Jump to content

Recommended Posts

கண்ணன் - சிறுகதை

 
 

சிறுகதை: ஷான் கருப்பசாமி, ஓவியங்கள்: ஸ்யாம்

 

லாரி விரைந்து கொண்டிருந்தது. பரமசிவம் வெளியே தலையை நீட்டி புளிச்சென்று வெற்றிலை எச்சிலைத் துப்பினான். அது காற்றில் சாரலாகி மறைந்தது. இருபது வருடங்களாக லாரி ஓட்டுகிறான். இந்தியாவின் எல்லா மூலைகளுக்கும் எல்லாவிதமான சரக்குகளையும் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறான். காதை மறைத்துக் கட்டியிருந்த உருமாலைக் கட்டு குளிருக்குக் கதகதப்பாக இருந்தது. நாக்பூரிலிருந்து கிளம்பி ஒரு மணி நேரம்தான் ஆகியிருந்தது.

p46a_1519739071.jpg

இன்னும் பிலாஸ்பூர் வரை செல்லவேண்டியிருந்தது. பீடி கையிருப்பு வேறு குறைவாக இருந்ததால் இன்னொரு பீடியைப் பற்ற வைக்கும் யோசனையைக் கைவிட்டான். தவிர அவனுக்கு இன்னொரு முக்கியமான வேலை இருந்தது. ஆளரவமற்ற இடம் ஒன்றைத் தேடிப் பிடிக்க வேண்டும். அதற்காகவே தேசிய நெடுஞ்சாலையை விட்டு இவ்வளவு விலகி லாரியை ஓட்டிக்கொண்டிருந்தான். கண்ணில் கடைசி வாகனம் தென்பட்டு அரை மணிநேரம் இருக்கும்.

பக்கத்தில் நல்ல தூக்கத்தில் இருந்த கண்ணனை ஓரக்கண்ணால் பார்த்தான். முப்பது வயதுக்கு மேல் இருக்கும். களையான கறுப்பு நிறம். ஐந்து நாள்கள் முன்பாக அவனைப் பார்த்த போது லாரி புக்கிங் ஆபீஸ் வாசலில் குத்த வைத்து அமர்ந்திருந்தான். தாடியும் மீசையும் புதர் போல் மண்டியிருந்தன. தலை சிக்கடைந்து கிடந்தது. அவ்வப்போது தலையைச் சொறிந்துகொண்டிருந்தான்.

“எந்திரிச்சுப் போடா.. யாவாரம் பண்ற எடத்துல வந்து...”

பரமசிவம் அவனை விரட்டத் தொடங்கிய போது செந்தாமரை இடைமறித்தான். அவன் அங்கே புக்கிங் ஏஜன்ட்.

“அட தொரத்திப் போடாத... எங்கியாவது ஓடீட்டான்னா எழுவத்தஞ்சாயிரம் நீதாங் குடுக்கோணும்... பாத்துக்க..”

p46b_1519739090.jpg

பரமசிவத்துக்கு உடனே புரிந்தது. இது ஒன்றும் புதிதல்ல. மோட்டார் தொழிலில் நடப்பதுதான். இப்படியான நிலைமையில் இருப்பவர்களை லாரிகளில் ஏற்றிச் சென்று காட்டுப் பகுதிகளிலோ கண்காணாத இடங்களிலோ இறக்கிவிட்டு வரவேண்டும். கணிசமான தொகை கிடைக்கும். லாரி முதலாளியும் ஏஜன்ட்டும் டிரைவரும் பிரித்துக்கொள்வார்கள். பரமசிவம் இதுவரை அப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டதில்லை. அது அவன் மனதுக்கு ஒப்பவில்லை. சிலர் கேட்டபோது மறுத்திருக்கிறான். செந்தாமரை எதற்கும் தயங்காத ஆள். எனவே இந்த மாதிரி வேலைகள் அவனைத் தேடி வரும்.

“யாரோ சித்தப்பங்காரன்னு கூட்டீட்டு வந்தான். நாந்தான் கிருஷ்ணபரமாத்மான்னு சொல்லிட்டுத் திரியறானாமா... இத்தனை நாள் அம்மாகாரி எப்பிடியோ கூட வெச்சுப் பாத்திருக்கறா... போன மாசம் அவளும் போய்ச் சேந்துட்டாளாமா.... நீயா நானான்னு சண்ட போட்டுட்டு சொந்தக்காரங்க எல்லாம் கைக்காசப் போட்டுக் கொண்டாந்து உட்டுட்டுப் போயிட்டானுங்க...”

“பாத்தா சாதுவாத்தான இருக்கறான்...”

“அப்பப்ப வெறி வந்து ஆடுவானாம்.. ஒரு மாமங்காரனை வெறகுக் கட்டைல அடிச்சு மண்டையக் கிழிச்சுப் போட்டானாமா... குறுக்க போன அத்தைகாரிக்கும் அடி... ரெண்டு பேரும் ஆஸ்பத்திரியில... போலீஸ்ல கேசு குடுத்தாலும் நிக்காதில்ல.. அதுனாலதான் ஏற்பாட்டுக்கு வந்தாங்க....”

பரமசிவம் யோசனையாக அவனைப் பார்த்தான். பார்த்தால் அப்படி ஆபத்தானவனாகத் தெரியவில்லை. பூனைபோல் இருந்தான். ஒரு மஞ்சள் பையை இறுகப் பிடித்தபடி அமர்ந்திருந்தான். உள்ளே நீளமான குச்சி போல் ஏதோ இருந்தது. ஏதோ முணுமுணுத்தபடி இருந்தான். இவனைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தான்.

“செரி, உனக்கெதுக்கு அதெல்லாம்... நீதான் உத்தமனாச்சே.. இதெல்லாம் பண்ண மாட்டே... லாரி செட்டுல நிக்குது. எடுத்துட்டு லோடு அடிச்சுட்டு வா.. மொதல்ல நாக்பூர் அப்பறம் பிலாஸ்பூர்.. ரிட்டன் அங்க இருந்தே சரக்கு வருது...”

சாவியை எடுத்துக் கொடுத்தான் செந்தாமரை. வாங்கிக்கொண்டு திரும்பியவன் மனதில் ஒரு போராட்டம். பரமசிவனுக்கு மூன்று தங்கைகள். அப்பா அவனுடைய சிறு வயதிலேயே இறந்துவிட்டார். முதலிரண்டு தங்கைகளுக்கும் இழுத்துப்பிடித்துத் திருமணம் செய்தாகிவிட்டது. மூன்றாவது தங்கையின் திருமணம் தள்ளிப் போயிருந்தது. இடையில் தனது  திருமணத்தைப் பற்றியெல்லாம் யோசிக்கவே நேரமில்லை.  இப்போதுதான் ஒருவழியாக மூன்றாவது தங்கைக்கு வரன் அமைந்திருந்தது. கடன் வாங்க இயலும் இடங்களிலெல்லாம் முன்பே வாங்கியாகிவிட்டது. அம்மாவுக்கும் வர வர உடம்பு முடிவதில்லை. நிறைய மருந்து மாத்திரை செலவுகளும். சற்றுத் தொலைவு நடந்தவன் அப்படியே திரும்பினான். செந்தாமரை டீயை ஊதி ஊதிக் குடித்துக் கொண்டிருந்தான்.

“நான் வேணா ஏத்தீட்டுப் போவட்டுமா” என்றான் அவனிடம் தயக்கமாக.

“என்னத்த ஏத்தீட்டுப் போறே.. ” என்றான் செந்தாமரை குழப்பமாக.

“அதா அவனத்தான்...” என்று பார்வையால் சுட்டினான் பரமசிவம்.

“இதென்றா அதிசயமா இருக்குது... நீதாம் பண்ண மாட்டயே இதெல்லாம்...”

பரமசிவம் சில விநாடிகள் தயங்கிவிட்டுச் சொன்னான்.

“கடசியாளுக்குக் கல்யாணம் வெச்சிருக்குது... கொஞ்சம் நெறயாவே கையக் கடிக்குது... கெளம்பறப்பக் கூட அம்மாகிட்ட ஒரே சண்டை...உங்கிட்ட கேக்கலாம்னுதான் இருந்தேன்... இந்த இருவத்தஞ்சாயிரம் கெடைச்சா வெச்சு சமாளிச்சுப்போடலாம்.”

“அட என்னப்பா... நான் கணேசங்கிட்ட வேற சொல்லிப்போட்டனே...” என்றான் செந்தாமரை போலி ஏமாற்றத்தோடு.

பரமசிவம் அமைதியாக நின்றான். செந்தாமரை பலமாக யோசிப்பதுபோல் பாவித்துவிட்டுத் தொடர்ந்தான்.

“செரி, நீயுந் தெரிஞ்ச ஆளாப் போயிட்ட... நான் ஒண்ணு பண்றேன்... கணேசங்கிட்ட ஒரு அஞ்சாயரத்தைக் குடுத்து சமாளிச்சுக்கறேன்... உனக்கு இரவதாயிரம்... பழக்கமில்லாத ஆளு.. பாத்து செரியாப் பண்ணிருவியா?”

பரமசிவத்துக்கு அந்த ஐந்தாயிரத்தைச் செந்தாமரைதான் வைத்துக் கொள்வான் என்று தெரியும். ஆனாலும் தலையாட்டினான். இருபதாயிரம் இன்றைய சூழலில் அவனுக்குப் பெரிய பணம்.
“செரி, நீ போய் வண்டிய லோடு அடிச்சு எடுத்துட்டு வா... நான் இவனுக்குக் கொஞ்சம் சேவு பண்ணிட்டு நல்ல துணிமணி போட்டு வெக்கறேன்... எந்த ரூட்டுல போயி எப்பிடி எறக்கியுடோணும்னும் சொல்லறேன்... அதே மாதிரி பண்ணுனாப் போதும்.”

பரமசிவம் திரும்பி வந்தபோது கண்ணன் அடையாளம் தெரியாமல் மழுமழுவென்று மாறியிருந் தான். சிரைக்கும்போது திமிறியிருக்க வேண்டும். மேவாயில் ஓரிரு வெட்டுகள் இருந்தன. சுத்தமான பேன்ட் சட்டையில் இருந்தான். அவ்வப்போது வானத்தைப் பார்த்துப் பேசினான்.

“டேய் கண்ணா.. இங்கே வா” என்று செந்தாமரை அழைத்ததும் அவசரமில்லாமல் திரும்பிப் பார்த்தான். “நீ இங்கே வாடா” என்றான் செந்தாமரையைப் பார்த்து. செந்தாமரையின் முகம் மாறியது. ஆனால் எழுந்து சென்றான். 

“இங்க பாரு, இவர்தான் பரமசிவம். உன்னைய துவாரகைக்குக் கூட்டீட்டுப் போறாரு... அவரு சொல்றதக் கேட்டுச் சத்தங்கித்தம் போடாம கூடப் போவோணும்... இல்லைன்னா வழீலயே எறக்கி உட்டுருவாரு...”
“இவர்தான் என் சாரதியா”

பரமசிவத்தைப் பார்த்து சிரித்தான். அதன் பிறகு பரமசிவம் நடந்தால் நடந்தான். நின்றால் நின்றான். ஒரு நிழலைப்போலத் தொடர்ந்தான். சாப்பிடும் இடங்களில் அமைதியாக சாப்பிட்டான். பெரும்பாலும் பேசவில்லை. இயற்கை உபாதைகளுக்கு மட்டும் சைகை காட்டுவான். ஒரு கட்டத்துக்குப் பிறகு தானே துரத்தினாலும் அவன் ஓடிவிடமாட்டான் என்று பரமசிவத்துக்குப் புரிந்தது.

லாரியை எடுத்துக் கிளம்பியபோது சுயம்பு கண்ணனைக் கேள்வியாகப் பார்த்தான். அவனுக்கு வயது இருபது. ஐந்து வருடங்களாக பரமசிவத்தின் லாரியில் க்ளீனராக ஓடுகிறான். பத்து நிமிடங்களில் கண்ணனைப் பற்றி அவனுக்குப் புரிந்துபோனது. கொஞ்சம் விவரமான பயல். மூன்று நான்கு மொழிகள் சரளமாகப் பேசுவான்.  அவன் முகம் சுண்டிவிட்டது.

“பரமண்ணே... இதெல்லாம் நமக்குத் தேவையாண்ணே... பாவம்ணே” என்றான் பதற்றமாக.

“போடா... அஞ்சாறு பாவ புண்ணியம் பாத்து மயிராச்சு. இவனப் பாரு... இவன் தெக்க இருந்தா என்ன வடக்க இருந்தா என்ன..?”

“என்னண்ணே... நீயே இப்பிடிப் பேசற... எனக்கு சரியாப் படலைன்னே.”

“டேய், மூடீட்டு உக்காரு...” என்றான் பரமசிவம் கோபமாக, அதே நேரம் சுயம்புவின் கண்களைத் தவிர்த்தவாறே.


சுயம்பு சமாதான மாகவில்லை. அப்பாவின் மரணத்தால் பத்தாவது படிப்போடு லாரிப் பட்டறைக்கு வந்தவனுக்குப் பரமசிவம்தான் அடைக்கலம். அவனுக்குப் புத்தகங்களை வாங்கித் தந்து பன்னிரண்டாவது எழுதச் சொன்னான்.

“எங்கப்பா சாவறப்ப எனக்கு உன் வயசுதான்... உன்ன மாதிரியே குடும்பத்தைக் காப்பாத்த இந்தத் தொழிலுக்கு வந்தேன்... படிப்பு ஏறாதுங்கறது ஒரு பக்கம்... ஆனா நீ கெட்டிக்காரன்டா...  எப்பிடியாவது பன்னண்டு பாஸ் பண்ணீரு.. அப்பறம் தபால்ல டிகிரி படிச்சுக்கலாம். லாரி ஓடறப்ப சும்மாதான இருப்ப.. அப்ப உக்காந்து படி...”

மற்ற டிரைவர்களெல்லாம் க்ளீனர்களை எப்படி நடத்துகிறார்கள் என்று சுயம்புவுக்குத் தெரியும். தன்னை ஒரு தம்பி போல் நடத்தும் பரமசிவத்தின் மீது கூடுதல் பாசம். அதனாலேயே அவன் இப்படி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான் என்றபோது கோபமும் வந்தது.  அமைதியாக இருளில் கடந்து கொண்டிருந்த மரங்களைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தான்.

கண்ணன் இந்த நான்கு நாள்கள் பயணத்தில் எந்தவிதத் தொல்லையும் தரவில்லை. தனியாக ஏதாவது பேசிக் கொண்டிருப்பான். பெரும்பாலும் கீதை வசனங்களாக இருக்கும். பசிக்கும்போது மட்டும் சுயம்புவின் தோளைத் தட்டி வயிற்றைத் தடவுவான். கண்ணன் அசந்திருந்த தருணத்தில் அவனுடைய பையில் என்னதான் வைத்திருக்கிறான் என்று தேடினான் சுயம்பு. ஒரு புல்லாங்குழலும் சில மயிலிறகுகளும் இருந்தன. ஒரு வெண்சங்கு இருந்தது. சுயம்புவிடமிருந்து வெடுக்கென்று பையைப் பிடுங்கிக்கொண்டான் கண்ணன்.

அன்றைய காலை நேரத்தில் ஒரு ஏரிக்கரையில் குளிப்பதற்காக லாரியை நிறுத்தியிருந்தார்கள். கரையில் சில மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. சுயம்பு லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு வேப்பமரத்தின் குச்சியை ஒடித்து மென்றுகொண்டிருந்தான். திடீரென்று எழுந்த குழலோசைக்குத் திரும்பிப் பார்த்தான். கண்ணன்தான் வாசித்தான். சுயம்புவுக்கு இசை குறித்தெல்லாம் அதிக ஞானம் இல்லை. ஆனால், கண்ணன் வாசித்தது அவன் காதுகளுக்கு அத்தனை இதமாக இருந்தது. மனதை உருக்கும் ஒரு கதையை அவன் தனது புல்லாங்குழலில் சொல்ல முனைவது போலிருந்தது. மாடுகள் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு முனைப்பாக மேய்ந்துகொண்டிருந்தன. சுயம்பு பல்குச்சியை மெல்ல மறந்து கேட்டுக் கொண்டிருந்தான். ஆசுவாசமாக வந்த பரமசிவம் கூச்சலிட்டான்.

“என்னடா இங்க கச்சேரி மசுரு நடக்குது... நிறுத்தச் சொல்லுடா”

“ஏனுங்ணா... அருமையா வாசிக்கறான்... கொஞ்ச நேரம் கேக்கலாமே...”

“மூடீட்டு நிறுத்தச் சொல்லு... ஊலு ஊலுன்னு ஊளையுடறாப்ல”

கண்ணன் கண் மூடி வாசித்துக்கொண்டிருந்தான். சுயம்பு பழையபடி முரண்டு பிடிக்கும் முகபாவத்துக்கு மாறினான்.  

p46c_1519739107.jpg

“வேணுமுன்னா நீங்களே நிறுத்தச் சொல்லுங்க.. ஒருவேளை இதுக்குத்தான் மாமங்காரன் மண்டைய ஒடச்சானோ என்னுமோ?”

சொல்லிவிட்டுப் பல் துலக்குவதில் தீவிரமானான் சுயம்பு. ஒரு விநாடி தயங்கிவிட்டு லாரியில் சென்று ஏறிக்கொண்டான் பரமசிவம். அதன் பிறகு மதிய சாப்பாட்டின்போது துவாரகை எப்போது வரும் என்று கண்ணன் கேட்டபோது ராத்திரி போயிடலாம் என்றான் பரமசிவம். பெரும்பாலும் ஒரு புன்னகையுடன் சாலையையும் நகரும் நிலக்காட்சிகளையும் பார்த்தபடி வந்தான் கண்ணன்.

இப்போது அவனை இறக்கிவிடத்தான் வாகான இடம் தேடிக் கொண்டிருந்தான் பரமசிவம். அவன் நோக்கம் புரிந்த சுயம்புவின் முகம் இறுகிக் கிடந்தது. எப்போதாவது கடக்கும் வாகனங்களின் விளக்கொளியில் கம்பளிக்குள் புதைந்து உறங்கும் கண்ணன் தெரிந்து மறைந்தான். கிசுகிசுப்பாக சுயம்புவிடம் பேசினான் பரமசிவம்.

“டேய்... நான் நிறுத்தற எடத்துல பாத்ரூம் போறாப்ல எறக்கிக் கூட்டீட்டுப் போ.. நூறடி தள்ளி உட்டுப்போட்டு ஓடியாந்துரு... நான் லாரிய ரன்னிங்லயே வெச்சிருக்கறேன்...”

“பரமண்ணா... இந்த மாதிரி அத்துவானக் காட்டுக்குள்ள உட்டா அவன் எங்கீங்கண்ணா போவான்.. கொஞ்சமாச்சு மனுச நடமாட்டமிருக்கற பக்கம் எறக்கியுடுவோம்...”

“மூடீட்டு நான் சொல்றதப் பண்ணீட்டு வா... யாரும் பாக்காம இருக்கறதுதான் நல்லது...”

சொல்லிவிட்டானே தவிர ஏனோ லாரியை நிறுத்தவில்லை. சில இடங்களில் வேகத்தைக் குறைத்துவிட்டு நிறுத்த மனமின்றி மீண்டும் அதிகரித்தான். அவன் தனக்குள்ளே ஒரு போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருப்பது சுயம்புவுக்குப் புரிந்தது.

“அண்ணா... உங்களுக்கே புடிக்காத ஒரு விஷயத்தை எதுக்குப் பண்ணோணும்.. ஏதாவது இல்லத்துல சேத்தியுட்டரலாம்...”

சுயம்புவுக்கு அவன் மனதை மாற்றிவிடலாம் என்று லேசான நம்பிக்கை வந்திருந்தது. பரமசிவம் ஏதோ சிந்தனையோடு லாரியின் வேகத்தை அதிகரிப்பதும் குறைப்பதுமாக இருந்தான்.

“டேய் சுயம்பு...” அவன் குரல் மாறியிருந்தது. லேசான பதற்றம்.

“என்னங்ணா”

“பின்னால ஒரு வண்டி வருதுடா.. நான் நின்னா நிக்குது.. நவுந்தா நவுருது...”

சுயம்பு எட்டிப்பார்த்தான். தூரத்தில் விளக்கொளி தெரிந்தது.

“ஆமாங்கண்ணா... வண்டில என்ன லோடு?”

பரமசிவம் நினைவு வந்தவனாகத் தலையில் அடித்துக்கொண்டான்.

“ஐயோ... சிகரெட்டுடா...”

வழக்கமாக சிகரெட், எலக்ட்ரானிக்ஸ், மசாலாக்கள் ஏற்றி வரும்போது கவனமாக இருப்பார்கள். தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து விலகாமல் பயணிக்க வேண்டும். நாக்பூர் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் லாரியை மடக்கி டிரைவரைக் கொன்றுவிட்டுத் திருடுவது சாதாரணம். இதன் காரணமாகவே குழுவாக இணைந்து செல்வார்கள். இன்று கண்ணனுக்காக நெடுஞ்சாலையிலிருந்து விலகி இத்தனை தூரம் வந்து விட்டிருந்ததால் அந்தக் குளிரிலும் பரமசிவத்தின் முகம் வியர்த்துவிட்டது.

கியரை ஓசையுடன் மாற்றிப் போட்டு லாரியை வேகமாக ஓட்டத் தொடங்கினான். பின்னால் வந்த வண்டியும் வேகமெடுத்தது. விரட்டிக் கொண்டு வந்தார்கள், அல்லது பரமசிவத்துக்கு அப்படித் தோன்றியது. தலை தெறிக்க ஓட்டத் தொடங்கினான். பின்னால் வந்தது சுமோ போன்ற ஒரு வாகனம். வேகமாக வந்து இவர்களை ஒட்டிக்கொண்டது. பழக்கமில்லாத சாலை, எங்கு செல்கிறோம் என்று தெரியவில்லை. பெயர்ப் பலகைகள் எதுவும் இருளில் தெரியவில்லை. பரமசிவனும் சுயம்புவும் வெலவெலத்துப் போயிருந்தார்கள்.

அகலமான ஓர் இடத்தில் பின்னால் வந்த வாகனம் முரட்டுத்தனமாக ஒதுங்கி சாலையோரப் புதர்களை நசுக்கிக்கொண்டு முந்திச் சென்றது. அது ஒரு டாடா சுமோ. உள்ளே ஆட்கள் இருந்தார்கள். இப்போது பின்னால் இன்னொரு வாகனம் தெரிந்தது. அவர்கள் ஒரு கூட்டமாக வந்திருப்பது புரிந்தது பரமசிவத்துக்கு.

“பரமண்ணா... வண்டிய நிறுத்திடலாமாண்ணா... ”

“கைல கெடச்சா கொன்னு போடுவாங்கடா” அவன் குரல் மெலிதாக நடுங்கியது. முன்னால் சென்ற வாகனம் இவர்களை இடம் வலமாக வளைத்து நிறுத்த முயன்றது. பரமசிவம் வேகத்தைக் குறைப்பதாக இல்லை. சுமோவின் பின்பக்கக் கண்ணாடி திறந்து உள்ளே இருந்து பிரகாசமான விளக்கொளி ஒன்று பரமசிவனின் கண்களில் பாய்ந்தது. பரமசிவம் தடுமாறிப்போனான். ஏதோ ஒன்றைத் தூக்கி இவன் வண்டியின் முன் எறிந்தார்கள். மறுவிநாடி முன்சக்கரம் வெடித்தது போல் உணர்ந்தான் பரமசிவம். லாரியின் வேகம் தானாகவே குறைந்தது. எவ்வளவு முயன்றும் இடது பக்கமாக இழுத்துக்கொண்டு சென்றது. சாலையிலிருந்து இறங்கி மரங்களுக்குள் ஓடியது. அந்தப் பிரகாச வெளிச்சம் பரமசிவத்தின் பார்வையை முழுதாக ஆக்கிரமித்திருந்தது. பலத்த சத்தத்துடன் எதன் மீதோ லாரி மோதியது. பிறகு மொத்தமும் இருண்டு போனது.

இரண்டு சுமோக்களும் அரைவட்டமடித்துத் திரும்பி வந்தன. உள்ளே இருந்து பத்துப் பதினைந்து பேர் இறங்கினார்கள். முகத்தில் துணி கட்டியிருந்தார்கள். பிரகாசமான டார்ச் ஒன்றை அடித்தார்கள். லாரியின் முன் பகுதி ஒரு மரத்தில் மோதி நொறுங்கியிருந்தது. பரமசிவம் ரத்தம் தோய்ந்து பாதி உடல் வெளியில் தொங்கிக் கொண்டிருந்தான். கண்ணனும் சுயம்புவும் இருந்த இடம் தெரியவில்லை. வந்தவர்கள் எந்த சலனமும் இல்லாமல் லாரியின் பின்புறம் ஏறி தார்ப்பாயைக் கிழித்தார்கள். பத்து நிமிடங்களில் இன்னொரு லாரி வந்தது. பெட்டிகளை அதற்கு மாற்றத் தொடங்கினார்கள். பெரிதாக சத்தம் எழுப்பவில்லை. அந்தப் பகுதி சாலையிலிருந்து கொஞ்சம் உள்வாங்கியிருந்தது. அவர்கள் வேலையில் ஓர் அவசரம் இருந்தது. சொல்லி வைத்தது போல சிகரெட் இருந்த பெட்டிகளை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். வேறு சில பார்சல்களைக் கிழித்துப் பார்த்துவிட்டு வீசியெறிந்தார்கள். அரை மணி நேரத்தில் தங்களுக்குத் தேவையானவற்றை ஏற்றிக் கொண்டு இவர்கள் லாரியின் மீது சில மரக் கிளைகளை வெட்டிப் போட்டு மறைத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

சுயம்பு கேபினுக்குள் கிடந்தான். அவனுக்கு சுய நினைவு வந்தபோது விடிந்து லேசான வெளிச்சம் வந்திருந்தது. முகத்தின் மீது கண்ணாடித் துகள்கள் கிடந்தன.  வாயில் இரும்பின் சுவை. கால்களை அசைக்க முடியவில்லை. தலையைத் தூக்கிப் பார்த்தான். ஒரு பெரிய மரத்தின் மீது மோதி லாரியின் முன்பாகம் நசுங்கியிருந்தது. பரமசிவம் அவன் பேரைச் சொல்லித்தான் கதறிக்கொண்டிருந்தான்.

“அண்ணா... இங்க இருக்கேன்…”

“சுயம்பு.. டேய்... தண்ணி தெவைக்குது... தாகமா இருக்குதுடா... செத்துருவேன் போல இருக்குடா... வலிக்குதுடா...”

சுயம்பு மெள்ள எழ முயன்றான். கண்ணைத் திறக்க முடியாமல் பிசுபிசுவென்று ஒட்டியது ரத்தம். இடது காதுக்கு மேல் ஏதோ தீயாக எரிந்தது. உடலை இழுத்து நகர்த்தி கேபினில் இருந்து குதிக்க முயன்றான். இடது கால் ஏதோ ஓர் உலோகக் குவியலில் சிக்கி நசுங்கியிருந்தது. அசைத்தாலே உயிர் போனது. அவர்கள் இருந்த இடம் சாலையிலிருந்து குரல் கேட்காத, பார்வை படாத தொலைவில். மரங்கள் அடர்ந்திருந்தன. சாலையில் எப்போதாவதுதான் ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது.

p46d_1519739138.jpg

சுயம்பு பெருங்குரலில் அலறினான். காப்பாற்றும்படி அவனுக்குத் தெரிந்த அத்தனை மொழிகளிலும் கத்திப் பார்த்தான். பறவைகளின் சப்தமே பதிலாகக் கிடைத்தது. அவனுக்கும் தொண்டை வறண்டுகொண்டே வந்தது.

எவ்வளவு நேரம் கத்தியிருப்பானென்று தெரியாது. சூரியன் உச்சியை அடைந்திருந்தது. பரமசிவத்திடமிருந்து இப்போது சத்தமில்லை. இறந்திருப்பானோ என்று தோன்றியது. தனக்கும் அதே கதிதான் என்று நினைத்தான் சுயம்பு. மெள்ள நினைவு மயங்கத் தொடங்கியது. கனவில் மனிதக் குரல்கள் கேட்டன. இந்தியில் கட்டளைகள்.

“உயிர் இருக்கிறது” என்றது ஓர் ஆண் குரல்.

“டிரைவருக்கும்... ஆனால் அடி அதிகம்... லாரியை இழுத்துதான் வெளியே எடுக்க வேண்டும்... ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருக்கிறது... போலீசுக்கும் சொல்லிவிட்டோம்” இது மற்றொரு ஆண் குரல்.

“ரோட்டுல சங்கு ஊதி நம்மை நிறுத்தினானே, ஒருத்தன் அவன் எங்கே... அவனுக்கும் உடம்பெல்லாம் காயம் இருந்தது...”  இது ஒரு பெண் குரல்.

“இங்கதான் இருப்பான்... ஆனா அவனுக்குப் பெரிய காயம் எதுவும் இல்லை...” மறுபடி முதல் ஆண் குரல்.

சுயம்புவுக்கு யாரோ லாரிக்குள் ஏறி தண்ணீர் கொடுத்தார்கள். மறுபடி நினைவு வந்தபோது இடதுகாலில் உயிர் போகும் வலி. தன்னை ஒரு ஆம்புலன்ஸில் படுக்க வைத்திருப்பதை உணர்ந்தான். சுற்றிலும் இருந்த மரங்கள் இன்னும் அதே வனப்பகுதியில்தான் இருப்பதை அவனுக்கு உணர்த்தின. வெகு அருகில் சிறு இயந்திரங்கள் இயங்கும் சத்தம் கேட்டது. மனிதர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நீண்ட நெடிய அரை மணி நேரத்துக்குப் பிறகு இன்னொரு ஸ்ட்ரெச்சரில் பரமசிவம் அவனுக்கு அருகில் வந்து சேர்ந்தான். கண்கள் மூடியிருந்தன. வயிறு சீராக ஏறித் தாழ்ந்தது.

“கவலைப்படாதே... உனக்குக் காலில் ஒரு ஃப்ராக்சர்தான்... அவருக்குதான் நிறைய டேமேஜ்... ஆபத்தில்லை.. வலி தாங்க செடேட் பண்ணியிருக்கோம்... பொழைச்சுக்குவார்... ஆனா நடக்க ரொம்ப நாளாகும். உங்க கூட இன்னொருத்தர் இருந்தாரா?”

சுயம்பு தலையாட்டினான்.

“தேடிட்டிருக்காங்க... ஆனா யாரையும் பக்கத்துல காணோம்...” என்றான் வெள்ளுடை அணிந்த ஒரு வட இந்தியன். பட் பட்டென்று டிரைவர் கேபினின் பின்பகுதியில் தட்ட ஆம்புலன்ஸ் அவசரமாக நகர்ந்தது.
இருளைக் கிழித்துக்கொண்டு எங்கிருந்தோ புல்லாங்குழல் ஒலிக்கத் தொடங்கியது. சுயம்பு விம்மி விம்மி அழத்தொடங்கினான்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசைப் பட்டதுக்கு குடுத்த விலை ரொம்ப அதிகம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.