Jump to content

ஐ.எஸ்.எல். கால்பந்து - கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னையின் எப்.சி.


Recommended Posts

ஐ.எஸ்.எல். கால்பந்து - கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னையின் எப்.சி.

 

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியின் 2-வது லெக் போட்டியில் சென்னையின் எப்.சி., கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #HeroISL #FCGoa #ChennaiyinFC

 
ஐ.எஸ்.எல். கால்பந்து - கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னையின் எப்.சி.
 
சென்னை:

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடித்ததன் அடிப்படையில் அரையிறுதிக்கு பெங்களூரு, சென்னை, கோவா மற்றும் புனே அணிகள் தேர்வு பெற்றன.

இதற்கிடையே, ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுகள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. புனே மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இரண்டாவது லெக் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

201803132228341602_1_ISL1303-22._L_styvpf.jpg

சென்னை மற்றும் கோவா அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியின் முதல் லெக் போட்டி 1-1 என சமனில் முடிந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் கோவா இடையிலான இரண்டாவது லெக் போட்டி இன்று சென்னையில் நடந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 26-வது நிமிடம் சென்னை அணியின் ஜேஜே முதல் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 29-வது நிமிடம் சென்னையின் தனபால் கணேஷ் கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்ட முடிவில் சென்னை அணி 2-0 என முன்னிலை பெற்றது.

201803132228341602_2_ISL1303._L_styvpf.jpg

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கோவா அணியினர் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். ஆனால் அனைத்து முயற்சிகளையும் சென்னை அணியின் கோல் கீப்பர் சிறப்பாக தடுத்தார். ஆட்டத்தன் 90-வது நிமிடத்தில் சென்னை அணியின் ஜேஜே மீண்டும் ஒரு கோல் அடித்தார். கோவா அணி இறுதிவரை கோல் அடிக்கவில்லை. இறுதியில், சென்னையின் எப்.சி. 4-1 என்ற மொத்த கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வருகிற 17-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி. - சென்னையின் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #ISL #FCGoa #ChennaiyinFC #tamilnews

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/13222834/1150753/Chennaiyin-FC-cruise-into-Hero-ISL-Finals.vpf

Link to comment
Share on other sites

`ஸ்னைப்பர் ஜெஜே’ டபுள் கோல்... ஃபைனலில் சென்னையின் எஃப்.சி! #PoduMachiGoalu #LetsFootball #CHEGOA

 
 

சென்னையின் எஃப்.சி மற்றும் கோவா எஃப்.சி அணிகள் மோதிய, பரபரப்பான அரையிறுதியின் இரண்டாவது லெக் போட்டியில், சொந்த மண்ணில் கெத்து காட்டிய சென்னை அணி 3-0 என்ற கோல்கணக்கில் கோவாவை சாய்த்து, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. `மிசோ ஸ்னைப்பர்’ என்று செல்லப்பெயர் கொண்ட இந்திய வீரர் ஜெஜே இரட்டை கோல் அடித்து மிரட்ட, சென்னைப் பையனான மிட்ஃபீல்டர் தனபால் கணேஷ் ஒரு ஹெடர் கோல் அடித்து, கூடியிருந்த சூப்பர் மச்சான் ரசிகர்களை, தன் பங்குக்குப் பரவசப்படுத்தினார். முந்தைய முதல் லெக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆன நிலையில், இந்த 2-வது லெக் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றதால், மொத்தமாக 4-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது சென்னை அணி. #CHEGOA

சென்னையின் எஃப்.சி #CHEGOA

 

கால்பந்து என்பது தனி நபர் ஆட்டமல்ல; ஒட்டுமொத்தமாக, ஒரு அணியாகச் செயல்படும் வீரர்களாலே கால்பந்து அழகு பெறுகிறது. அப்படி ஓர் அழகான ஆட்டம்தான் சென்னை அணியை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற வைத்திருக்கிறது. பின்களம், நடுகளம் மற்றும் முன்களம் என அனைத்து ஏரியாக்களிலுமே சென்னை அணி வீரர்கள் துடிப்பாக ஆடியதுடன், ஒரு கட்டமைக்கப்பட்ட அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டதன் விளைவுதான் இந்த அபார வெற்றி. பின்களத்தில் மெயில்சன், செரேனோ, கால்டெரான் மற்றும் ஜெர்ரி அடங்கிய டிஃபென்சிவ் கூட்டணி, எந்த இடத்தில் கோவா வீரர்கள் பந்தோடு நுழைந்தாலும் டஃப் கொடுத்து பந்தை கிளியர் செய்து அசத்தியது. பின்களம் தந்த நம்பிக்கையால், நடுகளத்தில் தனபால் கணேஷும், பிக்ரம்ஜித்தும் சென்னையின் ஃபேன் ஃபேவரிட் ரஃபேல் அகுஸ்டோவும் துணை செய்ய, முன்களத்தில் வெடி வெடித்தனர்  நெல்சனும், ஜேஜேவும். அதிலும் நெல்சன் ஷோ ஆசம். ஜெஜே ஃபினிஷிங் ஆசம், ஆசம்.

சென்னையின் எஃப்.சி #CHEGOA

தொடக்கம் முதலே வேகமெடுத்த போட்டியில், 15 நிமிடங்கள் தாண்டியதுமே சென்னையின் கை ஓங்கத் தொடங்கியது. போட்டியின் முதல் கோலை அடித்தவர் சென்னையின் ஜேஜே. 26-வது நிமிடத்தில் கோவா கோல் பாக்சிற்குள் நெல்சன் அனுப்பிய டெலீசியஸ் கிராஸை, நிதானமான ஒரு ஃபைன் ஹெடரால் கோலாக்கினார் `மிசோ ஸ்னைப்பர்’ ஜேஜே. அடுத்த 7-வது நிமிடத்திலேயே அடுத்த கோல் சென்னைக்கு, தனபால் கணேஷின் த்ரில்லிங் ஹெடரால் விழுந்தது. இம்முறையும், செட் பீஸிலிருந்து ஒரு சூப்பர் கிராஸ் மூலம் அந்த கோலுக்கு அடித்தளம் போட்டது நெல்சன் கிரிகோரி. நெல்சன் சூறாவளியுடன் கொஞ்சம் ரஃபேல் புயலும் சேர்ந்து அடிக்க, ஆடித்தான் போனது கோவாவின் டிஃபென்ஸ். அதிக நேரம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், கோவா வீரர்கள் எடுத்த முயற்சிகள், சென்னையின் கீப்பர் கரன்ஜித் சிங்கால் முறியடிக்கப்பட, முதல் பாதி 2-0 என முடிவடைந்தது.

சென்னையின் எஃப்.சி #CHEGOA

இரண்டாம் பாதியில் சென்னை கீப்பர் கரன் ஜித் உடனடி ரியாக்சன்களால் கோவா வீரர்களின் போராட்டங்களை அடங்க வைத்தார். சென்னை டிஃபென்ஸைத் தாண்டி உள்ளே சென்ற ஓரிரு ஷாட்களையும், அவர் தடுத்துவிட்டார். கோவா கீப்பர் நவீனும், சென்னை வீரர்களின் பல ஷாட்டுகளை முறியடித்தாலும், அதிர்ஷ்டம் ஏனோ அவருக்குக் கை கொடுக்கவில்லை. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில், மாற்று வீரராகிய கேவிலன், ஜெஜேவுக்கு பாஸ் போட்டார். வந்த பந்து, கோவா டிஃபெண்டரின் காலில் பட்டாலும், ஒரு வழியாக ஜெஜேவிடமே சேர்ந்துவிட, அதை கோவா கீப்பர் நவீனை ஏமாற்றிவிட்டு பாட்டம் லெஃப்ட் கார்னருக்கு அனுப்பிவைத்து, தன் இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். சென்னையின் டெட்லாக்கை கடைசி வரை உடைக்க முடியாத கோவா, கடைசி வரை கோல் ஏதும் அடிக்கவே முடியாமல், பரிதாபமாகத் தோற்று வெளியேறியது.

#CHEGOA சென்னையின் எஃப்.சி

 

இதன் மூலம் சென்னை அணி, வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள, பெங்களூரு அணிக்கெதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சென்னையின் வெற்றிக்கு முக்கியக் காரணமான, `டிஃபென்சிவ் புலி’ மெயில்சன் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். கூடியிருந்த 19,000 ரசிகர்களுக்கும் செம்ம விருந்தாக அமைந்த இப்போட்டியில், சென்னை அணி ஒருங்கிணைந்த மற்றும் உறுதியான அதே சமயத்தில் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே, வெற்றிக்கு காரணம். இதே ஃபார்மோடு ஃபைனலுக்குப் போனால் சாம்பியன் டைட்டிலும் நிச்சயம். வெற்றிக்கனி எட்டும் தூரத்தில்தான் இருக்கிறது! 

https://www.vikatan.com/news/sports/119154-chennaiyin-fc-sails-into-the-final.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னுக்குப்பின் முரணாக உளறுகிறார். அது பயங்கர வாத அமைப்பென்றால் ஏன் காட்டிக்கொடுக்கும்வரை அந்த அமைப்பில் இருந்தார்? அதில் அங்கம் வகித்த இவரும் பயங்கரவாதியே. இவரது பயங்கரவாதம் இன்னும் தொடர்கிறதே, அப்படியெனில் புலிகள் இயக்கம் விடுதலைக்காக போராடியது, இது போன்றதுகள் பயங்கரவாதியாக அங்கு இயங்கியிருக்கின்றன அதனாலேயே தண்டனைக்கு பயந்து ஓடி இலங்கை பயங்கரவாதத்தோடு இணைந்து தமது பயங்கரவாதத்தை முன்னெடுக்கின்றன. ஒரு பயங்கரவாத அமைப்பிலிருந்து எப்படி இவரால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியுமென்பதையும் இவர்தான் விளக்க வேண்டும். 
    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.