Jump to content

கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ‘ஸ்விட்ச் ஹிட்’ புகழ் கெவின் பீட்டர்சன்


Recommended Posts

கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ‘ஸ்விட்ச் ஹிட்’ புகழ் கெவின் பீட்டர்சன்

 

 
12THPIETERSEN

கெவின் பீட்டர்சன் : கோப்புப்படம்

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்(வயது37) தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று முறைப்படி அறிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியிலும் விளையாடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் லீக் டி20 போட்டியில் குயிட்டா அணி பிரதானச் சுற்றுக்கு தகுதிபெற பீட்டர்சன் முக்கியக் காரணமாக இருந்தார். இப்போது, பிரதானச் சுற்று போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது. இந்நிலையில், பிரதானச் சுற்றுகளில் குயிட்டாஅணியில் விளையாடப் போவதில்லை எனவும் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பீட்டர்சன் ட்விட்டரில் , இனிமேல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடமாட்டேன், நன்றி எனத்தெரிவித்துள்ளார். இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பீட்டர்சன் எழுதியுள்ளதில், ‘ உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் 4 ஆஷஸ் வெற்றிகள், ஒரு டி20 உலகக்கோப்பை வெற்றி, இந்தியாவை அவர்கள் நாட்டிலேயே தோற்கடித்தது, டெஸ்ட்போட்டி விளையாடுகளுடன் சதம் அடித்துவிட்டேன்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாகவும், ஆதரவாகவும் எனது குடும்பத்தார் இருந்தற்கு நன்றியை தெரிவிக்கிறேன். இக்கட்டான தருணங்களிலும், மகிழ்ச்சியான நேரங்களிலும் எனக்கு ஆதரவு அளித்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. அனைத்தையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். உங்களை என் விளையாட்டால் மகிழ்ச்சிப்படுத்தி இருப்பேன். கிரிக்கெட் விளையாட்டை நான் மிகவும் ரசிக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

பீட்டர்சன் முடிவை பாகிஸ்தான் லீக் அணியில் உள்ள குயிட்டா அணியும் வரவேற்றுள்ளது. அந்த அணியில் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில் ‘ உங்களை குயிட்டா அணி மிகவும் இழக்கிறது. அனைத்துக்கும் நன்றி. பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்முடியும் வரை நீங்கள் தொடர வேண்டும். உங்கள் முடிவை மதிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறி அந்த நாட்டுக்காக விளையாடி, ஓய்வு பெற்றவர் கெவின் பீட்டர்சன். ‘ஸ்விச் ஹிட்’ முறையை கிரிக்கெட்டில் பிரபலப்படுத்தியதில் பீட்டர்சனுக்கு முக்கியப் பங்காகும். அதாவது, வலதுகை பேட்ஸ்மேனான பீட்டர்சன் பந்துவரும்போது இடதுகை பேட்ஸ்மேன் பாணியில் அடித்து நொறுக்கி, பந்துவீச்சாளரை திணறடிப்பதுதான் ஸ்விச் ஹிட் முறைபேட்டிங்காகும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர்களில் ஒருநாள், டெஸ்ட், டி20 என 3 தரப்பு போட்டிகளிலும் அதிகமான ரன்கள் அடித்த 2-வது வீரர் பீட்டர்சன் ஆவார். இங்கிலாந்து வென்ற 4 ஆஷஸ் கோப்பைகளிலும் இவர் இடம் பெற்றுளார்.

104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பீட்டர்சன் 8 ஆயிரத்து181 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 23 சதங்கள், 35அரைசதங்கள் அடங்கும். 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பீட்டர்சன் 4ஆயிரத்து 440 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 9சதம், 25 அரைசதங்கள் அடங்கும். 37 டி20 போட்டிகளில் விளையாடி, 1,176 ரன்களும் சேர்த்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து அணியில் ஓரம் கட்டப்பட்டார் பீட்டர்சன். அப்போதே அனைத்து ஊடகங்களும் பீட்டர்சன் கதை முடிந்தது என எழுதின. இதையடுத்து உள்ளூர் போட்டிகளிலும், கிரி்கெட் லீக் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில், தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெறுவதாக இப்போது அறிவித்துள்ளார்.

பீட்டர்சன் முடிவை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் வரவேற்றுள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில்,’ பீட்டர்சன் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக முடித்துவிட்டீர்கள். இனிமேல் இருவரும் ஒரு கோப்பை தேநீரை சேர்ந்து குடிக்கலாம். சிறந்த பேட்ஸ்மேனான உங்களுடன் விளையாடியதை நினைத்து பெருமைப்படுகிறேன்’ எனத் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23281405.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீட்டர்ஸனின் துடுப்பாட்டம் மிகவும் சிறப்பானது. இவரின் சில ஆட்டங்களை நேரில் பார்த்துள்ளேன். துரிதமாக கால்களையும் ,துடுப்பையும் இயக்குவார் ( fast feet movements & hand speed), இவரது உயரமும் பந்தை விளாசுவதற்கு துணை.
அநேகமாக தொலைக்காட்சி சேவையில் இணைந்து நேர்முக வர்ணனை தொழிலை தொடர்வார் என்று நினைக்கின்றேன். இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சில காட்டு மிருகங்களை தத்தெடுத்து உதவி செய்து வருகின்றார்.

 எதிர்காலம் மேலும்  பிரகாசிக்க வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.