Jump to content

ரஜினியை ‘நல்லவர்’ ஆக்கிய ஸ்ரீதேவி


Recommended Posts

ரஜினியை ‘நல்லவர்’ ஆக்கிய ஸ்ரீதேவி

 

 
02chrcjGayathri

‘காயத்ரி’ படத்தில் ரஜினியுடன்

1990-களின் தொடக்கத்தில், விவரம் தெரியத் தொடங்கிய வயதில், எங்கள் வீட்டில் புதிதாக வாங்கியிருந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி மூலமாக ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகிய மூவரும் அறிமுகமானார்கள்.

 

முதன்முதலில் பார்த்த நினைவு

‘16 வயதினிலே’ படத்தில்தான் அவரை முதன்முதலில் பார்த்ததாக நினைவு. அந்தப் படத்தில் ‘சப்பாணி’ கமல் அவரால் அவமானப்படுத்தப்படும்போது ஏற்பட்ட வருத்தம் தோய்ந்த உணர்வு இப்போதும் நினைவில் ஆடுகிறது.

‘16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ எனக் கமலுடன் ஸ்ரீதேவி நடித்திருந்த படங்களையே அதிகமும் பார்த்திருந்தேன். கூட்டுக் குடும்பமாக இருந்த எங்கள் வீட்டில் முந்தைய தலைமுறையினர் அனைவரையும் தன் அழகாலும் திறமையாலும் ஆட்கொண்டிருந்தார் ஸ்ரீதேவி. அந்தத் தாக்கம் இயல்பாகவே என்னுள்ளும் இறங்கியது. ‘மூன்றாம் பிறை’ படத்தில் நடித்ததற்கு அவருக்குத் தேசிய விருது வழங்கப்படாததால்தான், தமிழ் சினிமாவுக்கு அவர் முழுக்குப் போட்டுவிட்டதாகப் பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள்.

02chrcjSrideviiPokkiri%20raja

‘போக்கிரி ராஜா’ படத்தில்

அதன்பிறகு ‘சித்ரஹார்’, ‘சூப்பர் ஹிட் முகாபுலா’ போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றிய ஸ்ரீதேவி முற்றிலும் வேறானவராகத் தெரிந்தார். ஒரே ஆள் இந்த அளவுக்குத் தோற்றத்தில் மாற்றத்தை அடைய முடியுமா என்று திரையில் அவரைப் பார்க்கும்போதெல்லாம் தோன்றும். அவர் செய்துகொண்ட மூக்கு அறுவை சிகிச்சைதான் அந்த மாற்றத்துக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

 

ரஜினியின் திரைக் காதலி

கமல்-ஸ்ரீதேவி இணை ஆதர்ச இணையாக அறியப்பட்ட ஒன்று. சிறுவயதில் என் மனதுக்குக் கூடுதல் நெருக்கமாக இருந்த ரஜினி, ஸ்ரீதேவிக்கு ஜோடியாக அதிகம் நடிப்பதில்லை என்பதால், ரஜினி ‘நல்லவர்’ இல்லையோ என்றெல்லாம்கூடத் தோன்றியிருக்கிறது. சில ஆண்டுகளில் தூர்தர்ஷனில் வெள்ளிக்கிழமை இரவுகளில் தமிழ்ப் படங்கள் ஒளிபரப்பாக ஆரம்பித்தபோது, ‘தர்மயுத்தம்’ ஒளிபரப்பப்பட்டது. அதில் ரஜினியும் ஸ்ரீதேவியும் காதலர்களாக நடித்ததைப் பார்த்ததும் ‘ரஜினியும் நல்லவர்தான்’ என்ற நிம்மதி ஏற்பட்டது. இந்த அளவு ஸ்ரீதேவி முக்கியமானவராகத் தெரிந்தது இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது.

தொடர்ந்து ‘ஜானி’, ‘போக்கிரி ராஜா’ என ரஜினியுடனும் ஸ்ரீதேவி பல படங்களில் நடித்திருப்பது தெரியவந்தது. நான் வளர வளர ரஜினி-கமல் இருவர் மீதும் சமமான மரியாதை வரத் தொடங்கியிருந்தது. கமலுடன் அதிகப் படங்களில் ஸ்ரீதேவி நடித்திருக்கிறாரா, இல்லை ரஜினியுடனா என்பதைத் தெரிந்துகொள்ளும் குறுகுறுப்பு அப்போது இருந்தது. பதின்ம வயதுகளில் கூகுள், விக்கிபீடியா பரிச்சயம் ஏற்பட்டிராத அந்தக் காலத்தில் சினிமாவைப் பற்றி யாராவது பேசிக்கொள்வதைக் கேட்டாலே அவர்களிடம் இந்தக் கேள்வியை பட்டென்று கேட்டுவிடுவேன்.

ரஜினி-கமலை வைத்தே ஸ்ரீதேவியைப் புரிந்துகொள்ளும் பார்வை அகல்வதற்கு நீண்ட காலம் ஆனது. ஒருமுறை ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படம் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தில் அவர் கமலுக்கு ஜோடியில்லை என்று தெரிந்தவுடன், அந்தப் படத்தைப் பார்க்கவே தோன்றவில்லை.

02chrcjSridevi%20and%20kamal

‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் கமலுடன்

 

 

வியக்கவைத்த மிகையற்ற நடிப்பு

பள்ளிக் காலத்தின் இறுதி ஆண்டுகளில் திரைப்படங்கள் மீதான ஆர்வம் அதிகரித்ததோடு ரஜினி-கமலைத் தாண்டி ஸ்ரீதேவியின் ஆளுமையை வியக்கும் பக்குவம் வந்தது. ‘மூன்றாம் பிறை’, ‘ஜானி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படங்களின் மறுபார்வை மூலம் ‘இந்தியா சினிமாவின் தலைசிறந்த நடிகை’ என்று என் மனம் அவரைத் தேர்ந்தெடுத்தது. ‘தேவியின் திருவிளையாடல்’ என்ற பக்திப் படத்தில் அரசனாகத் தியாகராஜனும் அரசியாக ஸ்ரீதேவியும் நடித்திருப்பார்கள். ராஜேஷ் சிற்பியாக நடித்திருப்பார். தன்னை சிற்பியுடன் இணைத்து அரசன் சந்தேகப்படுவதைத் தெரிந்துகொண்ட பின், அவரிடம் நியாயம் கேட்கும் காட்சியில் அவரின் மிகை உணர்ச்சியற்ற நடிப்பு சிறப்பானதாகத் தோன்றியது. நீ

ண்ட இடைவெளிக்குப் பின் அவர் நடித்த ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படம் தமிழிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதுதான் நான் அவரைப் பெரிய திரையில் பார்த்த முதல் படம். பிறகு விஜயின் ‘புலி’ படத்தைப் பார்த்தபோது, அதில் அவர் நடித்திருக்கத் தேவையில்லை என்றே தோன்றியது. அவரது வீச்சை உணர்த்தும் ஒரு தமிழ்ப் படத்துகான சாத்தியமின்றியே இயற்கை அவரைப் பறித்துக்கொண்டுவிட்டது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22894451.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ தேவியின் தேவராகம் படம் அரவிந்தசாமியுடன் நடித்திருப்பார், மிகவும் அருமையான படம். அநேகமாய் யு டியூபில் இருக்கும் பார்க்கலாம்.....! 

 

இருக்குது....!tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.