Jump to content

''இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ!'' போட்டோ ஷுட் வித் ரஹ்மான் : க்ளாசிக் க்ளிக்ஸ்


Recommended Posts

''இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ!'' போட்டோ ஷுட் வித் ரஹ்மான் : க்ளாசிக் க்ளிக்ஸ் - பகுதி1

 
 

ஜி.வெங்கட்ராம்

ஜி.வெங்கட்ராம், புகைப்படக் கலைஞர். பலரின் சாதாரணம் டு சாதனை பயணத்தில் வெங்கட்டின் ஃப்ளாஷ் ஒரு முக்கியப் பதிவு. போட்டோஷூட், விளம்பரங்கள் எனப் பரபர பணிதான். ஆனாலும் அதில் ஒரு க்ளாசிக் டச் சேர்ப்பது இவரின் பலம். ஒரு திரைப்படத்தின் மொத்த ஃபீலையும் ஒரே ஒரு புகைப்படத்தில் கொண்டு வந்துசேர்க்கும் இவரின் திறமைக்கு ஏகப்பட்ட ஃபர்ஸ்ட்லுக் உதாரணங்கள் உள்ளன. இவரின் ஒவ்வொரு ‘கிளிக்’க்குப் பின்னும் பல கதைகள் கிளைவிடுகின்றன. இப்படியான தன் ஃப்ளாஷ் பயணத்தையும் அதில் தன்னோடு பயணமாகும் பிரபலங்கள் பற்றியும் இந்தத் தொடரில் பகிர்ந்துகொள்கிறார். இந்த வாரம் ஏ.ஆர்.ரஹ்மானை கிளிக்கிய அனுபவங்களைப் பற்றி சொல்கிறார் வெங்கட்.

 

ஜி வெங்கட்ராம் - ரஹ்மான்

 

‘‘ஏ.ஆர்.ரஹ்மான். இந்திய திரையிசைக்குத் தன் கீபோர்டு மூலம் எலக்ட்ரானிக் ரத்தம் பாய்ச்சத் தொடங்கிய காலம். எங்கு பார்த்தாலும் இவரைப் பற்றியே பேச்சு. 1995-96 என நினைக்கிறேன். ‘சொசைட்டி’ இதழில் இருந்து, ‘மோஸ்ட் வான்டடு தமிழர்கள்' பற்றிய ஒரு கட்டுரை. 'ஏ.ஆர்.ரஹ்மானை ஒரு போட்டோஷூட் பண்ணித்தரமுடியுமா?’ என அழைப்பு. போட்டோஷூட்டுக்கான இடம், அவரின் கோடம்பாக்கம் ரெகார்டிங் ஸ்டூடியோ, நேரம் காலை 9.30. என் டீமுடன் ஷார்ப்பாக ஆஜராகியிருந்தேன். காத்திருந்தோம். நேரம் மதியத்தை நோக்கிக் கடந்து கொண்டிருந்தது. அவர் ஓர் இரவுப் பறவை என்பது அப்போது எனக்குத் தெரியாது.  

எங்கு வைத்து போட்டோஸ் எடுக்கலாம் என இடம் தேடினாலும், உண்மையில் கண்கள் அவரை எதிர்பார்த்தபடியே இருந்தன. ‘கார்டன் வேண்டாம், லாபி வேண்டாம்’ என விலக்கினேன். ‘ஸ்டூடியோ இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்’ என்றார், அவரின் மேனேஜர் நோயல். பார்த்ததும், ‘இதுதான் ஸ்பாட்’ என முடிவு செய்தேன். அவர் வழக்கமாக அமர்ந்து கம்போஸ் பண்ணும் இடத்தில் அவரின் தலைக்குமேலே மட்டும் லைட்டிங் பண்ணி, மற்ற இடங்களை டார்க் பண்ணினேன். அன்று டிஜிட்டல் கிடையாது என்பதால், என் அசிஸ்டென்ட் ஒருவரை மார்க்கில் அமரவைத்து போலராய்டு எடுத்தேன். மணி 12.30... ம்ஹூம்... ரஹ்மான் வரக்காணோம். எடுத்த போலராய்டை நோயலிடம் தந்து ரஹ்மானிடம் காட்டிவரச்சொன்னேன். 

ஜி வெங்கட்ராம் - ரஹ்மான்

 

அவர் போலராய்டு காட்டிய அடுத்த 5-வது நிமிடத்தில், ‘எங்க எடுத்தீங்க... நல்லாயிருக்கே...’ என்ற கேள்வியோடே வந்தார் ரஹ்மான். ‘நான் தினமும் உட்கார்ற இடம் இவ்வளவு அழகா... எப்படி?’ இப்படி ஏகப்பட்ட கேள்விகளோடு தயாரானார். வேலை செய்யும் இடம்தான் அவருக்குக் கோயில். அது இவ்வளவு அழகாக இருக்கிறதே என்ற சந்தோஷம். இதுபோன்ற ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஆரம்பத்திலேயே தூண்டிவிட்டால், நம் வேலை எளிதாகிவிடும். அதேபோல் ஸ்பாட்டில் இருப்பதை வைத்து ஒரு விஷயத்தைப் புதிதாகக் கிரியேட்  செய்து காட்டுவதும் முக்கியம். 

‘இந்த டிரெஸ் ஓ.கேவா?’ என தான் அணிந்திருந்த கேஷுவல் டி-ஷர்ட், ஜீனைக் காட்டிக் கேட்டார். நான் திருப்தியாகவில்லை என்பதை என் முகம் பார்த்து உணர்ந்தவர், ‘வார்ட்ரோப் பாக்குறீங்களா?’ என்று அழைத்துச் சென்றார். அலமாரியைத் திறந்தால், வித விதமான டிசைன், கலர்களில் குல்லாக்கள். என் ஆச்சர்யத்தை உணர்ந்தவராக, ‘குல்லா கலெக்ஷன்ல ஆர்வம். இதைப்பாருங்க, இது ஹிமாச்சல் பிரதேஷ்ல வாங்கினது. இது காஷ்மீர்ல...’ என்னை மென்மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ‘ஒரு டி-ஷர்ட், வேறொரு கேஷுவல் ஷர்ட்... கூடவே இந்தக் குல்லா. இதுதான் காம்பினேஷன். ஏதாவது மியூசிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்றேன். ‘இது ஓ.கே.வா’ என கைக்கு அருகிலேயே கிடைத்த கிடாரை எடுத்தார். ‘வழக்கமா இருக்கும். இன்ட்ரஸ்டிங்கா கிடைக்குமா?’ என்றேன். அடுத்த நொடியே தன் நண்பரை போனில் அழைத்தார்.

அடுத்த அரை மணிநேரத்தில், வீணையும் கிடாரும் ஃப்யூஷன் ஆனது போன்ற ஓர் இசைக்கருவி வந்தது. ‘இது அவுத். அரேபியன் இன்ஸ்ட்ரூமென்ட். ஃப்ரெண்டு வீட்ல இருந்து எடுத்துட்டு வரச்சொன்னேன்’ என்று சிரித்தார். ஆரம்பமானது போட்டோஷூட். காஸ்ட்யூம், இன்ஸ்ட்ரூமென்ட் என ஒவ்வொரு முயற்சிக்கும், ‘ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ?’ என அவரிடம் சிறிதும் பெரிதுமாக நிறைய கூச்சம். இதற்கிடையில், ‘ஏகப்பட்ட பேர் வெயிட் பண்றாங்க, சீக்கிரம்... சீக்கிரம்...’ என நோயலின் நச்சரிப்பு. ஆனாலும், அவரின் அவசிய அவசரத்தைப் புரிந்தும் புரியாமலும் எனக்குத் திருப்தியாகும் வரை கிளிக்கினேன். சரியாக ஒரு மணி நேரத்தை விழுங்கி இருந்தேன். அவரும் பயங்கர ஹேப்பி. ‘வாட் ய டவுன் டு எர்த் பெர்சன்’ என்று எனக்கு ஆச்சர்யம். 

ஜி வெங்கட்ராம் - ரஹ்மான்

இன்னும் கொஞ்சம் ரஹ்மானை ரசிங்க!

இன்று இருப்பதைவிட அன்று நான் இன்னும் பயங்கர பிஸி. காரணம், வந்ததை எல்லாம் ஒப்புக்கொண்டு வொர்க் பண்ணும் பரபரப்பான பணி. ‘ச்சே... 12.30-தான் டைம்னா, 12.30-க்கே வாங்கனு சொல்லியிருக்கலாமே, ஏன் 9.30க்கு வரச்சொல்லணும்?’ என சின்ன வருத்தம். கோபம் என்றே சொல்லலாம். அந்தக் கோபத்துடனே வெளியே வந்தபோது, மாடிப் படிக்குக் கீழே ஒரு பிளாஸ்டிக் சேரில் ஒரு சூட்கேஸுடன் அமர்ந்திருந்த அந்த தாடிக்காரரைப் பார்த்ததும், ‘இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே...’ என்ற யோசனை. ஒரு ஃப்ராக்ஷன் ஆஃப் செகண்ட் ஃப்ளாஷில், ‘ஐயோ... இவர், சேகர் கபூர்ல...’ என்று அதிர்ந்தேன். அருகருகே இன்னும் சில பாலிவுட், கோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்.

‘ ‘வெயிட் பண்றாங்க. சிக்கிரம் முடிங்க’ எனச் சொன்னது இவங்களைத்தானா?’ என்ற அதிர்ச்சி. ‘இவ்வளவு பெரிய மனுஷன் பாம்பேயில இருந்து வந்து வெளியில ஒரு சூட்கேஸோட வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது, நம்ம போட்டோஷூட்டுக்கு ரஹ்மான் இவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்காரே...’ என் கோபம், பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாறியது. ஆனால் ஏன் எனத் தெரியவில்லை, இன்றும் ரஹ்மானைப் பார்க்கும்போதெல்லாம், மாடிப்படிக்குக்கீழே சூட்கேஸுடன் அமர்ந்திருக்கும் சேகர் கபூர்தான் மனதில் வந்துபோகிறார்.

‘ஜில்லுனு ஒரு காதல்’, கலைப்புலி தாணு தயாரிப்பு. பிரமிப்பை ஏற்படுத்துவதில் தாணு எப்போதும் தனி. ‘ஆடியோ ரிலீஸ். போஸ்டர், பேனர்னு எங்க பார்த்தாலும் ரஹ்மானா தெரியணும். படத்தோட சம்பந்தப்படணும்னு கிடையாது. செட் வேணும்னாலும் போட்டுக்கங்க...’ தாராளம் காட்டினார் தாணு. பிரசாத் ஸ்டூடியோவில் அழகான செட் அமைத்துத் தந்தார் தோட்டா தரணி. பழைய கதவு, மரக்கிளைகளில் இருந்து வழியும் ஆரஞ்ச் கலர் விளக்கொளி பின்னணியில் ஓர் இராணுவ வீரரின் வீடு, பிரம்மாண்ட ஓபனிங் என்பதைக் குறிக்கும் வகையிலான சிவப்பு கலர் கர்ட்டனைத் திறந்து கொண்டு வருவது போன்று வேறொரு செட். கொட்டிக்கிடக்கும் வெள்ளை கூழாங்கற்கள் எனப் பிரமாதப் பின்னணியில் தரணி சார் அசத்தி இருந்தார்.

ஜி.வெங்கட்ராம் - ரஹ்மான்

 

அந்த போட்டோஷூட்டில் ஒரு சுகமான சுமை சம்பவம். அவர் இரவில்தானே வேலை செய்வார் என்பதால், ‘9 மணிக்கு ஷூட்’ என்று தாணு சார் சொல்லிவிட்டார். ஆனால், அதை ரஹ்மான் காலை 9 மணி என நினைத்துக்கொண்டு காலையிலேயே பிரசாத்தில் பிரசன்ட் ஆனார். அப்போதுதான் அங்கு செட் வேலைகள் நடந்துகொண்டு இருந்தன. ‘காலையில்தான் ஷூட்னு நினைச்சிட்டு நைட் 9 மணிக்கு சுபாஷ் கய்யோட மீட்டிங்குக்கு ஃபிக்ஸ் பண்ணிட்டேன்’ என்றவர், ‘ஓ.கே. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்’ என்றபடி சென்றுவிட்டார். 

நைட் 9 மணிக்கு சுபாஷ் கய் பிரசாத்துக்கு வந்தார். ‘இன்னைக்கு நிறைய குழப்பங்கள் காத்திருக்கும் போலிருக்கே’ என நினைத்தேன். ரஹ்மான் 9..30-க்கு வந்தார். ‘அரை மணிநேரம் ஷூட்டிங், அரை மணி நேரம் மீட்டிங்... ஓ.கே.வா வெங்கட்’ என்று ஷார்ப்பாக பிரித்துத் தந்தார். ஒரு செட்டில் ஷூட் முடித்து வேறொரு செட்டில் லைட்டிங் பண்ணும் அந்த இடைவேளைகளில் சுபாஷ் கய்யுடன் கேரவனில் மீட்டிங்கில் இருப்பார். 

ஏ.ஆர்.ரஹ்மான்

 

பிரபலம் என்றாலும், புது மாடல் என்றாலும் போட்டோஷூட்டுக்கு கான்செப்ட் முக்கியம். ‘பிரமாண்ட பின்னணில் போஸ் பண்ணச்சொல்லி எடுத்தா போதும்’ என்று தாணு சார் சொல்லியிருந்தாலும், ‘சின்ன கான்செப்ட் பிடிப்போமே’ என்று யோசித்ததுதான், இந்த சிவப்பு கலர் கர்ட்டைன் போட்டோஸ். ‘இசையில் ஆர்வம் உள்ள ஏழைக் குழந்தைகள். அவர்கள் ஒவ்வொருவரின் கையிலும் ஒரு இன்ஸ்ட்ரூமென்ட். ரஹ்மான் சிவப்பு கலர் கர்டைனைத் திறந்துகொண்டு வர, இவர்கள் தங்கள் கைகளில் உள்ள கருவிகளை இசைக்க, அதில் தெறித்துப்போய் அவர் தன் காதைப்பொத்திக்கிட்டு கத்த... இதுதான் கான்செப்ட். ஆக்டிங்தான்’ என்றேன். ‘நடிக்கச் சொல்றீங்க. ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ?’ என்று வழக்கம்போல் சொன்னவர், ‘ஓ.கே. டிரை பண்ணுவோம். நல்லா இருந்தா வெச்சுப்போம், இல்லைனா விட்ருவோம்’ என்று பிறகு அவரே ஆர்வமானார். பசங்க பயங்கர கலாட்டா. கையில கிடைச்சதை எல்லாம் போட்டு அடி பின்ன, ரஹ்மான் உண்மையிலேயே மிரண்டுட்டார். 

ரஹ்மான்

 

இந்த போட்டோஸ் பார்த்ததும் இன்னொரு சுவாரஸ்யம் நினைவுக்கு வருகிறது. இந்த போட்டோஸ் எடுத்த சிலபல வருடங்களுக்குப் பிறகே, ‘ஸ்லம் டாக் மில்லினியர்’ படம் வந்தது. ஆனால் அந்தப் படத்தின் கதைக்கு, இந்த போட்டோஸ் அச்சு அசலாகப் பொருந்திப்போக, அந்தப் படத்துக்காகத்தான் இந்த போட்டோஷூட் பண்ணப்பட்டதாக நினைத்த மும்பை மீடியாஸ், எனக்கு போன் பண்ணி பிரிச்சு எடுத்துட்டாங்க. 

ஹ்மான் கொஞ்சம் கூச்ச சுவாவிதான். ஆனால், அந்த கூச்சம் கலைந்தால், நிறைய பேசுவார். இவ்வளவு பரபர பணிகளுக்கு மத்தியிலும் எங்கிருந்து விஷயங்கள் திரட்டுகிறார் என்று ஆச்சர்யமாக இருக்கும். மியூசிக் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். போனமுறை வந்தபோதுகூட ஆரம்பத்தில் தான் எடுத்த விளம்பரப் படங்களை காட்டி ஃப்ளாஷ்பேக்கினார். அவர் அதையெல்லாம் பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அது நமக்கு ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைப்பார். ‘நான் அங்க அப்படி ஒரு விஷுவல் பார்த்தேன். பிரமாதம்’ என ‘இன்று ஒரு தகவல்’ போல போகிற போக்கில் தகவல் தட்டுவார். 

ஜி வெங்கட்ராம்

இதேபோல நானும் ‘இப்படி ஒரு விஷுவல் பார்த்தேன்’ என்று ஒரு மெயில் தட்டினால், கூடுதல் தகவல்களுடன் ரிப்ளை பண்ணுவார். ‘காலம் கண் போன்றது... என்ற தொனியில் நாம் சொல்லும் பழமொழி எவ்வளவு உண்மை என்பதை அவர் அருகில் இருந்து பார்க்கும்போதுதான் உணர முடியும். அவரிடம் ஆச்சர்யப்படுத்தும் இன்னொரு விஷயம், எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் அனைத்துக்கும் நேரத்தைப் பிரித்தளித்து பதட்டமின்றி பணியாற்றும் மனநிலை. அப்படியான மனநிலை வாய்ப்பது வரமென்றே நினைக்கிறேன். 

ஃபிலிம்ஃபேரில் அதிக அவார்ட் அடித்தது அவர்தான் என நினைக்கிறேன். எப்படியும் அரை சதத்தைத் தாண்டியிருப்பார். ஒருமுறை நான் எடுத்தபோதே 35-ஐத் தாண்டி இருந்தார். அவர் பெற்ற அத்தனை டிராஃபிக்களையும் வைத்து எடுப்பதுதான் அந்த இதழுக்காக போட்டோஷூட் கான்செப்ட். ஸ்டூடியோவில்தான் எடுத்தோம். ‘எல்லாத்தையும் வெச்சு எடுப்போம் சார்’ என்றதும், ‘எனக்கு அத்தனை கைகள் இல்லையே’ என்று சிரித்தார். அத்தனை அவார்டையும் ‘எஸ்’ வடிவத்தில் வைத்து இவரை ஓரு ஓரத்தில் அமர்த்தினோம். அந்தப் படத்தைப் பார்த்தால், ‘அடப்பாவி, இத்தனையும் வாங்கினது நீயா?’ என நினைக்கிற அளவுக்கு அப்பாவியாக அமர்ந்திருப்பார். 

ரஹ்மான்

‘ஜோதா அக்பர்’ பெரிய ஹிட். அதற்காக அந்தப் படக்குழு இவருக்கு தந்த போர்வீரர்கள் அணியும் கிரீடத்தை ஸ்டூடியோவில் பார்த்தேன். அதைச் சற்று உயரத்தில் வைத்து அதற்குள் லைட்டிங் பண்ணி, அதன் நிழல் இவரின் முகத்தில் விழுவதுபோல் எடுத்தது ஒரு போட்டோகிராஃபரகா எனக்குத் திருப்தியான படம். அந்த வெளிச்சத்தை முகத்தில் வாங்கியபடி போஸ் தரணும் என்பதால், குனிந்து நிமிர்ந்து கொஞ்சம் டார்ச்சராகித்தான் போயிருப்பார். ஆனால் முகத்தில் சேம் ஸ்மைல். 

ஜி.வெங்கட்ராம்

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

ன்னொரு முறையும் அதே ஸ்டூடியோ பின்னணி. வெரைட்டிக்கு என்ன செய்யலாம் என யோசித்தபோது அங்கிருந்த ஃபையர் எக்ஸ்டிங்குஸ்ஷர் கண்ணில்பட்டது. ‘சார் இதுக்கு பக்கத்துல...’ என்றேன். யோசித்தபடி வந்து நின்றார். ‘இதுல என்ன இன்ட்ரஸ்டிங் இருக்கப்போகிறது?’ என்று சுற்றி நின்றவர்களுக்கு ஆச்சர்யம். ‘பொட்டன்ஷியலான ஆள். இவரே ஒரு ஃபயர், அதாவது மியூசிக்கல் ஃபயர்... பத்திரிகைகளில் இப்படி தலைப்பு, போட்டோகேப்ஷன் போட அழகாக செட்டாகும். அதனால்தான்’ என்றேன். ‘ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ’ என்றார். 

ஜி.வெங்கட்ராம்

அவரின் சந்தேகங்கள் பெரும்பாலும் மிகச்சரியாகவே இருக்கும். நம்மைப் பொருத்தவரை அது ஒரு படம். ஆனால், அது நாளை மிகப்பெரிய ஹோர்டிங், பத்திரிகை விளம்பரங்கள்... என மக்களின் பார்வைக்குச் செல்லப்போகிறது. அதனால், ஒரு இசையமைப்பாளராக தனக்கான பண்புகளோடு அது இருக்கிறதா என்பதில் கவனமாக இருப்பார். சமயங்களில் ‘இது பண்ணலாமா... அது பண்ணலாமா... இப்படியொரு விஷுவலை அங்கே ஷூட் பண்ணும்போது பார்த்தேன். லைட்டிங் நல்லா இருந்துச்சு’ என்று ஞாபகங்களில் இருந்து சொல்வார். நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். 

ஜி.வெங்கட்ராம்

வரைப் பிடிப்பதே சிரமம் என்பதால், கிடைத்துவிட்டால் குறைந்த நேரத்தில் மேக்சிமம் எப்படிப் பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்த நினைப்பேன். எத்தனையோ பேர் அவருக்காக காத்திருக்கும் நிலையில், தன் ஒரு மணிநேரத்தைத் தருகிறார் என்றால் அதை மதிப்புமிக்கதாக மாற்ற ஆசைப்படுவேன். அந்தக் குறைவான நேரத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்து பார்க்க விரும்புவேன். 

 

 

 

அப்படி ஓரிரு வருடங்களுக்குமுன் ஷூட் சிட்னி லைவ் கான்செர்ட்டுக்காக எடுத்தேன். அவரது பேச்சில் உலகின் பரபர மனிதரிடம் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்ற சுவடே தெரியவில்லை. பேசும் விதம், ஸ்டைல், அடக்கம், எளிமை என ஒரு மனிதராக அன்று பார்த்த அதே ரஹ்மான். ஆரம்பத்தில் கொஞ்சம் வேலைப்பாடுகள் மிகுந்த காஸ்ட்யூம் தந்தால், ‘இது ஓகே.வா’ என சந்தேகிப்பார். ஆனால், அவரே நிறைய மியூசிக்கல் ஆல்பம், இன்டர்நேஷனல் கான்செர்ட் பண்ணுவதால் காஸ்ட்யூம், லுக், மேனரிசத்தில் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கார். ஜாக்கெட்ஸ், கூலிங் கிளாஸ் என தற்போது கொஞ்சம் எக்ஸ்பெரிமென்ட் பண்ணுகிறார். இதற்குக் காரணம் அவரது மனைவி. ரஹ்மானின் ஸ்டைலிஸ்ட், டிசைனர் அவர்தான். 

ஜி.வெங்கட்ராம்

அன்று அப்படி பியானோ டைப்பில் ஒரு புது இன்ஸ்ட்ரூமென்ட் எடுத்து வரச்சொல்லியிருந்தார். இரவு 11 மணிக்குத் தொடங்கிய ஷூட் விடியற்காலைவரை போனது. ராக் ஸ்டார் ஸ்டைலில் நடந்து வந்து திரும்பிப் பார்ப்பது, ஆக்ஷன் ஸ்டைல்... வெரி இன்ட்ரஸ்டிங். ஆனால், அன்றும் திரும்பத் திரும்ப இப்படி கேட்டுக்கொண்டே இருந்தார்... ‘இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ?’’’

https://cinema.vikatan.com/tamil-cinema/news/118912-gvenkatrams-classic-clicks-series-part-1-about-ar-rahman.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

"வைரல் போட்டோ, சிக்ஸ்பேக் சிரமங்கள், 'பருத்தி வீர'னுக்கு மெனக்கெட்ட சூர்யா, முக்கியமா..." - ஜி.வெங்கட்ராமின் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 2

 
 

ஜி.வெங்கட்ராம்

 

 

“சூர்யா, நான் அதிகமுறை போட்டோஷூட் பண்ணிய நடிகர். எத்தனை போட்டோஷூட் என்று நினைவில் வைத்துக்கொள்ளமுடியாத அளவுக்கு அவருடன் அதிகமுறை ஒர்க் செய்து இருக்கிறேன். சினிமா, விளம்பரப் படங்கள் என்று அவரை பலமுறை ஷூட் செய்துள்ளேன். ஆனால், முதன்முதலில் அவரை எங்கு, எப்போது சந்தித்தேன் என்பது நினைவில் இல்லை. ஏதோ நிகழ்ச்சி ஒன்றில் சிவகுமார் சாருடன் சந்தித்ததாக நினைவில் உள்ளது. 

முதன்முதலில் அவருடன் ஒர்க் பண்ணியது, ‘காக்க காக்க’ படத்துக்காகத்தான். சூர்யா-ஜோதிகா காம்பினேஷன், தாணு சார் தயாரிப்பு, கௌதம்மேனனின் அறிமுகம்... என அது ரொம்பவே ஸ்பெஷலான சினிமா அது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே போட்டோஷூட் எடுத்தோம். சென்னை பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே அப்போது குஷால்தாஸ் கார்டன் என்ற ஷூட்டிங் ஸ்பாட் ஒன்று இருந்தது. அங்கு சினிமா, சீரியல் என பல ஷூட்டிங்குகள் நடக்கும். இப்போதைய பின்னி மில் லொக்கேஷன்போல, அந்த இடம் அப்போது அவ்வளவு பிரபலம். 

சூரியா

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

ஒருநாள் அதிகாலையில் அங்கு போட்டோஷூட் தொடங்கினோம். ‘அன்புச்செல்வன் ஐ.பி.எஸ்’ சூர்யா, அவரின் போலீஸ் ஃப்ரெண்ட்ஸ் மூவர் என மொத்தம் நான்கு பேரை வைத்து ஷூட் செய்தோம். மாடி ஜன்னலில் இருந்து டெலி மூலம் குறிபார்த்து சாலையில் நிற்கும் ஒருவரை என்கவுன்டர் செய்வதுபோலான ஷாட். இப்படி துப்பாக்கியை வைத்துக்கொண்டு சூர்யா நிற்கும் ஒவ்வொரு ஷாட்டும் அவ்வளவு தத்ரூபமாக அமைந்தது. ஒரு காட்சியை சாதாரண மனிதர் பார்ப்பதற்கும் போலீஸ் அதிகாரியாகப் பார்ப்பதற்குமான வித்தியாசத்தை அந்த போட்டோக்களிலேயே கொண்டுவந்திருப்பார், சூர்யா. அவரின் பார்வை அவ்வளவு ஷார்ப், டீடெயிலிங்காக இருக்கும். 

அதுதவிர, ஜோதிகாவைத் தனியாகவும், சூர்யா காம்பினேஷனுடனும் பிறகு ஷூட் செய்தேன். காட்டன் புடவை, அழகாக வாரிய தலை, கைகளில் அணைத்தபடி சில புத்தகங்கள்... என்று ஜோதிகாவின் அந்த காஸ்ட்யூம், லுக் அப்போது ரொம்பவே பிரபலமானது. அதற்குக் காரணம், கௌதம்மேனன். ‘இதுதான் காஸ்ட்யூம், இந்த லுக் இப்படித்தான் இருக்கணும்’ என்று தெளிவாக இருப்பார். 

வழக்கமாக தாணு சார் தன் படங்களில் வித்தியாசமாக ஏதாவது முயற்சி செய்யத் தூண்டுவார். அது ‘காக்க காக்க’ படத்திலும் தொடர்ந்தது. அது என்னமாதிரியான படம் என்பதை பட இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் மூலம் உணர்த்த வேண்டும் என்று முடிவானது. ‘இரண்டு பாக்கெட்.. அன்புச்செல்வன்’ என்ற நேம் பேட்ச்... என்று அந்த அழைப்பிதழின் முகப்பில் யூனிஃபார்ம் அணிந்த போலீஸ் அதிகாரியின் நெஞ்சுப்பகுதி மட்டுமே இருக்கும். அது, படத்துக்கான ரப்பர் ஸ்டாம்ப் போல ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டது. அதற்காக சூர்யாவை யூனிஃபார்முடன் குளோஸ்அப்பில் எடுத்து இருந்தோம். அந்த அன்புச்செல்வன்தான், பின்னாளில் சூர்யா அடுத்தடுத்து நடித்த போலீஸ் கேரக்டர்களுக்குப் பிள்ளையார் சுழி. 

சூர்யா

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

அடுத்து, ‘பேரழகன்’ படம். இது, ‘குஞ்சுகூனன்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக். மலையாளத்தில் இயக்கிய சசி ஷங்கரே தமிழிலும் இயக்கினார். காலையில் வழக்கமான சூர்யா-ஜோதிகா காம்பினேஷன் காட்சிகள், மாலையில் கூனன் மேக்கப் ‘பேரழகன்’, சூர்யா-பார்வையற்ற ஜோதிகா காம்பினேஷன்... என நேரம் பிரித்து ஏ.வி.எம்மில் செட் போட்டு போட்டோஷூட் நடத்தினோம். காலையில் நடந்த ஷூட் விறுவிறுவென முடிந்தது. மதிய உணவுக்குப் பிறகு அந்த கூனன் மேக்கப் போட்டுக்கொள்ள மதியம் ஒன்றரை மணியளவில் உள்ளே போனார், சூர்யா. மணி இரண்டானது, மூன்றானது, நான்கானது... அவர் வெளியே வரவேயில்லை. நான் அந்த ஃப்ளோருக்கு வெளியே ஒரே ஒரு டியூப்லைட்டை மட்டும் ஆன் செய்யச் சொல்லிவிட்டு சூர்யாவுக்காகக் காத்திருந்தேன்.  

சூர்யா

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

ஏழரை மணி இருக்கும். திடீரென ஒருவர் அருகே வந்து, ‘ஹே...’ என்று கத்தியபடி பயமுறுத்த, வெளியில இருந்து யாரோ வந்துவிட்டார்கள் போலிருக்கிறது என்று நினைத்துப் பயந்துவிட்டேன். அந்த கூனன் கெட்டப், மேக்கப்புடன் வந்த சூர்யாவைப் பார்த்ததும் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. அந்த போட்டோஷூட் நடந்த ஓரிரு மணிநேரங்களில் குனிந்து  நிற்கவே அவர் அவ்வளவு சிரமப்பட்டார். ஆனால், முழுப்படத்திலும் குனிந்தபடி நடிக்கும்போது அவர் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். 

‘ஆய்த எழுத்து’க்காக மணிரத்னம் சாருடன் வேலைசெய்தது மறக்க முடியாத அனுபவம். சூர்யாவின் பிரதர் கார்த்தி, அதில் மணி சாரின் இணை இயக்குநர். சூர்யா, மாதவன், சித்தார்த்... என ஒவ்வொருவரையும் தனித்தனியாக எடுத்தோம். சூர்யா-ஈஷா தியோல் காம்பினேஷன் ஷாட்ஸை கதிட்ரல் சாலையில் இருந்த என் பழைய ஸ்டுடியோவில் ஷூட் செய்தேன். அந்த ஷூட்டில் போட்டோ எடுப்பதைத்தவிர எனக்குப் பெரிதாக எந்த வேலையும் இல்லை. ஏனெனில், தனக்கு என்னென்ன எமோஷன்ஸ் தேவை என்று மணி சார் தெளிவாகச் சொல்லிவிட்டார். உண்மையிலேயே அந்த ஷூட் மிகப்பெரிய அனுபவம். ஒரு சீனியர் இயக்குநர் ஆர்ட்டிஸ்ட்களிடம் எப்படி வேலை வாங்குகிறார் என்பது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது.

சூர்யா

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

அந்த ஷூட் போய்க்கொண்டு இருக்கும்போது கரன்ட் கட் ஆகிவிட்டது. காலை 11 மணிக்குப் போன கரன்ட் வரும், வரும் என்று அனைவரும் காத்திருந்தோம். நேரம் மட்டுமே கடந்துகொண்டு இருந்தது, கரன்ட் வரவில்லை. நானும் கார்த்தியும் வெளியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். ‘மணி சார் வெயிட் பண்ணிட்டு இருக்காரே, அவர் நேரம் வேஸ்ட் ஆகுதே’ என்று உள்ளுக்குள் யோசனை ஓடிக்கொண்டு இருந்தது. ‘கரன்ட் இப்ப வர்ற மாதிரி தெரியலையே சார்’ என்றேன். ‘நோ ப்ராப்ளம் வெங்கட். வரட்டும்’ என்றவர், ரிலாக்ஸாக அந்தப் படத்துக்கான டயலாக்ஸை எழுதிக்கொண்டு இருந்தார். ‘கரன்ட் எப்ப வரும்’ என்று ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. சூர்யா, ஈஷா உள்பட அனைவரும் அமைதியாகக் காத்திருந்தனர். மதியம் 2.30-க்கு மேல் கரன்ட் வந்தபிறகு, திரும்ப ஷூட் செய்தோம். 

‘மாயாவி’ படத்திலும் ஒர்க் பண்ணினோம். அந்தப் படத்தை தன் இணை இயக்குநர் சிங்கம்புலி இயக்க, இயக்குநர் பாலா தயாரித்தார். ஆர்ட் டைரக்டர் ராஜீவன் பிரமாதமான செட்ஸ் அமைத்திருந்தார். காடு, நடுவே ஓர் ஆலமரம்... எனத் தத்ரூபமான ஒரு செட்டை இன்டோரில் அமைத்து இருந்தார். அந்த ஆலமர விழுதுகளைப் பிடித்து சூர்யாவும் ஜோதிகாவும் தொங்குவதுபோல் சில காம்பினேஷன் ஷாட்ஸ் எடுத்தோம். இன்னொரு செட் ரொம்பவே சுவாரஸ்யமாக அமைத்து இருந்தார். அதில் ஒட்டுமொத்த செட்டும் ரூமின் இடதுபுறம் சாய்ந்து படுத்திருப்பது போலவும், சுவரில் நடப்பதுபோலவும், ஃப்ளோரிங் சுவர் மீது இருப்பது போலவும், அடிக்கும் காற்றில் பறந்துகொண்டு இருக்கும் நாற்காலிகளைப் பிடித்து சூர்யா தொங்குவது போலவும் எடுத்தோம். நான் போட்டோஷூட்டுக்காக ஏகப்பட்ட ஆர்ட் டைரக்டர்களுடன் ஒர்க் செய்து இருக்கிறேன். அதில் ராஜீவனுடன்தான் அதிகமாக வேலை செய்திருக்கிறேன். 

சூர்யா

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

‘கஜினி’ ஷூட் ரொம்பவே ஸ்பெஷல். இந்தியாவின் பழமையான ரயில்வே ஸ்டேஷனான ராயபுரத்தில் ஒருநாள், ஸ்டுடியோவில் ஒருநாள் என அந்தப் படத்துக்கு இரண்டுநாள் ஷூட் செய்தோம். ரயில்வே ஸ்டேஷனில் காத்திருப்பது போலவும் ரயில்வே ட்ராக்கில் ஓடுவது போலவும் ஷாட்ஸ் எடுத்தோம். இப்போது அந்த ரயில்நிலையம் புதுப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அப்போது அதில் பின்னி மில்போல் இடிபாடுகளுடன்கூடிய பழைய போர்ஷன்ஸ் நிறைய இருந்தன. அந்தக் களத்துக்கும் கஜினியின் கதைக்கும் சரியாக இருந்தது. அதனால் ஆக்ஷன்ஸ் மூட் உள்ள போர்ஷன்களை அங்கு ஷூட் செய்தோம். 

சூர்யா

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

அசினுடனான காம்பினேஷன் ஷாட்களை ஸ்டுடியோவில் எடுத்தோம். பிறகு சூர்யாவின் தலையை ஷேவ் செய்து அந்த கட் மார்க் வைத்து இரண்டு மூன்று நாள் வளர்ந்த தலைமுடி இருப்போது போன்ற விக் வைத்து ஷூட் பண்ணினோம். அந்த லுக்குக்கு எந்தமாதிரியான மேக்கப் மெட்டீரியல் சரியாக இருக்கும், அவரின் ஸ்கின் கலருடன் மேட்ச் ஆக வேண்டும்... என்று நிறைய எக்ஸ்பெரிமென்ட் செய்து பண்ணிய போட்டோஷூட். அது.

நான் ஹரி சாருடன் முதல்முறையாக ஒர்க் பண்ணிய படம், ‘ஆறு’. சூர்யா, த்ரிஷா காம்பினேஷன். அதற்கு முன் த்ரிஷாவை ‘லேசா லேசா’ உள்பட சில படங்களுக்கும் பெர்சனல் போர்ட்போலியோவுக்கும் பலமுறை ஷூட் பண்ணியிருந்தேன். ‘ஆறு’க்காக இருவரையும் வைத்து ஸ்டூடியோவில் காம்பினேஷனாக ஷூட் செய்தேன். கதைப்படி, சூர்யாவின் ஸ்கின் டோன் கொஞ்சம் கருப்பாக டல் மேக்கப்புடன் இருக்க வேண்டும். மேலும், கரடுமுரடான தோற்றம் கொண்ட ஆள் என்பதையும் பிரதிபலிக்க வேண்டும். படங்கள் ரொம்பவே நன்றாக அமைந்தன. பிறகு, ஹரி சாருடன் ‘வேல்’ படத்தில் ஒர்க் பண்ணினேன். அதிலும் சூர்யா, அசின் காம்பினேஷன். அதை ஸ்டுடியோவில்தான் ஷூட் பணணினோம். தனக்கு என்ன தேவை என்பதில் ஹரி சார் ரொம்பவே தெளிவாக இருப்பார். அப்படி ஒரு தெளிவான இயக்குநருடன் பணிபுரிவது ரொம்பவே எளிது. 

சூர்யா

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

ஞானவேல்ராஜா தயாரித்து, கிருஷ்ணா இயக்கிய ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்துக்காக தூக்கம் தவிர்த்து தொடர்ந்து 24 மணிநேரம் ஷூட் செய்தோம். முதலில் சூர்யா-பூமிகா காம்பினேஷன் ஷாட்ஸை முட்டுக்காடு பகுதியில் ஷூட் செய்தோம். காலை ஆறு மணிக்கு ஆரம்பித்த ஷூட்டை முடித்துக்கொண்டு மாலையில் வடபழனி பிரசாத் ஸ்டுடியோவுக்கு ஷிப்ட் ஆனோம். அங்கு 9 மணிக்கு ஆரம்பித்து அதிகாலை நாலு மணிவரை ஷூட் செய்தோம். இன்னொரு நாள் ஜோதிகாவுடனான போர்ஷனை ஏ.வி.எம்மில் செட் போட்டு ஷூட் செய்தோம். 

‘வாரணம் ஆயிரம்’ ரொம்பவே ஸ்பெஷலான புராஜெக்ட். படத்துக்கான போட்டோஷூட் பிளஸ் சூர்யாவின் சிக்ஸ்பேக்கை ரிவில் செய்வது என்று டூ இன் ஒன் வேலை. அப்போது தமிழ்நாட்டில் வேறு யாரும் அவ்வளவு பெர்ஃபெக்டாக சிக்ஸ்பேக் பண்ணினது இல்லை. வேறு லெவலில் இருந்தார், சூர்யா. சிலருக்கு சிக்ஸ்பேக் பொருந்தாமல் போய்விடும். ஆனால், சூர்யாவுக்கு அவ்வளவு கச்சிதமாக செட் ஆகியிருந்தது. ஏற்கெனவே அழகாக இருக்கும் சூர்யா, இன்னும் மேன்லியாக இருந்தார். 

அந்த சிக்ஸ்பேக் அமைப்பைக் கொண்டுவருவதற்குப் பின்னால் உள்ள அவரின் உழைப்பு என்னை வியக்க வைத்தது. ஒவ்வொறு ஷாட் முடிந்தபிறகும் அவரின் பயிற்சியாளரின் மேற்பார்வையில் புஷ்அப்ஸ், க்ளென்ச்சஸ், டம்புள்ஸ் செய்து, ஆயில் பண்ணி... அதற்கேற்ற லைட்டிங் செய்து ஷூட் செய்தோம். மதியம் ஆரம்பித்த ஷூட் நைட் 11 மணிக்குத்தான் முடிந்தது. ரொம்பவே சோர்ந்துபோய் இருந்தார். 

சூர்யா

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

அந்த ஷூட் முடித்ததும், நேராக பார்க் ஷெரட்டன் ஹோட்டலுக்குச் சென்றோம். ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தோம். வாழ்க்கையில் முதல்முறையாக சாப்பிடும் மனிதரைப்போல் தொடர்ந்து ஆர்டர் செய்து சாப்பிட்டபடி இருந்தார், சூர்யா. சிக்ஸ்பேக் கொண்டுவர நீரின் அளவைக் குறைத்தால்தான் மசில்ஸ் தெரியும் என்பதால், தண்ணீர்கூட அவ்வளவு குடிக்க முடியாது. அப்படியென்றால் சாப்பாட்டில் எந்தளவுக்கு ஸ்ட்ரிக்காக இருந்திருப்பார் என்பது புரியும். பாத் டப்பில் கேஷுவலாகப் படுத்திருப்பது, ஒரு கையில் கேப் வைத்துக்கொண்டு வெற்றுடம்புடன் நிற்பது... என்று அந்த சிக்ஸ்பேக் போட்டோஸை ‘வாரணம் ஆயிரம்’ பட புரமோஷனுக்குப் பயன்படுத்தினர். இன்றுபோல் அன்று சோஷியல் மீடியா இல்லைதான். ஆனால், அன்றே அந்தப் படங்கள் மிகப்பெரிய வைரல். 

கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அயன்’ படத்துக்கு ஏ.வி.எம்மில் செட் போட்டு எடுத்தோம். ஒன்றிரன்று ஆக்ஷன்ஸ் ஷாட்ஸ், டான்ஸ் சீக்வென்ஸ், ரொமான்ஸ் என்று சூர்யா-தமன்னா காம்பினேஷன்களை அங்கு எடுத்தோம். அதைத்தொடர்ந்து உதயநிதி தயாரித்த ‘ஆதவன்’ படத்துக்கும் ஷூட் செய்தேன். அதில் லைட்டிங் பேட்டர்னில் வித்தியாசமான முயற்சிகளைச் செய்தேன். மொட்டை மாடியில் அமைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் பைப்களுக்கு மத்தியில் தப்பிச்செல்வது,... என்று நிறைய ஆக்ஷன்ஸ் காட்சிகள். அந்த ஃப்ளோரிங்கை ராஜீவன் அமைத்து இருந்தார். அது தவிர, நயன்தாரா, சரோஜாதேவி சம்பந்தப்பட்ட ஃபேமிலி காம்பினேஷன்களையும் ஷூட் செய்தேன். 

‘சிங்கம்’ பட சீரிஸும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ‘சிங்கம்’ முதல் பாகத்தில் அனுஷ்கா  ஹீரோயின். சூர்யா-அனுஷ்கா ரொமான்ஸ் ஷாட்ஸை எடுத்து முடித்தபிறகு மாலை சூர்யாவை போலீஸ் காஸ்ட்யூமில் எடுத்தோம். முதல் பார்ட்டில் போட்டோஷூட்டை கொஞ்சம் எளிமையாகச் செய்தோம். அடுத்த பாகத்தில் ‘துரைசிங்கம்’ கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாகப் பதியவைக்கும் வகையில் ஷாட்ஸ் அமைத்திருந்தோம். 

வீட்டு வாசலில் கையில் அரிவாளுடன் நிற்பது, காக்கி யூனிஃபார்ம், நெற்றியில் குங்குமம் என்று அந்த போட்டோக்களைப் பார்க்கும்போதே பவர்ஃபுல்லாக இருக்கும். அதேபோல அடித்துக் குவிக்கப்பட்ட ரவுடிகள் மீது கால் வைத்து ஷூ லேஸ் கட்டுவது... என அதில் ஃபுல் ஆக்ஷன் மோட். ஏற்கெனவே ஹரி சாரைப் பற்றி சொல்லியிருந்தேன். ‘போலீஸ் யூனிஃபார்ம்ல பெர்ஃபெக்டா இருக்கணும்’ என்பது மட்டுமின்றி, அந்த ஊரில் குலசாமி கோயில், குங்குமம், அரிவாள், எலுமிச்சை பழம் என்று மிக்ஸ்செய்து அந்த லோக்கல் ஃபீலைக் கொண்டுவருவார். அவரின் அந்த கமிட்மென்ட்டைப் பார்க்கும்போது, நமக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

சூர்யா

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

‘அஞ்சான்’ படத்துக்காக நிறைய முயற்சிகள். வித்தியாசமான ஹேர் ஸ்டைல். அதற்காக மும்பையில் இருந்து ஸ்டைலிஸ்ட்டை வரவைத்தோம். சூர்யாவின் லுக்குக்காக நிறைய எக்ஸ்பெரிமென்ட் செய்து இருந்தார்கள். போட்டோஸும் நன்றாக அமைந்திருந்தன. இதேபோல் ‘24’ படத்தில் ஆத்ரேயா, இளவயது கேரக்டர், விஞ்ஞானி என்று சூர்யாவை மூன்று கெட்டப்களில் ஷூட் செய்தேன். ஒரே நாளில் எடுக்கப்பட்ட அந்த மூன்று வேரியேஷன்கள் நன்றாக வந்திருந்தன. இப்படி சினிமாக்கள் மட்டுமின்றி சூர்யா நடித்த பெப்சி, ஏர்செல், பாரதி சிமென்ட், டிவிஎஸ் மோட்டார் சைக்கிள்... என்று அவரின் விளம்பரப் படங்களுக்கும் போட்டோஷூட் செய்துள்ளேன். தவிர, அவர் புது லுக் ஒன்றை முயற்சி செய்கிறார் என்றால், பெர்சனலாக ஒரு போட்டோஷூட் கண்டிப்பாக இருக்கும். 

 ‘காக்க காக்க’ மிடுக் போலீஸ் அதிகாரி, ‘பேரழகன்’ பட கூனன் கேரக்டர், 'ஆய்த எழுத்து' இளைஞன், நகைச்சுவை ‘மாயாவி’, பழிமுடிக்கத் துடிக்கும் ‘கஜினி’, துறுதுறு காதலன் டு அன்பான கணவன் ‘ஜில்லுனு ஒரு காதல்’, ‘சிங்கம்’ வரிசைகள், காலத்தை கடிகாரத்தால் மாற்றியமைக்கும் ‘24’... சூர்யாவை சினிமாவில் அவரின் ஆரம்ப நாட்களில் இருந்து கவனித்து வந்தவனாகச் சொல்கிறேன், அவரின் வளர்ச்சியையும் உழைப்பையும் இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் சொல்லிவிடும். அதில் பல படங்கள் ஓடியிருக்கலாம், சில படங்கள் வெற்றியைத் தராமல் இருக்கலாம். ஆனால், தன் உழைப்பில் அவர் எந்தப் படத்துக்கும் குறைவைத்தது இல்லை. 

 ‘பருத்திவீரன்’ பட போட்டோஷூட்டில் தன் தம்பி கார்த்தியை எப்படி லான்ச் செய்ய வேண்டும் என்ற சூர்யாவின் ஆர்வம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. ‘லுக் இப்படி இருக்கணும்... ஹேர் இந்தமாதிரி இருக்கணும்’ என்று அந்த போட்டோஷூட்டின்போது கூடவே இருந்தார். அதில் சிவகுமார் சார், சூர்யா, கார்த்தி, டைரக்டர் அமீர், ஞானவேல் ராஜா டீமை ஷூட் செய்தது நல்ல அனுபவம். சூர்யாவைப் போலவே சிவகுமார் சாரும் கார்த்தியும் எனக்கு நல்ல அறிமுகம். சிவகுமார் சாருக்கு ஓர் ஓவியராக போட்டோகிராஃபியில் ஆர்வம் அதிகம். ‘புதுசா என்ன பண்ணிட்டு இருக்கீங்க’ என்று விசாரிப்பார். அந்தக் காலத்தில் சென்னை பீச்சில் எடுக்கப்பட்ட அவருடைய கருப்பு-வெள்ளை போட்டோஷூட் படங்களைக் காட்டுவார். அதேபோல ‘அந்தப் பெயின்டிங் பாருங்க, இதைப் படிங்க’ என்று மோட்டிவேட் செய்துகொண்டே இருப்பார். 

சூர்யா

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

நடிகர் என்பதைத் தாண்டி, சூர்யா எனக்கு நல்ல நண்பரும்கூட. போட்டோஷூட் செய்கிறோம் என்றால் சாப்பாடு அவரின் வீட்ல இருந்து வந்துடும். டயட், ஒர்க்அவுட் என்று இருப்பதால் புரொடக்ஷன் சாப்பாடு அவருக்கு செட் ஆகாது. அவரின் ட்ரெயினர் கொடுத்த விகிதாசாரத்தில் தயாரிக்ப்பட்ட ஸ்பெஷல் டிஷ் வீட்டிலிருந்து அனுப்புவார்கள். ‘நீங்களும் சாப்பிடணும்’ என்று சொல்லி பக்கத்திலேயே உட்கார வைத்துவிடுவார். நானும் அந்த சாப்பாட்டை ட்ரை பண்ணுவேன். 

ஒரு போட்டோகிராஃபராக எனக்கு சூர்யாவை மிகவும் பிடிக்கக் காரணம், அவர் பயங்கர போட்டோஜெனிக். ஹீரோக்களில் சிலர்தான் அப்படி போட்டோஜெனிக்காக இருப்பார்கள். ஒரு ஃப்ரேமில் லைட்டிங் செய்து அவர் வந்து நின்றாலே அவ்வளவு அழகாக இருப்பார். இவரின் போட்டோஷூட்டை என்ஜாய் செய்து பண்ணலாம். ஸ்கின் டோன், எக்ஸ்பிரஷன்ஸ், ஹேர் ஸ்டைல், பாடி ஸ்ட்ரெக்சர், ஆர்வம்... என்று எப்போதும் அப்படி வந்து இருப்பார். 

எந்த கெட்டப், கேரக்டராக இருந்தாலும் அவரை லைட் பண்ணி எடுக்க எனக்கு அவ்வளவு பிடிக்கும். தவிர, அவருடைய போட்டோஷூட்டில் லைட்டிங் பேட்டர்னில் அத்தனை புது முயற்சிகள் செய்துள்ளேன். எந்த லைட்டிங் பேர்ட்டர்ன்களிலும் அழகாக இருப்பார். அனைத்து லைட்டிங்குக்கும் அவரின் ஸ்கின் ஏற்றதாக அமைந்துள்ளது. அவரை போட்டோ எடுப்பது என்பது ஒரு ட்ரீட். ஒரு மாடல் போல் உள்ள ஆக்டர். என் இந்த புகைப்படப் பயணத்தில் எனக்கு அமைந்த மிகச்சிறந்த படங்கள் என்று சில கலெக்ஷ்ன்ஸ் வைத்துள்ளேன். அதில் அவருடைய படங்கள்தான் அதிகம். அதற்கு அவரின் ஆர்வமும், எந்த லுக்குக்கும் பொருந்திப்போகும் அவரின் அழகும்தான் காரணம்.

பேசுவோம்...

https://cinema.vikatan.com/tamil-cinema/news/120210-gvenkatrams-classic-clicks-part-2-about-surya.html

Link to comment
Share on other sites

பிரௌன் ஹேர்ஸ்டைல், சந்திரகுப்த மௌரியர்... அஜித் போட்டோஷூட் வித் அஜித் ஜி.வெங்கட்ராம் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 3

 
 

1980களில் அஜித் ஒரு மாடல். நான் அப்போது சரத் ஹக்சரிடம் அசிஸ்டென்ட் போட்டோகிராஃபர். அப்போது பிரின்டில் வரும் பல விளம்பரங்களுக்கு அஜித் மாடலிங் செய்துகொண்டு இருந்தார். அந்த சமயத்தில்தான் அவரை முதலில் சந்தித்தேன். வெடவெடவென ஒல்லியாக இருப்பார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... தான் நடிக்கும் விளம்பரப் படங்கள் மட்டுமின்றி மறற மாடல்களை வைத்து ஷூட் செய்யும் போர்ஷனிலும் அஜித் எங்களுடனேயே இருபபார். ‘எப்படி ஷூட் பண்றாங்க, எப்படி லைட்டப் பண்றாங்க’ என்று கவனிப்பார். அன்றே அவருக்கு போட்டோகிராஃபியில் அந்தளவுக்கு ஆர்வம்.

அஜித்

 

தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இன்ட்டீரியர் சம்பந்தப்பட்ட ஒரு போட்டோஷூட். இரவு 9 மணிக்கு தொடங்கிய ஷூட் மறுநாள் காலை 6 மணிவரை போனது. அப்போது திடீரென வந்த அஜித் ‘ஐ வான்ட் டு ஸீ த லைட்’ என்றவர் முழு நைட்டும் எங்களுடன் அமர்ந்து லைட்டிங் பண்ணுவதை கவனித்ககொண்டே இருந்தார். இத்தனைக்கும் அன்று ஹோட்டலின் லாபி, ரூம், கிச்சன் என்று வெவ்வேறு இடங்களுக்கு தகுந்தாற்போல் லைட்டிங் செய்து ஷூட் செய்தோம். தவிர அங்கிருந்த உணவுகளையும் சில ஷாட்ஸ் எடுத்தோம். ஒவ்வொரு இடம், சூழலுக்கு தகுந்தாற்போல் எப்படி லைட்டிங் செய்கிறார்கள் என்பதை ஓரமாக அமர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தார்.  

அன்று அவர் போட்டோகிராஃபரும் கிடையாது, ஒரு மாடல். ஆர்வம் என்றால் ஒருமணிநேரம் இரண்டு மணிநேரம் இருப்பார்கள். ஆனால் 9 மணிநேரம் முழு இரவும் ஒரு ஷூட்டில் டிராவல் பண்ணுவது அவரின் ஆர்வத்தை புரியவைத்தது. ஷூட் முடிந்து மறுநாள் காலை காரை எடுத்துக்கொண்டு, ‘ஓகே சீ யூ’ என்றபடி அவர் சென்றது ஏதோ நேற்று நடந்ததுபோல் உள்ளது. 

அஜித்

அது, சிட்டி யூனியன் பேங்க் விளம்பர ஷூட். சாணக்கியரும் சந்திரகுப்த மௌரியரும தாயம் விளையாடுவதுபோன்ற ஒரு ஷாட். அதில் அஜித் சந்திரகுப்த மௌரியர். சாணக்கியராக நடிக்க ஒல்லியான தோற்றம்கொண்ட ஒரு ஆள் தேவை. ஆனால் உடனடியாக ஆள் கிடைக்கவில்லை. அப்போது சரத் ஹக்ஷர், ‘சாணக்கியரா நீயே பண்ணிடு. அஜித் மட்டும்தான் ஃபோகஸ்ல இருப்பார்’ என்றார். பூணூல் போட்டு சாணக்கியர்போல் வேஷம்போட்டு அஜித்தின் எதிரில் உட்கார்ந்தேன். என் முதுகுப்பக்கத்தில் இருந்து அஜித்தை ஷூட் செய்யும் ஷாட். ரொம்பவே தமாஷான காட்சி. ‘நாமளும் அஜித்துடன் மாடல் பண்ணிட்டு இருக்கோம்’ என்று நினைத்து சிரித்துக்கொண்டேன்.

அஜித்

மாடலிங்கில் இருந்து பிறகு அவர் சினிமாவுக்குள் வந்துவிட்டார். ஆனால் அவ்வபோது போர்ட்போலியோ செய்வது தொடர்ந்தது. அப்படி பண்ணியதுதான் அந்த போட்டோஷூட். கொஞ்சம் நீளமான முடியுடன் வந்தார்.  வழக்கமாக சினிமாவுக்கு போட்டோஷூட் செய்யும்போது, சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தை மனதில் வைத்து செய்வோம். ஆனால் அன்று ஃபேஷன் மாடல்போல் ஷூட் செய்வோம் என்று ஷாட்ஸ் திட்டமிட்டோம். ஜாக்கெட்ஸ், ரேஸ் சைக்கிள்... என்று அன்று எடுத்த அந்த போட்டோக்களைப் பார்த்தால் ஸ்டைலிங், லைட்டிங் அடிப்படையில் அவை ஏதோ இன்று எடுக்கப்பட்டவைபோல் இருக்கும். 

அஜித்

இப்போது அவர் விளம்பரங்களில் நடிப்பது இல்லை. ஆனால் அவரின் பல விளம்பர வீடியோக்களுக்கு நான் போட்டோகிராஃபி செய்துள்ளேன். அதில் முக்கியமானது நெஸ்கஃபே சன்ரைஸ் காப்பி விளம்பரம். இவரும் சிம்ரனும் சேர்ந்து நடித்த ‘வாலி’ படம் ரிலீஸ் சமயம் என நினைக்கிறேன். அதனால் அந்த ஹிட் காம்பினேஷனை விளம்பரத்தில் கொண்டுவந்தனர். பாண்டிச்சேரி யில் ஒரு பழைய பங்களாவில் ஷூட் பண்ணினோம். ராஜீவ்மேனன் ஃபிலிம் பண்ணினார். நான் போட்டோஷூட் பண்ணினேன். அது நல்ல அனுபவம். 

அஜித்

அவரின் சினிமா என்று பார்த்தால் ‘அட்டகாசம்’ படத்துக்குத்தான் முதலில் ஷூட் பண்ணினேன். சரண் சார் டைரக்ஷன். ‘இரண்டு டிரான்ஸ்ஃபர்மேஷன் வேணும்’ என்றார் சரண் சார். அந்த இரண்டு லுக்கையும் ஒரேநாளில் எடுத்தோம். வெள்ளை வேட்டி சட்டை, கழுத்து சங்கிலிகள், பிரேஸ்லெட் என்று நிறைய நகைகள் போட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இருக்கும் டான் கேரக்டரை ஷூட் செய்தோம். ஹேர் ஸ்டைல், பட்டன் கழண்டு இருக்கும் சட்டை,, கையில் விதம்விதமான ஆயுதங்கள்... என்று நிறைய எடுத்தோம். 

அஜித்

நிறைய அரிவாள்களை வரிசையாக நட்டு வைத்து அதன் வழியே அஜித் சார் பார்ப்பதுபோன்ற ஒரு ஷாட். அதுதான் போஸ்டராக வந்தது. இன்றும் அந்த போட்டோஸை அவரின் பல ரசிகர்கள் வைத்திருப்பதை கவனிக்கிறேன். ஆட்டோவுக்கு பின்னால் ஒட்டிவைக்கப்பட்டு இருப்பதையும் பார்க்கிறேன். தவிர பூஜாவுடன் ரொமான்டிக் லுக்கிலும் சில ஷாட்ஸ் எடுத்தோம். 

இன்னொரு இன்ட்ரஸ்டிங்கான விஷயம் நினைவுக்கு வருகிறது. ஏதாவது புதிதாக லுக் முயற்சி செய்கிறார் என்றால் ஒரு போட்டோஷூட் நிச்சயம் இருக்கும். அப்படி ஒருநாள் திடீரென போன் செய்தார். ‘ஸ்டுடியோ வர்றேன். டக்குனு ஒரு போட்டோஷூட் பண்ணணும்’ என்றார். ‘என்ன விஷயம்’ என்றேன். ‘வந்து சொல்றேன்’ என்றவர் அடுத்த அரைமணிநேரத்தில் வந்தார். ‘வேறொரு லுக் முயற்சி பண்ணலாம்னு நினைக்கிறேன். சலூன் போயிட்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டு கிளம்பினார். 

அஜித்

2 மணிநேரம் கழித்து வந்தவர், ஒட்டுமொத்தமாக மாறி இருந்தார். தலை முடி, கண் புருவம் முழுவதும் புரவுன் கலராக மாற்றி இருந்தார். என் ஸ்டுடியோவில் இருந்த யாருக்கும் இவரை அடையாளம் தெரியவில்லை. ஏனெனில் கண் புருவத்தை மாற்றினால் ஆள் அடையாளம் கண்டுபிடிப்பது சிரமம். எனக்கே, ‘யார்றா இது ஃபாரினர் மாதிரி வர்றாங்க’ என்று யோசித்து பிறகுதான் அஜித் என்று ஆச்சர்யமாகப் பார்த்தேன். 

அஜித்துடனான ஜி.வெங்கட்ராமின் 'கிளாஸிக் கிளிக்ஸ்' அனுபவங்கள்..!

அந்த லுக் நன்றாகவே இருந்தது. ‘நல்லா இருக்கு. ஆனால் நீங்கன்னே தெரியலை. செட்டாகுமானு முயற்சி பண்ணிப் பார்ப்போம்’ என்றேன். எடுத்தோம். நல்ல ஷாட்ஸ் கிடைத்தன. ஆனால் அவர் அனுமதியின்றி அதை ஷேர் பண்ண முடியாது. பிறகு சென்றவர் பிரவுன் கலரை மாற்றி பழையபடி திரும்பி வந்தார். அந்த நார்மல் லுக்கிலும் ஷூட் செய்தேன். சில நடிகர்கள் புது லுக் முயற்சி செய்து பார்ப்போம் என்றால் யோசிப்பார்கள். ‘இதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா’ என்று தயங்குவார்கள். ஆனால் இவர் அப்படி கிடையாது, ‘எப்படி இருக்குனு முயற்சி பண்ணி பார்ப்போமே’ என்று நிறைய சோதனை முயற்சிகள் செய்வார். அதுதான் அஜித் சாரின் பலம் என நினைக்கிறேன். 

அஜித்

அடுத்து சரண் சாருடன் மீண்டும் ‘அசல்’. சிவாஜி  புரொடக்ஷன் சார்பாக ராம்குமார் சார் தயாரித்த படம். இன்டர்நேஷனல் டான் கேரக்டர். தாடி, மீசை, தலைமுடி, கூடவே சிகார்... என்று ஒட்டுமொத்தமாக வித்தியாசமான தோற்றம். ஃப்ளைட்டை பிடிக்கச் செல்லும்போது,  பேக் எடுத்துக்கொண்டு நடப்பது... இன்டர்நேஷனல் லுக் வரணும் என்பதற்காக முயற்சி செய்தோம். போட்டோகிராஃபரா என்ஜாய் பண்ணி பண்ணிய படம். 

காரணம், அஜித் சாரை ஷூட் செய்யும்போது ரசித்து லைட்டிங் செய்யலாம். அழகானவர் என்பதால் எந்தக்கோணத்தில் எந்த லைட்டிங்கிலும் அழகாக வரும். ‘அசலுக்கு எடுத்த போட்டோஸை இப்பவும் அவரின் ரசிகர்கள் பயன்படுத்துகிறார்கள். அந்தப்பட போஸ்டர் வந்ததும், ‘ரொம்ப நல்ல லுக்ல வித்தியாசமா இருக்கு’ என்று அஜித் சார் எனக்கு போன் செய்து சந்தோஷப்பட்டது நினைவிருக்கிறது.

 

அஜித்
 

தொடரந்து பில்லா - 2. சக்ரி டோலட்டி டைரக்ஷன். மிஸ் இண்டியா பார்வதி ஓமணக்குட்டன் காம்பினேஷன். அதில் லுங்கி கட்டிக்கொண்டு இருக்கும் லோக்கலான கேரக்டர், ஸ்டைலாக கோட் ஷூட்டில் இருக்கும் டான் கேரக்டர் என்று இரண்டு கேரக்டர்கள். நிறைய கூலர்ஸ் பயன்படுத்தி எடுத்தோம். முழுப் படத்தையும் கோவாவில் எடுத்து இருந்தார்கள். ஆனால் போட்டோஷூட்டுககு டைம் இல்லாததால் சென்னை ஸ்டுடியோவில்தான் எடுத்தோம். லுங்கி கட்டியிருக்கும் கேரக்டர் மீதே அந்த கோட் சூட் கேரக்டையும் சூப்பர் இம்ப்போஸ் செய்து போஸ்டராக வந்தன. அதற்கும் நல்ல வரவேற்பு. லுக்கி லுக்கில் ஒரு பாடி லாங்குவேஜ், கோட் சூட்டில் வேறொரு ஸ்டைல் என்று வித்தியாசமாக வந்தன. வீடியோ ஷூட்செய்யும்போது அந்த வித்தியாசத்தை எளிதாக கொண்டுவந்துவிடலாம். ஆனால் ஒரு போட்டோவில் அந்த வித்தியாசத்தை கொண்டுவருவது ரொம்பவே கஷ்டம். அதை அஜித் அழகா பண்ணியிருந்தார. 

அஜித்

அவரை 90களில் இருந்து 25 வருஷங்களுக்கும் மேலாக கவனித்து வருகிறேன். அன்று போட்டோகிராஃபியில் அவருக்கு இருந்த ஆர்வத்தை இன்றும் தக்கவைத்திருப்பது எனக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது. ஒரு ப்ரொஃபஷனல் போட்டோகிராஃபராக இதில் உள்ள தொழில்நுட்பத்தை, நுணுக்கத்தை, அடுத்தடுத்த வளர்ச்சியை கற்க வேண்டியது என் வேலை. ஆனால் அவர் முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர். அவரும் அதே அளவுக்கு அப்டேட்டாக இருப்பதான் பெரிய ஆச்சர்யம். 

அஜித்

 

ப்ரொபஷனல் போட்டோகிராஃபர்கள் வைத்துள்ள அத்தனை கேமரா கிட்டும் அவரிடம் இருக்கும். எங்கே வெளிநாடு போனாலும் கேமராவை எடுத்துச்சென்றுவிடுவார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களை கேண்டிட்டாக எடுத்ததையும் இயற்கை காட்சிகளை எடுத்ததையும் அவ்வப்போது ஷேர் செய்வார். சமீபத்தில் வீட்டிலேயே ஒரு ஸ்டுடியோ செட் பண்ண வேண்டும் என்று சொல்லி ‘என்னென் எக்யூப்மென்ட்ஸ் வாங்கலாம்’ என்று கேட்டார். நானும் என் யோசனைகளை சொன்னேன். இன்று நடிகர் என்பதைத்தாண்டி நண்பராக, சக போட்டோகிராஃபராக அன்று மாடலாக இருந்த அதே பிணைப்பும் அன்புமாக எங்கள் பயணம் தொடர்கிறது.”

https://cinema.vikatan.com/tamil-cinema/news/120930-once-ajith-came-with-brown-color-loo-remembers-venkatram.html

Link to comment
Share on other sites

" '15 கிலோ எடை குறைச்சிருக்கேன்... கம் லெட்ஸ் க்ளிக்'ம்பார் விக்ரம்..!" - ஜி.வெங்கட்ராம் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 4

 
 

விக்ரம், லயோலா கல்லூரியில் எனக்கு சீனியர். சினிமா, விளம்பரங்கள், தனிப்பட்ட போட்டோஷூட்டுகள்... என்று அவருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணிக்கிறேன். வித்தியாசமான நடிப்பு, வெவ்வேறு வகையான கதாபாத்திரங்கள், கடின உழைப்பு, பரிட்சார்த்த முயற்சிகள்... என்று என்னை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார். 

விக்ரம்

 

லயோலாவில் பழகியிருந்தாலும் ‘சாமுராய்’ படத்துக்காக ஷூட் செய்யும்போதுதான் போட்டோகிராஃபராக அவருடனான முதல் சந்திப்பு. அப்போது ‘சாமுராய்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதன் இயக்குநர் பாலாஜி சக்திவேல் சார், கதையின் அடிப்படை ஐடியாக்கள் சிலவற்றை ஷேர் பண்ணினார். அதை அடிப்படையாக வைத்து சில கெட்டப்களில் ஷூட் செய்தோம். 

முதலில் ஒரு பாடல் காட்சிக்காக போர் வீரர் போன்ற கெட்டப். ஆரம்பம் முதலே தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார் விக்ரம். அதில் அடிபட்டதுபோன்று காயங்களுடன் எடுத்த ஃபைட் சீக்வென்ஸ், மேன்லியாக பவர்ஃபுல்லாக வந்திருந்தன. நான் எப்போதும் சொல்வதுபோல் விக்ரமின் ரசிகர்களின் கலெக்ஷனில் அந்தப் படங்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.

‘பீமா’ விக்ரம்

 

விக்ரமும் அடுத்து ஒர்க் பண்ணிய படம், ‘பீமா’. அந்த ஷூட்டை என்னால் மறக்கவே முடியாது. இவை, படப்பிடிப்புக்கு முன்பே பூஜைக்கான அழைப்பிதழ் ப்ரவுச்சருக்காக எடுக்கப்பட்டவை. எப்போதும் உழைப்பும் உற்சாகமுமாக இருக்கும் லிங்குசாமி சார் இயக்கிய படம். பின்னி மில்லில் இரண்டு நாள்கள் ஷூட் செய்தோம். ஒவ்வொரு இடமும் வித்தியாச லைட்டிங், வெவ்வெறு வகையான குணம் என, ஒரு போட்டோகிராஃபராக பின்னி மில் எனக்கு ரொம்பவே பிடித்த லொக்கேஷன். 

‘பீமா’ விக்ரம்

த்ரிஷா காம்பினேஷன், ஆக்ஷன் சீன்ஸ்... என்று அங்கும் மொத்தம் 18 ஃப்ரேம்கள் எடுத்தோம். ஒரு கட்டடத்தில் இருந்து யாரோ விக்ரமை ஷூட் பண்ணுவதுபோன்ற சீன். அதை எப்படி எடுப்பது என்று ரொம்பவே குழம்பினோம். அந்த ஜன்னல் கதவில் அவரை யார் ஷூட் செய்கிறார்கள் என்ற ரிஃப்ளெக்ஷன் தெரிய வேண்டும். மேலும், அந்தக் கண்ணாடியில் நிறைய புல்லட்ஸ் ஷாட்ஸ் இருக்க வேண்டும். அதற்காக கிளாஸ் பெயின்ட் செய்து எடுத்தோம். மூளை குழம்பும் அளவுக்கு அவ்வளவு கடினமான ஷாட்ஸ். போட்டோகிராஃபியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த ஷாட் ரொம்பவே இன்ட்ரஸ்டிங்காக இருக்கும். ‘தினம்தினம் கற்றல்தான்’ என்று நினைவுபடுத்திய நாள் அது. 

‘பீமா’ விக்ரம்

 

தரையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் துப்பாக்கியுடன் நடந்துவர வேண்டும். பின்னணியில் எலெக்ட்ரிக்கல் லைன் தீப்பற்றி எரிய, தீப்பொறி பறக்கும். அந்த ரிஃப்ளெக்ஷன் தண்ணீரில் தெரிய வேண்டும். அந்த ஷாட் ரொம்பவே நன்றாக வந்திருந்தது. இதுபோல் ஆக்ஷன் மூட் ஷாட்டுக்காக எப்போதும் உடம்பு கின்னென இருக்க வேண்டும். அதற்காக அங்கேயே ஒரு ஜிம் அட்டாச் பண்ணியிருந்தோம். ஒவ்வொரு ஷாட் இடைவெளியிலும் போய் ஒர்க்கவுட் செய்துவிட்டு வருவார் விக்ரம். 

‘பீமா’ விக்ரம்

ஆக்ஷனில் இப்படி என்றால் த்ரிஷா உடனான காம்பினேஷன் ஷாட்டில் ரொமான்ஸில் வேற லெவலில் இருப்பார் சியான். மரத்தடி, பைக் என்று அந்தப் போட்டோக்களை இப்போது பார்த்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். எத்தனையோ படங்களுக்கு ஷூட் செய்திருந்தாலும் நம் மனதுக்கு நெருக்கமானவை என சில போட்டோக்களே அமையும். ‘பீமா’ ஷூட்டில் அமைந்த படங்களை அந்த வகையில் சேர்க்கலாம்.

விக்ரமுடன் பண்ணிய அடுத்த பெரிய ஷூட், ‘கந்தசாமி’ படத்துக்கான ஷூட். மீண்டும் தாணு சாரின் தயாரிப்பில் பண்ணிய படம். ‘உங்க ஸ்டைல்ல என்ன வேணும்னாலும் பண்ணுங்க தம்பி. போஸ்டர்ஸைப் பார்த்து பிரமிக்கணும் மிரளணும். மொத்தத்தில் ரசிக்க வைக்கணும்’ என்று என்கரேஜ் செய்துகொண்டே இருப்பார். அப்படி தாராளம் காட்டும் தயாரிப்பாளர் கிடைப்பது போட்டோகிராஃபர்களுக்கான வரம் என்றே சொல்லலாம். ஏனெனில் நமக்குப் பிடித்தது, பரிசோதனை முயற்சிகள் என்று நிறைய மெனக்கெடலாம். இந்தப்பட இயக்குநர் சுசி கணேசனும் நிறைய ஐடியாஸ் பிடிப்பார். 

கந்தசாமி விக்ரம்

மொத்தம் மூன்று நாள் நடந்த இந்த போட்டோஷூட்டும் என் மனதுக்கு நெருக்கமானது. உடல் முழுவதும் பெயின்ட் செய்த விக்ரம்-ஸ்ரேயா இருவரையும் ஃப்ளோரசென்ட் ரூமில் வைத்து எடுத்த போட்டோக்கள், ஆப்பிரிக்கன் முகப் பூச்சு-காஸ்ட்யூமில் குதிப்பது, ரோயிங் பேடல் கொண்டு அடியாட்களை அடித்து தண்ணீரில் தள்ளுவது... இப்படி சினிமா ஷூட்டிங் செட்டப்பில் ஷூட் செய்தோம். கனல் கண்ணன் மாஸ்டர்தான் போட்டோஷூட்டுக்கான ஆக்ஷன் சீக்வென்ஸை அமைத்தார். இதை முட்டுக்காடில் ஷூட் செய்தோம். 

‘கந்தசாமி’ விக்ரம்

சூப்பர் ஹீரோ காஸ்ட்யூமில் கோட்டைச் சுவரை ஏறிவரும் ஸ்பைடர் மேன் போல் வருவதை வேறொரு நாள் எடுத்தோம். இதற்காக தோட்டாதரணி சார் பிரமாதமான செட் அமைத்துத் தந்தார். சுத்தியலை தோளில் வைத்துக்கொண்டு டை பறக்க நடந்து வரும் ஷாட்டில் பின்னால் லைட்டிங் செய்து எடுத்தோம். அவ்வளவு ஹேண்ட்ஸ்மாக இருப்பார். ஒரு போட்டோகிராஃபராக என்னால் இந்த ஷூட்டில் நிறைய எக்ஸ்பெரிமென்ட் பண்ண முடிந்தது. அவருக்கும் இப்படியான பரிட்சார்த்த முயற்சிகள் ரொம்பவே பிடிக்கும். லைட்டிங் செய்ய எவ்வளவு நேரமானாலும் அமைதியாக காத்திருப்பார். அவருடன் மறக்கமுடியாத படங்களை ஷூட் செய்துள்ளேன் என்பது சந்தோஷமான விஷயம். 

ராஜபாட்டை விக்ரம்

அடுத்து விக்ரமுக்கு நான் பண்ணிய படம், ‘ராஜபாட்டை’. சுசீந்திரன் டைரக்ஷன் செய்த படம். காலை ஒன்பது மணிக்குத் தொடங்கி அடுத்தநாள் காலை மூணு மணிவரை ஒரே நாளில் ஏழெட்டு கெட்டப்பில் ஷூட் செய்தோம். காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், பிராஸ்தெடிக்ஸ் மேக்அப் என அத்தனை லுக்ஸ், கெட்டப். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். சிறிது நேரம்கூட ஓய்வு எடுக்காமல் 22 மணிநேரம் தொடர்ந்து ஷூட் செய்தது மறக்கமுடியாத அனுபவம்.

தெய்வத் திருமகள் விக்ரம்

ஏ.எல்.விஜய் சாருடன் ‘மதராசப்பட்டினம்’ படத்துக்குப்பிறகு ‘தெய்வத் திருமகள்’ பண்ணினோம். அதில் சற்றே மனநிலை குன்றிய மாற்றுத்திறனாளியாக விக்ரம். அதில் இரண்டு மூன்று வேரியேஷன்ஸ் இருக்கும். அந்த மாற்றங்களை ஒரேநாளில் நடக்கும் போட்டோஷூட்டில் கொண்டுவர வேண்டும். சொட்டருடன் ஊட்டியில் இருப்பது போன்ற ஒரு ஃபீலை ஸ்டுடியோவில் எடுக்கும் ஷாட்டில் கொண்டுவர வேண்டும். அமலாபால், அனுஷ்கா உடன் காம்பினேஷன். மோட்டார் பைக்கில், குளிர் காற்றை கடக்கும் உடல்மொழி... இப்படி ஒவ்வொன்றுக்கும் வித்தியாச உடல்மொழி என்று வியக்கவைத்தார். 

தெய்வத் திருமகள் விக்ரம்

அடுத்தும் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தாண்டவம்’ படத்தில் உளவாளி கேரக்டர். இடையில் கண் பார்வை போய்விடும். மனைவி அனுஷ்காவை  கொலை செய்துவிடுவார்கள். கண் தெரியாவிட்டாலும் மனைவியை கொன்றவர்களை எப்படி பலிவாங்குகிறார் என்பதே கதை. கூடவே ஏமி ஜாக்ஷன். ஆக்ஷன் கதை. ஏவி.எம்மில் செட் போட்டு ஷூட் செய்தோம். சூழலில் வரும் சத்தத்தை வைத்து எதிரிகள் எந்தத் திசையில் வருகிறார்கள் என்பதைக் கண்டறிந்து தாக்கும் அசாத்திய திறமை கொண்ட கேரக்டர்.  இதை வீடியோவில் காட்சிப்படுத்துவது எளிது. ஆனால், அந்த கதாபாத்திரத்தின் தன்மையை ஒரே ஒரு போட்டோவில் விளங்கவைப்பது கஷ்டமான விஷயம். ஆனால், விக்ரம் ரொம்பவே அழகாக, எளிதாகச் செய்தார். 

தாண்டவம் விக்ரம்

ஒரு ப்ராஜெக்ட் முடித்து ஒரு இடைவெளி கிடைக்கிறது என்றால் சும்மாவே இருக்கமாட்டார். ‘கமான் வெங்கட், லெட்ஸ் டூ சம்திங்’ என்று சொந்த ஆர்வத்தின் பேரில் கெட்டப் மாற்றி போட்டோஷூட்டுக்கு தயாராவார். அப்படி இவரை தனிப்பட்ட முறையிலும் நிறைய போட்டோஷூட் செய்துள்ளேன். சினிமாவுக்காக எடுத்ததைவிட இப்படி போர்ட்போலியோவுக்காக எடுக்கப்பட்ட ஷாட்கள்தான் நிறைய. அவரின் வீட்டுக்குச் சென்று காஸ்ட்யூம்ஸ் பார்த்து தேர்வு செய்து, நிறைய ரெஃபரன்ஸ் தேடி, ஷூட் செய்வோம். நிறைய லொகேஷன்களில் அப்படி எடுத்து இருக்கிறோம். அதில் பாண்டிச்சேரியில் எடுத்த ஷூட் ரொம்பவே ஸ்பெஷல். 

விக்ரம்

‘ஷங்கர் சாரின் ‘ஐ’ படத்துக்காக 15 கிலோ எடை குறைத்திருக்கிறேன். இந்த லுக்கில் ஷூட் பண்ணலாமா’ என்றார். மெல்லிய டிஷர்ட், டெனிம்ஸ், கூலர்ஸ்... என்று அவரை இயல்பான லுக்கில் ஷூட் செய்தேன். இன்னும் இளமையாக, அழகாக இருந்தார். ஆனால், அவரைப்பார்க்க பாவமாகவும் பயமாகவும் இருந்தது. ‘இதுக்குமேல வெயிட் குறைக்காதீங்க’ என்றேன். சிரித்துக்கொண்டார். அந்த ஷூட்டில் எடுத்தப் படங்கள், அட்டைப் படங்களாக பல இதழ்களில் இடம்பிடித்தன.

விக்ரம்

விக்ரம், விலங்குகள், பறவைகள் வளர்ப்பதில் அலாதியான ஆர்வம் உடையவர். அவரின் செல்லக் கிளியை வைத்தும் ஷூட் செய்து இருக்கிறேன். அப்படி ஒருமுறை சத்யம் இதழுக்காக ஷூட் செய்தது நல்ல அனுபவம். ஒரு காலியான நீச்சல் குளத்தில் அருகில் அந்தக் கிளி காம்பினேஷனில் பண்ணிய போட்டோஷூட் ரொம்பவே நன்றாக வந்தது. 

விக்ரம்

20-வது ஆண்டுகளுக்கு முன் எடுத்த முதல் ஷூட்டில் எப்படி என்னை ஆச்சர்யப்படுத்தினாரோ அப்படித்தான் இன்றும் ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார். இப்படி சீயானுடனான ஒவ்வொரு போட்டோஷூட்டும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமாக அமையும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மாதிரியான மாற்றங்கள், கற்றல்கள்!

https://cinema.vikatan.com/tamil-cinema/news/121609-classic-clicks-by-gvenkatram-for-vikram-part-4.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.