Jump to content

முடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்!!


Recommended Posts

  • முடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்!!
vavuniya-1-750x430.jpg

முடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்!!

 

 

எமது நாட்­டின் உள்­ளூர் அதி­கார சபை­க­ளுக்­கான தேர்­தல் நடை­பெற்று, முடி­வு­கள் வெளி­யாகி, ஆட்சி அமைப்­பது தொடர்­பாக கட்­சி­கள் தீவி­ ர­மாக ஆலோ­சித்து வரும் இன்­றைய நிலை­யில், வவு­னியா நகர சபை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­னிலை பெற்­றுத் திகழ்­வ­தும், சக­ல­ரும் அறி்ந்­த­தொன்றே. இந்த நிலை­யில் நகர சபை­யின் நிர்­வா­கப் பிர­தே­சத்­தில் இயங்கி வந்த பழைய பஸ் நிலை­யத்தை இட­மாற்­றம் செய்­த­மை­யால் ஏற்­பட்ட சிக்­கல் தொடர்­பாக ஆராய்ந்து பார்ப்­பது பொருத்­த­மா­ன­தாக இருக்­கும்.

காலத்­தின் தேவை கருதி  விரி­வு­ப­டுத்­தப்­பட்ட  புதிய பேருந்து நிலை­யம்

வவு­னியா மாவட்­டத்­தின் முத­லா­வது திட்­ட­மி­டப்­பட்ட புதிய பேருந்து நிலை­யம், மூன்று ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில், 195 மில்­லி­யன் ரூபா நிதி­யீட்­டத்­தில், வவு­னியா விவ­சா­யப் பண்­ணைக்­கும் ஏ9 வீதிக்­கும் அண்­மை­யாக நக­ரில் இருந்து ஒரு கி.மீற்­றர் தூரத்­தில் அமைக்­கப்­பட்டு ஒரு ஆண்­டா­கி­றது. ஒரே நேரத்­தில்34 பஸ்­கள் நிறுத்­தக்­கூ­டி­ய­தும் உள்­ளூர் மற்­றும் மாவட்ட, மாகா­ணங்­க­ளுக்­கி­டை­யி­லான சுமார் 100 பஸ் சேவை­களை நடாத்­தக் கூடி­ய­து­மாக அந்­தப் புதிய பேருந்து நிலை­யம் கடந்த வரு­டம் ஜன­வரி மாதம் 17ஆம் திக­தி­யன்று திறந்து வைக்­கப்­பட்­டது.

சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக அமைச்­சர்­கள், அர­சி­யல் பிர­மு­கர்­கள், அரச அதி­கா­ரி­கள் முன்­னி­லை­யில் திறந்துவைக்கப்பட்ட புதிய பேருந்து நிலை­யம் அன்­றைய தினமே தற்­கா­லி­க­மாக மூடப்­பட வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது.
அதே­வேளை குறித்த பிரச்­சி­னைக்­கான நிரந்­த­ரத் தீர்வு எட்­டப்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றி­கள் எத­னை­யும் இன்றுவரை காண­முடியவில்லை. குறித்த பேருந்து நிலை­யத்தை இட­மாற்­றி­ய­தால் நலன்­களை அல்­லது பயன்­களை இலா­பங்­க­ளைப் பெற்­ற­வர்­கள் யார்?.பொது­மக்­களா? அல்­லது தனி­யார் பஸ் உரி­மை­யா­ளர்­களா? இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யி­னரா? அல்­லது வியா­பா­ரி­களா?அல்­லது அதன் அயற்­பு­றத்­தில் வாழ்­கின்ற குடி­யி­ருப்­பா­ ளர்­களா?அல்­லது பாட­சா­லை­க­ளுக்கு பஸ்­சில் போய்­வ­ரு­கின்ற பாட­சாலை மாண­வர்­களா? என்­பவை போன்ற கேள்­வி­க­ளுக்­கான திருப்­தி­க­ர­மான பதில் இது­வரை கிடைத்­த­தில்லை.

பஸ் நிலை­யம்  இட­மாற்­றப்­பட்­ட­தால் பய­ணி­க­ளும் பொது­மக்­க­ளும் எதிர்­நோக்­கும்  பல தரப்­பட்ட சிர­மங்­கள்

 

பஸ் நிலை­யத்தை இடம்­மாற்­றி­ய­தால் பொது­மக்­கள் எதிர்­நோக்­கி­யுள்ள அல்­லது அன்­றா­டம் அனு­ப­விக்­கும் சொல்­லொ­ணாத் துன்ப துய­ரங்­க­ளைக் கண்டு கொள்­வார் எவருமே இல்லை என்றே சொல்ல வேண்­டும். பொது மக்­கள் இவ்­வி­டத் தெரி­வினை பொருத்­த­மற்­ற­தா­கவே பார்க்­கின்­றார்­கள்.பொது­மக்­கள் கூடு­மி­டங்­கள், பேருந்து நிலை­யம் என்­ப­வற்­றில் புதிய நிலைய இட­மாற்­றத்­திற்கு எதி­ராக கார­சா­ர­மாக விவா­தம் இடம்­பெ­று­வ­தை­யும், பல
­த­ரப்­பட்ட கருத்­துப் பரி­மாற்­றங்­கள், விமர்­ச­னங்­கள் என்­ப­வற்றை மேற்­கொள்­வதை யும் அன்­றா­டம் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

பழைய இடத்­தி­லி­ருந்து பேருந்து நிலை­யத்தை இடம் மாற்­று­வ­தில் அரச, தனி­யார் பேருந்து சேவை­யில் ஈடு­ப­டு­ப­வர்­கள் மத்­தி­யில் உடன்­பாடோ விருப்­பமோ ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆகை­யி­னால் இடம் மாற்­று­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்­தும், பல்­வேறு கார­ணங்­க­ளைக் காட்­டி­யும் பல பிர­மு­கர்­க­ ளுக்கு விப­ர­மான கடி­தம் ஒன்றை கடந்த காலங்­களில் தனி­யார் துறை­யி­னர் அனுப்­பி­யி­ருந்­ததை எவ­ரும் மறந்­தி­ருக்க முடி­யாது.

பேருந்து நிலை­யத்தை இடம் மாற்­று­வது தொடர்­பாக, அரச தனி­யா­ருக்­கி­டையே கருத்­தொற்­றுமை இல்­லா­மை­யி­னால், காலத்­திற்­குக்காலம் முரண்­பா­டு­க­ளும் குழப்­ப­மான நிலை­மை­க­ளும், அதன் கார­ண­மாக இரண்டு தரப்­பி­ன­ரும் பொது மக்­க­ளது நலன்­க­ளைப் புறந்­தள்ளி மாறி மாறி பணிப் புறக்­க­ணிப்­பில் ஈடு­பட்­டமை கடந்­த­கால நிகழ்­வு­க­ளா­கும்.

வவு­னியா பஸ் நிலைய விவ­கா­ரத்தால் இ.போ.சபை­யி­னர் மேற்கொள்ளும் பணிப் பு­றக்­க­ணிப்புகள் வட­மா­கா­ணத்­தில் உள்ள எழு டிப்­போக்­க­ளும் தழு­வி­ய­தாக கடந்த காலங்­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்­ட­தால், மாகாண மட்­டத்­தில் அவை ஏற்­ப­டுத்­திய பாதிப்­புக்­க­ளை­யும் நாம் மன­தில் கொள்ள வேண்­டும். பஸ்­கள் சேவை­யில் ஈடு­ப­டாத நிலை­யில் அவர்­க­ளைச் சமா­தா­னப்­ப­டுத்தி சம­ர­சம் செய்­வ­தற்­காக அரச அதி­கா­ரி­கள் மக்­கள் பிரதி நிதி­களை உள்­ள­டக்­கிய கலந்­து­ரை­யா­டல்­கள், கூட்­டங்­கள் இரு­த­ரப்­பி­ன­ரு­ட­னும் கடந்த காலங்­க­ளில் நடை­பெற்­றுள்­ளன.இதில் எடுக்­கப்­பட்ட முடி­வு­கள் பொது­மக்­க­ளின் அன்­றா­டப் போக்­கு­வ­ரத்­துத் தொடர்­பான தேவை­கள் , வச­தி­கள் மற்­றும் அவர்­கள் எதிர்­கொள்­ளக்­கூ­டிய அசௌ­க­ரி­யங்­க­ளைக் கருத்­தில் கொண்­ட­தாக இருக்­க­வில்லை.

வவு­னியா நகர மையம் அல்­லது பழைய பஸ்­நி­லை­யத்­தைச் சுற்­றி­யுள்ள பிர­தே­சம் பொது­மக்­க­ளுக் சேவை வழங்­கு­கின்ற அல்­லது பொது­மக்­கள் நலன் பெறு­கின்ற நிறு­வ­னங்­கள் பல­தும் செறிந்து செயற்­பட்டு வரு­கின்­றன.இவற்­றில் பல ஆயி­ரக்கணக்­கா­ன­வர்­கள் பணி­யாற்றி வரு­கின்­ற­னர். இவர்­கள் அனை­வ­ருக்­கும் இல­கு­வா­கப் பய­ணம் பண்­ணு­வ­தற்கு பொருத்­த­மான இடம் வவு­னியா நக­ர­மும் பழைய பஸ் த­ரிப்பு நிலை­யம் மட்­டுமே என்­பதே யதார்த்­த­மா­கும்.

பஸ் நிலை­யம் இட­மாற்­றப்­பட்­ட­தால்  நகர சபை­யின்  வரு­மா­னத்­தி­லும் பாதிப்பு

அத்­து­டன் பழைய பஸ் நிலை­யத்­தைச் சுற்றி வவு­னியா நகர சபைக்கு வரு­டாந்­தம் வரி­யா­க­வும், மாதாந்­தம் வாட­கை­யா­க­வும் 130க்கும் மேற்­பட்ட விற்­பனை நிலை­யங்­கள் பெருந் தொகைப் பணத்தை செலுத்தி வரு­கின்­றன.பேருந்து நிலை­யம் இட­மாற்­றப்­பட்­ட­மை­யால் குற।ித்த விற்­பனை நிலை­யங்­க­ளைச் சேர்ந்த ஏனைய பணி­யா­ளர்­க­ளும் பெரி­தும் பாதிப்­புக்கு உட்­பட நேர்ந்­துள்­ளது.

புகை­யி­ர­தப் பய­ணி­கள் அல்­லது பழைய பஸ்­நி­லை­யத்­தைச் சுற்­றி­யி­ ருக்­கின்ற திணைக்­க­ளங்­கள் மற்­றும் நிறு­வ­னங்­க ­ளின் சேவை­க­ளைப் பெற வரு­ப­வர்­கள் நிலை­யம் இட­மாற்­றப்­பட்­ட­த­னால் மேல­திக பணம் செலுத்­தி பயணித்தே தங்­கள், தேவை­களை நிறைவு செய்­யும் நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே பய­ணி­க­ளின் நீண்ட கால நலன்­களை முன் நிறுத்தி பஸ் நிலை­யம் தொடர்­பான நிரந்­த­ர­மான முடி­வை விரை­வா­கக் காண வேண்­டிய பொறுப்பு சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் அனை­வர்க்­கும் குறிப்­பாக, தெரி­வா­கி­யுள்ள நகர சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கும் உண்டு. இரண்டு தரப்­பி­ன­ரை­யும் ஒரே வளா­கத்­தில் வைத்­துச் சேவை­களை நடாத்­து­வ­தற்­கான முடி­வு­களை எடுப்­ப­தைத் தவிர்ப்­பது, முரண்­பா­டு­கள் குழப்­பங்­கள் அற்ற பஸ் சேவை­கள் தொடர்ந்து நடை­பெ­று­வ­தற்கு உத­வும்.

வெளி மாகா­ணங்­க­ளுக்­கான சேவை­கள் தவிர்ந்த அனைத்துச் சேவை­க­ளில் ஈடு­ப­டு­கின்ற இ.போ.சபை­யி­னர் பழைய நிலை­யங்­க­ளுக்­குள் வந்து செல்­வ­தற்­கும் தனி­யார் சேவை­யில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­கள் தங்­க­ளது பழைய இடங்­க­ளுக்கு வந்து செல்­லும் வகை­யி­லும் நடை­மு­றை­க­ளைக் கொண்­டு­வ­ரு­வது சக­ல­ருக்­கும் ஆறு­தலை தரக்­கூ­டி­ய­தாக அமை­ய­லாம்.

http://newuthayan.com/story/75876.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.