Jump to content

அத்தையின் ஆண்பால் = அத்தானின் பெண்பால்


Recommended Posts

மாமா - மாமி

மச்சான் - மச்சாள்

சித்தப்பா - சின்னம்மா

அத்தை - ?

அத்தான் - ?

எமது பாடசாலை வகுப்பு வட்ஸ் அப் குழுமத்தில் இந்த வினாக்களை வினாவினேன். திருப்தியான பதில் கிடைக்கவில்லை. பின்னர், யாழ் கருத்துக்களத்திலும் திண்ணையில் கேட்டுப்பார்த்தேன். பதில்கள் திருப்தி இல்லை.

இங்கு எனது சந்தேகங்கள் எவை என்றால் இவை 1- தூய தமிழ்ச்சொற்களா, 2- பழந்தமிழர் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளனவா, 3- அத்தை, அத்தான் ஆகிய சொற்பதங்கள் இந்திய தமிழ்சினிமாவின் இறக்குமதிகளில் சிலவோ என்பது.

*******

யாரிடம் கேட்கலாம்? இன்று மாலை இணுவில் தமிழ் பண்டிதர், கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களை தொலைபேசியில் அழைத்து அவரிடம் எனது வினாக்களை கேட்டேன்.

அவர் சொன்னவை என்ன என்றால்..

அக்கா - அண்ணா

இது போல்

அத்தை - அத்தன்

அதாவது அத்தையுக்கு ஆண்பால் அத்தன் என்று வருமாம். அத்தன் என்றால்  அப்பா/தந்தை. அத்தன், அத்தை ஆகியவை தூய தமிழ்ச்சொற்கள் கலப்படங்கள் இல்லை எனக்கூறினார்.

அடுத்ததாக,

அத்தான் - அத்தாள்

அதாவது அத்தானுக்கு பெண்பால் அத்தாள் என்று அமையலாம் என்று கூறினார்.

இந்த அத்தாள் எனும் சொல் தற்போது பயன்பாட்டில் இல்லையாம். காலப்போக்கில் பாவனையில்லாமல் வழக்கொழிந்து இருக்கலாம் என்று கூறினார்.

கூழிலில் தேடல் செய்து பார்த்தபோது அத்தாள் என்றால் அம்மா/தாய் என்று பொருள் உள்ளது.

அப்படி என்றால்,

அத்தன் - அத்தாள் என்று அல்லவா வரும் அத்துடன் அத்தை - அத்தான் என்றும் வரும் அல்லவா?

அத்தையின் ஆண்பால் =  அத்தானின் பெண்பால்

*******

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தப்பாவுக்குச் சித்தி....அதிகம் பொருந்தும் போல...உள்ளது!

சின்னம்மாவுக்குச் ....சின்னையா பொருந்தும் போல உள்ளது!

அத்தை என்பது...ஈழத்துத் தமிழில் இருக்கவில்லை என்று நினைக்கிறேன்!

எனக்குத் தெரிய....தமிழ்ப் படங்களின் மூலம் தான்...இந்த ...அத்தை..அத்தை மகள்...என்று ஈழத்தமிழுக்குள் இந்த வார்த்தை புகுந்திருக்க வேண்டும்!

ஊரில்...அத்தை மகளை கட்டினான் என்று கூறுவதில்லை!  முறை மச்சாளைக் கட்டினான் என்று தான் கூறுவார்கள்!

எனினும் அத்தையின் மகளைக் கட்டுவதனால்...பரந்த...மரபணுப் பரம்பல் ஏற்பட மாட்டாது! பிறக்கும் குழந்தைகள்...ஆரோக்கியமாகவும், உடல் குறைபாடு அற்றவர்களாகவும் இருக்க மாட்டார்கள்!

இது வட இந்தியாவின்...யானைகளுக்குக் கூடத் தெரிந்திருந்தது! ஆமாம்....யானைகள்..தங்கள் இரத்த உறவுகளை...மனைவிகளாக ...கணவர்களாக ஏற்றுக் கொள்வதில்லையாம்!

இது..நமது முன்னோருக்குத் தெரியாமல் இருந்திருக்குமா என்பது விவாத்ததுக்கு உரியதே!

அத்தை மகனே....அத்தான் என்று அழைக்கப் படுகிறார்!

எனவே...நிச்சயம்...அத்தையின் ஆண்பால் ...அத்தானாக முடியாது!

அத்தன் என்று சொல்லும் போது...தமிழ் மணக்கவில்லை!

மலையாளம் தான் மணக்கிறது!

அச்சன்....தந்தை!

 

கர்ணன் படத்தில்.....குந்தி தேவியை....கிருஷ்ணன் விழிக்கும் போது....அத்தை..என்று தான் விழிக்கிறார்!

கண்ணனுக்கும்...குந்தி தேவிக்கும் உள்ள உறவு முறையை...நீங்கள் சொன்னால்...நான் பெண்பால் சொல்லுகின்றேன்!

இது எப்படி இருக்கு....கலைஞன்?

 

Link to comment
Share on other sites

அத்தை மகனே அத்தான் எனவே

அத்தையின் ஆண்பால் அத்தான் ஆகமுடியாது என்று கூறுகின்றீர்கள்.

சிந்தித்து பார்ப்பதற்கு மயக்கமாக உள்ளது.

ஆண்பால் பெண்பாலில் ஒன்றுக்கு நிகரான இன்னோர் சொல்லை வழங்கும்போது உறவுமுறையின் அடிப்படையில் விதிகள் உள்ளனவா?

தம்பி - தங்கை

இங்கு சகோதர உறவு முறை காணப்படுமாயின்

அத்தை - அத்தான்

இங்கே ஏன் தாய் மகன் உறவு முறை அமையமுடியாது?

நாங்களும் வீட்டில் அத்தை என்ற சொல்லை பாவிப்பதில்லை. அதற்காக நாங்கள் பயன்படுத்துவது இல்லை என்பதற்காக அது தமிழ் சொல் இல்லை என்றும் கூறமுடியாது. அதேசமயம் அத்தை, அத்தான் ஆகிய சொற்கள் இந்திய தமிழ் சினிமாவின் இறக்குமதியாய் இருக்குமோ என்றும் சந்தேகம் வலுக்கின்றது.

மகாபாரத கதை உருவாக்கத்தின் மூலம் தமிழ்மொழி இல்லை என்றால் அத்தை எனும் சொல் தமிழாய் இருக்காதோ? இந்திய தமிழ் சினிமாவில் ஏதும் நடக்கலாம்.

அத்தன் எனும் சொல் பழந்தமிழர் இலக்கியத்தில் உள்ளது போன்று பண்டிதர் அவர்கள் மேற்கோள் ஒன்றை சொல்லிக்காட்டினார் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணனின் தந்தை வாசுதேவரின் தங்கை குந்திதேவி. 

வாசுதேவர் + தேவகியின் = மகன் கண்ணன்.

நந்தகோபன்+யசோதை = வளர்ப்பு மகன் கண்ணன்.

அதனால்தான் குந்திதேவியை அவர் அத்தை என அழைக்கிறார்.

சுவியும் பிறந்த நாளில் இருந்தே தனது தந்தையின் தங்கையை அத்தை என்றே அழைத்து வந்துள்ளார். இதனால் உங்களின் வாதங்கள் முடக்கு வாதமாய் அதாவது முடங்கிப் போய் விடுகிறது....!tw_blush:

அத்தையின் மகனை நான் அத்தான் என்றே கூப்பிடுவேன். மகள்  மச்சாள்  முறைதான், ஆனால் கூப்பிடுவது டியே ,வாடி போடி என்றுதான். அப்படியே அவளும் என்னை அத்தான் என்றுதான் கூப்பிட வேண்டும்.அதுதான் முறையும் கூட. ஆனால் அவளுக்கு என்னை விட விலங்குகளின் மீது பிரியம் அதிகம் அதனால் ஏதாவதொரு விலங்கின் பெயரால்தான் அழைப்பாள். நேற்றுகூட போனில் அப்படித்தான்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

கண்ணனின் தந்தை வாசுதேவரின் தங்கை குந்திதேவி. 

வாசுதேவர் + தேவகியின் = மகன் கண்ணன்.

நந்தகோபன்+யசோதை = வளர்ப்பு மகன் கண்ணன்.

அதனால்தான் குந்திதேவியை அவர் அத்தை என அழைக்கிறார்.

சுவியும் பிறந்த நாளில் இருந்தே தனது தந்தையின் தங்கையை அத்தை என்றே அழைத்து வந்துள்ளார். இதனால் உங்களின் வாதங்கள் முடக்கு வாதமாய் அதாவது முடங்கிப் போய் விடுகிறது....!tw_blush:

அத்தையின் மகனை நான் அத்தான் என்றே கூப்பிடுவேன். மகள்  மச்சாள்  முறைதான், ஆனால் கூப்பிடுவது டியே ,வாடி போடி என்றுதான். அப்படியே அவளும் என்னை அத்தான் என்றுதான் கூப்பிட வேண்டும்.அதுதான் முறையும் கூட. ஆனால் அவளுக்கு என்னை விட விலங்குகளின் மீது பிரியம் அதிகம் அதனால் ஏதாவதொரு விலங்கின் பெயரால்தான் அழைப்பாள். நேற்றுகூட போனில் அப்படித்தான்.....!  tw_blush:

நன்றி....சுவியர்!

கலைஞனின் கேள்விக்கான பதில் உங்களிடம் நிச்சயம் இருக்க வேண்டுமே!

உங்கள் அத்தையின்கணவரை...எவ்வாறு அழைக்கின்றீர்கள்?

அது தான் நிச்சயமாக....அத்தையின் ஆண் பாலாக இருக்கும்!

எனது பக்கத்துக்கு வீட்டுக்காரி...தனது தகப்பனை.......பப்பா என்று தான் அழைப்பார்!

நானும் அவ்வாறு அழைக்க வெளிக்கிட்டு....பூவரசம் தடியொன்று முறிஞ்சு போனது தான்....விளைவு!

சரி...அதை விடுங்கள்!

கிறிஸ்துவுக்குப் பின்னர் ஏழாம் நூற்றாண்டு வரையும் சென்று பார்த்தேன்!

திருநாவுக்கரசு நாயனார்.....பிராமணர் அல்லாது ஒருவர்!

அவரது தேவாரமொன்றில்...

 

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும்
                                          மாமியும் நீ, 
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும்
                                சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என்
                               நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு
                                 ஊர்ந்த செல்வன் நீயே.

 

 

'அத்தை' முறை வழக்கில் இருந்திருந்தால்...மாமன்..மாமி...என்று குறிப்பிடாமல்...அத்தை....அத்தன் என்று சொல்லியிருக்க மாட்டாரா, சுவியர்?

உறவு முறைகள்....மிகவும் குழப்பமானவை என்பதுடன்...அந்தந்தப் பிரதேசங்களின் பேச்சு வழக்குக்கு ஏற்ப மாறுபடுபவை!

அத்தான் எனும் போது...கணவனை அன்புடன் அழைக்கும் அதே உறவுச் சொல், அத்தார் எனும் போது ..அக்காவின் கணவன் என்று மரியாதைச் சொல்லாக மாறி நிற்கிறதே!

உங்களைப் போல...நாலு பேர் இங்க உலாவிற படியால...கன விசயங்களை அறியக் கூடியதாக இருக்கு!

 அத்தையின் மகனை நான் அத்தான் என்றே கூப்பிடுவேன். மகள்  மச்சாள்  முறைதான், ஆனால் கூப்பிடுவது டியே ,வாடி போடி என்றுதான். அப்படியே அவளும் என்னை அத்தான் என்றுதான் கூப்பிட வேண்டும்.அதுதான் முறையும் கூட. ஆனால் அவளுக்கு என்னை விட விலங்குகளின் மீது பிரியம் அதிகம் அதனால் ஏதாவதொரு விலங்கின் பெயரால்தான் அழைப்பாள். நேற்றுகூட போனில் அப்படித்தான்.

ஒருவரை...எப்படி அழைப்பது என்பது...அவரது தாய்...தந்தையர் சொல்லிக்கொடுப்பது தானே, சுவியர்!

ஆனால் வாடி..போடி...என்று அழைப்பது அன்பின் வெளிப்பாடு எனினும்....அதுவும் ஒரு வகையில்....பெண்ணடிமைத் தனத்தின் ஆரம்பம் என்று தான் நான் கருதுகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவரை மாமா என்றுதான் சொல்வது. மேலும் அவர் எனது தாயாரின் சகோதரரும் கூட. (அவர்கள் மாற்றுசடங்கு). மற்றது பொதுவாய் மச்சாள்  என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நாங்கள் ஒரே வீட்டிற்குள் இருந்து வளர்ந்தபடியால்,அம்மம்மாவுடனும். (நான் வயிற்றில், எனது தந்தையார் காலமாகி விட்டார்) அப்படி பேசிக் கொள்வது வழக்கம்.  tw_blush:

அப்பர் சிவனை அனைத்துமாய் பார்க்கிறார்.  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, suvy said:

நான் அவரை மாமா என்றுதான் சொல்வது. மேலும் அவர் எனது தாயாரின் சகோதரரும் கூட. (அவர்கள் மாற்றுசடங்கு). மற்றது பொதுவாய் மச்சாள்  என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நாங்கள் ஒரே வீட்டிற்குள் இருந்து வளர்ந்தபடியால்,அம்மம்மாவுடனும். (நான் வயிற்றில், எனது தந்தையார் காலமாகி விட்டார்) அப்படி பேசிக் கொள்வது வழக்கம்.  tw_blush:

அப்பர் சிவனை அனைத்துமாய் பார்க்கிறார்.  tw_blush:

இன்னொன்றையும் கவனியுங்கள் சுவியர்!

அப்பர்...அண்ணனை...அய்யன் என்று தான் விழிக்கிறார்!

சிங்களவன்....தமிழிலிருந்து ஏழாம் நூற்றாண்டிலேயே....பொறுக்கிற்றான் போல கிடக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புங்கையூரன் said:

இன்னொன்றையும் கவனியுங்கள் சுவியர்!

அப்பர்...அண்ணனை...அய்யன் என்று தான் விழிக்கிறார்!

சிங்களவன்....தமிழிலிருந்து ஏழாம் நூற்றாண்டிலேயே....பொறுக்கிற்றான் போல கிடக்கு!

 இங்கே அய்யன் என்பது குருவை குறிக்கும் என நினைக்கின்றேன். பிதா, மாதா, குரு.

அய்யர் 

Link to comment
Share on other sites

புங்கையூரன்,

திருநாவுக்கரசு நாயனாரின் தேவாரத்தை அலசிப்பார்த்தது அருமை. :96_ok_hand:

எவ்வளவு அழகாக விபரிக்கின்றார்;

  • அப்பன் நீ,
  • அம்மை நீ,
  • ஐயனும் நீ,
  • அன்பு உடைய மாமனும் மாமியும் நீ, 
  • ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,
  • ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
  • துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,
  • துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
  • இப் பொன் நீ,
  • இம் மணி நீ,
  • இம் முத்து(ந்)நீ,
  • இறைவன் நீ
  • ஏறு ஊர்ந்த செல்வன் நீயே!

குருஜி, நீங்கள் விட்டுக்கொடாமல் குறியாய் அத்தைக்காக வாதாடுவதன் பின்னால் இவ்வளவு சமாச்சாரங்கள் உள்ளனவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்டு கொடுக்காமல் என்றல்ல உண்மையை தெரிந்து கொள்வோம் என்னும் ஆவல்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, suvy said:

 இங்கே அய்யன் என்பது குருவை குறிக்கும் என நினைக்கின்றேன். பிதா, மாதா, குரு.

அய்யர் 

சுவியர்...பின்வரும் இணைப்பைப் பாருங்கள்!

அண்ணன் தான் என்று அடித்துச் சொல்லுகின்றார்...இவர்!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?Song_idField=6095&padhi=095&thiru=6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கலைஞன் said:

அத்தை மகனே அத்தான் எனவே

அத்தையின் ஆண்பால் அத்தான் ஆகமுடியாது என்று கூறுகின்றீர்கள்.

சிந்தித்து பார்ப்பதற்கு மயக்கமாக உள்ளது.

ஆண்பால் பெண்பாலில் ஒன்றுக்கு நிகரான இன்னோர் சொல்லை வழங்கும்போது உறவுமுறையின் அடிப்படையில் விதிகள் உள்ளனவா?

தம்பி - தங்கை

இங்கு சகோதர உறவு முறை காணப்படுமாயின்

அத்தை - அத்தான்

இங்கே ஏன் தாய் மகன் உறவு முறை அமையமுடியாது?

நாங்களும் வீட்டில் அத்தை என்ற சொல்லை பாவிப்பதில்லை. அதற்காக நாங்கள் பயன்படுத்துவது இல்லை என்பதற்காக அது தமிழ் சொல் இல்லை என்றும் கூறமுடியாது. அதேசமயம் அத்தை, அத்தான் ஆகிய சொற்கள் இந்திய தமிழ் சினிமாவின் இறக்குமதியாய் இருக்குமோ என்றும் சந்தேகம் வலுக்கின்றது.

மகாபாரத கதை உருவாக்கத்தின் மூலம் தமிழ்மொழி இல்லை என்றால் அத்தை எனும் சொல் தமிழாய் இருக்காதோ? இந்திய தமிழ் சினிமாவில் ஏதும் நடக்கலாம்.

அத்தன் எனும் சொல் பழந்தமிழர் இலக்கியத்தில் உள்ளது போன்று பண்டிதர் அவர்கள் மேற்கோள் ஒன்றை சொல்லிக்காட்டினார் என்று நினைக்கின்றேன்.

கலைஞன்...பண்டிதர் சொன்னது சரி..!

பின்வரும் பாடலில்....அத்தன் என்ற சொல் வருகின்றது தான்!

ஆனால்....தந்தை என்ற பொருள் கொண்டு வருகின்றது!

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
.
  
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க

openbook.gifபொழிப்புரை:

முதலில் சிவபெருமான் என்று அவன் பெயரைக் கேட்டு, அவனுடைய பொன்வண்ணத்தைக் கேட்டு, அவனுடைய திருவாரூரைக் கேட்டு மீண்டும் அவன் திறத்து நீங்காத காதல் உடையவளாயினாள். தாயையும் தந்தையையும் அன்றே மனத்தால் துறந்தாள். உலகவர் கூறும் ` கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை ` என்ற நெறிமுறையை விடுத்தாள். தலைவனையே நினையும் நினைவிலே தான் செய்யும் செயல்களை அறியாது ஒழிந்தாள். கன்னி எனப்படும் தன் பெயர் நீங்கப் பெற்று அவன் உரிமை என்ற பெயரைக் கொண்டாள். அந்நங்கை அத்தலைவன் திருவடிகளை அணைந்து தனக்கென ஒன்றின்றி அவன் வழியளாய் ஒழிந்தாள்
Link to comment
Share on other sites

39 minutes ago, புங்கையூரன் said:

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
 மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
 பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
 அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
 தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

எவ்வளவு அழகிய பக்தி உணர்வுடன் படைக்கப்பட்ட பாடல் இது~! :100_pray:

பண்டிதரும் அத்தன் என்றால் தந்தை என்றே கூறினார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் புங்கை/கலைஞன்....!

திருவெம்பாவை 3வைத்து பாடலில் முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்த தெதிரெழுந்தென் 

அத்தன் ஆனந்தன் அமுதன் என்றும் வருகின்றது.

ஆயினும் இவை ஒரே பொருளில் கொள்ளாது இடத்துக்கு ஏற்றவாறு பொருள் படும் என்றுதான் சொல்கிறேன்.

அதுபோல் திருப்பொற்சுன்னத்திலும் 1 வைத்து பாடலில் "அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"

அதனால் அந்தச்சொற்பதம் வழக்கொழிந்து விட்டதுபோல.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிராமி அந்தாதி 57 வது பாடல் : 

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டமெல்லாம் .....என்று தொடங்கும்..... இங்கு ஐயன் என்பது நேரே சிவனை குறிக்கும்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, suvy said:

ஓம் புங்கை/கலைஞன்....!

திருவெம்பாவை 3வைத்து பாடலில் முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்த தெதிரெழுந்தென் 

அத்தன் ஆனந்தன் அமுதன் என்றும் வருகின்றது.

ஆயினும் இவை ஒரே பொருளில் கொள்ளாது இடத்துக்கு ஏற்றவாறு பொருள் படும் என்றுதான் சொல்கிறேன்.

அதுபோல் திருப்பொற்சுன்னத்திலும் 1 வைத்து பாடலில் "அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"

அதனால் அந்தச்சொற்பதம் வழக்கொழிந்து விட்டதுபோல.....!

நீங்கள் சொல்வது சரி, சுவியர் !

இன்னொரு இடத்தில்..

முத்த்னே முதல்வா...,,

தில்லை அம்பலத்து ஆடுகின்ற அத்தா...

 

என்றும் வருகிறது!

இஙுகு தலைவன் என்று பொருள் வரும் போல கிடக்குது!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

அபிராமி அந்தாதி 57 வது பாடல் : 

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டமெல்லாம் .....என்று தொடங்கும்..... இங்கு ஐயன் என்பது நேரே சிவனை குறிக்கும்......!

சுவியர்,

ஒரு மொழியின் தொன்மை என்பது...வரலாறுகளிலோ அல்லது சரித்திர சான்றுகளிலோ இல்லை என்றே நான் நம்புகிறேன்! ஒரு மொழி எவ்வாறு வளைந்து கொடுக்கின்றது என்பதைலேயே அதன் தொன்மை தங்கியுள்ளது! தமிழ் கவிதை மொழி! அதனைப் பற்றி வரும் போது .. எழுதாமல் இருக்க முடியவில்லை! இப்போதும் கைத் தொலை பேசியில் வைத்துத் தான் தட்டிக் கொண்டிருக்கிறேன்!

புதிய... புதிய உதாரணங்களைத் தாருங்கள்!

நீண்ட நாட்களின் பின்னர் ... மனத்திருப்தி தந்த விவாதம் இதுவாகும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் புங்கை,அதற்கு குருஜிக்குத்தான் நன்றி......!

தமிழ் ஒரு வானம் போன்றது. ஒரு எழுத்து சொல்லுக்கே பத்து அர்த்தம் வரும். யானைக்கும் குதிரைக்குமே முப்பதுக்கு மேல் பெயர்கள் உள்ளன. எங்கோ படித்தது , ஒருமுறை வள்ளலார் அடியார்களுடன் கதைகள் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதில் சிவபுராணம் பற்றி சொற்பொழிவாற்றும் படி கேட்கின்றனர்.அவரும் சுருங்கக் கூறவா விரிவாய் கூறவா என்று கேட்க அவர்களும் தாராளமான நேரம் இருக்கு, நீங்கள் விரிவாய் கூறுங்கள் என்கின்றனர். வள்ளலார் காப்பு சொல்லிவிட்டு நமசிவாய வாழ்கவில் முதல் வரும் "ந"என்ற எழுத்தின் பெருமைகளை அர்த்தங்களை சொல்லிக்கொண்டே போகிறார். பிரசங்கம் முடியவில்லை ஆனால் நேரம் முடிந்து விட்டது.

இவையெல்லாம் சொல்லுந்தரமன்று.....!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அத்தையின் ஆண் பால் பிரச்சனை காரணமாக போலும்,  எமது குடும்பத்தில் அத்தையம்மா - அத்தைமாமா என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெருமைகள் உள்ள தமிழ் மொழியை பேசும் ஒரு கூட்டம் இப்படியும் உறவுகளை அழைக்குதே.
உம்மா - வாப்பா 
நானா / காக்கா - ()தாத்தா
சாச்சா - சாச்சி
உம்மம்மா 
வாப்பம்மா 
மைனி (மதினி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Sasi_varnam said:

இவ்வளவு பெருமைகள் உள்ள தமிழ் மொழியை பேசும் ஒரு கூட்டம் இப்படியும் உறவுகளை அழைக்குதே.
உம்மா - வாப்பா 
நானா / காக்கா - ()தாத்தா
சாச்சா - சாச்சி
உம்மம்மா 
வாப்பம்மா 
மைனி (மதினி)

டாத்தா   ?

இல்லை வாப்பா... அது அரபி சொல்லுக..

அப்பா ஒரு உருது சொல் தெரீமா?

அய்யா என்று செல்லீட்டு இருந்த நம்ம,  இந்தியாவில் இருந்து தமிழ் படங்கள் வந்த அப்புறம் தாம் அப்பா செல்லி செல்லறம் தானே வாப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் - மச்சாள் 
இது, தமிழ் சொல்லாக.... இருக்க வேண்டும்.
அந்த... உறவு, தமிழர்களில்.. வித்தியாசமான மரியாதைக்குரியது.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.