Jump to content

ஒழுக்கம் ஒரு சிக்கலான விஷயம்: அமுதா சுரேஷ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்கம் ஒரு சிக்கலான விஷயம்: அமுதா சுரேஷ்

அமுதா சுரேஷ்

amudha-suresh.jpg?w=150&h=136 அமுதா சுரேஷ்

நான் அறிந்தப் பெண்மணியொருவர் கணவர் விடாது கொடுமைப்படுத்துகிறார் என்றும், எத்தனை முறை காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், தம் பெண்குழந்தைகளுக்காக மறைந்து வாழ தலைப்பட்டதைப் பகிர்ந்துக்கொண்டார், அதுவும் காவல்துறையில் ஒருவர் “யார்தான் குடிக்கல, அடிக்கல, புருஷன் இல்லாம வாழ்ந்துடுவியா நீ?, வேற யாராச்சையும் பார்த்துகிட்டியா?” என்று கேவலப்படுத்தியதால் மனம் நொந்தததையும் பகிர்ந்துக்கொண்டார்!

நேற்று ஒரு பெண், வாட்ஸ் அப்பில் தன் கணவர் தன்னையும் தன் ஆறு வயது மகனையும் கொடுமைப்படுத்துவதை பகிர்ந்துக்கொண்டு தற்கொலையும் செய்துக்கொண்டார் என்ற செய்தியையும், இன்று அந்தக் காணொளியையும் காண நேர்ந்தது, தன் பிள்ளைக்காக வாழ வேண்டும் என்றும், யாராவது தம்மை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார், தன் கைபேசியைக் கொடுத்து உதவியவரும், அந்தக் காணொளியைக் கண்டவர்களும் உதவும் முன் வாழ்க்கையை முடித்தும் கொண்டார், கணவனை காவல்துறை கைது செய்திருக்கிறது, பிள்ளை பெண்ணின் தாயிடம் அடைக்கலம் ஆகியிருக்கலாம்!

இரண்டிலும் நாட்டில் நிகழும் அவலம் பின்வருமாறு வெளிப்படுகிறது;
1. குடியால் கெடும் குடிகள்
2. ஆண்களுக்கு வாக்கலாத்து வாங்கும், கலாச்சாரக் காவலர்களாக காவல்துறையில் இருக்கும் அதிகாரிகள்
3. “கள்ளக்காதல்” என்ற பதத்தில் பெண்கள் மீது கட்டவிழ்க்கப்படும் மனரீதியான வன்முறை
4. இயலாமையும் தற்கொலைகளும், கொலைகளும்
5. மனச்சிதைவுக்கு உள்ளாகும் இளைய தலைமுறை, பெருகும் ஆதரவற்றப் பிள்ளைகளின் எண்ணிக்கை.

குடியைப் பற்றி சொல்லுவதற்கு ஏதுமில்லா அளவு உலகம் சொல்லிவிட்டது, ஆட்சியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை குடி பரவி இருக்கிறது, குடிகாரர்களிடம், குடியை வளர்ப்பவர்களிடம், குடியால் ஏற்படும் வன்முறைகளுக்கு எந்தத் தீர்வும் கிடைத்துவிடப்போவதில்லை, நாட்டில் நடக்கும் பெரும்பாலான வாகன விபத்துக்களும் குடியால் (?!) என்று பதிவாகி, பின்பு குற்றம் செய்தவர்கள் வெளியே எளிதாய் வர ஏதுவாகிறது!

இந்தத் தற்கொலைகளைப் பற்றி என்ன சொல்வது, தற்கொலை கோழைத்தனம் என்று எளிதாய் சொல்லிக்கடந்துவிடலாம், சம்பந்தப்பட்டவர்களின் மனநிலையும் சூழ்நிலையும் முற்றிலும் உடைந்துப்போகும்போதே தற்கொலைகள் நிகழ்கின்றன, இந்தச் சூழ்நிலை கொஞ்சமேனும் மாறினால் மனநிலையும் மாறும் தானே? குடியால் ஏற்பட்ட ஒரு வன்முறைச் சூழலை ஒரு பெண் எப்படிக் கடப்பது? ஒன்று ஆடவன் குடியை விடவேண்டும் இல்லை இந்தச் சமூகம் பெண்ணின் மணவிடுதலைக்கு ஒரு அச்சுறுத்தல் இல்லா சூழ்நிலையை உருவாக்கவேண்டும், இரண்டுமே சாத்தியமில்லை என்றால் பெண்கள் சுயசிந்தனையுடன், தற்கொலைச் செய்துக்கொள்ளும் நேரத்தில் இந்தச் சமூகத்தைப்புறந்தள்ளி வாழ்ந்தால் என்ன என்று சிந்தித்தாலே மற்ற மாற்றாங்களும் தானாய் வந்துவிடும், அதுவும் ஒரு மூன்றாம் உலகப்போர்தான்!

தற்கொலையைத் தவிர்க்க நினைக்கும பெண்கள் ஓடிவிட்டால், “அவள் யாருடனோ ஓடிவிட்டாள்” என்பதாகவே பழிச்சொல் சுமத்தப்படுகிறது, சிலர் மாற்றுக்காதலால் ஓடினாலும், வாணலியில் இருந்து நெருப்பில் விழுந்தக் கதையாக அதுவும் மாறி, அப்போதும் பெண்கள் தற்கொலைச் செய்துக்கொள்கிறார்கள், அந்தக் தற்கொலைக்குக் காரணம் இன்னொரு ஆணுடனான தோல்வி என்பதைவிட, ஏற்கனவே பழிச்சொல் சுமத்திய சமூகம், “உடல் அரிப்புக்காக” சென்றவளுக்கு இதுதான் கிடைக்கும் என்று மீண்டும் ஒரு ஏளனச்சொல் வந்துவிடுமே என்று பதைக்கிறார்கள், அதுவே அவர்களின் முடிவுக்கும் காரணமாகவிடுகிறது!

சிலவேளைகளில் விட்டில் பூச்சிகளாய் பெண்கள் தகுதியில்லாத, தகாத மாற்றுக்காதலில் விழும்போது, அது பிள்ளைகளின் மீது வன்முறையாய், கொலையாய் மாறிவிடுகிறது! சிலரைத் தவிர பெரும்பாலான பெண்களின், ஆண்களின் மாற்றுக்காதல் எல்லாம் காமம் தீர்ந்ததும் பல்லிளித்துவிடுகிறது, பல ஆண்களின் மாற்றுக்காதல் என்பதெல்லாம் இன்னொரு உடலின் தேவைக்காக என்பதாகவே அமைந்துவிடும் சமூக மனநிலையே உள்ளது, ஒருவன்/ஒருத்தி பிடிக்கவில்லையென்றால் மணவிலக்கு பெற்று பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் சமூகச்சூழலும், மனதைரியமும் வாய்ப்பதில்லை, கணவனை உதறிவிட மனைவி துணிந்தால் அவளை கூர்மையாகவும், மனைவியை விடுத்து கணவன் அகன்றால் அவனை சாதாரணமாகவும் உலகம் விமர்சனம் செய்கிறது! அதுவும் ஆண்களுக்கு சாதகமான சூழலை அமைத்துத்தருகிறது!

குடும்ப வன்முறையென்பது பெண்களுக்கு மட்டும்தானா என்றால், இல்லை, அது ஆண்களுக்கும் இருக்கிறது, கணவனின் வயிற்றுக்கும், மனதுக்கும் இதமளிக்காத பெண்கள் கணவனை தம் கைக்குள் பொம்மையாக வைத்திருக்கும் நிலையையும், அவன் பெற்றவரை பிரித்து, வெறும் மண்டையாட்டும் ஆட்டைப்போல், தகாத சொற்களால் வசைப்பொழிந்து ஆட்டுவிப்பவர்களும் உண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் நில வழக்கு சம்பந்தமாக சென்றிருந்தப்போது, விவாகரத்து வழக்கு முடிந்த வெளியே வந்தவரை அவரின் மனைவி பாய்ந்து வந்து செருப்பால் அடித்தும், காதுக்கூசும் வண்ணம் தடித்தச்சொற்களால் வசைப்பாடியும் கொண்டிருந்தார், அத்தனை அடிகளையும், வசைகளையும் ஒருவித அழுத்தத்துடன் உடல் விறைப்புடன் ஏற்று கணவர் எங்கோ பார்த்தபடி நின்றிருந்தார், பெண் காவலர்கள் வந்து அந்தப்பெண்ணை இழுத்துச்சென்றனர், ஓடிவந்த ஒரு முதியப்பெண்மணி, “இந்த வாயாலதான் உன் தலையில நீயே மண்ணை வாரிப்போட்டுகிட்டே, இன்னுமா நீ திருந்தல?” என்று அவரை இழுத்துச்சென்றார். எல்லா இடங்களிலும் குடிகார கணவர்களிடம் பெண்கள் அடிவாங்கும்போது, ஆறடிக்கும் உயரான ஒரு ஆணை, ஐந்தடிக்கும் குறைவான ஒரு பெண் அத்தனை ஆக்ரோஷமாக அடித்ததும், தகாத சொற்களால் அர்ச்சனை செய்ததும், யார் மீதான பரிதாபத்தையும் விட ஒரு வேடிக்கை மனநிலையே எல்லோருக்கும் ஏற்படுத்தியது!

படித்தவர், படிக்காதவர் என்ற வரைமுறை இல்லாமல், வாழ்க்கையின் முடிவு எல்லாம், பெண்களின்/ஆண்களின் மன உறுதியையும் பொருளாதாரச் சுதந்திரத்தையும், பிள்ளைகளின் நலத்தையும், தெளிந்த அறிவையும் கொண்டே அமைகிறது!

தெளிந்த அறிவுக்கொண்டவர்கள் ஓடிப்போக மாட்டார்கள், மறுமணம் செய்துக்கொள்ள மாட்டார்கள் என்றும், ஒடிப்போனவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்கள் என்றும் எதையும் நாம் அறுதியிட்டுக் கூறிவிடமுடியாது, அதுபோல ஓடிப்போனவர்கள்/காணாமல் போனவர்கள் எல்லாம் ஒழுக்கம் பிறழ்ந்தவர்கள் என்றும் நிச்சயம் சொல்ல முடியாது, பதினெட்டு வயதுக்கு மேல் பெண்கள் காணாமல் போனால் இந்தச் சட்டமும் சமூகமும் அவர்களை “எவனுடனோ ஓடிப்போனவள்” என்றே கருதி வழக்கை முடித்துக்கொள்கிறது, முதற்பத்தியில் கூறியது போல உண்மையில் முப்பதுகளில் தன் உழைப்பை மட்டுமே நம்பி குழந்தைகளுக்காக தனியே வாழும் பெண்களும் இருக்கிறார்கள்! சகித்துக்கொண்டு துணையுடன் வாழ்பவர்களை, மாற்றுக்காதலால் மணம் முறித்து வேறு துணையுடன் வாழ்பவர்களை விட ஆபத்தான ஒரு கூட்டம் இருக்கிறது, அது துணையுடன் வாழ்ந்தாலும், மேலே கூறிய வகைகளைக்கேலி செய்து, பிறர் ஒழுக்கத்தை எப்போதும் எள்ளல் செய்து, தம்மை ஒழுக்கத்தின் பிரதிநிதியாக காட்டிக்கொண்டு மனதளவில் ஒப்புமைப் படுத்திக்கொண்டு, பெருமூச்செறிந்து கொண்டிருக்கும்!

பல ஆண்டுகளுக்கு முன்பு, உடன் பணிபுரிந்த பெண்ணொருவர் (இப்போது மத்திய அரசுப்பதவியில் இருக்கிறார்) எப்போதும் தன் காதல் கணவரை பற்றி அவரின் அருமைப்பெருமைகளைப் பற்றி அளவளாவிக்கொண்டிருப்பார், “ஆகா எத்தனை அருமையான ஜோடி, எத்தனை அருமையான காதல்”, என்று எல்லோரும் புகழ்ந்திருக்கிறோம், ஒருநாள் அந்தப்பெண் வழியில் தன் முன்னாள் காதலரை கண்டிருக்கிறார், அவர் தன் மனைவியுடன் நல்ல வசதியான நிலையில் இருப்பதை அறிந்துக்கொண்டார், அவருடன் மீண்டும் பேச ஆரம்பித்தவர், அவர் வேற்று மதத்தைச் சேர்ந்தவராய் இருந்ததால், தாம் அவர் காதலை நிராகரித்துவிட்டதாகவும், அது தான் செய்த பெரிய தவறென்றும் புலம்ப ஆரம்பித்தார், நடுத்தரமான தம் குடும்பச்சூழலும், முன்னாள் காதலிரின் செல்வச்செழிப்பும் அதுவரை அவர் கொண்டாடி வந்த கணவரின் அன்பை ஒன்றும் இல்லை என்று சொல்லச்செய்தது, “யூஸ்லெஸ் பெல்லோ” என்று பிற்பாடு அவர் தன் கணவனைப்பற்றி பேச ஆரம்பித்தார், பூனைக்கு யார் மணிக்கட்டுவது என்ற குழப்பத்தில் எல்லோரும் சலம்பிக்கொண்டிருக்க நானே ஒருநாள் அன்பை காசு பணம் ஜெயிப்பது போல, காசு பணத்தை அன்பும் ஜெயிக்கும் என்று எனக்குத்தெரிந்த அளவில் கூற, பேசுவதை குறைத்துக்கொண்டார்!

ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த மன இடைவெளியை, பாதுகாப்பற்ற, வாழ்க்கைக் சுதந்திரம் இல்லாத இந்தக்குடிகார தேசத்தை மாற்றாத வரை, ஒழுக்கத்தை ஆணுக்கும் என்று அமைக்காத வரை, மனப்பாடக் கல்வித்துறையில் சீர் செய்யாத வரை, விரும்பாத ஒருவரை வற்புறுத்திக் காதல் செய்வதும், திருமணத்திற்கு பின் வாழ்க்கையைச்சிதைப்பதும், விலகிச்செல்லும் சுதந்திரம் மறுப்பதும், இங்கே வழக்குகளை மட்டுமே அதிகரிக்கும்!

கொலைகள், தற்கொலைகள், பிள்ளைகளுக்கான மனஅழுத்தம், உயிர்பறிப்புகள், சமூக குற்றங்கள், விவாகரத்துக்கள் எல்லாம் எண்ணிக்கையில் ஏறிக்கொண்டேபோகும்!

ஒழுக்கம் ஒரு சிக்கலான விஷயமாகிக்கொண்டிருக்கிறது, வேறு என்னதான் செய்வது என்றால், “வாழ்வதை, நம்பிக்கையுடன் வாழ்வதை, பிற உயிர்க்கொலை செய்யாமல் வாழ்வதை மட்டும் ஆணோ, பெண்ணோ குழந்தைகளின் மனதில் விதைத்து, ஒர் நிமிர்வான வருங்காலத்தைச் சாத்தியப்படுத்துங்கள், போதும்!”

 

https://thetimestamil.com/2018/03/03/ஒழுக்கம்-ஒரு-சிக்கலான-வி/

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான ஒரு பதிவு....பகிர்வுக்கு நன்றி கிருபன்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய வாழ்வியல் சூழலுக்குத் தேவையான விடயம். பகிர்வுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பிறர் வாழ்க்கையைக் கண்மூடித்தனமாக விமர்சிப்பதை விடுத்து, அவரவர் வாழ்க்கையே அவர்களுக்கான நியாயத்தைப் பெரும்பாலும் அளிக்கிறது எனும் புரிதல் சமூகத்திற்கு அவசியமான ஒன்று. நல்ல பகிர்வு, கிருபன் ! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.