Jump to content

அத்தையின் ஆண்பால் = அத்தானின் பெண்பால்


Recommended Posts

மாமா - மாமி

மச்சான் - மச்சாள்

சித்தப்பா - சின்னம்மா

அத்தை - ?

அத்தான் - ?

எமது பாடசாலை வகுப்பு வட்ஸ் அப் குழுமத்தில் இந்த வினாக்களை வினாவினேன். திருப்தியான பதில் கிடைக்கவில்லை. பின்னர், யாழ் கருத்துக்களத்திலும் திண்ணையில் கேட்டுப்பார்த்தேன். பதில்கள் திருப்தி இல்லை.

இங்கு எனது சந்தேகங்கள் எவை என்றால் இவை 1- தூய தமிழ்ச்சொற்களா, 2- பழந்தமிழர் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளனவா, 3- அத்தை, அத்தான் ஆகிய சொற்பதங்கள் இந்திய தமிழ்சினிமாவின் இறக்குமதிகளில் சிலவோ என்பது.

*******

யாரிடம் கேட்கலாம்? இன்று மாலை இணுவில் தமிழ் பண்டிதர், கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களை தொலைபேசியில் அழைத்து அவரிடம் எனது வினாக்களை கேட்டேன்.

அவர் சொன்னவை என்ன என்றால்..

அக்கா - அண்ணா

இது போல்

அத்தை - அத்தன்

அதாவது அத்தையுக்கு ஆண்பால் அத்தன் என்று வருமாம். அத்தன் என்றால்  அப்பா/தந்தை. அத்தன், அத்தை ஆகியவை தூய தமிழ்ச்சொற்கள் கலப்படங்கள் இல்லை எனக்கூறினார்.

அடுத்ததாக,

அத்தான் - அத்தாள்

அதாவது அத்தானுக்கு பெண்பால் அத்தாள் என்று அமையலாம் என்று கூறினார்.

இந்த அத்தாள் எனும் சொல் தற்போது பயன்பாட்டில் இல்லையாம். காலப்போக்கில் பாவனையில்லாமல் வழக்கொழிந்து இருக்கலாம் என்று கூறினார்.

கூழிலில் தேடல் செய்து பார்த்தபோது அத்தாள் என்றால் அம்மா/தாய் என்று பொருள் உள்ளது.

அப்படி என்றால்,

அத்தன் - அத்தாள் என்று அல்லவா வரும் அத்துடன் அத்தை - அத்தான் என்றும் வரும் அல்லவா?

அத்தையின் ஆண்பால் =  அத்தானின் பெண்பால்

*******

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தப்பாவுக்குச் சித்தி....அதிகம் பொருந்தும் போல...உள்ளது!

சின்னம்மாவுக்குச் ....சின்னையா பொருந்தும் போல உள்ளது!

அத்தை என்பது...ஈழத்துத் தமிழில் இருக்கவில்லை என்று நினைக்கிறேன்!

எனக்குத் தெரிய....தமிழ்ப் படங்களின் மூலம் தான்...இந்த ...அத்தை..அத்தை மகள்...என்று ஈழத்தமிழுக்குள் இந்த வார்த்தை புகுந்திருக்க வேண்டும்!

ஊரில்...அத்தை மகளை கட்டினான் என்று கூறுவதில்லை!  முறை மச்சாளைக் கட்டினான் என்று தான் கூறுவார்கள்!

எனினும் அத்தையின் மகளைக் கட்டுவதனால்...பரந்த...மரபணுப் பரம்பல் ஏற்பட மாட்டாது! பிறக்கும் குழந்தைகள்...ஆரோக்கியமாகவும், உடல் குறைபாடு அற்றவர்களாகவும் இருக்க மாட்டார்கள்!

இது வட இந்தியாவின்...யானைகளுக்குக் கூடத் தெரிந்திருந்தது! ஆமாம்....யானைகள்..தங்கள் இரத்த உறவுகளை...மனைவிகளாக ...கணவர்களாக ஏற்றுக் கொள்வதில்லையாம்!

இது..நமது முன்னோருக்குத் தெரியாமல் இருந்திருக்குமா என்பது விவாத்ததுக்கு உரியதே!

அத்தை மகனே....அத்தான் என்று அழைக்கப் படுகிறார்!

எனவே...நிச்சயம்...அத்தையின் ஆண்பால் ...அத்தானாக முடியாது!

அத்தன் என்று சொல்லும் போது...தமிழ் மணக்கவில்லை!

மலையாளம் தான் மணக்கிறது!

அச்சன்....தந்தை!

 

கர்ணன் படத்தில்.....குந்தி தேவியை....கிருஷ்ணன் விழிக்கும் போது....அத்தை..என்று தான் விழிக்கிறார்!

கண்ணனுக்கும்...குந்தி தேவிக்கும் உள்ள உறவு முறையை...நீங்கள் சொன்னால்...நான் பெண்பால் சொல்லுகின்றேன்!

இது எப்படி இருக்கு....கலைஞன்?

 

Link to comment
Share on other sites

அத்தை மகனே அத்தான் எனவே

அத்தையின் ஆண்பால் அத்தான் ஆகமுடியாது என்று கூறுகின்றீர்கள்.

சிந்தித்து பார்ப்பதற்கு மயக்கமாக உள்ளது.

ஆண்பால் பெண்பாலில் ஒன்றுக்கு நிகரான இன்னோர் சொல்லை வழங்கும்போது உறவுமுறையின் அடிப்படையில் விதிகள் உள்ளனவா?

தம்பி - தங்கை

இங்கு சகோதர உறவு முறை காணப்படுமாயின்

அத்தை - அத்தான்

இங்கே ஏன் தாய் மகன் உறவு முறை அமையமுடியாது?

நாங்களும் வீட்டில் அத்தை என்ற சொல்லை பாவிப்பதில்லை. அதற்காக நாங்கள் பயன்படுத்துவது இல்லை என்பதற்காக அது தமிழ் சொல் இல்லை என்றும் கூறமுடியாது. அதேசமயம் அத்தை, அத்தான் ஆகிய சொற்கள் இந்திய தமிழ் சினிமாவின் இறக்குமதியாய் இருக்குமோ என்றும் சந்தேகம் வலுக்கின்றது.

மகாபாரத கதை உருவாக்கத்தின் மூலம் தமிழ்மொழி இல்லை என்றால் அத்தை எனும் சொல் தமிழாய் இருக்காதோ? இந்திய தமிழ் சினிமாவில் ஏதும் நடக்கலாம்.

அத்தன் எனும் சொல் பழந்தமிழர் இலக்கியத்தில் உள்ளது போன்று பண்டிதர் அவர்கள் மேற்கோள் ஒன்றை சொல்லிக்காட்டினார் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணனின் தந்தை வாசுதேவரின் தங்கை குந்திதேவி. 

வாசுதேவர் + தேவகியின் = மகன் கண்ணன்.

நந்தகோபன்+யசோதை = வளர்ப்பு மகன் கண்ணன்.

அதனால்தான் குந்திதேவியை அவர் அத்தை என அழைக்கிறார்.

சுவியும் பிறந்த நாளில் இருந்தே தனது தந்தையின் தங்கையை அத்தை என்றே அழைத்து வந்துள்ளார். இதனால் உங்களின் வாதங்கள் முடக்கு வாதமாய் அதாவது முடங்கிப் போய் விடுகிறது....!tw_blush:

அத்தையின் மகனை நான் அத்தான் என்றே கூப்பிடுவேன். மகள்  மச்சாள்  முறைதான், ஆனால் கூப்பிடுவது டியே ,வாடி போடி என்றுதான். அப்படியே அவளும் என்னை அத்தான் என்றுதான் கூப்பிட வேண்டும்.அதுதான் முறையும் கூட. ஆனால் அவளுக்கு என்னை விட விலங்குகளின் மீது பிரியம் அதிகம் அதனால் ஏதாவதொரு விலங்கின் பெயரால்தான் அழைப்பாள். நேற்றுகூட போனில் அப்படித்தான்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

கண்ணனின் தந்தை வாசுதேவரின் தங்கை குந்திதேவி. 

வாசுதேவர் + தேவகியின் = மகன் கண்ணன்.

நந்தகோபன்+யசோதை = வளர்ப்பு மகன் கண்ணன்.

அதனால்தான் குந்திதேவியை அவர் அத்தை என அழைக்கிறார்.

சுவியும் பிறந்த நாளில் இருந்தே தனது தந்தையின் தங்கையை அத்தை என்றே அழைத்து வந்துள்ளார். இதனால் உங்களின் வாதங்கள் முடக்கு வாதமாய் அதாவது முடங்கிப் போய் விடுகிறது....!tw_blush:

அத்தையின் மகனை நான் அத்தான் என்றே கூப்பிடுவேன். மகள்  மச்சாள்  முறைதான், ஆனால் கூப்பிடுவது டியே ,வாடி போடி என்றுதான். அப்படியே அவளும் என்னை அத்தான் என்றுதான் கூப்பிட வேண்டும்.அதுதான் முறையும் கூட. ஆனால் அவளுக்கு என்னை விட விலங்குகளின் மீது பிரியம் அதிகம் அதனால் ஏதாவதொரு விலங்கின் பெயரால்தான் அழைப்பாள். நேற்றுகூட போனில் அப்படித்தான்.....!  tw_blush:

நன்றி....சுவியர்!

கலைஞனின் கேள்விக்கான பதில் உங்களிடம் நிச்சயம் இருக்க வேண்டுமே!

உங்கள் அத்தையின்கணவரை...எவ்வாறு அழைக்கின்றீர்கள்?

அது தான் நிச்சயமாக....அத்தையின் ஆண் பாலாக இருக்கும்!

எனது பக்கத்துக்கு வீட்டுக்காரி...தனது தகப்பனை.......பப்பா என்று தான் அழைப்பார்!

நானும் அவ்வாறு அழைக்க வெளிக்கிட்டு....பூவரசம் தடியொன்று முறிஞ்சு போனது தான்....விளைவு!

சரி...அதை விடுங்கள்!

கிறிஸ்துவுக்குப் பின்னர் ஏழாம் நூற்றாண்டு வரையும் சென்று பார்த்தேன்!

திருநாவுக்கரசு நாயனார்.....பிராமணர் அல்லாது ஒருவர்!

அவரது தேவாரமொன்றில்...

 

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும்
                                          மாமியும் நீ, 
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும்
                                சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என்
                               நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு
                                 ஊர்ந்த செல்வன் நீயே.

 

 

'அத்தை' முறை வழக்கில் இருந்திருந்தால்...மாமன்..மாமி...என்று குறிப்பிடாமல்...அத்தை....அத்தன் என்று சொல்லியிருக்க மாட்டாரா, சுவியர்?

உறவு முறைகள்....மிகவும் குழப்பமானவை என்பதுடன்...அந்தந்தப் பிரதேசங்களின் பேச்சு வழக்குக்கு ஏற்ப மாறுபடுபவை!

அத்தான் எனும் போது...கணவனை அன்புடன் அழைக்கும் அதே உறவுச் சொல், அத்தார் எனும் போது ..அக்காவின் கணவன் என்று மரியாதைச் சொல்லாக மாறி நிற்கிறதே!

உங்களைப் போல...நாலு பேர் இங்க உலாவிற படியால...கன விசயங்களை அறியக் கூடியதாக இருக்கு!

 அத்தையின் மகனை நான் அத்தான் என்றே கூப்பிடுவேன். மகள்  மச்சாள்  முறைதான், ஆனால் கூப்பிடுவது டியே ,வாடி போடி என்றுதான். அப்படியே அவளும் என்னை அத்தான் என்றுதான் கூப்பிட வேண்டும்.அதுதான் முறையும் கூட. ஆனால் அவளுக்கு என்னை விட விலங்குகளின் மீது பிரியம் அதிகம் அதனால் ஏதாவதொரு விலங்கின் பெயரால்தான் அழைப்பாள். நேற்றுகூட போனில் அப்படித்தான்.

ஒருவரை...எப்படி அழைப்பது என்பது...அவரது தாய்...தந்தையர் சொல்லிக்கொடுப்பது தானே, சுவியர்!

ஆனால் வாடி..போடி...என்று அழைப்பது அன்பின் வெளிப்பாடு எனினும்....அதுவும் ஒரு வகையில்....பெண்ணடிமைத் தனத்தின் ஆரம்பம் என்று தான் நான் கருதுகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவரை மாமா என்றுதான் சொல்வது. மேலும் அவர் எனது தாயாரின் சகோதரரும் கூட. (அவர்கள் மாற்றுசடங்கு). மற்றது பொதுவாய் மச்சாள்  என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நாங்கள் ஒரே வீட்டிற்குள் இருந்து வளர்ந்தபடியால்,அம்மம்மாவுடனும். (நான் வயிற்றில், எனது தந்தையார் காலமாகி விட்டார்) அப்படி பேசிக் கொள்வது வழக்கம்.  tw_blush:

அப்பர் சிவனை அனைத்துமாய் பார்க்கிறார்.  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, suvy said:

நான் அவரை மாமா என்றுதான் சொல்வது. மேலும் அவர் எனது தாயாரின் சகோதரரும் கூட. (அவர்கள் மாற்றுசடங்கு). மற்றது பொதுவாய் மச்சாள்  என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நாங்கள் ஒரே வீட்டிற்குள் இருந்து வளர்ந்தபடியால்,அம்மம்மாவுடனும். (நான் வயிற்றில், எனது தந்தையார் காலமாகி விட்டார்) அப்படி பேசிக் கொள்வது வழக்கம்.  tw_blush:

அப்பர் சிவனை அனைத்துமாய் பார்க்கிறார்.  tw_blush:

இன்னொன்றையும் கவனியுங்கள் சுவியர்!

அப்பர்...அண்ணனை...அய்யன் என்று தான் விழிக்கிறார்!

சிங்களவன்....தமிழிலிருந்து ஏழாம் நூற்றாண்டிலேயே....பொறுக்கிற்றான் போல கிடக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புங்கையூரன் said:

இன்னொன்றையும் கவனியுங்கள் சுவியர்!

அப்பர்...அண்ணனை...அய்யன் என்று தான் விழிக்கிறார்!

சிங்களவன்....தமிழிலிருந்து ஏழாம் நூற்றாண்டிலேயே....பொறுக்கிற்றான் போல கிடக்கு!

 இங்கே அய்யன் என்பது குருவை குறிக்கும் என நினைக்கின்றேன். பிதா, மாதா, குரு.

அய்யர் 

Link to comment
Share on other sites

புங்கையூரன்,

திருநாவுக்கரசு நாயனாரின் தேவாரத்தை அலசிப்பார்த்தது அருமை. :96_ok_hand:

எவ்வளவு அழகாக விபரிக்கின்றார்;

  • அப்பன் நீ,
  • அம்மை நீ,
  • ஐயனும் நீ,
  • அன்பு உடைய மாமனும் மாமியும் நீ, 
  • ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,
  • ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
  • துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,
  • துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
  • இப் பொன் நீ,
  • இம் மணி நீ,
  • இம் முத்து(ந்)நீ,
  • இறைவன் நீ
  • ஏறு ஊர்ந்த செல்வன் நீயே!

குருஜி, நீங்கள் விட்டுக்கொடாமல் குறியாய் அத்தைக்காக வாதாடுவதன் பின்னால் இவ்வளவு சமாச்சாரங்கள் உள்ளனவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்டு கொடுக்காமல் என்றல்ல உண்மையை தெரிந்து கொள்வோம் என்னும் ஆவல்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, suvy said:

 இங்கே அய்யன் என்பது குருவை குறிக்கும் என நினைக்கின்றேன். பிதா, மாதா, குரு.

அய்யர் 

சுவியர்...பின்வரும் இணைப்பைப் பாருங்கள்!

அண்ணன் தான் என்று அடித்துச் சொல்லுகின்றார்...இவர்!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?Song_idField=6095&padhi=095&thiru=6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கலைஞன் said:

அத்தை மகனே அத்தான் எனவே

அத்தையின் ஆண்பால் அத்தான் ஆகமுடியாது என்று கூறுகின்றீர்கள்.

சிந்தித்து பார்ப்பதற்கு மயக்கமாக உள்ளது.

ஆண்பால் பெண்பாலில் ஒன்றுக்கு நிகரான இன்னோர் சொல்லை வழங்கும்போது உறவுமுறையின் அடிப்படையில் விதிகள் உள்ளனவா?

தம்பி - தங்கை

இங்கு சகோதர உறவு முறை காணப்படுமாயின்

அத்தை - அத்தான்

இங்கே ஏன் தாய் மகன் உறவு முறை அமையமுடியாது?

நாங்களும் வீட்டில் அத்தை என்ற சொல்லை பாவிப்பதில்லை. அதற்காக நாங்கள் பயன்படுத்துவது இல்லை என்பதற்காக அது தமிழ் சொல் இல்லை என்றும் கூறமுடியாது. அதேசமயம் அத்தை, அத்தான் ஆகிய சொற்கள் இந்திய தமிழ் சினிமாவின் இறக்குமதியாய் இருக்குமோ என்றும் சந்தேகம் வலுக்கின்றது.

மகாபாரத கதை உருவாக்கத்தின் மூலம் தமிழ்மொழி இல்லை என்றால் அத்தை எனும் சொல் தமிழாய் இருக்காதோ? இந்திய தமிழ் சினிமாவில் ஏதும் நடக்கலாம்.

அத்தன் எனும் சொல் பழந்தமிழர் இலக்கியத்தில் உள்ளது போன்று பண்டிதர் அவர்கள் மேற்கோள் ஒன்றை சொல்லிக்காட்டினார் என்று நினைக்கின்றேன்.

கலைஞன்...பண்டிதர் சொன்னது சரி..!

பின்வரும் பாடலில்....அத்தன் என்ற சொல் வருகின்றது தான்!

ஆனால்....தந்தை என்ற பொருள் கொண்டு வருகின்றது!

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
.
  
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க

openbook.gifபொழிப்புரை:

முதலில் சிவபெருமான் என்று அவன் பெயரைக் கேட்டு, அவனுடைய பொன்வண்ணத்தைக் கேட்டு, அவனுடைய திருவாரூரைக் கேட்டு மீண்டும் அவன் திறத்து நீங்காத காதல் உடையவளாயினாள். தாயையும் தந்தையையும் அன்றே மனத்தால் துறந்தாள். உலகவர் கூறும் ` கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை ` என்ற நெறிமுறையை விடுத்தாள். தலைவனையே நினையும் நினைவிலே தான் செய்யும் செயல்களை அறியாது ஒழிந்தாள். கன்னி எனப்படும் தன் பெயர் நீங்கப் பெற்று அவன் உரிமை என்ற பெயரைக் கொண்டாள். அந்நங்கை அத்தலைவன் திருவடிகளை அணைந்து தனக்கென ஒன்றின்றி அவன் வழியளாய் ஒழிந்தாள்
Link to comment
Share on other sites

39 minutes ago, புங்கையூரன் said:

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
 மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
 பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
 அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
 தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

எவ்வளவு அழகிய பக்தி உணர்வுடன் படைக்கப்பட்ட பாடல் இது~! :100_pray:

பண்டிதரும் அத்தன் என்றால் தந்தை என்றே கூறினார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் புங்கை/கலைஞன்....!

திருவெம்பாவை 3வைத்து பாடலில் முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்த தெதிரெழுந்தென் 

அத்தன் ஆனந்தன் அமுதன் என்றும் வருகின்றது.

ஆயினும் இவை ஒரே பொருளில் கொள்ளாது இடத்துக்கு ஏற்றவாறு பொருள் படும் என்றுதான் சொல்கிறேன்.

அதுபோல் திருப்பொற்சுன்னத்திலும் 1 வைத்து பாடலில் "அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"

அதனால் அந்தச்சொற்பதம் வழக்கொழிந்து விட்டதுபோல.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிராமி அந்தாதி 57 வது பாடல் : 

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டமெல்லாம் .....என்று தொடங்கும்..... இங்கு ஐயன் என்பது நேரே சிவனை குறிக்கும்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, suvy said:

ஓம் புங்கை/கலைஞன்....!

திருவெம்பாவை 3வைத்து பாடலில் முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்த தெதிரெழுந்தென் 

அத்தன் ஆனந்தன் அமுதன் என்றும் வருகின்றது.

ஆயினும் இவை ஒரே பொருளில் கொள்ளாது இடத்துக்கு ஏற்றவாறு பொருள் படும் என்றுதான் சொல்கிறேன்.

அதுபோல் திருப்பொற்சுன்னத்திலும் 1 வைத்து பாடலில் "அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"

அதனால் அந்தச்சொற்பதம் வழக்கொழிந்து விட்டதுபோல.....!

நீங்கள் சொல்வது சரி, சுவியர் !

இன்னொரு இடத்தில்..

முத்த்னே முதல்வா...,,

தில்லை அம்பலத்து ஆடுகின்ற அத்தா...

 

என்றும் வருகிறது!

இஙுகு தலைவன் என்று பொருள் வரும் போல கிடக்குது!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

அபிராமி அந்தாதி 57 வது பாடல் : 

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டமெல்லாம் .....என்று தொடங்கும்..... இங்கு ஐயன் என்பது நேரே சிவனை குறிக்கும்......!

சுவியர்,

ஒரு மொழியின் தொன்மை என்பது...வரலாறுகளிலோ அல்லது சரித்திர சான்றுகளிலோ இல்லை என்றே நான் நம்புகிறேன்! ஒரு மொழி எவ்வாறு வளைந்து கொடுக்கின்றது என்பதைலேயே அதன் தொன்மை தங்கியுள்ளது! தமிழ் கவிதை மொழி! அதனைப் பற்றி வரும் போது .. எழுதாமல் இருக்க முடியவில்லை! இப்போதும் கைத் தொலை பேசியில் வைத்துத் தான் தட்டிக் கொண்டிருக்கிறேன்!

புதிய... புதிய உதாரணங்களைத் தாருங்கள்!

நீண்ட நாட்களின் பின்னர் ... மனத்திருப்தி தந்த விவாதம் இதுவாகும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் புங்கை,அதற்கு குருஜிக்குத்தான் நன்றி......!

தமிழ் ஒரு வானம் போன்றது. ஒரு எழுத்து சொல்லுக்கே பத்து அர்த்தம் வரும். யானைக்கும் குதிரைக்குமே முப்பதுக்கு மேல் பெயர்கள் உள்ளன. எங்கோ படித்தது , ஒருமுறை வள்ளலார் அடியார்களுடன் கதைகள் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதில் சிவபுராணம் பற்றி சொற்பொழிவாற்றும் படி கேட்கின்றனர்.அவரும் சுருங்கக் கூறவா விரிவாய் கூறவா என்று கேட்க அவர்களும் தாராளமான நேரம் இருக்கு, நீங்கள் விரிவாய் கூறுங்கள் என்கின்றனர். வள்ளலார் காப்பு சொல்லிவிட்டு நமசிவாய வாழ்கவில் முதல் வரும் "ந"என்ற எழுத்தின் பெருமைகளை அர்த்தங்களை சொல்லிக்கொண்டே போகிறார். பிரசங்கம் முடியவில்லை ஆனால் நேரம் முடிந்து விட்டது.

இவையெல்லாம் சொல்லுந்தரமன்று.....!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அத்தையின் ஆண் பால் பிரச்சனை காரணமாக போலும்,  எமது குடும்பத்தில் அத்தையம்மா - அத்தைமாமா என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெருமைகள் உள்ள தமிழ் மொழியை பேசும் ஒரு கூட்டம் இப்படியும் உறவுகளை அழைக்குதே.
உம்மா - வாப்பா 
நானா / காக்கா - ()தாத்தா
சாச்சா - சாச்சி
உம்மம்மா 
வாப்பம்மா 
மைனி (மதினி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Sasi_varnam said:

இவ்வளவு பெருமைகள் உள்ள தமிழ் மொழியை பேசும் ஒரு கூட்டம் இப்படியும் உறவுகளை அழைக்குதே.
உம்மா - வாப்பா 
நானா / காக்கா - ()தாத்தா
சாச்சா - சாச்சி
உம்மம்மா 
வாப்பம்மா 
மைனி (மதினி)

டாத்தா   ?

இல்லை வாப்பா... அது அரபி சொல்லுக..

அப்பா ஒரு உருது சொல் தெரீமா?

அய்யா என்று செல்லீட்டு இருந்த நம்ம,  இந்தியாவில் இருந்து தமிழ் படங்கள் வந்த அப்புறம் தாம் அப்பா செல்லி செல்லறம் தானே வாப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் - மச்சாள் 
இது, தமிழ் சொல்லாக.... இருக்க வேண்டும்.
அந்த... உறவு, தமிழர்களில்.. வித்தியாசமான மரியாதைக்குரியது.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.