Jump to content

எல்லாம் எனக்கே!


Recommended Posts

எல்லாம் எனக்கே!

 

 
kadhir10

""செல்வி, இங்கே வாம்மா.'' 
செல்வியின் அம்மா மலர்விழி, அழைப்பது கேட்டது செல்விக்கு. செல்வி இப்போதுதான் வணிகத்தில் முதுகலைப் படித்துவிட்டு வேலைக்காக முயன்று கொண்டிருக்கிறாள். ஒரே பெண் என்பதால் ஏகப்பட்ட செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவள். தனக்குப் பிடித்த பொருள்களைப் பிறர் தொடுவதைக் கூட விரும்பாத சுயநலம் மேலோங்கும் எண்ணம் கொண்டவள். அவளுடைய எண்ணத்தில் வன்மம் ஏதும் இல்லை என்றாலும், கிடைப்பதில் அரிதானவையோ அல்லது அழகானவையோ தனக்கே கிடைக்க 
வேண்டும் என்ற விருப்பம் அவளுக்கு சிறுவயது முதல் இருந்துவருகிறது. ஒரே பெண் என்பதால் அவள் கேட்டதெல்லாம் நடந்துவருகிறது.
""செல்வி''
மீண்டும் அம்மா அழைப்பதைக் கேட்டு, செல்வி எழுந்து அம்மா இருக்கும் அறை நோக்கிச் சென்றாள். 
""செல்வி, நேற்று என்னுடைய சிநேகிதி பார்வதியுடன் பாண்டி பஜார் சென்றிருந்தேன். அப்போது எனக்குப் பிடித்தது என்பதால் இரண்டு சுடிதார் 
வாங்கி வந்தேன். உனக்குப் பிடித்தால் நீ எடுத்துக்கொள்'' என்று அம்மா ஒரு பிளாஸ்டிக் உரையை செல்வியின் பக்கம் நீட்டினார்.
""உனக்கு வேண்டுமென்று வாங்கி கொண்டாயா? எனக்கு ஏன் வாங்கவில்லை?'' என்று சினத்துடன் அந்த பிளாஸ்டிக் உரையை பிடுங்கிக் கொண்டாள் செல்வி.
""உனக்கு பிடித்திருந்தால் இரண்டையுமே எடுத்துக்கொள்'' என்று அம்மா சொல்வதற்கு முன்னர், ""இந்த ஆரஞ்சு சுடிதார் அழகாக உள்ளது. அதை நான் எடுத்துக்கொள்கிறேன். அந்த மங்கிய வண்ணத்தில் மஞ்சள் சுடிதாரை வேண்டுமானால் நீ எடுத்துக்கொள்'' என்று கூறிவிட்டு ஆரஞ்சு சுடிதாரை மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பினாள் செல்வி.
""இரண்டும் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்'' என்ற அம்மாவின் பேச்சுக்கு பதிலேதும் சொல்லாது செல்வி சென்றுவிட்டாள். மலர்விழி தன்னுள் சிரித்துக்கொண்டாள். இது அவளுக்குப் புதிதல்ல. செல்வியின் போக்கை அவளுடைய சிறுவயதிலிருந்து நன்கு அறிந்தவள் மலர்விழி. ஏதாவது அவளுக்குப் பிடித்திருந்தால், அதை அவள் அடையும் மட்டும் விடமாட்டாள். பிடிக்காதென்றால், கண்டுகொள்ள மாட்டாள். 
என்ன இருந்தாலும் செல்வி, அவர்களின் ஒரே மகள். அவர்களுக்குத் திருமணமாகி பல வருடங்கள் கழித்துப் பிறந்ததால் இருவரின் செல்லப்பிள்ளையாகவே செல்வி வளர்ந்தாள். அதனால், செல்வியின் இத்தகைய போக்கு, அவள் தாய் தந்தையருக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. 
செல்வியின் அப்பா ஞானவேலும் ""நம்முடைய குழந்தை தானே! கொடு மலர்விழி!'' என்று சொல்வதே அவரது வழக்கம். எப்போதும் அவள் கேட்டதைக் கொடுப்பதில் இருவருக்கும் பரம சந்தோஷம்.
ஞானவேல் அப்படி ஒன்றும் செல்வந்தர் இல்லையென்றாலும், ஒரே மகள் என்பதால் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு சம்பாதிக்கும் அரசு ஊழியர். அவள் கேட்ட அந்த நாளே எந்தப் பொருளும் அவளுக்குக் கிடைத்துவிடும். 
துணிகளைப் பரப்பிக் கொண்டு அமர்ந்திருந்த தன் மனைவியைக் கண்ட ஞானவேல், ""என்ன நினைப்பு? எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறதே?'' என்றபடி அறைக்குள் நுழைந்தார்.
""நேற்று வாங்கிவந்த சுடிதாரில் ஒன்றை செல்வி எடுத்துகொண்டு விட்டாள்''
""ஏன் இரண்டையுமே எடுத்துக்கொள்ளவில்லையா? நன்றாக இல்லையா?''
""தெரியவில்லை. அவளுக்குப் பிடித்ததை எடுத்துக்கொண்டுவிட்டாள்.''
""சரி அதனால் என்ன? அவள் தானே நமக்கு? அதற்கு எதற்கு இத்தனை யோசனை?''
""யோசனை ஒன்றும் இல்லை''
""அவள் கேட்பதை எல்லாம் தாம் நாம் கொடுத்துக்கொண்டு வருகிறோமே? அந்த விஷயம் நினைவுக்கு வந்தது..''
""எது?''
""அதான் மலர்விழி, செல்வி ஆறாவது படிக்கும் போது...''
""போதும் நிறுத்துங்க. அதைப்பற்றி பேசத்தேவையில்லை""
மலர்விழி செய்யும் வேலையில் சிந்தையைச் செலுத்தலானார்.

அப்போது செல்வி ஆறாவது படித்துக்கொண்டிருந்தாள். ஒரு நாள் அவள் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது அழுதுகொண்டே வந்தாள்.
""என்ன செல்வி, ஏன் அழுகிறாய்?'' என்றபடி அவளை அனைத்தார் மலர்விழி.
""இனிமேல் நான் பள்ளிக்குப் போக மாட்டேன் அம்மா.''
""ஏன்? என்ன ஆயிற்று?''
""எனக்கு அசிங்கமாக இருக்கிறது''
""என்ன ஆயிற்று என்று சொல்லு''
""எல்லோரும் என்னை மூளி என்று கிண்டல் செய்கிறார்கள்''
மலர்விழிக்குப் புரிந்துவிட்டது. இதுவரை சிறுமியாய் இருந்ததால், செல்விக்கு அந்த விஷயம் பெரிதாகப் படவில்லை. இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது.
""செல்வி, நீ அதை ஏன் நினைத்துக்கொண்டிருக்கிறாய்? யார் எது சொன்னால் உனக்கென்ன?''
""முடியாது அம்மா. என்னால் இனிமேல் பள்ளிக்குச் செல்ல முடியாது. அசிங்கமாக உள்ளது''
செல்வி அடம்பிடிக்கத் தொடங்கினாள். அதற்குள் ஞானவேல் அலுவலகத்திலிருந்து வந்துவிடவே, செல்வி, மலர்விழியின் கைப்பிடியிலிருந்து ஞானவேலின் கைகளுக்குத் தாவினாள்.
அழுது கிடக்கும் செல்வியைக் கண்ட ஞானவேலுக்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை. ""என்ன செல்வி, எதற்கு அழுது கொண்டிருக்கிறாய்?''
""அப்பா, நான் இனிமேல் பள்ளிக்குச் செல்ல மாட்டேன், எனக்கு அசிங்கமாக உள்ளது''
""ஏன்? என்னவாயிற்று?''
திடீரென்று தன்னுடைய காதருகே இருந்த கூந்தலைத் தள்ளி விட்டு செல்வி, ""இதோ இதனால் தான்! எல்லோரும் என்னை மூளி என்கிறார்கள். நான் இனிமேல் பள்ளிக்கே செல்ல மாட்டேன்.''
ஞானவேலுக்குப் புரிய ஆரம்பித்தது.
""சரி விடு செல்வி, இந்த வாரம் பள்ளிக்குச் செல்ல வேண்டாம். அடுத்த திங்கள் சென்றால் போதும். நாம் எங்காவது வெளியே செல்வோம்'' என்று பேச்சை மாற்றி செல்வியின் அழுகையைக் குறைக்க நினைத்தார்.
ஆனால் அவர் நினைத்தவண்ணம் ஒரு வாரத்தில் முடியும் விஷயமாக அமையவில்லை அது. செல்வி பிறக்கும்போதே காதுமடல்கள் இல்லாமல் பிறந்தாள். இலட்சத்தில் ஒருவருக்கு அத்தகைய நிலை வரலாம் என்பது மருத்துவக் கணிப்பு. உள்ளுக்குள் சற்று கவலையாக இருந்தாலும் மலர்விழிக்கும், ஞானவேலுக்கும் இது பெரிய குறையாகப் படவில்லை. தவிர, பிறப்பிலிருந்தே அவர்கள் செல்வியை அவ்வாறு பார்த்துப் பழகி வருவதால், அது ஒரு குறையாக அவர்கள் கண்களுக்குப் புலப்படுவதே இல்லை. செல்விக்கும் அதுகுறித்த கவலை இல்லைதான். ஆனால், இப்போது அது பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.
எவ்வளவோ சொல்லியும் செல்வி பள்ளி செல்வதாக இல்லை. அப்படியே ஆறு மாதம் ஓடிவிட்டது. படிப்பும் தொடரமுடியாத நிலையில், ஞானவேல் ஒரு மருத்துவரைப் பார்த்து இக்குறையைத் தீர்க்க ஏதேனும் வழியுண்டா என வினவினார். ""இது கொஞ்சம் பெரிய பிரச்சனை. யாரேனும் காதுமடல்களைத் தானம் செய்தால், அம்மடல்களை செல்விக்குப் பொருத்தி இக்குறையைச் சரி செய்யலாம்'' என மருத்துவர் கூறினார். ""ஆயினும் காதுமடல் தானம் கிடைப்பது அவ்வளவு சாதாரணமான காரியம் இல்லை. உடனேயும் கிடைக்காது. நிதானமாகவே ஆகும்'' என்றும் கூறினார். 
அந்தப் பேச்சிற்குப் பிறகு ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. தானம் கொடுப்பவர் அரிதாகவே கிடைத்தனர். கிடைத்தாலும், அது செல்விக்கு மருத்துவ ரீதியில் பொருந்தாது என்று மருத்துவர் சொல்லிவிட்டதால். நாட்கள் கடந்தன. பிறகு ஒருவாறாகக் காதுமடல் பொருத்தும் அந்த சிகிச்சையும் நடந்தேறியது. அதற்குப்பின்னரே செல்வி மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தாள். இதனால் ஒரு வருடப் படிப்பும் வீணாகியது.

 

""அப்பா, நான் சொன்ன புத்தகத்தை வாங்கி 
வந்து விட்டீர்களா?'' என்று செல்வி கேட்ட கேள்வியே ஞானவேலை, கடந்த காலத்திலிருந்து, நிகழ்காலத்திற்கு வரவழைத்தது.
""அடடே! மறந்தே போயிற்று செல்வி. இதோ இந்தா'' என்று சொல்லிய வண்ணம் தன்னுடைய கைப்பையிலிருந்து அவள் கேட்ட அந்தப் புத்தகத்தைத் தந்தார் ஞானவேல்.
செல்வி மீண்டும் அந்த அறையை விட்டு அகன்றதும், ஞானவேல், மலர்விழியிடம் ""இன்று என் பழைய நண்பன் முருகேசனைப் பார்த்தேன்.'' என்றார்.
""ஓ, அவரா? எப்படியுள்ளார். நீங்கள் பார்த்தே பல வருடம் ஆகியிருக்குமே?''
""ஆம். ஏழெட்டு ஆண்டுகள் ஆகியிருக்கும்''
""எப்படியுள்ளார்?''
""நன்றாக உள்ளதாகக் கூறினார். இன்னொரு விஷயத்தையும் சொன்னார்''
""என்ன?''
""அவருக்கு ஒரு மகன் இருப்பது உனக்குத் தெரியுமல்லவா? அவர் மகனுக்கு நம் பெண்ணை மணம் 
செய்து வைக்கக் கேட்டார்''
""அப்படியா? அவ்வளவு எளிதில் பதில் சொல்லிவிடமுடியாதே. செல்வி என்ன சொல்வாளோ? முதலில் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கட்டும். பின்னர் பேசிக் கொள்ளலாம்''
""நானும் அதையே தான் முருகேசனிடம் சொன்னேன். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அவர்கள் வீட்டிற்குச் செல்வோம்''
""சரிதான், இதுவும் நல்லபடியாய் நடந்தால் சரி'' 
என்றபடி மலர்விழி சமையல் அறையை நோக்கிச் சென்றாள்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. அதன் பிறகு நடந்த பல்வேறு சந்திப்புகளுக்குப் பிறகு, திருமணம் நிச்சயமாகியது.
திருமணம் நிச்சயமான மகிழ்ச்சியில் ஞானவேல், திருமண வேலைகளில் ஈடுபடலானார். வீட்டில் மலர்விழி, அன்று செல்வியைக் கூப்பிட்டாள். ""செல்வி, இங்கே வாயேன்''
""என்னம்மா? இந்த சீரியல் பார்த்தவுடன் வருகிறேன்''
""இல்லை. இப்போதே வா'' என்று செல்வியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றார் மலர்விழி.
""திருமணத்திற்கு உனக்கான நகைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நம்மிடம் இருக்கும் நகைகளில் உனக்கு எவையெல்லாம் பிடிக்கும் என்றுசொன்னால், அவற்றை மெருகேற்ற அனுப்பி விடலாம்''
அலமாரியிலிருந்து ஒரு சதுர வடிவிலான நகைப்பெட்டியை மலர்விழி படுக்கையின் மீது எடுத்து வைத்தார். 
""இதோ பார் செல்வி. இவையெல்லாம் கொலுசுகள். உனக்கு இவற்றிலிருந்து எவை வேண்டுமோ அவற்றைத் தனியே எடுத்து வை''
""என்னம்மா இது, எல்லாக் கொலுசும் வெள்ளியாகவே உள்ளதே! நீ மட்டும் பொன் கொலுசுசைப் போட்டுக்கொள்வாய். எனக்கு வெறும் வெள்ளியா?'' சிடுசிடுத்தவாறே சொன்ன செல்வியின் பேச்சைக்கேட்டு, மலர்விழி, தன் காலிலிருந்த பொன் கொலுசை அவிழ்த்து ஒரு தனிப்பெட்டியில் வைத்தவாறே, ""இதோ, அது இனிமேல் உனக்குத்தான். போதுமா?'' என்ற மலர்விழியைப் பார்த்துப் புன்னகைத்தாள் செல்வி.
""சரி சரி. நான் போகட்டுமா?'' என்ற செல்வியின் கையை மீண்டும் இழுத்து மலர்விழி மற்றொரு பெட்டியைக் கொடுத்தார். 
""இதோ பார். இது கழுத்துச் செயின் மற்றும் வைர அட்டிகைகள். இவையெல்லாம் உனக்குத்தான். எனக்கு இப்போது நான் போட்டிருக்கும் அட்டிகையே போதும்'' 
உடனே மலர்விழியின் கழுத்தைப் பார்த்த செல்வி, ""அதெல்லாம் கிடையாது, இது எனக்குத்தான். நீ வேண்டுமானால், இதோ, இதோ, இதை வைத்துக்கொள்'' என்று கூறியவாறு அந்தப் பெட்டியிலிருந்து ஒரு இரட்டைவடம் செயினை மலர்விழிக்குக் கொடுத்துவிட்டு, ""அதைக்க் கழட்டி பெட்டிக்குள் வை. அது எனக்குத்தான்'' என்றாள்.
மலர்விழியின் முகத்தில் மீண்டும் மலர்ச்சி பொங்கியது. ""சரி. இதோ எடுத்துக்கொள்'' என்றவாறு செல்வி கொடுத்த செயினை வாங்கி அணிந்துகொண்டு, தான் அணிந்திருந்த அட்டிகையை எடுத்துப் பெட்டிக்குள் வைத்தார்.
""சரி அடுத்தது, ஒட்டியாணம். அதில் நீ சண்டை போடமாட்டாய் என்று நினைக்கிறேன். ஒன்றே ஒன்று தான் உள்ளது. அது உனக்குத்தான்.'' என்று கூறிய வண்ணம் ஒட்டியாணத்தை எடுத்துக் காட்டினார் மலர்விழி.
""அதானே பார்த்தேன். எங்கே ஒன்றே ஒன்று உள்ளது என்று எனக்குக் கொடுக்காமல் இருப்பியோ என்று நினைத்தேன்'' என்று கூறிய வண்ணம் மலர்விழியின் கைகளிலிருந்து வாங்கி அந்த ஒட்டியாணத்தைத் தன் இடுப்பில் வைத்து அழகு பார்த்தாள் செல்வி.
அதற்குள் இன்னுமொரு பெரிய பெட்டியைத் திறந்தார் மலர்விழி. அப்பெட்டியில் வளையல்கள் பல வித அமைப்புகளில் இருந்தன. ""செல்வி, உனக்கு எவை வேண்டுமோ எடுத்துக்கொள்'' என்று அவர் நீட்டிய அந்தப் பெட்டியிலிருந்து ஏறக்குறைய முக்கால்வாசி வளையல்களைச் செல்வி எடுத்துத் தனக்கென வைத்துக்கொண்டாள்.
ஒவ்வொரு ஜதையாக எடுத்து செல்வி அவற்றை அணிந்து கொண்டு அழகு பார்க்கும் அந்தத் தருணத்தில், மலர்விழி மற்றுமொரு பெட்டியைத் திறந்தார்.
""செல்வி, இதோ பார். இந்தப் பெட்டியில் பலவிதமான தோடுகள், ஜிமிக்கி என உள்ளன. உனக்கு எவை பிடிக்கிறதோ அவற்றை எடுத்துக்கொள்'' என்ற மலர்விழியின் பேச்சைக் கேட்பதற்கு முன்பே, செல்வி அந்தப் பெட்டியைத் துழாவ ஆரம்பித்தாள்.
""ஐயோ, இவ்வளவு தோடுகளா? இதுவரை நான் பார்த்ததே கிடையாதே''
""செல்வி, இவற்றில் பல தோடுகள் என் தாயார் எனக்களித்தவை, மேலும் பல தோடுகள், உன் பாட்டி உனக்காக எடுத்து வைத்தவை. பிடித்திருந்தால் அத்தனையும் உனக்குத்தான்'' என்றவாறு அந்தப் பெட்டியை செல்வியின் பக்கம் தள்ளினார் மலர்விழி.
மற்ற எல்லா நகைகளையும் விட தோடுகள் செல்வியை மிகக் கவர்ந்தன. ஒவ்வொன்றாக தன் செவிகளில் வைத்துப் பார்த்தாள் செல்வி. பின் திடீரென ""அது சரி, இவையெல்லாம் எனக்குத்தான் என்றால் நீ வேறேதோ மிக அழகான ஒன்றை உனக்காக வைத்திருக்க வேண்டும். எங்கே உன் தோடைக்காட்டு'' என்று மலர்விழியின் பக்கம் நெருங்க, மலர்விழி, ""இல்லை செல்வி, எனக்குத் தேவையில்லை. எல்லாம் உனக்குத்தான்'' என்றார்.
""அது கிடக்கட்டும். நீ இப்போது என்ன வகையான தோடை அணிந்துள்ளாய் காட்டு"" என்று செல்வி மலர்விழியின் கூந்தலை ஒதுக்கி அவரின் காதைப் பார்க்க முயன்றாள்.
""அதற்குத் தேவையே இல்லை மலர்விழி. என் காதையே உனக்குத்தான் கொடுத்துவிட்டேனே. எனக்கு எதற்குத் தோடு?"" என்று காதுமடல்கள் அற்ற தன் செவித்துவாரங்களைச் செல்விக்குக் காட்டினார் மலர்விழி.
""அம்மா!'' என்று அதிர்ச்சியில் உறைந்தாள் செல்வி.

 

 

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.