Jump to content

தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா


Recommended Posts

  • தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா
Capture-186-569x430.jpg

தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா

 

 

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் புக­லி­டக் கோரிக்கை முன்­வைத்­துத் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த தமிழ்க் குடும்­ப­மொன்றை ஆஸ்­தி­ரே­லிய அரசு பல­வந்­த­மா­கச் சிறைப்­பி­டித்­த­து­டன் அவர்­களை இலங்­கைக்கு நாடு­க­டத்­த­வும் திட்­ட­மிட்­டுள்ளது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு 2013ஆம் ஆண்டு சென்ற நடே­ச­லிங்­கம், 2014ஆம் ஆண்டு திரு­ம­ணம் செய்­தார். ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பிலோலா நக­ரில் வாழ்ந்து வந்­தார். அவ­ரது மனைவி பிரி­யா­வின் இணைப்பு நுழை­வி­சைவு கடந்த மார்ச் 4ஆம் திக­தி­யு­டன் முடி­வ­டைந்­தது. அதனை நீடிப்­ப­தற்கு எடுத்த முயற்­சி­யும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

இந்த நிலை­யில், நடே­ச­லிங்­கம் அவ­ரது மனைவி பிரியா, அவர்­க­ளது இரண்டு குழந்­தை­களை நாடு கடத்த ஆஸ்­தி­ரே­லிய அரசு தீர்­மா­னித்­தது. கடந்த திங்­கட் கிழமை, பிலோலா நக­ரி­லுள்ள அவர்­க­ளது வீட்­டி­லி ­ருந்து நடே­ச­லிங்­கத்தை தனி­யான வாக­னத்­தி­லும், பிரி­யா­வை­யும் அவ­ரது இரண்டு குழந்­தை­க­ளை­ யும் மற்­றொரு வாக­னத்­தி­லும் பொலி­ஸார் மெல் பேர்ண் நகர தடுப்பு முகா­முக்கு ஏற்­றிச் சென்­றனர்.

பிரி­யா­வும் அவ­ரது இரண்டு குழந்­தை­க­ளும் ஒரே வாக­னத்­தில் ஏற்­றிச் செல்­லப்­பட்­டா­லும், குழந்­தை­கள் தாயு­டன் இருக்க அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.
இரு­வ­ரை­யும் தனித் தனி­யாகச் சிறை வைத்த பின்­னர், அவர்­கள் சுய விருப்­பின் அடிப்­ப­டை­யில் நாடு திரும்­புவ­தற்­கான ஆவ­ணங்­க­ளில் ஆஸ்­தி­ரே­லி­யப் பொலி­ஸார் கையெ­ழுத்து வாங்­கி­யுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

http://newuthayan.com/story/75793.html

Link to comment
Share on other sites

இறுதி நேரத்தில் நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பித்த இலங்கை குடும்பம்

nadesalingam.jpg?resize=542%2C620
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று இறுதி நேரத்தில் நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளது. விமானத்தில் ஏற்றப்பட்ட நிலையில் இவர்களின் நாடு கடத்தும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. நடேசலிங்கம், பிரியா தம்பதியினரும் அவர்களது பிள்ளைகளும் மெல்பர்ன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

நேற்றைய தினம் இவர்கள் மெல்பர்ன் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் விமானத்தில் இருத்தப்பட்டுள்ளனர். எனினும் இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளினால் நாடு கடத்தப்படுவதிலிருந்து இந்த குடும்பம் தப்பித்துக்கொண்டுள்ளது.

 

கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடேசலிங்கமும் பிரியாவும் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர். இலங்கைக்கு திரும்பினால் நடேசலிங்கம் துன்புறுத்தப்படக் கூடும் என அவரது குடும்பத்தினர் அஞ்சுகின்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2018/70853/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.