Jump to content

முடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்!!


Recommended Posts

  • முடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்!!
vavuniya-1-750x430.jpg

முடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்!!

 

 

எமது நாட்­டின் உள்­ளூர் அதி­கார சபை­க­ளுக்­கான தேர்­தல் நடை­பெற்று, முடி­வு­கள் வெளி­யாகி, ஆட்சி அமைப்­பது தொடர்­பாக கட்­சி­கள் தீவி­ ர­மாக ஆலோ­சித்து வரும் இன்­றைய நிலை­யில், வவு­னியா நகர சபை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­னிலை பெற்­றுத் திகழ்­வ­தும், சக­ல­ரும் அறி்ந்­த­தொன்றே. இந்த நிலை­யில் நகர சபை­யின் நிர்­வா­கப் பிர­தே­சத்­தில் இயங்கி வந்த பழைய பஸ் நிலை­யத்தை இட­மாற்­றம் செய்­த­மை­யால் ஏற்­பட்ட சிக்­கல் தொடர்­பாக ஆராய்ந்து பார்ப்­பது பொருத்­த­மா­ன­தாக இருக்­கும்.

காலத்­தின் தேவை கருதி  விரி­வு­ப­டுத்­தப்­பட்ட  புதிய பேருந்து நிலை­யம்

வவு­னியா மாவட்­டத்­தின் முத­லா­வது திட்­ட­மி­டப்­பட்ட புதிய பேருந்து நிலை­யம், மூன்று ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில், 195 மில்­லி­யன் ரூபா நிதி­யீட்­டத்­தில், வவு­னியா விவ­சா­யப் பண்­ணைக்­கும் ஏ9 வீதிக்­கும் அண்­மை­யாக நக­ரில் இருந்து ஒரு கி.மீற்­றர் தூரத்­தில் அமைக்­கப்­பட்டு ஒரு ஆண்­டா­கி­றது. ஒரே நேரத்­தில்34 பஸ்­கள் நிறுத்­தக்­கூ­டி­ய­தும் உள்­ளூர் மற்­றும் மாவட்ட, மாகா­ணங்­க­ளுக்­கி­டை­யி­லான சுமார் 100 பஸ் சேவை­களை நடாத்­தக் கூடி­ய­து­மாக அந்­தப் புதிய பேருந்து நிலை­யம் கடந்த வரு­டம் ஜன­வரி மாதம் 17ஆம் திக­தி­யன்று திறந்து வைக்­கப்­பட்­டது.

சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக அமைச்­சர்­கள், அர­சி­யல் பிர­மு­கர்­கள், அரச அதி­கா­ரி­கள் முன்­னி­லை­யில் திறந்துவைக்கப்பட்ட புதிய பேருந்து நிலை­யம் அன்­றைய தினமே தற்­கா­லி­க­மாக மூடப்­பட வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது.
அதே­வேளை குறித்த பிரச்­சி­னைக்­கான நிரந்­த­ரத் தீர்வு எட்­டப்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றி­கள் எத­னை­யும் இன்றுவரை காண­முடியவில்லை. குறித்த பேருந்து நிலை­யத்தை இட­மாற்­றி­ய­தால் நலன்­களை அல்­லது பயன்­களை இலா­பங்­க­ளைப் பெற்­ற­வர்­கள் யார்?.பொது­மக்­களா? அல்­லது தனி­யார் பஸ் உரி­மை­யா­ளர்­களா? இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யி­னரா? அல்­லது வியா­பா­ரி­களா?அல்­லது அதன் அயற்­பு­றத்­தில் வாழ்­கின்ற குடி­யி­ருப்­பா­ ளர்­களா?அல்­லது பாட­சா­லை­க­ளுக்கு பஸ்­சில் போய்­வ­ரு­கின்ற பாட­சாலை மாண­வர்­களா? என்­பவை போன்ற கேள்­வி­க­ளுக்­கான திருப்­தி­க­ர­மான பதில் இது­வரை கிடைத்­த­தில்லை.

பஸ் நிலை­யம்  இட­மாற்­றப்­பட்­ட­தால் பய­ணி­க­ளும் பொது­மக்­க­ளும் எதிர்­நோக்­கும்  பல தரப்­பட்ட சிர­மங்­கள்

 

பஸ் நிலை­யத்தை இடம்­மாற்­றி­ய­தால் பொது­மக்­கள் எதிர்­நோக்­கி­யுள்ள அல்­லது அன்­றா­டம் அனு­ப­விக்­கும் சொல்­லொ­ணாத் துன்ப துய­ரங்­க­ளைக் கண்டு கொள்­வார் எவருமே இல்லை என்றே சொல்ல வேண்­டும். பொது மக்­கள் இவ்­வி­டத் தெரி­வினை பொருத்­த­மற்­ற­தா­கவே பார்க்­கின்­றார்­கள்.பொது­மக்­கள் கூடு­மி­டங்­கள், பேருந்து நிலை­யம் என்­ப­வற்­றில் புதிய நிலைய இட­மாற்­றத்­திற்கு எதி­ராக கார­சா­ர­மாக விவா­தம் இடம்­பெ­று­வ­தை­யும், பல
­த­ரப்­பட்ட கருத்­துப் பரி­மாற்­றங்­கள், விமர்­ச­னங்­கள் என்­ப­வற்றை மேற்­கொள்­வதை யும் அன்­றா­டம் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

பழைய இடத்­தி­லி­ருந்து பேருந்து நிலை­யத்தை இடம் மாற்­று­வ­தில் அரச, தனி­யார் பேருந்து சேவை­யில் ஈடு­ப­டு­ப­வர்­கள் மத்­தி­யில் உடன்­பாடோ விருப்­பமோ ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆகை­யி­னால் இடம் மாற்­று­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்­தும், பல்­வேறு கார­ணங்­க­ளைக் காட்­டி­யும் பல பிர­மு­கர்­க­ ளுக்கு விப­ர­மான கடி­தம் ஒன்றை கடந்த காலங்­களில் தனி­யார் துறை­யி­னர் அனுப்­பி­யி­ருந்­ததை எவ­ரும் மறந்­தி­ருக்க முடி­யாது.

பேருந்து நிலை­யத்தை இடம் மாற்­று­வது தொடர்­பாக, அரச தனி­யா­ருக்­கி­டையே கருத்­தொற்­றுமை இல்­லா­மை­யி­னால், காலத்­திற்­குக்காலம் முரண்­பா­டு­க­ளும் குழப்­ப­மான நிலை­மை­க­ளும், அதன் கார­ண­மாக இரண்டு தரப்­பி­ன­ரும் பொது மக்­க­ளது நலன்­க­ளைப் புறந்­தள்ளி மாறி மாறி பணிப் புறக்­க­ணிப்­பில் ஈடு­பட்­டமை கடந்­த­கால நிகழ்­வு­க­ளா­கும்.

வவு­னியா பஸ் நிலைய விவ­கா­ரத்தால் இ.போ.சபை­யி­னர் மேற்கொள்ளும் பணிப் பு­றக்­க­ணிப்புகள் வட­மா­கா­ணத்­தில் உள்ள எழு டிப்­போக்­க­ளும் தழு­வி­ய­தாக கடந்த காலங்­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்­ட­தால், மாகாண மட்­டத்­தில் அவை ஏற்­ப­டுத்­திய பாதிப்­புக்­க­ளை­யும் நாம் மன­தில் கொள்ள வேண்­டும். பஸ்­கள் சேவை­யில் ஈடு­ப­டாத நிலை­யில் அவர்­க­ளைச் சமா­தா­னப்­ப­டுத்தி சம­ர­சம் செய்­வ­தற்­காக அரச அதி­கா­ரி­கள் மக்­கள் பிரதி நிதி­களை உள்­ள­டக்­கிய கலந்­து­ரை­யா­டல்­கள், கூட்­டங்­கள் இரு­த­ரப்­பி­ன­ரு­ட­னும் கடந்த காலங்­க­ளில் நடை­பெற்­றுள்­ளன.இதில் எடுக்­கப்­பட்ட முடி­வு­கள் பொது­மக்­க­ளின் அன்­றா­டப் போக்­கு­வ­ரத்­துத் தொடர்­பான தேவை­கள் , வச­தி­கள் மற்­றும் அவர்­கள் எதிர்­கொள்­ளக்­கூ­டிய அசௌ­க­ரி­யங்­க­ளைக் கருத்­தில் கொண்­ட­தாக இருக்­க­வில்லை.

வவு­னியா நகர மையம் அல்­லது பழைய பஸ்­நி­லை­யத்­தைச் சுற்­றி­யுள்ள பிர­தே­சம் பொது­மக்­க­ளுக் சேவை வழங்­கு­கின்ற அல்­லது பொது­மக்­கள் நலன் பெறு­கின்ற நிறு­வ­னங்­கள் பல­தும் செறிந்து செயற்­பட்டு வரு­கின்­றன.இவற்­றில் பல ஆயி­ரக்கணக்­கா­ன­வர்­கள் பணி­யாற்றி வரு­கின்­ற­னர். இவர்­கள் அனை­வ­ருக்­கும் இல­கு­வா­கப் பய­ணம் பண்­ணு­வ­தற்கு பொருத்­த­மான இடம் வவு­னியா நக­ர­மும் பழைய பஸ் த­ரிப்பு நிலை­யம் மட்­டுமே என்­பதே யதார்த்­த­மா­கும்.

பஸ் நிலை­யம் இட­மாற்­றப்­பட்­ட­தால்  நகர சபை­யின்  வரு­மா­னத்­தி­லும் பாதிப்பு

அத்­து­டன் பழைய பஸ் நிலை­யத்­தைச் சுற்றி வவு­னியா நகர சபைக்கு வரு­டாந்­தம் வரி­யா­க­வும், மாதாந்­தம் வாட­கை­யா­க­வும் 130க்கும் மேற்­பட்ட விற்­பனை நிலை­யங்­கள் பெருந் தொகைப் பணத்தை செலுத்தி வரு­கின்­றன.பேருந்து நிலை­யம் இட­மாற்­றப்­பட்­ட­மை­யால் குற।ித்த விற்­பனை நிலை­யங்­க­ளைச் சேர்ந்த ஏனைய பணி­யா­ளர்­க­ளும் பெரி­தும் பாதிப்­புக்கு உட்­பட நேர்ந்­துள்­ளது.

புகை­யி­ர­தப் பய­ணி­கள் அல்­லது பழைய பஸ்­நி­லை­யத்­தைச் சுற்­றி­யி­ ருக்­கின்ற திணைக்­க­ளங்­கள் மற்­றும் நிறு­வ­னங்­க ­ளின் சேவை­க­ளைப் பெற வரு­ப­வர்­கள் நிலை­யம் இட­மாற்­றப்­பட்­ட­த­னால் மேல­திக பணம் செலுத்­தி பயணித்தே தங்­கள், தேவை­களை நிறைவு செய்­யும் நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே பய­ணி­க­ளின் நீண்ட கால நலன்­களை முன் நிறுத்தி பஸ் நிலை­யம் தொடர்­பான நிரந்­த­ர­மான முடி­வை விரை­வா­கக் காண வேண்­டிய பொறுப்பு சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் அனை­வர்க்­கும் குறிப்­பாக, தெரி­வா­கி­யுள்ள நகர சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கும் உண்டு. இரண்டு தரப்­பி­ன­ரை­யும் ஒரே வளா­கத்­தில் வைத்­துச் சேவை­களை நடாத்­து­வ­தற்­கான முடி­வு­களை எடுப்­ப­தைத் தவிர்ப்­பது, முரண்­பா­டு­கள் குழப்­பங்­கள் அற்ற பஸ் சேவை­கள் தொடர்ந்து நடை­பெ­று­வ­தற்கு உத­வும்.

வெளி மாகா­ணங்­க­ளுக்­கான சேவை­கள் தவிர்ந்த அனைத்துச் சேவை­க­ளில் ஈடு­ப­டு­கின்ற இ.போ.சபை­யி­னர் பழைய நிலை­யங்­க­ளுக்­குள் வந்து செல்­வ­தற்­கும் தனி­யார் சேவை­யில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­கள் தங்­க­ளது பழைய இடங்­க­ளுக்கு வந்து செல்­லும் வகை­யி­லும் நடை­மு­றை­க­ளைக் கொண்­டு­வ­ரு­வது சக­ல­ருக்­கும் ஆறு­தலை தரக்­கூ­டி­ய­தாக அமை­ய­லாம்.

http://newuthayan.com/story/75876.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.