Jump to content

மூங்கைப் பெருந்தவம்


Recommended Posts

மூங்கைப் பெருந்தவம் - வரவணை செந்தில்

ஓவியங்கள் : வேல்

 

து, பூனைக்கண்ணு பாறையின் கீழ் வந்து முடிந்த 15 அடி புதுதார்ரோடு. அதன் இறுதியில், ‘சாலை ஒப்பந்த விபரம்’ என்ற தலைப்பில் `புதுச்சின்னாம்பட்டி முதல் மயானம் வரை - 990 மீட்டர் சாலைப்பணி’ என்று குறிக்கப்பட்ட அறிவிப்புப் பலகை நடப்பட்டிருந்து. கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் உயரத்தில் இருந்தது பூனைக்கண்ணு பாறை. அதன்மீது ஏறிப் பார்த்தால் நேர் மேற்கே ராக்காச்சி கரடு தெரியும். அந்தக் கரடை ராக்காச்சியின் தலைமாடாகக்கொண்டால், பூனைக்கண்ணு பாறைதான் கால்மாடு. கால்பரப்பிக்கிடக்கும் அவளின் தனங்களாக வடக்கே ‘பூதல் நத்தம்’ கிராமமும் தெற்கே’ பீமராவ் அருந்ததியர் காலனி’யும் போதுமான இடைவெளியுடன் சற்று சமமான உயரத்தில் இருந்தன.

`காதலியே! உள்ளமெனும் காயத்தோடும்
கனத்துவரும் மூச்சோடும் கண்ணீரோடும்
வாதையுறவோ இவனைக் காதலித்தாய்?
சாதலுறவோ இவனைக் காதலித்தாய்?
புல்லைப்போல் மெலிந்த உனைக் காதல் நோயால்
புண்ணாக்கி மென்மேலும் மெலியவைக்கும்
கல்நெஞ்சக்காரனை ஏன் காதலித்தாய்?
களம்நின்ற வீரனை ஏன் காதலித்தாய்?
சுகங்காட்டும் காதலர் தோள்கள்மீது
துயில்கொள்ளும் எழில்மாதர் வாழும் மண்ணில்
முகங்கூடக் காட்டாது களத்தே வாழும்
முண்டத்தை ஏனம்மா காதலித்தாய்?
பொறு கண்ணே! போர் வாழ்வு நெடுநாள் இல்லை!
பூக்கட்டும் தமிழாட்சி! மறுநாள் உன்றன்
சிறுகாலில் விழ ஓடி வருவேன் அத்தான்!
தித்திக்கும் முத்தம் உன் செவ்வாய்க்கேதான்!’


- காசி ஆனந்தன் கவிதையை மூச்சுவிடாமல் உணர்ச்சி பொங்கப் பாடியபடி அவன் மேடையில் புகுந்து, மைக் முன்னால் நின்றுகொண்டிருக்கும் ‘டான்ஸ் காமிக் - திராவிட ரம்பை’ கரூர் பி.ஆர்.கே.விஜயவல்லியின் தாடையை ஆறுதலாக நிமிர்த்துகிறான். வேறொரு வகையில் அவனின் நுழைவு இருக்குமென தளர்வாக அமர்ந்திருக்கும் கூட்டம், உருக்கமான காதல் காட்சிகண்டு இறுக்கமாகிறது.

``யோவ் நீ பப்பூன்யா... ராஜபார்ட்டுனு நெனப்பாக்கும்’’ என்று விஜயவல்லி பகபகவெனச் சிரிக்க... கோமாளியின் வேடிக்கை புரிந்துகொண்டவுடன், மந்தைச்சனமே குலுங்கிச் சிரிக்கிறது.

``அட ஆமால்ல...’’ என்று அவன் கேனைச்சாயல் செய்து தலை சொறிய, மறுபடியும் சிரிப்பு.

64p1_1519640050.jpg

``நான் வர்றதுக்கு முன்னாடி இங்கே கடவுள் வாழ்த்துப் பாடிட்டுப் போனானே நாரதர்ப் பய... அவன் கமண்டலத்துல என்னமோ வெச்சிருந்தான். அதை ஒரு மடக்குக் குடிச்சுப்புட்டேன். அதான் டங் ஸ்லிப் ஆகிடுச்சு... பிளடி நான்சென்ஸ்... மிக்ஸிங்கே பண்ணாம வெச்சிருக்கான் கஞ்சப்பய...’’ என்று தொண்டையைக் கட்டி எம்.ஆர்.ராதா குரலில் சொல்ல... முன்வரிசையில் மட்டுமே போடப்பட்டிருந்த ஒற்றை வரிசை வயதான சேர்கள், சிரிப்பில் இளமைக்குச் சென்று மீள்கிறது.

``யோவ்... அவரை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. அவரு பெரிய முனி.’’

``சரி... நீ குனி.’’

``என்னாது...’’ விஜயவல்லி கோபமாகத் திரும்பினாள்.

``இல்லம்மா நான் பப்பூன்ல... அதான் பச்சைக்குதுர கிச்சக்குதுர தாண்டி வேடிக்கை காட்டணும்ல... அதுக்குச் சொன்னேன்...’’

வகைதொகையில்லாமல் வெடிக்கும் சிரிப்புகள் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அடங்காமலிருந்தன.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள நாடகக் கலைஞர்களில் டபுள் எம்.ஏ முடித்திருப்பது ‘குயிக் விட் மாஸ்டர் - காமிக் மேஸ்ட்ரோ’ எல்.பி பெத்தவாண்டு மட்டுமே. கடவுள் வாழ்த்துப் பாடி முடித்தவுடன் உள்ளே வரும் பெத்தவாண்டு, அலாரம் வைத்ததுபோல் சரியாக 60 நிமிடங்கள் மேடையை அமளி துமளி ஆக்கிவிட்டுப் போவார்.

``ஒரு நிமிடம் தோழர்களே... ஒரே ஒரு நிமிடம்’’ கைகளைக் குவித்து வைத்துக்கொண்டு, கொப்பி தட்டினால் எழுமே அந்த ஓசை கேட்டது.

நத்தம் பக்கத்தில் விடிய விடிய நாடகத்தைப் போட்டு முடித்துவிட்டு, திண்டுக்கல் வந்து, ஈரோடு பஸ்ஸில் ஏறி பெத்தவாண்டு, `சீன் - தாளம்’ பிரகாசம் மாஸ்டர், சிங்கம்புணரி `வெல்வெட்’ லதா மூவரும் தூங்கிக்கொண்டு இருக்கையில்தான் மேற்படிச் சத்தம் கேட்டது. மூவருக்கும் அவல்பூந்துறையில் அன்று இரவே நாடகம் இருந்தது. பெத்தவாண்டின் ஊர் ஆன் தி வேயில் இருப்பதால், அவர் மட்டும் இறங்கி ஒரு எட்டு போய் வருவதாகத் திட்டம்.

சத்தம் கேட்டு பெத்தவாண்டு கண்களைத் திறந்தார். திகுதிகுவென எரிந்தன.

``யோவ்... அங்கிட்டு மொகரையத் திருப்புய்யா... என்னய்யா ‘ரத்தகண்ணு மாயாண்டி’ கணக்கா இருக்கே?’’

அத்தனை உடல் அசதிக்கிடையிலும் ‘சீன் - தாளம்’ பிரகாசம் மேடையைப் போலவே இங்கேயும் பெத்தவாண்டைச் சீண்டினார்.

``ஏன் விஜயகாந்து மாதிரினு சொல்ல மாட்டியா?’’ என்றபடி மீண்டும் கண்களை அழுந்தத் தேய்த்துவிட்டு, பஸ்ஸின் முன் பகுதியில் சத்தம் வந்த பக்கம் பார்த்தார் பெத்தவாண்டு.

சத்தம் எழுப்பிய இளைஞனை ஜாதிகவுண்டன்பட்டி பக்கம் பார்த்ததுபோல் இருந்தது.

``யாத்ரு தம்பா, எனதாரு தொந்தரே’’ சிவப்புக்கொடி, பின்னால் உண்டியலுடன் ஓர் ஆள், கைகொள்ளா துண்டறிக்கைகள்... எனப் பார்த்தவுடன் கம்யூனிஸ்ட்கள் என்று தெரிந்தாலும், பெத்தவாண்டு வேண்டு மென்றே கிண்டலுக்காகக் கன்னடத்தில் ‘மாத்தாடி’ப் பார்த்தார். அந்த இளைஞன் இவரின் விழிகளை எதிர்கொள்ளாமலே பேசத் தொடங்கினான்.

``அருமைத் தோழர்களே, எளிய மக்களே, பாட்டாளிச் சொந்தங்களே! வேடசந்தூரின் அருகே உள்ள `சன் பார்க்’ நூற்பாலையில் மூவாயிரம் தொழிலாளிகள் வேலைசெய்கிறார்கள். இந்த பஸ்கூட அந்த வழியாகத்தான் செல்கிறது. ஏன் உங்களின் உறவினரோ, நண்பரோ, குடும்பத்தினரோகூட அதில் வேலை பார்த்துக்கொண்டிருக்கலாம். திருப்பூர், கோவை, போன்ற பகுதிகளில் பல்வேறு மில்களை நடத்திவரும் ஒரு பெரு முதலாளி மேற்படி மில்லை வாங்கிவிட்டார். இது குறித்து அங்குள்ள தொழிலாளிகளையும் சரி, தொழிற்சங்கத்தினரையும் சரி, வாங்கிய, விற்ற இருதரப்பும் கலந்து ஆலோசிக்கவில்லை. ஏற்கெனவே போனஸ், முறையான கூலி உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகள் நிலுவையில் இருக்கும் நிலையில், மில்லை எதேச்சதிகாரமாகக் கைமாற்றிவிடுவதைக் கண்டித்து பல்வேறு கேட் கூட்டங்கள் போட்டுப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கச் சொன்னோம். நிர்வாகம் அசைந்து கொடுக்காத காரணத்தால், ஸ்ட்ரைக் அறிவித்தோம். ஸ்ட்ரைக் வாசலுக்கு வெளியே நடந்துகொண்டிருந்தபோது பேச்சுவார்த்தைக்கு உள்ளே அழைத்தனர். உள்ளே போன தொழிற்சங்கத்தினரை மரியாதைக்குறைவாக நடத்தி அனுப்பினர். அதேநேரத்தில் விஷமிகளைவிட்டு மில்லுக்குள் போலி வெடிகுண்டுகளை வீசி, கலவரம் ஏற்படுத்தி, போராட்டக்காரர்களை போலீஸைவிட்டுக் கலைத்தனர். இதில், நமது தோழர்கள் எஸ்.ஜி.பாண்டியன்,

ஜி.ஆர்.கே.கணேசன் உள்ளிட்ட ஆறு பேர்மீது வெடிகுண்டு வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆகவே, வழக்கு நிதிக்காகாகவும் தொழிலாளர் போராட்டத்தில் தங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவும்... தங்களால்…’’

“என்னாதூ... போண்டா கணேசன் வெடிகுண்டு கேஸுல அரெஸ்ட்டா…’’ அந்தப் பையன் கடகடவென ஒப்பித்துக் கொண்டிருக்கும்போது பெத்தவாண்டு பெரிய சத்தத்துடன் எழுந்தார்.

அவரையும், அந்தச் சூழலையும் எப்படி எதிர்கொள்வது என்கிற குழப்பத்துடன் அந்த இளைஞர் பார்த்துக்கொண்டி ருந்தபோதே, வேகமாகப்போய் அந்த ‘யாத்ரூ, தம்பா’வைத் தாண்டி பின்னால் துண்டறிக்கையுடன் நின்றவரிடம் ஒரு நோட்டீஸை வாங்கிக்கொண்டு, 500 ரூபாய்த் தாள் ஒன்றை உண்டியலில் போட்டார்.

``இந்தா... இந்த அம்பது ரூவாயைத் தனியா வெச்சுக்க... ஜெயிலுக்குப்போய்க் கணேசனைப் பார்க்கும்போது, பெத்தவாண்டு வாங்கிக் கொடுத்தார்னு பூ மார்க் பீடி ரெண்டு கட்டு கொடுத்துரு. பெரிய கலா ரசிகன்யா அந்தாளு...’’ என்று சொல்லிவிட்டுத் துண்டறிக்கையைப் படித்தபடி சீட்டுக்குத் திரும்பினார்.
64p2_1519640069.jpg
பார்த்தாலே பாகவதர் கிராப்பும், மை பென்சில் மீசையுமாக நாடகக் கலைஞன் என்று தெரியக்கூடிய ஒருவர், இடதுசாரித் தொழிலாளர் போராட்டத்துக்கு இவ்வளவு பெரிய பங்களிப்பு செய்திருப்பதை முதன்முதலில் கண்ட அந்தத் துண்டறிக்கைத் தோழர், புரட்சிக்கான அத்தனை சாத்தியங்களும் நெருங்கிவிட்டதை உணர்ந்தார். மேலும், பெத்தவாண்டுவின் கண்களும் கீழைச் செவ்வானம்போல் சிவந்திருக்க, அதன் பார்வைகள் செம்மீன்களாகத் தோன்றி பல்வேறு புரட்சிகரக் குறியீடுகளை அவருக்கு உணர்த்தின. அடர்த்தியான நம்பிக்கையுடன் அந்த உண்டியலைக் குலுக்கும்போது எழும் நாணயங்களின் ஓசை அதிகார வர்க்கத்துக்குப் பேரிடியாகக் கேட்கும் என அவருக்குத் தெரிந்தது.

இவர்களின் உண்டியலோசைக்கிடையே டிரைவர், சீட்டிலிருந்து எழுந்து படிக்கட்டுகளின் அருகே வந்து, ``டீசல் பம்ப் லாக் ஆகிடுச்சு... 20 நிமிசம் ஆகும்ங்க...’’ என்றார்.

கீழிறங்கிய பெத்தவாண்டு பிளாக் சிகரெட்டைப் பற்றவைத்து, கிராம்பு மணக்கும் புகையைவிட்டுக் கொண்டிருந்தபோதுதான் பார்த்தார்... கையில் கன்னங்கரேல் என்ற நாய்க்குட்டியை வைத்துக் கொண்டு படியின் அருகே ஒரு பெண் நின்றிருந்தாள்.

பக்கத்தில் போய் ``இது என்ன நாய்க்குட்டிம்மா?’’ என்றபடி நாய்க்குட்டியின் பின்மண்டைத் தோலைப் பிடித்துத் தூக்கினார். ``கிர்ர்ர்....’’ என்று உறுமியது.

``முப்பது நாள்தான் இருக்கும். அதுங்காட்டியும் குட்டி உறுமுது...’’ அதை உடனே வாங்கிக் கொண்டுபோக வேண்டும் என விரும்பினார் பெத்தவாண்டு.

``உள்ளார பஸ்ஸெல்லாம் வளையும்ல... அந்தத் தண்ணி டாங்க்குக்குக் கீழே ஒரு நாயி குட்டி போட்டிருந்துச்சு. காலையில பஸ்ஸில மாட்டி, பெருசு செத்துப்போச்சு. இது அதோட குட்டி... மொத்தம் ரெண்டு குட்டி. ஆட்டோ ஸ்டாண்டு அண்ணே ஒண்ணைத் தூக்கிருச்சு. இதைப் பாரதிபுரத்துல எங்கக்கா வேலை பார்க்குற தறியில கொண்டு விடப்போறேன்...’’ என்றாள் பதினைந்து வயதிலிருந்த அந்தப் பெண் பிள்ளை.

``இந்தா... போற பக்கமெல்லாம் எதையாவது தூக்கிட்டுத் திரியாத. அதை அங்கிட்டு எங்கியாவது விட்டுட்டு வீட்டுக்குக் கெளம்பு’’ என்று அந்தப் பிள்ளையைப் போறபோக்கில் சொல்லிவிட்டு, நான்கு காலி ரேக்குகள் தாண்டி நின்ற அடுத்த பஸ்ஸை நோக்கி நடந்தான் அந்தத் துண்டறிக்கை இளைஞன். இவளின் அண்ணன்போல. கலர் ஜெராக்ஸ் மாதிரி அச்சுப் பிசகாத ஜாடை.

பெத்தவாண்டுவுக்குத் தங்கையின் நினைவு வந்தது. எல்லம்மாள் ரொம்ப நாளாக நாய் வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தாள். காலனியில் நாயே இல்லை. ஒரே ஒரு பொட்டை நாய் ‘பிளாக்கி’ இருக்கிறது. தன் தொத்தல் உடம்பைவிடப் பெரிய அளவில் உள்ள எட்டு பால்காம்புகளைக் குலுக்கிக்கொண்டு, மற்ற நாய்களைப்போல மனிதர்கள் யாருடனும் ஒட்டிக்கொள்ளாமல் திரிகிறது. அது எப்போது சினையாக இருந்தது, எப்போது ஈன்றது என்றே தெரியாது. பிளாக்கியைப் பொறுத்தவரை காலனி, புருஷன் வீடு. எங்கேயோபோய் குட்டிபோட்டு, அவை கண் திறந்ததும் விட்டுவிட்டு வந்துவிடும். யாருக்கும் வால்கூட ஆட்டியதாக நினைவில்லை. அஞ்சல் குறிப்புகளில் `பூதல் நத்தம் காலனி’ என்று குறிப்பிடப்பட்டாலும், எப்படி பீமராவ் காலனிக்கும் அந்த ஊருக்கும் சம்மந்தமில்லாமல் காலம் செல்கிறதோ, அதுபோல பிளாக்கி ஊருக்குள் போகும்போது `ச்சூ... காலனி நாய்’ என்ற ஒரு சொல்லையும் கல்லையும் வாங்கிக்கொண்டு ஓடும். ஆனால், காலனியிலோ கடித்துத் துப்பிய மாட்டெலும்பைக்கூட யாரும் அதற்குப் போட்டுப் பார்த்ததில்லை.

``எவரேனி புரோகிராமுக்கு பிலுவலன்டாகூட நுவ்வு டெய்லி எக்கடியாச்சும் போட்சேவு... இன்ட்டிக்கு நாக்கு தோடுங்க ஏமி உந்தி’’ என்று தனக்கு நாய்க்குட்டி வேண்டுமென்று கேட்கும்போதெல்லாம் எல்லம்மாள் சொல்வாள்.

அப்பாவுடன் வாழ மாட்டேன் என்று அம்மா தீர்த்துக்கொண்டு போனபின், அப்பா தன்னுடன் எல்லம்மாளைத் தூக்கிச் சென்றுவிட்டார். பத்து வருடங்களாகத் தோல் ஷாப்பில் வேலைசெய்த அப்பா ‘பொட்டுலிசம்’ வந்து செத்துப்போனார். அப்பா இறந்த பின், தங்கையைப் பெத்தவாண்டு கூட்டிவந்துவிட்டார். பன்னிரண்டாவது முடித்த எல்லம்மாள் என்ன கெஞ்சியும் மேற்கொண்டு படிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.

போன மாதம் தங்கை சொன்ன விஷயம்தான் `கண்டிப்பாக வீட்டுக்கு ஒரு நாயை எடுத்துட்டுப் போகணும்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. நான்கு வீடு தள்ளியிருக்கும் ‘ஊசிக்குண்டியான்,’ ``பெரிய பின்னும்மா... பெத்தவாண்டு சார்ஜரு கொடு... அதான் சின்ன பின்னு’’ என்று அடிக்கடி வீட்டுக்கு வருகிறானாம். ``பப்பூன் வீடேறி வந்தே டபுள் மீனிங் பேசுறியாடா?’’ என ‘சப்’ என்று அடித்தால் மறுபேச்சில்லாமல் வாங்கிக்கொள்வான். துளிகூட மானம் என்று ஒன்று இல்லாதவன். வீசி வீசி விரட்டியும், பறந்துவிட்டு மாட்டு வாலில் மீண்டும் வந்து உட்காரும் ஈ போன்ற குணம் அவனுக்கு. மனைவியும் உடன் இல்லை. ஊர்க்காரர்களிடம் பீடிக்குக்கூடத் தொன்னாந்து நிற்பான். ஏதாவது வேலை சொன்னார்கள் என்றால், ``நானே இடுப்புச் செத்தவன். நல்லாயிருந்தா என் பொண்டாட்டி கூடல்ல இருந்திருப்பா’’ என்று தன்னையே தாழ்த்தி ஊரைச் சிரிக்கவிடுவான். அவனுக்குத் தேவையெல்லாம் குடிப்பதற்குச் சாராயம். ஊரினுள் கெடாவெட்டு, நல்லது பொல்லது என்று கறி காய்ச்சினாலே போதும்... யாராவது ஒரு கிழவியை தாஜா செய்து, சட்டியைக் கையில் கொடுத்து அனுப்பிவிடுவான். பல்லைக் கெஞ்சியபடி, கால்கடுக்க நின்று அவர்கள் வாங்கி வரும் மிச்சம் மீதாறியை ஏதோ சாதித்த நினைப்புடன் சப்புக்கொட்டித் தின்பான். `ஆளில்லாதப்ப நாய் இருந்தாலாச்சும் கண்ட நாய்லாம் வீட்டுக்கு வராம தங்கைக்குத் துணையா இருக்கும். இந்தக் குட்டி நல்லதாகத் தெரிகிறது. வாங்கிக்கொண்டு போக வேண்டும்’ என்று முடிவு செய்தார்.

அந்தப் பிள்ளையிடம் ``பொரோட்டா சாப்பிட்டுக்க...’’ என்று 50 ரூபாய் கொடுத்து நாய்க்குட்டியைக் கேட்டார். ஒன்றுமே சொல்லாமல் கொடுத்துவிட்டாள். பெத்தவாண்டு வண்டியில் ஏறிச் சீட்டின் கீழிருந்த தனது பெரிய பையை நகர்த்தி, மடித்துவைக்கப்பட்டிருந்த டர்க்கி துண்டில் நாய்க்குட்டியைப் படுக்கவைத்து இரண்டு நிமிடம் நீவிக்கொடுத்தார். சத்தம் காட்டாமல் தூங்க ஆரம்பித்தது.

வண்டி வேடசந்தூர் ஆத்துமேட்டில் பெத்தவாண்டை இறக்கிவிட்டுக் கிளம்பியது.

டகம், கொப்பு, திருகு, மகரம், மகுடம், வாளி, காறை கம்பி, குதம்பை, தூக்கம், தோடு... எனச் சகல காதணிகளும் அணிந்த பேரிளம் பெண் மாதிரி பெத்தவாண்டுவின் ‘டி.வி.எஸ் 50’ அலங்காரமாக நின்றுகொண்டி ருக்கும். இரண்டு பக்கமும் பெட்டிகள். அதில் `எல்.பி.பி’ என்கிற இனிஷியல். இரண்டு பார் வைத்த ஹேண்டில்... அதில் வண்ண வயர்கள். இரண்டு வீல்களில் ஒவ்வொரு ஃபோக்ஸ் கம்பியிலும் கட்டப்பட்ட பிளாஸ்டிக் குஞ்சம். பிரேக் அடித்தால் பாட்டுப் பாடும் ஹாரன், இரண்டு வீல்களிலும் சைனா லைட்கள்... என வண்டி முழு ஜோடிப்பில் கரகாட்டப் பெண்போல இருக்கும். அந்தப் பக்கத்து மக்கள் எல்லோருக்குமே அந்த வண்டி பரிச்சயமாகி இருந்தது. அதிலும், பேருந்து கடக்கும் நொடிகளில்கூடக் கணித்துவிடும்படி அந்த வண்டி ஆத்துமேட்டில் வண்டிக்கடை களின் அருகே நிற்கும்.

``காடு களைந்தும் கழனி அமைத்தும் கதறிடும், உழவனின் கண்ணீர் துடைக்க, ஓடி வருகிறான் உதயசூரியன்...’’ பட்டப்பகலிலேயே ஹனிபா பாடிக் கொண்டிருந்தார். மீட்டிங் நடப்பதற்கான கூறு எதுவும் தென்படவில்லை. பின்னர்தான் நினைவுக்கு வந்தது... அன்று கலைஞர் பிறந்தநாள். ரேடியோ செட்டுச் சத்தத்துக்கு நாய்க்குட்டி ``மீச்... மீச்...’’ என்று கத்திக்கொண்டே பையிலிருந்து குதிக்கப் பார்த்தது. உள்ளே தள்ளிவிட்டு, பையைத் தூக்கிக்கொண்டு பஸ் ஸ்டாப்பின் அருகிலிருந்த டாஸ்மாக்குக்குள் நுழைந்தார்.

பெத்தவாண்டுக்கு அவர்கள் சுற்றத்தில் யாருக்கும் இல்லாத ‘அசால்ட்டு’தனம் இயற்கையிலே உண்டு. அத்தகைய அசால்ட்டுடன், அறுக்கக் கொண்டுபோகும் வாத்தைப் பிடித்திருப்பது போல் `மோர்பியஸ் புளு’ பிராந்தி ஃபுல் பாட்டிலின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு பாரினுள் போய் அமர்ந்தார். ஒரு நாடகத்துக்கு 6,000 ரூபாய் சம்பளம். ஒரு மணி நேரம் பஃபூன் டான்ஸ். நாடகம் தொடங்கியபின் இடையில் ஓரிரு சீன்களில் மட்டும் வந்துவிட்டுப் போவார். அவ்வளவுதான். ஆனால், பெத்தவாண்டு பெயர்போட்ட நாடக நோட்டீஸ்கள் பெரிதும் மதிக்கப்பட்டன.

``நாயக்கரு நல்லவரா, கெட்டவரா?’’ மேடையில் நுழைந்ததும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார்.

``அவருக்கென்ன தங்கத்துக்கு... அட்வான்ஸ் கொடுத்துட்டு அப்புராணியா போயிட்டாரு. மித்த ஆளுங்க ஒரு இளிப்பாவது இளிப்பாய்ங்க...’’ என்றபடி மேடையின் கீழே பக்கவாட்டில் உட்கார்ந்திருக்கும் மனிதரைப் பார்த்து டான்ஸ் காமிக் பெண் கிண்டலாக வணக்கம் வைப்பார்.

``யெம்மா... நான் ஊர் நாயக்கரைச் சொல்லலை. அவரும் நல்லவருதான். எனக்குக்கூட நாடகம் முடிஞ்சவுடனே வெடக்கோழியும் மூத்திரம் நாறாத குவார்ட்டரும் கொடுத்துவிடுறேனு சொல்லியிருக்காரு. ஆனா, நான் கேட்டது நம்ம நாயக்கரை, எங்க சாமி பெரியாரை...’’

பக்திமயமான கோயில் திருவிழாவில் கரன்ட் பாக்ஸில் கைவைப்பதுபோல இப்படித்தான் எதையாது பேசிவைப்பார்.

64p3_1519640126.jpg

``எதுத்தாப்டி மொத வரிசையில புளு சேலையில சேர்ல உக்கார்ந்திருக்கிறது யாரு தெரியுமா... எங்க மாமன் மக. இப்ப இந்த ஊரு பிரசிடெண்டு. மாதாரிக இப்படி ஊருக்கு முன்ன நடுநாயகமா உக்கார யாரு காரணம்? இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்த அவருதான் காரணம். அப்படி உக்காரவுடுறதுக்கு ஊர்ப் பெரிய மனுசங்களுக்குப் பெரிய மனசு வர்றதுக்கும் யார் காரணம்? எல்லாம் அந்த நாயக்கருதானே... அப்ப அவரு நல்லவருதானே...’’ வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது மாதிரி சொன்தும், யாரோ இரண்டு இளவட்டம் உணர்ச்சிவசப்பட்டுக் கைதட்ட, அதில் ஊரும் சேர்ந்துகொள்ளும். இதுவே பட்டிவீரன்பட்டி மாதிரியான ஊருக்குப்போனால் அங்கே ``ஆதித்தனார், டபுள்யூ.பி.ஏ.சௌந்திரபாண்டியன்...’’ என அந்தந்த ஊருக்குத் தொடர்பான தலைவர்களின் புகழைப் பேசி உள்ளே நேக்காக அரசியலைக் கலந்துவிடுவார்.

றுவெயிலில் முதல் ரவுண்டு. ஜிவ்வென்று ஏறியது. போனை எடுத்தார்.

``கண்ணு, உனக்கு ஒரு நா குட்டி புடிச்சிருக்கேன்...’’

``அல்சேஷனாணா?’’

``ம்... ஆதிசேஷன். நல்ல குட்டிதான். உறுத்தா இருந்துச்சு வாங்கிட்டு வந்தேன்.’’

``கடுவனா, பொட்டையா?’’

``ஏன் சாமி, கட்டிக்கவா போறே... கடுவன் குட்டிதான்.’’

``பேரு வைக்கிறதுக்குக் கேட்டேன்ணா... கடுவன்னா ‘பூச்சி’னு வைக்கலாமா?’’

``ஆமா இவ பெரிய ‘பொம்மக்கா’. `பூச்சி’னு பேருவெச்சு சங்கிலியைக் கட்டி, கூட்டிட்டு அலையப் போறவ’’ என்று சிரித்தார்.

வீடு போவதற்குள் பத்து முறையாவது மிஸ்டு கால் கொடுத்திருப்பாள் எல்லம்மாள். வீட்டினுள் நுழைந்து குட்டியை இறக்கிவிட்டார். ரயில்வே கரிக்கட்டி மாதிரி அட்டைக் கறுப்பாக இருந்த அந்தக் குட்டிநாயை யாருக்குத்தான் பிடிக்காது. அள்ளிக்கொண்டாள் எல்லம்மாள்.  

விரலை நாய்க்குட்டியின் வாயில் வைத்தாள். காம்பென்று நினைத்துச் சூப்பிப் பார்த்தது. பின்னர் அல்லை வாங்கிக் கடவாயில் வைத்துக் கடிக்கத் தொடங்கியது.

``ம்... கடி பழக்காத தாயீ, ஊர்வம்பை வாங்கிப்புடும்...’’ என்றபடி சாப்பிட உட்கார்ந்தார்.

``ஏண்ணே... நம்ம ஊர்லதான் ஏற்கெனவே பிளாக்கி இருக்குல்ல... இதுக்கு ‘பிளாக்கன்’னு பேருவைக்கவா?’’

``ஏன்... அதுக்குக் கருப்பன்னு வைக்கலாமே.... சரி வேணாம் விடு... ‘கரியன்’னு வைய்யி நல்லாத்தான் இருக்கு.”

வரிசைக்கு எட்டு என எதிரெதிரே காலனியில் இருந்த பதினாறு வீடுகளுக்கும் கரியனைக் எடுத்துக்கொண்டுபோய்க் காட்டிவிட்டு வந்துவிட்டாள் எல்லம்மாள். ஒரே நாளில் காலனிக்கே அறிமுகமானான் கரியன். கீரிப்பூச்சி மருந்து, தடுப்பூசி எல்லாம் போட்டு வளர்க்க ஆரம்பித்தாள். பெத்தவாண்டு ஊரூராகப் போகவும் வரவுமாக இருந்தார். எல்லம்மாளுக்கு இருபத்தைந்து பவுன்களைச் சேர்த்து வைத்திருந்தார். வங்கியிலும் பணம் கொஞ்சம் கிடந்தது.

ரியன் வந்த பதினைந்தாவது நாள் ஊசிக்குண்டியான் எங்கிருந்தோ ஒரு நாய்க்குட்டியைப் போதையோடு போதையாகத் தூக்கி வந்தான். தொத்தலாக, பரிதாபமாக இருந்த அந்த நாய்க்குட்டிக்கு ‘ராஜா’ என்று பெயரெல்லாம் வேறு வைத்தான். பார்ப்போரிடமெல்லாம் வாலைக் குழைத்துக்கொண்டு போனதால், அதை ‘சலுப்பை’ என்றே கூப்பிடத் தொடங்கினார்கள். ஆனால், வளர வளர கரியனின் விளையாட்டுத் தோழனாகியது சலுப்பை.  

கோம்பை நாய் என்றால் நெஞ்சு அகலமாயிருக்கும். முன்காலை ஊன்றி, பின்காலை மடக்கி உட்கார்ந்திருக்கும்போது இரும்புச் சேரை மடக்கிவைத்ததுபோல அகலஞ்சகலமாக இருக்கும் நெஞ்சுப்பகுதி. ஆனால், கோம்பை ரகத்தில் உயரம் அவ்வளவாக இருக்காது. ஆனால், ராஜபாளையத்து நாயின் உயரத்தைவிட கொஞ்சம் கூடுதலாகவே இருந்தான் கரியன். நெஞ்சும் முகமும் கோம்பையைப்போல் இருந்தது. வயிறு கன்றிப்போய், சிப்பிப்பாறை நாய்களை மாதிரி உள்ளொடுங்கி இருந்தது. இன்ன நாய் என்று சொல்ல முடியாமல், அதேநேரம் புது ஆள் யாராவது பார்த்தால், விசுக்கென்று பயப்படும் உருவத்தில் கரியன் இருந்தான். மாட்டுக்கொழுப்பைச் சட்டியில் வணக்கி அதில் சோறு கலந்து ஒருநாள், வாரைக் காய்ச்சி உருக்கி எடுத்த பன்றி நெய்யை உப்பில்லாத சோற்றில் போட்டுப் பிரட்டி ஒருநாள், மீன் வறுத்த எண்ணெயைச் சோற்றில் பிசறி ஒருநாள்... எனப் பல வருஷம் கழித்துப் பிறந்த பிள்ளையைப் பார்த்துப் பார்த்து வளர்ப்பதுபோல் கரியனை வளர்த்தாள் எல்லம்மாள். கடுவன் நாயாக இருந்தாலும் சரி, பெட்டையாக இருந்தாலும் சரி, எட்டாவது மாதத்தில் பருவத்துக்கு வந்துவிடும். கரியன் குரல் இறுக்கமாகி, உறுமல் குரைப்பாக மாறத் தொடங்கியது. நன்றாகக் குரைக்க வேண்டி, குழவிகள் வளர்ந்து பறந்து போய்விட்ட வெறும் குழவிக்கூடுகளாக மரத்தில் தேடி எடுத்து வந்து அம்மியில் வைத்து நெறுநெறுவென நுணுக்கி, அதைப் பச்சைமுட்டையில் கலந்து கொடுத்தாள்.

‘பவ்’ என்ற குரைப்பில் புதியவர்களின் ஈரக்குலை ஆடியது. ஊருக்கும் காலனிக்கும் நடுமேற்கே உள்ள ராக்காச்சி பாறையில் ஏறி உட்கார்ந்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தான் கரியன். சலுப்பைப் பாறை வரை துணைக்குப் போய்விட்டு, பின்னர் காலனிக்கு ஓடி வந்துவிடும். கரியனுக்குக் காலனி என்பது தன் ஆளுகைப் பகுதி. பாறையில் ஏறி உட்கார்ந்து, காலனியைப் பார்த்தபடி இருப்பான். வீட்டு வாசலில் அடுப்புகூட்ட, பின்னால் வேலிப் பக்கமாக எல்லம்மாள் வந்து சுள்ளி எடுப்பதைப் பார்த்தவுடன்தான், அய்யாரு பாறையில் இருந்து கிளம்புவார். இது இல்லாமல் யாராவது புதிய ஆள் காலனிக்குள் நுழைந்தால் போச்சு, சும்மா சூறைக்காத்து கணக்காக வந்து நிற்பான். தெரியாத ஆள் என்றால், `பவ் பவ்’தான். எதிர்ப்பையும் மறுப்பையும்கூடப் பணிந்தே தெரிவித்து வந்த அந்தக் காலனி உருவான காலத்தில் இருந்து, இப்படி ஓர் ஆக்ரோஷமான குரலைப் பிறர் கேட்டதில்லை. பெத்தவாண்டுகூட நைச்சியமாகவோ, வேடிக்கை பேசியோதான் ஊர்க்காரர்களின் கருத்தை மறுப்பான்.

ஆனால், எல்லம்மாளின் ``ச்சூ... பேசாம இரு...’’ என்ற ஓர் அதட்டுக்குக் கரியன் அப்படியே அடங்கிக்கொள்வான்.

பெத்தவாண்டுக்குக்கூடச் சமயங்களில் கடுங்காப்பியும் வெறும் தேயிலைத் தண்ணியுமே கிடைத்தன. ஆனால், ஒருநாள் விட்டு ஒருநாள் கால்கடுக்க நடந்து ஊருக்குள்ளிருக்கும் சொசைட்டிக்குப்போய் எருமைப்பாலை வாங்கி, ‘கண்ணு பட்டுவிடும்’ என்று முந்தானையில் மறைத்துக் கொண்டுவந்து கரியனுக்கு ஊற்றினாள். அப்படி சொசைட்டிக்குப் போகும்போது கரியன் எல்லமாளைவிட்டு அஞ்சாறு எட்டுப் பின்னாடி தள்ளியே அமைதியாக நடந்து வருவான். ஊரில் இருக்கும் நாய்களின் வால், தன்னறியாமல் கால்களுக்கு இடையே போகும். கொஞ்சம் துணிச்சலான நாய்கள், இருக்கும் சொற்பத் தெருக்களில் இரண்டைத் தாண்டிப்போய் முகம் காட்டாமல் குரைத்துக் கரியனின் வருகைக்குத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தன.

சலுப்பையைச் சில மாதங்களுக்குப் பிறகு ஊசிக்குண்டி யான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டான். சலுப்பையும் அவனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. எப்போதாவது அவன் உருவம் தென்பட்டால், மீனாட்சியம்மன் கோயிலில் மயில்தோகை விசுறுவதுபோல் சாஸ்திரத்துக்கு மெதுவாக இரண்டு ஆட்டு வாலை ஆட்டியது. ஆனால், எல்லம்மாள் கரியனை வளர்க்க, கரியனோ சலுப்பையை வளர்த்தான். தனக்குப்போட்ட சாப்பாட்டை முக்கால்வாசி சாப்பிட்டுவிட்டுச் சலுப்பைக்கென்று கொஞ்சம் மீதம்வைத்தான். சலுப்பைக்கோ அதுவே போதுமானதாக இருந்தது. மேலும், பொறுக்கித் தின்பதில் சலுப்பைக்கு இன்பமாகவும் இருந்தது. கரியனோ யார் கொடுத்தாலும் சாப்பிடாமல் கெத்தாகவே இருந்தான். காலேஜுக்குப்போகும் பசங்கள் கரியனுடன் பழக விரும்பி முட்டை மணக்கும் கேக்குகளைக்கூட முழுதாகப் போட்டுப் பார்த்தார்கள். குனிந்து நுகர்ந்து பார்த்துவிட்டுச் சட்டை செய்யாமல் போய்விடுவான். கரியன், சலுப்பைக்குத் தன் சோற்றைப் பகிர்வதை எல்லம்மாள், கண்டுபிடித்துவிட்டாள். ஆனால், ஒன்றும் சொல்வதில்லை. ஆயினும், சலுப்பைக்குத் தன் கையால் சோறு போட அவள் விரும்பவில்லை. அதைப் பார்த்தால் ஊசிக்குண்டி யான் ஏதாவது சொல்வான் என நினைத்தாள்.

``நாயா... கண்டுகுட்டியா பெத்தவாண்டு, நீ வளக்குறது...’’ என ஒருநாள் அட்வான்ஸ் கொடுக்க வந்த தென்னம்பட்டி பிரசிடென்ட் வாயைப் பொளந்து கேட்கவும். அவர் போனவுடனே கரியனுக்குச் சுத்திப்போட்டாள் எல்லம்மாள். கரியன் மற்ற நாய்களைப்போல எங்கு போனாலும் பின்னாடியே தொன்னையாட்டம் வந்து சங்கடத்தை ஏற்படுத்துவதில்லை. ‘வெளியே போறேன்... வீட்டுலேயே இரு’ என்று சொல்லிவிட்டால் போதும்... பிட்டுக்கூட நகராமல் அங்கேயே இருப்பான்.

ர்க்காரர்கள் ராக்காச்சி மேட்டுக்கு அந்தப் பக்கம் உள்ள தோட்டத்து வீடுகளுக்குப் போகவும், குறுக்கு வழியால் மெயின் ரோட்டுக்குப் போகவும் மட்டுமே காலனிக்குள் வந்தனர். அப்படி வந்தவர்கள் கரியனைக் கண்டு மிரண்டனர். புதியவர்களைக் கண்டால் ‘வாளுயுர்த்திக் களம் புகும் சண்டமாருத சாகசக்காரனைப் போல்’ வாலை நிமிர்த்திக்கொண்டு ``உர்ர்ர்ர்...’’ என்று கரியன் வெளியிடும் உருமலில் எதிர்படுபவரின் உயிர்போய் வந்தது. குரைத்தாலோ இதயமே நின்று துடித்தது.

தொண்டூழியத்தின் காலம் முடிந்து விட்டது. நினைத்த மாதிரி ஏவ முடியாது. காலனிக்குள்ளும் பன்னாட்டு பிராண்டுகள் நுழைந்துவிட்டன. ஜீன்ஸும் சுடிதாரும் எப்போதாவது போட்டதிலிருந்து மாறி, பாறைமேட்டிலும், ஓடைப்பால சுவற்றிலும் நாளும் துவைத்துக் காய்ந்தபடியியேருக்கும் உடைகளாகின. ‘உட்காரும் இடத்தில்’ சாயம் போயிருந்தாலும், பெண்கள் நைட்டியிலேயே இருந்தனர். இவை எல்லாவற்றையும்விடச் சுத்து வட்டாரத்தில் இல்லாத அளவுக்கு முரட்டு நாய்கள்கூட வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் எல்லோரும் சொன்ன சொல்லுக்கு ஓடி வந்த, கும்பிட்டு நின்ற இனிமையான கடந்த காலங்களைப் பூதல் நத்தத்தின் ஊர்த்திண்ணைகள் மாலை வேளைகளில் பகிர்ந்துகொண்டன.

``அவய்ங்க வளக்கறதைவிட மொரட்டு நாய் ஒண்ணு, எங்க அம்மாவோட அப்பன் வச்சிருந்தாரு. கொடகனாத்து மேட்டுல அவரு புல்லட்டு வண்டி ஏறும்போதே இங்க காத வெடச்சிக்கும். மலுச்சின்னு தரையில இருந்து பத்தடி ஓட்டுமேல தாவி மோட்டெலியைப் புடிச்சிப்புடும். மாமரத்துப்பட்டி வலையருக வேட்டைக்கு இந்தப் பக்கம் கிராஸாகும்போதெல்லாம், ‘சாமி, இந்த நாயா... சித்த கொடுங்க எங்க பொட்ட நாய்கட்டவிட்டு ரெண்டு ஈத்தெடுத்துட்டுத் தாரோம்மினு கெஞ்சா கெஞ்சுவாங்க.’ கழுத்துல வாரைக்கட்டி சங்கிலியைப் புடிச்சுகிட்டுப்போக அதுக்குன்னே ஒரு பண்ணைக்காரனும் இருந்தான். ஒரு நா பாட்டனாரு நாயோட நிற்கிறப்ப பண்ணைக்காரன் வந்திருக்கான். நாய் வாலை ஆட்டியிருக்கு. அப்பவே வாலை இழுத்துவெச்சு நறுக்கிப்புட்டாராம். தெக்கோரம் முனியப்பன் கோவிலுல குதிரைக்குக் கீழ அத்தசோடு நாயி செலை, அந்த நாயைக் கணக்கு வச்சுத்தான் செஞ்சது. இப்ப என்னடான்னா நாயை விலைக்கு வாங்கி எவனெவனோ வளர்க்குறாய்ங்க...’’ பொன்னுச்சாமி கவலையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

பெத்தவாண்டின் வீடு இருந்த வரிசையின் பின்புறம் வானம் பார்த்த காடு. வெங்கக்கற்கள் பாவியபடி கிடக்கும். அதில் மழை பெய்தால் உளுந்தோ, கேப்பையோ காட்டு வெள்ளாமைக்கென தூவிவிட்டுப் போவார்கள். அதன் மேவோரம் ராக்காச்சி கரடு. இவர்கள் இருந்த வீட்டு வரிசையின் பின், நாட்டுக்கருவ வேலியும் கற்றாழையும் ஓர் ஆள் மட்டத்துக்குச் சுவரைப்போல் வளர்ந்து நின்றன.

64p4_1519640103.jpg

ஊர்க்கார இளசுகள் இரவுகளில் பெண்கள் கொல்லைக்கு ஒதுங்கும் பக்கம் பைக்கில் வந்தால், வேண்டுமென்றே லைட்டை அணைத்து வந்து அவர்களின் அருகே வரும்போது படீரென்று ஒளிரவிட்டுக் கெக்கலித்துப் போவார்கள். கூசிப்போய், சங்கடப்பட்டுச் சட்டென்று எழுந்து தலை கவிழ்த்தி நிற்பார்கள் பெண்கள். மறுநாள் பஸ்களிலோ, சந்தைகளிலோ பார்க்க நேர்ந்தால் சாடை பேசி உக்கிப்போக வைப்பார்கள். இந்த வேலையில், சாதாரண டி.வி.எஸ் எக்ஸெல் முதல் ஹோண்டா ஷைன் வரை எந்த வேறுபாடும் இல்லை.

ஆனாலும், கவர்மென்ட் காசு கொடுக்கும் வரைக்கும் கக்கூஸ் கட்ட ஒருவனுக்கும் உறைக்கவில்லை. பெருமைக்கு இரண்டு டிகிரியைப் பேருக்குப் பின்னால் போட்டுக் கொண்டு, கோமாளிக்கூத்துக்கட்டும் பெத்தவாண்டுக்குக்கூட வயசுக்கு வந்த தங்கைக்கு `பேண்டு மோள’ கக்கூஸ் வேண்டுமென்ற நினைப்பில்லை.

அன்று அப்படித்தான் தூறிக்கொண்டு இருந்தது. மசங்கும்பொழுது. எழவு சொல்லப் போய்விட்டு ஊருக்குக் காலனி வழியாக வரும் ரோட்டில், வந்துகொண்டிருந்த பசங்களின் கண்களில் ரோட்டோரத்தில் யாரோ ‘உட்காந்திருப்பது’ தெரிந்தது. வண்டிச் சத்தம் கேட்டு, சுதாரித்து எழுந்து, சீலையைக் கீழே இறங்கும் முன்பு லைட்டைப் போடும் எண்ணத்தில், முறுக்கி வந்து நெருங்கும்போது விளைக்கைப் போட்டார்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தது கரியன். வானளந்த கருப்புசாமி எழுந்து நிற்பதுபோல் விளக்கைப் போட்டதும் வெளிச்சத்தை எதிர்க்கொள்ள எழுந்தான். ``பொவ்...’’ என்று அவன் குரைத்த ஒற்றைக் குரைப்பில், அடித்திருந்த பாடாவதி ‘ஹனி டே’ பிராந்திப் போதை நொடியில் இறங்கிவிட்டது இருவருக்கும். வண்டி வந்த வேகத்துக்கு நேராகப் போக வடக்கேயும் தெற்கேயுமாக ஆளுக்கொரு பக்கம் விழுந்து எழுந்தனர்.

காலனியிலிருந்து திடுதிடுமென ஆள்கள் ஓடி வந்து தூக்கிவிட்டனர்.

``என்னய்யா நாய் வளத்து ஏவுறீங்களா...’’ சில்லு மூக்கு பேந்து சட்டையெல்லாம் ரத்தமாக நின்றவனைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டிருந்த இரண்டாவமவன் கேட்டான்.

``அந்த நாய் தேவையில்லாமா குலைக்காதுங்க...’’ என்றான் ஊசிக்குண்டியான். பைக்கில் ஏறி உட்கார்ந்து பட்டனைத் தொட்டான். ஸ்டார்ட் ஆனது, ஊர் நோக்கிப் போனார்கள். விழுந்து எழுந்து போனதைவிட, ஊசிக்குண்டியான் அதிசயமாக நியாயம் பேசியதுதான் அன்றைக்கு அங்கு பேச்சாக இருந்தது.

மறுநாள் மாலை. திடும் திடுமென வேட்டு அதிரத் தொடங்கின. ஊரில் விழுந்த எழவில் பொணத்தைத் தூக்குகிறார்கள் என்று அந்த வெடிப்புகள் சொல்லின. வடக்கம்பட்டி வேட்டு ஒவ்வொன்றும் பத்து மைலுக்கு அங்கிட்டும் ஒலித்தன.

பதினைந்து பைக்குகள் இருக்கும். மொத்தமாகக் காலனிக்குள் நுழைந்தன. கர்லா கட்டை சுற்றுவதற்குக் கையைத் தூக்கியதுபோல அரிவாள் ஏந்திய கையைத் தூக்கிய கருப்பசாமி பொம்மை ஒன்று காலனி தொடங்கும் இடத்தில் சாய்ந்திருக்கும். அத்தனை வண்டிகளும் அங்கே நின்றன. இருபது இருபத்தைந்து பேர்கள் இறங்கி வந்தார்கள். வந்தவர்களில் கையில் தடிவைத்திருந்த இளசுகள் காலனி வீடுகளின் பின்னால் போய்த் துழாவத் தொடங்கினார்கள்.

வீடுகளிலிருந்து ஆண்களும் பெண்களும் ஏதோ பிரச்னை என்று புரிந்து, இருண்ட முகத்துடன் வெளிவரத் தொடங்கினார்கள். ஊர்க்கூட்டத்தில் வாத்தியார் வேலைக்குப் போகும் நகரத்து முகம்கொண்ட ஒருவன் ``நாகராஜு, இங்கே வா...’’ என்று ஊசிக்குண்டியானைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டான்.

கரியன் நேற்று குரைத்ததுதான் பிரச்னை என்று புரிய ஆரம்பித்தது காலனி மக்களுக்கு. பெத்தவாண்டும் கலைந்த தலையும் தூக்கமுமாக எழுந்து வந்து நின்றான். அவனுக்கு முதல்நாள் கதை தெரியாது.எல்லம்மாளுக்குச் சின்னப்பயல்கள் கையில் தடியுடன் தன் நாயைத் தேடுவது கண்டு விம்மிக்கொண்டு வந்தது. அந்த இளம் வாத்தியாருக்கு அருகில்போய் லேசாகச் சிரித்த முகமாக ``சொல்லுங்க சார்...’’ என்றான் ஊசிக்குண்டியான்.

`பொளேர்’ என்று விழுந்தது அறை.

``பிச்சைக்காரத் தாயளி... கட்டிங் மசுரு ஓசியில வாங்குறதுக்கு நாலு மணி நேரம் நிக்கிற நீயெல்லாம் நேத்து பயலுககிட்ட நாயம் பேசி அனுப்பியிருக்க...’’ என்று மீண்டும் ஓர் அறை கொடுத்தான்.

எங்கிருந்தோ கூட்டத்துக்குள் வந்த சலுப்பை, ஊசிக்குண்டியானை அடித்தவனைப் பார்த்து ``வள்... வள்’’ என்று குரைத்துக்கொண்டு நின்றது. அதன் உடலையும் சைஸையும் பார்த்துச் சிரித்தபடி ஒருவன் உதைத்தான். அவனை நோக்கிக் கடிக்கப் பாய்வதாகப் போக்குக்காட்டி மீண்டும் குரைத்தது.

நின்றிருந்த ஒருவன் கைலிக்குள் வைத்திருந்த அரிவாளால் அதன் நடுமுதுகில் ஒரு வெட்டு போட்டான். ``வீச்...’’ என்ற சத்தத்துடன் இரண்டு துண்டாகி விழுந்தது சலுப்பை.

எல்லம்மாளுக்கு நைட்டியோடு முத்திரம் முட்டிக் கால்களுக்கிடையே வழிந்தது. அப்படியே சுவரோடு ஒட்டியபடி வீட்டின் பின்னுக்குப் போனாள். இதயம் அதிர்வது அவள் காதுக்கே கேட்டதுபோல் உணர்ந்தாள்.

பெத்தவாண்டு கையெடுத்துக் கும்பிட்டு, இனி நாயைக் கட்டி வைப்பதாகக் கெஞ்சுவதும் சலுப்பையின் நன்றியைக் கண்கொண்டு பார்த்துவிட்ட நாகராஜூ, ஆற்றாமையோடு வாயைக் கோணிக்கொண்டு் தேம்புவதும் கரைந்துகொண்டிருக்கும் சித்திரம்போல அவளின் நினைக்குள் அதிர்ந்தது.
கொல்லைப் பக்காமாக நின்று விம்மிக்கொண்டி ருந்தாள் எல்லம்மாள். தடதடக்கும் இதயத்தின் துடிப்பையும் கண்முன்னே துண்டாகி விழுந்த அப்பாவி உயிர் கொடுத்த அச்சத்தையும் மீறி மனதுக்குள் தோன்றியது. `கரியன் எங்கே..?’

சலுப்பையின் “வீச்...” கேட்டுவிட்டதுபோல. ராக்காச்சி ஏவிவிட்ட `சண்டிக்கருப்பு’ மாதிரி, கரும்புயல்போலத் தாண்டுகாலில் காலனி நோக்கி ராக்காச்சி கரட்டிலிருந்து பறந்து வந்துகொண்டிருந்தான் கரியன். கையில் பிடித்து எறிந்த வாணம்போல ஓடிவந்த வேகத்தில் வேலிக்கு அந்தப் பக்கமிருந்து பத்தடி உயரத்துக்குப் பாய்ந்தான் கரியன்.

எப்படித்தான் அந்தச் சின்னச் சிறுக்கிக்கு இவ்வளவு வெலம் வந்ததோ, ‘கூடைவைத்துச் சிட்டுக்குருவியைப் பிடிப்பதுபோல்’ அம்பாகத் தாவி அந்தப் பக்கமிருந்து பாய்ந்த கரியனை இரு கைகளாலும் கட்டிப்பிடித்து கொல்லையில் உருண்டாள்.

திமிறிய அவனின் வாயை ஒரு கையால் இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். ``ம்ம்ம்ம்ம்....’’ என்ற மெல்லிய உறுமல் அவனிடமிருந்து வந்தது.

``சாமி... நீ எங்களுக்கு வேணுஞ்சாமி. நீ இப்ப போனா கொன்னேபுடுவாங்க சாமி. நீ சண்டை போட்டியானா நல்லாத்தான் இருக்கும். ஆனா, நீ உயிரோட இருக்கிறதுதான் சாமி... அவங்க செஞ்சதுக்குப் பதிலா இருக்கும். வாயில இருந்து கையை எடுக்கிறேன் கொலைச்சிப்புடாத சாமி...’’ என்று சொன்னபடி அதன் வாயை இறுக்கிப் பிடித்திருந்த கையை எடுத்தாள் எல்லம்மாள். என்ன புரிந்ததோ மெலிதாக உறுமியபடி அமைதியாக இருந்தான் கரியன்.

அவனைக் கட்டிப்பிடித்தபடி எவ்வளவு நேரம் படுத்திருந்தாள் எனத் தெரியவில்லை. பெத்தவாண்டு வந்து ``மூத்திரம் அடிக்கிற எடத்துலயா கண்ணு படுத்திருக்க... எந்திரிச்சு நாலு செம்பு ஊத்திக்கிட்டு வா...’’ என்று உசுப்பிவிட்டான்.

காலையில் எல்லம்மாள் எழுந்து பார்த்தாள். எப்போதோ வாங்கிவைத்திருந்த வார்ப் பட்டையைக் கரியனின் கழுத்தில் கட்டி, அதில் சங்கிலியைப் பிணைத்து க்  கட்டிவைத்திருந்தான் பெத்தவாண்டு.

``கன்னிவாடியில மதுரை வீரன் நாடகம் இருக்கு கண்ணு. சங்கத்து வேலை கொஞ்சம் இருக்கு. திண்டுக்கல்லுக்குப் போயிட்டு அப்படியே நாடகத்துக்குப் போறேன். நாளைக்குக் காலையில வந்திருவேன். கரியனப் பாத்துக்க...’’ என்றபடி வண்டியைக் கிளப்பினான்.

நம்பினால் நம்புங்கள், அதன் பிறகு பேயனும் பெரியனுமாகிய அந்தக் கரியன் எப்போதும், எதற்காகவும் குரைக்கவேயில்லை.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கதா"நாய்"யகனின் கதை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு உருவகக்கதை போல இருந்தது , வாசித்து முடித்ததும் இக்கதையை எமது போராட்டத்தினுடன் மனம் ஒப்பிட்டு பார்த்தது , அத்துடன் மார்டின் விகிரமசிஙகவின் அடிமைகள் கதை போலவும் இருந்த்தது அக்கதையில் மாடு வைத்திருப்பவர் அந்த ஊர்மக்களின் அடிமை, மாடு அவனது அடிமை , அதே போல் இக்கதையில் இவ்வூர் மக்கள் யாரோ சில உயர் வர்க்கத்தினடிமைகள் நாய் இவர்களது அடிமை, தனது எயமானர்களுக்காக குலைப்பதையேநிறுத்திவிடுகிறது.நன்றி நவீனன் அண்ணா கதையை இணைத்தமைக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.