Jump to content

காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட்


Recommended Posts

காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட்

 

 

காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட் சூடான சோற்றில் போட்டு சாப்பிடவும், இட்லி, சப்பாத்தி போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ளவும் மிக மிக சுவையாக இருக்கும்.

 
 
காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட்
 
தேவையான பொருட்கள் :

மட்டன் - 1 கிலோ
நெய் - 100 கிராம்
வரமிளகாய் - 10
மல்லி - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
முந்திரி பருப்புகள் - 15
பூண்டு இஞ்சி பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
 மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பட்டை - இரண்டு விரல் அளவு
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
தயிர் - 150 மிலி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு.
எலுமிச்சம் சாறு - 1 டீஸ்பூன்

201802281513493198_1_roast._L_styvpf.jpg

செய்முறை :

மட்டனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து 50 கிராம் நெய் ஊற்றி சூடானதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் பூண்டு இஞ்சி பேஸ்ட் மற்றும்  மஞ்சள் தூள், விரல் அளவு பட்டை போட்டு லேசாக வதக்கவும்.

பூண்டு இஞ்சி பேஸ்ட் வதங்கியதும் வெட்டிய மட்டன் துண்டுகளை அதில் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
போட்டு இறக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வரமிளகாய்களுடன் முந்திரி பருப்பு மற்றும், மல்லி, சீரகம், சோம்பு, மிளகு, கிராம்பு, ஏலக்காய் ஒவ்வொன்றாக போட்டு வறுத்து ஆற வைக்கவும்.

பின்னர் வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் எலுமிச்சை பழ சாறு கலந்து அரைத்துக்கொள்ளவும்.

குக்கரின் உள்ள கறியை தனியாக எடுத்துக்கொண்டு கறி வெந்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.

அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

அதில் மீதி இருக்கும் 50 கிராம் நெய் விட்டு சூடாக்கவும், சூடாகிய பின் இப்போது வறுத்து அரைத்த மசாலாவை அதில் போட்டு மேற்கொண்டு தயிர் ஊற்றி வதக்கவும்.

பச்சை வாசனை எல்லாம் போய் மசாலா நன்றாக வதங்கி வந்த பின் அதில் வேக வைத்த கறியை போட்டு பிரட்டவும்.

பின்னர் கறி வெந்த தண்ணீரை ஊற்றி அடுப்பை மீடியத்தில் வைத்து 10 நிமிடங்கள் அவ்வப்போது வதக்கியப்படி இருக்கவும். பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கவும்.

சூப்பரான காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட் ரெடி.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குக்கரை எத்தனை விசிலுக்கு விடுவது என்று போடவில்லையே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நவீனன் said:

மட்டன் - 1 கிலோ
நெய் - 100 கிராம்

மட்டனை கண்ணில காட்டுறதே பெரியபாடு.நெய்யும் சேர்த்தா உதை தான் விழும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க அந்தமாதிரி இருக்குது. அதுசரி மட்டனுக்குள் கொட்டன் கொட்டனாய் முழுசிறது எலும்பா.... எலும்பென்றால் உள்ளிருக்கும்  மஞ்ஞை சூப்பராய்  இருக்கும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

குக்கரை எத்தனை விசிலுக்கு விடுவது என்று போடவில்லையே .

அதெல்லாம் பிரச்சணை இல்லையக்கா.

பெருவிரல் நுனியை, சுட்டுவிரல் நுனி தொடுற மாதிரி வைச்சு,  அதால நாக்கை மடித்து, ௧ணக்கா நூறு  தரம், (கூடக்குறைய கூடாது) விசில் அடித்தால், கறி எப்படி வந்தாலும், அத்தார் எழும்பி வீட்டால ஓடீடுவார்.

சும்மா பகிடிக்கு... அது சரி கேட்கோணும் எண்டு மறந்து போனன், எங்கண்ட ரதியக்கா சிலமனையே காணம்... கதைச்சணியலோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா எனக்கு எல்லாம் போன் நம்பர் தருவாவோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ரதி அக்கா எனக்கு எல்லாம் போன் நம்பர் தருவாவோ???

உங்கண்ட வீட்ட வந்து போனதாய் சொன்னா... நீஙகள் நம்பரே இல்ல யெண்டுறியள்...

சரி எங்க இருந்தாலும் நல்லா இருக்க வாழ்த்துவம்... என்ன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ரதி அக்கா எனக்கு எல்லாம் போன் நம்பர் தருவாவோ???

 தங்கச்சியின்ரை  ரெலிபோன் நம்பர் என்னட்டை  கிடக்கு....தரட்டே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

 தங்கச்சியின்ரை  ரெலிபோன் நம்பர் என்னட்டை  கிடக்கு....தரட்டே?

இருந்தா நீங்களே கதைக்கிறதுதானே???/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.