Jump to content

பார்க்காதே பார்க்காதே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்காதே பார்க்காதே

புலம் பெயர்ந்து ஜேர்மனிக்கு வந்த பொழுது, “நாட்டுக்கே திரும்பி போய்விடலாமா?” என்ற நினைப்புதான் ஓங்கி நின்றது. குளிர் ஒரு காரணமாக இருந்தது என்றாலும்,குளிரில் வரும் நடுக்கத்தை விட டொச் மொழியை கேட்கும் போது ஏற்பட்ட உதறல் அதிகமாக இருந்தது.

ஜேர்மனியர்கள் கதைக்கும் வார்த்தைகளுடன்ஸ்ஸ்ஸ்என்று காற்று வரும் பொழுதெல்லாம் என்னுள் இருந்து தன்னம்பிக்கைக் காற்று தானாக வெளியேறிக் கொண்டிருக்கும்.

“என்ன பாஷை இது. தமிழுக்கு வசப்பட்ட நாக்கு டொச்சுக்கு பிரளமாட்டுதாம்என்னுடன் ஊரில் இருந்து யேர்மனிவரை கூட வந்த ரத்தினம் இப்படி என்னுடன் அடிக்கடி சலித்துக் கொண்டிருப்பான்.

ரத்தினம் என்னைவிட இரண்டு வயது இளமையானவன். அவனது தமையன் சந்திரன் என்னுடன் ஒன்றாகப் படித்தவன். நான் ஜேர்மனிக்கு வெளிக்கிடப் போகிறேன் என்று கேள்விப்பட்டு,  “தம்பியையும் உன்னோடு ஜேர்மனிக்கு கூட்டிக் கொண்டு போ மச்சான்என்று ரத்தினத்தையும் என்னுடன் சேர்த்து விட்டான்.

எங்களது பயணம் எயார் பிரான்ஸில் தொடங்கியது. பரிஸ் இல் இடைத்தங்கல். அங்கிருந்து கிழக்கு ஜேர்மனி சென்று பின்னர் ரெயின் எடுத்து மேற்கு ஜேர்மனி புகுந்து அரசியல் தஞ்சம் கேட்பதாகத் திட்டம். பயணத்தின் போது விமானத்தில் இன்னும் இரண்டு பேர் எங்களுடன் ஒட்டிக் கொண்டார்கள்

பரிஸில் இறங்கி கிழக்கு ஜேர்மனிக்கு பறப்பதற்கு விமானத்தில் ஏறுவதற்காகச்  சென்று கொண்டிருக்கும் போது, எங்கள் நான்கு பேரையும் பிரான்ஸ் காவல்துறையினர் பிடித்துக் கொண்டார்கள். முதலில் எங்களிடம் இருந்த கடவுச்சீட்டுக்களை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். பிறகு நீண்ட தூரம் எங்களை அழைத்துச் சென்றார்கள்.

“எங்கையண்ணை கூட்டிக் கொண்டு போறாங்கள்?” ஒட்டிக் கொண்டவர்களில் ஒருவன் என்னிடம் கேட்டான். திருப்பி நாட்டுக்கு அனுப்பி விடுவார்களோ என்ற பயம் அவனிடம் தெரிந்தது. அந்தப் பயம் அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட இருந்தது. நான் வாய் திறப்பதற்கும் முன்னர் ரத்தினம் முந்திக்கொண்டு கொண்டு அவனுக்கு பதில் கொடுத்தான்.

“பார்த்தியா, முன்னுக்கும் பின்னுக்கும் பொலீஸ்காரர்கள் வர, சனங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க பிரான்ஸ் எயர்போட்டிலை அழைச்சுக் கொண்டு போறாங்களே, இதுதான் இராஜ மரியாதை. இப்பிடியே திருப்பி சிறிலங்காவுக்கு  அனுப்பினாங்கள் எண்டால், லலித் அத்துலக்முதலியே நேரிலை  வந்து இதைவிட அமோகமான ஒரு பெரிய வரவேற்பு அங்கை தருவார்

என்ன நடக்கிறது என்று தெரியாமல் பயந்து கொண்டு நடந்து கொண்டிருக்கும் போது ரத்தினத்தின் அந்தப் பேச்சு சூழ்நிலையின் அழுத்தத்தை கொஞ்சம் குறைத்தது.

இறுதியாக ஒரு அறைக்குள் கொண்டு போய் விட்டார்கள். என்ன கேட்டாலும் அவர்கள் எங்களுக்காக வாயைத் திறக்கவேயில்லை. அதிலும் மறந்தும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட அவர்களிடம் இருந்து வரவேயில்லை. தங்களுக்குள் பிரெஞ்சில் கதைத்துக் கொண்டிருந்தார்கள்

எங்களை அழைத்து வந்தவர்கள் காவலுக்கு நிற்க மேலும் இரு போலீஸ்காரர்கள் உள்ளே வந்தார்கள். வந்தவர்கள் எங்களுடன் பயணித்த ஒருவனை அழைத்துச் சென்றார்கள். பதினைந்து நிமிடங்கள் போயிருக்கும். கூட்டிக் கொண்டு போனவனை கொண்டு வந்து விட்டு விட்டு மற்றவனை அழைத்துப் போனார்கள். முதலில் போய் வந்தவன் எதையோ இழந்துவிட்டவன் போல முகத்தில் கவலையோடு காணப்பட்டான்.

ரத்தினம் அவனருகில் போய் தனது பார்வையால் விசாரித்தான்

“உடுப்பெல்லாம் கழட்டிப் பார்த்தாங்கள்மிகுந்த கவலை அந்த இளைஞன் முகத்தில் தெரிந்தது.

“எதைப் பார்த்தாங்கள்?” ரத்தினம் அந்த இளைஞனை விசாரிப்பதைப் பார்த்த ஒரு பொலீஸ்காரன், இளைஞனிடமிருந்து  ரத்தினத்தை  பிரித்து வைத்தான்.

திரும்பி வந்த மற்றைய இளைஞனும் ஏறக்குறைய முதலாவது இளைஞனைப் போலவே முகத்தை வைத்திருந்தான். இப்பொழுது  எனது முறை. இருவர் இருந்த அறையில் நின்றேன். உடுப்புகள், சப்பாத்துக்களை எல்லாம் கழட்டச் சொல்லி சைகையால் காட்டினார்கள்.

அவர்கள்  முதலில் உடுப்பு, சப்பாத்துக்களை தடவி, தட்டி எல்லாம் பார்த்தார்கள். அடுத்ததாக எனது உடம்புக்கு வந்தார்கள். தலை தொட்டு உள்ளங்கால்வரை எல்லாம் ஆராய்ந்தார்கள்பிறகு குனி என்றார்கள். குனிந்தேன். அவர்களுடையடோர்ச் லைற்றின் வெளிச்சம் என்னுடைய விம்பத்தை அறைச் சுவரில் காட்டியது. மீண்டும் சைகயால் உடுப்பை போடு என்றார்கள்

எண்பதுகளில் நன்றாக பொதியிட்டு, பாகிஸ்தானில் இருந்து மலவாசலுக்குள் வைத்து ஐரோப்பிய நாடுகளுக்குப் போதைப் பொருட் கடத்தல் நடந்து கொண்டிருந்ததுதான் எங்களை விமான நிலையத்தில் தடுத்து வைத்ததும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த சோதணையும்.

இப்பொழுது ரத்தினத்தின் முறை. எதற்காக அழைத்துப் போகிறார்கள் என்பதில் அவனுக்குத் தெளிவு இருந்தது. சிரித்தபடியே அவர்களுடன் போனான். ஐந்து நிமிடங்கள் கூட ஆகி இருக்காது. போனவன் அதே சிரிப்புடன் திரும்பி வந்தான்.

“எங்களுக்கெல்லாம் பதினைந்து நிமிசங்கள் எடுத்தது. அதெப்படி உன்னை உடனேயே விட்டிட்டாங்கள்?”

“இப்பிடி ஒரு சூத்தை பிரெஞ்சுக்காரன் ஒருநாளும் கண்டிருக்க மாட்டான். வாழ்க்கையிலை இனி ஒருத்தனின்ரை சூத்தையும் பார்க்கவே மாட்டான்

இப்பொழுது ரத்தினம் நான் இருக்கும் இடத்தில் இருந்து அறுபது கிலோ மீற்றர் தூரத்தில்தான் வசிக்கிறான். எனக்கும் அவனுக்குமான தொடர்புகள் குறைந்து குறைந்து இன்று இல்லாமலேயே போய்விட்டது. ஆனால் அவனது நினைவுகள் மட்டும்  என்னுடன் இன்றும் இருக்கின்றது.

 

கவி அருணாசலம்

10.03.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

தலை தொட்டு உள்ளங்கால்வரை எல்லாம் ஆராய்ந்தார்கள்பிறகு குனி என்றார்கள். குனிந்தேன். அவர்களுடையடோர்ச் லைற்றின் வெளிச்சம் என்னுடைய விம்பத்தை அறைச் சுவரில் காட்டியது.

டென்மார்க் போடரிலை எனக்கும் என்ரை கூட்டுவளுக்கும் எட்டத்தை  எட்டத்தை குனியவிட்டு உதே பிரச்சனை நடந்தது.....அதிலை ஒரு சிங்கனை கலியாணம் கட்டிட்டியோ எண்டு கேட்டுட்டு ஓரு பொலிசு சத்தமாய் சிரிச்சான்...காரணம் இண்டுவரைக்கும் எனக்கு விளங்கேல்லை.....சம்பந்தப்பட்ட சிங்கம் இப்ப கனடாவிலை குடும்பம் குழந்தை குட்டியெண்டு சந்தோசமாய் இருக்கிறார் எண்டு கேள்விப்பட்டன்.

1 hour ago, Kavi arunasalam said:

“இப்பிடி ஒரு சூத்தை பிரெஞ்சுக்காரன் ஒருநாளும் கண்டிருக்க மாட்டான். வாழ்க்கையிலை இனி ஒருத்தனின்ரை சூத்தையும் பார்க்கவே மாட்டான்

இப்ப இரவு நேரம் எண்டபடியாலை சத்தமில்லாமல் சிரிச்சு சிரிச்சு நெஞ்செல்லாம் நோகப்புடிச்சிட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

எங்களது பயணம் எயார் பிரான்ஸில் தொடங்கியது. பரிஸ் இல் இடைத்தங்கல்.

அந்தக் காலங்களில் ஏரோபிளட் தான் மிகவும் மலிவானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல பயணக் கட்டுரை......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

அந்தக் காலங்களில் ஏரோபிளட் தான் மிகவும் மலிவானது.

உண்மை. எனது பயணத்துக்கு அப்பொழுது 16,000 ரூபாக்கள் முடிந்தது. ஏரோபிளட்டில் வந்தவர்கள் 10,000க்கு குறைவாகவே கொடுத்திருந்தார்கள்

9 hours ago, suvy said:

இது நல்ல பயணக் கட்டுரை......!  tw_blush:

இது தொடர்ந்து எழுத வைக்கும் ஒரு ஊக்க மருந்து. நன்றி Suvy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

இப்ப இரவு நேரம் எண்டபடியாலை சத்தமில்லாமல் சிரிச்சு சிரிச்சு நெஞ்செல்லாம் நோகப்புடிச்சிட்டுது.

இதற்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது குமாரசாமி. நான்தான் “பார்க்காதே பார்க்காதே” என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை குறிப்பிட்டிருந்தேனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரத்தினம் துணிஞ்ச கட்டையாக இருக்கவேண்டும். பிரெஞ்சுப் பொலிஸ் டோர்ச் அடிக்கேக்கை எதையும் பறிய விட்டாரோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ரத்தினம் துணிஞ்ச கட்டையாக இருக்கவேண்டும். பிரெஞ்சுப் பொலிஸ் டோர்ச் அடிக்கேக்கை எதையும் பறிய விட்டாரோ??

நல்ல மிளகாய்த் தூளும்....நிறைய உள்ளியும்...போட்ட கறியாய்...பயணம் வெளிக்கிட முந்தி...ஒரு வெட்டு வெட்டியிருப்பார் போல !

வெள்ளைக்காரனுக்கு...அந்தக் காலத்தில...உள்ளி...அவ்வளவு பிடிக்கிறது இல்லைத் தானே!

இப்ப...என்ன மாதிரியோ...தெரியாது!

அவுசில்....அரைவாசி வெள்ளையல் சாப்பிடுகிறது.....ஆசியன் கடைகளில தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

 

ரத்தினம் துணிஞ்ச கட்டையாக இருக்கவேண்டும். பிரெஞ்சுப் பொலிஸ் டோர்ச் அடிக்கேக்கை எதையும் பறிய விட்டாரோ

 

அப்படியும் ஏதாவது நடந்திருக்கலாம் கிருபன்

ஆனால் ரத்தினம் அதைப் பற்றி எனக்கு ஒண்டும் சொல்லவேயில்லல.?

 
20 hours ago, புங்கையூரன் said:

நல்ல மிளகாய்த் தூளும்....நிறைய உள்ளியும்...போட்ட கறியாய்...பயணம் வெளிக்கிட முந்தி...ஒரு வெட்டு வெட்டியிருப்பார் போல !

புங்கையூரான்,

கொழும்பில் இருந்து வெளிக்கிடும் போது, மருதானை புஹாரி ஹோட்டலில் இரண்டு பேரும் பிரியாணி சாப்பிட்டோம்.பிரியாணியில் இருந்த (அவித்த) முட்டை எனக்குப் பிடிக்கவில்லை. “உங்களுக்கு வேண்டமெண்டால் தாங்கோ. நான் சாப்பிடுகிறேன்”  என்று ரத்தினம் எனது கோப்பையில் இருந்த முட்டையையும் எடுத்துச் சாப்பிட்டான். மற்றும்படி நீங்கள் குறிப்பிட்டதுபோல், “பயணம் வெளிக்கிட முந்தி...ஒரு வெட்டு வெட்டியிருப்பார்என்பது நடக்கவில்லை.??

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

அப்படியும் ஏதாவது நடந்திருக்கலாம் கிருபன்

ஆனால் ரத்தினம் அதைப் பற்றி எனக்கு ஒண்டும் சொல்லவேயில்லல.?

 

புங்கையூரான்,

கொழும்பில் இருந்து வெளிக்கிடும் போது, மருதானை புஹாரி ஹோட்டலில் இரண்டு பேரும் பிரியாணி சாப்பிட்டோம்.பிரியாணியில் இருந்த (அவித்த) முட்டை எனக்குப் பிடிக்கவில்லை. “உங்களுக்கு வேண்டமெண்டால் தாங்கோ. நான் சாப்பிடுகிறேன்”  என்று ரத்தினம் எனது கோப்பையில் இருந்த முட்டையையும் எடுத்துச் சாப்பிட்டான். மற்றும்படி நீங்கள் குறிப்பிட்டதுபோல், “பயணம் வெளிக்கிட முந்தி...ஒரு வெட்டு வெட்டியிருப்பார்என்பது நடக்கவில்லை.??

நோர்மலாய் ஒரு முட்டையின்ரை விக்கனமே பெரிசு....அதிலை இரண்டு முட்டையெண்டால் சொல்லி வேலையில்லை......ரத்தினம் அண்ணைக்கு லைற் அடிச்ச பொலிசு எப்பிடியும் கொஞ்ச நேரம் தள்ளாடி தடுமாறியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/13/2018 at 9:41 PM, Kavi arunasalam said:

...கொழும்பில் இருந்து வெளிக்கிடும் போது, மருதானை புஹாரி ஹோட்டலில் இரண்டு பேரும் பிரியாணி சாப்பிட்டோம்.பிரியாணியில் இருந்த (அவித்த) முட்டை எனக்குப் பிடிக்கவில்லை. “உங்களுக்கு வேண்டமெண்டால் தாங்கோ. நான் சாப்பிடுகிறேன்”  என்று ரத்தினம் எனது கோப்பையில் இருந்த முட்டையையும் எடுத்துச் சாப்பிட்டான்...

காற்று வாங்கலாமென கொழும்பு வீதிகளில் நடந்தபோது இந்த "புஹாரி ஹோட்டல்" கண்ணில் பட்டது..

ஒருவேளை 'மின்னல்' ஐயா, இங்கே முட்டை சாப்பிட்டிருக்கலாமென தோன்றியது..!   vil-heureux.gif

சுட்டுப் போட்டேன்..!! :innocent:

 

sta.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/03/2018 at 5:56 AM, Kavi arunasalam said:

இதற்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது குமாரசாமி. நான்தான் “பார்க்காதே பார்க்காதே” என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை குறிப்பிட்டிருந்தேனே.

வாசிக்காதே வாசிக்காதே என்று போட்டிருந்தால் நாங்கள் வாசிக்காமல் விட்டிருப்போம் ....பார்க்காதே என்று போட்டபடியால் எதோ விசயம் இருக்கும் என்று பார்த்திட்டோம்....tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிக்காதே படிக்காதே என்று போடாதபடியால் நாங்களும் படித்தோம். எம் துயரங்களிலும் நகைச்சுவை காண்பது எல்லேரலும் முடியாது.நல்லதொரு அனுபவப் பதிவு.

Link to comment
Share on other sites

உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டதுக்கு நன்றி. மிக சுவார்சியமாக இருக்கின்றது. அச்சம் மிகுந்த பயணம் இருந்தாலும் அதனுள்ளே ஒரு இலகுதன்மை.

தொடர்ந்து எழுதுங்கள். மேலும் நீங்கள் ரத்தினத்துடன் உறவை ஏற்படுத்துவது பிரயோசனமாக இருக்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/03/2018 at 10:27 AM, putthan said:

வாசிக்காதே வாசிக்காதே என்று போட்டிருந்தால் நாங்கள் வாசிக்காமல் விட்டிருப்போம் .

பார்க்காமலே வாசிக்க முடியுமா புத்தன்??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.