Jump to content

கண்ணை மறைக்கும் ஆத்திரம்: ரபாடாவின் சாதனையும் வேதனையும்


Recommended Posts

கண்ணை மறைக்கும் ஆத்திரம்: ரபாடாவின் சாதனையும் வேதனையும்

 

 
RABADAKB1

சாதனையாளார் ரபாடாவின் அடக்க முடியாத உணர்வு. எதிரில் ஸ்மித்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வாயை அடைக்கும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்காவின் சாதனையாளர் கேகியோ ரபாடா என்றால் மிகையாகாது. 11 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

கேப்டன் ஸ்மித்தே முதல் இன்னிங்சில் ரபாடா வீசிய ஒரு ஸ்பெல்லை ‘ரியல்லி வெரி டிஃபிகல்ட் (உள்ளபடியே மிகக்கடினமானது) என்று வர்ணித்தார், எதிரணியின் கேப்டன்களில் பலர் இப்படி மனம் திறந்து இன்னொரு அணியின் வேகப்பந்து வீச்சாளரைப் பாராட்டுவது அரிது.

28 டெஸ்ட் போட்டிகளில் 4வது முறையாக அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதித்துள்ளார். டேல் ஸ்டெய்ன், மகாய நிடினியை விடவும் இவர் குறைந்த வயதில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

23 வயதுக்குள்ளாகவே 4 முறை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வக்கார் யூனிஸ் சாதனையையும் சமன் செய்துள்ளார் ரபாடா. இதன் மூலம் கிளென் மெக்ரா, ஆண்டர்சன், ஆலன் டோனல்ட், வால்ஷ், ஆம்புரோஸ், ஃபிரெட் ட்ரூமேன் போன்ற மேதை வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் சேர்ந்தார் ரபாடா.

கபில்தேவ் இருமுறைதான் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஷான் போலாக் ஒருமுறை கைப்பற்ற பிரெட் லீ ஒரு முறை கூட 10 விக்கெட்டுகளை ஒரு டெஸ்ட் போட்டியில் கைப்பற்றவில்லை. இந்தத் தொடருடன் ஓய்வு பெறும் மோர்னி மோர்கெல் 84 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இன்னமும் ஒரு 10 விக்கெட் பவுலிங்கை வீசியதில்லை.

தற்போது 28 டெஸ்ட் போட்டிகளில் 135 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 21.45 என்ற ஸ்ட்ரைக் ரேட் ரபாடாவின் தனித்துவமானது.

இவையெல்லாம் இவரது சாதனை, இது ஒரு புறமிருக்க அவரது ஆத்திரம் அவரது கண்களை மறைத்துள்ளது, வெள்ளைகார கிரிக்கெட் வீரர்களைப் பார்த்து சூடுபோட்டுக் கொள்ளும் பூனை போல நம் ஊரில் விராட் கோலி, அங்கு ரபாடா, உணர்ச்சிவயப்படுதல், அப்படிப்பட்டால்தான் கிரிக்கெட்டில் தான் இருக்கிறோம் என்ற (அசட்டு) நம்பிக்கை போன்றவை ரபாடாவையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் கோலி, ஸ்மித், வார்னர், லயன், பெரிய இடத்துப் பிள்ளைகள் அவ்வளவு சுலபத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது, ரபாடா போன்றவர்கள் அப்படியா? இதை அவர் உணரவைல்லை.

இதனால்தான் ஸ்மித்தை தோளில் இடித்து ஏற்கெனவே தடையின் விளிம்பில் இருந்த ரபாடா இப்போது தடை செய்யப்பட்டுள்ளார்.

“என்னையும் என் அணியையும் தலைகுனியச் செய்து விட்டேன். இதை கற்றுக் கொள்ளும் ஒரு பாடமாக கருதுகிறேன். நான் இதனால் மகிழ்ச்சியடையவில்லை. காலம் நகரும்” என்றார் விரக்தியுடன். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் தடை பெற்றார். தற்போது இன்னொரு டெஸ்ட் தடை, இதனால் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை 1992 மறுவருகைக்குப் பிறகு தங்கள் மண்ணில் தொடரை வெல்லும் வாய்ப்பு பெரும் சிக்கலாகியுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23168418.ece

Link to comment
Share on other sites

ரபாடா எந்திரம் அல்ல; வார்னர் விவகாரம் இதை விட மோசமானது: பாரபட்சம் குறித்து டுபிளெசிஸ் சாடல்

 

 
duplessis

படம். | ஏ.எஃப்.பி.

வார்னருக்கு ஒரு சட்டம் ரபாடாவுக்கு ஒரு சட்டமா? வார்னர் நடத்தை மோசமானது, ஆனால் அவருக்கு தடை விதிக்கப்படவில்லை ஏன்? என்று கேட்கிறார் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ்.

ஸ்மித்தை வழியனுப்பி அவரை உரசியதால் ஏற்கெனவே உள்ள தகுதியிழப்புப் புள்ளிகளுடன் கூடுதல் புள்ளிகள் சேர 2 டெஸ்ட் போட்டிகளுக்கு தென் ஆப்பிரிக்க நட்சத்திர பந்து வீச்சாளர் ரபாடா விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் வார்னர் விவகாரம் இதைவிடவும் மோசமானது என்று கூறி ஐசிசி தகுதி இழப்புப் புள்ளிகள் முறை மீது தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது:

கிரிக்கெட் உணர்ச்சிகரப் பக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு சம்பவமும் கேமராவில் உள்ளது, இதைப்பார்த்தாயா, அதைப்பார்த்தாயா... என்று ஆர்வம் கொப்புளிக்கிறது ரசிகர்களிடையே. இது டெஸ்ட் கிரிக்கெட், ஆஸ்திரேலியா அவர்கள் வழியில் டெஸ்ட் போட்டியை ஆடுவது பற்றி எங்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. அது ஒருவிதத்தில் ஆட்டத்துக்கு நல்லதுதான்.

கேகிஸோ ரபாடா ஓடி வந்து 15 ஓவர்கள் வீசுகிறார், அவுட் ஆக்க கடுமையாக முயற்சி செய்கிறார் அதில் வெற்றியடையும் போது அவர் உணர்வை வெளிப்படுத்தவே செய்வார், இல்லையெனில் எதற்கு மனிதர்கள் கிரிக்கெட் ஆட வேண்டும், ரபாடாவுக்குப் பதில் பந்து வீச்சு எந்திரத்தையும் பேட்ஸ்மென்க்குப் பதில் ரோபோவையும் ஆடவைக்கலாமே.

ரபாடாவுக்கு எதிரான புகார் லெவல் 2 ஆகும். இதற்கு 3 தகுதியிழப்புப் புள்ளிகள். அவர் சட்டையை உரசினார். ஆனால் வார்னர் விவகாரம் இன்னும் மோசமானது. ரபாடா ஸ்மித் உடல் தொடர்பு மிக குறைந்தபட்சமாகும். ஆனால் வார்னர் விவகாரம் இப்படியல்ல, இந்த இரண்டையும் ஏன் ஒரே விதமான விதிமீறலாகப் பார்க்க வேண்டும், வார்னர் விவகாரம் இன்னும் அதிகமானது.

மேலும் ஒரு முக்கியத் தொடரின் சூழலையும் அதிகாரிகள் கவனிக்க வேண்டும், இரண்டு டாப் அணிகள் மோதுகின்றன. சிறந்த வீரர்கள் விளையாடுவது உறுதி செய்யப்பட வேண்டும். அவர்கள் இது உடல் ரீதியான மோதல் என்கின்றனர், ஆனால் இது வெறும் சட்டை உரசல்தான். மேலும் இது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல. ஆட்ட நடுவர் கூறுவது போல் இதைவிடவும் பெரிய விஷயம் இங்கு நடந்து வருகிறது. பெரிய தொடர் என்பதால் டேவிட் வார்னர் லெவல் 3 நடத்தை மீறல் என்றாலும் தடை செய்யப்படவில்லை. அதுதான் ஏன் என்கிறேன்.

இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்.

http://tamil.thehindu.com/sports/article23214531.ece?homepage=true

Link to comment
Share on other sites

தடை விதிக்கும் அளவுக்கு ரபாடா அப்படி என்ன செய்துவிட்டார்? #SAvsAUS

 
 

ககிசோ ரபாடா... போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன்; சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் -1 பெளலர்; டெஸ்ட் அரங்கில் நான்கு முறை பத்து விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது தென்னாப்பிரிக்கா பெளலர்; ரிவர்ஸ் ஸ்விங்கில் மிரட்டுபவர். இருந்தும் என்ன பயன்? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அவருக்குத் தடை விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். 

ரபாடா #SAvsAUS

 

ஸ்டீவ் ஸ்மித் - ஆகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். அவர் விக்கெட்டை எடுப்பது எதிரணி பெளலர்களுக்கு சவால். அதனால்தான், போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தை எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழக்கச்செய்த பின், கொஞ்சம் ஓவராக உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் ரபாடா. ஸ்டீவ் ஸ்மித் முகத்துக்கு நேராக yes yes yes எனக் கத்தியதோடு நின்றிருக்கலாம். அல்லது ஸ்மித்தைக் கடந்து செல்லும்போது அவருக்குப் பின்புறமாக தோள்பட்டையோடு உரசாமல் இருந்திருக்கலாம். ரபாடா இங்குதான் உணர்வைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார். வழக்கமாக ஆஸ்திரேலியலர்கள்தான் `எப்படா’ என `ஸ்லெட்ஜிங்’ செய்யக் காத்திருப்பர். ரபாடா தன்னை  உரசிவிட்டுச் சென்றதை ஸ்டீவ் ஸ்மித்தும் உணர்ந்தார். இருந்தாலும், ரபாடா வேண்டுமென்றே அப்படிச் செய்திருக்க மாட்டார். இயல்பாக நடந்திருக்கும் என ஸ்மித் வம்பை வளர்க்கவில்லை. அதைவிட தன் விக்கெட்டைக் காப்பாற்றிக்கொள்வதே அப்போது அவருக்கு முக்கியமானதாகத் தெரிந்தது. ரிவ்யூ கேட்பதில்தான் ஸ்மித் குறியாக இருந்தார். 

ஸ்மித் உன்னிப்பாகக் கவனிக்கவில்லையே தவிர, மேட்ச் ரெஃப்ரி ஜெஃப் க்ரோவ் இதைக் கவனிக்காமல் இல்லை. ``ரபாடா, ஸ்மித் இடையே உரசல் ஏற்பட்டதைக் கவனித்தேன். இந்த உரசல் தேவையில்லாதது. வேண்டுமென்றே செய்ததுபோல இருந்தது. இந்த உரசல் நிகழாமல் இருப்பதற்கான சாத்தியம் இருந்தது. எனவே, இது இயல்பாக நிகழ்ந்தது என்ற வாதத்தை ஆதரிப்பதற்கான சான்று இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் விட, இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் இரு அணிகளையும் அழைத்து நடத்திய கூட்டத்தில், பரஸ்பரம் எதிரணியினரை மதிப்பது குறித்தே அதிகம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ரபாடா போன்ற திறமையான இளம் வீரர் சஸ்பெண்ட் செய்யப்படுவது மகிழ்ச்சியளிக்கவில்லை. இருந்தாலும், அவர் பலமுறை ஐ.சி.சி-யின் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டார்’’ என்றார் க்ரோவ். 

ரபாடா #SAvsAUS

``இதெல்லாம்தான் டெஸ்ட் கிரிக்கெட். 15 ஓவர்கள் கடுமையாகப் பந்துவீசி, கடைசியாக ஒரு முக்கியமான விக்கெட்டைக் கைப்பற்றும்போது ஒரு பெளலர் தன் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தத்தான் செய்வார். இதெல்லாம் கூடாது என்றால், நீங்கள் ஒரு பெளலிங் மெஷினை வைத்து ஒரு ரோபோவைத்தான் பேட்டிங் பிடிக்கச் சொல்ல வேண்டும்’’ என்றார் தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸி. கேப்டன் என்ற முறையில் அணியின் வீரனுக்கு ஆதரவாக நிற்க வேண்டியது டு பிளெஸ்ஸி கடமை. ஆனால், ரபாடாவுக்குத் தடை என்ற செய்தி வெளியானதுமே, `ஆஸ்திரேலியர்கள் செய்யாத ஸ்லெட்ஜிங்கா? தடை என்பதெல்லாம் ஓவர். இது திட்டமிட்ட சதி’ என அவருக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் விவாதம் நடந்தது. 

ரன் அவுட் செய்துவிட்டுக் கீழே விழுந்து கிடந்த டி வில்லியர்ஸ் அருகே பந்தைப் போட்டுச் சென்றபோது, நாதன் லியான் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவின் கோரமுகம் வெளிப்பட்டதாகவே விமர்சனம் எழுந்தது. அந்த அநாகரிகச் செயலுடன் ஒப்பிடும்போது ரபாடா உணர்ச்சிவசப்பட்டது தவறில்லை. ஆனால், ரபாடா அடிக்கடி இப்படி உணர்ச்சிவசப்படுவதுதான் இப்போது பிரச்னை. கடந்த ஒன்பது மாதங்களில் மூன்றாவது முறையாக, பேட்ஸ்மேன்களை ரபாடா முறைதவறி வழியனுப்பி வைத்துள்ளார்.

கடந்த மாதம் ஜூலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின்போது, பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியபின், கெட்ட வார்த்தையில் திட்டினார் ரபாடா. கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷிகர் தவன் விக்கெட்டை வீழ்த்தியபின், டாடா காட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது. போர்ட் எலிசபெத் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை எடுத்த பின் அவரிடம் உரசியது மட்டுமல்லாது, இரண்டாவது இன்னிங்ஸில் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தியபின்பும் ஓவராக ஆர்ப்பரித்தார். ஆக, ஒவ்வொரு முறை விதியை மீறும்போதும், எச்சரிக்கை மட்டுமின்றி  ஐ.சி.சி-யின் நடத்தை விதிமுறைகளை மீறியதற்கான புள்ளிகளையும் சேர்த்தே பெற்றுவந்தார். எல்லாம் சேர்த்து மொத்தமாக வந்தது வினை. 

Rabada #SAvsAUS

ஐ.சி.சி-யின் திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, களத்தில் அநாகரிகமாக நடக்கும் வீரர்களுக்கு Level 1, Level 2, Level 3 பிரிவுகளின் கீழ் demerit புள்ளிகள் வழங்கப்படும். அதாவது எதிரணி வீரர்களுடன் உடல் ரீதியான மோதலில் ஈடுபட்டால் Level 3 பிரிவின் மூன்று புள்ளிகள், அநாகரிகமான சமிக்ஞை செய்தால் Level 1 பிரிவின் கீழ் ஒரு புள்ளி, அபராதம் விதிக்கப்படும். மொத்தமாக நான்கு புள்ளிகளைப் பெற்ற வீரருக்கு, ஒரு டெஸ்ட் போட்டியிலோ அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகளிலோ பங்கேற்கத் தடை விதிக்கப்படும். (அந்த அணி அடுத்து உடனடியாக எந்தத் தொடரில் பங்கேற்கிறதோ அதைப் பொறுத்து தடை அமலுக்கு வரும்.) எட்டுப் புள்ளிகள் எனில்  இரண்டு டெஸ்ட் அல்லது நான்கு ஒருநாள் போட்டிகளுக்குத் தடை விதிக்கப்படும். கடந்த ஒன்பது மாதங்களில் ரபாடா எட்டு demerit புள்ளிகளைப் பெற்றிருக்கிறார். ஷிகர் தவனை பெவிலியன் அனுப்பியபோதே ரபாடாவின் புள்ளிகள் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்து விட்டது. எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எந்த வம்பு தும்புக்கும் போகக் கூடாது. மீறி உணர்ச்சிவசப்பட்டால் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாமல் போகலாம் என முன்பே அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஏனெனில், இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் நான்கு புள்ளிகளைப் பெற்றதும், ஒரு டெஸ்ட் மேட்ச்சில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தார் ரபாடா. இவ்வளவு நடந்தும் அவர் தன்னைக் கட்டுப்படுத்தவில்லை. 

Rabada #SAvsAUS

ரபாடாவின் ஆக்ரோஷம் மட்டுமல்ல, இந்த டெஸ்ட் தொடரில் பல களேபரங்கள் நடந்தன. டர்பன் டெஸ்ட் போட்டியில், மார்க்ரமை ஏகத்துக்கும் ஸ்லெட்ஜிங் செய்தனர் ஆஸ்திரேலிய வீரர்கள். விக்கெட் கிடைக்காத ஒவ்வொரு பந்துக்கும் மிச்செல் ஸ்டார்க் கெட்ட வார்த்தைகளை உமிழ்ந்தார். போர்ட் எலிசபெத் டெஸ்ட்டில், டிரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பும் வழியில் டி காக் - வார்னர் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். இதற்காக வார்னருக்கு 3 demerit புள்ளிகள், டி காக்குக்கு ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. ரபாடா பந்தில் விக்கெட்டை இழந்தபின் அவரைத் திட்டியதற்காக மிச்செல் மார்ஷுக்கு அபாரதமும் ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. டி வில்லியர்ஸ் அருகே பந்தைப் போட்டதற்காக நாதன் லியானுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஆக, இரு தரப்பிலும் போட்டிபோட்டுக்கொண்டு demerit புள்ளிகளைப் பெற்றுவருகின்றனர். விக்கெட் வீழ்த்துவதில் மட்டுமல்லாது அந்தப் புள்ளிகளைப் பெறுவதிலும் ரபாடா முதலிடத்தில் இருப்பதுதான் இப்போதைய சிக்கல்.

 

ரபாடா இல்லாத தென்னாப்பிரிக்காவை கேப் டவுன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா எளிதில் சமாளிக்கும். ``இனிமேல் என் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் அது என் அணியைப் பாதிக்கிறது. என்னையும் பாதிக்கிறது. அதேநேரத்தில் என் உணர்வுகளை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் முடியாது. வேண்டுமென்றால் பேட்ஸ்மேன்களிடம் இருந்து விலகிச்சென்று என் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவேன்’’என்றார் ரபாடா. அதுதான் சரி. ஏனெனில், ஒரு நல்ல பெளலர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது அழகல்ல!

https://www.vikatan.com/news/sports/119129-rabada-handed-twotest-suspension-for-misbehavior.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.