Jump to content

சமூக ஊட­கங்­கள் மீதான கட்­டுப்­பாடு நல்­ல­தல்ல!!


Recommended Posts

சமூக ஊட­கங்­கள் மீதான கட்­டுப்­பாடு நல்­ல­தல்ல!!

 

அம்­பாறை மற்­றும் கண்­டி­யில் இடம்­பெற்ற இன வன்­மு­றை­க­ளைத் தொடர்ந்து சமூக வலைத்­த­ளங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வது குறித்த கதை­யா­டல்­கள் எழுந்­துள்­ளன. வழக்­கம் போலவே அதி­கார வர்க்­கம் இவற்­றைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்று கூறு­கின்­றது. முக­நூ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வது அவ­சி­யம் என்று அமைச்­சர் மகிந்த அம­ர­வீர கடை­சி­யா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

கண்டி மாவட்­டம் திக­ன­வில் முஸ்­லிம்­கள் மீதான தாக்­கு­தல் தீவி­ரம் அடைந்­த­தைத் தொடர்ந்து இலங்கை அரசு சமூக ஊட­கங்­க­ளான வட்ஸ்­அப், வைபர், பேஸ்­புக் என்­ப­வற்றை ஏற்­க­னவே முடக்கி வைத்­துள்­ளது. மூன்று நாள்­க­ளுக்கு மட்­டுமே இந்த முடக்­கம் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­த­போ­தும், அது இன்னமும் நீக்­கப்­ப­ட­வில்லை. இன உற­வு­க­ளைப் பாதிக்­கக்­கூ­டிய உள்­ள­டக்­கங்­கள் பல முகப் புத்­த­கத்­தில் இருப்­ப­தால் அவற்றை நீக்­கும் வரை­யில் அதன் மீதான தடையை நீடிக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது என்று அரசு விளக்­கம் சொல்­லி­யி­ருக்­கி­றது.

வன்­முறை பர­வு­வ­தற்­கும், வன்­மு­றை­யா­ளர்­கள் ஒருங்­கி­ணை­வ­தற்­கும் சமூக ஊட­கங்­கள் இல­கு­வாக வழி வகுக்­கின்­றன என்­ப­தும், வெறுப்­பூட்­டும் பேச்­சுக்­கள் இந்­தச் சமூக ஊட­கங்­கள் ஊடாக இல­கு­வா­க­வும் விரை­வா­க­வும் பர­வ­ல­டை­கின்­றன என்­ப­துமே இவற்­றைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்­கிற குரல்­க­ளுக்­குக் கார­ணம்.

ஆனால், சமூக ஊட­கங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தி­விட்­டால் மட்­டும் இன­வன்­மு­றை­களை நிறுத்­தி­விட முடி­யுமா என்­ப­தும் மிகப் பெரிய கேள்வி. இத்­த­கைய சமூக ஊட­கங்­களோ, தொழில்­நுட்ப வச­தி­களோ இல்­லாத காலத்­தி­லேயே இதை­வி­டப் பெரும் இனக் கல­வ­ரத்­தைத் திட்­ட­மிட்டு ஒழுங்­க­மைத்து தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேற்­றி­னார்­கள் என்­பதை எவரும் மறந்­து­வி­டக்­கூ­டாது. எனவே சமூக ஊட­கங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தால், மட்­டும் எல்­லா­வற்­றை­யும் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­து­விட முடி­யும் என்று எண்­ணு­வது சுத்த மட­மைத்­த­னம்.

இதே சமூக ஊட­கங்­கள்­தான் பொலி­ஸா­ரின் குற்ற விசா­ர­ணைக்­குப் பெரும் துணை­யாக இருக்­கின்­றன என்­ப­தை­யும் நினை­வில்­கொள்ள வேண்­டும். புல­னாய்வு அமைப்­பு­கள் தமி­ழர்­கள் மற்­றும் முஸ்­லிம்­க­ளின் சமூக ஊட­கக் கணக்­கு­கள் மீது வைத்­தி­ருக்­கும் கழு­குக் கண்­களை கொஞ்­சம் சிங்­க­ள­வர்­க­ளின் கணக்­கு­கள் மீதும் திருப்­பி­னாலே இது­போன்ற வன்­மு­றை­க­ளைத் தடுத்­து­விட முடி­யும்.

 

கண்­டி­யில் வன்­முறை பர­வும் என்­பது அங்­கி­ருந்த முஸ்­லிம்­க­ளுக்கே தெரிந்­தி­ருந்­த­போ­தும், பொலி­ஸா­ருக்­கும் புல­னாய்­வா­ளர்­க­ளுக்­கும் அது தெரி­யா­மல் இருந்­தது என்­பது ஏமாற்­றும் வேலை. புல­னாய்­வா­ளர்­கள் சரி­யா­கச் செயற்­பட்டு சூத்­தி­ர­தா­ரி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தால், திகன வன்­மு­றையை முற்­றா­கத் தடுத்­தி­ருக்க முடி­யும். அத­னைச் செய்­யா­மல் விட்­டு­விட்டு சமூக ஊட­கங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்று அரசு முயற்­சிப்­பது அடக்­கு­மு­றை­க­ளுக்கு எதி­ரான எல்­லாக் குரல்­க­ளை­யும் நசுக்­கி­வி­டும் முயற்சி. குறிப்­பாக அர­சுக்கு எதி­ரான கருத்­துக்­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­தும் எத்­த­னம்.

சமூக ஊட­கங்­க­ளில் உள்­ள­வர்­கள் அனை­வ­ரும் சரி­யா­கச் செயற்­ப­டு­கின்­ற­னர், அவை திறம்­பட இயங்­கு­கின்­றன என்று சொல்­வ­தற்­கில்லை. தனி­ந­பர் அவ­தூ­று­க­ளைப் பரப்­ப­வும், சமூ­கத்­தைத் தவ­றாக வழி­ந­டத்­த­க் கூடி­ய­வர்­க­ளும் அதில் செயற்­ப­டு­கின்­றார்­கள் என்­பதை மறுப்­ப­தற்­கும் இல்லை. அந்­தச் சில தீய சக்­தி­க­ளுக்­காக ஒட்­டு­மொத்த சமூக ஊட­கங்­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­து­வது ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இணைய வழிக் குற்­றங்­க­ளுக்­கான தனிப் பிரி­வோடு சேர்த்து சமூக ஊட­கங்­க­ளின் செயற்­பாட்­டா­ளர்­க­ளை­யும் கண்­கா­ணித்து நில­மை­யைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­கும் பொறி­மு­றையை உரு­வாக்­கு­வது பற்­றித்­தான் அரசு சிந்­திக்க வேண்­டுமே தவிர, சமூக ஊட­கங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வது பற்­றி­ய­ல்ல. முகநூலுக்கு தற்போது விதிக்கப்பட் டுள்ள தடையையும் விரைந்து விலக்க வேண்டும் அரசு.

புண் இருக்­கி­றது என்­ப­தற்­கா­கக் கால்­களை, விரல்­களை வெட்டி எறிந்­து­வி­டு­வ­தற்கு ஒப்­பா­னது அது. அரசு அதனை ஒரு­போ­தும் செய்­யக்­கூ­டாது.

http://newuthayan.com/story/75871.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.