Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆசைகளின் அலைதலுடன்

அவாக்கொண்டு காத்திருந்தேன்

 

எத்தனை ஆண்டுகள் ஆனபின்னும்

அத்தனை முகங்களும் கண்முன்னே

கனதியாய் கண்ணாமூச்சியாடியபடி

காலம் எண்ணிக் காத்திருந்தேன் 

 

கனவுகளின் கால்பரப்பலுடன்

மனத்துள் நெருடிய முள்ளகற்றி

என் தேசம் என்னும் எண்ணம் அகன்றிட

ஆர்ப்பரித்த மனம் அடங்கிப் போனது

 

மனித முகங்கள் முதிர்வாய் மாறி

ஊரின் தெருக்கள் சிறிதாய் ஆகி

அயலின் நெருக்கம் அறுந்தே போக

அந்நிய தேசம் ஆனது வீடு

 

வெறிச்சோடிய வீதிகள் நடுவே

விண் தொட்டன வீடுகள் ஆயினும்

மண் அளைந்து மகிழ்ந்து கழிக்க

மானுடப் பிள்ளைகள் எங்கே போயினர்

 

கிட்டிப்புள் விளையாடிய கிழவர்களும்

கொக்கான் வெட்டிய கிழவிகளும்

தாச்சி மறித்துத் தாயம் உருட்டி

தம்பி தங்கையுடன் விளையாடிய

தம் கால நினைவுகளைக்

கூடிக் கதைக்கவும் நேரமின்றிப் போனது 

 

ஆசைகளின் ஒசையடக்கி

அகப்படாத அன்பைத்தேடி

ஆயிரம் மைகளைக் கடந்து ஓடி

மனங்கள் தோறும் மாயம் கண்டு

பிணங்கும் மனிதரின் பேதைமை கண்டு

மீண்டும் அந்நியள் ஆனேன் நான்    

 

 

 

   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் விட்டுவந்த கணத்தில் காலம் உறைந்திருக்கும் என்று எதிர்பார்த்துப் போனால் இப்படித்தான் இருக்கும். எனக்கும் சொந்த இடம் அந்நியமான இடமாகத்தான் தெரிந்தது. அதுதான் திரும்பவும் இன்னுமொருமுறை போக மனமில்லாமல் உள்ளது.  மொத்தத்தில் பிறந்த இடமும் அந்நியமாகிவிட்டது; வாழும் இடமும் அந்நியமாகவே உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்களின் மனா உளைச்சலை சரியாக கூறியுள்ளீர்கள் சகோதரி......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

நாங்கள் விட்டுவந்த கணத்தில் காலம் உறைந்திருக்கும் என்று எதிர்பார்த்துப் போனால் இப்படித்தான் இருக்கும். எனக்கும் சொந்த இடம் அந்நியமான இடமாகத்தான் தெரிந்தது. அதுதான் திரும்பவும் இன்னுமொருமுறை போக மனமில்லாமல் உள்ளது.  மொத்தத்தில் பிறந்த இடமும் அந்நியமாகிவிட்டது; வாழும் இடமும் அந்நியமாகவே உள்ளது. 

உண்மைதான். நாம் நாடோடிகளின் நிலையில் தான் இப்போது. மீண்டும் இங்கு வரவே கூடாது என்னும் நிலையோடுதான் நானும் வந்தேன். ஆனாலும் நினைக்கும் போது எஞ்சியிருக்கும் எச்சங்களின் மீது இன்னும் கொண்டிருக்கும் அழியா ஆசை போக வேண்டும் என்று தான் எண்ண வைக்கிறது.

1 minute ago, suvy said:

புலம்பெயர்ந்தவர்களின் மனா உளைச்சலை சரியாக கூறியுள்ளீர்கள் சகோதரி......!  tw_blush:

போய் வந்த பலரின் நிலை இதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உதாரணத்துக்கு....ஒரு எருது ...செக்கு ஒன்றைச் சுத்திச் சுத்தி வருகின்றது என்று வைத்துக்கொள்வோம்!

ஊரெல்லாம் நல்லெண்ணைக்கு நல்ல தேவை இருந்தது! 

எருதுக்கும்...இரவும் ...பகலும் நல்ல வேலையும் இருந்தது!

திடீரென ..அந்த ஊருக்கு ஒரு மில்..வருகின்றது!

அங்கு நல்லெண்ணெய் மலிவான படியால்...எருதுக்கு... வேலை இல்லாது போய்விட...அந்த எருது என்ன செய்யும் என்று நினைக்கிறீர்கள், சுமே?

பழக்க தோஷத்தால்...கொஞ்ச நாளைக்கு...அந்தச் செக்கைச் சுற்றி வரும்! பின்னர்...வேறு ஏதாவது சூழலுக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும்!

அதைப் போலத் தான்....மனிதர்களும்!

5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆசைகளின் ஒசையடக்கி

அகப்படாத அன்பைத்தேடி

ஆயிரம் மைகளைக் கடந்து ஓடி

மனங்கள் தோறும் மாயம் கண்டு

பிணங்கும் மனிதரின் பேதைமை கண்டு

மீண்டும் அந்நியள் ஆனேன் நான் 

நீங்கள் அந்நியள் ஆகவில்லை, சுமே!

ஐரோப்பா உங்களைத் தன்னவள் ஆக்கி விட்டது என்பது தான் ..உண்மை!

உங்கள் அனுபவம்...என்னையும் பாதித்து விட்டது என்பது.....வேறு கதை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இன்னொரு மனதையும் சொல்லியே ஆகவேண்டும்..ரெண்டுங்கெட்டான் நிலைமை..! :unsure:

'புலத்தில் கிட்டும் வசதியும், வாழ்க்கையும் வேண்டும், அதே நேரம் தாய் மண்ணும் வேண்டும்..!' இதுதான் புலபெயர்ந்தவர்களின் பெரும்பாலோரின் மனநிலை..

எத்தனை பேர் புலத்தின் வாழ்க்கையை துறந்துவிட்டு, தாய் மண்ணில் மீள்குடியேற தயாராக இருக்கிறார்கள்..? :rolleyes:

விரல்விட்டு எண்ணிவிடலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

இங்கே இன்னொரு மனதையும் சொல்லியே ஆகவேண்டும்..ரெண்டுங்கெட்டான் நிலைமை..! :unsure:

'புலத்தில் கிட்டும் வசதியும், வாழ்க்கையும் வேண்டும், அதே நேரம் தாய் மண்ணும் வேண்டும்..!' இதுதான் புலபெயர்ந்தவர்களின் பெரும்பாலோரின் மனநிலை..

எத்தனை பேர் புலத்தின் வாழ்க்கையை துறந்துவிட்டு, தாய் மண்ணில் மீள்குடியேற தயாராக இருக்கிறார்கள்..? :rolleyes:

விரல்விட்டு எண்ணிவிடலாம்..

ம் விடை சொல்ல முடியாத நிலைதான் இது கன பேருக்கு ................................ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ம் விடை சொல்ல முடியாத நிலைதான் இது கன பேருக்கு ................................ 

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலை நடைமுறைக்கு ஒத்துவருமா..?

புலம்பி ஒன்னும் ஆகப்போவது இல்லைதானே? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் பிறந்த இடமும் அந்நியமாகிவிட்டது; வாழும் இடமும் அந்நியமாகவே உள்ளது.  

 உடலில்  உயிர் உள்ளவரை ஓடும் இந்த வாழ்க்கை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு இந்த வலி இருக்கத்தான் செய்யும்.

அடுத்த தலைமுறைக்கு இதை சொன்னாலும் விழங்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புங்கையூரன் said:

ஒரு உதாரணத்துக்கு....ஒரு எருது ...செக்கு ஒன்றைச் சுத்திச் சுத்தி வருகின்றது என்று வைத்துக்கொள்வோம்!

ஊரெல்லாம் நல்லெண்ணைக்கு நல்ல தேவை இருந்தது! 

எருதுக்கும்...இரவும் ...பகலும் நல்ல வேலையும் இருந்தது!

திடீரென ..அந்த ஊருக்கு ஒரு மில்..வருகின்றது!

அங்கு நல்லெண்ணெய் மலிவான படியால்...எருதுக்கு... வேலை இல்லாது போய்விட...அந்த எருது என்ன செய்யும் என்று நினைக்கிறீர்கள், சுமே?

பழக்க தோஷத்தால்...கொஞ்ச நாளைக்கு...அந்தச் செக்கைச் சுற்றி வரும்! பின்னர்...வேறு ஏதாவது சூழலுக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும்!

அதைப் போலத் தான்....மனிதர்களும்!

நீங்கள் அந்நியள் ஆகவில்லை, சுமே!

ஐரோப்பா உங்களைத் தன்னவள் ஆக்கி விட்டது என்பது தான் ..உண்மை!

உங்கள் அனுபவம்...என்னையும் பாதித்து விட்டது என்பது.....வேறு கதை!

அப்படியும் இருக்குமோ ???

16 hours ago, ராசவன்னியன் said:

இங்கே இன்னொரு மனதையும் சொல்லியே ஆகவேண்டும்..ரெண்டுங்கெட்டான் நிலைமை..! :unsure:

'புலத்தில் கிட்டும் வசதியும், வாழ்க்கையும் வேண்டும், அதே நேரம் தாய் மண்ணும் வேண்டும்..!' இதுதான் புலபெயர்ந்தவர்களின் பெரும்பாலோரின் மனநிலை..

எத்தனை பேர் புலத்தின் வாழ்க்கையை துறந்துவிட்டு, தாய் மண்ணில் மீள்குடியேற தயாராக இருக்கிறார்கள்..? :rolleyes:

விரல்விட்டு எண்ணிவிடலாம்..

நீங்கள் கூறுவது ஒரு விதத்தில் சரியாக இருப்பினும் ஊரில் வாழ்ந்த காலத்திலும் அதிக காலம் வசதி வாய்ப்புக்களோடு வாழ்ந்தும் நான் மட்டுமல்ல பலரும் மாறவில்லை. அதனால்த்தான் அவர்களின் போக்கைக் கண்டு வேதனை. இன்னுமந்த நாட்டில் நின்மதியாக வாழும்நிலை வரவில்லை. அறுபது கடந்த சிலர்போய் இருக்கிறார்கள் தான். சிலர் மனைவி பிள்ளைகளை வெளிநாட்டில் விட்டுவிட்டு தாம் மட்டும் அங்கு போயிருக்கின்றனர். ஏதும் நடந்தால் மனைவி பிள்ளைகள் காப்பாற்றுவார்கள் என்னும்  எண்ணம் தான்.

1 hour ago, நிலாமதி said:

மொத்தத்தில் பிறந்த இடமும் அந்நியமாகிவிட்டது; வாழும் இடமும் அந்நியமாகவே உள்ளது.  

 உடலில்  உயிர் உள்ளவரை ஓடும் இந்த வாழ்க்கை.  

கூட்டிக் கழித்துப் பார்த்தால் நாம் நாடோடிகள் தான் இன்னும்.

47 minutes ago, ஈழப்பிரியன் said:

எமக்கு இந்த வலி இருக்கத்தான் செய்யும்.

அடுத்த தலைமுறைக்கு இதை சொன்னாலும் விழங்காது.

எங்கிருக்கும் அடுத்த தலைமுறைக்கு ?????

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சிதறி ஓடி பூமி பந்தில் வெவ்வேறு திசைகளில் வாழ்கிறோம். சிலர் மாறிவிட்டார்கள் . சிலர் முன்புபோல நட்புடன் பழகுகிறார்கள். எனது ஊர் உயர் பாதுகாப்பு வலயத்தின் அருகில் இருந்த ஊர். பெரும்பாலோர் இடம்பெயர்ந்து விட்டார்கள். சிலர் ஊர் கோவில்திருவிழாவின் போது வெவ்வேறுநாடுகளில் இருந்துவந்து கலந்து ஒன்றுகூடல் செய்கிறார்கள். கனடா ,இலண்டன் சென்றால் தாயகத்திலும் பார்க்க அதிகம் தெரிந்தவர்களைப் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

,இதில புலம்பிறதுக்கு பெரிதாக இல்லை என்று நினைக்கிறேன்.நான் அறிய சிலர் தாயகத்தை முற்றாக வெறுக்கிறார்கள்.சிலர் சுமே சொன்ன மாதிரி வயதானோர்
தாயகம் திரும்பி இருக்கிறார்கள்.ஆனால் ஒன்று வசதி வாய்பபை கொஞ்சம் இழந்தால் ஆயுளை கொஞ்சம் அதிகரிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக் கவிதைக்குப் பதில் எழுத முடியாமல் மனம் கனத்துக் கிடக்கிறது. மதில்மேல் பூனைகளாய் நாம். இருமுறை சென்று வந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆனாலும் செக்குமாடுகளாய் மனம் அங்கேயே சுற்றிச் சுற்றி வருவதைத் தடுக்க முடியவில்லை. கவிதைக்கு நன்றிகள் சுமே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/03/2018 at 10:02 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆசைகளின் அலைதலுடன்

அவாக்கொண்டு காத்திருந்தேன்

 

 

எத்தனை ஆண்டுகள் ஆனபின்னும்

அத்தனை முகங்களும் கண்முன்னே

கனதியாய் கண்ணாமூச்சியாடியபடி

காலம் எண்ணிக் காத்திருந்தேன் 

 

 

கனவுகளின் கால்பரப்பலுடன்

மனத்துள் நெருடிய முள்ளகற்றி

என் தேசம் என்னும் எண்ணம் அகன்றிட

ஆர்ப்பரித்த மனம் அடங்கிப் போனது

 

 

மனித முகங்கள் முதிர்வாய் மாறி

ஊரின் தெருக்கள் சிறிதாய் ஆகி

அயலின் நெருக்கம் அறுந்தே போக

அந்நிய தேசம் ஆனது வீடு

 

 

வெறிச்சோடிய வீதிகள் நடுவே

விண் தொட்டன வீடுகள் ஆயினும்

மண் அளைந்து மகிழ்ந்து கழிக்க

மானுடப் பிள்ளைகள் எங்கே போயினர்

 

 

கிட்டிப்புள் விளையாடிய கிழவர்களும்

கொக்கான் வெட்டிய கிழவிகளும்

தாச்சி மறித்துத் தாயம் உருட்டி

தம்பி தங்கையுடன் விளையாடிய

தம் கால நினைவுகளைக்

கூடிக் கதைக்கவும் நேரமின்றிப் போனது 

 

 

ஆசைகளின் ஒசையடக்கி

அகப்படாத அன்பைத்தேடி

ஆயிரம் மைகளைக் கடந்து ஓடி

மனங்கள் தோறும் மாயம் கண்டு

பிணங்கும் மனிதரின் பேதைமை கண்டு

மீண்டும் அந்நியள் ஆனேன் நான்    

 

 

வலிகள்  மிகுந்த  வரிகள்

நன்றி  சுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/03/2018 at 5:13 AM, ராசவன்னியன் said:

இங்கே இன்னொரு மனதையும் சொல்லியே ஆகவேண்டும்..ரெண்டுங்கெட்டான் நிலைமை..! :unsure:

'புலத்தில் கிட்டும் வசதியும், வாழ்க்கையும் வேண்டும், அதே நேரம் தாய் மண்ணும் வேண்டும்..!' இதுதான் புலபெயர்ந்தவர்களின் பெரும்பாலோரின் மனநிலை..

எத்தனை பேர் புலத்தின் வாழ்க்கையை துறந்துவிட்டு, தாய் மண்ணில் மீள்குடியேற தயாராக இருக்கிறார்கள்..? :rolleyes:

விரல்விட்டு எண்ணிவிடலாம்..

 

On 15/03/2018 at 7:02 PM, ராசவன்னியன் said:

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலை நடைமுறைக்கு ஒத்துவருமா..?

புலம்பி ஒன்னும் ஆகப்போவது இல்லைதானே? :)

உங்களது  முதல் கேள்விக்கும்

இரண்டாவது  முடிவுக்கும் நிறைய இடைவெளியும்  முரணும்  சகோதரா

எந்த  ஒரு   போராட்டமும் 

அதிக  காலமும்  அதிக சுமையையும்

தோல்வியையும் தரும்  போது 

இவை  தவிர்க்கமுடியாதன

அவற்றோடு தான் பயணிக்கணும்

தாயகத்துக்கு போகணும்

ஊருக்கு போகணும்  என்பது மட்டுமே  கனவாகக்கொண்டு

உழைத்தவர்கள் 

தாயகமுமற்று  இங்கும்  காலூன்றாது  வாழ்வது தான் நிஐம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 03/04/2018 at 7:50 AM, கந்தப்பு said:

எல்லோரும் சிதறி ஓடி பூமி பந்தில் வெவ்வேறு திசைகளில் வாழ்கிறோம். சிலர் மாறிவிட்டார்கள் . சிலர் முன்புபோல நட்புடன் பழகுகிறார்கள். எனது ஊர் உயர் பாதுகாப்பு வலயத்தின் அருகில் இருந்த ஊர். பெரும்பாலோர் இடம்பெயர்ந்து விட்டார்கள். சிலர் ஊர் கோவில்திருவிழாவின் போது வெவ்வேறுநாடுகளில் இருந்துவந்து கலந்து ஒன்றுகூடல் செய்கிறார்கள். கனடா ,இலண்டன் சென்றால் தாயகத்திலும் பார்க்க அதிகம் தெரிந்தவர்களைப் பார்க்கலாம்.

நீங்கள் சொல்வதும் கொஞ்சம் நடக்கிறதுதான். ஆனாலும் மனிதர்கள் அங்கு மாறிவிட்டார்கள்.

On 07/04/2018 at 3:01 PM, சுவைப்பிரியன் said:

,இதில புலம்பிறதுக்கு பெரிதாக இல்லை என்று நினைக்கிறேன்.நான் அறிய சிலர் தாயகத்தை முற்றாக வெறுக்கிறார்கள்.சிலர் சுமே சொன்ன மாதிரி வயதானோர்
தாயகம் திரும்பி இருக்கிறார்கள்.ஆனால் ஒன்று வசதி வாய்பபை கொஞ்சம் இழந்தால் ஆயுளை கொஞ்சம் அதிகரிக்கலாம்.

அங்கு போய் இருந்தால் சனங்களின் செயலே எமக்கு விரைவில் நோயை வரவழைத்துவிடும்.

On 07/04/2018 at 4:46 PM, விசுகு said:

வலிகள்  மிகுந்த  வரிகள்

நன்றி  சுமே

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

On 07/04/2018 at 3:48 PM, Kavallur Kanmani said:

இக் கவிதைக்குப் பதில் எழுத முடியாமல் மனம் கனத்துக் கிடக்கிறது. மதில்மேல் பூனைகளாய் நாம். இருமுறை சென்று வந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆனாலும் செக்குமாடுகளாய் மனம் அங்கேயே சுற்றிச் சுற்றி வருவதைத் தடுக்க முடியவில்லை. கவிதைக்கு நன்றிகள் சுமே.

 

அனுபவித்தவர்களுக்கு நன்றாக விளங்கும் அக்கா. அதுவும் பெண்களாலேயே அனைத்தையும் புரிந்துகொள்ள முடிவதனாலேயே அதிக வலி. அங்கள் எதையும் மேம்போக்காகப் பார்பதனால் அவர்களை எதுவும் பெரிதாகப் பாதிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

அங்கு போய் இருந்தால் சனங்களின் செயலே எமக்கு விரைவில் நோயை வரவழைத்துவிடும்.

 

அது அவரவர் மன நிலமையைப் பொறுத்தது.நான் கடந்த கிழமை தான் அங்கிருந்து வந்தனான்.வருடத்திற்க்கு இரன்டு முறை போய் வருகிறேன்.திரும்பி வரும் போது மனது கசக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

அது அவரவர் மன நிலமையைப் பொறுத்தது.நான் கடந்த கிழமை தான் அங்கிருந்து வந்தனான்.வருடத்திற்க்கு இரன்டு முறை போய் வருகிறேன்.திரும்பி வரும் போது மனது கசக்கிறது.

என் கணவர் கூடத் தான் அங்கு சென்று வசிக்க முடியும் என்றுதான் கூறுகிறார். ஏன் எல்லாத்தையும் நீ பெரிதாக எண்ணுகிறாய். என்னைப்போல் எதையும் சட்டை செய்யாது இருந்தால் பிரச்சனை இல்லை. கவலையும் இல்லை என்கிறார். இது ஆண்கள் எல்லோருக்கும் பொருத்தமானது. ஆனால் பெண்களால் இப்படி இருக்க முடியாது சுவைப்பிரியன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.