Jump to content

இறால் குழம்பு


Recommended Posts

இறால் குழம்பு

 

sl52698880.jpg

என்னென்ன தேவை?

இறால் - 250 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
கறிவேப்பிலை - 1 கொத்து,
தனியா தூள் - 1½ டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
கடுகு தூள் - 2 டீஸ்பூன்,
தேங்காய் விழுது - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 100 மி.லி.,
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

 

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் தனியா தூள், மஞ்சள் தூள், கடுகு தூள் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும். பிறகு இறாலை சேர்த்து வெந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

http://www.dinakaran.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழம்பு என்று சொல்லி விட்டு கொச்சிக்காய் ( மிளகாய்) தூள் இல்லாட்டாவிட்டால் அது குழம்போ? நவீனன் 

இந்த தனியா தூள் என்றால் என்ன ? பிளிஸ் விளக்கம் தாங்கோ??  யாழ்ப்பாணத்தில் அதிகம் இறால் பிடிபடுதாம் ஒருக்கா விசிட் அடிக்க தான் வேண்டும் பொரிச்சாவது சாப்பிட

Link to comment
Share on other sites

மல்லித்தூள் தான் தனியா தூள்

16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

குழம்பு என்று சொல்லி விட்டு கொச்சிக்காய் ( மிளகாய்) தூள் இல்லாட்டாவிட்டால் அது குழம்போ? நவீனன் 

இந்த தனியா தூள் என்றால் என்ன ? பிளிஸ் விளக்கம் தாங்கோ??  யாழ்ப்பாணத்தில் அதிகம் இறால் பிடிபடுதாம் ஒருக்கா விசிட் அடிக்க தான் வேண்டும் பொரிச்சாவது சாப்பிட

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நவீனன் said:

மல்லித்தூள் தான் தனியா தூள்

நன்றி மல்லித்தூள் வட கிழக்கில் இல்லை தற்போது இந்திய சமையல்கள் உட்புகுந்துள்ள்ளாதால் அதன் வருகையும்  வந்துள்ளது ஆனால் ஹோட்டல்கள் பாவிக்கிறது வீடுகள் பெரிதாக  இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றி மல்லித்தூள் வட கிழக்கில் இல்லை தற்போது இந்திய சமையல்கள் உட்புகுந்துள்ள்ளாதால் அதன் வருகையும்  வந்துள்ளது ஆனால் ஹோட்டல்கள் பாவிக்கிறது வீடுகள் பெரிதாக  இல்லை 

எங்களது கறித்தூளில் எல்லாம் சரி விகிதாசார படி இருக்கிறது. அவர்களது இது போன்ற செய்முறையில், அந்த தூள் ஒரு கரண்டி, இந்த தூள் 2 கரண்டி எண்ட விஷயங்களை எல்லாம் அப்படியே விட்டுட்டு எங்கட தூள் 2 கரண்டி போடடால் சரி.

இது வெள்ளைக் காரனுக்கும் மண்டையால போற விசயம். நம்மட தூளை அறிமுகப் படுத்தினாப் பிறகு, நம்ம கூட்டாளி வெள்ளை, தமிழ் கடை தேடித் போய், தூள் வாங்கிக் கொண்டெல்லே போறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

எங்களது கறித்தூளில் எல்லாம் சரி விகிதாசார படி இருக்கிறது. அவர்களது இது போன்ற செய்முறையில், அந்த தூள் ஒரு கரண்டி, இந்த தூள் 2 கரண்டி எண்ட விஷயங்களை எல்லாம் அப்படியே விட்டுட்டு எங்கட தூள் 2 கரண்டி போடடால் சரி.

இது வெள்ளைக் காரனுக்கும் மண்டையால போற விசயம். நம்மட தூளை அறிமுகப் படுத்தினாப் பிறகு, நம்ம கூட்டாளி வெள்ளை, தமிழ் கடை தேடித் போய், தூள் வாங்கிக் கொண்டெல்லே போறார்.

எங்கடை மிளகாய்த்தூள் all in one ........  எல்லா சமாச்சாரங்களும் ஒரு போத்தலுக்கை இருக்கும். :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

எங்களது கறித்தூளில் எல்லாம் சரி விகிதாசார படி இருக்கிறது. அவர்களது இது போன்ற செய்முறையில், அந்த தூள் ஒரு கரண்டி, இந்த தூள் 2 கரண்டி எண்ட விஷயங்களை எல்லாம் அப்படியே விட்டுட்டு எங்கட தூள் 2 கரண்டி போடடால் சரி.

இது வெள்ளைக் காரனுக்கும் மண்டையால போற விசயம். நம்மட தூளை அறிமுகப் படுத்தினாப் பிறகு, நம்ம கூட்டாளி வெள்ளை, தமிழ் கடை தேடித் போய், தூள் வாங்கிக் கொண்டெல்லே போறார்.

இப்ப அவங்களும் உறைப்பு சாப்பிட தொடங்கிட்டாங்களா? உறைப்பு அவங்களுக்கு ஒத்துக்காதே ஓடுற கூட்டம் ஆச்சே உறைப்பென்றால்?:rolleyes:

 

35 minutes ago, குமாரசாமி said:

எங்கடை மிளகாய்த்தூள் all in one ........  எல்லா சமாச்சாரங்களும் ஒரு போத்தலுக்கை இருக்கும். :27_sunglasses:

கலவைபோல ................. உன்மைதான் இல்லாட்டா நாக்கு செத்து போகும் குழம்பை தொட்டு நக்காட்டால் ருசி அறிந்த நாக்கும் குழம்பு , வெள்ளக்கறியென்றால்tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப அவங்களும் உறைப்பு சாப்பிட தொடங்கிட்டாங்களா? உறைப்பு அவங்களுக்கு ஒத்துக்காதே ஓடுற கூட்டம் ஆச்சே உறைப்பென்றால்?:rolleyes:

 

கலவைபோல ................. உன்மைதான் இல்லாட்டா நாக்கு செத்து போகும் குழம்பை தொட்டு நக்காட்டால் ருசி அறிந்த நாக்கும் குழம்பு , வெள்ளக்கறியென்றால்tw_blush: 

15566011_0_640x640.jpg?identifier=c4a06c8e1bb538378b51c9ed6263fe6f83850011_0_640x640.jpg?identifier=2f54fa1c014f6d6bf9fe46f7557ec42f

நாங்க வர முதலே, உங்க உகாண்டாவில் இருந்து இடி அமின் துரத்தி விட்ட வட இந்திய வம்சாவளிகளான, கிழக்கு ஆபிரிக்க இந்தியர்கள் 1970 களில் வந்திட்டினம்.

அவையள் உந்த கறி பேஸ்ட் எண்ட கோதரிய பழக்கிப் போட்டினம் இந்த வெள்ளையளுக்கு. நாங்கள் உதை தொட்டும் பாக்கிறதில்லை.

உதில ஒரு போதில் வாங்கிக்கொண்டு போய், கோழியை தோலோட வெட்டிப் போட்டு, வெங்காயம், பச்சைமிளகாய் சங்கதி ஒண்டு மில்லாமல் உதய் போட்டு அவிச்சு.... கறி செய்து சந்தோசமா சாப்பிடடோம் எண்டு வருவினம். உள்ளுக்கு சீனியும் போட்டு கலந்து இருக்கினம். பின்ன எப்படி உறைக்கும்..

அப்படி ஒருத்தருக்கு தூளும் கொடுத்து, கறி எப்படி செய்யணும் எண்டு சொல்லிக் கொடுக்க.... அடுத்தநாள்.... 'தெய்வமே' எண்ட சொல்லாக் குறையா.... வீட்டில மனிசி, பிள்ளைகள் எல்லாம், thank you கார்டு அனுப்பி விடுகினம்....:223_speak_no_evil:

1 hour ago, குமாரசாமி said:

எங்கடை மிளகாய்த்தூள் all in one ........  எல்லா சமாச்சாரங்களும் ஒரு போத்தலுக்கை இருக்கும். :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

:rolleyes:

பிட்டு பேணியால கொத்த இல்லையே.... அவிக்கேக்க தானே தேங்காப்பூ போடுறது.... உது எந்த ஊரூப் பிட்டு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறால் எப்படி தான் சாப்பிட்டாலும் தனி சுவை.கறி வைத்து புட்டுடன் சாப்பிடால் நன்றாக இருக்கும்.

பொரித்தால் எல்லாவற்றுக்கும சுவை.பொரிக்க அடுப்பு பத்த வைக்க அடுத்த வீட்டுக்காரனுக்கு பத்தி எரியும்.எத்தனை வாச

Link to comment
Share on other sites

சூப்பரான இறால் சுரைக்காய் குழம்பு

 
அ-அ+

இறாலுடன் சுரைக்காய் சேர்த்து குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இறால் சுரைக்காய் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான இறால் சுரைக்காய் குழம்பு
 
தேவையான பொருட்கள் :

இறால் - கால் கிலோ
சுரைக்காய் - கால் கிலோ
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மல்லி தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
 மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்லு
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 250 கிராம்
எண்ணெய் - ஒரு குழிக்
கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
கொத்தமல்லி - சிறிதளவு.

201803131205368197_1_Prawnbottlegourdcurry._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, சுரைக்காய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இறாலை சுத்தம் செய்து வைக்கவும்.

புளியை கரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை தட்டி போட்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.

அடுத்து அதனுடன் நறுக்கிய சுரைக்காய் மற்றும் இறால் சேர்த்து வதக்கவும்.

பின்பு மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும் மிளகுத் தூள் மற்று
ம் புளிக் கரைசலை சேர்க்கவும். தீயின் அளவை மிதமாக வைத்து கொதிக்க‌ விடவும்.

கலவை 10 நிமிடம் கொதித்ததும் இறக்கி கொத்தமல்லித் தழை தூவி

இறால் சுரைக்காய் குழம்பு தயார்.

https://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.