Jump to content

அரோஹரா!ஆறுமுகா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரோஹரா!ஆறுமுகா!

 

அந்தக் கூட்டத்துக்குள்ளை நேற்று உன்னைக் காணேல்லைதிங்கட்கிழமை வேலை இடத்தில் மரியா என்னைக் கேட்ட போது, எந்தக் கூட்டத்தை அவள் சொல்கிறாள் என்பது எனக்கு முதலில் புரியவில்லை.

 அவளே தொடர்ந்தாள். “இத்தாலியில் வீதியில் வைச்சு ஆளாளுக்கு தக்காளி அடிச்சு ஒரு விளையாட்டுவிழா (Tomatina Festival) நடக்குமே அது போலை உங்கடை நாட்டிலையும் தேங்காய் அடிச்சு விளையாடும் ஒரு விளையாட்டுவிழா இருக்குதோ? ”

 “நீ என்ன சொல்ல வாறாய்?”

 நேற்று, போக்குவரத்து வீதியை மறிச்சு தடை போட்டிருந்தார்கள். அதாலை அடுத்த வீதியாலை போகவேண்டி வந்திட்டுது. என்ரை காரைத் திருப்பிக் கொண்டு அடுத்த வீதிக்குப் போற பொழுதுதான் பார்த்தன், உன்ரை நாட்டுக்காரர்கள் நிறையப் பேர் வீதியிலை ஊர்வலம் போலை வந்து கொண்டிருந்தார்கள். பெண்கள் எல்லாம் கலர் கலராக உடுப்புகள் போட்டிருந்தார்கள். முதலிலை உன்ரை நாட்டு 'கார்ணிவேல்' என்றுதான் நினைச்சன். ஆண்களெல்லாம் தெருவிலை தேங்காய்களை போட்டு உடைச்சுக் கொண்டே பெரிசா ஒன்றை இழுத்து கொண்டு வந்தார்கள். தக்காளி விழாபோலை தேங்காயாலை ஆளாளுக்கு அடிச்சுக் கொள்ளுவார்களோ என்று முதலிலை பயந்து போனன்'

 மரியா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதுதான் புரிந்தது, அவள் குறிப்பிடுவது எங்களது தேர்த்திருவிழா என்று.

 “‘கூடுஎன்று நீங்கள் மேரி மாதவை ஊர்வலமாக கொண்டு போவீங்களே, அதுபோலத்தான் நாங்களும் எங்கடை கடவுள்களை வீதியிலை ஊர்வலமாக கொண்டு போவம். எத்தனை காலத்துக்கு எங்கடை சாமிகள் கோயிலுக்குள்ளையே அடைபட்டுக் கிடக்கிறது. அவையளும் காத்து வாங்க வேண்டாமோ?” மெதுவாகச் சமாளித்துக் கொண்டேன்.

 “தேங்காய் 1.70க்கு கடையிலை விற்கிறார்கள். அந்த விலைக்கு வாங்கி இப்பிடி தெருவிலை போட்டு உடைக்கோணுமோ?”

 “நீ சொல்லுற விலை சுப்பர் மாக்கெற்றில். எங்கடை நாட்டுக் கடைகளுக்குப் போய்ப் பார், ஒரு யூரோவுக்கு கிடைக்கும்

 “தெருவிலை போட்டு வீணாக உடைக்கிறதுக்கு ஒரு யூரோ என்றாலும் அதிகம்தான்

 நாட்பட்ட தேங்காய்களை தட்டி விடுவதற்கு கடைக்காரர்களுக்கு ஒரு வாய்ப்பாக தேர்த்திருவிழாவை, கடவுள் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்று எனக்குள் ஒரு எண்ணம் வந்தது

 மரியா கேட்டதிலும் அர்த்தம் இருந்தது. இவ்வளவு விலை கொடுத்து எதற்காக தேங்காய்களை தெருவில் போட்டு உடைக்க வேண்டும்? மணலில் தேரினது மரச்சில்லுகள் உருளுவதில் இருக்கும் சிக்கலைத் தவிர்ப்பதற்காகவே  எமது முன்னையவர்கள் எங்களது நாட்டில், தேரின் முன்னால் தேங்காய்களை போட்டு  உடைத்தார்களோ தெரியவில்லை. சரியான காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் நாங்கள்தான் யேர்மனியின் தார்வீதிகளில் தேங்காய்களை வீணே சிதறடித்துக் கொண்டிருக்கிறோமா? யாராவது அறிஞர்கள், தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது

 கடவுளை தேரில் வைத்து இழுப்பதற்காக நாங்கள் Audi, Mercedes, BMW கார்களில் வந்து கோவிலின் வாசலில் இறங்கிக் கொண்டிருக்கிறோம். காலங்காலமாக பாவப்பட்ட ஜென்மமாக கடவுள் மட்டும் மரத்தேரில் பவனிக்க வேண்டி இருக்கிறது என்பதை நினைக்கையில் நெஞ்சு வெம்புகிறது. அதுவும் மனிதன் இழுத்தால்தான் கடவுள் அமர்ந்திருக்கும் தேரே நகரவேண்டிய நிலையும் இருப்பது அந்தோ பரிதாபம்.

 போர் முடிந்து ஒன்பது வருடங்களாகின்றன. புலம் பெயர்ந்தவர்கள் வழங்கும் நிதியை நேரடியாகப் பெற்று, அந்த நிதியைப் பயன் படுத்தி பாதிக்கப்பட்டவர்களது வாழ்வை மேம்படுத்தவோ, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவோ, யாரிலும் தங்கியிராது சுயமாக வாழும் நிலையை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவோ முடியாதவகையில் மாகாணசபையை சிறீலங்கா அரசு கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

ஒரு பொது அமைப்பை தாயகத்தில் உருவாக்கி அதனூடாக உலகத் தமிழர்கள் ஒருங்கிணைந்து உதவிகளைச் செய்யவிடாமலும் சிங்கள அரசு தடுக்கிறது. போரினால் பாதிக்கப் பட்டவர்கள் மேலும் மேலும் துன்பத்துக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் சிந்திக்க வேண்டிய நாங்கள் பக்திக்குள் பரவசம் காண நினைக்கிறோம்

 ‘கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் வயிற்றுக்குள் இருக்கும் கருவுக்கும் ஈசன் உணவளிப்பான்என்று, தெரியாமல் படித்து விட்டோம். அதனால்தான் எல்லாவற்றையும் தூரப்போட்டுவிட்டு  கடவுள்களுக்கு இன்று புலம் பெயர்ந்த நாடுகளில்  கோயில்களை உருவாக்கி அர்ச்சனைகள்  செய்து கொண்டிருக்கிறோம்.

 இதற்குள், கோவில்களில் எரியும் விளக்குகளுக்கு தாங்களும் எண்ணெய் விடுகிறோம் என்று ஒரு ஊடகம்ஆன்மீகத் தொலைக்காட்சி’  ஒன்றை மார்ச் 10ம்  திகதி தொடங்க இருப்பதாக பெருமையாக அறிவித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் பிரச்சனைகளை பேச்சுக்கு மென்று துப்பிக் கொண்டு அந்த ஊடகம் மோடியின் ஆன்மீகத்துக்குள் வந்து விட்டதோ என்ற அச்சம் ஏனோ தானாகவே வருகிறது.

 இப்படியே போனால், “படைத்தவன் இருக்கிறான். பார்த்துக் கொள்வான்என்று சொல்லிக் கொண்டு, தாயகம், சுதந்திரம் என்று சத்தமிட்ட குரல்களெல்லாம், ‘அரோஹரா, ஆறுமுகாஎன்று ஒலிக்க ஆரம்பித்து விடும்.

 கவி அருணாசலம்

06.03.2018

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி தங்காளியும் காசு கொடுத்துத்தானே வாங்கவேண்டும்?    அவுஸ்திரெலியாவில் கோயில்வீதிகளில்தான் தேர் இழுப்பார்கள்.  போக்குவரத்து வீதிகளில் இழுப்பதில்லை.  கனடாவில் தூக்குக்காவடிகளை போக்குவரத்து வீதிகளில் காணலாம். ஆனால் அவுஸ்திரெலியாவில் கோயில்களிலும் காணமுடியாது.  

கடவுள் என்றால் விழுந்து விழுந்து  காசு கொடுப்பார்கள்.  போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி என்றால், "ஊரில  சனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. மைத்திரி மாமாவும் ரணில் சித்தப்பாவும் நல்ல பெரிய  வீதிகள்,  விடுதிகள் எல்லாம் கட்டி , சுற்றுலா செல்ல அழகாக வைத்திருக்கிறார்கள்." என்று சொல்லுவார்கள்.  இல்லாதவர்களுக்கு உதவும் போது இறைவனைக்காணலாம்,

கோயில்களில் சென்று இறைவனை வழிபடுவதைவிட,   வீட்டில் இருந்து  மனதாலும் இறைவனை வழிபடலாம்   என்று திருமூலதேவ நாயனார்  பாடியிருக்கிறார்.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே ."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கந்தப்பு said:

அதுசரி தங்காளியும் காசு கொடுத்துத்தானே வாங்கவேண்டும்?    அவுஸ்திரெலியாவில் கோயில்வீதிகளில்தான் தேர் இழுப்பார்கள்.  போக்குவரத்து வீதிகளில் இழுப்பதில்லை.  கனடாவில் தூக்குக்காவடிகளை போக்குவரத்து வீதிகளில் காணலாம். ஆனால் அவுஸ்திரெலியாவில் கோயில்களிலும் காணமுடியாது.  

கடவுள் என்றால் விழுந்து விழுந்து  காசு கொடுப்பார்கள்.  போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி என்றால், "ஊரில  சனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. மைத்திரி மாமாவும் ரணில் சித்தப்பாவும் நல்ல பெரிய  வீதிகள்,  விடுதிகள் எல்லாம் கட்டி , சுற்றுலா செல்ல அழகாக வைத்திருக்கிறார்கள்." என்று சொல்லுவார்கள்.  இல்லாதவர்களுக்கு உதவும் போது இறைவனைக்காணலாம்,

கோயில்களில் சென்று இறைவனை வழிபடுவதைவிட,   வீட்டில் இருந்து  மனதாலும் இறைவனை வழிபடலாம்   என்று திருமூலதேவ நாயனார்  பாடியிருக்கிறார்.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே ."

இதையே தான்.....நமது வள்ளுவத் தாத்தாவும்....அழகாகச் சொல்லியுருக்கிறார்!

 

மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்,

பழித்தது ஒழித்து விடின்!

 

அதாவது....உலகம் தீயது என்று சொல்பவைகளை ...ஒழித்து விட்டால். அஸ்கிரிய பீடமோ...அல்லது சுவாமி நித்தியானந்தாவோ...உனக்குத் தேவையில்லை என்கிறார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அடையாளங்களைத் தக்க வைத்துக்கொள்ள இப்படியான திருவிழாக் கொண்டாட்டங்கள் தேவைதானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 05/03/2018 at 9:54 PM, Kavi arunasalam said:

இத்தாலியில் வீதியில் வைச்சு ஆளாளுக்கு தக்காளி அடிச்சு ஒரு விளையாட்டுவிழா (Tomatina Festival) நடக்குமே அது போலை உங்கடை நாட்டிலையும் தேங்காய்அடிச்சு விளையாடும் ஒரு விளையாட்டுவிழா இருக்குதோ? ”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 06/03/2018 at 2:22 AM, புங்கையூரன் said:

அதுசரி தங்காளியும் காசு கொடுத்துத்தானே வாங்கவேண்டும்?

கந்தப்பு

தக்காளியும் சும்மா கிடைக்காது.

ஆனாலும், ஒவ்வொரு வருசமும் ஓகஸ்ட்டில் அதை ஒரு கேளிக்கை விளையாட்டாக ஸ்பெயினில் கொண்டாடுகிறார்கள்.பல வெளிநாட்டவர்கள் கலந்து கொள்ளும் அந்த விளையாட்டுக்கு கட்டணமும் இருக்கிறது. அதை நடத்துவதால் அவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.

இன்னுமொன்று பத்தியில் ‘இத்தாலி நாட்டில்’ என்று ஒரு தவறு விட்டிருக்கிறேன்

 
10 hours ago, கிருபன் said:

 

எங்கள் அடையாளங்களைத் தக்க வைத்துக்கொள்ள இப்படியான திருவிழாக் கொண்டாட்டங்கள் தேவைதானே. 

 

கிருபன், நீங்கள் ‘அடையாளம் ‘ என்று கருதுவது நான் ‘அறியாமை’ என்று நினைக்கிறேன்.இருவரது பார்வைகளும் வேறுபடுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 06/03/2018 at 2:13 AM, கந்தப்பு said:

உள்ளம் பெருங்கோயில்

இந்தவரியை வைத்துதான்  கண்ணதாசன் இப்படி ஒரு பாடல் எழுதினாரோ?

‘உள்ளம் ஒரு கோவில்

உன் உருவம் அதில் தெய்வம்

கண்கள் அதன் வாசல்

பெண்ணின் நாணம் அங்கு காவல்’

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

 

கிருபன், நீங்கள் ‘அடையாளம் ‘ என்று கருதுவது நான் ‘அறியாமை’ என்று நினைக்கிறேன்.இருவரது பார்வைகளும் வேறுபடுகின்றன.

ஊரில சிறிய கிராமங்களில்  திருவிழாக்கள் மக்களை ஒன்றுக்கூடச்செய்கின்றது.  வேரு ஊர்களில் திருமணம் செய்தவர்கள், வேறு இடங்களில் தொழில் புரிபவர்கள் திருவிழாக்காலங்களில் சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.  மாலையில் கோவிலில் பிரசங்கம் நடைபெறும் நேரங்களில் மணலில் இருந்து கடலைக்கொட்டைகள் சாப்பிட்டுக் கொண்டு அரசியல், ஊர்க்கதைகள், குடும்ப , காதல்கதைகள் போன்றவற்றைக் கதைத்துக் கொண்டிருப்பதில் கிடைக்கும் சுகம் எவ்வளவு காசு கொடுத்தாலும் கிடைக்காது.  90களில் இலண்டன் ஈஸ்டம் கோவில் தேர்த்திருவிழாவிற்கு பிரான்சு, சுவிஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் இருந்து மக்கள் பலர் வருவார்கள்.  நாட்டுப்பிரச்சனையால் திக்குதிசைக்கு ஓடியவர்கள் பலர் இதில் நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்ததுண்டு.  சனம் கோயில் என்றால் காசு காசாக பணத்தினைக் கொடுப்பார்கள். ஆனால் ஊரில உதவ வேண்டுமென்றால் ஒன்றும் செய்யமாட்டார்கள். சில புலம் பெயர்ந்தநாடுகளில் இருக்கும் கோயில்கள் தாயகத்துக்கு பல்வேறு ஊதவிகள் செய்து வருகின்றன். முன்பு இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் வருமானத்தில் 1/3 பங்கு தாயகத்துக்கு உதவி செய்வதாக அறிந்தேன்(தற்போதையநிலமை  எனக்கு தெரியாது).  கோயில் திருவிழாக்கள் ஒன்றுகூடலை ஏற்படுத்தித் தருகிறது. அதேநேரத்தில் கோயிலுக்கு செலுத்தும் காணிக்கைகளை, ஊரில பணவசதியில்லாமல் அல்லல்படும் உறவுகளுக்கு உதவி செய்தால் அதிக பலனைப் பெறலாம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/03/2018 at 6:29 PM, Kavi arunasalam said:

கிருபன், நீங்கள் ‘அடையாளம் ‘ என்று கருதுவது நான் ‘அறியாமை’ என்று நினைக்கிறேன்.இருவரது பார்வைகளும் வேறுபடுகின்றன.

எங்கள் அடையாளம் இதுதான் என்று சேர்ட் இல்லாத வெறும் மேலில் புலிப்பல்லுச் சங்கலி தொந்தியில் சரிந்து உருள தேரிழுக்கும் கொண்டாட்டங்களுக்கு எல்லாம் நான் போவதில்லை. இவை காலம் போகப்போக இல்லாமல் போகும் என்று நினைத்த காலம் உண்டு. ஆனால் நம்மவர்கள் செல்வச் செழிப்பைக் காட்ட இன்னும் நிறையக் கோவில்கள் கட்டி சம்மரில் வரும் எல்லா ஞாயிறுகளிலும் தேங்காய் உடைத்து தேரிழுக்கும் நிலைதான் உருவாகும் என்று திடமாக நம்புகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

எங்கள் அடையாளம் இதுதான் என்று சேர்ட் இல்லாத வெறும் மேலில் புலிப்பல்லுச் சங்கலி தொந்தியில் சரிந்து உருள தேரிழுக்கும் கொண்டாட்டங்களுக்கு எல்லாம் நான் போவதில்லை. இவை காலம் போகப்போக இல்லாமல் போகும் என்று நினைத்த காலம் உண்டு. ஆனால் நம்மவர்கள் செல்வச் செழிப்பைக் காட்ட இன்னும் நிறையக் கோவில்கள் கட்டி சம்மரில் வரும் எல்லா ஞாயிறுகளிலும் தேங்காய் உடைத்து தேரிழுக்கும் நிலைதான் உருவாகும் என்று திடமாக நம்புகின்றேன். 

தாயகத்தில் புலிப்பல்லுக்கும் தொந்திக்கும் வசதியில்லாதவர்கள் புலம்பெயர்ந்து வந்தபின் அதனை நிறைவேற்றுகின்றார்கள்.

ஊரில் இருக்கும் போது கோவில்களையே எட்டிப்பார்க்காதவர்கள் இங்கு கோவில்களின் பரிபாலனசபை தலைவர்/காரியதரிசி/பொருளாளர்களாக இருந்து பரிபாலிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

தாயகத்தில் புலிப்பல்லுக்கும் தொந்திக்கும் வசதியில்லாதவர்கள் புலம்பெயர்ந்து வந்தபின் அதனை நிறைவேற்றுகின்றார்கள்.

ஊரில் இருக்கும் போது கோவில்களையே எட்டிப்பார்க்காதவர்கள் இங்கு கோவில்களின் பரிபாலனசபை தலைவர்/காரியதரிசி/பொருளாளர்களாக இருந்து பரிபாலிக்கின்றார்கள்.

அவர்களிடம் ஏன் அய்யர் மாரிடம் கூட தைபூசம் ஏன் என்ன காரணத்துக்கு கொண்டாடுவது ?  இப்படியான இரண்டு மூன்று கேள்விகளை கேட்டுப்பாருங்கோ  அநேகமா விடை சைபர்தான் .அவர்களின் திறமை கிழமைநாளில் இருக்கிற நல்ல நாளை விட்டு விட்டு சனி சண்டே க்குள் வரும்  அட்டமி நவமிக்குள்ளும் நல்லநேரம் கண்டு பிடித்து கல்யாணம் நடத்துவதுதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

சேர்ட் இல்லாத வெறும் மேலில் புலிப்பல்லுச் சங்கலி தொந்தியில் சரிந்து உருள தேரிழுக்கும்

கிருபன், ஆண்களைப் பற்றிச் சொன்னால் போதுமா? அம்மன்கள் கோபிக்கப் போகிறார்கள்.

17 hours ago, குமாரசாமி said:

ஊரில் இருக்கும் போது கோவில்களையே எட்டிப்பார்க்காதவர்கள் இங்கு கோவில்களின் பரிபாலனசபை தலைவர்/காரியதரிசி/பொருளாளர்களாக இருந்து பரிபாலிக்கின்றார்கள்.

குமாரசாமி, நீங்கள் சொன்னது உண்மைதான்

இங்கேஊரில் பள்ளிக்கூடம் போகாத ஒருவர் தமிழ் பாடசாலை நிர்வாகியாக இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/03/2018 at 8:12 AM, கிருபன் said:

எங்கள் அடையாளங்களைத் தக்க வைத்துக்கொள்ள இப்படியான திருவிழாக் கொண்டாட்டங்கள் தேவைதானே. 

எங்கள் அடையாளங்கள் என்றால் தமிழரதா??? இந்துக்களினதா ??? தொடர்ந்து எத்தனை நாட்கள் தக்கவைக்க முடியும்???

On 13/03/2018 at 5:38 PM, Kavi arunasalam said:

கிருபன், ஆண்களைப் பற்றிச் சொன்னால் போதுமா? அம்மன்கள் கோபிக்கப் போகிறார்கள்.

குமாரசாமி, நீங்கள் சொன்னது உண்மைதான்

இங்கேஊரில் பள்ளிக்கூடம் போகாத ஒருவர் தமிழ் பாடசாலை நிர்வாகியாக இருக்கிறார்.

பள்ளிக்கூடம் போகாத ஒருவர் அப்பள்ளியில் கற்பிப்பதுதான் தவறேயன்றி நிர்வாகத் திறமை பள்ளி செல்லாதவருக்கும் இருக்கலாம் கவி அண்ணா. எத்தனையோ கற்ற அறிவாளிகள் பலர் சமூகத்தின் மு நின்று ஒன்றைச் செய்ய முடியாத தன்னம்பிக்கை அற்றவர்களாக இருப்பதை நான் கண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.