Jump to content

கொலனித்துவ கால பீரங்கிகளும், யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட பீரங்கியும் – ஒரு வரலாறு


Recommended Posts

கொலனித்துவ கால பீரங்கிகளும், யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட பீரங்கியும் – ஒரு வரலாறு

 

British cannons discovered at Trincoதிருகோணமலையில் உள்ள ஒஸ்ரென்பேர்க் கோட்டையானது வாய்திறந்து பேசுமேயானால், அது தான் இழந்து நிற்கும் தனது புகழைப் பற்றி பெருமையுடன் பேசும். அதாவது இங்கு இடம்பெற்ற போர்கள் மற்றும் இங்கிருந்து சுடப்பட்ட பீரங்கிகள் (கனோன்கள்) போன்றவற்றுக்கு இந்தக் கோட்டை சாட்சியமாக உள்ளது.

இலங்கையை தமது கொலனித்துவத்தின் கீழ் வைத்திருந்த போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள் மற்றும் பிரித்தானியர்கள் தமது கொலனித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கரையோரப் பாதுகாப்பை விட்டுக்கொடுக்கவில்லை. இதற்காக பல கோட்டைகளை இவர்கள் உருவாக்கினார்கள். இங்கு வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். பீரங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

பிரித்தானியர்களால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு பீரங்கிகள் அண்மையில் திருகோணமலை வைத்தியசாலைக்கான விபத்து விடுதி ஒன்றைப் புனரமைக்கும் போது கண்டெடுக்கப்பட்டன. இவ்விரு பீரங்கிகளில் ஒன்று கண்டெடுக்கப்பட்டு ஒரு சில நாட்களின் பின்னர் மற்றைய பீரங்கி கண்டெடுக்கப்பட்டதாக திருகோணமலைக்கான தொல்பொருள் திணைக்களத்தின் உதவி இயக்குநர் A.H.A சுமணதாச தெரிவித்தார்.

‘இறுதியாகக் கண்டெடுக்கப்பட்ட பீரங்கியானது எட்டு தொன்கள் நிறை கொண்டதாகவும் 11 அடி நீளமானதாகவும் காணப்பட்டது. இது தற்போது சிறிலங்கா கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலையிலுள்ள கரையோர மற்றும் கடற்படை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.trinco-cannon

இப்பீரங்கியை சுத்தம் செய்து பாதுகாப்பதற்காக தொல்லியல் திணைக்களத்தின் இரசாயன பாதுகாப்புப் பிரிவின் வல்லுநர் குழுவிற்காகக் காத்திருக்கிறோம்’ என சுமணதாச தெரிவித்தார்.

கனோன் – ‘cannon’  ( பீரங்கி) எனப்படும் சொல்,  இலத்தீன் மற்றும் இத்தாலிய மொழிகளின் ஒரு கலப்புச் சொல்லாகவே காணப்படுகிறது. இதன் அர்த்தம் குழாய், கரும்பு, நாணல் ஆகும். வரலாற்று சான்றாதாரங்களின் படி, இப்பதமானது இலத்தீனில் துப்பாக்கி என்பதைக் குறிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டு, பின்னர் 1326ல் இத்தாலியாராலும் 1418ல் பிரித்தானியராலும் கனோன் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

கனோன் என்பது 14ம் நூற்றாண்டில் முதன் முதலாக ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டாலும்  கூட, 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இது தனக்கான உன்னதமான வடிவத்தை எடுத்துக்கொண்டது.

19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து முகவாயில் துப்பாக்கிகளை ஏற்றுகின்ற கனோன்கள் (RML) பயன்படுத்தப்பட்டன என ஓய்வுபெற்ற லெப்ரினன்ட் கொமாண்டர் சோமசிறி தேவேந்திரா தெரிவித்தார். அண்மையில் திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட கனோனும் RML வகையைச் சார்ந்தது என அவர் கூறினார்.

பிரெடெரிக் கோட்டையிலுள்ள கச்சேரி உட்பட திருகோணமலையின் பல்வேறு இடங்களிலும் RML  கனோன்கள் கண்டெடுக்கப்பட்டதாக கடற்படைத் தளபதி தெரிவித்தார். திருகோணமலையிலுள்ள ஒஸ்றென்பேர்க் றிட்ஜ்ஜில் 1980களில் கண்டெடுக்கப்பட்ட RML கனோன் தொடர்பாக திரு.தேவேந்திரா ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். சேர் வில்லியம் ஆம்ஸ்ரோங்கின் கண்டுபிடிப்பை அடுத்து RML கனோன்கள் ‘ஆம்ஸ்ரோங் பீரங்கிகள்’ எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கனோன் எக்காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டது என்கின்ற விடயம் இன்னமும் உறுதிப்படுத்தப்படாது விட்டாலும் கூட, இரசாயன பகுப்பாய்வைத் தொடர்ந்து இது பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்டது என நம்பப்படுவதாக திரு.தேவேந்திரா தெரிவித்தார்.

‘RML கனோன்கள் 1860ன் பின்னர் பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்பட்டதுடன் 1900ன் பின்னர் இவை மாற்றீடு செய்யப்பட்டன. திருகோணமலை பிரித்தானியர்களின் வசம் வீழ்ந்த பின்னரே பிரித்தானிய பீரங்கிகள் பொருத்தப்பட்டன’ என திரு.தேவேந்திரா தெரிவித்தார்.

பீரங்கியின் குழாய் வடிவப் பகுதி கூட்டிற்குள் (Chamber) முடிவடைகிறது.  பீரங்கியின் குண்டானது குழாய்க்குள் செருகப்பட்டு இதன் கூட்டடிற்குள் கொண்டு செல்லப்படுகிறது. இந்தக் கூட்டிற்குள் மருந்துத் துகள்கள் காணப்படுகின்றன. இறுதியில் மருந்துத் துகள்களைக் கொண்ட குண்டானது கனோனின் குழாய் ஊடாக வெளியில் செலுத்தப்படுகின்றது.

Cannon-Unloaded-in-trincomalee-Harbour

 திருகோணமலை துறைமுகத்தில் கப்பலில் இருந்து இறக்கப்படும் பீரங்கிகள்

கொழும்பிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் போர்த்துக்கேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கனோன் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சிங்களப் பீரங்கிகள் கூட தயாரிக்கப்பட்டன என்பது சுவாரசியமானதாகும்.

ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கி ஒன்று பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்பீரங்கியானது மிகவும் நேர்த்தியான முறையில் தயாரிக்கப்பட்டதன் மூலம் புராதன இலங்கை கைவினைஞரின் திறமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான பீரங்கிகள் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின்ட கட்டளைக்கிணங்க தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

Somasiri-devendea-with-a-replica-of-a-Cannon-1கொலனித்துவ காலத்திற்குப் பின்னர் தயாரிக்கப்பட்ட பீரங்கிகள் அனைத்திலும் பிரித்தானிய அரச இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது. ‘இந்த பீரங்கிகள் அனைத்தும் பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்டு கப்பல்களில் இங்கு கொண்டு வரப்பட்டன.

இவை கொலனித்துவத்திற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வெண்கல மற்றும் இரும்பு முலாம் பூசப்பட்ட பீரங்கிகள் போலல்லாது, இரும்பு மற்றும் உருக்கு போன்றவற்றால் தயாரிக்கப்பட்டன. இவை கோட்டைகள் மற்றும் கரையோர பாதுகாப்பிற்காகவும் கப்பல்களிலும் பொருத்தப்பட்டன’ என திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து பிரித்தானியக் கப்பல் ஒன்று பீரங்கிகளை இறக்கும் ஒளிப்படத்தைக் காண்பித்தவாறு திரு.தேவேந்திரா விளக்கினார்.

இன்று இப்பீரங்கிகள் விழாக்களுக்காகவே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. கொழும்பு வெளிச்ச வீட்டில் வைக்கப்பட்டுள்ள பீரங்கிகள் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பயன்படுத்தப்படுகின்றன. ‘இப்பீரங்கிகளுக்கு வர்ணம் தீட்டுவதானது அவற்றின் மீது பொறிக்கப்பட்டுள்ளதும் இதன் வரலாற்றை எடுத்துரைக்கின்ற சின்னங்களை மறைக்கும். இதனால் இந்த வரலாறு நிரந்தரமாகவே அழிந்து போகக்கூடும்’ என திரு.தேவேந்திரா தெரிவித்தார்.

வழிமூலம்        – Sunday times
ஆங்கிலத்தில்  – Randima Attygalle
மொழியாக்கம் – நித்தியபாரதி

http://www.puthinappalakai.net/2018/03/12/news/29725

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.