Jump to content

ஆண் சிங்கம் ஒன்று அழுகின்றது...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

06cpbs-hariharan-s_1079836g.jpg

 

கண் தெரியும்  தூரம் வரை…..

காலம் தின்று..துப்பிய ….,

எச்சங்களின் மிச்சங்களாய்….,

செத்துப் போன வீடுகளின்,

எலும்புக் கூடுகள் !


 

வெறுமைகளை மட்டுமே…,

வெளியே காட்டிய படி…,

உண்மைகளை ஆழப் புதைத்து..,

கண் மூடித் துயில்கின்ற…..,

வரலாறுகளின்  சுவடுகள் !

 

அந்தத் திருக்கொன்றை மரத்தினுள்..,

ஆளப் புதைந்திருக்கும் …..,

வைரவ சூலம் மட்டும்….,

எத்தனை வடை மாலைகளையும்,

எத்தனை தேசிகாய்களையும்,….,

தன் மீது சுமந்திருக்கும் ?

 

அந்தக் கருக்குவாச்சி மரம்,

எத்தனை காதலர்களின்,

இரவு நேரச் சந்திப்புக்களை…,

விரக தாபங்கள் சிந்தும்,

கற்பூர சத்தியங்களை….,

தன்னுள் புதைத்திருக்கும் ?

 

காவோலைச் சேலை இழந்து….,

கதியால் கரங்களால் …,

தங்கள் மானம் காத்து..,

காவிளாய்ச் செடிகளின் விரிப்பில்,

மறைந்து கிடக்கிறதே நிலம் !

 

ஒரு காலத்தில்,,

கரும் பேட்டுக் குஞ்சுகளாய்…,

வரம்புகளில் மரக்கறிகளும்,

வளவு நிறைந்த மிளகாய் மரங்களுமாய்.,

நான் செய்த தோட்டம் !

 

நத்தை பொறுக்கும் செண்பகங்களும்….,

மிளகாய் கடிக்கும் கிளிகளுமாய் …,

கல கலத்த தோட்டம்….!

 

எனது மகன் …,

உழக்கிய துலா கூட….,

இன்னும் நிமிர்ந்தே நிற்கிறது !

 

மகன் கனடாவிலும்,,,.

மகள் ஜெர்மனியிலும…..!

 

பிள்ளைப்பெறு …..,

பாக்கப் போன மனுசியும்,

பிள்ளையள் பாவம் எண்டு….

அங்கையே நிண்டுட்டுது !

 

அக்கினி சாட்சியான.....,

வசிட்டர் வடக்கிலும்,

அருந்ததி தெற்கிலுமாய்....,

ஆரிட்டைப் போய் அழுகிறது ?

 

உனக்கென்னப்பா பிரச்சனை எண்டு....,

ஊரே பொறாமைப்  படுகுது !

 

எனக்கென்ன குறைச்சல் ?

ஆஸ்பத்திரி மாதிரி..,

எல்லா மருந்துகளும்...,

அலுமாரிக்குள்ள அடுக்கி இருக்கு !

ஆரோ ஒருத்தி வந்து..,

அடிக்கடி  சமைப்பாள் !,

 

பொறுங்கோ….வாறன் !

வல்லுவத்துக்குள்ள போன் சிணுங்குது !

 

ஒரு பேரனோட இங்கிலிசும்…,

மற்றப் பேரனோட ஜெர்மனும்..,

தமிழில கதைக்க வேணும் !

 

எனக்கென்ன குறைச்சல் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைப்பெறு …..,

பாக்கப் போன மனுசியும்,

பிள்ளையள் பாவம் எண்டு….

அங்கையே நிண்டுட்டுது !

 

அக்கினி சாட்சியான.....,

வசிட்டர் வடக்கிலும்,

அருந்ததி தெற்கிலுமாய்....,

ஆரிட்டைப் போய் அழுகிறது ?

 

 வெளியில் இருந்து வரும் எந்தச் சோகத்தையும் கடந்திடலாம், வயோதிபத்தில் உடல் கிடக்க ஊனை உருக்குவது இந்தச் சோகம்தான்.....!

அருமையான கவிதை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசிட்டர் வடக்கிலும் அருந்ததி தெற்கிலுமாய்... முதுமையில் தனிமையின் கொடுமையை ....அதிலும் ஆண்சிங்கங்கள் அனுபவிக்கும் தனிமை மிகக் கொடுமை. நல்லதொரு கவிதை நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

எனது மகன் …,

உழக்கிய துலா கூட….,

இன்னும் நிமிர்ந்தே நிற்கிறது !

என்ன புங்கை சிங்கம் அழவே மாட்டுது என்கிறார்கள்.நீங்கள் அழவைத்து விட்டீர்களே!

தோட்டம் செய்யும் போது ஆரம்ப காலத்தில் பட்டையில்த் தான் தண்ணி இறைப்போம்.அண்ணனுக்கு துலா மிதிப்பது கொஞ்சம் கஸ்டமாக இருக்கும்.ஆனபடியால் நான் தான் அனேகமான நேரங்களில் துலா மிதிப்பது.குத்துக்கால்களில் கைபிடிக்க தடிகள் கட்டியிருந்தும் சர்வ சாதாரணமாக ஒன்றிலும் தொடாமல் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருப்பேன்.

இப்போது நினைத்து பார்க்க கால்கள் கூசுகின்றன.என்னை பழைய காலத்துக்கு கொண்டு போய்விட்டீர்கள்.

Link to comment
Share on other sites

ஊரின் அழகும் அதனோடு ஒன்றிய வாழ்வுக்கும் அழைத்துச் செல்கின்றது உங்கள் ஆக்கம். . ஊரைப் பிரிவது உறவுகளை பிரிவது எம்மைச் சுற்றியிருந்த காட்சிகளை பிரிவது எல்லாம் என்றும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. என்னுமொன்றால் ஈடுசெய்ய முடியாதவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

06cpbs-hariharan-s_1079836g.jpg

-----

பிள்ளைப்பெறு …..,

பாக்கப் போன மனுசியும்,

பிள்ளையள் பாவம் எண்டு….

அங்கையே நிண்டுட்டுது !

-----

எனக்கென்ன குறைச்சல் ?

ஆஸ்பத்திரி மாதிரி..,

எல்லா மருந்துகளும்...,

அலுமாரிக்குள்ள அடுக்கி இருக்கு !

ஆரோ ஒருத்தி வந்து..,

அடிக்கடி  சமைப்பாள் !,

------

எனக்கென்ன குறைச்சல் ?

பிள்ளைகள்,  பெரிதென்று... 
நோயாளி கணவனுக்கு அருகில் இருந்து... 
உதவி செய்ய வராத மனைவியை, திட்டாமல்...
எனக்கென்ன குறைச்சல்... என்று சொல்லும் வார்த்தைக்குள், 
வெளியே  சொல்ல முடியாத.... எத்தனை சோகம், மறைந்துள்ளது என்பது, அந்தப் பெரியவருக்கு மட்டும் தான் தெரியும்.

நல்லதொரு  கவிதை புங்கையூரான்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வின் யதார்த்தங்கள் கவிதைகளாய் ..... எமக்கு எந்த விதமான அனுபவங்கள் ஏற்படப் போகுதோ என்ற ஏக்கமும் கூடவே எழுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திக்கிற்கு ஒருவராக பிரிந்து வாழும் நிலையை நாமாகவே விரும்பினோமா? இல்லைத்தானே.

எந்தக் கண்காணாத தேசத்தில் இருந்தாலும் உயிரோடு இருந்தால் காணும் என்று வழியனுப்பிவிட்டு வீட்டு முகட்டையே பார்த்துக்கொண்டு காலம் கழித்த பெற்றோர்களை நினைவுக்குக் கொண்டு வந்துவிட்டீர்கள்.

ஊருக்குப் போனபோது குழந்தைகள் இல்லாத குடியிருப்பாக எமது வீட்டையண்டிய பகுதி மிகவும் அமைதியான தனிமையில் இருந்தது. ஒவ்வொரு வீடுகளுக்கும் காவலாக முதியவர்கள்தான் இருக்கின்றார்கள். இன்னும் சில வருடங்களில் யாருமற்று வெறும் கூடுகளாக மாறும் என்பது புரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமையின் வெளிச்சம் அழகாக காட்ட்ப்பட்டுள்ளது உறவுகள் இருந்து ஒட்டிக்கொள்ளவும் இல்லை உறவாடவும் இல்லை நரைத்த தாடியை இழுத்து பார்க்கவும் தளர்ந்த உடல்களில் ஏறி மிதித்து விளையாட பேரபிள்ளைகள் இல்லாத நிலையையும்   இயலாத சோகம் சொல்ல முடியாத  கவிதையாக நன்றாக இருக்கிறது  வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

புங்கையூரன் வணக்கம்,

மன்னிக்கவேண்டும் முதலில், பலர் அண்மைக்காலங்களில் நிறைய ஆக்கங்கள் படைத்து இருக்கின்றார்கள். ஒன்றையுமே பார்க்க/நிதானமாக இருந்து வாசித்து அறிவதற்கு முடியவில்லை. இன்று உங்கள் அற்புதமான இந்த கவிதையை வாசித்தேன். 

நீங்கள் சிறந்த கவிஞர், கதாசிரியர் என்று உங்கள் ஆக்கங்கள் மூலம் ஏற்கனவே கண்டறிந்து இருக்கின்றேன். அந்த வகையில் 'ஆண்சிங்கம் ஒன்று அழுகின்றது' உங்களின் இன்னுமோர் அழகிய படைப்பு. இந்த கவிதையின் நயங்கள், கற்பனை, வீச்சு எல்லாம் பொறுமையாய், உணர்வுடன் வாசிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.

நீங்கள் எடுத்துக்கொண்ட விடயம் பொதுவானதே, ஆனால் கூறிய முறை உண்மையில் அற்புதம். பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்~~~!!! :89_clap::89_clap:

வாத்திய கலைஞர் சிவமணி ஓர் இளம் கலைஞனுக்கு கூறிய அறிவுரையில் 'நாம் ரசிகர்களுக்கு வழங்கும் படைப்பு கோயிலில் பக்கதர்களுக்கு வழங்கப்படும் சுவாமியின் பிரசாதம் போன்றது' என்று குறிப்பிட்டார். உங்களின் இந்த கவிதையும் எனக்கு ஓர் பிரசாதமாகவே உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆண் சிங்கம் .... அழுவது  கொடுமை . அதிலும் ..வயதான காலத்தில்  தனிமை கொடியது . தற்கால (பெரிசுகள் ).  பெரியவர்களின்  உணர்வுகளைக் காட்டும் உங்கள் பதிவு  அருமை. அதுசரி அந்த வல்லுவம் என்பது   மடு பெட்டியா    ( மடிப்பெட்டியா ).. கடகமா ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 06/03/2018 at 11:03 PM, suvy said:

பிள்ளைப்பெறு …..,

பாக்கப் போன மனுசியும்,

பிள்ளையள் பாவம் எண்டு….

அங்கையே நிண்டுட்டுது !

 

அக்கினி சாட்சியான.....,

வசிட்டர் வடக்கிலும்,

அருந்ததி தெற்கிலுமாய்....,

ஆரிட்டைப் போய் அழுகிறது ?

 

 வெளியில் இருந்து வரும் எந்தச் சோகத்தையும் கடந்திடலாம், வயோதிபத்தில் உடல் கிடக்க ஊனை உருக்குவது இந்தச் சோகம்தான்.....!

அருமையான கவிதை.....!  tw_blush:

 

On 06/03/2018 at 11:03 PM, suvy said:

பிள்ளைப்பெறு …..,

பாக்கப் போன மனுசியும்,

பிள்ளையள் பாவம் எண்டு….

அங்கையே நிண்டுட்டுது !

 

அக்கினி சாட்சியான.....,

வசிட்டர் வடக்கிலும்,

அருந்ததி தெற்கிலுமாய்....,

ஆரிட்டைப் போய் அழுகிறது ?

 

 வெளியில் இருந்து வரும் எந்தச் சோகத்தையும் கடந்திடலாம், வயோதிபத்தில் உடல் கிடக்க ஊனை உருக்குவது இந்தச் சோகம்தான்.....!

அருமையான கவிதை.....!  tw_blush:

எமது சமூகத்தின் பார்வையில்....ஆண்கள் எதையும் தாங்கும் வல்லமை பெற்றவர்கள் என்ற கருத்து ஆழமாகப் புதைந்து கிடப்பதால்...அவர்களைப் பற்றி எவரும் கவலைப்படுவது குறைவு!

வெளிப்பார்வைக்கு ஒரு ஆணாதிக்க சமுதாயம் போல தோன்றினாலும்.. உண்மையில் ஆண்கள் தமது ஆதிக்கத்தை...இறுதி வரை வெளிப்படுத்துவதே இல்லை என்று கூறலாம்!

அவர்களின் சோகத்தையும் கொஞ்சம் எழுதலாம் என்று நினைத்ததன் விளைவு தான் இந்தக் கவிதை!

வரவுக்கும்...கருத்துக்கும் நன்றி...சுவியர்!

On 07/03/2018 at 7:03 AM, Kavallur Kanmani said:

வசிட்டர் வடக்கிலும் அருந்ததி தெற்கிலுமாய்... முதுமையில் தனிமையின் கொடுமையை ....அதிலும் ஆண்சிங்கங்கள் அனுபவிக்கும் தனிமை மிகக் கொடுமை. நல்லதொரு கவிதை நன்றிகள்

உண்மை தான்....காவலூர் கண்மணி!

ஆண்களைப் பலர் புரிந்து கொள்வதில்லை! 

அவர்களும் தங்கள் சோகங்களை வெளியே சொல்வதில்!

நன்றி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

 ஆண் சிங்கம் .... அழுவது  கொடுமை . அதிலும் ..வயதான காலத்தில்  தனிமை கொடியது . தற்கால (பெரிசுகள் ).  பெரியவர்களின்  உணர்வுகளைக் காட்டும் உங்கள் பதிவு  அருமை. அதுசரி அந்த வல்லுவம் என்பது   மடு பெட்டியா    ( மடிப்பெட்டியா ).. கடகமா ..

பொதுவாக ஆச்சி மார்....கொட்டைப் பெட்டி என்று பனையோலையால்..அல்லது புற்களினால் பின்னப்பட்ட பை கொண்டு திரிவார்கள்!

 

21.jpg

அதைப் போல அப்பு மார்.....துணியினால் தைக்கப்பட்ட...பல ...அறைகள் கொண்ட ஒரு பையைக் கொண்டு திரிவார்கள்!

அதற்குள்...வெத்திலை...பாக்கு...பாக்கு வெட்டி...சுண்ணாம்புக் கரண்டகம், சில்லறைக்காசு, தாள் காசு போன்ற பல அத்தியாவசியான பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்!

அதை மடித்து....வேட்டி மடிப்புக்குள் மறைத்து வைத்த படி....நடந்து செல்ல முடியும்!

அதற்குள்...ஒரு செல்லிடத் தொலைபேசியையும் வைக்க முடியும்!

வருகைக்கும்....கருத்துக்கும்...நன்றி...நிலாக்கா!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 07/03/2018 at 9:00 AM, ஈழப்பிரியன் said:

என்ன புங்கை சிங்கம் அழவே மாட்டுது என்கிறார்கள்.நீங்கள் அழவைத்து விட்டீர்களே!

தோட்டம் செய்யும் போது ஆரம்ப காலத்தில் பட்டையில்த் தான் தண்ணி இறைப்போம்.அண்ணனுக்கு துலா மிதிப்பது கொஞ்சம் கஸ்டமாக இருக்கும்.ஆனபடியால் நான் தான் அனேகமான நேரங்களில் துலா மிதிப்பது.குத்துக்கால்களில் கைபிடிக்க தடிகள் கட்டியிருந்தும் சர்வ சாதாரணமாக ஒன்றிலும் தொடாமல் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருப்பேன்.

இப்போது நினைத்து பார்க்க கால்கள் கூசுகின்றன.என்னை பழைய காலத்துக்கு கொண்டு போய்விட்டீர்கள்.

நானும் கிட்டத் தட்ட உங்களைப் போலத் தான் ஈழப்பிரியன்!

நானும் தம்பியும்...மாறி..மாறித் துலா உழைக்க...அப்பா...பாத்தியைத் திருப்பித் திருப்பித் தண்ணீரை...மிளகாய்க் கண்டுகளுக்கு விடுவார்!

எங்களைப் பார்த்துத் தங்கச்சியும்....துலா மிதிக்க வெளிக்கிட்டது நடந்திருக்கு!

உண்மையான  சமத்துவம் எங்கள் வீட்டில் தான் இருக்கின்றது என்று அப்பா அப்போது சொல்லுவதுண்டு!

மனித உடல் என்பது.....ஒரு உன்னதமான....பொறியிலாளன் ஒருவனின்...அற்புதமான படைப்பு!

நாங்கள் சைக்கிள் ஓடுவது போலவே....முதுகு நாண் ...தன்பாட்டிலேயே சைக்கிளை..சமநிலை தவறாது பார்த்துக்கொள்கின்றது! எமது சிந்தனை....வேம்படி வீதியில் இருந்தாலும்....சைக்கிள் தன்ர பாட்டில போய்க் கொண்டேயிருக்கும்!

அது போலத் தான்....துலா மிதிப்பதும் என்று நினைக்கிறேன்!

வரவுக்கும்....கருத்துக்கும்....நன்றி! 

On 07/03/2018 at 11:18 AM, கந்தப்பு said:

உறவுகளைப் பிரிந்து இருப்பது கொடுமையிலும் கொடுமை. 

கொடிது...கொடிது....வறுமை...கொடிது என்றாள், ஔவைக் கிழவி...!

இனிமேல் பழமொழியை மாற்ற வேண்டும்!

கொடிது....கொடிது....உறவுகளின் பிரிவு...கொடிது..என்று..!

நன்றி....கந்தப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை வரிகள் புங்கை. தனிமை பொல்லாதது, அதுவும் முதுமையில் தனிமை  அதை விட கொடிது. காலத்தின் கோலமாக நாங்களும் இந்த தலைப்புக்குள் புதைக்கப் பட்டுள்ளோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.