போலத் தான் கிடக்கு என்று....கதையின் இறுதி வரை நினைத்திருந்தேன்!

முடிவு வரை....ஓடோடி...வாசித்த என்னை....ஏமாற்றி விட்டீர்களே....கவி!

கதை நன்றாக உள்ளது!

தொடர்ந்தும் எழுதுங்கள்....!

Link to comment
Share on other sites

On 3/19/2018 at 1:01 PM, Kavi arunasalam said:

எண்ணையை ஊற்றிக் கொண்டு எத்தனை கண்கள், முதலை போல் வாய் பிளந்து எவ்வளவு பெரிய பெரிய வாய்கள் எங்களுடைய ஊருக்குள் இருக்கின்றன என்பது அபோதுதான் எனக்கு நன்றாகத் தெரிய ஆரம்பித்தது.

உந்த விசயத்தில் ஊர்ப்பெண்டுகள் உடனே மோப்பம் பிடித்துவிடுவார்கள். 50 வீத சந்தேகத்தை நூறாக்கிவிடுவதிலும் வல்லவர்கள். தெரியாமல் ஒன்றைச் செய்கின்றோம் என்ற பலருக்கு தெரிவதில்லை அவை ஊருக்கு தெரியும் என்பது. குறிப்பாக காதல் மற்றும் வேலிபாயும் விசயங்களில். 

உங்களிடம் ஏராளமான சுவார்சியமான அனுபவங்கள் இருக்கின்றது போலுள்ளது. தொர்ந்து பகிருங்கள். 

Link to comment
Share on other sites

20 hours ago, Kavi arunasalam said:

நீங்கள் ஆடு ,மாடு  எல்லாம் உதாரணத்திற்கு  கொண்டு வந்தது என்னைக் கிண்டல் அடிபதற்கில்லை என்று நம்புகிறேன்.

ஆனால் கோபாலகிருஷ்ணனின் மனைவி சவுண்ட் ஒண்டும் விடவில்லை. சாதாரண குரலில்தான் என்னிடம் கேட்டாள்.?

யாழ்களத்தில் நானும் ஒரு உறுப்பினராக இணைந்தபோதே இணைந்த காரணத்தையும் அவ்வேளையில் கூறியுள்ளேன். தமிழீழ ஆயுதப்போராட்டம் பின்னடைந்து அது தந்த ஏமாற்றங்களாலும், அவலங்களாலும் ஏற்பட்ட மன அழுத்தங்களைக் குறைப்பதற்கு யாழ்களம் ஒரு ஓளதடமாக இருந்து உதவி புரிந்தது. அதில் உறவுகளாக வந்தவர்கள் பதிந்த பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் வெளிப்பட்டவைகளில் பகிடிகளும் அதிகம். அவை மனவழிப் பாதையை மாற்றி ஆறுதல் அளித்ததை மறுக்க முடியாது. பகிடிகள் பகிடிகளாகவே பார்க்கப்பட்டன. இங்கும் உங்கள் கதையைப் படித்தவுடன் என் மனதில் கிளர்தெழுந்த அனுபவ உணர்வுகளைப் பகிடியாகவே எழுதினேன். உங்களைக் கிண்டலடிப்பதற்கு அல்ல. அது உங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு வேண்டுகிறேன். :100_pray:

Link to comment
Share on other sites

15 hours ago, புங்கையூரன் said:

 

நானும்...கதையின் ஆரம்பத்தில்...நம்ம...கவியரும்.....கன்னி ராசிக் காரர் போலத் தான் கிடக்கு என்று....கதையின் இறுதி வரை நினைத்திருந்தேன்!

 

கவனியுங்கள் மக்கழே.. :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் கவி, இங்கே கவனித்தீர்களா?

'பெண் பார்க்கப் போறேன்'னு போன உங்களுக்கு, யாழ் களமே நாமம் போட்டுவிட்டது..! What a coincidence..!! vil-idee.gif

 

104f03o.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

 

கோபால கிருஷ்ணன் குஷியாக இருக்க கவி கார் சேவை செய்திருக்கின்றார்.

 

கிருபன்,

புராணத்தில் நளாயினி தன் புருசனுக்கு இப்படியான சேவை செய்திருக்கிறார் உங்களிடம் குறும்பு நிறைய இருப்பது தெரிகிறதுஎன்னைமாமாஎன்று மறைமுகமாக.....?

4 hours ago, Paanch said:

உங்கள் கதையைப் படித்தவுடன் என் மனதில் கிளர்தெழுந்த அனுபவ உணர்வுகளைப் பகிடியாகவே எழுதினேன். உங்களைக் கிண்டலடிப்பதற்கு அல்ல.

Panch,

நானும் நகைச்சுவையாகத்தான் பதில் தந்திருந்தேன் அந்தசவுண்ட்இல் அது மறைந்திருக்கிறது.

மகிழ்ச்சியாக இருங்கள். அதுதான் தேவையானது. தவறு செய்ய்தால்தானே  மன்னிப்பு கேட்க வேண்டும். பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம் பயன் படுத்தினால் நான் பயந்து விடுவேன்.

நீங்கள் தந்திருந்த கருத்து எனது பத்திக்கு வலு சேர்த்திருந்தது. அதற்கு எனது மனமார்ந்த நன்றி!

 
3 hours ago, ராசவன்னியன் said:

பெண் பார்க்கப் போறேன்'னு போன உங்களுக்கு, யாழ் களமே நாமம் போட்டுவிட்டது..! What a coincidence..!! 

இராசவன்னியன்,

எல்லோரும்  0111 தாண்டித்தான் வந்திருப்பார்கள். நான் ஆயிரத்தில் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சி.

 
4 hours ago, நிழலி said:

கவனியுங்கள் மக்கழே.. :27_sunglasses:

அதுதானே? நீங்கள் சொல்லிவிட்டால் நான் கவனித்திருக்கவே மாட்டேன்.

ஆனால் நான் கன்னி ராசிக்காரன் இல்லை.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கலியாணம் கட்டினதும் ஊர்வாய் மூடிவிட்டதா ????அல்லது ??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2018 at 1:32 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் கலியாணம் கட்டினதும் ஊர்வாய் மூடிவிட்டதா ????அல்லது ??????

 

7 hours ago, Kavi arunasalam said:

என் வாய் மூடிவிட்டது?

போட்ட போடு அப்படி..!  riposte.gif

இதில் கோபாலகிருஷ்ணனை நோக்கி திட்டு வேறை..!!  take-care.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

( இந்த திரிக்கு இது சம்மந்தமில்லையானாலும், கவியின் நகைச்சுவையில் பிரபலமான இப்பதிவில் பொருத்துவது சிறப்பாக இருக்குமென்ற எண்ணத்தில் படித்ததை இங்கே பதிகிறேன்..!  - ராசவன்னியன் )

 

1017.jpg

1zf5ro2.jpg

'கண்ணாடிக்கு எதிரில் நின்றால், உங்கள் முகத்திற்குப் பதில், உங்களின் மனைவி முகம் தெரிகிறதா..? அப்படியெனில், உங்களுடைய வாழ்க்கைத் துணை, உண்மையிலேயே துணைதான்' என்று யாரோ ஒரு கவிஞன் தத்துவார்த்தமாகச் சொன்னான். அது கண்ணாடியின் தரிசனம் மட்டுமல்ல... வாழ்க்கையின் நிதர்சனமும் கூட!

வாழ்க்கைத் துணை என்று கணவனையும், மனைவியும் சொல்லுகின்றனர். யோசித்துப் பார்த்தால், பிறந்த வீட்டை அப்படியே ஒதுக்கிவிட்டு, பிறந்த வீடு, ஊர், தெரு, நண்பர்கள், உறவினர்கள் என விட்டுவிட்டு, புகுந்த வீட்டுக்கு வரும் மனைவி, எவ்வளவு தைரியசாலியாக, ஊக்கமுள்ளவளாக இருக்கவேண்டும்? அப்படி அவளின் தைரியத்தையும், ஊக்கத்தையும் வார்த்தெடுக்கும் வகையில் ஓர் கணவனாக என்னவெல்லாம் செய்யவேண்டும் என யோசித்துப் பாருங்கள்!

உலகின் உன்னதமான உறவு என்று அப்பா, அம்மா எனும் பந்தத்தைச் சொல்லுவார்கள். உண்மைதான். நம்மை வளர்த்ததிலும், வளர்த்து ஆளாக்கியதிலும் வார்த்தெடுத்ததிலும் மிகப்பெரிய பொறுப்பும் பங்களிப்பும் அவர்களுக்கு இருக்கிறது. அதேசமயம் அம்மாவுக்கு அம்மாவாய், தந்தைக்குத் தந்தையாய் நம்முடனேயே கைகோர்த்து நிற்கும் மனைவி, ஒருவகையில் தேவைப்படுகிற தருணங்களிலெல்லாம் அம்மாவாகவும், அப்பாவாகவும் இருக்கிறாள் என்பதுதான் நிஜம்.

இங்கே, முக்கால்வாசி ஆண்களுக்குமான சோகம் என்ன தெரியுமா? வாழ்வில், படித்து, வேலைக்குச் செல்லும் பிள்ளையைப் பார்த்திருப்பார்கள். பிறகு வயோதிகத்தால் மரணத்தைத் தழுவியதை அடுத்து, அந்தப் பிள்ளை உத்தியோகம், பொருளாதாரம், அப்பாவின் சாயலில் மகன், அம்மாவின் சாயலில் மகள் என்றெல்லாம் வளர்ந்து வருவதை, வளர்ந்திருப்பதை பார்க்க அவர்கள் இல்லையே என்பதுதான் பெரும்பான்மையானவர்களின் தனித்த சோகம். இதில் ஒரே ஆறுதல்... ஆயுள்பரியந்தம் வரை தொடர்ந்திருக்கும் மனைவி என்பவள்தான். சொல்லப்போனால், உத்தியோக, பொருளாதார வளர்ச்சியிலும் கவுரவ, அந்தஸ்து பெருமைகளிலும் மனைவியின் பங்கு இருப்பதை எவரும் மறுக்கமுடியாது.

இப்படி ஒவ்வொரு தருணங்களிலும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் மனைவியே நம்மை முதன்மையாக்குகிறாள். நம்மை முதன்மையாக்குவோரில் முதல் ஆளாக இருக்கிறாள். வீட்டு டென்ஷனை அலுவலகத்தில் காட்டிவிடமுடியுமா? ஆனால் வீட்டு டென்ஷனை வீட்டில் காட்டுவதுடன் அலுவலத்தின் இடைஞ்சல், பிக்கல் பிடுங்கல்களையும் சேர்த்து வீட்டில் கோபமாய் கொட்டித் தீர்க்கலாம். முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்ளலாம். வீட்டார் அனைவரிடமும் எரிந்துவிழலாம். நம் அத்தனை களேபரங்களையும் ஒரு காபி, ஒரு புன்னகை, ஒரு தலைகோதல் செய்துவிடும். இந்த மாமருந்து மனைவிதான் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்தானே?

'வீட்ல நல்லபேர் எடுக்காதவன், ஊர்ல நல்ல பேர் எடுத்தும் புண்ணியமில்லை!' என்று ஊர்ப்பக்கத்தில் சொல்லுவார்கள். வீட்டில் நல்ல பேர் எடுத்துவிட்டால், ஊரில் மட்டுமல்ல... உலகத்தில் கூட நல்லபேர் எடுத்துவிடலாம் என்பதே உண்மை.

என் நண்பர் காலை உணவுக்கு முன்னும் பின்னும் மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார். இரவிலும் அப்படியே எடுத்துக் கொள்வார். ஆனால் மனைவி ஊரில் இல்லாத ஒரு நாளில், எந்த மாத்திரை உணவுக்கு முந்தையது, எதெல்லாம் சாப்பாட்டுக்குப் பிறகு என்பதெல்லாம் தெரியாது அவருக்கு. அந்த அளவுக்கு குழந்தையைப் போல் பார்த்துக் கொள்கிறார் அவரின் மனைவி என்று நெக்குருகிச் சொன்னார்.

இன்னொரு நண்பர். அவரின் அப்பாவுக்கு பிஸ்னஸ். சம்பாதிப்பது மட்டுமே அவர் வேலை. ஆனால் சம்பாதித்த பணத்தை எப்படியெல்லாம் முதலீடு செய்து, சேமித்து, பெருக்கி வைப்பது அவர் மனைவிக்கு கைவந்த கலை. இத்தனைக்கும் மனைவி, பிளஸ் டூவுக்கு மேல் படிக்கவில்லை. ஒருகட்டத்தில் கணவரின் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், தன்னால் என்னவெல்லாம் செய்யமுடியும் என அடுத்தடுத்த விஷயங்களைக் கற்றுக் கொண்டு, இன்றைக்கு மிகப்பெரிய சொத்துகளை சேர்த்துத் தந்திருக்கிறார். இதை ஒவ்வொரு தருணத்திலும் சிலாகித்துச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

நம்முடைய பிளஸ், மைனஸ், நல்லதுகெட்டது, வேகம், சோம்பேறித்தனம், நிதானம், குழப்பம், தெளிவு, பக்குவம், உற்சாகம், சோகம் என அனைத்தையும் நம்மைவிட அறிந்தவர் மனைவிதான் என்கிறார்கள். அவரிடம் நம்மை முழுவதுமாக ஒப்படைத்துவிடவேண்டும். இது மனைவிக்கும் பொருந்தும்.

இங்கே ஓர் லட்சுமணன் கோடு போல் ஒன்று இருப்பது சிக்கலில்லை. அதைத் தாண்டிக் கொண்டே இருப்பதுதான் நமக்கான சிக்கல் பிக்கல்கள். 'மனைவி சொல்லே மந்திரம்' என்றொரு புகழ்பெற்ற வார்த்தை உண்டு. மனைவியின் சொல்லை மந்திரமாக ஏற்று நடந்தாலே, இங்கே எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை. அல்லது பிரச்சினைகளையெல்லாம் ஊதித்தள்ளிவிடலாம்.

'தாய்க்குப் பின் தாரம்' என்பது சும்மா வாய்வார்த்தைக்கான சொல்லாடல் இல்லை. சத்திய வார்த்தை!. தாய்க்குப் பின் தாரம் என்பது, அம்மாவுக்குப் பிறகுதான் மனைவி என்று அர்த்தமல்ல. அம்மாவிற்குப் பிறகு அந்த இடத்தை நிரப்புவள் மனைவியே என்று அர்த்தம்.

மனைவி சொன்னதை மீறி எதுவும் செய்யாதவரா நீங்கள்?

ஏதேனும் செய்வதாக இருந்தால், மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வீர்களா?

ஏதேனும் ஒரு விஷயத்தை செய்துவிட்டு, பிறகு மனைவியிடம் சொல்லிவிடுவீர்களா?

ஆபீஸ் முடிந்து எவ்வளவு நேரம் கழித்து வீட்டுக்கு வந்தாலும், அரைமணி நேரமேனும் மனம் விட்டுப் பேசுவீர்களா?

அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டு முடித்த கையுடன், மனைவிக்கு போன் செய்து 'சாப்பிட்டாச்சா'  என்று கேட்கிறீர்களா?

உங்கள் தோழி அல்லது அலுவலகத் தோழியின் செல்போன் எண்களை, புரியாத கோட்வேர்டில் பதிவு செய்திருக்கிறீர்களா? அல்லது பெயரே பதிவு செய்திருக்கிறீர்களா?

உங்களின் தோழி, உங்கள் மனைவிக்கும் தோழியா?

காலையில் இருந்து என்னென்ன நடந்தது என்பதை மனைவியிடம் ஒன்றுவிடாமல் சொல்லமுடிகிறதா உங்களால்?

'நீங்கள் என்னை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால், உங்களை நோக்கி நான் பத்தடி எடுத்துவைக்கிறேன்' என்கிறார் பகவான் கிருஷ்ண பரமாத்மா.

பகவான் கிருஷ்ணர் அப்படியா ? தெரியவில்லை. ஆனால் மனைவி என்பவர் அப்படித்தான். மனைவியே சகலமும் என நினைத்து வாழும் கணவர் அவ்விதம்தான்.

நம் எல்லோருக்குள்ளும் குழந்தைமை இருக்கிறது. பையனோ பெண்ணோ, முதுகுக்குப் பின்னால் வந்து, கண்களை மூடும். அந்த ஸ்பரிசத்தை வைத்தே, யார் மூடியது? என்பது நமக்குத் தெரியும். ஆனால், வேண்டுமென்றே சொல்லமாட்டோம். பக்கத்து வீட்டுப் பையன், எதிர்வீட்டுப் பெண், நண்பர்கள், மனைவி, பாட்டி என ஒவ்வொரு பெயராக, சொல்லிக்கொண்டே வருவோம். ஒருகட்டத்தில், 'நல்லா ஏமாந்தியா... நாந்தான்!' என்று முன்னே வந்து நின்று, கழுத்தைக் கட்டிக் கொள்வார்கள். அங்கே தோற்றது நாமா? குழந்தையா? எவருமே தோற்கவில்லை! இரண்டுபேருமே வெற்றியாளர்கள்!!

அப்படித்தான், கணவன் மனைவி உறவு. பிணைந்த பந்தம். இங்கே, தோற்றவர்கள், ஜெயித்தவர்களாகிறார்கள் என்பதே வாழ்க்கைக் கணக்கு !

ஆகவே, மனைவியிடம் சந்தோஷமாக தோற்றுப் போங்கள். நீங்கள்தான் வெற்றி பெற்ற பாக்கியசாலி..!

 

காமதேனு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

இதில் கோபாலகிருஷ்ணனை நோக்கி திட்டு வேறை..!

அவனைத் திட்டமால் வேறு யாரை நான் திட்டுவது?

கோபாலகிருஷ்ணன் பேசாமல் மூடிட்டு பொத்திட்டு (தயவு செய்து தப்பான கருத்தை எடுத்துவிடாதீர்கள்) இருந்திருக்கலாம்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

என் நண்பர் காலை உணவுக்கு முன்னும் பின்னும் மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார். இரவிலும் அப்படியே எடுத்துக் கொள்வார். ஆனால் மனைவி ஊரில் இல்லாத ஒரு நாளில், எந்த மாத்திரை உணவுக்கு முந்தையது, எதெல்லாம் சாப்பாட்டுக்குப் பிறகு என்பதெல்லாம் தெரியாது அவருக்கு. அந்த அளவுக்கு குழந்தையைப் போல் பார்த்துக் கொள்கிறார் அவரின் மனைவி என்று நெக்குருகிச் சொன்னார்.

இது சத்தியமா மூளைச்சலவைதான்.

மனைவி இல்லாவிட்டால் இந்த மாத்திரை மருந்தெல்லாம் தேவை இல்லை என்பது  எத்தனை கணவர்மார்களுக்கு புரியுதோ இல்லையோ ராசவன்னியனுக்கு சத்தியமாபுரியப் போவதில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

இது சத்தியமா மூளைச்சலவைதான்.

மனைவி இல்லாவிட்டால் இந்த மாத்திரை மருந்தெல்லாம் தேவை இல்லை என்பது  எத்தனை கணவர்மார்களுக்கு புரியுதோ இல்லையோ ராசவன்னியனுக்கு சத்தியமாபுரியப் போவதில்லை?

சாமிகளே,

நீங்கள் இதுவரை மனைவியை பிரிந்திருந்ததில்லை போலும்.. அத்துவான அந்நிய நாட்டில் குடும்பத்தைக்கொண்டு வந்து வாழ்ந்தால் உங்களின் 'லொள்ளு'களை சகித்துக்கொண்டுதானே வாழவேண்டும்..? :unsure:

தங்கள் தலையில், 'ரெண்டு போடு போட்டுவிட்டு' தன் பிறந்தகமும் செல்ல இயலாது..!!  couil.gif

மனைவி இல்லாமல் சில நாள் வாழ்ந்து பாருங்கள்.. புரியும்! ( 'சின்ன வீடு' இல்லையென நினைக்கிறேன்..! :grin: )

2 hours ago, Kavi arunasalam said:

மனைவி இல்லாவிட்டால் இந்த மாத்திரை மருந்தெல்லாம் தேவை இல்லை என்பது  எத்தனை கணவர்மார்களுக்கு புரியுதோ இல்லையோ..

கவனிக்க கேட்பாரற்று, அநாதையாக மண்டையை போட்டபின் மருந்து, மாத்திரை தேவை இல்லைதானே..? :)

2 hours ago, Kavi arunasalam said:

..கோபாலகிருஷ்ணன் பேசாமல் மூடிட்டு பொத்திட்டு (தயவு செய்து தப்பான கருத்தை எடுத்துவிடாதீர்கள்) இருந்திருக்கலாம்தானே?

மனைவியின் அருமை தெரிந்து, உங்களை பயன்படுத்தி காரியம் சாதித்த அவர் புத்திசாலி சார்..!  vil-langue.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியன் நாங்கள் இணைய உறவாக இணைந்த போதிலும் நான் இதைச் சொல்ல வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு என்னை ஆளாக்கி விட்டீர்கள்.....! tw_blush: 

கண்ணாடிக்கு எதிரில் நின்றால், உங்கள் முகத்திற்குப் பதில், உங்களின் மனைவி முகம் தெரிகிறதா..? 

கண்ணாடி இல்லாத கதவிலேயே அவள் முகம்தான் தெரிகிறது. எங்கும் வியாபித்து இருக்கிறாள்....!

தாய்க்குப் பின் தாரம்' என்பது சும்மா வாய்வார்த்தைக்கான சொல்லாடல் இல்லை. சத்திய வார்த்தை!. தாய்க்குப் பின் தாரம் என்பது, அம்மாவுக்குப் பிறகுதான் மனைவி என்று அர்த்தமல்ல. அம்மாவிற்குப் பிறகு அந்த இடத்தை நிரப்புவள் மனைவியே என்று அர்த்தம்.

அநேகமான தருணங்களில் அம்மாவின் பின் நின்று போட்டு குடுப்பதால்தான் தாய்க்கு பின் தாரமாகிறாள்....!

மனைவி சொன்னதை மீறி எதுவும் செய்யாதவரா நீங்கள்?

முயற்சித்ததுண்டு ஆனால் முடிந்ததில்லை.....!

ஏதேனும் செய்வதாக இருந்தால், மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வீர்களா?

இல்லை, சொன்னால் செய்ய விட மாட்டாள்....! 

ஏதேனும் ஒரு விஷயத்தை செய்துவிட்டு, பிறகு மனைவியிடம் சொல்லிவிடுவீர்களா?

சொல்வதில்லை , ஆனாலும் அவங்களுக்கு மூக்கிலே வேர்த்திடும்.....!

ஆபீஸ் முடிந்து எவ்வளவு நேரம் கழித்து வீட்டுக்கு வந்தாலும், அரைமணி நேரமேனும் மனம் விட்டுப் பேசுவீர்களா?

பேசுவதை மனத்தை விட்டு விட்டு கேட்பதுண்டு.....!

அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டு முடித்த கையுடன், மனைவிக்கு போன் செய்து 'சாப்பிட்டாச்சா'  என்று கேட்கிறீர்களா?

 யாராவது கொள்ளிக் கட்டையால தலையை சொறிவார்களா.....!

உங்கள் தோழி அல்லது அலுவலகத் தோழியின் செல்போன் எண்களை, புரியாத கோட்வேர்டில் பதிவு செய்திருக்கிறீர்களா? அல்லது பெயரே பதிவு செய்திருக்கிறீர்களா?

ஒருமுறை எனது போனில் பிள்ளைகள் எதோ நம்பர் தேடி இருக்கிறார்கள்.(அதுக்கு பூட்டும் கிடையாது சாவியும் கிடையாது). அதில் பல்லவி என்ற பெயரை பார்த்து விட்டு யாரம்மா பல்லவி இங்கு அப்படி யாரும் இல்லையே என்று அந்த எண்ணுக்கு போன் போட்டிருக்கினம். யாரோ பிரெஞ்சு பொம்பிளை அம்மா  என்றுபோட்டு கதைக்க அவ கேட்டிருக்கிறா.... உங்களின் பெயர் சொல்லுங்கோ, உங்களுக்கு எப்ப அப்பாயின்மென்ட் வேணும், எத்தனை நாளா பல்லு கொதி என்று..... அதோடை போனை எறிஞ்சு போட்டு போட்டினம்......!

உங்களின் தோழி, உங்கள் மனைவிக்கும் தோழியா?

என் மனைவியின் தோழி எனக்கும் தோழிதான்....!

காலையில் இருந்து என்னென்ன நடந்தது என்பதை மனைவியிடம் ஒன்றுவிடாமல் சொல்லமுடிகிறதா உங்களால்?

யெஸ், ஆனால் அவர்கள் எதிர்பார்க்கிற சுவாரஸ்யம் அதில் இருக்காது. கொட்டாவி விட்டுட்டு போக வேண்டியதுதான்....!

'நீங்கள் என்னை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால், உங்களை நோக்கி நான் பத்தடி எடுத்துவைக்கிறேன்' என்கிறார் பகவான் கிருஷ்ண பரமாத்மா.

நான் ஓரடி வைத்தால் அவர் பத்து மைலுக்கப்பால் பருந்தில பறக்கிறார்.....! tw_blush:  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் பதில்களைப் படித்து, சிரித்து சிரித்து மனமே லேசாகிவிட்டது, திரு.சுவி..:)

எனக்கும் ஏறக்குறைய இம்மாதிரி அனுபவம்தான்..

சம்பாதித்து வீட்டில் கொடுப்பதோடு சரி, திட்டமிட்டு செலவழித்து, எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, கொடுக்கும் நிதியில், வாழ்க்கையை, குழந்தை செல்வங்களை, தற்பொழுது பேரனை செம்மைப் படுத்துவது, மனைவிதான்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/03/2018 at 11:10 AM, ராசவன்னியன் said:

தங்கள் தலையில், 'ரெண்டு போடு போட்டுவிட்டு' தன் பிறந்தகமும் செல்ல இயலாது..!!  couil.gif

8_C1_D5335-949_C-4_B33-_BC2_B-59_F838_DB

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கோபால கிருஸ்ணனைத் திட்டிக்கிறீர்கள். கோபாலகிருஸ்ணன் இல்லாவிட்டாலும் , வேறு யாரையாவது கல்யாணம் கட்டியிருப்பீர்கள். யாரைக்கட்டினாலும் அடி, திட்டு வாங்குவது நிச்சயம். உலகத்தில் நடக்கிறதினைத்தான் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.