Jump to content

பெண் பிறப்புறுப்பை அழகுப்படுத்தும் அறுவை சிகிச்சை: அவசியமா? பாதுகாப்பானதா?


Recommended Posts

பெண் பிறப்புறுப்பை அழகுப்படுத்தும் அறுவை சிகிச்சை: அவசியமா? பாதுகாப்பானதா?

பெண்கள் தங்களுடைய பிறப்புறுப்பு சாதாரணமாக தோன்றுகிறதா என்பதை சோதித்து பார்ப்பதற்கு உதவும் வகையில், புதியதொரு ஆன்லைன் வழிகாட்டி பதின்ம வயது பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் அடிவயிறுபடத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTSCIENCE PHOTO LIBRARY

பாலியல் சுகாதார சேரிட்டி புரூக் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தரவுகளும், காட்சியாக வழங்கப்பட்டுள்ள உதாரணங்களும், பெண்கள் வயதுக்கு வருகின்றபோது, அவர்களின் பிறப்புறுப்புகள் எவ்வாறு மாறுகின்றன என்பது பற்றிய அறிவுறுத்தல்களை வழங்குகின்றன.

பெண்களுக்கு தங்களின் உடல் பற்றிய நம்பிக்கையை வழங்குவதோடு, தங்களின் பிறப்புறுப்பை தங்கள் விருப்பப்படி தோன்ற செய்வதற்கு 'அழகு வடிவமைப்பு அறுவை சிகிச்சை' மேற்கொள்ள பெண்கள் விரும்புவதையும் இது தணிக்கும் என்று இந்த வசதியை உருவாக்கியுள்ள நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய அறுவை சிகிச்சைகள் 18 வயதுக்கு கீழானோர் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.

வடிவத்தை மாற்றும் அல்லது பெண்ணின் பிறப்புறுப்பின் இதழ்களை அல்லது உதடுகளை சிறியதாக்குவதற்கு, தனிப்பட்ட மருத்துவர்களால் செய்யப்படுகின்ற பெரும்பான்மையான பெண் பிறப்புறுப்பு அழகு அறுவை சிகிச்சைகள் ஆயிரக்கணக்கான பவுண்ட்கள் செலவை உருவாக்குபவை.

பெண்ணின் பிறப்புறுப்பின் உதடுகளில் அசாதாரண நிலைமை அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்துதல், அல்லது அவரது உடல் நலத்தை கெடுப்பதாக இருந்தால், தேசிய சுகாதார சேவையால் அவ்வப்போது ஓர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

அழகுபடுத்துவதற்காக மட்டுமே பெண்களை இந்த அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைப்பதற்காக மருத்துவ தொழில்துறை இயங்கவில்லை.

பிரிட்டன் தேசிய சுகாதர துறையின் புள்ளிவிபரங்களின்படி, 2015-16 ஆண்டு 18 வயதுக்கு கீழுள்ள 200க்கு அதிகமான பெண்கள் தங்களின் பிறப்புறுப்பில் 'அழகு அறுவை சிகிச்சை' செய்துள்ளனர். அதில் 150 பேர் 15 வயதுக்கு கீழானோர் ஆவர்.

பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையின் சிகிச்சை மைய நிபுணரும், இந்த திட்டத்தின் துணை வழிநடத்துனருமான லுயிஸே வில்லியம்ஸ் இது பற்றி குறிப்பிடுகையில், இளம் பெண்கள் தங்களின் பிறப்புறுப்பின் தோற்றத்தை பற்றி புரிந்து கொள்ள இது வழிவகுக்கும்.

வயதுக்குவருகின்றபோது, பெண்களின் பிறப்புறுப்பு வளர்ச்சி, குறிப்பாக அவர்கள் அப்போதைய வளர்ச்சியை எவ்வாறு பார்ப்பார்கள் அல்லது உணருவார்கள் என்பது பற்றி புரிதல் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

வரைபடம்படத்தின் காப்புரிமைBRITSPAG

"பெண்ணின் பிறப்புறுப்பின் வடிவமும், அளவுகளும் வேறுபட்டதாக இருக்கின்றன என்றும், அவர்களுக்கு அறிவுரையும், ஆதரவும் வேண்டுமென்றால் எங்கு செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவும் இது உறுதியளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று லுயிஸே வில்லியம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

ராயல் கல்லூரியின் மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவரும், குழந்தை மற்றும் குமரப்பருவ மகப்பேறுக்கான பிரிட்டன் சொசைட்டியை சேர்ந்த மருத்துவ நிபுணருமான டாக்டர் நௌமி குரோஞ்ச் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், பெண்ணின் பிறப்புறுப்பை சிறப்பாக தோன்ற செய்ய அழகு அறுவை சிகிச்சை செய்வதற்கு எந்தவித அறிவியல் சான்றுகளும் இல்லை.

அதிலும் குறிப்பாக, இன்னும், உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வளரும் நிலையிலுள்ள பதின்ம வயதினரால் இந்த மாதிரியான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு அறிவியல் சான்றுகளே இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

"இந்த ஆதரங்கள் பெண்களுக்கும், இளம் பெண்களுக்கும் தகவல்களை வழங்கும் என்றும், அவர்களின் பிறப்புறுப்பின் தோற்றம் தளித்தன்மையானது. அவர்களின் வாழ்க்கை முழுவதும் அதன் தோற்றம் மாற்றம் அடையக்கூடியது, அவ்வாறு அமைவதுதான் சாதரணமானதும், ஆரோக்கியமானதாகவும் ஆகும் என்பதை புரிய வைக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்" என்று நௌமி குரோஞ்ச் கூறியுள்ளார்.

பெண்ணின் பிறப்புறுப்பில் அழகு வடிவமைப்பு - என்ன தவறு நேரிடலாம்?

பெண்ணின் பிறப்புறுப்பை அழகு செய்வதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டால் கீழுவரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

  • ரத்தப்போக்கு
  • நோய்தொற்று
  • திசுக்களின் வடுக்கள்
  • பிறப்புறுப்புக்களின் உணர்திறன் குறைதல்

அறுவை சிகிச்சை ஏதேனும் மேற்கொண்டால் நேரக்கூடிய ஆபத்துகள் இவை:-

  • நரம்புகளில் ரத்த கட்டுதல்
  • மயக்க மருந்துக்கு மேசமான எதிர்வினை

 

http://www.bbc.com/tamil/science-43441663

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.