Jump to content

அத்தையின் ஆண்பால் = அத்தானின் பெண்பால்


Recommended Posts

மாமா - மாமி

மச்சான் - மச்சாள்

சித்தப்பா - சின்னம்மா

அத்தை - ?

அத்தான் - ?

எமது பாடசாலை வகுப்பு வட்ஸ் அப் குழுமத்தில் இந்த வினாக்களை வினாவினேன். திருப்தியான பதில் கிடைக்கவில்லை. பின்னர், யாழ் கருத்துக்களத்திலும் திண்ணையில் கேட்டுப்பார்த்தேன். பதில்கள் திருப்தி இல்லை.

இங்கு எனது சந்தேகங்கள் எவை என்றால் இவை 1- தூய தமிழ்ச்சொற்களா, 2- பழந்தமிழர் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளனவா, 3- அத்தை, அத்தான் ஆகிய சொற்பதங்கள் இந்திய தமிழ்சினிமாவின் இறக்குமதிகளில் சிலவோ என்பது.

*******

யாரிடம் கேட்கலாம்? இன்று மாலை இணுவில் தமிழ் பண்டிதர், கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களை தொலைபேசியில் அழைத்து அவரிடம் எனது வினாக்களை கேட்டேன்.

அவர் சொன்னவை என்ன என்றால்..

அக்கா - அண்ணா

இது போல்

அத்தை - அத்தன்

அதாவது அத்தையுக்கு ஆண்பால் அத்தன் என்று வருமாம். அத்தன் என்றால்  அப்பா/தந்தை. அத்தன், அத்தை ஆகியவை தூய தமிழ்ச்சொற்கள் கலப்படங்கள் இல்லை எனக்கூறினார்.

அடுத்ததாக,

அத்தான் - அத்தாள்

அதாவது அத்தானுக்கு பெண்பால் அத்தாள் என்று அமையலாம் என்று கூறினார்.

இந்த அத்தாள் எனும் சொல் தற்போது பயன்பாட்டில் இல்லையாம். காலப்போக்கில் பாவனையில்லாமல் வழக்கொழிந்து இருக்கலாம் என்று கூறினார்.

கூழிலில் தேடல் செய்து பார்த்தபோது அத்தாள் என்றால் அம்மா/தாய் என்று பொருள் உள்ளது.

அப்படி என்றால்,

அத்தன் - அத்தாள் என்று அல்லவா வரும் அத்துடன் அத்தை - அத்தான் என்றும் வரும் அல்லவா?

அத்தையின் ஆண்பால் =  அத்தானின் பெண்பால்

*******

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தப்பாவுக்குச் சித்தி....அதிகம் பொருந்தும் போல...உள்ளது!

சின்னம்மாவுக்குச் ....சின்னையா பொருந்தும் போல உள்ளது!

அத்தை என்பது...ஈழத்துத் தமிழில் இருக்கவில்லை என்று நினைக்கிறேன்!

எனக்குத் தெரிய....தமிழ்ப் படங்களின் மூலம் தான்...இந்த ...அத்தை..அத்தை மகள்...என்று ஈழத்தமிழுக்குள் இந்த வார்த்தை புகுந்திருக்க வேண்டும்!

ஊரில்...அத்தை மகளை கட்டினான் என்று கூறுவதில்லை!  முறை மச்சாளைக் கட்டினான் என்று தான் கூறுவார்கள்!

எனினும் அத்தையின் மகளைக் கட்டுவதனால்...பரந்த...மரபணுப் பரம்பல் ஏற்பட மாட்டாது! பிறக்கும் குழந்தைகள்...ஆரோக்கியமாகவும், உடல் குறைபாடு அற்றவர்களாகவும் இருக்க மாட்டார்கள்!

இது வட இந்தியாவின்...யானைகளுக்குக் கூடத் தெரிந்திருந்தது! ஆமாம்....யானைகள்..தங்கள் இரத்த உறவுகளை...மனைவிகளாக ...கணவர்களாக ஏற்றுக் கொள்வதில்லையாம்!

இது..நமது முன்னோருக்குத் தெரியாமல் இருந்திருக்குமா என்பது விவாத்ததுக்கு உரியதே!

அத்தை மகனே....அத்தான் என்று அழைக்கப் படுகிறார்!

எனவே...நிச்சயம்...அத்தையின் ஆண்பால் ...அத்தானாக முடியாது!

அத்தன் என்று சொல்லும் போது...தமிழ் மணக்கவில்லை!

மலையாளம் தான் மணக்கிறது!

அச்சன்....தந்தை!

 

கர்ணன் படத்தில்.....குந்தி தேவியை....கிருஷ்ணன் விழிக்கும் போது....அத்தை..என்று தான் விழிக்கிறார்!

கண்ணனுக்கும்...குந்தி தேவிக்கும் உள்ள உறவு முறையை...நீங்கள் சொன்னால்...நான் பெண்பால் சொல்லுகின்றேன்!

இது எப்படி இருக்கு....கலைஞன்?

 

Link to comment
Share on other sites

அத்தை மகனே அத்தான் எனவே

அத்தையின் ஆண்பால் அத்தான் ஆகமுடியாது என்று கூறுகின்றீர்கள்.

சிந்தித்து பார்ப்பதற்கு மயக்கமாக உள்ளது.

ஆண்பால் பெண்பாலில் ஒன்றுக்கு நிகரான இன்னோர் சொல்லை வழங்கும்போது உறவுமுறையின் அடிப்படையில் விதிகள் உள்ளனவா?

தம்பி - தங்கை

இங்கு சகோதர உறவு முறை காணப்படுமாயின்

அத்தை - அத்தான்

இங்கே ஏன் தாய் மகன் உறவு முறை அமையமுடியாது?

நாங்களும் வீட்டில் அத்தை என்ற சொல்லை பாவிப்பதில்லை. அதற்காக நாங்கள் பயன்படுத்துவது இல்லை என்பதற்காக அது தமிழ் சொல் இல்லை என்றும் கூறமுடியாது. அதேசமயம் அத்தை, அத்தான் ஆகிய சொற்கள் இந்திய தமிழ் சினிமாவின் இறக்குமதியாய் இருக்குமோ என்றும் சந்தேகம் வலுக்கின்றது.

மகாபாரத கதை உருவாக்கத்தின் மூலம் தமிழ்மொழி இல்லை என்றால் அத்தை எனும் சொல் தமிழாய் இருக்காதோ? இந்திய தமிழ் சினிமாவில் ஏதும் நடக்கலாம்.

அத்தன் எனும் சொல் பழந்தமிழர் இலக்கியத்தில் உள்ளது போன்று பண்டிதர் அவர்கள் மேற்கோள் ஒன்றை சொல்லிக்காட்டினார் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணனின் தந்தை வாசுதேவரின் தங்கை குந்திதேவி. 

வாசுதேவர் + தேவகியின் = மகன் கண்ணன்.

நந்தகோபன்+யசோதை = வளர்ப்பு மகன் கண்ணன்.

அதனால்தான் குந்திதேவியை அவர் அத்தை என அழைக்கிறார்.

சுவியும் பிறந்த நாளில் இருந்தே தனது தந்தையின் தங்கையை அத்தை என்றே அழைத்து வந்துள்ளார். இதனால் உங்களின் வாதங்கள் முடக்கு வாதமாய் அதாவது முடங்கிப் போய் விடுகிறது....!tw_blush:

அத்தையின் மகனை நான் அத்தான் என்றே கூப்பிடுவேன். மகள்  மச்சாள்  முறைதான், ஆனால் கூப்பிடுவது டியே ,வாடி போடி என்றுதான். அப்படியே அவளும் என்னை அத்தான் என்றுதான் கூப்பிட வேண்டும்.அதுதான் முறையும் கூட. ஆனால் அவளுக்கு என்னை விட விலங்குகளின் மீது பிரியம் அதிகம் அதனால் ஏதாவதொரு விலங்கின் பெயரால்தான் அழைப்பாள். நேற்றுகூட போனில் அப்படித்தான்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

கண்ணனின் தந்தை வாசுதேவரின் தங்கை குந்திதேவி. 

வாசுதேவர் + தேவகியின் = மகன் கண்ணன்.

நந்தகோபன்+யசோதை = வளர்ப்பு மகன் கண்ணன்.

அதனால்தான் குந்திதேவியை அவர் அத்தை என அழைக்கிறார்.

சுவியும் பிறந்த நாளில் இருந்தே தனது தந்தையின் தங்கையை அத்தை என்றே அழைத்து வந்துள்ளார். இதனால் உங்களின் வாதங்கள் முடக்கு வாதமாய் அதாவது முடங்கிப் போய் விடுகிறது....!tw_blush:

அத்தையின் மகனை நான் அத்தான் என்றே கூப்பிடுவேன். மகள்  மச்சாள்  முறைதான், ஆனால் கூப்பிடுவது டியே ,வாடி போடி என்றுதான். அப்படியே அவளும் என்னை அத்தான் என்றுதான் கூப்பிட வேண்டும்.அதுதான் முறையும் கூட. ஆனால் அவளுக்கு என்னை விட விலங்குகளின் மீது பிரியம் அதிகம் அதனால் ஏதாவதொரு விலங்கின் பெயரால்தான் அழைப்பாள். நேற்றுகூட போனில் அப்படித்தான்.....!  tw_blush:

நன்றி....சுவியர்!

கலைஞனின் கேள்விக்கான பதில் உங்களிடம் நிச்சயம் இருக்க வேண்டுமே!

உங்கள் அத்தையின்கணவரை...எவ்வாறு அழைக்கின்றீர்கள்?

அது தான் நிச்சயமாக....அத்தையின் ஆண் பாலாக இருக்கும்!

எனது பக்கத்துக்கு வீட்டுக்காரி...தனது தகப்பனை.......பப்பா என்று தான் அழைப்பார்!

நானும் அவ்வாறு அழைக்க வெளிக்கிட்டு....பூவரசம் தடியொன்று முறிஞ்சு போனது தான்....விளைவு!

சரி...அதை விடுங்கள்!

கிறிஸ்துவுக்குப் பின்னர் ஏழாம் நூற்றாண்டு வரையும் சென்று பார்த்தேன்!

திருநாவுக்கரசு நாயனார்.....பிராமணர் அல்லாது ஒருவர்!

அவரது தேவாரமொன்றில்...

 

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும்
                                          மாமியும் நீ, 
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும்
                                சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என்
                               நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு
                                 ஊர்ந்த செல்வன் நீயே.

 

 

'அத்தை' முறை வழக்கில் இருந்திருந்தால்...மாமன்..மாமி...என்று குறிப்பிடாமல்...அத்தை....அத்தன் என்று சொல்லியிருக்க மாட்டாரா, சுவியர்?

உறவு முறைகள்....மிகவும் குழப்பமானவை என்பதுடன்...அந்தந்தப் பிரதேசங்களின் பேச்சு வழக்குக்கு ஏற்ப மாறுபடுபவை!

அத்தான் எனும் போது...கணவனை அன்புடன் அழைக்கும் அதே உறவுச் சொல், அத்தார் எனும் போது ..அக்காவின் கணவன் என்று மரியாதைச் சொல்லாக மாறி நிற்கிறதே!

உங்களைப் போல...நாலு பேர் இங்க உலாவிற படியால...கன விசயங்களை அறியக் கூடியதாக இருக்கு!

 அத்தையின் மகனை நான் அத்தான் என்றே கூப்பிடுவேன். மகள்  மச்சாள்  முறைதான், ஆனால் கூப்பிடுவது டியே ,வாடி போடி என்றுதான். அப்படியே அவளும் என்னை அத்தான் என்றுதான் கூப்பிட வேண்டும்.அதுதான் முறையும் கூட. ஆனால் அவளுக்கு என்னை விட விலங்குகளின் மீது பிரியம் அதிகம் அதனால் ஏதாவதொரு விலங்கின் பெயரால்தான் அழைப்பாள். நேற்றுகூட போனில் அப்படித்தான்.

ஒருவரை...எப்படி அழைப்பது என்பது...அவரது தாய்...தந்தையர் சொல்லிக்கொடுப்பது தானே, சுவியர்!

ஆனால் வாடி..போடி...என்று அழைப்பது அன்பின் வெளிப்பாடு எனினும்....அதுவும் ஒரு வகையில்....பெண்ணடிமைத் தனத்தின் ஆரம்பம் என்று தான் நான் கருதுகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவரை மாமா என்றுதான் சொல்வது. மேலும் அவர் எனது தாயாரின் சகோதரரும் கூட. (அவர்கள் மாற்றுசடங்கு). மற்றது பொதுவாய் மச்சாள்  என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நாங்கள் ஒரே வீட்டிற்குள் இருந்து வளர்ந்தபடியால்,அம்மம்மாவுடனும். (நான் வயிற்றில், எனது தந்தையார் காலமாகி விட்டார்) அப்படி பேசிக் கொள்வது வழக்கம்.  tw_blush:

அப்பர் சிவனை அனைத்துமாய் பார்க்கிறார்.  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, suvy said:

நான் அவரை மாமா என்றுதான் சொல்வது. மேலும் அவர் எனது தாயாரின் சகோதரரும் கூட. (அவர்கள் மாற்றுசடங்கு). மற்றது பொதுவாய் மச்சாள்  என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நாங்கள் ஒரே வீட்டிற்குள் இருந்து வளர்ந்தபடியால்,அம்மம்மாவுடனும். (நான் வயிற்றில், எனது தந்தையார் காலமாகி விட்டார்) அப்படி பேசிக் கொள்வது வழக்கம்.  tw_blush:

அப்பர் சிவனை அனைத்துமாய் பார்க்கிறார்.  tw_blush:

இன்னொன்றையும் கவனியுங்கள் சுவியர்!

அப்பர்...அண்ணனை...அய்யன் என்று தான் விழிக்கிறார்!

சிங்களவன்....தமிழிலிருந்து ஏழாம் நூற்றாண்டிலேயே....பொறுக்கிற்றான் போல கிடக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புங்கையூரன் said:

இன்னொன்றையும் கவனியுங்கள் சுவியர்!

அப்பர்...அண்ணனை...அய்யன் என்று தான் விழிக்கிறார்!

சிங்களவன்....தமிழிலிருந்து ஏழாம் நூற்றாண்டிலேயே....பொறுக்கிற்றான் போல கிடக்கு!

 இங்கே அய்யன் என்பது குருவை குறிக்கும் என நினைக்கின்றேன். பிதா, மாதா, குரு.

அய்யர் 

Link to comment
Share on other sites

புங்கையூரன்,

திருநாவுக்கரசு நாயனாரின் தேவாரத்தை அலசிப்பார்த்தது அருமை. :96_ok_hand:

எவ்வளவு அழகாக விபரிக்கின்றார்;

  • அப்பன் நீ,
  • அம்மை நீ,
  • ஐயனும் நீ,
  • அன்பு உடைய மாமனும் மாமியும் நீ, 
  • ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,
  • ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
  • துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,
  • துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
  • இப் பொன் நீ,
  • இம் மணி நீ,
  • இம் முத்து(ந்)நீ,
  • இறைவன் நீ
  • ஏறு ஊர்ந்த செல்வன் நீயே!

குருஜி, நீங்கள் விட்டுக்கொடாமல் குறியாய் அத்தைக்காக வாதாடுவதன் பின்னால் இவ்வளவு சமாச்சாரங்கள் உள்ளனவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்டு கொடுக்காமல் என்றல்ல உண்மையை தெரிந்து கொள்வோம் என்னும் ஆவல்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, suvy said:

 இங்கே அய்யன் என்பது குருவை குறிக்கும் என நினைக்கின்றேன். பிதா, மாதா, குரு.

அய்யர் 

சுவியர்...பின்வரும் இணைப்பைப் பாருங்கள்!

அண்ணன் தான் என்று அடித்துச் சொல்லுகின்றார்...இவர்!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?Song_idField=6095&padhi=095&thiru=6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கலைஞன் said:

அத்தை மகனே அத்தான் எனவே

அத்தையின் ஆண்பால் அத்தான் ஆகமுடியாது என்று கூறுகின்றீர்கள்.

சிந்தித்து பார்ப்பதற்கு மயக்கமாக உள்ளது.

ஆண்பால் பெண்பாலில் ஒன்றுக்கு நிகரான இன்னோர் சொல்லை வழங்கும்போது உறவுமுறையின் அடிப்படையில் விதிகள் உள்ளனவா?

தம்பி - தங்கை

இங்கு சகோதர உறவு முறை காணப்படுமாயின்

அத்தை - அத்தான்

இங்கே ஏன் தாய் மகன் உறவு முறை அமையமுடியாது?

நாங்களும் வீட்டில் அத்தை என்ற சொல்லை பாவிப்பதில்லை. அதற்காக நாங்கள் பயன்படுத்துவது இல்லை என்பதற்காக அது தமிழ் சொல் இல்லை என்றும் கூறமுடியாது. அதேசமயம் அத்தை, அத்தான் ஆகிய சொற்கள் இந்திய தமிழ் சினிமாவின் இறக்குமதியாய் இருக்குமோ என்றும் சந்தேகம் வலுக்கின்றது.

மகாபாரத கதை உருவாக்கத்தின் மூலம் தமிழ்மொழி இல்லை என்றால் அத்தை எனும் சொல் தமிழாய் இருக்காதோ? இந்திய தமிழ் சினிமாவில் ஏதும் நடக்கலாம்.

அத்தன் எனும் சொல் பழந்தமிழர் இலக்கியத்தில் உள்ளது போன்று பண்டிதர் அவர்கள் மேற்கோள் ஒன்றை சொல்லிக்காட்டினார் என்று நினைக்கின்றேன்.

கலைஞன்...பண்டிதர் சொன்னது சரி..!

பின்வரும் பாடலில்....அத்தன் என்ற சொல் வருகின்றது தான்!

ஆனால்....தந்தை என்ற பொருள் கொண்டு வருகின்றது!

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
.
  
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க

openbook.gifபொழிப்புரை:

முதலில் சிவபெருமான் என்று அவன் பெயரைக் கேட்டு, அவனுடைய பொன்வண்ணத்தைக் கேட்டு, அவனுடைய திருவாரூரைக் கேட்டு மீண்டும் அவன் திறத்து நீங்காத காதல் உடையவளாயினாள். தாயையும் தந்தையையும் அன்றே மனத்தால் துறந்தாள். உலகவர் கூறும் ` கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை ` என்ற நெறிமுறையை விடுத்தாள். தலைவனையே நினையும் நினைவிலே தான் செய்யும் செயல்களை அறியாது ஒழிந்தாள். கன்னி எனப்படும் தன் பெயர் நீங்கப் பெற்று அவன் உரிமை என்ற பெயரைக் கொண்டாள். அந்நங்கை அத்தலைவன் திருவடிகளை அணைந்து தனக்கென ஒன்றின்றி அவன் வழியளாய் ஒழிந்தாள்
Link to comment
Share on other sites

39 minutes ago, புங்கையூரன் said:

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
 மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
 பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
 அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
 தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

எவ்வளவு அழகிய பக்தி உணர்வுடன் படைக்கப்பட்ட பாடல் இது~! :100_pray:

பண்டிதரும் அத்தன் என்றால் தந்தை என்றே கூறினார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் புங்கை/கலைஞன்....!

திருவெம்பாவை 3வைத்து பாடலில் முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்த தெதிரெழுந்தென் 

அத்தன் ஆனந்தன் அமுதன் என்றும் வருகின்றது.

ஆயினும் இவை ஒரே பொருளில் கொள்ளாது இடத்துக்கு ஏற்றவாறு பொருள் படும் என்றுதான் சொல்கிறேன்.

அதுபோல் திருப்பொற்சுன்னத்திலும் 1 வைத்து பாடலில் "அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"

அதனால் அந்தச்சொற்பதம் வழக்கொழிந்து விட்டதுபோல.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிராமி அந்தாதி 57 வது பாடல் : 

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டமெல்லாம் .....என்று தொடங்கும்..... இங்கு ஐயன் என்பது நேரே சிவனை குறிக்கும்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, suvy said:

ஓம் புங்கை/கலைஞன்....!

திருவெம்பாவை 3வைத்து பாடலில் முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்த தெதிரெழுந்தென் 

அத்தன் ஆனந்தன் அமுதன் என்றும் வருகின்றது.

ஆயினும் இவை ஒரே பொருளில் கொள்ளாது இடத்துக்கு ஏற்றவாறு பொருள் படும் என்றுதான் சொல்கிறேன்.

அதுபோல் திருப்பொற்சுன்னத்திலும் 1 வைத்து பாடலில் "அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"

அதனால் அந்தச்சொற்பதம் வழக்கொழிந்து விட்டதுபோல.....!

நீங்கள் சொல்வது சரி, சுவியர் !

இன்னொரு இடத்தில்..

முத்த்னே முதல்வா...,,

தில்லை அம்பலத்து ஆடுகின்ற அத்தா...

 

என்றும் வருகிறது!

இஙுகு தலைவன் என்று பொருள் வரும் போல கிடக்குது!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

அபிராமி அந்தாதி 57 வது பாடல் : 

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டமெல்லாம் .....என்று தொடங்கும்..... இங்கு ஐயன் என்பது நேரே சிவனை குறிக்கும்......!

சுவியர்,

ஒரு மொழியின் தொன்மை என்பது...வரலாறுகளிலோ அல்லது சரித்திர சான்றுகளிலோ இல்லை என்றே நான் நம்புகிறேன்! ஒரு மொழி எவ்வாறு வளைந்து கொடுக்கின்றது என்பதைலேயே அதன் தொன்மை தங்கியுள்ளது! தமிழ் கவிதை மொழி! அதனைப் பற்றி வரும் போது .. எழுதாமல் இருக்க முடியவில்லை! இப்போதும் கைத் தொலை பேசியில் வைத்துத் தான் தட்டிக் கொண்டிருக்கிறேன்!

புதிய... புதிய உதாரணங்களைத் தாருங்கள்!

நீண்ட நாட்களின் பின்னர் ... மனத்திருப்தி தந்த விவாதம் இதுவாகும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் புங்கை,அதற்கு குருஜிக்குத்தான் நன்றி......!

தமிழ் ஒரு வானம் போன்றது. ஒரு எழுத்து சொல்லுக்கே பத்து அர்த்தம் வரும். யானைக்கும் குதிரைக்குமே முப்பதுக்கு மேல் பெயர்கள் உள்ளன. எங்கோ படித்தது , ஒருமுறை வள்ளலார் அடியார்களுடன் கதைகள் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதில் சிவபுராணம் பற்றி சொற்பொழிவாற்றும் படி கேட்கின்றனர்.அவரும் சுருங்கக் கூறவா விரிவாய் கூறவா என்று கேட்க அவர்களும் தாராளமான நேரம் இருக்கு, நீங்கள் விரிவாய் கூறுங்கள் என்கின்றனர். வள்ளலார் காப்பு சொல்லிவிட்டு நமசிவாய வாழ்கவில் முதல் வரும் "ந"என்ற எழுத்தின் பெருமைகளை அர்த்தங்களை சொல்லிக்கொண்டே போகிறார். பிரசங்கம் முடியவில்லை ஆனால் நேரம் முடிந்து விட்டது.

இவையெல்லாம் சொல்லுந்தரமன்று.....!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அத்தையின் ஆண் பால் பிரச்சனை காரணமாக போலும்,  எமது குடும்பத்தில் அத்தையம்மா - அத்தைமாமா என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெருமைகள் உள்ள தமிழ் மொழியை பேசும் ஒரு கூட்டம் இப்படியும் உறவுகளை அழைக்குதே.
உம்மா - வாப்பா 
நானா / காக்கா - ()தாத்தா
சாச்சா - சாச்சி
உம்மம்மா 
வாப்பம்மா 
மைனி (மதினி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Sasi_varnam said:

இவ்வளவு பெருமைகள் உள்ள தமிழ் மொழியை பேசும் ஒரு கூட்டம் இப்படியும் உறவுகளை அழைக்குதே.
உம்மா - வாப்பா 
நானா / காக்கா - ()தாத்தா
சாச்சா - சாச்சி
உம்மம்மா 
வாப்பம்மா 
மைனி (மதினி)

டாத்தா   ?

இல்லை வாப்பா... அது அரபி சொல்லுக..

அப்பா ஒரு உருது சொல் தெரீமா?

அய்யா என்று செல்லீட்டு இருந்த நம்ம,  இந்தியாவில் இருந்து தமிழ் படங்கள் வந்த அப்புறம் தாம் அப்பா செல்லி செல்லறம் தானே வாப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் - மச்சாள் 
இது, தமிழ் சொல்லாக.... இருக்க வேண்டும்.
அந்த... உறவு, தமிழர்களில்.. வித்தியாசமான மரியாதைக்குரியது.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.