Jump to content

130,000 டாலர்களைத் திருப்பி தருகிறேன்; அதிபர் ட்ரம்புடனான உறவை அம்பலப்படுத்தியே தீருவேன்: நடிகை திட்டவட்டம்


Recommended Posts

130,000 டாலர்களைத் திருப்பி தருகிறேன்; அதிபர் ட்ரம்புடனான உறவை அம்பலப்படுத்தியே தீருவேன்: நடிகை திட்டவட்டம்

 
 
stormy%20dainels

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்- நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்கிற கிளிபர்ட்.   -  படம். | ஏ.எஃப்.பி.

போர்னோ வகைத் திரைப்படங்களில் நடிக்கும் ஸ்டார்மி டேனியல்ஸ் என்ற நடிகை தான் அதிபர் ட்ரம்புடன் உறவு வைத்துக் கொண்டதை வெளியே சொல்லக் கூடாது என்று கொடுத்த 130,000 டாலர்களைத் திருப்பித் தர தயார் என்றும் ட்ரம்ப்பை அம்பலப்படுத்தியே தீருவேன் என்றும் கூறியுள்ளார்.

ஸ்டார்மி டேனியல்ஸ் என்ற இந்த நடிகையின் உண்மையான் பெயர் ஸ்டெபானி கிளிஃபர்ட், இவருடன் 2016-ல் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதாவது ட்ரம்ப் பற்றி எதுவும் வெளியில் சொல்லக் கூடாது என்று இவருக்கு 1,30,000 அமெரிக்க டாலர்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பணத்தைத் திருப்பி அளிக்க அவர் முன் வந்துள்ளதால் அவர் ‘பேசக்கூடாது’ என்ற நிபந்தனை ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்று ட்ரம்ப் வழக்கறிஞர் மைக்கேல் கோஹெனுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் மூலம் தெரியவந்துள்ளது.

“அட்டர்னி கோஹன், அதிபர் ட்ரம்ப் ஆகியோர் கிளிபோர்டின் இந்த திட்டத்துக்கு செவி சாய்க்க வேண்டும்” என்று நடிகையின் வழக்கறிஞர் மைக்கேல் அவினாட்டி தெரிவித்துள்ளார், மேலும் இதன் மூலம் கிளிப்போர்ட் தன் பக்க நியாயத்தை தெரிவிக்க முடியும் என்பதோடு யார் உண்மையைக் கூறுகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் முடிவு செய்யட்டும் என்றார்.

2016 அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே ‘மவுன ஒப்பந்தம்’ போடபப்ட்டது. இதில் நடிஐ மட்டுமே கையெழுத்திட்டுள்ளார் ட்ரம்ப் கையெழுத்திடவில்லை இதனால் இந்த ஒப்பந்தம் செல்லாது என்று வழக்கு ஒன்றில் நடிகை கோரியுள்ளார்.

வழக்கம் போல் வெள்ளைமாளிகை நடிகையின் கோரல்களை கடுமையாக மறுத்துள்ளதோடு ட்ரம்ப் நிறுவனமோ ட்ரம்ப் தொடர்புடையவர்களோ அவருக்கு 130,000 டாலர்களைக் கொடுக்கவில்லை, என்று தெரிவிக்க நடிகையோ அத்தனை பேச்சுவார்த்தைகளும் ட்ரம்புக்குத் தெரியும் என்று தன் வழக்கில் கூறியுள்ளார்.

மேலும் நடிகை வாயைத் திறக்காமல் இருக்க பணம் அளித்தது தேர்தல் பிரச்சார நிதி விதிமுறைகளை மீறியுள்ளது என்று தேர்தல் ஆணையம் மற்றும் நீதித்துறைக்கும் ட்ரம்ப் மீது புகார் சென்றுள்ளது.

வாயை அடைக்க பணம் கொடுப்பது அங்கு வர்த்தக வட்டாரங்களில் சகஜம் என்றாலும் தேர்தலில் அது செல்வாக்கு செலுத்தியது என்றால் அதன் உண்மைகள் வெளியில் வர வேண்டும் என்று காமன்காஸ் குழுவின் துணைத் தலைவர் பால் எஸ்.ரயான் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/world/article23169089.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.