Jump to content

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 900 புள்ளிகளைக் கடந்த ரபாடா முதலிடம், அஸ்வின் 2 இடங்கள் முன்னேற்றம்


Recommended Posts

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 900 புள்ளிகளைக் கடந்த ரபாடா முதலிடம், அஸ்வின் 2 இடங்கள் முன்னேற்றம்

 

 
rabada

கேகிஸோ ரபாடாவைப் பாராட்டும் தெ.ஆ. வீரர்கள்.   -  படம். | ஏ.பி.

ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா முதலிடம் பிடித்தார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 4-ம் இடத்தில் இருக்கிறார்.

போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 150 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில் முக்கிய பங்காற்றியதால் ஆட்ட நாயகன் விருது பெற்றார் ரபாடா.

900 புள்ளிகளைக் கடந்த 23-வது பவுலரானார் ரபாடா. தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை பிலாண்டர் (912), ஷான் போலக் (909) டேல் ஸ்ட்யென் (909) ஆகியோருக்குப் பிறகு 4வது தென் ஆப்பிரிக்க பவுலராக ரபாடா 900 புள்ளிகளைக் கடந்துள்ளார்.

ஜோஷ் ஹேசில்வுட் 4ம் இடத்திலிருந்து 5ம் இடம் செல்ல அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 5ம் இடத்திலிருந்து 9ம் இடத்துக்கு பின்னடைந்தார். ரவீந்திர ஜடேஜா 3-ம் இடத்தில் நீடிக்கிறார்.

பேட்டிங் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் நீடிக்கிறார், இந்திய கேப்டன் விராட் கோலி 2ம் இடத்தில் நீடிக்கிறார். புஜாரா 6-ம் இடத்தில் இருக்கிறார்.

ஏ.பி.டிவில்லியர்ஸ் 126 ரன்கள் விளாசியதையடுத்து 5 இடங்கள் முன்னேறி டாப் 10க்குள் பிரவேசித்து 7ம் இடத்தில் உள்ளார்.

ஹஷிம் ஆம்லா 9ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார், லுங்கி இங்கிடி 12 இடங்கள் முன்னேறி 37வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

உஸ்மான் கவாஜா 5 இடங்கள் முன்னேறி 16-ம் இடத்திற்குச் சென்றுள்ளார்.

இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதால் இங்கிலாந்து தொடரை வென்றால் 4-ம் இடத்துக்கு முன்னேறும். நியூஸிலாந்து தொடரை வென்றால் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து 3ம் இடம் செல்லும், அதாவது தென் ஆப்பிரிக்காவில் ஆஸ்திரேலியா 3-1 என்று தோற்று, நியூஸி, இங்கிலாந்தை வீழ்த்தினால் நியூஸிலாந்து 3ம் இடம் செல்லும்.

http://tamil.thehindu.com/sports/article23229030.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.