Jump to content

சீமானின் இன்னுமொரு பிதற்றல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை ஓட்டை திருப்பிப்

போட்டு போராளிகள்

கடலில் பயணம் செய்தனர் 

என்றேல்லாம் கதை விடும்

சீமானின் இன்னொரு வீடியோ

இது

 

ஒருவர் சிரியாவில் உள்ள

அகதிகளை ஈழத்தமிழர்

ஒருவர் பிளேன் கொண்டு 

போய் காப்பாற்றி ஏற்றி வந்தார்

என்று sarcasm கலந்து 

பதிவை போட

 

அதை அறிவு கெட்ட 

தொம்பிகள் நம்பி

உலகம் பூரா பரப்ப

 

அத் தொம்பிகளின் தலைவனும்

நம்பி கூட்டத்தில் உரையாடுகின்றார்

 

சீமான் போன்ற வெற்று

வேத்துகள் எந்தளவுக்கு

அறிவு கெட்டவர்கள் என்பதற்கு

இதுவே ஒரு உதாரணம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைரவா...

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.

அது தமிழ் நாட்டுக்கு தலைவா...  நமக்கு அல்ல....

நீங்க எங்க இருக்கிறீங்க? மேலை நாடொன்றில் வாழ்வதனால்.... தமிழக அரசியலை புரிந்து....இந்த மாதிரியான அல்ப விசயங்களை புரிந்தும், புரியாத மாதிரி  நடப்போம்.... இல்லாவிடில், தூக்கிப் பிடிக்கும் நம்மைத்தான் பைத்தியர்கள் ஆக நினைப்பார்கள்.

:grin:   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

பைரவா...

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.

அது தமிழ் நாட்டுக்கு தலைவா...  நமக்கு அல்ல....

நீங்க எங்க இருக்கிறீங்க? மேலை நாடொன்றில் வாழ்வதனால்.... தமிழக அரசியலை புரிந்து....இந்த மாதிரியான அல்ப விசயங்களை புரிந்தும், புரியாத மாதிரி  நடப்போம்.... இல்லாவிடில், தூக்கிப் பிடிக்கும் நம்மைத்தான் பைத்தியர்கள் ஆக நினைப்பார்கள்.

:grin:   

இதை தான் திராவிடக் 

கட்சிகளும் செய்தன

மக்களை கவர என

பொய்யுரைத்து

பொய் இனப்பற்று பேசி

பொய் மொழி பற்று

காட்டி

ஈற்றில் எல்லாரையும்

ஹிந்தியனுக்கு அடகு வைத்தன

 

சீமான் இதில் இருந்து

இம்மியளவும் பிசகவில்லை

 

ஈழத்தமிழர் போராட்டம் 

முழுதும் தியாகம் நிறைந்தது

பெரும் வீரமும்

இரத்தமும் சதையும் நிணனீரும்

சேர்ந்தது

 

அவர்களின் வீரம் பற்றி

சொல்ல பொய் தேவை

இல்லை

 

இங்கு சீமானும் பொய்

பேசவில்லை

அவர் சிரியாவின் அகதிகளை

யாழ்ப்பாணத் தமிழர்

விமானத்தில் ஏற்றி காப்பாற்றியதை

நம்புகின்றார்

விமானத்தின் பெற்றோலை

கீழே சிந்தி 11 பேரை 

மேலதிகமாக ஏத்தின 

லாஜிக்கை நம்புகின்றார்

அதனால் தான் அதை 

மக்களுக்கு சொல்கின்றார்

 

ஒரு தலைவனுக்கு உரிய

தகுதி உண்மைகளை 

தன் சிந்தனை திறனால்

உய்த்தறிவது

அது சீமானுக்கு இல்லை

 

அல்லது

சீமானுக்கு இது பொய்

என்று தெரியும்

ஆமை ஓட்டை கவிழ்து

அதை படகாக ஆக்கி

போராளிகள் மன்னாரில் 

இருந்து

இராமாஸ்வரம் பயணம் செய்கின்றார்கள்

என்று சொன்ன மாதிரி

பொய் பேசி

தன் மக்களையும்

புலம்பெயர் தொம்பிகளையும்

நம்ப வைக்க முயல்கின்றார்

சீமான் தமிழகத்தில்

எமக்கான ஆதரவை

மிகக் குறைத்த

நபர்

 

2009 இன் பின்

ஈழத்தமிழர்களுக்கு

அதிக அளவு எதிரிகளை

தமிழகத்தில் உருவாக்கிய

அரசியல்வாதி

 

அவரை கண்டிபாக

அம்பலப்படுத்துவேன்

யாழில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரவன் அடுத்தவன் பல்லுக்குள் இருப்பதை எடுத்து நீங்களும் மணந்து மற்றவர்களுக்கும் மணக்க கொடுக்காமல்

நீங்கள் ஒரு அமைப்பில் இருந்து நல்ல விடயங்கள் செய்தால் சொல்லுங்கள் எமக்கும் பிடித்திருந்தால் ஆதரவு தருகிறோம்.

ஒரு விரலை அடுத்தவரை நோக்கி நீட்டும் போது மிகுதி நான்கு விரல்களும் எம்மை நோக்கியே காட்டுகின்றன என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஈழப்பிரியன் said:

வைரவன் அடுத்தவன் பல்லுக்குள் இருப்பதை எடுத்து நீங்களும் மணந்து மற்றவர்களுக்கும் மணக்க கொடுக்காமல்

 

இதுக்கும் நான் எழுதியதற்கும்

என்ன தொடர்பு பொஸ்?

சீமான் ஈழப் போராட்டத்தை

முதலாக வைத்து

அரசிய செய்யும் நபர்

அவரின் பிதற்றலை

சொன்னால் அதுக்கு 

சம்பந்தமில்லாமல்

ஏன் எழுதுகின்றீர்கள்?

 

இதில் சீமான் சொன்னது

சரியா

எந்த உய்த்தறிவும் இல்லாமல்

விசரன் மாதிரி நம்பியது

சரியா

பதில் சொல்லுங்கள் 

 

Quote

நீங்கள் ஒரு அமைப்பில் இருந்து நல்ல விடயங்கள் செய்தால் சொல்லுங்கள் எமக்கும் பிடித்திருந்தால் ஆதரவு தருகிறோம்.

ஒருவரை விமர்சிக்க

ஒரு பொய் சொல்லும்

அரசியல்வாதியை பற்றி

எழுத அமைப்பில் இருக்க வேண்டுமா?

அப்படி எனில்

நீங்கள் எந்த அமைப்பில்

இருந்து கொண்டு தமிழ் தேசிய

கூட்டமைப்பை விமர்சிக்கின்றீர்கள்?

 

சாவை பற்றி எழுதினால் 

முதலில் நான்

செத்து இருக்க வேண்டுமா?

 

Quote

ஒரு விரலை அடுத்தவரை நோக்கி நீட்டும் போது மிகுதி நான்கு விரல்களும் எம்மை நோக்கியே காட்டுகின்றன என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

சும்மா போற போக்கில்

உதாரணங்களையும்

சொலவடைகளையும்

சிந்தி விட்டு போனால்

அவை சரியாக பொருந்துமா?

 

நீங்கள் தானே

களவாடிய பொழுதுகள் படத்தில்

வந்த பாட்டை பார்த்து 

விட்டு

எது திராவிட அரசியல் 

என்று தெரியாமல்

சீமானின்

தாக்கத்தில் வந்த பாட்டு

என்று எழுதியவர்?

 

அங்கு நான் உங்களிடம்

கேட்ட கேள்விகள்

இன்னும் உங்கள் பதில்

இல்லாமல் காத்து கிடக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுக்கு நான் தர முயன்றது சிறு அறிவுரை. 

நீங்களோ, முன்பே தயாரித்து வைத்திருந்த பதிலை ஒட்டி உள்ளீர்கள் போலுள்ளது.

Tropido என்ற புலிகளின் சுயதயாரிப்பினை, போராளிகள் தமிழில் என்ன பெயரில் அழைத்தனர்?

நோக்கம், காரணகாரியம் புரிவதால் வாழ்த்தி விடை பெறுகிறேன் ஜயா, நன்றி.

Link to comment
Share on other sites

4 hours ago, வைரவன் said:

ஈழத்தமிழர் போராட்டம் 

முழுதும் தியாகம் நிறைந்தது

பெரும் வீரமும்

இரத்தமும் சதையும் நிணனீரும்

சேர்ந்தது

ஈழத்தமிழர் போராட்டம் நீங்கள் சொல்வதுபோல் மட்டும் நடக்கவில்லை. சகோதர சண்டைகளும் துரோகங்களும் பிரிவினைகளும் மதவாத பிரதேசவாத பிரிவினைகளும் என ஏராளமான விடையங்களை உள்ளடக்கியது. அவற்றைத் கடந்து தியாகம் வீரம் என்றதோடு நிற்க முற்படுகின்றோம். தோண்டத் தோண்ட நாறும். போராட்டம் பயங்கரவாதமாகவே முடிக்கப்பட்டு இன்றளவும் நிலுவையில் இருக்கின்றது. அதனால் தான் போர்க்குற்றத்திற்கு உள்ளுக்கு போகவேண்டிய மகிந்தனும் கோத்தாவும் அடுத்த எலக்சனில் நிற்க தயாராகினம்.  எங்கள் வீர வசனங்களுக்கும் உலக அணுகுமுறைக்கும் சம்மந்தமில்லை . இருந்தாலும் எமது  குறைகளை கடந்து நிறைகளோடு பயணிக்க முற்படுகின்றோம். 

 

4 hours ago, வைரவன் said:

2009 இன் பின்

ஈழத்தமிழர்களுக்கு

அதிக அளவு எதிரிகளை

தமிழகத்தில் உருவாக்கிய

அரசியல்வாதி

 

அவரை கண்டிபாக

அம்பலப்படுத்துவேன்

யாழில்

 

2009 க்கு பின்னர் எங்கே அதிக எதிரிகளை உருவாக்கினார்? அதுக்கு முதல் யார் நண்பர்களாக இருந்தார்கள்? அவர்களால் என்ன பிரயோசனம் நடந்தது? 2009 க்கு முன்னர் புலிக்கொடியும் தலைவர் படமும் தமிழ்நாட்டில் எந்தக் கட்சி சீமானளவுக்கு பயன்படுத்தியது?  உண்மைக்கு முரணான மோசமான கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள். 

நீங்கள் அம்பலப்படுத்தி எதுவும் நடக்கப்போவதில்லை. உங்கள் எழுத்துக்களில் இருப்பது தனிப்பட்ட காழ்புணர்வே அன்றி சமூகம் சார் தூரநோக்கு அல்ல. சீமான் தவறான ஒரு தகவலை அடிப்படையாக வைத்து பேசினால் அதை அறியும் போது திருத்திக்கொள்ள வேண்டியதுதான். அவ்வளவுதான் இந் நிகழ்வுக்கான முக்கியத்துவம். அதற்கு அப்பால் இதில் முட்டையில் மயிர் புடுங்க எதுவும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வைரவன் said:

ஆமை ஓட்டை திருப்பிப்

போட்டு போராளிகள்

கடலில் பயணம் செய்தனர் 

என்றேல்லாம் கதை விடும்

சீமானின் இன்னொரு வீடியோ

இது

இதில் சீமான் ஓர் உவமான உவமேயமாகவே பயன்படுத்தியுள்ளார். அதை அவர் விலாவாரியாக விளக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல, ஏனெனில் அது புலிகளின் தொழில்நுட்பத்தை பேசுவது ஆகிவிடும்.

சீமான் சொல்வதை எல்லாவற்றையும் நீங்கள் நேரடி எழுத்து, வசனம் (literal) கருத்தாக கொள்வீர்கள் என்றால், அது உங்களின் அறியாமை.

ஆமை ஒட்டு வடிவம் இந்த நவீன யுகத்திலும், நீர்மூழ்கி  எதிர்ப்பு யுத்தக்கலையிலும் மற்றும் கபடத் தன்மையுள்ள போர் விமானங்களின் ரேடார், ஒளி, ஒலி, இலத்திரனியல் மற்றும் மின்காந்த, வெப்ப  ஒப்பத்தை மறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வைரவன் said:

ஒருவர் சிரியாவில் உள்ள

அகதிகளை ஈழத்தமிழர்

ஒருவர் பிளேன் கொண்டு 

போய் காப்பாற்றி ஏற்றி வந்தார்

என்று sarcasm கலந்து 

பதிவை போட

நீங்களே சொல்கிறீர்கள் அந்த பதிவு sarcasm என்று. நீங்கள் இணைத்திருக்கும் ஒளிப்பதிவில் சீமான் சிரியா என்ற ஓர் வார்த்தையை கூட உபயோகிக்கவில்லை.

FX16 தொலைக்காட்சி சேவையே சீமான் அப்படி சொல்வதாக அடிக்குறிப்பிட்டிருக்கிறது.

FX16 உங்களை குழப்பியிருக்கிறதா அல்லது FX16 ஐ உபயோகித்து நீங்க எவரையாவது குழப்ப முயற் சிக்கிறீர்களா?

சீமான் தலைவராவது, சீமான் அந்த மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதிலேயே உள்ளது. அதை பற்றி உங்களுக்கு என்ன கவலை?        

Link to comment
Share on other sites

சீமான் சொன்ன விடயம் புனையப்பட்ட ஒரு செய்தி.. இவ்வாறு அவர் சில தடவைகள் சறுக்கியுள்ளார். காரணம் மிக எளிமையானது. தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சிக்கு தேவையான அறிவாளர்கள் கட்டமைப்பு நாம் தமிழர் கட்சியில் கிடையாது. அதற்குக் காரணம் பொருளாரதார பலம் இல்லாத நிலை. அறிவுசார் பெருமக்களை நியமித்தால் அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். இருக்கும் இளைஞர்கள் வேலை பார்த்துக்கொண்டு கட்சிக்காகவும் முடிந்த அளவு உழைப்பவர்கள்.

நிறுவனங்களிடம் நன் கொடை வாங்கி கட்சி நடத்தலாம்தான். அதற்கும் பல நிறுவனங்கள் தயாராகவே உள்ளன. ஆனால் நாம் தமிழர் கட்சி அதை வரவேற்கவில்லை. பிற்பாடு அந்த நிறுவனங்களின் விருப்பங்களுக்கு ஏதுவாக நடந்துகொள்ள வேண்டி வரலாம். இந்த ஒரு விடயம் கூட தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் (பண்ருட்டி வேல்முருகன்) பெருமளவில் இணைந்து செயல்பட தடையாக உள்ளது.

மேற்சொல்லப்பட்ட ஈழத்தமிழர் புனைவு செய்தியை நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ காணொளியில் இருந்து நீக்கிவிட்டுத்தான் பதிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இசைக்கலைஞன் said:

சீமான் சொன்ன விடயம் புனையப்பட்ட ஒரு செய்தி.. இவ்வாறு அவர் சில தடவைகள் சறுக்கியுள்ளார். காரணம் மிக எளிமையானது. தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சிக்கு தேவையான அறிவாளர்கள் கட்டமைப்பு நாம் தமிழர் கட்சியில் கிடையாது. அதற்குக் காரணம் பொருளாரதார பலம் இல்லாத நிலை. அறிவுசார் பெருமக்களை நியமித்தால் அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். இருக்கும் இளைஞர்கள் வேலை பார்த்துக்கொண்டு கட்சிக்காகவும் முடிந்த அளவு உழைப்பவர்கள்.

நிறுவனங்களிடம் நன் கொடை வாங்கி கட்சி நடத்தலாம்தான். அதற்கும் பல நிறுவனங்கள் தயாராகவே உள்ளன. ஆனால் நாம் தமிழர் கட்சி அதை வரவேற்கவில்லை. பிற்பாடு அந்த நிறுவனங்களின் விருப்பங்களுக்கு ஏதுவாக நடந்துகொள்ள வேண்டி வரலாம். இந்த ஒரு விடயம் கூட தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் (பண்ருட்டி வேல்முருகன்) பெருமளவில் இணைந்து செயல்பட தடையாக உள்ளது.

மேற்சொல்லப்பட்ட ஈழத்தமிழர் புனைவு செய்தியை நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ காணொளியில் இருந்து நீக்கிவிட்டுத்தான் பதிவிட்டார்கள்.

மற்றைய அரசியல்வாதிகள் யாவரும், மகா அரிச்சந்திரர்கள் தானே....

மராட்டியர் என தெரிந்த உலகத்துக்கே, பச்சைத்தமிழர் என்பதும், தோட்டத்துக்கு கூப்பிட்டு, நாலு சாத்து சாத்தி திரத்திய எம்ஜியார், கல்யாணம் பண்ணி வைத்தார் என பீலா விடுபவர்கள் மத்தியில், இது ஒரு பெரும் தவறல்ல.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கன்டாவில் பைலட்டாக வேலை பார்க்கும் ஓர் தமிழ் இளைஞன் சிரியாவரை சென்று அகதிகள் பலரைக் காப்பாற்றிக் கொண்டுவந்ததாக ஒரு செய்தியை நானும் படித்த ஞாபகம் அதனைச் சீமான் குறிப்பிட்டுப் பேசியதற்காக, அவர் முன்வைக்கும்  தமிழத் தேசிய சித்தாந்தம் தவறாய் ஆகிவிடாது.  அப்படியானால்  இன்று பிறந்த நாள் காணும் தந்தை செல்வா உட்பட அனைத்துத் தேசிய வாதிகளும் தவறான புரிதலுடையவர்களே.     ஆமை ஓடு பெரியதாக இருந்தால் அதை உரிய வகையில் ஓர் ஓடமாக மாற்றிக் கடலில் அல்லது நீர்நிலைகளில் ஓடவிட முடியும்.  ஒருவர் அல்லது இருவர் அதில் பயணம் செய்யலாம்.  முன்னர் அப்படிச் செய்திருக்கிறார்கள்.    பிரம்பில் நெய்யப்பட்ட பரிசல் ஒரு குரைச்சி போன்றது, அதில் இன்று வரை மக்கள் ஆறுகளைக் கடக்கிறார்கள்.  இதையெல்லாம் விமர்சிக்க முற்படுவது அறியாமையின் வெளிப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர் சொல்லொணாத் துயரத்திற்கும் அழிவிற்கும் ஆளாகிய தருணத்தில் இந்திய அரசின் கீழ் கைகட்டி வாளாவிருந்த குற்றவுணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழன் நான். இங்குள்ள அரசியல்வாதிகள் மீது பொதுவான வெறுப்பு எனக்கும் இருந்தாலும், ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழத்தமிழருக்காக எழும் குரலை விமர்சிக்க விரும்புவதில்லை. சிறு துரும்பும் பல் குத்த உதவுமே ! அவர்களையும் ஏன் இழக்க வேண்டும் ? தோழர் வைரவன், இலங்கை போர்க்களத்தில் இல்லாத என்னால் இவ்வளவுதான் சிந்திக்க முடிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருடமாக வைத்த கண் வாங்காமல் காத்திருக்க ....
சீமான் இப்படி ஒரு வாழைப்பழ வாய்ப்பை தந்தார் 

இப்படியே ஒரு வாழைப்பழ கடை திறக்கலாம் 
எனும் கனவில்....  
இப்படி மண் அள்ளி போடுறீங்களே 
நீங்கள் எல்லாம் நல்லா இருப்பீங்களா ? 

வரும் மார்கழிக்கு ஒரு உப்பு கடையை திறக்க வேண்டியதுதான்.  

இந்த கடை பூட்டியாச்சு 
கடை சொந்த காரர் இனி கடைப்பக்கம் 
வர மாட்டார் .....

வாடிக்கையாளர்கள் மார்கழிக்கு உப்பு கடைக்கு வரவும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.