Jump to content

வாங்கோ ஒடியல் கூழ் குடிக்கலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிண்ணத்தில் விட்டு ஒரு துண்டு தேங்காய் சொட்டும் எடுத்து கடித்து கடித்து குடித்துக் கொண்டிருங்கோ.செய்முறையை ஆறுதலாக எழுதுகிறேன்.இது மச்சக் கூழு; சைவக்காரர் கையை வைத்திடாங்தோங்கோ.

IMG-0900.jpg

IMG-0901.jpg

தேவையான பொருட்கள்.
ஒடியல் மாவு
மீன்
நண்டு(சிறியது)
இறால்
மரவள்ளிகிழங்கு
பயிற்றங்காய்
பலாக்கொட்டை
சோழன்
பச்சைமிளகாய்
பழப்புளி
உப்பு
செத்தல்மிளகாய்

செய்முறை
பெரிய சட்டி அல்லது குண்டானில் முக்கால்வாசி தண்ணீர் நிரப்பி மரக்கறி மீன் வகைகளைப் போட்டு கொதித்த பின் செத்தல்மிளகாய் அடித்து(உறைப்பு கூடுதலாக இருந்தால் நல்லது)போட்டு நன்றாக கொதித்து அவிந்த பின் பழப்புளியை கரைத்து விடவும்.கடைசியில் ஒடியல் மாவைக் கரைத்து விடவும்.இறக்க முதலே உப்பு புளி உறைப்பு உங்களுக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.

கூழ் பலரும் பல இடங்களில் பல மாதிரி செய்வார்கள்.இது நாங்கள் செய்த முறை மட்டுமே.கூழ் தனியே இருந்து குடிக்கமுடியாது.ஐந்து பத்து பேர் இருந்தால்த் தான் கலகலப்பாக இருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூழைக் காய்ச்சி வைச்சுப் போட்டு, பனங்கள்ளு வாங்கியண்டோடியாறன் போனாளை காணமப்பா....

அங்கையே அடிச்சிற்று வழக்கம் போல மப்பில விழுந்து கிடக்கிறாரோ தெரியேல்ல... 

சுவியர் வேற, அந்தரப்படுறார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

கூழைக் காய்ச்சி வைச்சுப் போட்டு, பனங்கள்ளு வாங்கியண்டோடியாறன் போனாளை காணமப்பா....

அங்கையே அடிச்சிற்று வழக்கம் போல மப்பில விழுந்து கிடக்கிறாரோ தெரியேல்ல... 

சுவியர் வேற, அந்தரப்படுறார்...

அவர் சைவக்காரர் கை வைக்க வேண்டாம் என்று சொல்லிபோட்டார்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

Résultat de recherche d'images pour "angry moving gif"

ஏனிந்த கடுப்பு?

5 hours ago, Nathamuni said:

கூழைக் காய்ச்சி வைச்சுப் போட்டு, பனங்கள்ளு வாங்கியண்டோடியாறன் போனாளை காணமப்பா....

அங்கையே அடிச்சிற்று வழக்கம் போல மப்பில விழுந்து கிடக்கிறாரோ தெரியேல்ல... 

சுவியர் வேற, அந்தரப்படுறார்...

வந்துட்டேன்யா வந்துட்டேன்.

Link to comment
Share on other sites

நிறத்தையும், இறுக்கத்தையும் பார்த்தா, கூழுக்கு தேவையில்லாத சாமான்கள் சேர்த்தமாதிரி தெரியுது, சத்தென்றுநினைத்து; பூசணி/உ.கிழங்கு, Chili beans, etc.

எழுதினாத்தானே ஒருமுடிவுக்கு வரலாம், கொன்னந்து வைச்சுட்டு பிலாவிலை பொறுக்கப்போட்டியளாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%  %E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D.jpg

ஒடியல் கூழ் அருந்துவதில் சில நுனுப்பங்கள் இருக்கின்றன, ஒரு சாதாரண பாத்திரத்தில் ஒடியல் கூழை விட்டு குடித்தால் அதன் சரியான சுவை தெரியாது, அதானால் பனை ஓலையில் 'பிளா' தயாரித்து அதில் கூழ் குடிக்கும்போது அதிக சுவயைத் தரும். அடுத்ததாக உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும்.

கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேச கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்க கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம்: கூழின் கார தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்.

ஒடியல் கூழ்

 

நான் இந்த ஒடியல் கூழை கண்ணால் கண்டதும் கிடையாது.

எங்கள் பகுதிகளில் கேழ்வரகு கூழ், அதில் பழைய சோற்றைக் சிறிது கலந்து, உரித்த வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு கடி கடித்துக்கொண்டே சாப்பிட்டால் அமிர்தமாய் இருக்கும். பெரும்பாலும் விவசாயம் செய்யும்ப்பொது வயல்வெளிகளின் நடுவே மதிய உணவாக இதை அருந்துவர்.

என்னுடைய தந்தையாருடன் வயலில் பயிர்செய்கையின்போது பலமுறை கேழ்வரகு கூழை அருந்தியுள்ளேன்.

201704051258176298_how-to-make-ragi-kooz  201707290148_kuww.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ராசவன்னியன் said:

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%  %E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D.jpg

ஒடியல் கூழ் அருந்துவதில் சில நுனுப்பங்கள் இருக்கின்றன, ஒரு சாதாரண பாத்திரத்தில் ஒடியல் கூழை விட்டு குடித்தால் அதன் சரியான சுவை தெரியாது, அதானால் பனை ஓலையில் 'பிளா' தயாரித்து அதில் கூழ் குடிக்கும்போது அதிக சுவயைத் தரும். அடுத்ததாக உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும்.

கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேச கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்க கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம்: கூழின் கார தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்.

ஒடியல் கூழ்

 

நான் இந்த ஒடியல் கூழை கண்ணால் கண்டதும் கிடையாது.

எங்கள் பகுதிகளில் கேழ்வரகு கூழ், அதில் பழைய சோற்றைக் சிறிது கலந்து, உரித்த வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு கடி கடித்துக்கொண்டே சாப்பிட்டால் அமிர்தமாய் இருக்கும். பெரும்பாலும் விவசாயம் செய்யும்ப்பொது வயல்வெளிகளின் நடுவே மதிய உணவாக இதை அருந்துவர்.

என்னுடைய தந்தையாருடன் வயலில் பயிர்செய்கையின்போது பலமுறை கேழ்வரகு கூழை அருந்தியுள்ளேன்.

201704051258176298_how-to-make-ragi-kooz  201707290148_kuww.jpg

சில உணவு வகைகளின் மூலவரலாறுகளை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. இலங்கையின் பலவும்  யாழ்ப்பாணத்தின் சிலவும், ஐரோப்பியர்களினால்  மறுசீரமைக்கப் பட்ட உணவுகள் ஆகும்.

தமிழகமும், தென் இந்தியாவும், பிரிட்டிஷ் காரர் வந்த 18ம் நூறாண்டு வரை சுதந்திரமானது. இலங்கையோ 16ம் நூறாண்டின் ஆரம்பம் முதல், பிரிட்டிஷ்காரர் வரும்வரை ஏறக்குறைய 250 வருடங்கள், போர்த்துக் கியருக்கு, பின்னர் டச்சுக்காரர்களுக்கும்  அடிமையானது. அவர்கள் 130 வகையான காய் கறிகளை அறிமுகம் செய்து, பல சமையல் முறைகளையும் அறிமுகம் செய்துள்ளனர்.

உருளைக்கிழங்கு, தக்காளி, பறங்கிக் காய் என்ற பூசணிக்காய், பீட்ரூட், கோவா, முள்ளங்கி என்று மிக நீண்ட லிஸ்ட் அவர்களது அறிமுகம்.

அந்த வகையில் இந்த, யாழ்ப்பாண கூழ், போர்த்துக்கேய அறிமுக ஒன்றாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களால்  அறிமுகமான மிளகாய், பீன்ஸ், மரவள்ளி இதனுள் சேர்க்கப் படுகின்றது. seafood stew என அழைக்கப் படும் இந்த கூழ்.... யாழ்ப்பாணத்தில் பிரசித்தமானது. ஆனாலும், நாம் இது தமிழரின் பாரம்பரியம் என (தவறாக) எண்ணுகிறோம்.

தமிழரின் பாரம்பரியம், கஞ்சி, ஆடிக்கூழ், கேழ்வரகு கூழ், கம்மங்க்கூழ்  போன்றவை.

முக்கியமாக, கறி போன்றே, கஞ்சி என்ற தமிழ் சொல், போர்த்துக்கேயரால் அறிமுகப் படுத்தப் பட்டதாக conjee என்ற பெயரில் ஆங்கில சொல்லாக ஆங்கில அகராதியில் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Knowthyself said:

நிறத்தையும், இறுக்கத்தையும் பார்த்தா, கூழுக்கு தேவையில்லாத சாமான்கள் சேர்த்தமாதிரி தெரியுது, சத்தென்றுநினைத்து; பூசணி/உ.கிழங்கு, Chili beans, etc.

எழுதினாத்தானே ஒருமுடிவுக்கு வரலாம், கொன்னந்து வைச்சுட்டு பிலாவிலை பொறுக்கப்போட்டியளாக்கும்.

உண்மை தான்.சாமானைக் கூடப் போட்டுட்டு சட்டி சின்னன் என்று சட்டை முறைத்து பார்த்து; கொண்டிருந்தது தான்.கொஞ்சம் இறுக்கம்.மற்றபடி சுவையாக இருந்தது.எல்லோரும் விரும்பி குடித்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

.....தமிழரின் பாரம்பரியம், கஞ்சி, ஆடிக்கூழ், கேழ்வரகு கூழ், கம்மங்க்கூழ்  போன்றவை.

கம்மங்கூழ் சில சமயம் அருந்தியுள்ளேன்.. ஆனால் கம்பு தானியத்தில் அதிகம் செய்யப்படுவது கம்பு உருண்டை..

சத்தான சுவையான உணவும்கூட.

பெரும்பாலும் கிராமங்களில் 'கார்த்திகை பண்டிகை'யன்று முதல் நாள் கம்பு உருண்டை, மற்றும் அரிசி உருண்டை செய்து முருகனுக்கு படைத்து உண்பதுண்டு.

201611301201318702_how-to-make-rye-urund  rice-flour-balls.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

ஒடியல் கூழ் அருந்துவதில் சில நுனுப்பங்கள் இருக்கின்றன, ஒரு சாதாரண பாத்திரத்தில் ஒடியல் கூழை விட்டு குடித்தால் அதன் சரியான சுவை தெரியாது, அதானால் பனை ஓலையில் 'பிளா' தயாரித்து அதில் கூழ் குடிக்கும்போது அதிக சுவயைத் தரும். அடுத்ததாக உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும்.

கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேச கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்க கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம்: கூழின் கார தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்.

வன்னியர் நீங்கள் சொல்வது போல ஊரில் பிழா மற்றும் பலா இலையில்த் தான் கூழ் குடிப்பது.இங்கே அத்தனை வசதிகளும் இல்லையே.

பொதுவாகவே சேர்ந்து சாப்பிட்டால் ஒரு தனி சுகம்.அதிலும் கூழ் என்றால் கட்டாயம் ஆட்கள் கூட இருந்தே தீர வேண்டும்.

பிள்ளைகள் மற்றும் சின்னவர்கள் பொதுவிலேயே மீன் முள்ளைக் கண்டால் பிரச்சனை பண்ணுவார்கள்.அதனால் முதலே மீனை அவித்து முள்ளெல்லாம் அகற்றி சதையை மட்டும் எடுத்து தான் கூழுக்கு போட்டது.

ஏன்?உங்களுக்கு ஏதாவது முள்ளு குற்றியதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அந்த வகையில் இந்த, யாழ்ப்பாண கூழ், போர்த்துக்கேய அறிமுக ஒன்றாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களால்  அறிமுகமான மிளகாய், பீன்ஸ், மரவள்ளி இதனுள் சேர்க்கப் படுகின்றது. seafood stew என அழைக்கப் படும் இந்த கூழ்.... யாழ்ப்பாணத்தில் பிரசித்தமானது. ஆனாலும், நாம் இது தமிழரின் பாரம்பரியம் என (தவறாக) எண்ணுகிறோம்.

தமிழரின் பாரம்பரியம், கஞ்சி, ஆடிக்கூழ், கேழ்வரகு கூழ், கம்மங்க்கூழ்  போன்றவை.

முக்கியமாக, கறி போன்றே, கஞ்சி என்ற தமிழ் சொல், போர்த்துக்கேயரால் அறிமுகப் படுத்தப் பட்டதாக conjee என்ற பெயரில் ஆங்கில சொல்லாக ஆங்கில அகராதியில் உள்ளது. 

நாதம் இதுவரை கூழ் எமது உணவு என்று தான் எண்ணியிருந்தேன்.புதிய தகவல்கள் பல தந்துள்ளீர்கள்.தகவலுக்கு நன்றி.

ஆடிக்கூழ் குடித்திருக்கிறேன்.கஞ்சியில் பல வகை.எனது தகப்னார் ஒரு கஞ்சி பிரியன்.அடிக்கடி இலைக் கஞ்சி தயார் செய்வார்.இப்ப கூட வீட்டில் பால்கஞ்சி செய்வார்கள்.பிள்ளைகளுக்கும் மிகவும் விருப்பம்.தடிமன் குணம் என்றால் புழிக்கஞ்சி உப்புக்கஞ்சி காச்சுவார்கள்.

15 minutes ago, ராசவன்னியன் said:

பெரும்பாலும் கிராமங்களில் 'கார்த்திகை பண்டிகை'யன்று முதல் நாள் கம்பு உருண்டை, மற்றும் அரிசி உருண்டை செய்து முருகனுக்கு படைத்து உண்பதுண்டு.

வன்னியர் அரிசி உருண்டை எமது வீட்டில் செய்வார்கள்.கம்பு உருண்டை கேள்விப்பட்டதே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன்?உங்களுக்கு ஏதாவது முள்ளு குற்றியதா?

அவர் தான் கண்ணாலே கண்டதில்லை என்கிறாரே..

4 minutes ago, ஈழப்பிரியன் said:

நாதம் இதுவரை கூழ் எமது உணவு என்று தான் எண்ணியிருந்தேன்.புதிய தகவல்கள் பல தந்துள்ளீர்கள்.தகவலுக்கு நன்றி.

ஆடிக்கூழ் குடித்திருக்கிறேன்.கஞ்சியில் பல வகை.எனது தகப்னார் ஒரு கஞ்சி பிரியன்.அடிக்கடி இலைக் கஞ்சி தயார் செய்வார்.இப்ப கூட வீட்டில் பால்கஞ்சி செய்வார்கள்.பிள்ளைகளுக்கும் மிகவும் விருப்பம்.தடிமன் குணம் என்றால் புழிக்கஞ்சி உப்புக்கஞ்சி காச்சுவார்கள்.

சித்திரை கஞ்சி குடித்திருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் நீங்கள் சொல்வது போல ஊரில் பிழா மற்றும் பலா இலையில்த் தான் கூழ் குடிப்பது.இங்கே அத்தனை வசதிகளும் இல்லையே.

பொதுவாகவே சேர்ந்து சாப்பிட்டால் ஒரு தனி சுகம்.அதிலும் கூழ் என்றால் கட்டாயம் ஆட்கள் கூட இருந்தே தீர வேண்டும்.

பிள்ளைகள் மற்றும் சின்னவர்கள் பொதுவிலேயே மீன் முள்ளைக் கண்டால் பிரச்சனை பண்ணுவார்கள்.அதனால் முதலே மீனை அவித்து முள்ளெல்லாம் அகற்றி சதையை மட்டும் எடுத்து தான் கூழுக்கு போட்டது.

ஏன்? உங்களுக்கு ஏதாவது முள்ளு குற்றியதா?

ஈழப்பிரியன், நீங்கள் யாரையும் ஒடியல்கூழ் விருந்திற்கு அழைக்காமல் நீங்கள் மட்டும் கமுக்கமாக குடித்துவிட்டால், எங்களுக்கு எப்படி அதன் சுவையோ, அதிலுள்ள முட்களோ தெரியும்..? :)

நான் இதுவரை ஒடியல்கூழை கண்டதே கிடையாது..! :unsure:

எனக்கு நீங்கள் தயாரித்த  ஒடியல்கூழை தவறாது பார்சல் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.:grin:

Er.ராசவன்னியன்,
நம்பர்:6, விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து,
துபாய் மெயின் ரோடு,
(துபாய் பஸ் ஸ்டாண்டு அருகில்)
துபாய்.

 

வீட்டிற்கான வழி காட்டி அறிவிப்பு பலகை உங்கள் பார்வைக்கு...!

11rvsig.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 minutes ago, ராசவன்னியன் said:

Er.ராசவன்னியன்,
நம்பர்:6, விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து,
துபாய் மெயின் ரோடு,
(துபாய் பஸ் ஸ்டாண்டு அருகில்)
துபாய்.

 

வீட்டிற்கான வழி காட்டி அறிவிப்பு பலகை உங்கள் பார்வைக்கு...!

11rvsig.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

ஈழப்பிரியன், நீங்கள் யாரையும் ஒடியல்கூழ் விருந்திற்கு அழைக்காமல் நீங்கள் மட்டும் கமுக்கமாக குடித்துவிட்டால், எங்களுக்கு எப்படி அதன் சுவையோ, அதிலுள்ள முட்களோ தெரியும்..? :)

நான் தனியே குடிக்கவில்லை.அதனால்த் தான் படத்தை மட்டும் போட்டு விபரம் எழுத சுணங்கிவிட்டது.  

ஊரில் கூழ் என்றால் கள்ளுமுட்டியும் பக்கத்தில் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

நான் தனியே குடிக்கவில்லை.அதனால்த் தான் படத்தை மட்டும் போட்டு விபரம் எழுத சுணங்கிவிட்டது.  

ஊரில் கூழ் என்றால் கள்ளுமுட்டியும் பக்கத்தில் இருக்கும்.

வருத்தப்படாதீர்கள், ஈழப்பிரியன் ஐயா..! sgentil.gif

ஆனால் ஒடியல்கூழை mange9.gifதவறாமல் துபாய் முகவரிக்கு அனுப்பிவிடவும்..சொல்லிப்புட்டேன்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

 

 

நாதம் அருமையான காணெளி.ரொம்பவும் சிரிப்பாக இருந்தது.

அப்படியே காப்பி பண்ணியிருப்பார் என்று எதிர் பார்க்கவில்லை.இந்தக் காணொலியை மட்டும் இணைத்திருக்காவிட்டால் உண்மையாக இருக்குமோ என்று குழம்பியிருப்பேன்.

2 minutes ago, ராசவன்னியன் said:

வருத்தப்படாதீர்கள், ஈழப்பிரியன் ஐயா..! sgentil.gif

ஆனால் ஒடியல்கூழை mange9.gifதவறாமல் துபாய் முகவரிக்கு அனுப்பிவிடவும்..சொல்லிப்புட்டேன்..! :)

சரி சரி கிடைத்ததும் தகவல் தரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

நாதம் அருமையான காணெளி.ரொம்பவும் சிரிப்பாக இருந்தது.

அப்படியே காப்பி பண்ணியிருப்பார் என்று எதிர் பார்க்கவில்லை.இந்தக் காணொலியை மட்டும் இணைத்திருக்காவிட்டால் உண்மையாக இருக்குமோ என்று குழம்பியிருப்பேன்.

என்ன சார், இவ்ளோ அப்பாவியாக இருக்கிறீர்கள்..? இந்த 'துபாய் காமெடி' பட்டி தொட்டியெல்லாம் மிகப்பிரபலம் ஆச்சே..! :)

ஆனால் ஓவ்வொரு முறையும் பர் துபாய் பேருந்து நிலையத்தை நான் கடக்கும்போது, இப்பொழுதும் இந்த 'துபாய் காமெடி' நினைவில் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

சித்திரை கஞ்சி குடித்திருக்கிறீர்களா?

சித்திரைக் கஞ்சி கோவில்களில் குடித்திருக்கிறேன்.அன்று தானே போர்த் தேங்காய் அடிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரிக்கு சம்மந்தம் இல்லையென்றாலும் 'துபாய் பஸ் ஸ்டாண்டு' சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதன் படத்தை இணைத்துள்ளேன்..! :)

துபாயின் பல பகுதிகளிலும் சிறுசிறு பஸ் ஸ்டாண்டுகள் உண்டு..

ஆனால் நகரின் முக்கிய வணிகப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பர் துபாய்(Bur Dubai) பஸ் ஸ்டாண்டு(அல் குபைபா) தான் மிகவும் பிரபலமாகவும், அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும் (குறிப்பாக சார்ஜா, அபுதாபி) செல்ல அதிக பேருந்துகளும் வந்து போகும் இடமாக உள்ளது.

இங்கிருந்து துபாய் இந்து கோவில்கள், மினா பஜார், தெய்ரா துபாய்க்கு(Deira Dubai) செல்ல கால்வாயை கடக்க அப்ரா ஆகியவை நடை தூரம்தான்..!

 

a9a5b48114a1d07378fda97bbb339af5.jpgBeauty+of+Bur+Dubai+Bus+stand+3+DSC06345

8972196966_2d2edc9705.jpg46957430.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஸ் நிறுத்தங்கள் குளிரூட்டப்பட்டவையாக இருக்கும் என கேள்விப்பட்டிருந்தேன். அப்படி தெரியவில்லையே.

மிகுந்த வெப்ப காலங்களில் எபபடி சமாளிக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பஸ் நிறுத்தங்கள் குளிரூட்டப்பட்டவையாக இருக்கும் என கேள்விப்பட்டிருந்தேன். அப்படி தெரியவில்லையே.

மிகுந்த வெப்ப காலங்களில் எபபடி சமாளிக்க முடியும்.

பஸ் நிறுத்துமிடங்கள் (Bus Stops) மட்டுமே குளிரூட்டப்பட்டவை.

பஸ் தரிப்பிடங்கள் (Bus Stand) அல்ல.

அவ்வளவு பரந்த தரிப்பிடத்தை முழுவதும் குளிரூட்டப்பட 'டப்பு' நிறைய வேண்டுமே..? :unsure:

இக்கட டப்பு லேது, நைனா..! :grin:

 

Dubai+-+Airconditioned+bus+stop+shelter.  DubaiAC_main_0713.jpg

ac-bus-stop.jpg  P1020918.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி பதியப்பட்ட இரண்டே நாளில் 414 பார்வைகளை தொட்டிருக்கு.. :)

ஒடியல் கூழுக்கு அவ்வளவு 'கிராக்கி'யா..? :unsure:

திருவாளர் ஈழப்பிரியன், இதற்காகவே மறுபடியும் ஒடியல் கூழ் காய்ச்சனும்!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.