Jump to content

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி


Recommended Posts

52 வது கேள்வி வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.....

 

1. கந்தப்பு  56

2. கறுப்பி  53

3. suvy   52

4. பகலவன்  52

5. கிருபன்  52

6. குமாரசாமி  52

7. vasanth1  51

8. kalyani  49

9. nunavilan  48

10. nesen  48

11. ஈழப்பிரியன்  48

12. Eppothum Thamizhan   47

13. தமிழினி  46

14. சுவைப்பிரியன்  46

15. வாதவூரான் 45

16. வாத்தியார்  44

Link to comment
Share on other sites

  • Replies 375
  • Created
  • Last Reply

இன்றைய போட்டி.....

 

சமபலத்துடன் பிரான்ஸ்-பெல்ஜியம்

 

 
france-belgium

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெறும் பிரான்ஸ்-பெல்ஜிய அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் கோல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காலிறுதியில் பிரான்ஸ் அணி உருகுவேயையும், பெல்ஜியம் பிரேஸில் அணியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின. 
இந்நிலையில் செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளும் சிறந்த முன்கள தாக்குதல் ஆட்டக்காரர்கள் உள்ள நிலையில் கோல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. 
கடந்த 1986-இல் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் 2-4 என பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. அதன் பின் இரு அணிகளும் 8 நட்பு ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் பெல்ஜியம் 2 முறை வென்றுள்ளது. இரண்டாவது முறையாக உலகக்கோப்பை அரையிறுதிக்கு பெல்ஜியம் முன்னேறியுள்ளது.
நடப்பு உலகக் கோப்பையில் இளம் வீரர்களை அதிகம் கொண்ட இரண்டாவது அணியாக பிரான்ஸ் உள்ளது. 19 வயது முன்கள வீரர் மாப்பே, தாக்குதல் ஆட்டக்காரர்கள் பவேர்ட், லுகாஸ் ஹெர்ணான்டஸ் ஆகியோர் இதில் பிரதானமாக உள்ளனர். கிரைஸ்மேன், போக்பா, போன்ற முன்கள வீரர்கள் எதிரணியின் தற்காப்பு ஊடுருவி கோலடிக்கும் திறன் பெற்றவர்கள். 
1998-இல் உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த டெஸ்சாம்ப்ஸ் தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ளார். அவரின் கீழ் கட்டுக்கோப்பான துடிப்பான அணியாக உருவெடுத்துள்ளது.
அதே நேரத்தில் ராபர்ட்டோ மார்டினெஸ் தலைமையில் பெல்ஜிய அணி உலகக் கோப்பையை எவ்வாறு எதிர்கொள்ளும் என சந்தேகம் எழுந்த நிலையில் அந்த அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. வீரர்களின் தனிப்பட்ட திறமையை ஒட்டுமொத்த அணியின் திறமையாக மாற்றி மார்டினெஸ் சாதனை படைத்துள்ளார். பிரான்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரராக இருந்த தியரி ஹென்றி தற்போது பெல்ஜியத்தின் துணை பயிற்சியாளராக உள்ளார். தாக்குதல் ஆட்ட முறையை பலப்படுத்திய ஹென்றியால் பெல்ஜிய அணி இதுவரை 14 கோல்களை அடித்துள்ளது. 
பெல்ஜிய கோல்கீப்பர் திபாட் கோர்டோய்ஸ், பிரான்ஸின் ஹியுகோ லோரிஸ் ஆகியோர் எதிரணியின் கோல் வாய்ப்புகளை தடுப்பதில் பிரதானமாக உள்ளனர். 
பெல்ஜியத்தின் தற்காப்பு வீரர் தாமஸ் மியுனியர் இல்லாததது பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் அரையிறுதி ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் பெல்ஜியம் போட்டி  சுவியாரா கிருபனா யாழ்களப் போட்டியில் வெல்லப்போகிறார்கள் எனத்தீர்மானிக்கப்போகிறது. 

அப்ப  நான் வெல்லமாட்டேனா?.   இங்கிலாந்து அல்லது குரோசியா உலகக்கிண்ணத்தினைக் கைப்பற்றினால் சந்தர்ப்பம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

பிரான்ஸ் பெல்ஜியம் போட்டி  சுவியாரா கிருபனா யாழ்களப் போட்டியில் வெல்லப்போகிறார்கள் எனத்தீர்மானிக்கப்போகிறது. 

அப்ப  நான் வெல்லமாட்டேனா?.   இங்கிலாந்து அல்லது குரோசியா உலகக்கிண்ணத்தினைக் கைப்பற்றினால் சந்தர்ப்பம் இருக்கிறது.

இன்று பெல்ஜியம் கொடுக்கும் மரண அடியில் பிரான்ஸ்காரர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மொஸ்கோவில் இருந்து பாரிஸுக்கு ஓடும்போது தெரியும்?

இங்கிலாந்து அதிர்ஷ்டத்தால் இவ்வளவு தூரம் வந்திருக்கு. அதிகம் ஆசைப்படக்கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

உலகமே எதிர்பார்த்திருக்கும் அற்புதமான தருணங்கள் மிக விரைவில்.....!  ?

Link to comment
Share on other sites

பிரான்ஸ் வெற்றி.

suvy,  Eppothum Thamizhan, ஈழப்பிரியன், வாதவூரான், வாத்தியார்  இவர்களுக்கு2 புள்ளிகள் கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

                                                                   பிரான்ஸ் வெற்றி.

suvy,  Eppothum Thamizhan, ஈழப்பிரியன், வாதவூரான், வாத்தியார்  இவர்களுக்கு 2 புள்ளிகள் கிடைக்கிறது.

Link to comment
Share on other sites

53  வது கேள்வி க்கு     இது வரை நடந்து முடிந்த போட்டிக்கு மட்டும்  வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.....

 

1. கந்தப்பு  56

3. suvy   54

2. கறுப்பி  53

4. பகலவன்  52

5. கிருபன்  52

6. குமாரசாமி  52

7. vasanth1  51

8. ஈழப்பிரியன்  50

9. Eppothum Thamizhan   49

10. kalyani  49

11. nunavilan  48

12. nesen  48

13. வாதவூரான் 47

14. தமிழினி  46

15. சுவைப்பிரியன்  46

16. வாத்தியார்  46

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம மாஸ்டர் கறுப்பி கிருபனின் ஆளாய் இருப்பாரோ......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி புள்ளிகள் எடுக்க சாண்ஸ்சே இல்லை.‭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கலைஞன் said:

மெதுவாக ஆனால் உறுதியாக இலக்கினை நோக்கி முன்னேறுகின்றார் சிட்னி கந்தப்பு.

ஆமையும் முயலும் கதைதான்  நினைவில் வருகிறது.  காலிறுதிவரைக்கும் வேகமாக ஓடி புள்ளிகள் பெற்றுவிட்டேன். இனி புள்ளிகள் கிடைக்காது.  நிதானமாக ஓடி பிரான்ஸ் வெல்வதினால் சுவியர் முதல் இடம் பிடிப்பார். எனினும் இங்கிலாந்து அல்லது குரோசியா அணியினர்  சிலவேளைகளில் என்னைக் காப்பாற்றுவார்கள். 

Link to comment
Share on other sites

வரலாறு படைக்குமா குரோஷியா?: அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதல் அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதல்

 

 
crotia-training2

பயிற்சியில் குரோஷிய வீரர்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் வென்று உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைக்குமா குரோஷியா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இங்கிலாந்து அணி காலிறுதியில் ஸ்வீடனையும், குரோஷியா போட்டியை நடத்தும் ரஷியாவையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறின.
கடந்த 1998-இக்கு பின் தற்போது தான் குரோஷியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் 1966 சாம்பியனான இங்கிலாந்தும் 1990-இக்கு பின் தற்போது தான் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 


இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் துவக்கம் முதலே தனது தாக்குதல் ஆட்டத்தால் எதிரணிகள் மீது கோல் மழை பொழிந்தது. மொத்தம் 11 கோல்களை அடித்துள்ளனர். இதில் 8 கோல்கள் திட்டமிட்டு அடிக்கப்பட்டவையாகும். தாக்குதல் முறை மற்ற அணிகளைக் காட்டிலும் வித்தியாசமாக காணப்படுகிறது. வழக்கமான ஆட்டமுறைக்கு அதன் பயிற்சியாளர் செளத்கேட் கடைபிடித்து புதிய உத்திகளை கடைபிடித்து வருகிறார். மேலும் தற்காப்பு அரணும் வலுவான உள்ளது. கைல் வாக்கர், ஜான்ஸ்டோன்ஸ், ஹாரி மேகியூர் போன்றவர்கள் நடுக்களத்திலும், கோல்கீப்பர் பிக் போர்டும் எதிரணிகளின் கோல் முயற்சிகளை முறியடித்து விடுகின்றனர். அதே நேரத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் சிறப்பாக பந்துகளை கடத்தி நேர்த்தியாக அனுப்புகிறார்.


குரோஷியா அணியும் முதல் சுற்றில் தோல்வியே காணாமல் அரையிறுதிக்கு முன்னேறியது. மெஸ்ஸின் ஆர்ஜென்டீனாவை 3-0 என வீழ்த்தியதும் குரோஷியா அனைவரதும் கவனத்தையும் கவர்ந்து விட்டது. உலகின் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரர்களில் ஒருவரான மரியோ மண்டுஸுகிக், நடுக்கள வீரர் கேப்டன் லுகா மொட்ரிக் , இவான் ரக்டிக் ஆகியோர் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடக்கூடியவர்கள்.
64 ஷாட்களில் 41 கோல்பகுதிக்கு உள்ளேயே சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.


குரோஷிய கோல்கீப்பர் டேனிஜல் சுபாஸிக் அபார பார்மில் உள்ளார். குறிப்பாக டென்மார்க், ரஷியா அணிகளுக்கு எதிரான பெனால்டி ஷூட் அவுட்டில் எதிரணி முயற்சிகளை முறியடித்தார். பெனால்டி பகுதியில் 8 ஷாட்களை தடுத்தார். அரையிறுதியிலும் சுபாஸிக் பங்கு அதிகம் இருக்கும்.
இரு அணிகளில் இங்கிலாந்து சற்று கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது. ஆனால் குரோஷிய அணியினர் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடிய ஆபத்தான அணியாகும் என்பதால் இந்த அரையிறுதி ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து இன்றைய போட்டியில் வெல்லும்போது சில கார்கள், கடைகள் உடைக்கப்படலாம்! தோற்றால் பல கார்களும் கடைகளும் உடைக்கப்படும்!!

எனவே பிரான்ஸ் உலகக்கிண்ணத்தை வெல்லவேண்டும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

இங்கிலாந்து இன்றைய போட்டியில் வெல்லும்போது சில கார்கள், கடைகள் உடைக்கப்படலாம்! தோற்றால் பல கார்களும் கடைகளும் உடைக்கப்படும்!!

எனவே பிரான்ஸ் உலகக்கிண்ணத்தை வெல்லவேண்டும். ?

The Battle of Waterloo was fought on Sunday, 18 June 1815, near Waterloo in present-day Belgium, then part of the United Kingdom of the Netherlands. A French army under the command of Emperor Napoleon Bonaparte was defeated by two of the armies of the Seventh Coalition: a British-led Allied army under the command of the Duke of Wellington, and a Prussian army under the command of Gebhard Leberecht von Blücher, Prince of Wahlstatt. The battle marked the end of the Napoleonic Wars.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரோஷியாவில் எமது கிளைகள் கிடையாது,அதனால் இங்கிலாந்துக்கு நாம் எமது ஆதரவை நல்குகின்றோம்....!  tw_blush:

வெற்றிக்கோப்பை நெப்போலியனுக்கே......!

Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது 1815ல் நெப்போலியன் தோற்ற இடம் வொட்டலூர்.  பெல்ஜியத்தினைக் கடந்து நெப்போலியனின் பிரெஞ்சுப் படை இங்கிலாந்திடம் தோற்றது. இது மீண்டும் நடக்குமா?      ஆனால் குரோசியாவின் கோல்கீப்பரின் விளையாட்டினைப்பார்க்கும் போது குரோசியாவை வெல்வது அவ்வளவு இலகுவானதானது அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறுகள் மாற்றி எழுதப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை ......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த Greizman வேற ஒழுங்கா கோல்  அடிக்கிறான் இல்லை. எண்ட பாடு கொஞ்சம் கஷ்டம்தான்.

Link to comment
Share on other sites

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

                                                                   பிரான்ஸ், குரோஷியா

53  வது கேள்வி வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.....

 

1. கந்தப்பு  56

3. suvy   54

2. கறுப்பி  53

4. பகலவன்  52

5. கிருபன்  52

6. குமாரசாமி  52

7. vasanth1  51

8. ஈழப்பிரியன்  50

9. Eppothum Thamizhan   49

10. kalyani  49

11. nunavilan  48

12. nesen  48

13. வாதவூரான் 47

14. தமிழினி  46

15. சுவைப்பிரியன்  46

16. வாத்தியார்  46

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துக்காரர் விழுந்துகிடந்து அழுவதைப் பார்க்க சந்தோசமா இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

suvy எனக்கு என்னவோ உலக கிண்ண கோப்பையில் Croatia வின் பெயர் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது போல தோன்றுகிறது.  ஆனால் Griezmann ஹாட்ரிக் அடித்து பிரான்ஸ் வென்றால் எனக்குத்தான் வெற்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Eppothum Thamizhan said:

suvy எனக்கு என்னவோ உலக கிண்ண கோப்பையில் Croatia வின் பெயர் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது போல தோன்றுகிறது.  ஆனால் Griezmann ஹாட்ரிக் அடித்து பிரான்ஸ் வென்றால் எனக்குத்தான் வெற்றி .

அதிக கோல் அடிப்பவர் இடத்தில் நானும் "கிரிஷ்மான்" தான் போட்டிருக்கிறன். பார்ப்போம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.