Jump to content

தேசிய கால்பந்து அணிக்கான தேர்வு வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வெவ்வேறாக இடம்பெறவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.


Recommended Posts

தேசிய கால்பந்து அணிக்கான தேர்வு வடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வெவ்வேறாக இடம்பெறவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

sl-football-team-696x463.jpg
 

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வுகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற நிலையில், இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்களுக்கான தேர்வுகள் வெவ்வேறாக இடம்பெறவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சர்வதேச அனுபவம் கொண்ட பயிற்றுவிப்பாளருமான பக்கீர் அலி கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி இலங்கை தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். 

 

இந்நிலையில், பக்கீர் அலியின் பயிற்றுவிப்பின்கீழ் இலங்கை அணி பங்குகொள்ளவுள்ள முதலாவது போட்டித் தொடராக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள சாப் சம்பியன்ஷிப் கால்பந்து தொடர் அமையவுள்ளது.  

எனவே, குறித்த தொடருக்கான இலங்கை அணியைத் தெரிவு செய்வதற்கான தேர்வுகளை பல கட்டங்களாக நடத்துவதற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் தீர்மானித்தது. அதேபோன்று இம்முறை A மற்றும் B என இரண்டு குழாம்களைத் தெரிவு செய்வதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேர்வுகளின் முதல் கட்டம் கடந்த மாத இறுதிப் பகுதியில் ஆரம்பமாகின.

இந்நிலையில், சம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கு கொள்ளும் அணிகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் l) தொடரில் பங்குகொள்ளும் அணிகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட வீரர்களுக்கான தேர்வுகள் மூன்று கட்டங்களாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளன.

 

இதன் அடுத்த கட்டமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான தேர்வுகள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளன. கால்பந்து சம்மேளனம் ஏற்கனவே தெரிவித்திருந்தமைக்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்களுக்கான தேர்வுகள் ஒரே முறையில் இம்மாதம் 16ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், அரியாலை கால்பந்து பயிற்சி மையத்தில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், குறித்த பகுதி வீரர்களுக்கு தேசிய அணியில் இணைவதற்கு சிறந்த முறையில் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு மற்றும் கிழக்கு வீரர்களுக்கு வெவ்வேறாக தேர்வுகளை நடத்த முடிவெடுத்ததாக இலங்கை தேசிய கால்பந்து அணியின் முகாமையாளர் சுனில் சேனவீர ThePapare.com இடம் தெரிவித்தார்.  

இதன்படி, வட மாகாணத்திற்கான தேர்வுகள் இம்மாதம் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் அரியாலை கால்பந்து பயிற்சி மையத்தில் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து, கிழக்கு மாகாணத்திற்கான தேர்வுகள் இம்மாதம் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.   

தேசிய கால்பந்து அணிக்கான தேர்வு குறித்து தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பக்கீர் அலி ThePapare.com இடம் வழங்கிய பிரத்தியேகமான பேட்டியில், ”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இங்குள்ளவர்களுக்கு தமிழ் மொழி தெரியாத காரணத்தினால் அவர்கள் தேசிய அணிக்கும், தேர்வுகளுக்கும் வருவதற்கு அஞ்சுகின்றனர்.

எனினும், எனக்கும் எமது முகாமையாளருக்கும் தமிழ், சிங்களம் உட்பட பல மொழிகள் தெரியும். எனவே, இதன் பிறகு வடக்கு, கிழக்கு வீரர்கள் எந்தத் தயக்கமும் இன்றி தேசிய அணியிலும், தேர்வுகளிலும் கலந்துகொள்ளலாம். அதுபோன்றே, குறித்த பகுதி வீரர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த நாம் முன்பைவிட அதிகமான வாய்ப்புக்களை வழங்குவோம். அங்குள்ள தலைசிறந்த வீரர்களையும் நாட்டிற்காக விளையாட வைப்பதே எமது இலக்கு” என்றும் தெரிவித்தார்.  

குறித்த தேர்வுகளும், முன்னர் இடம்பெற்ற தேர்வுகளைப் போன்று ஒவ்வொரு நாளும் தலா இரண்டு கட்டங்களைக் கொண்டதாக அமையும். இதன்போதும் தேர்வுகளுக்கு வரும் வீரர்களுக்கான தங்குமிட மற்றும் உணவு வசதிகள் இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலையும் பிரிதாழ்வுதான்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.