Jump to content

கணவாய் மீன் தொக்கு


Recommended Posts

  கணவாய் மீன் தொக்கு

 

sl52698922.jpg

என்னென்ன தேவை?

கணவாய்  - 300 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 5,
கறிவேப்பிலை - 1 கொத்து,
இஞ்சி பூண்டு விழுது - 1½ டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகத்தூள், சோம்பு தூள் - தலா 2 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்.

 

எப்படிச் செய்வது?

கணவாயை கழுவி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சீரகத்தூள், சோம்பு தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பச்சைவாசனை போனதும் மீனை சேர்த்து நன்கு வேகவைத்து இறக்கவும். கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

http://www.dinakaran.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவாய் பிரட்டல் அந்த மாதிரி இருக்கு. மிளகாய் தூளும் போட்ட மாதிரி கிடக்கு ஆனால் எழுத்திலே இல்லை.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, suvy said:

கணவாய் பிரட்டல் அந்த மாதிரி இருக்கு. மிளகாய் தூளும் போட்ட மாதிரி கிடக்கு ஆனால் எழுத்திலே இல்லை.....! tw_blush:

சின்னதா ஏதோ பிழை தான்.

சோம்பு தூளா இரண்டு கரண்டி, முழுசா ஒரு கரண்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2018 at 10:20 PM, suvy said:

கணவாய் பிரட்டல் அந்த மாதிரி இருக்கு. மிளகாய் தூளும் போட்ட மாதிரி கிடக்கு ஆனால் எழுத்திலே இல்லை.....! tw_blush:

பிரட்டலுக்கு கள்ளு சரிவருமா?? குரு நாதா?? குமாரசாமி அண்ணையிடம் கேட்காதீங்கோ tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிரட்டலுக்கு கள்ளு சரிவருமா?? குரு நாதா?? குமாரசாமி அண்ணையிடம் கேட்காதீங்கோ tw_blush:

கொட்டிலில் இருந்து கள்ளடிச்சாலும் சரி, பாரில் இருந்து அராக் அடிச்சாலும் சரி இதை அடிச்சுக்க பிரட்டலே கிடையாது. இதுக்கெல்லாம் சீனியரை மினக்கடுத்தக் கூடாது தனி.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

கொட்டிலில் இருந்து கள்ளடிச்சாலும் சரி, பாரில் இருந்து அராக் அடிச்சாலும் சரி இதை அடிச்சுக்க பிரட்டலே கிடையாது. இதுக்கெல்லாம் சீனியரை மினக்கடுத்தக் கூடாது தனி.....!  tw_blush: 

சும்மா கணவா  வறட்டல சொல்லி ஆள கொஞ்சம் குஷிப்படுத்ததான்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/03/2018 at 4:52 PM, suvy said:

கொட்டிலில் இருந்து கள்ளடிச்சாலும் சரி, பாரில் இருந்து அராக் அடிச்சாலும் சரி இதை அடிச்சுக்க பிரட்டலே கிடையாது. இதுக்கெல்லாம் சீனியரை மினக்கடுத்தக் கூடாது தனி.....!  tw_blush: 

 

On 13/03/2018 at 3:57 PM, தனிக்காட்டு ராஜா said:

சும்மா கணவா  வறட்டல சொல்லி ஆள கொஞ்சம் குஷிப்படுத்ததான்tw_blush:

யாழ்ப்பாணம்... ஆனைப்பந்தி... இலுப்பை அடிச் சந்தில.... கணவாய்க் கந்தையர் எண்டு ஒருத்தர் கடை வைத்து இருந்தார்.

கணவாய் தான்.... வேறு எதுவுமே சமைக்க மாட்டார்.

ஒரு கணவாய் கறியும், 3 வீச்சு ரொட்டியும் எடுத்து அடிக்க.... சொர்க்கம் தான்.

அவரிண்ட கடை பூட்டி இருந்தால்.... கணவாய் சந்தையில இல்லை.... இரண்டு நாள் பூட்டி இருந்தால் கடலிலேயே இல்லை என்று அர்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாழ்ப்பாணம்... ஆனைப்பந்தி... இலுப்பை அடிச் சந்தில.... கணவாய்க் கந்தையர் எண்டு ஒருத்தர் கடை வைத்து இருந்தார்.

கணவாய் தான்.... வேறு எதுவுமே சமைக்க மாட்டார்.

ஒரு கணவாய் கறியும், 3 வீச்சு ரொட்டியும் எடுத்து அடிக்க.... சொர்க்கம் தான்.

அவரிண்ட கடை பூட்டி இருந்தால்.... கணவாய் சந்தையில இல்லை.... இரண்டு நாள் பூட்டி இருந்தால் கடலிலேயே இல்லை என்று அர்த்தம்.

ஹாஹாஹா உன்மையாவா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.