Jump to content

ஸ்ரீதேவியின் மரணம் – அழகு – இளமை – அறுவைச் சிகிச்சை – பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் – அமலா பேசுகிறார்..


Recommended Posts

ஸ்ரீதேவியின் மரணம் – அழகு – இளமை –  அறுவைச் சிகிச்சை – பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் – அமலா பேசுகிறார்.. 

பெண்ணிடம் மட்டும் உங்களுக்கு எப்போது திருமணம், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், சமைப்பீர்களா என்று கேட்க வேண்டும்
நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் பல தளங்களில் விவாதிக்கப்பட்டது. அப்போது அழகாய் இருப்பதற்காக அவர் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாகவும் அவரின் மரணத்திற்கு அதுவும் காரணம் என்றும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடிகை அமலா, சமூக ஊடகத்தில், முதுமை தொடர்பாக பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் குறித்து எழுதி இருந்தார்.
அமலா

 

என்றும் இளமையாக இருக்க வேண்டும்… முதுமையே வரக்கூடாது என்பது பிரபலங்கள் மட்டும் சந்திக்கும் பிரச்சனை அல்ல, சாமான்ய பெண்களும் அத்தகைய அழுத்தங்களைதான் சந்திக்கிறார்கள் என்று அமலா தெரிவித்தார். நான் பல தளங்களில், துறைகளில் பணிபுரியும் பலரை கடந்து வந்திருக்கிறேன். அவர்களுடன் உரையாடும் போது தெளிவாக தெரிகிறது. இப்போதெல்லாம் தோற்றம் மிக மிக முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது என்கிறார் அமலா.

 

ஏன் இந்த அழுத்தம்?

அமலா  

பிரபலங்கள் சந்திக்கும் அழுத்தங்கள் குறித்து பேசிய அவர், “என் அனுபவத்திலிருந்தே கூறுகிறேன். நான் எங்காவது வெளியே சென்றால், அவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி, ‘என்ன கறுத்துவீட்டீகள்? என்ன பூசிவிட்டீர்கள்? என்பதுதான். இதை அவர்கள் சாதாரணமாக சொல்லிவிடுகிறார்கள். ஆனால், அது எத்தகைய அழுத்தங்களை ஏற்படுத்தும். காலம் நகர நகர ஒருவரின் உருவமும் அவரது வயதிற்கு ஏற்றார் போல மாறும். இது இயல்பான ஒன்று. எப்படி ஒருவர் காலத்திற்கும் ஒரே தோற்றத்தில் இருக்க முடியும்?” என்கிறார்.

ஆரோக்கியம்

“ஆரோக்கியத்துடனும், நல்ல உடல் கட்டுடனும் இருப்பது அவசியம்தான். ஆனால், அது நீங்கள் இந்த வடிவத்தில்தான் இருக்க வேண்டும் என்று பொருளாகாது. எழும் போது உற்சாகத்துடன் இருப்பது, சோர்வாக இருக்கும் போது சரியான நேரத்தில் உறங்க செல்வது அவசியம். இதன் மூலமாகதான் நமது வயதை எதிர்கொள்ள முடியும்.” என்கிறார்.

குடும்பத்துடன் அமலாபடத்தின் 

“தொலைக்காட்சி நேர்காணலுக்காக வரும் ஊடகவியலாளர்கள், என்னிடம் நீங்கள் நாகர்ஜூனாவுக்காக என்ன சமைத்து கொடுப்பீர்கள் என்று கேட்கிறார்கள். நான் எங்கள் வீட்டு சமையல் கலைஞர் அதனை பார்த்துக் கொள்வார் என்று சொன்னால் அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். நான் வேறு என்ன சொல்வது? உரையாடுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. சமூக பிரச்சனைகள் குறித்து பேசலாம். ஏன் பெண்ணிடம் மட்டும் உங்களுக்கு எப்போது திருமணம், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், சமைப்பீர்களா என்று கேட்க வேண்டும்.” என்கிறார்.

கலையும் கூட

ஒரு திரைப்பட கலைஞரிடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறித்து பேசிய போது, “சினிமா கவர்ச்சியான தொழில் என்ற பார்வை மட்டும் இங்கு உள்ளது. இது ஒரு கலை வடிவமும் கூட. நல்ல கதை, நடிப்புடன் கூடிய திரைப்படத்தைதான் இங்கு மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். கட்டுகோப்பாக உடலை வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு நடிகரின் கடமைதான். ஆனால், அதற்காக எப்போதும் தோற்றத்தை குறித்து கவலை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிலர் பிறக்கும் போதே பேரழகுடன் பிறப்பார்கள். சிலருக்கு தங்களை அழகாக காட்டிக் கொள்ள நேரம் செலவிட  வேண்டி இருக்கும். நாம் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறோமா என்பதுதான் முக்கியம்” என்கிறார்.

அமலா  

மேலும் அவர், “நாம் நம் தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் நம்முடைய விருப்பத்தின்படி வாழ்ந்தால், வாழ்க்கை மிக சுவாரஸ்யமாக இருக்கும்.” என்கிறார்.

“திரைத்துறை நல்விளைவுகளுக்காக மெனக்கட வேண்டும். ஆனால், தன்னை தற்காத்துக் கொள்ள, அதற்கே பல சவால்கள் உள்ளன. சினிமா குறித்த பாடம், சினிமாவின் எதிர்காலத்தை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும்.” என்கிறார்.

உரையாடலின் முடிவில் அவர் இவ்வாறாக சொன்னார், “பெண்கள் அனைத்து கற்பிதங்களையும் உடைத்து முன் வர வேண்டும். சக பெண்களுக்காக பேச வேண்டும், போராட வேண்டும். தோற்ற பொலிவை கடந்து எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.” என்றார்.

பத்மா மீனாட்சி பிபிசி தெலுங்கு..

படத்தின் காப்புரிமைAKKINENIAMALA

http://globaltamilnews.net/2018/70023/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை🙏🥰...........................
    • 😔 ம்ம்ம்ம் குதிரையை குளம் வரை கூட்டிப்போகலாம், நீரை அதுதான் குடிக்க வேண்டும்.
    • நியூயோர்க் பங்கு சந்தை வெள்ளி 4 மணிக்கு மூட, சில options, swaps நடந்தேறிய பின், திங்கள் 8 EST க்கு முதல் எதாவது எதிர்வினை காட்டப்படலாம் என்கிறனர் சிலர். மீள நேற்று நான் எழுதியபோது சரிய தொடங்கிய எண்ணை 82 இல் தரித்து நிற்கிறது. சந்தை தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை என நினைத்தால் 76 க்கு வந்திருக்கும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.