Jump to content

"நாவின் சுவையே வாழ்வின் சுவை"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாவின் சுவையே வாழ்வின் சுவை" என உணர்த்தும் யுகாதியின் சிறப்பம்சமான Azadirachta indica என்ற வேம்பு தோன்றியது இந்தியாவில்.

DYiqlv2V4AAIBsJ.jpg

Neem, Margosa, Nimba, Neem des Indes என அழைக்கப்படும் வேம்பு, இந்தியா, இலங்கை, மியான்மர், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன.

DYiq8HpVwAAW-kH.jpg

Azaddhirak என்ற பெர்சிய சொல்லுக்கு விலைமதிப்பற்ற மரம் என்ற பொருளாம்.. Nimba என்ற சமஸ்கிருத சொல், ஆரோக்கியம் என்ற பொருள்தரும்..

DYirZC_UQAAQ08U.jpg

கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலும், சுஷ்சுருத, சாரக சம்ஹிதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள வேம்பு, ஐயாயிரம் ஆண்டுகள் பழமை மிகுந்த மரமாகும்..

DYirmEEU0AESGJO.jpg

மண்வளம், நீர்வளம் குறைந்த வறட்சிப் பகுதிகளிலும் நன்கு வளரும் வேப்ப மரங்களின் இலை, கனி, விதை, கிளை, பட்டை அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை

DYir-ACVQAA7iS-.jpg

கசப்பே உருவான வேப்பிலையில் அடங்கியுள்ளது அனைத்து மருத்துவ குணங்களும்..

வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து அமினோ அமிலங்கள், கால்சியம், காப்பர், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீஸ் நிறைந்துள்ளன..

DYiskJgUQAAo5bh.jpg

கசப்புத்தன்மை குறைவாக உள்ள கொழுந்து வேம்பு இலைகளில் வைட்டமின் A மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது..

DYisuEyV4AAnzds.jpg

Azadirachtin வேம்பின் கசப்பு சுவைக்கு காரணமாக உள்ளது. Triterpene, Beta Sitosterol, Tannins, ஆகியன வேம்பின் மருத்துவ குணங்களுக்கு உதவுகின்றன.

DYis9tNVQAAdYle.jpg

சளி, காய்ச்சல், ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய்கள், வயிற்று அமிலம், குடல் அழற்சி, காமாலை, சிறுநீரக நோய்கள் ஆகியவற்றில் வேப்பிலை உதவுகிறது

DYitVqfVoAAbb2Z.jpg

நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய், உடற்பருமன் ஆகியவற்றில் பயனளிக்கும் வேம்பு, கண்நோய், பற்சிதைவு, மூட்டுவலி ஆகியவற்றிலும் உதவுகிறது.

DYitvh0VoAAIAfS.jpg

காயங்களுக்கு சிறந்த மருந்தான வேப்பிலை, நாள்பட்ட தோல் நோய்கள், சிரங்கு, முகப்பரு மற்றும் சொரியாசிஸ் ஆகியவற்றிலும் பயன்படுகிறது..

தட்டம்மை, சிக்கன்பாக்ஸ் போன்ற வைரஸ் காய்ச்சலில் நோய் பரவாமலும், தழும்புகள் ஏற்படாமலும் இருக்க வேப்பிலை கொழுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன..

DYit9wDU0AAyaU9.jpg

வேப்பிலையின் Nimbin, Nimbinene, Flavonols போன்றவை இவற்றிற்கு antiviral, antibacterial, antifungal நோயெதிர்ப்பு பண்புகளைத் தருகின்றன..

DYiuUnVUMAAyQt9.jpg

DYiuUnVUMAAyQt9.jpg

சமீபத்திய ஆய்வில் வேப்பிலையின் Azadirachtin, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைத்து, நோய் பரவாமல் தடுக்க உதவும் என கண்டறியப்பட்டுள்ளது..

DYiux1fU0Acrh56.jpg

மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும், பூச்சிக்கொல்லியாகவும் விளங்கும் வேப்பிலையின் புகை வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்..

DYiu6cMUQAER7yp.jpg

தீங்கனி இரவமொடு வேம்புமனை எனும் புறநானூற்று பாடலில் விழுப்புண் கொண்ட போர்வீரனின் மனையில் இரவம் வேம்பு இலைகள் செருகி என குறிப்பிடப்பட்டுள்ளது

DYiwx9eU8AAHHIP.jpg

வேப்பம்பூவிலிருந்து வேப்பம்பூ பச்சடி, ரசம், வடகம் ஆகியன தயாரிக்கலாம். இளந்தளிர்களின் சாற்றில் தேநீர் மற்றும் கசாயம் தயாரிக்கப்படுகிறது..

DYiw5NUUQAAtjjH.jpg

வேப்ப விதைகளிலிருந்து பெறப்படும் வேப்பெண்ணெய் (Margosa oil) மருத்துவ ரீதியாக பல பயன்களைத் தருகின்றது..

DYixGlzVMAA24wn.jpg

மோகினி அவதாரம் கொண்ட விஷ்ணுவிடம் சொர்ணபானு என்ற அசுரன் ஏமாற்றிப் பெற்ற அமிர்தத்தை கக்கியதால் உருவானது வேம்பு என புராணங்கள் கூறுகின்றன..

DYixTmEUQAA3wB2.jpg

கல்ப விருட்சம் போன்ற மரத்தினை பூமிக்கு வழங்கிட இந்திரன் தூவிய அமிர்தமே வேம்பாக வளர்ந்தது என்றும் கூறப்படுகிறது..

DYixdooV4AA2Kc9.jpg

கிழக்கு ஆப்பிரிக்காவில், வேம்பு Mwarunaini, அதாவது நாற்பது மருத்துவ குணங்களின் மரம் என்றே அழைக்கப்படுகிறது..

DYixq1nVQAAA1Ub.jpg

ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம்மிடையே பயன்பாட்டில் உள்ள வேம்பினை, 2000 ஆண்டில்தான் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன..

DYix04RVwAAu9Yj.jpg

வசந்தத்தை வரவேற்கும் யுகாதி இன்று.. யுகாதியை வரவேற்போம் இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு சேர்ந்ததொரு பச்சடி கொண்டு..

DYix8fAUMAEsjHD.jpg

அமிர்தம் போல இனிக்கும் பலன்களைத் தருகின்ற கசப்பான வேம்புடன் அனைவருக்கும் இனிய யுகாதி தின நல்வாழ்த்துகள்..

DYiyKoiU8AEfkhz.jpg

twitter......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/18/2018 at 10:47 AM, குமாரசாமி said:

ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம்மிடையே பயன்பாட்டில் உள்ள வேம்பினை, 2000 ஆண்டில்தான் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன..

ஊரில் வீட்டுக்கு வெளியே நிற்கும் வேம்பை எமது வீட்டில் உள்ளேயே வைத்து வளர்க்கிறோம்.கிழமையில் இரு நாட்களாவது 4 -5 இலைகளை தின்னத்தந்து தானும் சாப்பிடுவார் மனைவி.பிள்ளைகளுக்கும் தொண்டை நோவு இருமல் என்றால் தின்னக் கொடுப்பார்கள்.பேசிப்பேசி சாப்பிடுவார்கள்.இதிலே கழிவு என்று ஒன்றுமே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேப்பம் பூ  வடகம், ரசம் சூப்பராய் இருக்கும்......! பகிர்வுக்கு நன்றி கு. சா.....! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.