Jump to content

லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!!


Recommended Posts

  • லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!!
image2-7-618x430.jpeg

லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!!

இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இனவன்முறைகளுக்கு எதிராக லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

index-11-1.jpg

image3-7-300x225.jpegimage4-7-1-300x225.jpegindex-10-225x300.jpg

http://newuthayan.com/story/75234.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தி வந்த போது.... நண்பன் இல்லையே...

தமிழர்களுடன் அவர்கள் போராடத்தின் போது நின்று இருந்திருந்தால்.... இன்று ஒரு அலைக்கடலாக... தோளோடு தோளாக நின்று இருப்பார்களே.

இனியாவது புத்தி வரவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்ரது...அவை சரிப்படாயினம்....நாளைக்கு சீ  யுடன் சேர்ந்து எமக்கு அடிப்பினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, alvayan said:

வர்ரது...அவை சரிப்படாயினம்....நாளைக்கு சீ  யுடன் சேர்ந்து எமக்கு அடிப்பினம்..

யானை குழியில் விழும் பொது, எலியும் சிறு உதை விடுமாம்

30 வருட யுத்தத்தில்.... எலிக்கு தன் நிலை புரியாமல் ஆட்டம் போட்டு இன்று தன் இருப்புக்கே ஆபத்து என்னும் போது தவித்து தடுமாறுகின்றது..

கிழக்கில் இவர்களின் அதீத வளர்ச்சி சிங்களத்தின் கண்களை குத்துகிறது... அந்த வளர்ச்சி அப்படியே சங்கிலித் தொடராக கண்டி, மாத்தளை என வியாபிக்கின்றதே என்ற பயத்தின் முதல் நடவடிக்கை அம்பாறையில் தொடங்கி, கண்டி வரை போயிருக்கின்றது.

கிழக்கின் இனவாதி பிக்கர், சுமன தேரர் கண்டியில் நின்று தாக்குதலை ஒருங்கு படுத்தியதில் இருந்து தெரிகிறது அவர்களது திட்டமிடல்.

பல அரசுகள், சீன, பிரித்தானிய, அமெரிக்க, ஐரோப்பிய என, இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்த போதும், பக்கத்து இந்திய அரசு மௌனம் சாதிக்கிறது. காரணம் அது இந்துத்துவ அரசு.

இது, சீக்கிரம் அணைந்து போகும் நெருப்பாக தெரியவில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில், இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் – பெண்கள், குழந்தைகளும் பங்கேற்பு (படங்கள்)
இலங்கை முஸ்லிம்கள் மீதான இனவாத நடவடிக்கையை கண்டித்து, கனடாவில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது இதில் கனடாவில் வாழும் முஸ்லிம்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
கனடாவில், இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் -  பெண்கள், குழந்தைகளும் பங்கேற்பு (படங்கள்)

 

கனடாவில், இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் -  பெண்கள், குழந்தைகளும் பங்கேற்பு (படங்கள்)

கனடாவில், இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் -  பெண்கள், குழந்தைகளும் பங்கேற்பு (படங்கள்)

 

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=241482 .
.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்க்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு எண்ணுமாம் உங்களுக்கும் நியாயம் கிடைக்க வேணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும், அவரது வாயால் வரும் தமிழ் மொழி, மதங்களுக்கு அப்பால், அட நம்மாளு என்ற இன உணர்வு உண்டாக வைக்கிறது. 

பாதுகாப்பாக இருங்கள்.... அவ்வளவு தான் சொல்ல முடியம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவளவு பெரும் எங்களின் அழிவை சாட்டி அசேலம் அடித்திருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இவளவு பெரும் எங்களின் அழிவை சாட்டி அசேலம் அடித்திருக்கிறார்கள் 

அன்வர் என்று என்னுடன் ஆரம்ப காலத்தில் odd jobs செய்தவர், வெளிப்படையாக பேசுபவர் சொன்னார்... புலிகளுக்கு சாப்பாடு கொடுக்கப் போகும் போது.... ஆமி பிடிச்சி வந்தாங்க.... சுட்டாங்க... கடலுக்கு பாய்ஞ்சி... நீந்தி.... இந்திய மீன்பிடி வளத்தில ஏறி... இந்தியா போய் அங்கிருந்து இங்கே வந்தேன் என்று சொல்லி கேஸ் கொடுத்திருக்கு என்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.