Jump to content

கண்ணை மறைக்கும் ஆத்திரம்: ரபாடாவின் சாதனையும் வேதனையும்


Recommended Posts

கண்ணை மறைக்கும் ஆத்திரம்: ரபாடாவின் சாதனையும் வேதனையும்

 

 
RABADAKB1

சாதனையாளார் ரபாடாவின் அடக்க முடியாத உணர்வு. எதிரில் ஸ்மித்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வாயை அடைக்கும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்காவின் சாதனையாளர் கேகியோ ரபாடா என்றால் மிகையாகாது. 11 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

கேப்டன் ஸ்மித்தே முதல் இன்னிங்சில் ரபாடா வீசிய ஒரு ஸ்பெல்லை ‘ரியல்லி வெரி டிஃபிகல்ட் (உள்ளபடியே மிகக்கடினமானது) என்று வர்ணித்தார், எதிரணியின் கேப்டன்களில் பலர் இப்படி மனம் திறந்து இன்னொரு அணியின் வேகப்பந்து வீச்சாளரைப் பாராட்டுவது அரிது.

28 டெஸ்ட் போட்டிகளில் 4வது முறையாக அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதித்துள்ளார். டேல் ஸ்டெய்ன், மகாய நிடினியை விடவும் இவர் குறைந்த வயதில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

23 வயதுக்குள்ளாகவே 4 முறை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வக்கார் யூனிஸ் சாதனையையும் சமன் செய்துள்ளார் ரபாடா. இதன் மூலம் கிளென் மெக்ரா, ஆண்டர்சன், ஆலன் டோனல்ட், வால்ஷ், ஆம்புரோஸ், ஃபிரெட் ட்ரூமேன் போன்ற மேதை வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் சேர்ந்தார் ரபாடா.

கபில்தேவ் இருமுறைதான் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஷான் போலாக் ஒருமுறை கைப்பற்ற பிரெட் லீ ஒரு முறை கூட 10 விக்கெட்டுகளை ஒரு டெஸ்ட் போட்டியில் கைப்பற்றவில்லை. இந்தத் தொடருடன் ஓய்வு பெறும் மோர்னி மோர்கெல் 84 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இன்னமும் ஒரு 10 விக்கெட் பவுலிங்கை வீசியதில்லை.

தற்போது 28 டெஸ்ட் போட்டிகளில் 135 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 21.45 என்ற ஸ்ட்ரைக் ரேட் ரபாடாவின் தனித்துவமானது.

இவையெல்லாம் இவரது சாதனை, இது ஒரு புறமிருக்க அவரது ஆத்திரம் அவரது கண்களை மறைத்துள்ளது, வெள்ளைகார கிரிக்கெட் வீரர்களைப் பார்த்து சூடுபோட்டுக் கொள்ளும் பூனை போல நம் ஊரில் விராட் கோலி, அங்கு ரபாடா, உணர்ச்சிவயப்படுதல், அப்படிப்பட்டால்தான் கிரிக்கெட்டில் தான் இருக்கிறோம் என்ற (அசட்டு) நம்பிக்கை போன்றவை ரபாடாவையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் கோலி, ஸ்மித், வார்னர், லயன், பெரிய இடத்துப் பிள்ளைகள் அவ்வளவு சுலபத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது, ரபாடா போன்றவர்கள் அப்படியா? இதை அவர் உணரவைல்லை.

இதனால்தான் ஸ்மித்தை தோளில் இடித்து ஏற்கெனவே தடையின் விளிம்பில் இருந்த ரபாடா இப்போது தடை செய்யப்பட்டுள்ளார்.

“என்னையும் என் அணியையும் தலைகுனியச் செய்து விட்டேன். இதை கற்றுக் கொள்ளும் ஒரு பாடமாக கருதுகிறேன். நான் இதனால் மகிழ்ச்சியடையவில்லை. காலம் நகரும்” என்றார் விரக்தியுடன். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் தடை பெற்றார். தற்போது இன்னொரு டெஸ்ட் தடை, இதனால் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை 1992 மறுவருகைக்குப் பிறகு தங்கள் மண்ணில் தொடரை வெல்லும் வாய்ப்பு பெரும் சிக்கலாகியுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23168418.ece

Link to comment
Share on other sites

ரபாடா எந்திரம் அல்ல; வார்னர் விவகாரம் இதை விட மோசமானது: பாரபட்சம் குறித்து டுபிளெசிஸ் சாடல்

 

 
duplessis

படம். | ஏ.எஃப்.பி.

வார்னருக்கு ஒரு சட்டம் ரபாடாவுக்கு ஒரு சட்டமா? வார்னர் நடத்தை மோசமானது, ஆனால் அவருக்கு தடை விதிக்கப்படவில்லை ஏன்? என்று கேட்கிறார் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ்.

ஸ்மித்தை வழியனுப்பி அவரை உரசியதால் ஏற்கெனவே உள்ள தகுதியிழப்புப் புள்ளிகளுடன் கூடுதல் புள்ளிகள் சேர 2 டெஸ்ட் போட்டிகளுக்கு தென் ஆப்பிரிக்க நட்சத்திர பந்து வீச்சாளர் ரபாடா விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் வார்னர் விவகாரம் இதைவிடவும் மோசமானது என்று கூறி ஐசிசி தகுதி இழப்புப் புள்ளிகள் முறை மீது தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது:

கிரிக்கெட் உணர்ச்சிகரப் பக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு சம்பவமும் கேமராவில் உள்ளது, இதைப்பார்த்தாயா, அதைப்பார்த்தாயா... என்று ஆர்வம் கொப்புளிக்கிறது ரசிகர்களிடையே. இது டெஸ்ட் கிரிக்கெட், ஆஸ்திரேலியா அவர்கள் வழியில் டெஸ்ட் போட்டியை ஆடுவது பற்றி எங்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. அது ஒருவிதத்தில் ஆட்டத்துக்கு நல்லதுதான்.

கேகிஸோ ரபாடா ஓடி வந்து 15 ஓவர்கள் வீசுகிறார், அவுட் ஆக்க கடுமையாக முயற்சி செய்கிறார் அதில் வெற்றியடையும் போது அவர் உணர்வை வெளிப்படுத்தவே செய்வார், இல்லையெனில் எதற்கு மனிதர்கள் கிரிக்கெட் ஆட வேண்டும், ரபாடாவுக்குப் பதில் பந்து வீச்சு எந்திரத்தையும் பேட்ஸ்மென்க்குப் பதில் ரோபோவையும் ஆடவைக்கலாமே.

ரபாடாவுக்கு எதிரான புகார் லெவல் 2 ஆகும். இதற்கு 3 தகுதியிழப்புப் புள்ளிகள். அவர் சட்டையை உரசினார். ஆனால் வார்னர் விவகாரம் இன்னும் மோசமானது. ரபாடா ஸ்மித் உடல் தொடர்பு மிக குறைந்தபட்சமாகும். ஆனால் வார்னர் விவகாரம் இப்படியல்ல, இந்த இரண்டையும் ஏன் ஒரே விதமான விதிமீறலாகப் பார்க்க வேண்டும், வார்னர் விவகாரம் இன்னும் அதிகமானது.

மேலும் ஒரு முக்கியத் தொடரின் சூழலையும் அதிகாரிகள் கவனிக்க வேண்டும், இரண்டு டாப் அணிகள் மோதுகின்றன. சிறந்த வீரர்கள் விளையாடுவது உறுதி செய்யப்பட வேண்டும். அவர்கள் இது உடல் ரீதியான மோதல் என்கின்றனர், ஆனால் இது வெறும் சட்டை உரசல்தான். மேலும் இது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல. ஆட்ட நடுவர் கூறுவது போல் இதைவிடவும் பெரிய விஷயம் இங்கு நடந்து வருகிறது. பெரிய தொடர் என்பதால் டேவிட் வார்னர் லெவல் 3 நடத்தை மீறல் என்றாலும் தடை செய்யப்படவில்லை. அதுதான் ஏன் என்கிறேன்.

இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்.

http://tamil.thehindu.com/sports/article23214531.ece?homepage=true

Link to comment
Share on other sites

தடை விதிக்கும் அளவுக்கு ரபாடா அப்படி என்ன செய்துவிட்டார்? #SAvsAUS

 
 

ககிசோ ரபாடா... போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன்; சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் -1 பெளலர்; டெஸ்ட் அரங்கில் நான்கு முறை பத்து விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது தென்னாப்பிரிக்கா பெளலர்; ரிவர்ஸ் ஸ்விங்கில் மிரட்டுபவர். இருந்தும் என்ன பயன்? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அவருக்குத் தடை விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். 

ரபாடா #SAvsAUS

 

ஸ்டீவ் ஸ்மித் - ஆகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். அவர் விக்கெட்டை எடுப்பது எதிரணி பெளலர்களுக்கு சவால். அதனால்தான், போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தை எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழக்கச்செய்த பின், கொஞ்சம் ஓவராக உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் ரபாடா. ஸ்டீவ் ஸ்மித் முகத்துக்கு நேராக yes yes yes எனக் கத்தியதோடு நின்றிருக்கலாம். அல்லது ஸ்மித்தைக் கடந்து செல்லும்போது அவருக்குப் பின்புறமாக தோள்பட்டையோடு உரசாமல் இருந்திருக்கலாம். ரபாடா இங்குதான் உணர்வைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார். வழக்கமாக ஆஸ்திரேலியலர்கள்தான் `எப்படா’ என `ஸ்லெட்ஜிங்’ செய்யக் காத்திருப்பர். ரபாடா தன்னை  உரசிவிட்டுச் சென்றதை ஸ்டீவ் ஸ்மித்தும் உணர்ந்தார். இருந்தாலும், ரபாடா வேண்டுமென்றே அப்படிச் செய்திருக்க மாட்டார். இயல்பாக நடந்திருக்கும் என ஸ்மித் வம்பை வளர்க்கவில்லை. அதைவிட தன் விக்கெட்டைக் காப்பாற்றிக்கொள்வதே அப்போது அவருக்கு முக்கியமானதாகத் தெரிந்தது. ரிவ்யூ கேட்பதில்தான் ஸ்மித் குறியாக இருந்தார். 

ஸ்மித் உன்னிப்பாகக் கவனிக்கவில்லையே தவிர, மேட்ச் ரெஃப்ரி ஜெஃப் க்ரோவ் இதைக் கவனிக்காமல் இல்லை. ``ரபாடா, ஸ்மித் இடையே உரசல் ஏற்பட்டதைக் கவனித்தேன். இந்த உரசல் தேவையில்லாதது. வேண்டுமென்றே செய்ததுபோல இருந்தது. இந்த உரசல் நிகழாமல் இருப்பதற்கான சாத்தியம் இருந்தது. எனவே, இது இயல்பாக நிகழ்ந்தது என்ற வாதத்தை ஆதரிப்பதற்கான சான்று இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் விட, இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் இரு அணிகளையும் அழைத்து நடத்திய கூட்டத்தில், பரஸ்பரம் எதிரணியினரை மதிப்பது குறித்தே அதிகம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ரபாடா போன்ற திறமையான இளம் வீரர் சஸ்பெண்ட் செய்யப்படுவது மகிழ்ச்சியளிக்கவில்லை. இருந்தாலும், அவர் பலமுறை ஐ.சி.சி-யின் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டார்’’ என்றார் க்ரோவ். 

ரபாடா #SAvsAUS

``இதெல்லாம்தான் டெஸ்ட் கிரிக்கெட். 15 ஓவர்கள் கடுமையாகப் பந்துவீசி, கடைசியாக ஒரு முக்கியமான விக்கெட்டைக் கைப்பற்றும்போது ஒரு பெளலர் தன் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தத்தான் செய்வார். இதெல்லாம் கூடாது என்றால், நீங்கள் ஒரு பெளலிங் மெஷினை வைத்து ஒரு ரோபோவைத்தான் பேட்டிங் பிடிக்கச் சொல்ல வேண்டும்’’ என்றார் தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸி. கேப்டன் என்ற முறையில் அணியின் வீரனுக்கு ஆதரவாக நிற்க வேண்டியது டு பிளெஸ்ஸி கடமை. ஆனால், ரபாடாவுக்குத் தடை என்ற செய்தி வெளியானதுமே, `ஆஸ்திரேலியர்கள் செய்யாத ஸ்லெட்ஜிங்கா? தடை என்பதெல்லாம் ஓவர். இது திட்டமிட்ட சதி’ என அவருக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் விவாதம் நடந்தது. 

ரன் அவுட் செய்துவிட்டுக் கீழே விழுந்து கிடந்த டி வில்லியர்ஸ் அருகே பந்தைப் போட்டுச் சென்றபோது, நாதன் லியான் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவின் கோரமுகம் வெளிப்பட்டதாகவே விமர்சனம் எழுந்தது. அந்த அநாகரிகச் செயலுடன் ஒப்பிடும்போது ரபாடா உணர்ச்சிவசப்பட்டது தவறில்லை. ஆனால், ரபாடா அடிக்கடி இப்படி உணர்ச்சிவசப்படுவதுதான் இப்போது பிரச்னை. கடந்த ஒன்பது மாதங்களில் மூன்றாவது முறையாக, பேட்ஸ்மேன்களை ரபாடா முறைதவறி வழியனுப்பி வைத்துள்ளார்.

கடந்த மாதம் ஜூலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின்போது, பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியபின், கெட்ட வார்த்தையில் திட்டினார் ரபாடா. கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷிகர் தவன் விக்கெட்டை வீழ்த்தியபின், டாடா காட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது. போர்ட் எலிசபெத் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை எடுத்த பின் அவரிடம் உரசியது மட்டுமல்லாது, இரண்டாவது இன்னிங்ஸில் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தியபின்பும் ஓவராக ஆர்ப்பரித்தார். ஆக, ஒவ்வொரு முறை விதியை மீறும்போதும், எச்சரிக்கை மட்டுமின்றி  ஐ.சி.சி-யின் நடத்தை விதிமுறைகளை மீறியதற்கான புள்ளிகளையும் சேர்த்தே பெற்றுவந்தார். எல்லாம் சேர்த்து மொத்தமாக வந்தது வினை. 

Rabada #SAvsAUS

ஐ.சி.சி-யின் திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, களத்தில் அநாகரிகமாக நடக்கும் வீரர்களுக்கு Level 1, Level 2, Level 3 பிரிவுகளின் கீழ் demerit புள்ளிகள் வழங்கப்படும். அதாவது எதிரணி வீரர்களுடன் உடல் ரீதியான மோதலில் ஈடுபட்டால் Level 3 பிரிவின் மூன்று புள்ளிகள், அநாகரிகமான சமிக்ஞை செய்தால் Level 1 பிரிவின் கீழ் ஒரு புள்ளி, அபராதம் விதிக்கப்படும். மொத்தமாக நான்கு புள்ளிகளைப் பெற்ற வீரருக்கு, ஒரு டெஸ்ட் போட்டியிலோ அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகளிலோ பங்கேற்கத் தடை விதிக்கப்படும். (அந்த அணி அடுத்து உடனடியாக எந்தத் தொடரில் பங்கேற்கிறதோ அதைப் பொறுத்து தடை அமலுக்கு வரும்.) எட்டுப் புள்ளிகள் எனில்  இரண்டு டெஸ்ட் அல்லது நான்கு ஒருநாள் போட்டிகளுக்குத் தடை விதிக்கப்படும். கடந்த ஒன்பது மாதங்களில் ரபாடா எட்டு demerit புள்ளிகளைப் பெற்றிருக்கிறார். ஷிகர் தவனை பெவிலியன் அனுப்பியபோதே ரபாடாவின் புள்ளிகள் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்து விட்டது. எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எந்த வம்பு தும்புக்கும் போகக் கூடாது. மீறி உணர்ச்சிவசப்பட்டால் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாமல் போகலாம் என முன்பே அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஏனெனில், இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் நான்கு புள்ளிகளைப் பெற்றதும், ஒரு டெஸ்ட் மேட்ச்சில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தார் ரபாடா. இவ்வளவு நடந்தும் அவர் தன்னைக் கட்டுப்படுத்தவில்லை. 

Rabada #SAvsAUS

ரபாடாவின் ஆக்ரோஷம் மட்டுமல்ல, இந்த டெஸ்ட் தொடரில் பல களேபரங்கள் நடந்தன. டர்பன் டெஸ்ட் போட்டியில், மார்க்ரமை ஏகத்துக்கும் ஸ்லெட்ஜிங் செய்தனர் ஆஸ்திரேலிய வீரர்கள். விக்கெட் கிடைக்காத ஒவ்வொரு பந்துக்கும் மிச்செல் ஸ்டார்க் கெட்ட வார்த்தைகளை உமிழ்ந்தார். போர்ட் எலிசபெத் டெஸ்ட்டில், டிரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பும் வழியில் டி காக் - வார்னர் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். இதற்காக வார்னருக்கு 3 demerit புள்ளிகள், டி காக்குக்கு ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. ரபாடா பந்தில் விக்கெட்டை இழந்தபின் அவரைத் திட்டியதற்காக மிச்செல் மார்ஷுக்கு அபாரதமும் ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. டி வில்லியர்ஸ் அருகே பந்தைப் போட்டதற்காக நாதன் லியானுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஆக, இரு தரப்பிலும் போட்டிபோட்டுக்கொண்டு demerit புள்ளிகளைப் பெற்றுவருகின்றனர். விக்கெட் வீழ்த்துவதில் மட்டுமல்லாது அந்தப் புள்ளிகளைப் பெறுவதிலும் ரபாடா முதலிடத்தில் இருப்பதுதான் இப்போதைய சிக்கல்.

 

ரபாடா இல்லாத தென்னாப்பிரிக்காவை கேப் டவுன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா எளிதில் சமாளிக்கும். ``இனிமேல் என் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் அது என் அணியைப் பாதிக்கிறது. என்னையும் பாதிக்கிறது. அதேநேரத்தில் என் உணர்வுகளை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் முடியாது. வேண்டுமென்றால் பேட்ஸ்மேன்களிடம் இருந்து விலகிச்சென்று என் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவேன்’’என்றார் ரபாடா. அதுதான் சரி. ஏனெனில், ஒரு நல்ல பெளலர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது அழகல்ல!

https://www.vikatan.com/news/sports/119129-rabada-handed-twotest-suspension-for-misbehavior.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.