Jump to content

சாய் பல்லவி முதல் ஷாலினி பாண்டே வரை... அறிமுகத்துக்கு முன்னரே மனதை அள்ளிய ஹீரோயின்கள்!


Recommended Posts

சாய் பல்லவி முதல் ஷாலினி பாண்டே வரை... அறிமுகத்துக்கு முன்னரே மனதை அள்ளிய ஹீரோயின்கள்!

 
 

இன்றைய தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் ஹீரோயின்களில் 90 சதவிகிதம் மற்ற மாநிலத்தில் இருந்துதான் களமிறங்குகிறார்கள், களமிறக்கப்படுகிறார்கள். அடுத்தடுத்து கமிட்டாக அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்று சொல்லுமளவிற்கு கோலிவுட்டிற்குள் ஒன்றிவிடுகிறார்கள். முன்பெல்லாம் ஒரு கதாநாயகி ஒரு தமிழ் படத்திலாவது நடித்து முகம் தெரிந்தால்தான் அவர்களைக் கொண்டாடுவார்கள், அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாவார்கள். ஆனால், இன்றோ ஒரு படத்தில்  கமிட்டாகி அதற்கான ஸ்டில்ஸ் வெளியே வந்தவுடனேயே அவர்கள் கனவுக்கன்னியாக மாறிவிடுகிறார்கள். அப்படித் தமிழில் இன்னும் தங்களின் நடிப்பில் ஒரு படம்கூட வெளிவராத நிலையில், ஒரு சில கதாநாயகிகளின் பெயர்கள் முன்னனி ஹீரோயின்களின் வரிசைக்கு பிறகு பேசப்பட ஆரம்பித்திருக்கிறது. அப்படி கோலிவுட் பக்கம் பறந்து வந்த பைங்கிளிகள் யார் யார் என்று பார்க்கலாம்.
 

சாய் பல்லவி : 

 

சாய் பல்லவி

இவர் பெயரை சொன்னால் தெரியாத ஆட்களே இருக்கமாட்டார்கள். 'பிரேமம்' படம் மூலம் மலர் டீச்சராக அனைவர் மனதையும் கவர்ந்தவர், இன்னும் தமிழில் ஒரு படம்கூட நடிக்கவில்லை என்றால், 'அப்படியா?' என்பார்கள் பலர். மலையாளம், தெலுங்கு என இரு மொழிகளிலும் தனக்கான சில கொள்கைகளுடன் தன் பெயரை மீண்டும் நிலைநிறுத்தி வருகிறார். மலர் டீச்சர் கோலிவுட் பக்கம் எப்போது வருவீர்கள்? என்ற கேள்வி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழ, அழகாக தன் 'கரு' கதையின் மூலம் கோலிவுட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார், இயக்குநர் விஜய். இதனைத் தொடர்ந்து தனுஷுடன் 'மாரி 2', சூர்யாவுடன் 'என்.ஜி.கே' என அடுத்தடுத்து படங்களின் மூலம் தமிழ் சினிமா சாய் பல்லவியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. 

ராஷி கண்ணா : 

ராஷி கண்ணா

ஹிந்தி, தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்த ராஷி கண்ணா, தமிழ் சினிமாவிற்குள் இப்போதுதான் என்ட்ரி கொடுத்துள்ளார். சித்தார்த் நடிக்கும் 'சைத்தான் கா பச்சா' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதுபோக, 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யப் ஆகியோருடன் ராஷி கண்ணாவும் சேர்ந்து நடித்துள்ளார். 'மற்ற மொழிப் படங்கள் நிறைய பண்ணியிருந்தாலும், தமிழில் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது' என்று துடிப்புடனும் சுறுசுறுப்புடனும் கோலிவுட்டில் வலம் வருகிறார் ராஷி. தற்போது, ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'அடங்க மறு' படத்தில் நடித்து வருகிறார். 

ஹூமா குரேஷி :

ஹுமா குரேஷி

இந்தி, மராத்தி என பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர், ஹூமா குரேஷி. 'பில்லா 2' படத்தில் அறிமுக நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தபோது அவருடைய மற்ற கமிட்மென்ட்ஸ் காரணமாக அதில் நடிக்க முடியாமல் போனது. துணை நடிகையாகத் தன் திரைப்பயணத்தைத் தொடர்ந்த ஹூமா குரேஷி, தற்போது கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 'காலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுக்கவுள்ளார். முதல் தமிழ் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படம் என்பதால், அவரது க்ராஃப் மேலும் ஒரு படி ஏறியிருக்கிறது. 

ஷாலினி பாண்டே : 

ஷாலினி பாண்டே

'அர்ஜுன் ரெட்டி' என்ற ஒரு படமே இவரை இந்திய சினிமா முழுக்கப் பேசவைத்தது. அந்தளவிற்குத் தன் நடிப்பிலும் எக்ஸ்ப்ரஷனிலும் கலக்கியவரை கோலிவுட் இயக்குநர்கள் அப்ரோச் செய்து, தமிழ்நாட்டுப் பக்கம் அழைத்து வந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமாருடன் '100% காதல்', ஜீவாவுடன் 'கொரில்லா' என அடுத்தடுத்து இரண்டு படங்களில் பிஸியாக இருக்கிறார். 'அர்ஜுன் ரெட்டி'யின் தமிழ் ரீமேக்கான 'வர்மா' படத்தில் விக்ரம் மகன் துருவிற்கு ஜோடியாக இவர்தான் நடிக்கிறார் என்ற செய்திகளும் பரவின. அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது படக்குழு. 
 

மேகா ஆகாஷ் : 
 

மேகா ஆகாஷ்

 

தெலுங்கில் 'லை' என்ற படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தைத் தொடங்கிய மேகா ஆகாஷ், தமிழில் முதலில் கமிட்டான படம் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமிற்கு ஜோடியாக நடித்த 'ஒரு பக்கக் கதை'. இந்தப் படத்தை முடித்த கையோடு கெளதம் வாசுதேவ் மேனன் கண்ணில்பட, 'என்னை நோக்கி பாயும் தோட்டா'வில் தனுஷ் ஜோடியாக நடிக்க வாய்பப்பு அமைந்தது. இந்தப் படத்தின் 'மறுவார்த்தை பேசாதே', 'விசிறி' பாடலைப் பார்த்து மறுவார்த்தை பேசாமல் மறுபடியும் தொடர்ந்து ரிப்பீட் மோடில் பார்த்தனர், தமிழ் சினிமா ரசிகர்கள். இதனைத் தொடர்ந்து, கண்ணன் இயக்கத்தில் அதர்வாவுடன் 'பூமராங்' படத்தில் நடித்து வருகிறார்.

இவர்கள் மட்டுமல்ல, இது போன்ற எத்தனை நடிகர்கள், கலைஞர்கள் வந்தாலும் வரவேற்கத் தவறியதில்லை கோலிவுட். இனியும் தவறாது. போதாக்குறைக்கு இந்த ஸ்டிரைக் காரணத்தினால் இவர்கள் நடித்த படங்கள் வெளியாகமல் இருக்கிறது. ஸ்டிரைக் முடிந்து படங்கள் ரிலீஸானால், இவர்களுக்கு மேலும் வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கலாம். 

https://cinema.vikatan.com/tamil-cinema/news/119541-heroines-became-popular-without-any-debut-in-kollywood.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686 @colomban
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.